அரசியல்

Tuesday, December 29, 2015

துக்ளக் இதழின் பச்சைப் பார்ப்பன பித்தலாட்டம்

06.01.2016 துக்ளக் இதழின் முன் அட்டையில் தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் அர்ச்சகராக பூசைச் செய்வது போலவும், அதைக் கண்டு கலைஞரும் பேராசிரியரும் மகிழ்வது போலவும் கருத்துப்படம்.
இதைவிட ஓர் அயோக்கியத்தனம்; அற்பத்தனம், பித்தலாட்டம் புத்தி வேறு இருக்க முடியுமா?
இதுவெல்லாம் ஓர் ஏடு; இதற்கு வாசகர் மாநாடு; பாராட்டு, ஓகோ... ஓகோ.. ஆதரவு. இப்போதெல்லாம் பார்ப்பான் பச்சையாக கூச்சநாச்சமின்றி பித்தலாட்டம் செய்கிறான்! அதன் அடையாளம்தான் இது!
கொஞ்சங்கூட பத்திரிகா தர்மம் இல்லாமல், அறிவு நாணயம் இல்லாமல், நியாய உணர்ச்சியில்லாமல், உண்மைகளை மறைக்க, நையாண்டி முயற்சி! இப்படியும் ஒரு பிழைப்பா?
அற்பத்தனத்திற்கும் அயோக்கியத்தனத்திற்கும் ஓர் அளவு வேண்டாமா?
கடவுள் இல்லை என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை. ஆனால், எல்லா ஜாதியினருக்கும் அர்ச்சகராக உரிமை உண்டு என்பது தி.க.வின் சமூகநீதிக் கொள்கை.
அச்சமூக நீதிக்குப் போராடி, மக்களின் உரிமையை மீட்டுத் தரவேண்டியது சமூக இயக்கத்தின் கடமை. அதில் வெற்றி பெற்றுள்ளது திராவிடர் கழகம்.
ஜாதி ஒழிப்பின் இறுதிக் கட்டம் உறுதிப்பட்டுள்ளது!
அதைப் பொறுக்க முடியாமல், தங்கள் ஆதிக்கம் பறிபோகிறதே என்ற வயிற்றெரிச்சலில், சம்பந்தா சம்பந்தம் இல்லாத கருத்துப் படம்.
கிறுக்குப் பிடித்தவனெல்லாம் கீழ்ப்பாக்கத்திற்கு போகாமல் துக்ளக் அலுவலகத்தில் உட்கார்ந்து பேனா பிடிப்பதன் விளைவு அல்லவா இது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று பெரியார் கேட்டதும், கலைஞர் சட்டம் இயற்றியதும், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் போராடி வெற்றிபெற்றதும் இவர்கள் அர்ச்சகராக வேண்டும் என்பதற்கா?
எங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ள எம் மக்களுக்கு அர்ச்சகர் உரிமை வேண்டும்! என்று போராடிப் பெற்றதில் என்ன கொள்கைத் தவறு? எதற்கு நையாண்டி?
சூடு சொரணையிருந்தால் அறிவு நாணயத்தோடு பதில் சொல்லவேண்டும். அதைவிடுத்து கிறுக்குத்தனமாக கேலி செய்வது மக்களை ஏமாற்றும் அயோக்கியத்தனமல்லவா? மக்களை ஏமாற்றும் மோசடி வேலையல்லவா? வயிற்றெரிச்சலின் வடிகால்தானே இந்தக் கேலிச்சித்திரம்.
கீழ்ப்பாக்கத்துக் கிறுக்கர்களிடம் தமிழர்களே எச்சரிக்கை! கிறுக்கர்களை விரட்டுங்கள்!

எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதற்கு இன்னுமோர் ஆதாரம்!


- மஞ்சை.வசந்தன்
எகிப்து நாட்டின் பிரமிடுகளைக் கட்டியவர்கள் தமிழர்கள்; ஆண்டவர்கள் (மன்னர்கள்) தமிழர்கள், கிளியோபாட்ரா தமிழ்ப் பெண் என்பதற்கான பலச் சான்றுகளைக் காட்டி முன்னர் முகநூலில் எழுதியிருந்தேன்.
அதை இன்னும் உறுதிசெய்யும் ஆதாரம் ஒன்று அண்மையில் தருமபுரி அருகில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான சித்தேரி மலையின் தொடர்ச்சியான போடுமலையில் கிடைத்துள்ளது.
உருளை வடிவ கல்வட்டங்கள் இங்கு கிடைத்துள்ள ஆதாரமாகும்.
இந்த உருளை வடிவக் கல்வட்டம், எகிப்தில் கிடைத்துள்ள உருளை வடிவக்கல் வட்டத்தை ஒத்து உள்ளது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
கல்திட்டை அல்லது கல்லறை அமைக்க இக்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது அரிய வகை தடயமாகும். இதன்மூலம் தமிழர்கள் எகிப்தில் பரவி வாழ்ந்து ஆண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- (ஆதாரம்: ‘தினமணி’ 26-.12.2015, 7ஆம் பக்கம்)

“தினமணி”யின் அற்பத்தனத்திற்கு அளவே இல்லையா?


- மஞ்சை.வசந்தன்
தந்தை பெரியாரின் நினைவு நாள் 24.12.2015 அன்று. 
தந்தை பெரியார் நினைவு நாள் என்றால், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட பெரியார் திடல் முதன்மையானது. அவர் இயக்கத்தின் தலைமை இடமும் அதுவே. ஆக, நாணயமுள்ள, யோக்கியமுள்ள ஒரு இதழ் செய்தி வெளியிட வேண்டும் என்றால் அவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைக்கப்பட்டதைப் படமாகப் போட வேண்டும். அவர் உருவாக்கிய அமைப்பான திராவிடர் கழகத் தலைவர் மரியாதை செலுத்தியதை முதலில் கூறவேண்டும். அடுத்து திராவிட முன்னேற்றக் கழகம், அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள் என்று குறிப்பிடுவதுதான் மாண்புக்குரிய செயல்.
ஆரிய பார்ப்பனர்களுக்கு அந்த மாண்பு மருந்துக்குக்கூட இருக்காதே! வைத்தியநாத அய்யர் ஆசிரியரானதும் தினமணி இனமணியாகி அற்பத்தனத்திற்கும் அயோக்கியத் தனத்திற்கும் அடையாளமாக வெளிவந்து கொண்டிருப்பதால், பெரியார் நினைவு நாள் செய்தி எப்படி வெளியிட்டுள்ளார்கள் பாருங்கள்.
அச்செய்தி தமிழ்நாடு முழுவதும் செல்லாத “சென்னை’’ பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, பெரியாரோடு பெரிதும் தொடர்பில்லா விஜயகாந்த், அவர் அலுவலகத்தில் பெரியாருக்கு மரியாதை செலத்திய படம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் குத்துவிளக்கு, ஊதுபத்தியெல்லாம் எரியவிடப்பட்டுள்ள படம்.
முக்கியமாக பெரியாரின் நேரடி வாரிசான, தற்போது தி.க. தலைவராக உள்ள கி.வீரமணி அவர்கள் மரியாதை செலுத்தியது கடைசியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைவிட அற்பத்தனமும் அயோக்கியத்தனமும் வேறு இருக்க முடியுமா?
வெள்ள நிவாரணப் பணி ஆர்.எஸ்.எஸ். செய்தது என்று செய்தி வெளியிட்ட தினமணி, தி.க. மிகப் பெருமளவில் 10 நாள்களுக்கு மேல், பெரியார் திடலையே முகாமாக மாற்றி செய்த நிவாரணப் பணிகள் பற்றி ஒரு வரிகூட எழுதவில்லை!
பார்ப்பானுக்குள்ள இனவுணர்வு தமிழனுக்கு எப்போது வரும்?

உலகில் ஒப்பார் இல்லா பெரியார்..............

94 ஆண்டுகள், 3 மாதங்கள், 7 நாள்கள் வாழ்ந்தவர்
8200 நாள்கள் சுற்றுப்பயணம் செய்தவர் அதில் அயல்நாடுகளில் மட்டும் 392 நாள்கள்
மொத்த பயணத் தொலைவு 13,19,662 கி.மீ
ஒப்பீட்டளவில் இத்தொலைவு பூமியின் சுற்றளவைப் போல் 33 மடங்கு.
பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவைப் போல் 3.43 மடங்கு.
பங்கேற்ற பிரச்சாரக் களங்கள் 10,700
கருத்துரை ஆற்றிய காலம் நாள்கணக்கில் 891
மணிக்கணக்கில் 21,400
இந்த சாதனைகளை மூத்திரச் சட்டியுடன் பயணம் செய்து சாதித்தார்.
பெரியாரின் பேச்சை ஒலிப்பரப்பினால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாள்கள் தொடர்ந்து ஒளித்துக் கொண்டே இருக்கும்.
தன் சொத்துக்கள் அனைத்தையும் பொதுமக்கள் நலத்துக்கே கொடுத்தவர். பெரியார் என்றால் மனிதநேயம் என்று பொருள்.
இறப்பதற்கு முன் ஆற்றிய உரையில் சாதி இழிவை அறவே ஒழிக்க கருவறைக்குள்
சூத்திரர்களை அர்ச்சகராக்கி தீர வேண்டும் என்று முழங்கியவர்
அவர் எண்ணம் இப்போது ஈடேறியுள்ளது.
உலகில் பெரியாருக்கு இணை பெரியாரே!
அவரது நினைவுநாளில் ஜாதி மதம் ஒழிந்த சமத்துவ சமுதாயம் படைக்க உறுதி ஏற்போம்!
வாழ்க பெரியார்!

குற்றத்திற்கேற்ற தண்டனையே நீதி!


குற்றத்திற்கேற்ற தண்டனையே நீதி!
வயது வரம்பைக் காட்டி விடுவிப்பது அநீதி!.....................................

18 வயது நிறைந்த சிறார் என்ற காரணத்தைக் கூறி, ஓர் அயோக்கிய, கொடூர கொலைகாரனை மூன்றாண்டு சிறைத் தண்டனையோடு விடுதலை செய்வது என்பது இந்திய நீதித்துறை, இந்தியாவின் சட்டத்துறை இரண்டிற்கும் அவமானம், கேவலம், கீழ்நிலை!

சட்டத்தில் இடம் இல்லை என்பதைப் போன்ற அயோக்கியத் தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. சட்டம் என்பது என்ன வானிலிருந்து வந்ததா-? மனிதர்களாகிய நாம் உருவாக்குவதுதானே! இதில் ஆட்சியாளர்களே குற்றவாளி, நீதிமன்றம் அல்ல.
தேவையென்பதை உருவாக்கிக்கொள்ள வேண்டியதுதானே! சரியில்லை யென்றால் மாற்றிக் கொள்ள வேண்டியது தானே! அதிலென்ன தயக்கம், தாமதம்!

18 வயதுக்குள் உள்ளவன் கொலை செய்தால் தண்டனை இல்லையென்றால், இனி கொலைசெய்ய முயல்கின்றவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவனுக்குக் கூலி கொடுத்து கொலை செய்யச் சொல்வானே! அப்படியொரு நிலை வந்தால்தான் சட்டம் இயற்றுவார்களா?

குற்றத்திற்கும் வயதிற்கும் தொடர்புபடுத்துவது தவறான அணுகுமுறை. குற்றத்தைச் சூழலோடு வேண்டமானல் தொடர்புபடுத்தலாம்! அதற்கேற்ப தண்டனையின் கடுமையை மாற்றலாம். மாறாக வயதோடு தொடர்புப்படுத்துவது தவறு.

எந்த வயதில் செய்தாலும் குற்றம் குற்றம்தான். குற்றம் அறியாமல் செய்யப்படுகிறது என்பது உண்மைக்கு மாறான கருத்து.

5 வயது பையன் ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்ய முடியாது. காமவேட்கை ஏற்பட்ட, அதன் தீர்வாக ‘விந்து’ வெளிப்படுத்தும் தகுதியுள்ளவன்தான் ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்கிறான். அந்த நிலை வந்தவன் வன்புணர்ச்சிக்குரிய தண்டனையை பெற்றேத் தீரவேண்டும். அதில் 18 வயது என்ற அளவுகோல் கண்மூடித்தனமான கணக்கு.

அதேபோல் 5 வயதுடைய பிள்ளை கொலை செய்வதில்லை. கொலை வெறிகொண்டு, அதற்கு ஆயுதமேந்தத் தகுதியுள்ளவன்தான் கொலை செய்கிறான். இதில் 18 வயது என்ற அளவுகோல் சரியல்ல.

அறியா பருவம் என்பதற்கு பொருள் என்ன தெரியுமா? தனக்கு அல்லது பிறருக்கு அச்செயல் கேடு தரும் என்று தெரியாமல் இருக்கும் பருவம்தான்.
ஒரு குழந்தை நெருப்பை, தீயை தொடுகிறது. அதற்கு அது சுடும் என்பது தெரியாது. தண்ணீரில் மூழ்கினால் சாவோம், ஊசி குத்தும், உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடிபடும என்று அறியாத வயதுதான் அறியா பருவமாகும்.

பேருந்தில் நிர்பயா என்ற பெண்ணை முதலில் வன்புணர்ச்சி செய்தவன் அந்த ‘சிறார்’ குற்றவாளிதான், அதன்பின் சிலர் அப்பெண்ணிடம் வன்புணர்ச்சி செய்த பின் மீண்டும் இரண்டாம் முறையாக வன்புணர்ச்சி செய்துவிட்டு ஒரு இரும்புக் கம்பியை எடுத்து அப்பெண்ணின் பிறப்புறுப்பில் நுழைத்து அவள் குடல் பாதிக்கும் அளவிற்கு குடைந்தெடுத்த கடைந்தெடுத்த அயோக்கியனை சிறார் என்று சொல்கிறவன் எவனும் அவனைவிட அயோக்கியனாகத்தான் இருக்க முடியும்!
ஒருவன் எக்குற்றம் செய்கிறானோ அது குற்றம் என்ற தெரிந்து செய்தால் அவன் குற்றவாளியே! அதை அறியும் நிலை 10 வயதுக்குள்ளே வந்துவிடுகிறது.

குற்றம் என்று அறிய முடியாத வயதில் ஒருவன் குற்றமே செய்ய முடியாது. செய்யவும் மாட்டான்.
எனவே, எந்த வயதில் குற்றம் செய்யப்பட்டாலும் தண்டினை கொடுத்தே தீரவேண்டும். தண்டனை காலத்தில் அவன் திருந்த, தன்னை சீர் செய்துகொள்ள ஆலோசனை, கல்வி, பயிற்சி அளிக்கலாம்.

மாறாக, இரண்டுமுறை உடலுறவு கொண்டு, பிறப்புறுப்பில் கம்பியைச் செருகிக் குடைந்த கொடியவனை விடுதலை செய்தால், மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்தக்கொள்வார்கள்.

ஆம். நாடு முழுக்கவுள்ள மக்கள் அந்தக் கொடியவன் மீது வெறிகொண்டுள்ளனர். அவன் அறைக்குள் வாழ்ந்துவிட முடியாது. வெளியில் வந்தால் கும்பலாகச் சேர்ந்து அவனைப் படுகொலை செய்துவிடுவர்.

அவனுக்கெல்லாம் இசட் பிரிவு காவலா தர முடியும்?

அந்தக் கொடியவனை மட்டுமல்ல, இனி வயதைக் காரணம் காட்டி எந்த கொடியவன் விடுதலை செய்யப்பட்டாலும், மக்கள் அவனைத் தண்டிக்கவே செய்வர். கும்பலாக மக்கள் தண்டிக்கும்போது யார் மீது நடவடிக்கை எடுக்க முடியும்?

எனவே, வயது வரம்பை அறவே நீக்கி விட்டு, குற்றம் செய்தவர்கள் எவராயினும் அவர்களுக்கு தண்டனை வழங்குவது ஒன்றே சரியான தீர்வாகும்.

சந்தர்ப்பச் சூழல், மனநல பாதிப்பு போன்றவற்றை வேண்டுமானால் கருத்தில் கொண்டு, தண்டனை அளவை மாற்றலாம்.

மக்கள் சட்டத்தை கையிலெடுத்து தண்டனையை தாங்களே நிறைவேற்ற முற்படுவதற்கு முன், 18 வயது என்ற வரம்பை நீக்கி, குற்றவாளி எவராயினும் அதற்கேற்றத் தண்டனை வழங்கி ஆவன செய்ய வேண்டியது அவசிய அவசர தேவையாகும்.

ஏழைகளிம் நிலத்தை அபகரிப்பதற்கு பலமுறை முயற்சிக்கும் மத்திய அரசு சிறார் குற்றவாளி வயதைக்குறைக்கும் சட்டத்தை திருத்த முயலாதது ஏன்?

துளசியே துணை!........


இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், மூளை போன்ற முதன்மை உறுப்புகளை காக்கவும், அவற்றின் நோயைப் போக்கவும் பெரிதும் உதவுகிறது துளசி. வீட்டில் இரண்டு மூன்று தொட்டிகளில் துளசிச் செடியை வளர்த்தால் தினம் அக்குடும்பத்திலுள்ள அனைவருக்கும் துளசி பலவகையில் பயன்படும்.
நாள்தோறும் 5 முதல் 10 துளசி இலைகளுடன் 2 அல்லது 3 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டு வெதுவெதுப்பான சுடுநீர் குடித்தால், இதயம், நுரையீரல், மூளை, சிறுநீரகம் வலுப்படும். இரத்த அழுத்தம் குறையும், கொலஸ்ட்ரால் கரையும், நுரையீரல் சளி, இருமல் நீங்கும், கல்லீரலைக் காக்கும். மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும்.
துளசி டீ:
துளசி இலைகளைப்பறித்து ஒரு டம்ளர் நீரில் போட்டு, கொதிக்க வைத்து, வடிகட்டி, பால், வெல்லம், ஏலக்காய் தூள், சுக்குத்தூள், சீரகத்தூள் போன்றவற்றைக் கலந்து வாரம் மூன்று நான்கு முறைச் சாப்பிட்டால் நோய் தடுக்கப்படும்; வந்த நோயும் அகலும்.
இது போன்ற எளிய வழிகளில் நோயைத் தவிர்த்து நலமுடன் வாழ்வதே அறிவுடைமைக்கு அழகு. இதில் என்ன சிறமம் சிந்தித்துப்பாருங்கள். துளசியை அன்றாடம் அனைவரும் பயன்படுத்துங்கள்.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

அயோக்கியத்தனத்தின் அசல்வடிவம் ரங்கராஜ் பாண்டே!............


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் தீர்ப்புக் குறித்து விவாதம்!
வழக்கறிஞர்கள் அருள்மொழி, பிரசன்னா, ரங்கராஜ் பாண்டேவின் டம்மியாக ஒப்புக்கு ஓர் ஆள். நிகழ்ச்சி முழுவதும் ரங்கராஜ் பாண்டே பேசுவதுதான். 
அருள்மொழி பேசினால் உடனே குறுக்கீடு. பிரசன்னா பேசினால் உடனே குறுக்கீடு. அவர்கள் வாதத்திற்கு பதில் சொல்லாமல், திசை திருப்புதல். பதிவு இருந்தால் போட்டுப் பாருங்கள்! கேளுங்கள்!
பார்ப்பனர்களுக்கு பதிலாளாய் அமர்ந்து ஆக்ரோஷமாகக் கூச்சல், ஆவேசம்! பார்ப்பனர் ஆதிக்கம் பறிபோய் விடுமோ என்ற படபடப்பு கண்களில் தெரிகிறது. நடுநிலையாய் நடப்பதுபோல் பாசாங்கு! அடேயப்பா பாண்டே நடிக்கப் போகலாம்! அதுவும் மோசடிப் பாத்திரம் செமசூட்டாகும்!
நிகழ்ச்சி நடத்துகிறவனே கட்சிக்காரனாக மாறும் அவலம், அசிங்கம்! அத்தமீறல்.
தினத்தந்தி உரிமையாளர் “தமிழர் தந்தை” வாரிசு என்று கூறிக்கொண்டு, தமிழர் எதிர்ச்செயல்களை பார்ப்பன வெறியர்களைக் கொண்டு செய்வது பச்சைத் துரோகம்!
தினத்தந்தியை தமிழர் புறக்கணிக்கப்பதற்கு முன் மாறுங்கள்; மாற்றுங்கள்!
இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த எந்தத் தமிழனுக்கும் தகுதியில்லை என்பது தந்திக் குடும்பத்தின் நினைப்பா? கணிப்பா? ஒரு நேர்காணல் நடத்துங்கள்! ஆயிரம் மடங்கு திறமையுள்ளவர்களை நீங்கள் காணலாம்!
தமிழனைவிட திறமையானவன் இந்த உலகில் எவனும் இல்லை. ஒடுக்கப்பட்டதால், ஓரங்கட்டப்பட்டதால், ஒளி படாததால் வெளித்தெரியாமல் உள்ளான்! அவ்வளவே!
கணினியிலும், அய்.ஏ.எஸ். தேர்விலும் சாதிக்கும் தமிழனுக்கு மற்றதெல்லாம் எம்மாத்திரம்?
«««

கிறுக்குப்பிடித்த ராகவ பட்டரை கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்புங்கள்!......


காஞ்சி வரதாரஜர் கோயிலில் கிறுக்கனெல்லாம் இருந்தால் பக்தர்களுக்குப் பாதுகாப்பு இல்லை! அதுவும் சாதாகிறுக்கனல்ல முற்றிப் போன முரட்டுக் கிறுக்கன்! கண்டபடி உளறுகிறான் ஆளைக் கடிக்கத் தொடங்கும் முன் அங்கிருந்து விரட்டுங்கள்!
எங்கள் பணத்தில் நாங்கள் கட்டிய கோயிலில், நாங்கள் தொட்டு பூசை செய்ய, நாங்கள் அர்ச்சகராக உரிமையில்லையா?
எதையும் கொடுக்காத வெற்று ஆள்கள் தான் அர்ச்சகர் ஆகமுடியும் என்பது அயோக்கியத்தனம் அல்லவா என்று நீதிகேட்டால், அந்த நீதிக்காக குரல் கொடுத்தால்,
ஒரு கண்ணியமான, கற்றுத் தேர்ந்த, கட்டுப்பாடான பெண் வழக்கறிஞரைப் பார்த்து உன்னோடு குடும்பம் நடத்த உன் கணவரைத் தவிர ஆண் தகுதியுள்ளது என்பதால் எல்லோரும் வர அனுமதிப்பீரா? என்று கேட்கிறான்! அர்ச்சகனாவதும் ஆம்படையானாவதும் ஒன்றா? இவனைப் பொறுக்கி என்பதா? ரவுடி என்பதா? காலி என்பதா? கயவன் என்பதா? அயோக்கியன் என்பதா, அசல் பைத்தியம் என்பதா?
இவன் மனைவியோடு குடும்பம் நடத்த வரட்டுமா என்று எவனாவது கேட்டால் அவனைப்பார்த்து கேட்க வேண்டிய கேள்வியை, சமூகநீதி பேசும் பெண்ணிடம் கேட்பதைப் போன்ற கீழ்த்தரம் கிறுக்குத் தனம் வேறு உண்டா?
ஒருபெண்ணுடன் குடும்பம் நடத்த கணவனுக்கு உரிமையுண்டு ஆனால், கோயிலில் அர்ச்சகராக பார்ப்பானுக்கு மட்டுமே உரிமையுண்டு என்று எந்த ஆகமத்தில் உள்ளது? அடிமுட்டாளே உன் உரிமைக்கு ஆதாரம் காட்டுவாயா? காட்ட முடியுமா? ஆகமம் பற்றி உனக்குத் தெரியுமா? வாதிட வருவாயா? அர்ச்சகராய் இருந்து கொண்டு அரசியல் பண்ணும் பித்தலாட்ட பேர்வழியெல்லாம் நியாயம் பேசுவதா?
கடல் தாண்டக் கூடாது “பிராமணன்” என்கிறது சாஸ்திரம். அதையெல்லாம்தூக்கி யெறிந்துவிட்டு, பணம் சம்பாதிக்க கடல் தாண்டிச் செல்வது அயோக்கியத் தனமல்லவா?
வேலைக்கு இடஒதுக்கீடு கேட்டால் தகுதி திறமை என்பதும்; அர்ச்சராக மட்டும் தகுதி திறமை இல்லை எங்களுக்குமட்டுமே யென்பதும் மொள்ளமாறித்தனமல்லவா?
உங்களுக்கு சாதகமானால் சாஸ்திரம் என்பதும், பாதகமானால் சாஸ்திரத்தைச் சாக்கடையில் போடுவதும் செய்யும் உமக்கெல்லாம் உரிமை பற்றிப் பேச என்ன யோக்கியதை உள்ளது. அட..... தூ.....!

தமிழக மழைப்பொழிவை துல்லியமாகக் கணித்து இஸ்ரோ அறிவித்தது. மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு.


பிரதமர் அலுவலக விவகாரம் மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பதில்அளித்தபோது, “தமிழகத்தில் அண்மையில் கனமழை பொழியும் என்று முன்கூட்டியே இஸ்ரோ அறிவித்தது 100% துல்லியமாகக் கணித்துக் கூறப்பட்ட செய்தி” என்று கூறியுள்ளார்.
இத்தனை அழிவுக்கும் மக்கள் நலனில்அக்கறையில்லா, பொறுப்பற்ற செயலலிதா அரசே காரணம். மக்களின் இழப்புக்க அவரே பொறுப்பேற்று இழப்பை ஈடுசெய்ய வேண்டும்.
உயர்நீதிமன்றம் தானே முன்வந்து நிர்வாகச் சீர்கேட்டை ஆய்வு செய்ய ஆணையிட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் உரிய இழப்பீடுகளை அரசு வழங்கவும் ஆணையிட வேண்டும்.
பொறுப்புள்ள அரசின்மீது வெறுப்புற்ற மக்கள் ஒன்றுசேர்ந்து குரல்கொடுக்க வேண்டும். தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்!
எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது!
இதன்பின்னும் மக்கள் ஏமாந்தால் அவர்களை யாரும் காப்பாற்ற முடியாது!

பள்ளி விடுமுறை பாதிப்பு தீர்வு என்ன? - மஞ்சை வசந்தன்


சற்றேறக்குறைய ஒரு மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை. 30 நாள்கள் மூடப்பட்டாலும் வாரம் இரு நாள் வழக்கமான விடுமுறை. மற்ற விடுமுறைகள் 10 நாள். எனவே, உண்மையான பாதிப்பு 20 நாள்கள்.
இனிவரும் நான்கு மாதங்களில் 16 சனிக்கிழமைகளை வேலை நாளாக்கினால் 4 நாள்கள் மட்டுமே குறையும். அதுவொன்றும் பெரிய இழப்பு அல்ல.
அரையாண்டுத் தேர்வை ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அரையாண்டு விடுமுறை பொங்கல் விடுமுறையோடு இணைந்து வந்து மாணவர்களுக்கு ஓய்வும், புத்துணர்வும் கிடைக்கும்.
தேர்வுகளை ரத்து செய்ய வேண்டாம். அரையாண்டுத் தேர்வுக்குரிய பாடப் பகுதிகளை குறைக்கலாம்.
விடுபட்ட பாடப்பகுதிகளை ஒரு மாதத் தேர்வாக நடத்திக் கொள்ளலாம்.
தேர்வு இல்லை, எல்லோரும் தேர்ச்சி என்பவை சரியான அணுகுமுறையல்ல.
சென்னை மூழ்கியதால் இந்தப் பிரச்சினை பெரிதாகத் தெரிகிறது. இதுபோன்ற பாதிப்பு அடிக்கடி கடலூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
ககன்சிங்பேடி கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது ஒரு மாத அளவிற்கு மழை வெள்ளப் பாதிப்பு நிகழ்ந்தபோது. நான் சேத்தியாதோப்பு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர். எனது பள்ளியில் மக்கள் தங்கியிருந்தார்கள். அப்போது மேற்கண்ட யோசனையை அவரிடம் கூறினேன். நாகை மாவட்ட ஆட்சியருடன் கலந்து அவர் மேற்கண்ட வகையில் தேர்வு அறிவித்து, பொங்கல்சேர அரையாண்டு விடுப்பு அறிவித்தார். அதுபோல் இரண்டு மூன்று ஆண்டுகள் பாதிக்கப்பட்டது. தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை. எல்லோரும் தேர்ச்சி என்று சொல்லவில்லை.
மாணவர்களுக்கு உரிய வசதிகளை அரசு செய்து கொடுத்தால்போதும். கல்வியாளர்கள் முடிவில் அரசியல்வாதிகள் தலையிட வேண்டாம்.
எல்.கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளை வேண்டுமானால் இந்த மாதம் முடியும்வரை மூடலாம். பிஞ்சு குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம்.
அரசும் கல்வியாளர்களும் இவற்றைச் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.

அனிருத், சிம்புக்கு எதிராக என்ன செய்ய போகிறார் பெண் முதல்வர்?

பெண்களுக்கு எதிராய் வக்கிரமாய் ஆபாசமாய் பாடிய அனிருத், சிம்புக்கு எதிராக என்ன செய்ய போகிறார் பெண் முதல்வர்?..........
ஆந்திர திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தமிழக வெள்ள பாதிப்பு பற்றி மனம் நொந்து மனித நேயத்தோடு ஒரு பாடலை 10-ந்தேதி வெளியிட்டு தமிழர் துயரத்தில் பங்கு கொண்டுள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் பிறந்து தமிழன் கொடுக்கிற பணத்தில் திரைத்துறை மூலம் சம்பாதித்து பிழைக்கும் இரு பொறுக்கிகளும் காலிகலும் சேர்ந்து பெண்களுக்கு எதிரான வக்கிரமான பாடல் ஒன்றை ”பீப் சாங்” என்ற் பெயரில் இந்ததுயர சூழலில் வெளியிட்டு கூத்தடிக்கின்றனர்.
இவர்களல்லாம் மனிதர்களா? அல்லது கார்த்திகை மாதத்தில் அரிப்பெடுத்தலையும் நாய்களா?
சமுதாய கவலையோடு சாராயத்துக்கு எதிராக பாடிய கோவன் மீது கடும் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு இவர்களுக்கெதிராய் எடுத்த நடவடிகை என்ன?
ஒரு பெண் முதல்வர் ஆளும் நாட்டில் இந்த கூத்தா? இந்த கொடுமையா?
என்ன செய்ய போகிறார் பெண் முதல்வர்?

சிறுநீரகக் கல் தடுக்க இவற்றைச் சாப்பிடக்கூடாது


சிறுநீரகத்தில் கல் உருவாகிச் சிலருக்குப் பெருந்தொல்லையைத் தரும். இதை நீக்க அல்லது தடுக்க முறையான உணவுப் பழக்கம் கட்டாயம்.
1. பிட்ஸா, பர்கர், ஃபாஸ்ட்புட் சாப்பிடக்கூடாது.
2. உப்பு, காரம் அதிகம் சாப்பிடக் கூடாது.
3. சாக்லேட், டீ, காபி சாப்பிடக் கூடாது
4. இனிப்பு அதிகம் சாப்பிடக் கூடாது.
5. பால் பொருள்களை அதிகம் சாப்பிடக் கூடாது.
6. தக்காளியை அதிகம் சாப்பிடக் கூடாது.
7. இறைச்சி, மீன் உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது.
8. கீரை அதிகம் சாப்பிடக்கூடாது.
9. தண்ணீர் நிறைய (ஒரு நாளைக்கு 2 லிட்டர்) குடிக்க வேண்டும்.
10. வாழைத்தண்டு சாப்பிட வேண்டும்.
11. தர்ப்பூசணி, ஆப்பிள், எலுமிச்சை, பழச்சாறுகள் சாப்பிட வேண்டும்.

சாராயம் கிடைகிறது குடிநீர் இல்லை!..


வெள்ளத்தில் குடிக்க அம்மா குடிநீர் கிடைக்கவில்லை. விற்கும் கடைகள் காலி; ஆளும் இல்லை. ஆனால், எல்லா டாஸ்மார்க் கடைகளிலும் விற்பனை நடந்தது. சாராயம் தாராளமாய் கிடைத்தது 09.12.2015 அன்று கூற தாம்பரம் பேருந்து நிலையத்தில் அம்மா குடிநீர் இல்லை. இதுதான் ஜெயலலிதாவின் சாராய ஆட்சியின் அவலம்!
சாராயம் விற்று இலவசம் தந்தால் ஓட்டு வந்து விடும் என்ற ஒற்றைக் கணக்கில், ஆணவ ஆட்சி நடக்கிறது. இப்படிப்பட்ட பேரிடரில் கூட அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டு தீர்வு காணப்படவில்லை.
தான் என்ற ஆணவத்தில் தமிழகம் அழிகிறது.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

பெற்றோர் பிள்ளை உறவு என்பது புளியம் பழத்தைப் போன்றது.

பெற்றோர் பிள்ளை உறவு என்பது புளியம் பழத்தைப் போன்றது.

ஆம். புளியம் பழத்தைப் பார்த்து பெரியவர்கள் பெற்றவர்கள் பாடம் கற்க வேண்டும்.....................
புளியம் பழம் பிஞ்சாக, காயாக இருக்கும் போது அதன் ஓடும், உள்ளிருக்கும் பழமும் சுளையும் பின்னிப் பிணைந்து பிரிக்க-முடியாமல் இருக்கும். அதே காய் முற்றமுற்ற ஓடு சுளையிலிருந்து மெல்ல மெல்ல விலகும் நன்றாக முற்றி பழுத்ததும் ஓடும் சுளையும் தொடர்பற்று தனித்தனியே நிற்கும். என்றாலும் அந்த ஓடு உள்ளிருக்கும் சுளைக்கு கவசமாய் இருந்து காக்கும்.
இந்த முறையில் தான் பெற்றோர் பிள்ளை உறவும் இருக்க வேண்டும்.
அதாவது, பிள்ளைகள் பிஞ்சாக இருக்கும்போது பெற்றோர் பின்னிப் பிணைந்து அவர்களோடு உறவாட வேண்டும். புளியங்காய் முற்ற முற்ற அதன் ஓடு சுளையைவிட்டு விலகி வருவதுபோல், பெற்றோர் பிள்ளை வளர வளர பிள்ளைகளின் பிணைப்பிலிருந்து மெல்ல மெல்ல விலகவேண்டும்.
புளியம் பழம் நன்றாகப் பழுத்ததும் அதன் ஓடு சுளையைவிட்டு தனியே விலகி நிற்பது போல, பெற்றோர், பிள்ளைகள் ஆளான நிலையில் அவர்களிடமிருந்து விலகி நிற்கவேண்டும். அதேநேரத்தில், புளியம் ஓடு விலகிநின்றாலும் சுளைக்கு கவசமாய் நிற்பது போல, பெற்றோர் விலகி நின்றாலும் பிள்ளைகளைத் தங்கள் கண்காணிப்பு என்ற கவசத்துக்குள் வைத்து பாதுகாக்க வேண்டும்.
பெற்றோரின் கண்காணிப்பில்லா பிள்ளைகள் கரையில்லா நீரோட்டம் போல கண்டபடி ஓடி பாழாவதோடு, மற்றவர்களையும் பாழாக்குவர்.
வாகனத்தை இழுத்துச் செல்கின்ற எஞ்சின் மிகுந்த ஆற்றல் உடையதாயினும், விரைந்து இழுத்துச் செல்லும் வல்லமை உடையதாயினும், ஸ்டேரிங்கும், பிரேக்கும் இல்லையென்றால் என்னாகும். கண்ட படி ஓடி, கண்ட இடத்தில் மோதிச் சிதறும், மற்றதையும் சிதைக்கும்.
இன்றைய இளைஞர்கள் பேராற்றல் உள்ளவர்கள், சாதிக்கும் திறன் பெற்றவர்கள். ஆனால், அவர்களை பெற்றவர்களும், மற்றவர்களும் நெறிப்படுத்தி முறைப்படுத்தி வழிநடத்த வேண்டும்.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

உடல் பருமன், எடை குறைய மாரடைப்பைத் தடுக்கச் சிறந்த வழி!

உடல் பருமன், எடை குறைய
மாரடைப்பைத் தடுக்கச் சிறந்த வழி!
(ஆண், பெண் இருவருக்கும்)

----------------------------------.
நாள் தோறும் வாழைத் தண்டை நறுக்கி எலுமிச்சைச் சாற்றைக் கலந்து சாப்பிட வேண்டும். (அய்ந்து ஸ்பூன் அளவு).
காலையில் ஒரு துண்டு இஞ்சி தண்ணீருடன் சேர்த்து மென்று விழுங்க வேண்டும்.
இரண்டு பூண்டு பல் மதிய சாப்பாட்டிற்குப் பின் தண்ணீருடன் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும்.
கொள்ளு இரசம் வாரம் வாரம் மூன்று முறை சாப்பிட வேண்டும். கொள்ளு சுண்டல்வாரம் மூன்று முறை.
கொழுப்பு உணவுகளைத் தவிர்த்து, தினம் உடற்பயிற்சி ஒரு மணிநேரம், காய்கறி கீரை அதிகம் சாப்பிட வேண்டும். கட்டாயம் உடல் பருமன், எடை, தொப்பை குறையும். மாரடைப்புவராது!
இதில் என்ன சிரமம் இன்றே தொடங்குங்கள் வாழ்வை சுமையற்றதாய் சுகமானதாய் ஆக்குங்கள்!
குறிப்பு: ஒல்லியான உடல் உள்ளவார்கள் இதைப் பின்பற்ற வேண்டாம்.

இந்த மோ(ச)டியை எப்படி நம்புவது?


”இந்தியா எனது மதம்! அரசியல் சாசனம் புனிதநூல்!” இப்படி அறிவித்துள்ள மோடியும் அவர் வந்த இயக்கமும் இதற்கு முற்றிலும் எதிரானவை இதோ அதற்கான ஆதாரம் :......
இந்திய அரசமைப்புச் சட்டம் 1949-ஆம் ஆண்டு இந்திய அரசியல் நிர்ணயசபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டபோது, பாஜகவின் தலைமைப் பீடமான ஆர்.எஸ்.எஸ், தனது அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் ஏட்டில் தலையங்கம் எழுதியது. இந்த அரசமைப்புச் சட்டத்தில் பாரதீய விஷயங்கள் எதுவுமே இல்லை; மனுஸ்மிரிதியில் இருந்து எந்த விஷயத்தையும் இந்த சட்டம் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டது என அங்கலாய்த்துக் கொண்டது.
இந்தியா, குடியரசு நாடாக 1950 ஜனவரி 26- அன்று அறிவிக்கப்பட் டது. அதற்கு முந்தைய நாளான 25.1.1950 அன்று, ஆர்.எஸ்.எஸ்.-இன் ஆர்கனைசர் ஏட்டில் சங்கர் சுப் பையா அய்யர் என்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் கட்டுரை வெளியிடப் பட்டது. அதில், மனுஸ்மிரிதியை இந்த நாட்டின் சட்டமாக்க வேண்டும் என்று எழுதி இருந்தார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான சவர்க்காரும், கோல்வால்கரும் மனுஸ்மிரிதியைத்தான் கொண் டாடினார்கள். இந்த நாட்டில் சிறப்பான சட்டத்தைத் தந்தவன் மனு என்று கூறியவர் கோல் வார்க்கர்.
தான் எழுதிய புத்தகம் ஒன்றை தனது குரு கோல்வால்கருக்கு சமர்ப் பணம் என்று கூறியவர் இன்றைய பிரதமர் மோடி.
கோல்வால்கரை குருவாக கொண்டவரும் மனுதர்மத்தை சட்டமாக்க துடிக்கும் இயக்கத்தை சேர்ந்தவரும் ஆன மோடி இப்படி முழங்குவதை எப்படி நம்புவது.
இது ஒரு சந்தர்ப்பவாத முழக்கம்
இந்தியர்களே எச்சரிக்கை
இளைஞர்களே எச்சரிக்கை

இதுதான் தினமணியின் திரிபு வாதம்!

இதுதான் தினமணியின் திரிபு வாதம்!
மாலன் கட்டுரையும் மதியின் கார்ட்டூனும்................................

இந்துத்துவாவாதிகளின் கையில் ஆட்சி இருப்பதால், மதவெறியர் காளின் பாசிசப் போக்கு எல்லை மீறிச் செல்வதைச் சுட்டிக்காட்டி எழுத்தாளர்கள் விஞ்ஞானிகள், திரைத்துறையினர் பேசுகிறார்கள், கண்டிக்கிறார்கள், தங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.
இவர்களின் உண்மையான உணர்வைப் புரிந்துக்கொள்ளாமல், மதவெறிக்கூட்டத்தின் ஆபத்தை உணர்ந்து அதைக் கண்டிக்காமல், ஆரிய பார்ப்பனர்கள், தங்கள் கையில் பத்திரிகைகள் இருப்பதால், உண்மைகளை மறைத்துத் திரிபுவாதம் செய்கின்றனர்.
எடுத்துக்காட்டு இன்றைய (28.11.2015) ”தினமணி” வந்துள்ள மாலன் கட்டுரையும் மதியின் கார்ட்டூனும்.
ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களுக்கும், பி.ஜே.பி. கட்சியினருக்கும், இந்துத்துவா அமைப்புகளுக்கும் தான் சகிப்புத் தன்மையில்லையென்று குற்றம்சாட்டி எதிர்க்கப்படுகிறதே ஒழிய, இந்திய மக்களுக்கு சகிப்புத் தன்மை இல்லையென்று எவன் சொன்னது? இந்திய மக்களுக்குச் சகிப்புத் தன்மை இல்லையென்று சொல்வது போல மாற்றி; ஏமாற்றி எழுகின்றனர்.
மக்களை ஏமாற்ற இந்திய மக்களின் சகிப்புத் தன்மையை இவர்கள் எடுத்துக்காட்டி, நல்லவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள்? இதுதான் ஆரியச்சூழ்ச்சி; ஆரிய திரிபுவாதம். இந்திய மக்களின் சகிப்புத் தன்மையை மதிக்கிறோம். இந்துத்துவா வாதிகளின் சகிப்பின்மையை எதிர்க்கிறோம்! மாலனும் மதியும் ஏய்க்கப்பார்க்கிறார்கள் இளைய தலைமுறையே எச்சரிக்கை!
பாதிக்கப்படுகிறவர்கள் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் இந்தப் பார்ப்பனர்கள், வன்முறையாளர்களை இந்த அளவிற்குக் கண்டிக்காதது ஏன்?
தாத்ரி சம்பவம், கல்புர்கி கொலையின் நோக்கமும், வெறியும் இலங்கையில் நடந்த இனக்கொலையும் ஒன்றா? இரண்டையும் முடிச்சுப்போட்டு குழப்பப்பார்க்கிறார்கள். இதுதான் ஆரிய நரித்தனம்
கார்ட்டூனிஸ்ட் கூட கட்டுரை எழுதுகிறார்.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

மழைநீர் தேங்கி தொற்றுநோய் பரவும்! உயிரிழப்பைத் தடுக்க ஓர் அரிய மருந்து

மழைநீர் தேங்கி தொற்றுநோய் பரவும்!
உயிரிழப்பைத் தடுக்க ஓர் அரிய மருந்து ............
நோய் வராமலே தடுக்கும்; வந்தால் விரைவில் குணமாக்கும்!
‪#‎என்ன‬ மருந்து?
இது எளிய மருந்து, வீட்டிலே செய்து குடிக்கலாம். 6 மாத குழந்தை முதல் அனைவரும் பருகலாம்.
‪#‎தேவையான‬ பொருட்கள்:
நிலவேம்பு வேர், வெட்டிவேர், விளாம்பிச்சி வேர், கோரைக்கிழங்கு, மிளகு, சுக்கு. இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். விலையோ மலிவு! பயனோ மிக மிக அதிகம்!
வீட்டிலுள்ளவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இவற்றை சம அளவில் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு, தேவையான அளவு நீர் ஊற்றி, நன்றாகக் கொதித்ததும், ஆறவைத்து பின் வடிகட்டி சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
‪#‎அளவு‬: நோய் வராதவர்கள்:...............
பெரியவர்கள் 30 மில்லி சாறு, குழந்தைகள் 2 முதல் 5 மில்லி சாறு (வயதுக்கு ஏற்ப) பருகவும். 6 முதல் 12 மாத குழந்தைக்கு 10 சொட்டு (தாய்ப்பாலில் கலந்து) தினம் ஒரு ஒருவேளை சாப்பாட்டுக்குப் பின் கொடுக்கவும்.
காய்ச்சல் வந்தவர்கள் (எந்தக் காய்ச்சலானாலும்):
இச்சாற்றை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மேலே சொன்ன அளவுப்படி பருகவும். எல்லாவிதமான காய்ச்சலிலிருந்தும் இது உங்களைக் காக்கும்! உயிரிழப்பைத் தடுக்கும்.
நாட்டுச் சரக்கென்று நக்கலாய் எண்ணாதீர்!
இது உயிர்காக்கும் சரக்கு! நோய் எதிர்ப்பாற்றல் தரும் சரக்கு!
காய்ச்சல் பரவும் நேரம் கட்டாயம் பருகுங்கள்!
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

பஞ்சாங்கம் புயலைக் கணிக்குமா?.


தினத்தந்தி செய்தியில்
பஞ்சாங்கத்தில் கடந்த 14 ஆம் தேதி(சனிக்கிழமை) அன்று “புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதுபோல அந்த பஞ்சாங்கத்தில் வருகிற 21ஆம் தேதி (சனிக்கிழமை) “ஒரு வாரம் மழை பெய்யும்” என்றும், 22ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று “புயல் பலமாக சென்னையை உலுக்கும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினத்தந்தி செய்திக்கு மறுப்பு!
1. தினத்தந்தி எந்த பஞ்சாங்கம் என்பதை குறிப்பிடப்படவில்லை. இது ஓர் மோசடி! எப்படி உண்மையை அறிவது? இதுதான் செய்தி வெளியிடும் நாணயமா?
2. மழைக்காலங்களில் இல்லாமல் மற்ற காலங்களில் மழைப் பொழிவதை, காற்றழுத்தம் ஏற்படுவதை பஞ்சாங்கத்தில் சொல்ல முடியாதது ஏன்? ஏன் சொல்லவில்லை? மழைக்காலத்தில் மழைபொழியும், காற்றடிக்கும் என்பது தெரியுமே!
3. ஒரு பஞ்சாங்கம் கூறியதை மற்ற பஞ்சாங்கம் கூறாதது ஏன்? அப்படியென்றால் மற்ற பஞ்சாங்கம் தப்பா?
4. பஞ்சாங்கம் என்பது கிரகங்கள் பற்றியது அதில் மழை, காற்று, சூறாவளி பற்றி கூற என்ன அடிப்படை உள்ளது? மழையும் காற்றும் காற்றழுத்ததால் வருவது அல்லவா?
5. ஓராண்டில் எத்தனையோ முறை காற்றழுத்த தாழ்வு உள்ளாகிறது அவற்றையெல்லாம் பங்சாங்கம் கூறாதது ஏன்? கூற முடியாது என்பதே உண்மை!
6. 22ஆம் தேதி புயலடிக்குமா? எங்கு அடிக்கும்? சொல்லுங்களே பார்ப்போம்!
7. இன்று ஆந்திராவுக்குச் சென்ற புயல் பற்றி பஞ்சாங்கம் கூறாதது ஏன்?
8. பஞ்சாங்கம் தமிழ் நாட்டுக்கு மட்டுமா? மற்ற மாநிலங்களுக்குமா? தினத்தந்தி விளக்குமா? இப்படியும் ஒரு பிழைப்பா?

Sunday, December 13, 2015

பெரும் வெள்ளம் தரும் பாடம்


- மஞ்சை வசந்தன்


 சென்னை உட்பட அய்ந்து மாவட்டங்களில் கடும் வெள்ளப் பாதிப்பு. ஒட்டுமொத்த சென்னை மாநகரமே மூழ்கி நின்ற அவலம். பல இடங்களில் பத்து அடி உயரத்திற்குத் தண்ணீர் நின்றதால் தரைத்தளம், முதல் தளம் மூழ்கிய பாதிப்பு.

மனிதர், விலங்கு, பணம், நகை, பொருட்கள், வாகனங்கள், குடிசை, ஆவணங்கள் வெள்ளத்தில் அடித்துச் சென்ற இழப்பு. தப்பி வீட்டில் நின்றவையும் நனைந்து, குலைந்து, பயன்படா நிலைக்குள்ளான நிலை.

வெள்ளம் சில நாள்கள் வடியாமலே நின்றதால், அடுக்குமாடியில் குடியேறியோர் அங்கேயே தவித்தனர். தரைத்தளம், குடிசையில் இருந்தோர் அடுத்த வீட்டிலும், பள்ளி, கல்லூரி என்று பலவிடங்களிலம் தஞ்சம் புகுந்தனர்.

ஆங்காங்கே தங்கியவர்களுக்கு குடிநீர், பால், உணவு, உடை என்று எதுவும் கிடைக்காது தவித்தனர். குழந்தைகளுக்குக் கூட பால் கிடைக்காத கொடுமை. கழிவறையில்லாததால் இயற்கை கழிவிறக்கங்கூட செய்யமுடியாத வேதனை!

போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு, மருத்துவ வசதியில்லை, மருந்து இல்லை, மின்சாரம் இல்லை. குளிரும், கொசுவும் கூட்டு சேர்ந்து நடுங்கச் செய்தன.

இருக்கும் நிலையை எடுத்துச் சொல்லவும், உதவி கேட்கவும், தொடர்பு கொண்டு உயிரோடு உள்ளோம் என்று உரியவர்க்குச் சொல்லவுங்கூட தொலைத்தொடர்பு இல்லை!
பலர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று உயிரையாவது காப்பாற்றுவோம் என்று சொந்த ஊருக்கு ஓட முயன்றனர். அதற்கும் வாகன வசதியில்லாது வாகன நிலையங்களில் வாடி வதங்கினர்.

சுருங்கச் சொன்னால் சென்னை மாநகரம் வெள்ளத்தால் வீழ்த்திக் குதறப்பட்டு, சின்னாபின்னமாக சிதறிக் கிடந்தது.
ஏன் இந்த அவலமும், பாதிப்பும்? எதிர்பாராத பலத்த மழை காரணமா?

உண்மை அறியாதவர்கள் அல்லது திசைதிருப்பும் பேர்வழிகள் சொல்லும் காரணம் இது. இத்தமிழகம் இதைவிட பல மடங்கு மழை வெள்ளங்களைச் சந்தித்துள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் மழைக் காலங்களில் தெருக்களில் நடக்க முடியாது. மூன்று மாதம் தொடர்ந்து மழை பெய்யும். தெருக்களில் சேறு அல்லது உளை காணப்படும். உளை என்றால் கெட்டியான சேறு. காலை வைத்தால் முழங்கால், இடுப்புவரை பதிந்துவிடும். ஒரு காலை இழுத்தால் இன்னொருகால் மாட்டிக்கொள்ளும்.

தொடர்ந்து மழை பெய்வதால் வீட்டின் தரை, சுவர் எல்லாம் ஓதம் ஏறி நிற்கும். தரையில் வைக்கோல் போட்டு பாய்போட்டு படுப்பர். அப்போதுகூட வெள்ளப்பாதிப்பு அதிகம் இருக்காது. அப்படிப்பட்ட மழையா இப்போது பெய்துவிட்டது? இல்லையே! இரண்டு நாள் கடும் மழை. இரண்டு நாள் மழையை வரலாறு காணாத மழை. மூன்று மாத மழை மூனறு நாளில் பெய்தது என்பதெல்லாம் திசைதிருப்பும் தந்திரம்.

உண்மையான காரணங்கள் எவை?

நாம் உண்மை இதழில் அண்மையில் எழுதியதுபோல், நீர் மேலாண்மையை புறக்கணித்து, சாராயத்தை ஓடவிட்டு அரசின் வருவாய் முழுவதையும் இலவசங்களுக்குக் கொட்டிச் செலவிட்டதுதான்!

1. தூர்வாரலும் வடிகால் வசதியும்: இருக்கின்ற ஏரிகளைத் தூர் வாரினால் அதன் கொள்ளளவு அதிகமாகும். பெய்யும் மழை நீரையெல்லாம் அது வாங்கிக் கொள்ளும். தெருக்களுக்கு வெள்ளம் வராது. ஆனால், எந்த ஏரியும் கால்வாயும், ஆறும் தூர்வாரப்படவே இல்லை. எல்லா நீர்நிலைகளும் பாதிக்குமேல் தூர்ந்துபோய் கிடக்கின்றன. எனவே, மழை பெய்ததும் உடனே அவை நிரம்பி வழிந்து வீடுகளுக்கு வந்துவிடுகின்றன.

2. வடிகால் வசதி செய்யாமை: அதிகப்படியான நீரை உடனே வெளியேற்ற வடிகால் வசதி வேண்டும். ஆனால், வடிகால் ஆதாரங்களும் செடிகொடிகளாலும், சாக்கடைச் சேற்றாலும் தூர்ந்துபோய் கிடந்ததால் மழைநீர் வெளியேற வழியில்லாமல், வீட்டிற்குள் நுழைந்தது.

3. முகத்துவாரத் தூர்வாரல்: பெருக்கெடுத்து வரும் ஆற்று நீரை கடல் எளிதில் கொள்ளும். ஆனால், கடல் அலை ஓட்டத்தில் அடிக்கடி மணல் மேடாகி, நீர் கடலுக்குள் செல்லாது தேங்குவதால், கடலுக்குள் செல்ல வேண்டிய நீர் நகருக்குள் புகுந்து நாசப்படுத்துகிறது.
எனவே, முகத்துவாரத்தில் மணல் தேங்குவதை அடிக்கடி அப்புறப்படுத்தி, ஆற்றுப் பெருக்கு கடலுக்குள் கலக்க வகை செய்தால் வெள்ளப்பெருக்கை பெருமளவு குறைக்கலாம்.
முட்டுக்காடு பகுதியில் இப்பணியைச் செய்த அரசு, கூவம், அடையாற்றுப் பகுதிகளில், முகத்துவாரத்தில் செய்யாதது சென்னை வெள்ளத்தில் மூழ்கியதற்கு முதன்மைக் காரணம்.

4. ஆற்றுமணல் கொள்ளை: ஆற்று மணல் என்பது நீரை உறிஞ்சி கோடைக் காலத்திலும் கொடுக்கும் நீர்க்கலம். அதை அளவின்றி கொள்ளையடித்துச் சுரண்டியதனால், நீர் உறிஞ்சப்படாது வெள்ளமாக விரயமாகிறது.

5. ஆக்கிரமிப்பு: நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள், கல்விக் கூடங்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்கூடங்கள் கட்டுவதால், நீர் தேங்க (வாங்க) வழியின்றி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. நீர் தேங்க வேண்டிய இடங்களில் கட்டிடங்கள் வந்தால், நீர் நகருக்குள் வரத்தானே செய்யும். இதை மறைத்து மழை கனமாகக் கொட்டிவிட்டது என்று காரணம் சொல்வது ஏமாற்றும் முயற்சியே!

6. கழிவுகள், குப்பைகள்: ஆறுகள், ஏரிகளில் கழிவுகளையும் குப்பைகளையும் கொட்டுவதால் நீர் நிற்கும் (நிறையும்) ஆதாரங்கள் குப்பை மேடாகி, நீர் தேங்க வழியின்றி நகருக்குள் நகர, வெள்ளம் வீட்டிற்குள் வந்து நம்மைத் தண்டிக்கிறது.

7.  செம்பரம்பாக்கம் ஏரியை உரிய காலத்தில் திறந்து விடாமல் காலதாமதமாகத் திறந்துவிட்டதுதான் பேரழிவுக்கு முக்கிய காரணம் என்ற கருத்தும், தகவலும் பரவலாக உறுதிப்படுத்தப்படுகிறது.
தீர்வுகள் எவை?: 

1. தூர் வாருதல்: உடனடியாக நீர்நிலைகளைத் தூர்வாரி, அதன் உண்மையான பரப்பளவையும், கொள்ளளவையும் நிலைநாட்ட வேண்டும். அதில் உள்ள செடி, கொடிகளை அறவே அகற்ற வேண்டும். ஆழப்படுத்தும்போது தோண்டியெடுக்கப்படும் மண்ணை ஏரி, குளம், ஆற்றுக்கரைகளை உயர்த்த, பலப்படுத்த பயன்படுத்த வேண்டும்.

2. முகத்துவாரத்தில் மணல் மேடகற்றல்: ஆறுகள் கலக்கும் கடற்பகுதியில் ஆற்றுநீர் விரைந்து சென்று கலக்கும் வகையில் அங்குள்ள மணல் மேடுகளை அடிக்கடி அகற்ற வேண்டும்.

3. ஆக்கிரமிப்பு அகற்றல்: நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி அதன் உண்மையான பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். நீர்நிலைகளில் கட்டுமானம் மேற்கொள்ள எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக் கூடாது.

4. கழிவுகள், குப்பைகள் கொட்டுதல்: கழிவுகளைத் தனியேயும், குப்பைகளைத் தனியேயும் கொண்டு சேர்க்க வேண்டும். நீர்நிலைகளிலோ, மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலோ கொட்டாமல் நகரின் புறத்தே இடத்தைத் தேர்வு செய்து கொண்டு சேர்க்க வேண்டும். அதற்குக் குப்பை வாகனங்களை நிறைய வாங்க வேண்டும். இதற்குச் செலவிட அரசு தயங்கவே கூடாது.
5. மக்களின் கடமை: பொதுமக்களும், கழிவுகள், குப்பைகளை கண்டபடி வெளியேற்றாமல், உரிய முறையில் பொறுப்புடன் வெளியேற்ற வேண்டும். பொது நலம் கருதாது போனாலும், தன்னலம் கருதியாவது இதைப் பின்பற்ற வேண்டும். இந்தத் தண்டனைக்குப் பிறகாவது நாம் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்.


எல்லா சீர்கேட்டிற்கும் இலவசங்களே காரணம்! தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட முடியாது அரசு தயங்கக் காரணம், இலவசத் திட்டங்களுக்கு அத்தொகை முழுவதும் செலவிடப்படுவதுதான். இலவசங்களை நிறுத்தினால் மதுக்கடைகளை மறுநாளே மூடலாம்.
தூர்வாருதல், துப்புரவு செய்தல், புதிய நீர்நிலைகள் அமைத்தல் போன்ற ஆக்கபூர்வமான செயல்திட்டங்களுக்குச் செலவு செய்ய வேண்டிய நிதி முழுவதும் இலவசத் திட்டங்களுக்கே செலவிடப் படுவதால், இவற்றைச் செய்ய நிதியின்றி போக, வெள்ளம் வீட்டிற்குள் வந்து, கொடுத்த இலவசத்தையும் கொண்டுபோய் விட்டது.

இலவசங்களால் எந்தப் பயனும் இல்லை: அரசின் வருவாயில் பெரும்பகுதியைக் கொட்டிக் கொடுக்கப்படும் இலவச விசிறி, கிரைண்டர், மிக்சி எதுவும் ஓராண்டு கூட உழைக்காமல் பரணைக்குச் செல்கின்றன. அரசு ஓர் ஆய்வு மேற்கொண்டால் இந்த உண்மையை உணரலாம்.

எனவே, பயனற்ற இந்த இலவசப் பொருட்களைக் கொடுத்து, மக்களுக்குப் பயனின்றிப் போவதைவிட, அத்தொகையை மேற்கண்ட மக்கள் நலப் பணிகளுக்குச் செலவிட்டால், மக்கள் பல வகையில் பயன்பெறுவர்.

ஒருங்கிணைப்பு வேண்டும்: இதுபோன்று இயற்கைப் பாதிப்புகள் ஏற்படும்போது, ஓர் ஒருங்கிணைந்த செயல்திட்டம் வேண்டும். ஆனால், இந்த அரசு தன்னிச்சையாகச் செயல்படுவதையே பெருமையாகக் கருதி தான்தோன்றித்தனமான செயல்பாடுகளைச் செய்வதால், முறையான செயல்பாடும் விளைவும், தீர்வும், நலமும் இல்லாமல் போகிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டம் அவசியம் : முக்கிய செயல்பாடுகள் மேற்கொள்ளும் போது, அனைத்துக் கட்சித் தலைவர்கள், வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், அறிஞர்கள் போன்றோரை அழைத்து, கருத்துப் பரிமாற்றம் செய்து, தீர்க்கமான தெளிவான, உறுதியான முடிவை எடுத்து, எல்லோரின் ஒத்துழைப்புடன் செயல்பட்டால் எதையும் எளிதில் எதிர்கொள்ளலாம்; வெல்லலாம்!
மழை வெள்ளத்தில் மலர்ந்த மனிதநேயம்: மதம் கடந்து, ஜாதி கடந்து, மாநிலம் கடந்து மனிதர் என்ற பற்றால் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்ட பாங்கு மனிதம் மரிக்கவில்லை என்பதை வெளிக் காட்டிற்று.

குறிப்பாக இளைஞர்கள் தன்னார்வமாக, தங்கள் உயிரையும் துச்சமென எண்ணி வெள்ளப் பெருக்கில் பல மணிநேரம் நீந்தி பொருட்களை, மருந்துகளை, உணவுகளைக் கொடுத்து மக்களைக் காத்ததோடு மனிதத்தையும் காத்தது போற்றவேண்டிய தொண்டாகும்.

இந்தத் தொண்டு உள்ளங்கள் இல்லையென்றால் இந்தப் பேரிடரை நாம் எதிர்கொண்டிருக்க முடியாது என்பதே உண்மை!
குப்பைக் கழிவு அகற்றல்: நகரம் முழுவதும் தேங்கி நிற்கும் குப்பைகளை விரைந்து அகற்றி வேறு உரிய இடத்தில் கொட்ட வேண்டும். பிளிச்சிங் பவுடர் எல்லா பகுதிகளிலும் தெளிக்கப்படுதல் வேண்டும். தேங்கி நிற்கும் நீரை உடனே வெளியேற்ற வேண்டும்.
வெள்ளநீர் தேங்கிய வீடுகளில் நோய்த் தொற்று நீங்க பிளீச்சிங் பவுடர் கொண்டு தூய்மை செய்து பினாயில் தெளிக்க வேண்டும். பொருட்களையும் அவ்வாறே தூய்மை செய்ய வேண்டும்.
மருத்துவ வசதி: கழிவுகளால், நீர்த் தேக்கத்தால் தொற்றுநோய் பரவும். எனவே, உடன் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும், மரத்துவ முகாம்களையும் மேற்கொள்ள வேண்டும். தடுப்பு ஊசி போடவேண்டும்.


பாடம் பெறுவோம்: இந்த வெள்ளப் பாதிப்பை ஒரு பாடமாகக் கொண்டு, அரசு, மக்கள், அலுவலர்கள், தொண்டு அமைப்புகள் என்று பலதரப்பினரும் படிப்பினை பெற்று, தவற்றைத் திருத்தி சரி செய்து, உரிய வழியை, திட்டங்களைச் செயல்படுத்தி, இனி இதுபோன்ற சீர்கேடுகள் நிகழாமல் தடுக்க இப்போதிருந்தே முற்படுவதுதான் சரியான உரிய வழி! குறிப்பாக அரசுதான் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்!
   


Tuesday, November 24, 2015

திருவண்ணாமலை தீபம் எரிமலை வெடிப்பே!.



சிவபெருமான் மண்ணுக்கும் விண்ணுக்கும் ஜோதியாக நின்றார். அதன் அடையாளமாக கார்த்திகையில் மலையுச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது என்பது பொய். உண்மையில் நிகழ்ந்தது என்ன?

திருவண்ணாமலை இமயமலையை விட பழமையானது. அதன் உச்சியில் எரிமலை வெடித்து வானுயர நெருப்பு எழுந்தது எரிமலை வெடிப்பு என்பதை அறியாத மக்கள் கடவுள் நெருப்பாக எழுந்துள்ளதாக எண்ணி வணங்குனர்.

10 ஆண்டுகளுக்கு முன் இச்செய்தியை எழுதி நிலவியல் ஆய்வாளர்கள் சோதனை செய்தால் இதை அறியலாம் என்று கூறினேன். சோதனை முடிவில் எரிமலை வெடிப்பு என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மலையில் உள்ள பாறைகள் நெருப்பு குழம்பு உருகியதால் உருவானது என்று அறிவித்தனர்.

(ஆய்வுச் செய்தி தினமணி 01-08-2012 பக்கம் 7)

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

Monday, November 23, 2015

நீர் மேலாண்மையை நிறுத்திவிட்டு சாராயத்தை ஓடவிடுவது சரியா?

கல்லணையைப் பார்த்தே கற்றுக்கொண்டேன் பிரிட்டிஸ் பொறியாளர் ஒப்புதல்!

- மஞ்சை வசந்தன்
கடலா, ஏரியா என வியக்கும் அளவுக்கு பெரிய ஏரி, வீராணம் ஏரி! சென்னை மாநகருக்கே இன்று தண்ணீர் தரும் ஏரி! அப்படியொரு ஏரியை நிர்மாணித்தவர் நம் தமிழ் மன்னர் _ முதலாம் பராந்தக சோழன் என்றாலும், அதை வற்றவிடாமல் வளம் காப்பது ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயர் உழைப்புதான்.
தரிசாய்க் கிடக்கும் நிலங்கள் ஒருபுறம், ஒதுங்க ஆற்று நீர் வீணாய் கடலில் கலக்கும் நிலை. இப்படியிருந்த தென்னிந்தியாவை அணைக்கட்டுகளால் முறைப்படுத்தி வளம் ஆக்கியவர் ஆர்தர் காட்டன். சுமார் நூற்றி அய்ம்பது வருடங்களுக்கு முன்பே இந்தியாவின் அனைத்து நதிகளையும் இணைத்து ஒரு சொட்டு நன்னீர் கூட வீணாகாமல் விவசாயம் செய்ய வேண்டும் என திட்டமிட்டு முயன்றவர் ஆர்தர். அதற்காக அன்றைய ஆங்கில அரசிடம் போராடி, வாதாடி சாதித்தவர். இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தையாக இவர் கருதப்படுகிறார்.
மிலிட்டரி மாணவராக பிரிட்டிஷ் இந்தியாவுக்கு 15 வயதில் வந்தவர் ஆர்தர். பிறவிக் கலைஞன் என்பதுபோல, அப்படியொரு பிறவிப் பொறியாளர் இவர். பொறியியல் துறையிலேயே படித்து, படிப்படியாக உயர்ந்து. சென்னை மாகாண பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் ஆனவர். தமிழகம் மட்டுமின்றி அன்றைய ஆந்திர மாநிலமும் அணைக்-கட்டுகளால் வளம் பெறச்செய்தவர். ஆர்தர் காட்டன் நிர்மாணித்த அணைகளில் திருச்சி முக்கொம்பில் உள்ள மேலணையும், தஞ்சை  அரியலூர்  கடலூர் ஆகிய 3 மாவட்டங்களின் எல்லையான அணைக்கரையில் உள்ள கீழணையும் முதன்மையானவை, முக்கியமானவை.
கர்நாடக மாநிலம் குடகிலிருந்து தமிழகம் நோக்கிப் பாயும் காவிரி ஆற்றிலிருந்து பிரியும் கிளை நதிதான்  கொள்ளிடம் ஆறு. திருச்சி முக்கொம்பில் பிரியும் இந்த நதி, தாய் நதியான காவிரியை விடவும் அதிகப் பள்ளமான பிரதேசங்களில் பாய்கிறது. எனவே, நீர் இதன் வழியே வெகுவேகமாகப் பயணித்து கடலில் வீணாகக் கலந்துவிடும். இதனால் காவிரியின் நீர் இருப்பே கூட வெகுவாகக் குறைந்துவிடும். இதைத் தடுத்து, நீரைத் தேக்குவதற்காக சர் ஆர்தர் காட்டன் 1835_1836ஆம் ஆண்டுகளில் கொள்ளிடம் ஆற்றில் மேலணையைக் கட்டினார். இதன் மூலம் காவிரி நீர் சேமிக்கப்பட்டு, தஞ்சை, நாகப்பட்டினம் டெல்டா பகுதிகளுக்கு பாசன நீரைப் பகிர்ந்தளிக்க முடிந்தது. மேலும் காவிரியில் வெள்ளம் கரை புரண்டோடிய காலங்களில் கல்லணைக்கு பாதிப்பில்லாமல் இருக்க மேலணை வழியாக உபரி நீர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வழிசெய்யப்பட்டது.
இந்த உபரி நீரும் வீணாகக் கடலில் கலக்கக் கூடாது என நினைத்தார் ஆர்தர். இந்த நீரைத் தேக்கி வைத்தால் கடலூர். தஞ்சை, நாகப்பட்டினம் பகுதி நிலங்களின் பாசனத்திற்கு பயன்படுத்தலாம் என்ற நோக்கில் அவர் கட்டியதுதான் அணைக்கரையில் உள்ள கீழணை. தனது அணைக் கட்டுத் திட்டங்களை முடிந்தவரை சிக்கனமாகவும் தொலைநோக்குப் பார்வையோடும் செய்து முடிப்பதில் வல்லவர் ஆர்தர். இதனால்தான் அன்றைய நலிந்த பொருளாதாரத்தைக் கொண்டே ஆங்கில அரசின் அனுமதியுடன் இத்தனை அணைகளை அவர்கட்டினார்.
கீழணையின் அமைப்பைப் பார்த்தால் ஆர்தரின் பொறியியல் வல்லமையைப் புரிந்து கொள்ளலாம். மூன்று மாவட்டங்களின் தாகத்தையும் பசியையும் தீர்க்கும் இந்தக் கீழணை மூலம் மொத்தம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 304 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
கொள்ளிடம் ஆறு ஓரிடத்தில் மட்டும் இரண்டாகப் பிரிந்து 2கி.மீ பயணத்துக்குப்பின் மீண்டும் ஒன்று சேருகிறது. இந்த இரு நதிகளுக்கிடையே தீவு போல் அமைந்திருந்த இடம்தான் அணைக்கரை. நதி பிரிந்து ஒன்று சேரும் இடத்தில் மட்டும் சின்ன அணைக்கட்டு கட்டி நீரைத் தேக்கிவிட்டால், தீவாக இருக்கும் பரப்பு முழுவதும் நீரை நிறுத்தி வைக்க முடியும் எனக் கணக்கிட்டார் ஆர்தர். இதன் விளைவுதான் கீழணை. கொள்ளிடம் ஆறு அதிகப்பட்சமாக 1500 மீட்டர் அகலம் கொண்டது. ஆனால், கீழணை கட்டப்-பட்டிருக்கும் பகுதி மொத்தமே 400 மீட்டர்தான். தன் பொறியியல் திறமை முழுவதையும் தென்னிந்திய மக்களுக்காக செலவிட்டு, தன் வாழ்வை அர்ப்பணித்து  இதைச் சாதித்தார்.
1850_1851 காலகட்டத்தில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் கட்டப்பட்ட அணைக்-கட்டும் சர் ஆர்தர் காட்டன் கட்டியதாகவே கருதப்படுகிறது. அந்த அணையில்லையென்றால் ஏராளமான நீர் வீணாகும். அந்த அணையின் மூலம் சிதம்பரம் வட்டம் வளம் பெற்றது. காவிரி, கொள்ளிடம் மட்டுமல்லாது வெண்ணாறு, வெட்டாறு உள்ளிட்ட ஆறுகளின் தண்ணீரைப் பாசனத்துக்குப் பயனுள்ளதாக மாற்ற பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொடுத்த ஆர்தர் காட்டன், மேட்டூர் அணை கட்டுவதற்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளிலும் அணைகளைக் கட்டி பாசனத்தை ஒழுங்கு செய்திருக்கிறார்.
ஆர்தர் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களைக் கையாண்டு அங்கே மாபெரும் அணைக்கட்டை எழுப்பினார். இந்தியாவின் மிக முக்கிய நீராதாரமாக கோதாவரியை மாற்றிக் காட்டினார். யாராலும் தடுக்க முடியாத காட்டாற்றுப் பெருவெள்ளத்தைத் தடுக்கும் தொழில்நுட்பத்தை ஆர்தர் காட்டன் பெற்றதை அவரே கூறுகிறார் அந்தப் பெருமை என்னுடையதல்ல.... தமிழர்களின் முப்பாட்டனுடையது என ஆர்தரே விளக்கம் தந்துவிட்டார். ஆழம் காண முடியாத மணற்படுகையில் அடித்தளம் அமைப்பது எப்படி என்பதை கல்லணையைப் பார்த்துத்-தான் நான் கற்றுக்கொண்டேன்! என மனம் திறந்து ஒப்புக்கொண்ட ஆர்தர் காட்டன். நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத அந்தக் காலத்திலேயே தமிழர்களின் அணை கட்டும் திறனும், தொழில் நுட்ப அறிவும், பாசன மேலாண்மையும் சிறந்து விளங்கியதை உலகறியச் செய்தார் அதனால்தான் பெருமைமிகு கல்லணைக்கு கிராண்ட் அணைகட் என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
இந்திய நதிகள் அனைத்தையும் இணைத்-தால் ஒடிஷாவில் நிலவும் வறட்சியைப் போக்கலாம் எனும் விண்ணப்பத்தை ஆர்தர் 1858ஆம் ஆண்டே இங்கிலாந்து அரசிடம் கொடுத்தார். ஆனால், அதற்கு அவருக்கு அவகாசம் போதவில்லை. 1860 ஆம் ஆண்டே பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பிவிட்டார். தனது 96 வயது வரை வாழ்ந்த அவர், 1899ஆம் வருடம் இறந்துவிட்டார்.
வறண்ட நிலங்களையெல்லாம் நதிநீரால் வளம் செய்ததற்காக ஆர்தர் காட்டனை ஆந்திர மக்கள் இன்றும் தங்கள் குலதெய்வமாகப் பார்க்கிறார்கள். அங்கு அவருக்கு கிராமங்கள் தோறும் சிலை வைக்கப்பட்டுள்ளன. கோதாவரி மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆர்தர் காட்டன் சிலைகள் உள்ளன. இன்னும் தங்கள் பிள்ளைகளுக்கு ஆர்தர் காட்டனின் பெயரை வைக்கிறார்கள் அப்பகுதி மக்கள். ராஜ முந்திரியில் அவருக்கு அருங்காட்சியகமும் வைத்திருக்கிறார்கள்.
தமிழர்கள் இருசிலைகள் நிறுவி அவருக்கு மரியாதை செலுத்தினர். ஆனால், அவருக்குச் செலுத்தும் உண்மையான மரியாதை தமிழத்தில் ஒரு சொட்டு நீர்க்கூட கடலில் சென்று வீணாகாதவாறு அணைகள், ஏரிகள் கட்டி நீரைத் தேக்குவது ஒன்றே. சாராயத்தை ஆறாக ஓடவிடும் அரசு, அதை மூடிவிட்டு ஒடிவரும் நீரை ஒழுங்குப்படுத்துவதில் முழுகவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் மக்களுக்கு அதைவிடப் பெரிய துரோகம் வேறு எதுவும் இல்லை! நீர் மேலாண்மை செய்யாத அரசை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

Sunday, November 15, 2015

மெட்ராஸ்-ஐ பார்த்ததும் தொற்றுமா?


பொதுவாக மழைக்காலங்களில் மெட்ராஸ்_ஐ என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு கண்நோய் பரவலாகத் தொற்ற ஆரம்பிக்கும். அப்போது கண் உறுத்தல் அதிகம் இருக்கும், கண் கடுமையாகச் சிவந்திருக்கும்.

இந்நோய் வந்தவர்கள் கண்ணாடி போட்டுக் கொள்வார்கள். நோய் வந்தவர்கள் கண்ணைப் பார்த்தால் பார்த்தவருக்குத் தொற்றும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், இது தவறான எண்ணமாகும். கண்ணைத் தூரத்திலிருந்து பார்ப்பதால் இந்நோய் தொற்றுவதில்லை.
கண்ணோய் உள்ளவர் அடிக்கடி கையாலோ, விரலாலோ, கைக்குட்டையாலோ கண்ணைத் துடைப்பர். அவ்வாறு துடைத்தவுடன் அந்த விரலால் வேறு பொருளைத் தொடுவர். அப்போது நோய்க் கிருமி அதன் வழி அப்பொருளில் தொற்றும் (ஒட்டும்). அதை வேறொருவர் தொடும்போது அவர் விரலில் அக்கிருமி தொற்றி, அவர் தனது கண்ணைத் துடைக்கும்போது அவரது கண்ணைக் கிருமிகள் தாக்குகின்றன.
குறிப்பாகப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது, இந்நோய் எளிதில் தொற்றம். காரணம், பேருந்துக் கம்பிகளை மாற்றி மாற்றி நோய் உள்ளவரும் இல்லாதவரும் தொடுவர். இதன் மூலம் கண்ணோய் எளிதில் தொற்றும்.
ஆகவே, இக்கண்ணோய் பரவும் காலத்தில் நமது கைகளைத் தூய்மையாய் வைத்துக் கொள்வதும், கண்ணைத் தூய்மையாய் வைத்துக் கொள்வதும் இந்நோய் பரவாமல் தடுக்கும். மற்றபடிப் பார்ப்பதால் இந்நோய் தொற்றுவதில்லை. தொற்றுவதாக எண்ணுவது தவறு ஆகும்.

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
___

கியாஸ் சிலிண்டர் விபத்து... ரூ. 50 லட்சம் வரை இழப்பீடு உண்டு!


கியாஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்து விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினருக்கு இன்ஷூரன்ஸ் மூலமாக நிவாரணம் பெற முடியும்.
ஒருவர் எரிவாயு இணைப்பைப் பெற்றாலே, இந்த இன்ஷுரன்ஸ் தானாகவே அவருக்கு வந்துவிடும். கியாஸ் சிலிண்டர் வெடித்து உயிர் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டால், ரூ. 50 லட்சம் வரை இதன் மூலமாக இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம். இழப்பீடு சேதத்தின் அளவைப் பொறுத்தது. அதிகப்பட்ச இழப்பீடு ரூபாய் 50 லட்சம்.
இழப்பீடு பெறுவது எப்படி?
விபத்து நடந்தால், உடனடியாக கியாஸ் ஏஜென்சியிடம் எழுத்துப்பூர்வ புகார் கொடுக்க வேண்டும். இன்ஷூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் குழு வந்து ஆய்வு செய்யும்வரை விபத்துக்கான தடயங்களை அப்படியே வைத்திருக்க வேண்டும்.
போலீஸ் ஸ்டேஷனில் எஃப்.அய்.ஆர் பதிவு செய்ய வேண்டும். உயிர் இழப்பு ஏற்பட்டிருந்தால், மரணச் சான்றிதழ், போஸ்ட்மார்ட்டம் அறிக்கை ஆகியவற்றை பெற வேண்டும். காயங்களுக்குச் சிகிச்சை எடுத்திருந்தால், மருத்துவ மற்றும் மருந்து ரசீதுகளைப் பத்திரப்படுத்த வேண்டும். உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனமே ஒரு சர்வேயரை நியமித்து சேத மதிப்பைக் கணக்கிடும்.
இழப்பீடு பெற நாம் பயன்படுத்தும் அடுப்பு, கியாஸ் டியூப், லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் அய்.எஸ்.அய் தரச்சான்று பெற்றவையாக இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் உரிய கட்டணம் செலுத்தி, தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். சமையல் அறை அல்லாத இடங்களில் கியாஸ் சிலிண்டரைப் பயன்படுத்திருக்கக் கூடாது. உங்கள் பெயரில் வாங்கிய கியாஸ் சிலிண்டர் மட்டுமே பயன்படுத்திருக்க வேண்டும். இவை சரியாக இருப்பின் இழப்பீடு நிச்சயம் கிடைக்கும்.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

பீகாரைப் பின்பற்றுங்கள்!


மக்கள் நலக்கூட்டணிக்கும் தே.மு.தி.க.விற்கும் எமது கனிவான வேண்டுகோள்! தனிப்பட்ட வெறுப்புகளைத் தள்ளுங்கள்!
தமிழகத்தின் நலனைக் கொள்ளுங்கள்!
- மஞ்சை.வசந்தன்
ஊழல் கேடானது! மதவெறி ஆபத்தானது! ஊழலை வெறுத்து மதவெறிக்குத் துணை நிற்கலாமா? முதலில் ஒழிக்கப்பட வேண்டியது மஅதவெறி பின்னர் களையப்பட வேண்டியது ஊழல்!
ஊழலற்ற நிதிஷ்குமார் ஊழல் காரணத்திற்காக லாலுவை ஒதுக்கியிருந்தால் மதவெறிக் கும்பலை வீழ்த்தியிருக்க முடியுமா?
தமிழக அரசியல் கட்சிகள் குறிப்பாக கம்யூனிஸ்ட்கள் இதைச் சிந்திக்க வேண்டும்.
ஊழல் காரணத்திற்காக தி.மு.க.வை ஒதுக்கும் கம்யூனிஸ்டுகள் ஊழல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க முயன்றது ஏன்?
இரட்டை அளவுகள் இடதுசாரிகளுக்குச் சரியா? நியாயமா?
பி.ஜே.பி.க்கும் அ.தி.மு.க.விற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று பி.ஜே.பி. அறிவித்துவிட்டது. இதை அ.தி.மு.க. மறுக்கவில்லை.
ஆக, தமிழகத்தில் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது அ.தி.மு.க.வும் பி.ஜே.பி.யும்.
தி.மு.க. ஊழல் குற்றச்சாட்டுக்காக ஒதுக்கப்பட்டு, ஊழலற்ற கூட்டணி என்று அமைந்தால் வாக்குகள் சிதறி, அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவே வழிசெய்யும்.
2016 தேர்தலை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க. தவிர்த்த வேறு அணி வர வாய்ப்பே இல்லை. எனவே, இத்தேர்தலில் தி.மு.க தலைமையில் மதச்சார்பற்ற அணி அமைத்து போட்டியிடுவதே தமிழ்நாட்டுக்கு நல்லது.
அதன்பின் 2021அய் இலக்கு வைத்து புதிய முயற்சிகளை மேற்கொள்வதே புத்திசாலித்தனமாகும்.
தத்துவார்த்தம் யதார்த்தத்தை ஒட்டியதாக இல்லையெனில் தோல்வியே மிஞ்சும். கற்பனையில் களம் காணக் கூடாது! சிந்திப்பீர்! முடிவெடுப்பீர்!
தமிழ்நாடு டில்லி அல்ல. கெஜ்ரிவால் சாதனை இங்கு சாத்தியப்படாது. டில்லி படித்த பலதரப்பு மக்கள் வாழும் பகுதி. அங்கு உடனடிக் காரணங்கள் உடனடி விளைவுகளை உருவாக்கும். ஆனால், தமிழகம் நிலையான வாக்கு வங்கிகளை உடைய ஒரு மாநிலம். இங்கு ஒட்டுமொத்த மாறுதல் உடனே நிகழாது.
கொள்கைவாதிகளை, நல்லவர்களை அடையாளம் கண்டு வாக்களிப்போர் குறைவு.
எழுத்தாளர் ஞானி, கம்யூனிஸ்ட் மகேந்திரன் தேர்தலில் நின்றார்களே, அவர்களைவிட தகுதியான ஆட்கள் உண்டா? அவர்களுக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன.
சகாயம் முன்னிறுத்தப்பட்டாலும் அதுதான் நடக்கும். நடுநிலை வாக்குகள் கிடைக்கும். ஆனால், வெற்றிக்கு உதவாது, விரயம்தான் ஏற்படும்.
எனவே, வாக்கு வங்கியை கணக்கிட்டு அணி சேர்ந்து வீழ்த்த வேண்டிய அ.தி.மு.க., பி.ஜே.பி.யை வீழ்த்த வேண்டும். தி.மு.க. குறையுள்ள கட்சி. ஆனால், ஆபத்தான கட்சியல்ல! ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்கள்!
திருந்தி வருந்தும் திமுகவிற்கு மீண்டும் வாய்ப்பளித்தால் நேர்மையான நல்லாட்சி கிடைக்க நிறைய வாய்ப்புண்டு!

___

தீ மிதிப்பது கடவுள் சக்தியாலா? தீ மிதிக்கும்போது சுடாமல் இருப்பது ஏன்?

தீ மிதிப்பது கடவுள் சக்தியாலா?
தீ மிதிக்கும்போது சுடாமல் இருப்பது ஏன்?
ஆணிச் செருப்பு குத்தாதது ஏன்?
இதோ அதற்கான காரணங்கள்!
கீழே கிடக்கும் ஒரு சிறு நெருப்பை மிதித்தால்கூட சுரீர் என்று சுடுகிறது. அப்படி இருக்க இறைவன் அருள் இல்லாமல் எப்படி தீ மிதிக்க முடியும்? எனவே தீ மிதிப்பது இறைவன் அருளால்தான் என்று பலர் நினைக்கிறார்கள். நம்புகிறார்கள். ஆனால், இந்த நம்பிக்கை முற்றிலும் தவறு.
கோயிலில் தீ மிதிக்கின்றவர்களை அழைத்து ஒரே ஒரு நெருப்புத் துண்டை சாம்பல் நீக்காமல் தரையில் போட்டு மிதிக்கச் சொன்னால் எப்படிப்பட்ட பக்தனாய் இருந்தாலும் சுட்டுவிடும்.
பின் ஏன் தீக்குழியில் இறங்கி நடக்கும்போது சுடுவதில்லை?
தீக்குழியில் தீ சுடாமல் இருப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. 1. நெருப்பு அதிக அளவில் சமமாகப் பரப்பப்பட்டிருக்க வேண்டும். 2. நெருப்பில் நீறுபூத்த சாம்பல் இருக்கக்கூடாது. 3. கால் ஒரே இடத்தில் நிற்காமல் விரைந்து மாறி மாறி எடுத்து வைக்கப்பட வேண்டும் (விரைந்து நடக்க வேண்டும்). இந்த மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு மட்டுமே தீ மிதிக்க முடியும்.
சாம்பல் நீக்கப்படாத நெருப்பில் யாரும் தீ மிதிக்க முடியாது. சுடுசாம்பல் பிசின்போல காலில் ஒட்டி வெந்துவிடும். அதனால்தான் முறத்தால் அல்லது வேப்பிலையால் விசிறி சாம்பலை நீக்குவார்கள்.
மேடு பள்ளமான நெருப்பில் தீ மிதிக்க முடியாது. அதனால்தான் அடித்து நொறுக்கிச் சமப்படுத்துகிறார்கள்.
ஒரே இடத்தில் நின்று தீ மிதிக்க முடியாது. அதனால்தான் விரைந்து ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.
உள்ளங்கையில் ஒரு நெருப்புத் துண்டைப் போட்டு இரண்டு உள்ளங்கைக்கும் அதை விரைந்த மாற்றிக் கொண்டேயிருந்தால் சுடாது. ஆனால், ஒரே உள்ளங்கையில் சற்று நேரம் நெருப்பை வைத்திருந்தால் சுட்டுவிடும்.
அடுப்பில் சிதறி விழும் தணல் நெருப்பைப் பெண்கள் விரலால் சட்டென்று எடுத்து மீண்டும் அடுப்பில் போடுவார்கள். ஆனால், சாம்பல் பூத்த நெருப்பை தொடமாட்டார்கள். தொட்டால் சுடுவத மட்டுமல்ல; கொப்பளித்து விடும். சுடுசாம்பல் பசை போல் ஒட்டிக் கொள்வதே அதற்குக் காரணம்.
ஆக, இக்காரணங்களால் தீ மிதிக்கும் போது சுடுவதில்லையே தவிர மற்றபடி இறைவன் அருளால் அல்ல. ஒரே இடத்தில் நின்று எந்த பக்தனாலும் தீ மிதிக்க முடியாது.
பின் எப்படி அக்கினிச் சட்டி கையில் ஏந்துகிறார்கள்? அது ஏன் சுடுவதில்லை?
அக்கினிச் சட்டி ஏந்தும் எந்தவொரு பக்தனும் வெறுங்கையில் நெருப்பை ஏந்த முடியாது. சட்டியின் அடியில் தடவப்படுகின்ற சாறு மற்றும் வேப்பிலைதான் சுடாமல் இருக்கக் காரணம்.
இறைவன் அருள் என்று எவனாவது கூறினால் அவன் கையில் ஒரு கரண்டி தணல் நெருப்பை அள்ளி வையுங்கள். அப்போது புரியும் சுடுகிறதா என்று!
ஆணிச் செருப்பு காலில் குத்தாததற்குக் காரணம் ஆணிகள் அதிக அளவிலும் கூர்முனை சமமாக இருப்பதும்தான். ஒரே ஒரு ஆணியின் கூர்முனை நீட்டிக்கொண்டிருந்தால் காலில் ஏறிவிடும். கூர்முனை சமமாக இருப்பதால்தான் குத்துவதில்லை. எந்த பக்தனாவது நிற்க முடியுமா? ஒரே ஒரு ஆணி நீட்டிக்கொண்டு நிற்கும்போது உடலின் எடை முழுவதும் அதன்மேல் வர ஆணி ஏறிவிடும். அதிக ஆணிகள் சமமாக இருந்தால் எந்த ஒரு ஆணியும் காலில் ஏறாது. காரணம் எடை பரவலாக்கப்படுகிறது.
ஆக, இவையெல்லாம் கடவுள் சக்தியால் அல்ல. அறிவியல் காரணங்களால்தான். பக்தியினால் அல்ல; புத்தியினால்தான்.

வாயில் அடைகாக்கும் மீன்.................


கேட்பிஷ் எனும் ஒருவகை மீன் இனம் உள்ளது. இந்த இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் பெண்மீன் முட்டையிடுகிறது. ஆண் மீன்கள், முட்டைகளை வாயிலேயே அடைகாத்து குஞ்சு பொரிக்க வைக்கிறது.
குஞ்சு வெளிப்பட்ட 2வாரம் வரை மீன் குஞ்சுகள் தந்தையின் வாய்க்குள்ளேயே பத்திரமாக இருக்கும். அதிகபட்சம் 50 முட்டைகள் வரை வாயில் அடைகாக்கிறது. அடைகாக்கும் இந்தக் காலத்தில் சுமார் 6 வாரம் வரை ஆண் மீன்கள் உணவு உண்ணாமல் இருப்பது அதிசயமாகும்

கீதையும் எனது கேள்வியும்.......(5)


 கொலை செய்ய அஞ்சாதீர்!

 கூறுகிறது பகவத் கீதை!

 “ஆன்மா அழிவில்லாதது. எனவே, யாரைக் கொலை செய்வது பற்றியும் அஞ்சவேண்டாம்!”
(பகவத்கீதை அத்தியாயம் 2, சுலோகம் 30)

 இப்படி கொலைவெறியைத் தூண்டும் பகவத்கீதை ஒருபுனித நூலா?
இதைப்படித்துவிட்டுத்தான் கோட்சே காந்தியைக் கொன்றான்.

 கொலை வெறியைத் தூண்டும் பகவத்கீதையைத் தடைசெய்ய வேண்டாமா?
மாறாக இதை மாணவர்களுக்குப் பாடமாகச் சொல்லித்தர வேண்டும் என்பது சரியா? சிந்திப்பீர்!

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
படியுங்கள்! சிந்தியுங்கள்! மற்றவருக்கும் பகிருங்கள்!

கீதையும் எனது கேள்வியும்.......(4)



 கொலை செய்யப்படுகிறவன் மகிழ்ச்சியடைய வேண்டுமாம்!
பகவத்கீதை சொல்கிறது!

 எப்படி ஒருவன் நைந்து போன துணியைத் தள்ளிவிட்டு புதுத்துணியை மகிழ்வுடன் எடுத்துக் கொள்வானோ, அப்படி பழைய உடல் போல் புதிய உடல் கிடைப்பதை எண்ணி மகிழவேண்டும். புதிய உடல் கிடைக்க இந்த உடல் கொலை செய்யப்படுவது தானே காரணம். எனவே, கொலை செய்யப்படும் போது மகிழ்ச்சியடைய வேண்டும்.
(பகவத்கீதை – அத்தியாயம் 2, சுலோகம் 22)

 ஒரு தகப்பனை நம்பி குடும்பம் உள்ளது. அத்தகப்பனை ஒருவன் கொலை செய்தால் அக்குடும்பமே ஆதரவற்று வருவாய் அற்றுப்போகும்.
உண்மைநிலை இது. ஆனால், கொலை செய்யப்பட்டால் மகிழ வேண்டும் என்கிறது கீதை! இதுதான் ஒரு புனித நூலா? பயனுள்ள நூலா?

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

 படியுங்கள்! மற்றவருக்கும் பகிருங்கள்!

Friday, November 6, 2015

தீபாவளி கொண்டாடுவோரே சிந்திப்பீர் தீபாவளி கொண்டாடுவது சரியல்ல


தீபாவளி இந்து பண்டிகை அல்ல

தீபாவளி கொண்டாடுவோரே சிந்திப்பீர்

தீபாவளி கொண்டாடுவது சரியல்ல


கிருபாநந்தவாரியாரே சொன்னது


.......சமண சமயப் பண்டிகையே தீபாவளி...........

தீபாவளி சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசித் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது.

வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர். வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார்.

உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டுஅவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தனர். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவளி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடபடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!

சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.

ஆனால் பொருத்தமற்ற புராணக்கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள், திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று.

(கல்வெட்டராய்ச்சி அறிஞர் “மயிலை சீனி வேங்கடசாமி” அவர்கள் எழுதிய “சமணமும் தமிழும்” என்ற நூலில், பக்கம் 79 – 80)



தீபாவளி எனற் பெயர் சமண பண்டிகைக்கு மட்டுமே பொருந்தும்

நரகாசுரன் கதைக்கு பொருந்தாது. எனவே சமண பண்டிகையை

இந்து பண்டிகையாக ஆக்கிக்கொண்ட மோசடி இதில் வெளிப்படுகிறது. இதை வாரியாரே கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

· .........அசுரர் கொலைக்கு விழாவா?...........

தீபாவளியின் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரே ஆவார்கள். பெரும்பாலோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சம்கரித்தார். அந்த அரக்கனை அவர் அழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள். நரகாசுரனை கொன்றக் காரணத்தினால் கொண்டாடப்படுவது தீபாவளி என்பது பிழை. ஓர் அசுரனைக் கொன்றதற்காக ஒரு கொண்டாட்டம் இருக்கமுடியாது.

அப்படியானால் இராவணன், இரணியன், இடும்பன் மகன் சலந்தரன், அந்தகன் முதலிய அரக்கர்களைக் கொன்றதற்கும் கொண்டாட்டம் இருக்க வேண்டும். (ஆனால் அவ்வாறு இல்லையே) நரகாசுரனைக் கொன்றதற்கும், தீபாவளிக்கும் தொடர்பு இல்லை என உணர்க. நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று.

(“திருமுருக கிருபானாந்த வாரியார்” சுவாமிகள் எழுதிய “வாரியார் விரிவுரை விருந்து” என்ற நூலில், பக்கம் 95)

எனவே தீபாவளி இந்து பண்டிகை அல்ல. என்பதையும் அது தமிழர்க்குரிய பண்டிகையும் அல்ல. இப்பொழுது கொண்டாட படுவது பட்டாசு வெடித்து மாசுபடுத்துவது ஒரே நாளில் பல பலகாரங்களை தின்று உடலை கெடுத்துக்கொள்வது அறிவுக்கும் உகந்தது அல்ல. என்பதை உணர்ந்து மக்கள் இப்பண்டிகையை கை விடவேண்டும். அது நாட்டுக்கும் வீட்டுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நல்லது.


ஒரே நாளில் இந்தியா முழுக்க புகையாக்கி காற்றை மாசுபடுத்துவது அதனால் குழந்தை முதல் வயோதிகர் வரை அனைவரின் உடல் நலத்தைக் கெடுப்பது. சமுதாய துரோகச் செயல் என்பதை கருத்தில் கொண்டு இவற்றைக் கைவிடவேண்டும்.

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

படியுங்கள்

முத்து எப்படி உருவாகிறது?

மழைத்துளி சிப்பியில் விழுந்து முத்து வருவதில்லை
பின் முத்து எப்படி உருவாகிறது?
உண்மை விவரம் இதோ :




 சிப்பிக்குள் மழைநீர் வீழ்ந்து, அதுதான் பின்னர் முத்தாக மாறுகிறது என்ற கருத்து பரப்பப்படுகிறது. கண்ணதாசன்கூட தனது கவிதை ஒன்றில் இப்படித்தான் எழுதினார். ஆனால், இக்கருத்து முற்றிலும் தவறானதாகும்.
முத்துச் சிப்பிகள் கடலின் அடி ஆழத்தில் வாழக் கூடியவை. முத்துக் குளிக்கின்றவர்கள் கூட கடலின் அடியில் மூழ்கிச் சென்றுதான் முத்து எடுக்கின்றனர். எனவே, முத்துச் சிப்பிக்குள் மழைத்துளி வீழ்வதற்கான வாய்ப்பு இல்லை. அப்படியிருக்க மழைத்துளிதான முத்தாக மாறுகிறது என்பது மடமை.

 முத்துச்சிப்பி கடலடியில் வாழ்வதால், அதனுள் செல்லும் மணல் ஒன்றின்மீது, முத்துச் சிப்பியுள் சுரக்கும் சுரப்புநீர் படிந்து படிந்து முத்தாக மாறுகிறது.
மணலை ஆதாரமாகக் கொண்டு சுரப்புநீர் படிந்தே முத்தாக உருவாகிறது. மாறாக மழைத் துளியால் அல்ல.

திசைகாட்டி தாவரம் தெரியும்?.


தென் ஆப்பிரிக்க பாலைவனங்களில் காணப்படும் ஒரு தாவர இனம் பாட்டிபோடியம் நாம குவானம் (Pachypodium namaguanam). இந்த செடியில் நீளமான ஒரு கிளை மட்டுமே காணப்படுகிறது. மேலும் தண்டு எப்போதும் வடக்கு திசை நோக்கியே சாய்ந்து நிற்க்கும் இயல்புடையது. பாலைவனங்களில் பயணம் மேற்கொள்பவர்கள் இந்த செடியை திசைகாட்டும் கருவியாக பயன்படுத்துகின்றனர்.

’டாலரின்’ கதை


அமெரிக்க நாயணம் டாலர் என அழைக்கப்படுகிறது. இந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

 16ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பொஹிமியாவில் உள்ள செயிண்ட் ஜோகிம்ஸ் தால் என்ற இடத்தில் வெள்ளி நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன. இது ‘ஜோகிம்ஸ் தாலர்’ என அழைக்கப்பட்டது.

 நாளடைவில் இந்த பெயரே சுருங்கி ‘தாலர்’ என்று அமெரிக்கர்கள் அழைத்தனர். இதுவே பிற்காலத்தில் டாலர் என மாறி இன்னும் புழக்கத்தில் இருந்து வருகிறது.

வேப்பமரத்தில் பால் வடிவது அம்மன் சக்தியாலா?..


சில வேப்பமரங்களில் திடீரென்று பால்போன்ற நீர் சுரக்கும். இதை மாரியாத்தாள் மகிமை என்று கூறி சூடம் கொளுத்தி வழிபடுகின்றனர். இது அறியாமையின் அடையாளம். இதற்கு எந்தவிதத் தெய்வீகக் காரணமும் இல்லை.

 பொதுவாக (இயல்பாக) வேப்பமரத்தில் உள்ளமாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும். வேப்பமரத்திற்கு அருகில் நீர்ப்பகுதி அதிகம் இருப்பின், மரத்திலுள்ள தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப்பட்டையின் அடியிலுள்ள திசு (புளோயம்) பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்து பட்டை வழியே (அதைப் பிளந்து கொண்டு) இனிப்புப் பால் போன்று வடியும். இதைதான் பால்வடிகிறது என்கின்றனர்.

 மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் வடிவது நின்று போகும்.

இப்படி பால்வடிகின்ற மரங்கள், நீர்நிலைகளின் அருகில்தான் இருக்கும் என்பது இந்த உண்மையை அய்யத்திற்கு இடமின்றி உணர்த்துகிறது. எல்லா வேப்ப மரங்களிலும் பால் வடிவதில்லை யென்பதும், வறண்ட நிலத்திலுள்ள வேப்ப மரத்தில் பால் வடிவதில்லை யென்பதும் இவ்வுண்மையைத் தெளிவாய் உணர்த்தும்.

 எனவே, காரணம் புரியாததற்கெல்லாம் கடவுள் மகத்துவம் என்று கண்மூடி வாழ்வதைத்தவிர்த்து, காரணம் அறிந்து, அறிவு வழியில் செயல்படுவதே மனிதர்க்கு அழகாகும்.

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது

எச்சரிக்கை செய்தி...............
முட்டையை
ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது...............

 முட்டையை வாங்கியவுடன் ஃப்ரிட்ஜி'ல் வைக்கிறோம்!

இப்படிச் செய்வதன் மூலம் அதிலிருக்கும் சத்துகள் அழிந்து போவதோடு உடலுக்கும் கேட்டை உருவாக்கும்.

 வெளியில் வைத்தால் வாங்கிய ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே முட்டை நன்றாக இருக்கும். அதற்கு அறை வெப்பநிலையில் அதனை வைத்திருப்பதே காரணம்.
ஆனால், பல நாட்கள் வரை கெடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் அதனை 'ஃப்ரிட்ஜி'ல் வைத்துவிடுகிறோம்.

 ஃபிரிட்ஜில் முட்டையை வைத்தால் பாலைப் போல் திரிந்து கெட்டியாகிவிடும் வாய்ப்பு உண்டு. அதைப் பயன்படுத்தவும் முடியாது.

 மேலும், 'ஃப்ரிட்ஜி'ல் வைத்து விட்டு வெளியே எடுக்கும் போது முட்டை அறை வெப்பைநிலைக்குத் திரும்பும்.அப்போது முட்டை ஓட்டின் மேற்பரப்பில் வியர்க்கும். பார்க்கும் போதே நீர்த் துளிகள் இருப்பது தெரியும். முட்டையின் நுண்ணிய துளைகளின் வழியே பாக்டீரியாக்கள் உள்ளே போய்விடும்.
முட்டையில் இருக்கும் பாக்டீரியா டைபாய்டு காய்ச்சலை உருவாக்கும்!


 "பொதுவாக அதிக வெப்பம் அல்லது அதிக குளிரைத் தாங்கும் பாக்டீரியாக்கள் உண்டு. அந்த வகையில் “சால்மோனெல்லா டைஃபி” என்கிற பாக்டீரியாதான் மனிதர்களுக்கு டைபாய்டு காய்ச்சலை உருவாக்குகிறது

 முட்டையில் இந்த வகை பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும் என்பதால், அவை எளிதில் அழியாது. செயலிழக்காது. குறிப்பாக ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் போது தூங்கும்(!) பாக்ட்டீரியாக்கள் அறை வெப்ப நிலைக்குத் திரும்பும் போது பழைய நிலைக்கு வரும்.

 சூடுபடுத்தும்போது பாக்டீரியா அழிந்துவிடும். என்றாலும் அரைவேக்காட்டில் முட்டை சாப்பிடும் போது கேடு வரும்!

 ஃபிரிட்ஜில் வைத்த எந்த வகையான உணவுப் பொருளையும் எடுத்து உடனே பயன்படுத்தக்கூடாது. அறை வெப்பநிலைக்கு கொண்டு வருவது அவசியம். அதாவது அதிலுள்ள குளிர்ச்சி முழுமையாக நீங்கி, பொருளை இயல்பு நிலைக்கு வந்த பின்னே பயன்படுத்த வேண்டும்!

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan