அரசியல்

Monday, March 28, 2016

“பாரத மாதாஹி ஜே!’’ என்பதும் இந்தியாவை பாரதம் என்பதும் தப்பு! சாஸ்திர விரோதம்! மனுஸ்மிருதி ஆதாரம் இதோ!

“பாரத மாதாஹி ஜே!’’ என்பதும் 
இந்தியாவை பாரதம் என்பதும் தப்பு!
சாஸ்திர விரோதம்! 
மனுஸ்மிருதி ஆதாரம் இதோ! 

- மஞ்சை.வசந்தன்


பொய்யை மெய்யாய்க் காட்டுவதும்; இல்லாததை இருப்பதாய்க் காட்டுவதும்; பிறருடையதைத் தன்னுடையது என்பதும்; பலதை ஒன்று என்பதும் ஒன்றை பலதாக்குவதும் ஆரிய பார்ப்பனர்களின் சூழ்சியாகும். இந்துமதம் என்று ஒரு மதமே இல்லை. இந்தியாவிலிருந்த பல கடவுள் நம்பிக்கைகளை ஒன்றாக்கி அதுதான் இந்துமதம் என்று பித்தலாட்டம் செய்து பிழைப்பபதோடு, அதை வைத்தே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

காலஞ்சென்ற காஞ்சி சங்கராச்சாரியாரே, இதை ஒத்துக்கொண்டு கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: “இப்போது ‘ஹிந்து மதம்’ என்று ஒன்றைச் சொல்கிறோம். இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ‘ஹிந்து’ என்றால் ‘அன்பு’ என்று அர்த்தம்; ஹிம்சையைத் தூஷிப்பவன் ஹிந்தூ என்று சிலர் சொல்கிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும் ‘ஹிந்து மதம்’ என்கிற வார்த்தையே கிடையாது. ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான்.” தெய்வத்தின் குரல், பாகம்_1, பக்கம் 125

கற்பனைகளையெல்லாம் புராணங்களாக்கி, அவை நடந்தவை என்று மக்களை நம்பச் செய்து முட்டாளாக்கி, பொழுதையும், பொருளையும் பாழாக்கச் செய்தனர். பிறருடைய கலை, மருத்துவம், மொழி, நாடு, பொருள் இவற்றைத் தன்னுடையது என்றனர். பிச்சையெடுத்துப் பிழைக்க வந்தவர்கள், மண்ணின் மக்களை இழிமக்கள் என்று தாழ்த்தி தாங்களே உயர்ந்தவர்கள், தங்களுக்கு அடிபணிந்தே மற்றவர்கள் வாழவேண்டும் என்றனர்.

அதேபோல் பல நாடுகளாக இருந்த இந்தியப் பகுதியை ஒன்று என்றனர். ஒன்றாக இருந்த திராவிடர்களைப் பல வருணங்களாகப் பல ஜாதிகளாகப் பிரித்தனர். இந்தியா என்று ஒரு நாடே இல்லை. இப்பகுதி பல குறு, சிறு, பெரு நாடுகளாய் இருந்தது. 54 தேசங்களாய் இருந்ததாய் பல்வேறு கதைகளில் சொல்லப்படுகின்றன. அரிச்சந்திரன் மயானத்தில் நின்று கலங்கியபோதுகூட இந்த 54 தேசங்களையும் வரிசையாய் சொல்வதை அரிச்சந்திரன் நாடகத்தில் கேட்கலாம்.

ஆரிய பார்ப்பனர்களின் உயிர்நாடியாய் விளங்கும் மனுதர்ம சாஸ்திரமே இந்தியா இல்லை என்கிறது. இது பல நாடுகளாய் (தேசங்களாய்) இருந்தது என்கிறது. பாரதம் என்பது பல தேசங்களுள் ஒன்று என்கிறது. இந்திய தேசங்களுள் ஒன்றான பாரதம் என்ற பகுதியை இந்தியா முழுமைக்கும், அதையும் தாண்டி பாகிஸ்தானையும் சேர்த்து பாரதம் என்பது அடாவடிச் செயல், அயோக்கியச் செயல் அல்லவா?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் அண்மையில் பாரதத்தை ஏற்காதவர்கள் பாகிஸ்தானைப் பிரித்தனர் என்கிறார். பகவத்தும், ஆர்.எஸ்.எஸ்.ம், அவர்களின் பரிவாரங்களான பி.ஜே.பி. உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஏற்றிப் போற்றும், நடைமுறைப்படுத்தத் துடிக்கும் மனுஸ்மிருதி என்ன சொல்கிறது? கீழே படியுங்கள்,

“பௌண்டாம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம். இந்தத் தேசங்களை ஆண்டவர்களனைவரும் மேற்சொன்னபடி சூத்திரனாய் விட்டார்கள்.
(மனுஸ்மிருதி 10ஆம் அத்தியாயம்--_44)

மனுஸ்மிருதியின்படி பாரதம் என்பது ஒரு சிறு பகுதி மட்டுமே. திராவிடம் போல, யவநம் போல, சகம் போல, தரதம் போல அது ஒரு தேசம். அப்படியிருக்க பல தேசங்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு நாட்டைப் பாரதம் என்பதும், அதை அகண்ட பாரதம் ஆக்குவோம் என்பதும், மனுஸ்மிருதிக்கும், உண்மைக்கும் எதிரானதல்லவா? சாஸ்திரத்திற்கு புறம்பான சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதற்கு எதிரான உண்மைக்கு மாறான ஒரு கொள்கையை அடையத் துடிப்பது அநியாயம் அல்லவா?

இதில், “பாரத மாதா’’ என்பதும், “பாரத மாதாஹி ஜே!’’ என்பதும், அதைச் சொல்லாதவர்கள் தேச விரோதிகள் என்பதும் இந்திய அரசியல் அமைப்பிற்கும், மனுஸ்மிருதிக்கும் எதிரானதல்லவா? எனவே, “பாரதம்’’ என்பவர்களும், “பாரத மாதா’’ என்பவர்களும், “பாரத மாதாஹி ஜே!’’ என்பவர்களுமே தேசத் துரோகிகள் என்றாகிறது! 

மனுஸ்மிருதிபடி இதுதானே சரி! ஆக, பாரதம், அகண்ட பாரதம், பாரத மாதாஹி ஜே! என்பதெல்லாம் தேச விரோம், சாஸ்திர விரோதம் என்பது உறுதியாகிறது! 

Thursday, March 24, 2016

சித்த மருத்துவ சேர்மானம் போன்றவர் விஜயகாந்த் முதன்மை மருந்தாக்கியதால் மொத்தமும் பாழ்!

சித்த மருத்துவ சேர்மானம் போன்றவர் விஜயகாந்த்
முதன்மை மருந்தாக்கியதால் மொத்தமும் பாழ்!
தி.மு.க.விற்கு இழப்பில்லை இரட்டிப்பு ஆதாயம்.

- மஞ்சை வசந்தன்

மூன்று மாதங்களுக்கு மேலாக முட்டி மோதி, இறுதியில் குட்டிச்சவரில் குடிபுகுந்துள்ளார் விஜயகாந்த்.

நால்வர் கூட்டணியுடன் சேர்வதற்கு முதல் நாள்கூட தங்கள் விமானம் புறப்பட்டுவிட்டது. இனி யாருக்காகவும் காத்திருக்காது என்று நால்வர் அணி கூறியது. ஆனால், மறுநாள் தரையிறங்கியது; தரமும் இறங்கியது அந்த அணி.
விஜயகாந்த் ஒரு எம்.எல்-.ஏ.வாக இருக்கக்கூட அறவே தகுதியற்றவராய் தன்னிலைத் தடுமாறி, நாலு வார்த்தைகூட பேசமுடியாத குழப்பத்தின் மொத்த வடிவமாய், குளறுபடியின் செயல்வடிவமாய் உள்ளவர். அவரது மனைவி அவரை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அவருக்கென்று எக்கொள்கையும் இல்லை. எந்த ஆற்றலம் இல்லை. ஏதோ திரைப்படத்தில் வந்த செல்வாக்கால் புதிதாகக் கட்சி தொடங்கியதும், மாற்றம் விரும்பியவர்களும், எம்.ஜி.ஆர் பற்றாளர்களும் பெரும் எதிர்பார்ப்பில் திரண்டனர். கட்சித் தொடங்கிய போதிருந்த செல்வாக்கில் மூன்றில் ஒரு பகுதிகூட தற்போது இல்லை.
சென்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டால்தான் அத்தனை எம்.எல்.ஏ.க்கள் வென்றனர். நடுநிலையோடு சிந்திக்கின்ற எவரும் இவற்றை மறுக்க மாட்டார்கள்.

தி.மு.க. விஜயகாந்தைப் பயன்படுத்த நினைத்தது வேறு; நால்வர் கூட்டணி அவரைச் சேர்த்துள்ள நிலை வேறு.

விஜயகாந்திற்கு எத்தகுதியும் இல்லையென்றாலும் அவரிடம் உள்ள தொகுப்பான வாக்குகள் கிடைத்தால் அது செயலலிதாவை வீழ்த்தும் முயற்சியை எளிமைப்படுத்தும் என்பதே தி.மு.கவின் எதிர்பார்ப்பு.

தனிப்பட்ட விஜயகாந்தின் பலவீனம், தகுதியின்மை அங்கு கணக்கில் வராது. காரணம், ஆட்சியில் பங்கில்லையென்று தி.மு.க. சொல்லிவிட்டது.

ஆனால், நால்வர் கூட்டணி விஜயகாந்தை சேர்த்ததோடு அல்லாமல் அவர்தான் முதல்வர் என்று அறிவித்து பாதிக்கு மேற்பட்ட இடங்களையும் பகிர்ந்து கொடுத்துவிட்டது. கூட்டணியே விஜயகாந்த் கூட்டணி என்று மாற்றிவிட்டனர்.
ஆக, நால்வர் கூட்டணியில் உள்ள பொதுவுடமைக் கட்சிகளின் தனித்தன்மை, தனிச் சிறப்பு, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனின் தனித்தன்மை, தனிச்சிறப்பு, வைகோவிற்குள்ள தனித்தன்மை எல்லாம் இங்கு புறந்தள்ளப்பட்டு விஜயகாந்த் முதன்மையும், முன்னிலையும் படுத்தப்பட்டதனால், விஜயகாந்தின் தகுதிதான் மக்களால் பார்க்கப்படும். விஜயகாந்த்தை மக்கள் அரசியல் தலைவராகப் பார்ப்பதைவிட நகைப்பிற்குரியவராகவே பார்க்கின்றனர். அவர் மேடையில் ஏறினாலே ஏளனமாய் சிரிக்கின்றனர்.
எனவே, விஜயகாந்தை முன்னிறுத்தியதன் மூலம், நால்வர் கூட்டணிக்கு இதுவரையிருந்த ஒரு மரியாதை, நல்லெண்ணம், நம்பிக்கை எல்லாம் பாழ் ஆனது.
விஜயகாந்தை ஜெயலலிதா சரியாகப் பயன்படுத்தினார்; கலைஞர் சரியாகப் பயன்படுத்த முயன்றார். ஆனால், நால்வர் அணி முற்றிலும் தவறாகப் பயன்படுத்தி முதலுக்கே மோசமான ஒரு நிலையில் சீர்குலைந்து நிற்கிறது.
சித்த மருத்துவத்தில் நோய்க்கு மருந்து செய்யும்போது முதன்மை மருந்துடன் சில பொருட்களைச் சேர்மானமாகச் சேர்ப்பர். அப்படிப்பட்ட சேர்மானம்தான் விஜயகாந்த். சேர்மானத்தையே முதன்மை மருந்தென்று ஆக்கினால் மருந்தே பாழ் ஆகும்; நோயும் தீராது.
அப்படித்தான் விஜயகாந்தை முதன்மைப்படுத்தியதன் மூலம் நால்வர் அணிக்கென்று இருந்த தனித்தன்மையும், சிறப்பும், நம்பிக்கையும் முற்றிலும் பாழாகிவிட்டன.
இந்தக் கூட்டணியால் தி.மு.க. கழகத்திற்குப் பாதிப்பா?
நால்வர் கூட்டணியாக அது இருந்தால்கூட அதற்கென்று ஒரு கணிசமான வாக்கு கிடைத்திருக்கும். அது தி.மு.க.விற்குக் கிடைக்க வேண்டிய வாக்குகளைக் குறைத்திருக்கும். தற்போது விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்ததன்மூலம் அந்த அணியை மக்கள் முற்றாகப் புறக்கணிப்பர். அதனால், தி.மு.க.விற்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கும். அதோடு, விஜயகாந்த்திற்குக் கொடுக்க வேண்டிய கணிசமான இடங்களைத் தி.மு.க. தனக்குப் பயன்படுத்தி அதிக இடங்களை வெல்லலாம். இதன்மூலம் தி.மு.க.விற்கு இரட்டிப்புப் பலன்தான்.
வஞ்சம் தீர்க்கத் துடிக்கும் வைகோ வலையில் விஜயகாந்த்!
தி.மு.க.வை பழிவாங்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கே வைககோவிற்கு, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை என்ற அணியுடன் வியஜகாந்த் இணைந்ததன் மூலம், ஜெயலலிதாவை வீழ்த்தும் வியூகத்தில் விஜயகாந்த் தோற்றுவிட்டார். முதல்வர் ஆசை காட்டிய கூட்டணியில் விஜயகாந்த் சபலப்பட்டு சாய்ந்ததன் மூலம் அவரது அரசியல் முடிவுக்கு வந்துள்ளது. விஜயகாந்தின் முடிவு தற்கொலைக்குச் சமம்!
2016 தேர்தலின் ஒற்றை நோக்கு இதுதான்: செயலிழந்த அராஜக அ.தி.மு.க
அரசு தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஒட்டு மொத்த எண்ணம். அதற்கு ஒரே வழி திமுகவிற்கு வாக்கள்விப்பதே! அதிமுக மீண்டும் வந்தால் அராஜகம், அத்துமீறவும், அபகரிப்பும் எல்லை மீறும். அதற்கு திமுக வருவது எவ்வளவோ மேல். திருந்தி நடக்க வாய்ப்புண்டு என்பது தானே மக்கள் எண்ணமாக இருக்கும். தமிழக மக்கள் வாக்குகளை வீணடிக்க மாட்டார்கள்!

இன்றைய தமிழக அரசியல் சூழலில் அதிமுக வை வீழ்த்த திமுக அணியைத் தவிர எந்த அணிக்கும் வலிமையில்லை. இதை மக்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர்.

வைகோ அணிக்கோ, அன்பு மணிக்கோ, சீமானுக்கோ அளிக்கபடும் வாக்கு ஜெயல்லிதாவிற்கு சாதகமான வாக்கு என்பது மக்களுக்கு நன்கு தெரியும். மதவாத பாஜக வை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.

எனவே, தமிழக மக்களுக்கு திமுக மீது சில வெறுப்புகள் இருந்தாலும் அதிமுகவை வீழ்த்த திமுக அணியையே மக்கள் இத்தேர்தலில் ஆதரிப்பர். 

திமுக பழைய தவறுகளை முற்றமாக களைந்து நேர்மையான வெளிப்படையான, தமிழர் நலன் சார்ந்த ஆட்சியை செய்ய தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கொடுக்கும் வாக்குறுதியை எப்பாடுபட்டாகிலும் நிறைவேற்றி களங்கத்தைப் போக்க வேண்டும்.

இத்தேர்தலில் மக்கள், குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மக்கள் கொளல் ஒன்றே தீர்வு.

ஆம். திமுக -_ கலைஞரிடம் குறைகளைவிட சாதனைகள், பணிகள், வளர்ச்சித் திட்டங்கள், சமத்துவ செயல்திட்டங்கள் ஏராளம். இவற்றை எவரும் மறுக்க முடியாது. இலங்கைத் தமிழருக்காக ஆட்சியை இழந்தவர்

எனவே, அவற்றை எண்ணி வாக்களிப்பதே வள்ளுவர் காட்டும் வழி!

பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து அதிமுக ஆட்சியை ஆதரிக்கும் போது, பார்ப்பனர்களல்லாதார் திமுகவை ஆதரிப்பதே தமிழர் நலனுக்கும், தமிழருக்கும், தமிழர் வளர்ச்சிக்கும் ஏற்றதாக இருக்கமுடியும்!

தமிழர்கள் பார்ப்பன நரிகளுக்குப் பாடம் கற்பிக்க சரியான வாய்ப்பு இத்தேர்தல். தமிழர்கள் விழிப்போடிருந்து வாக்களிக்க வேண்டும்!

தற்போது தேர்தல் களம் தெளிவாக இருக்கிறது. பி.ஜே.பி. அறவே தமிழகத்தில் ஒதுக்கப்பட்டுவிட்டது. பா.ம.க., நாம் தமிழர் கட்சிகளுக்கு இது செல்வாக்கறிய ஒரு சோதனைத் தளம் அம்மட்டே... விஜயகாந்த் அணி தகுதியற்ற தலைமையால் தகுதியற்ற அணி.

எனவே, தி.மு.க., அ.தி.மு.க. இரண்டிற்கும் இடையேதான் போட்டி. அ.தி.மு.க. மீதான வெறுப்பால் மக்கள் அதைப் புறக்கணிப்பர். கட்சிக்காரர்களின் ஓட்டு கிடைக்கும். மேலும், ஆண்ட கட்சி மீண்டும் ஆள்வதைவிட, தி.மு.க.விற்கு ஒரு வாய்ப்பளிக்கலாம் என்ற எண்ணமே மக்களிடம் மேலோங்கும். இது தி.மு.க. ஆட்சிக்கு வரும் வாய்ப்பை அதிகரிக்கும்.

ஆக, இத்தேர்தலில் தி--.மு.க. தனது பழைய சாதனைகளை பட்டியலிட்டு மக்கள் மத்தியில் கொண்டு சென்றால், செய்யவிருக்கும் பணிகளைத் தொகுத்துக் கூறினால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு வெற்றி பெறும் என்பது உறுதி!

மக்கள் நடைமுறை சாத்தியம் உணர்ந்து செயல்பட வேண்டியது கட்டாயக் கடமையாகும். 


Wednesday, March 23, 2016

இப்போது நடப்பது இந்திய குடியரசா? இந்து ராஷ்டிராவா? என்ற போர்!

- மஞ்சை வசந்தன்
ஆரியர்கள் என்றைக்கு இந்தியாவிற்குள் நுழைந்தனரோ அன்றே ஆரிய - திராவிடப் போர் தொடங்கிவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அப்போர் தொடர்ந்து நடக்கிறது. ஆனால், சூழல், போர்முறை, எதிராளி நோக்கு இவற்றில்தான் அவ்வப்போது மாற்றம்.
சொந்த மண்ணில் திராவிடர்கள் வாழ்ந்த நிலையில், பிழைக்க வந்த ஆரியர்கள் மிகச் சிறுபான்மையினர். எனவே, நேர் நின்று மோதும் வல்லமை அவர்களுக்கு இல்லை. ஆகையால், அவர்கள் வணங்கும் தெய்வங்களை யெல்லாம் துணைக்கழைத்து வேண்டினர். அவையே வேதங்கள்! இதுவே, அவர்களின் முதற்கட்ட போர் முறை.
அதற்கடுத்து ஆட்சியாளர்களை அண்டி, அவர்களின் ஆதரவோடு தங்கள் ஆதிக்கத்தை, தங்கள் கொள்கைகளை நிலைநிறுத்தினர். இது அதிகாரத்தைத் தங்களுக்குச் சாதகமாக ஆக்கி வென்ற போர்முறை.
மூன்றாவது கட்டமாக எதிராளிகளான திராவிடர்களை சாஸ்திரங்களை எழுதி, வர்ணங்களாகப் பிரித்து அதன்வழி ஜாதிப் பிரிவுகள் ஏராளமாய் உருவாகச் செய்து, ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளச் செய்து, திராவிடர்களைப் பலமிழக்கச் செய்ததோடு, தங்களை அவர்களினும் உயர்ந்தவர்களாக நிலைநிறுத்தினர்.
இது சாஸ்திர ரீதியிலான போர் முறை. மற்ற போர்முறைகளைவிட ஆரியர்களுக்கு இதுவே அதிகப் பயன் தந்தது; நிலைத்த பயனையும் தந்தது.
நான்காவதாக உடல் வலிவை ஒதுக்கி சடங்குகளே சக்திமிக்கவையென்ற மூட நம்பிக்கையை மூளையில் ஏற்றி அதன்வழி உடல்பலம், ஆள்பலம் அற்ற அவர்களே, மிக்க வலிமையுடையவர்கள் என்று எதிரியையே நம்பச் செய்தனர். அதற்கு முதலில் மன்னர்களை இதற்கு மயங்கச் செய்தனர்.
உடல் வலிமை, ஆயுத வலிமை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை யென்று வலிமையை நம்பிப் போரிட்டவர்களை, வெற்றிபெற இவற்றைவிட யாகமே சிறந்தது என்று நம்பவைத்து’ அந்த யாகத்திற்கு நாங்களே உரியவர்கள் என்றாக்கி, அரசர்களின் வெற்றி தங்கள் கையில் என்று நம்பச் செய்து, தங்கள் ஆதிக்கத்தை அச்சத்திற்குரியதாக்கி, தங்கள் எதிரிகள் வணங்கும் நிலைக்குத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொண்டனர்.
இதன்வழி அரசர்களுக்கு நெருக்கமானவர்களாகி அதைப் பயன்படுத்தி அமைச்சர்களாயினர். அதன்வழி அவர்கள் சொல்லும் வகையில் ஆட்சியும் சென்றது, அதிகாரமும் சென்றது.
அதிகாரத்தைத் தன்வசப்படுத்தி, தன் ஆதிக்கத்தை வளர்த்தெடுத்து எதிரியை வீழ்த்திய போர்முறை இது.
அய்ந்தாவதாக, ஆங்கில ஆட்சியில் தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஆங்கிலம் கற்று, அவர்களின் நிர்வாகத்தில் நுழைந்து திராவிடர்களுக்கு எதிரானவற்றை இயன்றவரைச் செய்தனர். ஆனால், ஆங்கிலேயர்களிடம் இவர்களின் முயற்சி முழுமையாய் வெற்றிபெறவில்லை.
ஆரியப் பார்ப்பனர்களின் சனாதன ஆதிக்கம் சற்றே சரிந்தது, ஆங்கிலேயர் காலத்தில்தான். அதன் இறுதிக் கட்டத்தில் நீதிக்கட்சித் தோற்றம், தந்தை பெரியாரின் சிந்தனைகள், போராட்டங்கள், பிரச்சாரங்கள், அம்பேத்கரின் கிளர்ச்சி, எழுச்சி, அறிவுநுட்பம் போன்றவை ஆற்றல்மிகு எதிர்ப்பை, போரை ஆரியத்திற்கு எதிராய் முன்னிறுத்த, ஆரியம் தோற்றுத் துவண்டது. இந்திய வரலாற்றில் ஆரிய திராவிடர் போரில் ஆரியம் தோற்றது இக்கால கட்டத்தில்தான். அந்த வெற்றியின் வீரத் தளபதிகள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஆவர்.
விடுதலை இந்தியாவில் நேருவின் சோசலிச செயல்பாடுகள், நேர்மையான எண்ணங்கள் ஆரியத்தின் வீழ்ச்சிக்குத் துணைநின்றன. ஆரியத்தின் ஆதிக்கம் சரிந்து சரிந்து வீழ, ஆரிய ஆதிக்க நச்சரவம் ஆலய கருவறைக்குள் ஓடி ஒதுங்கி ஒளிந்தது. அங்கும் தடிகொண்டு தாக்கினார் தந்தை பெரியார்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்து, அண்ணாவும், கலைஞரும் அய்யாவின் கொள்கைகளை அடுக்கடுக்காய் நிறைவேற்ற, எம்.ஜி.ஆர். அதற்குத் துணை நின்று இடஒதுக்கீட்டை உயர்த்த ஆரிய பார்ப்பனர்கள் நாட்டை விட்டே ஓட மூட்டைக் கட்டத் தொடங்கினர்.
திராவிட ஆரிய போரில் ஆரியம் புறமுதுகிட்டு ஓடிய காலம் அது.
அரசுடமையும், இந்தியா முழுக்க இடஒதுக்கீட்டு உணர்வும், மூடநம்பிக்கை வீழ்ச்சியும், பகுத்தறிவு எழுச்சியும் பரவி வந்த நிலையில், தொலைக்காட்சி மக்களிடம் ஆதிக்கம் செலுத்தி வீடுதோறும் மக்களின் சிந்தனை மாற்றத்தைத் தீர்மானித்தது.
தோற்று வீழ்ந்த ஆரியம், தொலைக்காட்சி என்னும் அறிவியல் சாதனத்தைத் தங்களின் அடுத்தக் கட்டப் போர்க் கருவியாகக் கையில் எடுத்தது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை, அறிவியல் சாதனங்களின் உதவியோடு மெருகூட்டி, கவர்ச்சி ஏற்றி, கட்டாயம் காணவேண்டும் என்ற ஈர்ப்பை உருவாக்கும் விதத்தில் அவற்றைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர்.
“ராம்’’, “ராம்’’ என்று இந்தியாவெங்கும் ஒலிக்கச் செய்தனர். அதன்மூலம் இந்துக்களிடையே ஓர் உணர்வை உருவாக்கினர். இந்த உணர்விற்கு ஓர் இலக்கைக் காட்டினால்-தான் அது பயன்தரும் என்று இஸ்லாமியர்-களையும், கிறித்தவர்களையும் எதிரிகளாய்ச் சித்தரித்து அவர்களோடு மோதவிட்டனர். அதன்வழி கலவரங்கள் நாடெங்கும் நடத்தப்பட்டன.
மதவெறியைத் தூண்டி இந்து ராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாய் முயன்று தோற்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள், இராமனை முன்னிறுத்தி இந்துக்களை உசுப்பி, இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும் எதிரிகளாய் வெறுக்கச் செய்தனர்.
தங்களின் அரசியல் பிரிவாய் பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கி, இந்துக்களின் உணர்வை வாக்குகளாக மாற்ற முயற்சித்தனர். அது ஓரளவிற்கே உதவியது. இருந்தாலும், ஓயாது முயன்று கூட்டணி ஆட்சி என்ற நிலைக்குச் சென்றனர்.
ஆரியம் மீண்டும் வீரியம் பெறத் தொடங்கியது. இராமருக்கு கோயில் கட்டுவதாய் ஒரு வாக்குறுதி அளித்து முயன்று அப்போதும்  ஆரியம் தோற்றது. என்றாலும் மதம் சார்ந்த உணர்வை மக்களிடம் வளர்த்தனர்.
மோ(ச)டிப் போர்: பலவகையிலும் தோற்ற ஆரிய ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் மோசடியாக வெல்லும் தந்திரத்தைக் கையில் எடுத்தனர். காங்கிரஸ் ஆட்சிமீது மக்களுக்கிருந்த வெறுப்பு அதற்குக் கை கொடுத்தது.
ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக ஆரிய பார்ப்பனர்கள் பின்னே அணிவகுத்து நின்று, இளைஞர்களை மோசடியாக மூளைச் சலவை செய்தன.
“மாற்றம்’’ என்பதை “மந்திர’’மாக உச்சரிக்கச் செய்தனர்.
மோடி வந்தால் இந்தியாவின் வளர்ச்சி உச்சத்துக்கு உயரும் என்று ஊடகங்கள் ஒட்டுமொத்தமாய் ஒலித்து, இளைஞர்களை நம்பச் செய்தன. தொலைக்காட்சி, இணையம், செல்பேசி என்று ஒட்டுமொத்த அறிவியல் சாதனங்களை இப்போரின் கருவியாக ஆரியம் கையில் எடுத்து, மோசடியை மூலதனமாக்கி, மோடி என்ற ஒற்றை மனிதரின் கவர்ச்சியில் இளைஞர்களை ஈர்த்து, இந்துத்வா என்ற பாசிச ஆட்சியை மத்தியில் அமர்த்தினர்.
இப்போது இந்தியாவில் நடக்கும் புதிய போர்:
பெரும்பான்மை பலத்தோடு மத்தியில் ஆட்சியில் அமர்ந்த அடுத்தக்கணமே, அரும்பாடுபட்டு பெற்ற வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று இந்து ராஷ்டிரா அமைக்கும் முயற்சியில் இறங்கினர்.
ஆரிய பார்ப்பன மேலாண்மை, குலக்கல்வி, வர்ணாச்ரமம், சமஸ்கிருத ஆட்சிமொழி, ஒரே கடவுள், ஒரே மதம், மனுதர்மச் சட்டம், ஒரே கலாச்சாரம். (இந்து கலாச்சாரம் _ ஆரிய கலாச்சாரம்) பிற மதத்தார் எல்லாம் அதை விட்டு இந்து மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்துத்துவாவாதிகள் சொல்லும்படிதான் உண்ண வேண்டும், உடுக்க வேண்டும், திருமணம் செய்ய வேண்டும்.
இந்துத்வாவாதிகளுக்கு எதிராகக் கருத்துக் கூறக் கூடாது. கூறினால் கொலை செய்யப்படுவர்.
தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டோர்களும் உயர்கல்வி பயிலக் கூடாது என்று ஒவ்வொன்றாய் கட்டாயப்படுத்தினர். இதற்கு அவர்களின் பல அமைப்புகளிலும் உள்ள அடியாட்களை, காலிகளை, கூலிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
ஆக, சுருங்கச் சொன்னால், இந்திய குடியரசை இந்து இராஷ்டிர அரசாக ஆக்கும் அனைத்துச் செயல்களிலும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் அன்றாடம் இறங்கிச் செயல்படத் தொடங்கிவிட்டன.
இப்போது இந்தியாவெங்கும் நடப்பது இந்திய குடியரசுக்கும் இந்து ராஷ்டிராவிற்குமான போர்தான்! இப்போரை, இந்தியக் குடியரசை ஏற்றுக் கொண்டு, வெற்றிபெற்று அந்த அமைப்பிற்குள் இருந்துகொண்டே அதை வீழ்த்தும் வியூகத்தை இப்போரில் அவர்கள் வகுத்துச் செயல்படுத்துகின்றனர்.
இந்தியக் குடியரசு என்பதற்கு நேர் எதிரான கொள்கையுடையது இந்துத்வாவாதிகளின் இந்து இராஷ்டிரம்.
¨    இந்தியக் குடியரசு மதச்சார்பின்மையை அடிப்படைக் கொள்கையாய் கொண்டது.
ஆனால், இந்துராஷ்டிரா, இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதமும் இந்தியாவில் இருக்கக் கூடாது என்பது. இந்து மதத்தை ஏற்காதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி விடவேண்டும் என்பது. இதை அவர்கள் வெளிப்படையாகவே அறிவித்து விட்டார்கள்.
¨    இந்தியக் குடியரசு ஆண்_பெண் இருவருக்கும் சமஉரிமை, சமவாய்ப்பு அளிக்கிறது.
ஆனால், இந்து இராஷ்ட்ரா பெண்களை பாவஜென்மமாக, இழிவாக, உரிமையற்றவர்களாகக் கருதுகிறது. ஆணைச் சார்ந்தே பெண் வாழ வேண்டும். வீட்டு வேலைகளைச் செய்து, பிள்ளைகளை வளர்த்து, இந்துக்களின் பண்பாட்டைக் காப்பதே பெண்ணின் வேலை என்கிறது.
¨    ஆலய வழிபாட்டில் ஆணுக்குள்ள உரிமை பெண்ணுக்கு உண்டு என்கிறது இந்தியக் குடியரசு. ஆனால், பெண் ஆலயத்திற்குள் நுழையக் கூடாது என்கிறது இந்து இராஷ்டிரா.
¨    அனைத்து மக்களும் தங்கள் கருத்தைச் சொல்ல உரிமையுண்டு என்கிறது இந்தியக் குடியரசு.
ஆனால், இந்துத்வா சிந்தனைக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னால் கொல்வோம் என்கிறது இந்து இராஷ்டிரா.
¨    பிறப்பொக்கும் என்கிறது இந்தியக் குடியரசு. ஆனால், ஆரியப் பார்ப்பனர்களே உயர்ந்தவர் மற்றவர் எல்லாம் இரண்டாம் தர, மூன்றாம் தர, நான்காம் தர, அய்ந்தாம் தர, ஆறாம் தர குடிமக்கள் என்கிறது இந்து இராஷ்டிரா.
¨    14 மொழிகளை தேசிய மொழியாக ஏற்கிறது இந்தியக் குடியரசு.
ஆனால், செத்துப்போன, வழக்கொழிந்த சமஸ்கிருதம் மட்டுமே தேசிய மொழி என்கிறது இந்து இராஷ்டிரா.
¨    கல்வியும் வேலைவாய்ப்பும் அனைவருக்கும் உரியது என்கிறது இந்தியக் குடியரசு!
ஆனால், கல்வியும் வேலைவாய்ப்பும் ஆரிய பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது என்கிறது இந்து இராஷ்டிரா.
¨    எதை உண்பது, உடுத்துவது, எப்படி வசிப்பது, வாழ்வது போன்றவை தனிமனிதச் சுதந்திரம் என்கிறது இந்தியக் குடியரசு. ஆனால், இந்துத்துவாவாதிகள் என்ன சொல்கிறார்களோ, சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றனவோ அப்படி வாழவேண்டும் என்கிறது இந்து இராஷ்டிரா.
¨    மறுமணம் செய்ய, மணவிலக்குப் பெற உரிமை தருகிறது இந்தியக் குடியரசு.
ஆனால், இறந்த கணவனோடு கட்டி எரியூட்டச் சொல்கிறது இந்து இராஷ்டிரா!
¨    இந்தியக் குடியரசு இந்த நாட்டில் அரசியல்  சாசனத்தைக் காக்க வேண்டும்; அதன்படி நீதியும் உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்கிறது.
ஆனால், இந்து இராஷ்டிரா, இந்திய அரசியல் சாசனத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, மனுதர்மத்தையும், மற்ற சாஸ்திரங்களையும் சட்டங்களாக்க வேண்டும் என்கிறது இந்து இராஷ்டிரா!
இப்படி இன்னும் பலப்பல எதிர்நிலைகள்! முரண்பாடுகள்! சுருங்கச் சொன்னால், தனிமனித சுதந்திரத்திற்கும், சர்வாதிகார, ஆதிக்க, பாசிச நடைமுறைக்குமான போர் தொடங்கி விட்டது. ஆம். பி.ஜே.பி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்த அன்றே தொடங்கிவிட்டது!
இப்படிப்பட்ட இந்துராஷ்ட்ராவை உருவாக்க, பள்ளி, கல்லூரி, உயர்கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், இராணுவம், ஊடகங்கள் என்று பலவற்றிலும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிபெற்ற ஆட்களை நுழைக்கும் செயலும் அரவம் தெரியாமல் நடந்து வருகிறது.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் தொண்டர்கள், இடதுசாரிகள், சமூக நீதியில் அக்கறை கொண்டோர் இந்தப் போரில் இந்துராஷ்ட்டிரா பேர்வழிகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். போராட்டம் அதிகமாகும்போது பின்வாங்குவதும், பின் மீண்டும் தங்கள் செயல்திட்டங்களைச் செயல்படுத்தவதுமாகவுள்ளனர்.
தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், பொதுவுடமைப் போராளிகளும் ஊட்டிய மனித உரிமை உணர்வின் காரணமாக உயர்கல்வி நிறுவனங்களில் சிந்தனை முதிர்ச்சி பெற்ற மாணவர்கள் வெகுண்டெழுந்து இந்து இராஷ்டிராவிற்கு எதிராகப் போராடத் தொடங்கி விட்டனர்.
இதைக் கண்டு பொறுக்காத ஆர்.எஸ்.எஸ். மதவெறிக் கூட்டம் மோசடி வழக்குகள், தேச விரோதக் குற்றச்சாட்டுகளைக் கூறி அவர்களை ஒடுக்க முயற்சி மேற்கொள்கின்றது.
ஆனால், அதற்கெல்லாம் அஞ்சாது மாணவர்கள் துணிந்து தெளிவுடன் நிற்பது இப்போரில் இந்து ராஷ்டிரா முயற்சி தோற்று அழியும் என்பதை உறுதியாய்க் கூறுகிறது.
கன்னையா குமார்கள் களத்தில் இறங்கி விட்டனர். அவர்களின் உரிமை முழக்கமும் ஆழ்ந்த சிந்தனையும், உள்ளத்து உறுதியும் அவர்களின் பேட்டியில் தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டன.
“இந்தியாவிலேயே நமது பல்கலைக்கழகத்தின் சிறப்பு, ஆராய்ச்சி, தெளிவு, எதிர்காலத்தை வழிநடத்தக்கூடிய போக்கு என இந்திய குடியரசின் நோக்கத்துக்காக  இந்திய பாராளு-மன்றத்தால் தனிச்சட்டம் இயற்றி தொடங்கப்பட்டது நமது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் என்பதாகும். 90 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களுக்கு ஆராய்ச்சிக் கல்வி அளித்துக்கொண்டிருக்கும் பல்கலைக்கழகம் இது. பீகாரில் சத்துணவு ஆயா வேலைபார்க்கும் தாய்க்கு பிறந்து இந்தப் பல்கலைகழகத்தில் படிப்பதோடு 46 ஆண்டுகால பல்கலைக்கழக வரலாற்றில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின்  தலைவனாக வரமுடிந்த நான், அரசியல் பொருளாதாரம், சமூக செயல்பாடு என ஆராய்ந்து தனிப்பார்வையை தேர்ந்தெடுத்து பக்குவப்பட்டு வருகிறேன்.  இரவு நேரத்தில் பல்வேறு மாணவ இயக்கங்கள், சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் என பலரையும் கொண்டுவந்து கருத்தரங்கம் நடத்துவார்கள்.  கருத்தரங்கத்தில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டுத்தான் போகவேண்டும் என்பது விதி. இப்படிப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்துகொண்டு இந்திய குடியரசுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கும் பா.ஜ.க.வின் முகத்திரையை கிழித்தேன். அதனால் தான் என் மீது தேசத் துரோக வழக்கை பாய்ச்சியிருக்கிறார்கள். குறிப்பாக, தேசபக்தி என்கிற பெயரில் அடிமைத்தனத்தையும் பழமைவாதத்தையும் புகுத்தும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை கண்டித்ததால் என் மீது வழக்கு.   இன்றைய மத்திய அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் மத்திய அரசு என்று இயங்காமல் ஒரு கட்சியின் பிரதிநிதி போல அவர்களின் கொள்கைகளை பிரதிபலிக்கும் கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாற்றுக்கருத்தோ மாற்று மதமோ என்றால் தேசவிரோதம் என்பது பா.ஜ.க.வின் செயல்பாடாக இருக்கிறது. நாங்கள் நடத்துவது, இந்து ராஷ்டிராவுக்கும் இந்திய குடியரசுக்கும்  இடையே நடக்கும் யுத்தம்.
பார்ப்பனியத்திலிருந்து விடுதலை, மனுவாதத்திலிருந்து விடுதலை, நிலவுடைமை ஆதிக்கத்திலிருந்து விடுதலை, தீண்டாமையிலிருந்து விடுதலை என இந்தியா வுக்குள்ளிருந்து விடுதலை கேட்க இடதுசாரிகள், தலித் இயக்கங்கள் மற்றும் ஜனநாயக இயக்கங் களை ஒன்று சேர்த்து போராடுவேனே தவிர, நான் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதில்லை. இது "கவர்ன்மெண்ட் ஆஃப் இண்டியா'வுக்கு எதிரான போராட்டம் அல்ல; "கவர்ன் மெண்ட் ஆஃப் பி.ஜே.பி.'க்கு எதிரான போராட்டம்.

Tuesday, March 22, 2016

பருவமடைந்த பின் பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டியவை.


பெண்ணின் கருப்பையை பலப்படுத்தவும். வருங்காலத்தில் குழந்தையின்மையைத் தவிர்க்கவும், ஒரு பெண் பூப்படைந்து மாதவிடாய் ஆரம்பிக்கும் காலத்தில் இருந்து வாழ்நாள் முழுக்கவே பின்வரும் உணவுக் குறிப்புகளைப் பின்பற்றலாம்.
உளுந்தங்களி, கருப்பைக்கு மிகவும் நல்லது; மார்பகங்களைச் சீராக வைத்திருக்கவும் உதவும். தோல் நீக்காத கறுப்பு உளுந்தை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் எடுத்துக்கொள்வதுடன் மாதுளை, பப்பாளி போன்ற பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆண்களோ, பெண்களோ... பர்கர், பீட்ஸா மற்றும் துரித உணவுகளை உண்பதும் மலட்டுத்தன்மையை உண்டாக்கலாம். அதேபோல், உடற்பயிற்சியின்மையும் மலட்டுத்தன்மைக்கான காரணமாகும்.
சீரான உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள், கருப்பை கோளாறுகளைத் தவிர்க்கலாம்.

மரபணுவை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்


உடல் நலத்துக்கும் இரும்பு சத்து மிக அவசியம்.
உடலில் ஆக்சிஜனை எடுத்துச் செல்வதில் இதன் பங்கு மிகவும் முக்கியமானது. எனவேதான், இரும்பு சத்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் உட்கொள்கின்றனர்.
ஆனால், இவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அண்மையில் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ரத்த சோகை ஏற்பட்டு சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உருவாகிறது.
அனைத்துக்கும் மேலாக மிக முக்கியமான மரபணு (டி.என்.ஏ) மூலக்கூறுகள் பாதிப்படைகிறது. இத்தகவல் இங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, இரும்புச் சத்து மாத்திரைகளை கவனமுடன் சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உண்மையில் எந்த ஒரு சத்துப் பொருளையும் அதன் இயல்பான வடிவத்தில் இயற்கை வழியில் உணவுகள் மூலமாக உட்கொள்வதே நலத்தைத் தரும்.
சத்தான இயற்கை உணவுப் பொருட்களை உட்கொள்வதே போதுமானது. அதைத்தான் உடல் எளிதாக, பக்க விளைவுகள் இன்றி ஏற்றுக்கொள்ளும். உடல் வலிவும் பொலிவும் பெறும்.

தினமணியே! நீ திருந்த மாட்டாயா?...

.
பூசணிக்காயை உடைத்து வீணாக்க உபதேசமா? திருஷ்டி கழிய பூசணிக்காயை தெருவில் உடைக்கச் சொல்லி எந்தச்சாத்திரம் சொல்கிறது! உணவுப் பொருளை வீணாக்குவது சட்டப்படி குற்றச் செயல் அல்லவா? மக்கள் விரோத பிரச்சாரத்திற்கு அரைப்பக்கம் செய்தியா?
பூசணிக்காய் அற்புதமான மருத்துவ பயன் தருவதல்லவா? உடலுக்குக் குளிர்ச்சியூட்டி, பித்தம், வறட்சி, மேகநோய் நீக்குதல் போன்ற பல பயன்தருவதல்லவா? வெப்பப்பகுதியில் வாழும் நம்மக்களுக்கு பூசணிக்காய் அருமையான, பயனுள்ள உணவு அல்லவா?
பூசணிக்காய் அல்வா, பூசணிக்காய் புளிக்குழம்பு, பூசணிக்காய் மோர்க்குழம்பு, பூசணிக்காய் வடகம் என்று எத்தனையோ உணவுப்பொருட்களை தயாரிக்க உதவும் உன்னத காய் பூசணிக்காய். உண்டு, உடல் நலம் காக்கவேண்டிய உணவுப் பொருளை வீட்டிற்கு முன், கடைக்கு முன் போட்டுடைக்கும் முட்டாள் செயலைக் கண்டித்து மக்களை நெறிப்படுத்துவதற்குப் பதில் தோஷம் போகும், கண் திருஷ்டி விலகும் என்று பயன் சொல்லி, உணவுப்பொருளை வீணாக்கத் தூண்டும் உம்மீது நீதிமன்றம் தானே முன் வந்து வழக்குத் தொடுக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் அய்தீகம் என்று சொல்லி முட்டாள் தனத்திற்கெல்லாம் முட்டுக்கொடுப்பது சமூக விரோதச் செயலல்லவா? மக்களின் மடமையை வளர்க்கவா பத்திரிக்கை? உங்களுக்கெல்லாம் உளச்சான்றே கிடையாதா?
மக்களே! பூசணிக்காயை விணாக்காதீர் சாலையில் உடைத்து விபத்தை ஏற்படுத்தாதீர். அதைச் சமைத்து உண்டு உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இந்தக் கும்பல் மக்களை முட்டாளாக்கியே, தங்கள் ஆதிக்கம் வளர்த்தக் கும்பல். அவர்களிடம் நாம்தான் விழிப்பாய் இருக்க வேண்டும். அய்தீகம் என்று சொல்லி மக்களின் மடமையை வளர்ப்பது ஆரிய பார்ப்பனர்களின் அயோக்கியத் தனங்களில் ஒன்று. அதை நம்பாதீர்! உணவுப் பொருளை யாகம், படையல், அபிஷேகம் என்ற பெயரில் பாழாக்காதீர். வீணாக்கும் பொருட்களை ஏழைகளுக்குக் கொடுங்கள் அதைவிட சிறந்த வழிபாடு வேறு இல்லை!
அதேபோல் சிதறு தேங்காய் உடைத்து தேங்காயைப் பாழாக்காதீர். தேங்காயை பிச்சைக்கார்ர்களுக்குக் கொடுங்கள்! அவர்கள் வயிறு வாழ்த்தும்!
உணவுப்பொருளை வீணாக்குவதை நீங்கள் நம்பும் கடவுள் ஏற்குமா? பசித்த ஏழைக்குக் கொடுப்பதைத்தான் பகவான் விடும்புகிறார் என்றுதானே உங்கள் பக்தி நூல்கள் சொல்லுகின்றன! அதற்கு எதிராய் செய்யாலாமா? சிந்தியுங்கள்!

தினமணி வைத்தியநாதனுக்கு சுப.வீ தந்த சூடு



"திரு வைத்தியநாதன் ஆசிரியராக இருக்கும் வரை, என் எழுத்து எதுவும் தினமணியில் இடம்பெறுவதை நான் விரும்பவில்லை."
ஆம், அதனை நான் இழிவாகக் கருதுகின்றேன்.
திரு வைத்தியநாதன் ஆசிரியராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து தினமணி நாளேட்டின் சென்னைப் பதிப்பில், என் பெயரோ, என் படமோ இடம்பெறுவதில்லை. எங்கோ ஓரிரு விதிவிலக்கு இருக்கலாம். அது அவர்கள் உரிமை. தினமணி என்னும் மாபெரும் மக்கள் ஏடு வெளியிடுகின்ற அளவுக்கு என் வளர்ச்சி இல்லாமலும் இருக்கலாம்.
ஆனால் திடீரென்று, சில நாள்களுக்கு முன், தினமணி அலுவலகத்தில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டனர். விஜயகாந்த் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரையைத் தினமணியில் வெளியிடலாமா என்று கேட்டனர். என்னை நான் ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். கனவில்லை, நினைவுதான்.
அந்தக் கட்டுரையை வெளியிடுவதன் மூலம் ஏதோ வில்லங்கம் ஏற்பட வழியுள்ளது என்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். எப்படி என்றாலும் எனக்கு அது குறித்துக் கவலை ஏதுமில்லை. மக்களிடம் நம் கருத்து பரவ வேண்டும் என்பதற்காகத்தானே எழுதுகிறோம்! ஆகவே மகிழ்ச்சிதான். ஆனாலும் ஓர் எண்ணம் குறுக்கிட்டது. என்னைத் தொடர்புகொண்ட நண்பரிடம் இப்படிச் சொன்னேன் –
"திரு வைத்தியநாதன் ஆசிரியராக இருக்கும் வரை, என் எழுத்து எதுவும் தினமணியில் இடம்பெறுவதை நான் விரும்பவில்லை."
ஆம், அதனை நான் இழிவாகக் கருதுகின்றேன்.
// முடிந்தவரை பலருக்கும் பகிருங்கள்//

கோடை வெய்யில் கொடுமை எச்சரிக்கையும்; பாதுகாப்பும்


- மஞ்சை.வசந்தன்


கொட்டித்தீர்த்த மழைக்குப் பின் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் அறவே மழையில்லை. நிலத்தடி நீர் வற்றிவிட்டது. மரங்கள் பெருமளவு வெட்டப்பட்டதால் நிழல், குளிர் இல்லா நிலையில் வறட்சி, வெப்பம் இவற்றின் உச்சம்; கடுமை!

கோடைத் தொடக்கமே கொடுமையாக, கடுமையாக இருப்பதால், உச்சக்கட்ட கோடையின்போது தாங்கமுடியாத தகிப்பு கட்டாயம் இருக்கும். எனவே, இப்போதிருந்தே நாம் எச்சரிக்கையாக, பாதுகாப்பான சில செயல்பாடுகளில் இறங்க வேண்டியது கட்டாயம்.

பருத்தி ஆடை: குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கோடை முடியும் வரை பருத்தித் துணிகளை இறுக்கமின்றி தளர்வாக உடுத்த வேண்டும். மொத்தமான, செயற்கையான ஆடைகளை அறவே தவிர்க்க வேண்டும்.

தலைப்பாதுகாப்பு: தொப்பி அல்லது குடையால் கட்டாயம் தலையில் வெய்யில் தாக்காமல் காக்க வேண்டும். குழந்தைகளை காலை 9 மணிக்கு பின்பும் 5 மணிக்கு முன்பும் வெளியில் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். நேரடியாக சூரியச் சூடு தலையில் தாக்கினால் மூளைப்  பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

குடிக்கும் பானம்: ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். மிகவும் குளிர்ந்த நீரைப் பருகக் கூடாது. பிரிட்ஜில் வைத்த நீரைக் கட்டாயம் பருகக் கூடாது. பனிக்கட்டி (அய்ஸ்) சேர்த்து நீர் அல்லது பானங்கள் பருகக் கூடாது. உடல் கொதிப்பேறி இருக்கும் நிலையில் அதிகக் குளிர்ச்சியாய் குடித்தால் நரம்பு பாதிக்கப்படும். சூடான கண்ணாடியில் குளிர்ந்த நீரை ஊற்றினால் கண்ணாடி வெடிக்கும். அதுபோல்தான் உடலும் பாதிக்கப்படும். எனவே, அதிகக் குளிர்ச்சியுடன் குடிக்கக் கூடாது.

நீர்மோர்: அதிகம் தண்ணீர் கலந்த மோரில் இஞ்சி, எலுமிச்சைச் சாறு, கருவேப்பிலை, கொத்தமல்லி கீரை கலந்து பருகுவது நல்லது.

சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் மோருடன் வெள்ளரிப் பிஞ்சு: வெள்ளரிப் பிஞ்சை சிறு துண்டுகளாக்கி அதை மோரில் போட்டு சிறிது உப்பு கலந்து நன்குக் கலக்கி நாள்தோறும் முற்பகல் 11.30 மணிக்கும், பிற்பகல் 4 மணிக்கும் மென்று சாப்பிட வேண்டும். இது சூடு தணிக்கவும், தாகம் தீர்க்கவும் உதவுவதோடு, நமது சிறுநீரகம் பாதிக்கப்படாமல் இருக்க பெரிதும் உதவும். சிறுநீர்க் கடுப்பு வராது. வெய்யிலில் சிறுநீரகம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. எனவே, இது கட்டாயம்.

உணவு: காரம், புளிப்பு, உப்பு, கொழுப்பு நிறைந்த உணவு கூடவே கூடாது. பழங்கள், கீரை, காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இளநீர்: இதற்கு இணையான பானம் எதுவும் இல்லை. தினம் ஒரு இளநீர் அல்லது நான்கு நுங்கு சாப்பிட வேண்டும். செயற்கைக் குளிர்பானங்கள்; பழச்சாறுகளை அறவே சாப்பிடக் கூடாது. அவை முழுக்க முழுக்க நலத்திற்குக் கேடானவை. நாகரிக வேட்கையில் இவற்றைப் பருகக் கூடாது.

மாதுளை: வெய்யிலுக்கு மிகவும் உகந்த பழம் மாதுளை. தினம் ஒரு மாதுளை எல்லோரும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

தர்பூசணி, கொமுட்டி பழங்கள்: இவை இரண்டும் ஒரே வகைதான். சுத்தமான கலப்படமில்லா தர்பூசணி வெய்யிலுக்கு மிகவும் ஏற்றது, மலிவானது. கட்டாயம் சாப்பிட வேண்டும்.

பானைநீர்: மண்பானை வாங்கி அதை மணல்மேட்டில் வைத்து பானையில் நீர் ஊற்றி குளிந்£ பின் அதைப் பருகுவது வெய்யிலுக்கு ஏற்றது.

சந்தனம்: உடலுக்கு மெல்லியதாக தூய சந்தனத்தைப் பூசிக் கொள்ளலாம்.

சோற்றுக் கற்றாழை: வெய்யிலுக்கு சோற்றுக் கற்றாழை அரிய உணவு. இது மேற்பூச்சிக்கும் மிகுந்த பயன்தரும்.

சோற்றுக் கற்றாழையை பிளந்து அதிலுள்ள சோற்றை எடுத்து,  அதை 7 முறை அலசி அதனுடன் தேன் சேர்த்து உண்ண வேண்டும். இது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும். பெண்களுக்கு மிகவும் உகந்தது.

சிறுநீர்: கோடையில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வராது. அதனால் கழிக்காமல் இருப்பது தப்பு. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழிக்க வேண்டும்.

இயற்கை நிழல்: கோடையில் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பதைவிட தோப்பு, பூங்கா என்று இயற்கை நிழலில் இருப்பது உகந்தது. குறிப்பாக வேப்ப மரம், புங்க மரம், ஆலமரம், மாமரம் போன்றவற்றின் நிழல் உடலுக்கு மிகவும் ஏற்றது.

புளிய மரம், கருவேல் மரம், முருங்கை மரம் போன்றவற்றின் நிழலைத் தவிர்க்கவும்.

பதனீர்: பனையின் பாளையிலிருந்து கிடைக்கும் பதனீர் கோடைக்கும், உடலுக்கும் ஏற்றது. தூய்மையான பதனீர் என்பதை உறுதிசெய்து பருகவும்
ஜ¦னி வேண்டாம்: ஜீனியைத் தவிர்த்து வெல்லம் அல்லது பனைவெல்லத்தைப் பயன்படுத்த வேண்டும். ஜீனி உடல்நலத்திற்குக் கேடு பயக்கும். ஜீனியை எவ்வளவு தவிர்க்க முடியுமோ அவ்வளவு உடல் நலத்திற்கு நல்லது. வெல்லமும், பனைவெல்லமும், உடலுக்கு நலம் தந்து, இரும்புச் சத்தை ஏராளமாய் தரும். இனிப்புக்கு வெல்லத்தை மட்டுமே பயன்படுத்துங்கள். ஜீனி வேண்டாம்.

டீ, காபி வேண்டாம்: வெய்யில் நேரத்தில் டீ, காபி வேண்டாம். அப்படியே பருகினாலும் அதிக சூட்டில் பருக வேண்டாம்.

புகை வேண்டாம்: புகைப் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வெய்யில் காலத்தில் புகைப்பதைப் போன்ற கொடிய செயல் வேறு இல்லை.

இருமுறை குளிக்கவும்: பொதுவாக இருமுறை குளிப்பது நல்லது. கோடையில் கட்டாயம் குளிர்ந்த நீரில் இருமுறை குளிக்க வேண்டும்.

நீரை வீணாக்கக் கூடாது: கோடையில் தண்ணீர்ப் பஞ்சம் கடுமையாய் இருக்கும். எனவே, தண்ணீரைக் சிக்கனமாகப் பயன்படுத்தவும்.

அம்மையைத் தடுக்கும் வேம்பும் மஞ்சளும்: வெய்யில் காலத்தில் அம்மை நோய் வரும். எனவே, ஒருபிடி வேப்ப இலையுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நீர் ஊற்றி, நீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து 10 மில்லி அளவு அச்சாற்றைப் பருகினால் அம்மை வராது. வந்தாலும் விரைவில் குணமாகும்.

அம்மை வந்தால் இ¬ தினம் மூன்றுவேளை பருக வேண்டும். சாற்றின் அடியில் தங்கும் மஞ்சள் படிவை உடலில் பூசவேண்டும்.

பேயம்பழம் சாப்பிட வேண்டும்: அம்மைக்கு உகந்த பழம் பேயம் பழம். தவறாது தினம் நான்கு பழம் சாப்பிட வேண்டும்.

வெய்யிலில் விளையாடக் கூடாது: காலை 9 மணிக்கு பிறகும் மாலை நான்கரை மணிக்கு முன்பும் விளையாட வேண்டாம். இளைஞர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

கம்புக் கூழ்: வெய்யில் காலத்திற்கு கம்புக் கூழ் மிகவும் ஏற்றது. சின்ன வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு கம்புக் கூழ் சாப்பிட்டால் சுவையும் சுகமும் ஏற்படும்.

இரவு மிகுந்த சோற்றில் நீர் ஊற்றி அதில் சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு காலையில் சோறு, நீர், வெங்காயம் மூன்றையும் சேர்த்து உண்டால் நாள் முழுக்க வெம்மையைத் தாங்கும், உடல் குளிர்ச்சியடையும்.

மணத்தக்காளி: உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியூட்டுவதில் மணத்தக்காளி சிறந்தது. எனவே, வாரம் மூன்று நாள் இதை உணவில் வேர்க்கவும்.

கீழாநெல்லி: மஞ்சள்காமாலை வருவதை இது தடுக்கும். எனவே, கீழாநெல்லி கீரையை கூட்டு செய்து இரண்டு உருண்டை சோற்றில் பிசைந்து வாரம் ஒருமுறை சாப்பிடவும்.

வெந்தயம்: ஒரு ஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து தினம் சாப்பிட்டால் உடலுக்குக் குளிர்ச்சி. சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.


Tuesday, March 1, 2016

ஆர்.எஸ்.எஸ். சதிவலையுள் உயர்கல்வி! ஆர்த்தெழுந்து போராடும் மாணவர்கள்!

- மஞ்சை வசந்தன்
கல்விதான் உரிமை வேட்கைக்கான உயிரோட்டம் என்ற உண்மையை நன்கு புரிந்துவைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். ஆரிய பார்ப்பனக் கூட்டம், அக்கல்வியை தனக்கு மட்டுமே உரியதாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வைத்துக் கொண்டிருந்த நிலையை, ஆங்கில ஆட்சியும், ஜோதிராவ் பூலே, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றோரின் போராட்டங்களும் மாற்றி, அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்தன.
இதன் விளைவாய் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய இளைஞர்கள் கல்வி பயின்று அய்-.ஏ.எஸ்., அய்.பி.எஸ் அதிகாரிகளாய், நீதிபதிகளாய், பொறியாளர்களாய், மருத்துவர்களாய், விஞ்ஞானிகளாய், வழக்குரைஞர்களாய், பல்துறை வல்லுநர்களாய், கலைஞர்களாய் உருவாகி, உயர்ந்து வருவதோடு, ஆரிய பார்ப்பனர்களைப் பின்னுக்குத் தள்ளி சாதித்து வருவதால் ஆத்திரமுற்ற ஆரிய பார்ப்பன கூட்டம் இந்த வளர்ச்சியைத் தடுக்க என்னென்ன சதித் திட்டங்களைச் செயல்படுத்த முடியுமோ அத்தனையையும் செயல்படுத்திப் பார்த்தனர்.
ஆனால், பெரியார் தொண்டர்களும், அம்பேத்கர் தொண்டர்களும், கன்சிராம், மாயாவதி, முலாயம் சிங், லாலுபிரசாத் போன்றவர்களும், அவர்களது வழிகாட்டி களும் தொடர்ந்து விழிப்போடிருந்து ஆரிய ஆதிக்கத்தை, சூழ்ச்சியை முறியடித்தனர்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்ததாலும், நேரு, இந்திரா, வி.பி.சிங், மன்மோகன்சிங் போன்றவர்கள் சமூகநீதியைத் தாங்கி நின்றதாலும் ஆரிய பார்ப்பனக் கூட்டம் ஆடி அடங்கி ஒடுங்கியது.
ஆனால், இராமனைக் காட்டி, மதவெறியை ஊட்டி, பி.ஜே.பி.யை வளர்த்து, மோடி என்ற ஒரு மனிதரை மாற்றம், ஏற்றம், வளர்ச்சி இவற்றை உடனே உருவாக்கும் சக்தி படைத்தவராய் பரப்புரை செய்து, அதிக எண்ணிக்கையில் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றிய நாளிலிருந்து, ஏங்கிக் கிடந்த ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கக் கூட்டம் (ஆரிய கூட்டம்) மீண்டும் எழுந்து, கொடூர கரம் நீட்டி, தாழ்த்தப்பட்டோரை, பிற்படுத்தப்பட்டோரை அடக்கி, நசுக்குவதிலும், தங்கள் ஆதிக்கத்தை வளர்ப்பதிலும், தங்கள் சமஸ்கிருதத்தைப் பரப்புவதிலும், தங்களுக்குச் சாதகமான மனுஸ்மிருதி, பகவத் கீதை போன்ற மனித எதிர் நூல்களைப் பரப்புவதிலும் தீவிரங் காட்டுவதோடு, தாங்கள் சொல்வதைத்தான் சாப்பிட வேண்டும், தாங்கள் கூறும்படிதான் உடுத்த வேண்டும், தங்கள் சாஸ்திரப்படிதான் வாழவேண்டும், மீறினால் கொல்வோம் என்று கொடுங்கோல் செயல்பாடுகளைக் கட்டவிழ்த்துள்ளனர்.
இதன் முதற் கட்டமாக, சமூகநீதி, பகுத்தறிவு, ஆரிய பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, சனாதன, சமஸ்கிருதத் திணிப்பு மறுப்பு என்று சிந்தனை விதை விதைத்த பகுத்தறிவாளர்களை வீட்டிற்கேச் சென்று படுகொலை செய்து மிரட்டல் விடுத்தனர். இதன்மூலம் கருத்துச் சதந்திரத்தின் கழுத்தை நெறித்து கொன்றுவிடலாம் என்று கனவு கண்டனர். ஆனால், விளைவு விபரீதமாய் மாற பின்வாங்கிப் பதுங்கினர்.
அறிவுத் திறன்வாய்ந்த மனிதர்களுக்கு அடுத்தப்படியாக அறிவுநுட்பம் வாய்ந்த ஆரியர் அல்லாத ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்கள் உருவாவதையும், அவர்கள் விழிப்போடும், விவரத்தோடும், உரிமை வேட்கையோடும் வளர்வதையும் தடுக்கும் முயற்சியில் இறங்கினர்.
அதன் முதல்கட்ட வெள்ளோட்டம் சென்னை அய்.அய்.டி.யில் அவர்களால் தொடங்கப்பட்டது. அந்த நிறுவன மாணவர்களேயன்றி, அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ஆர்தெழுந்து போராடிய தாலும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் போர்க்கோலம் பூண்டு போராடியதாலும் ஆர்.எஸ்.எஸ். ஆரிய பார்ப்பன ஆதிக்கம் அடங்கிப் பணிந்து போனது.
அடுத்து அய்தராபாத்தில் அவர்களின் ஆதிக்க வெறியை அரங்கேற்றினர். அந்த வெறிக்கு அறிவார்ந்த ஒடுக்கப்பட்ட மாணவர் ரோகித் வெமுலா பலியானார். போராட்டம் இந்தியா எங்கணும் பரவ, ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். கூட்டம் அப்படியே பின்வாங்கி ஓடி ஒளிந்தது.
எவ்வளவு மூக்குடைப் பட்டாலும், எத்தனை முறை தோற்றாலும், தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவது ஆரிய பார்ப்பனர்களின் பரம்பரை பழக்கம் என்பதால், அய்தராபாத் சூடு தணிவதற்குள், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தங்களின் கலவரத்தை, மோசடியை மூலதனமாகக் கொண்டு தொடங்கினர்.
கடந்த 9ஆம் தேதி (09.02.2016) ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பியதாக தேசவிரோத குற்றஞ்சாட்டி, இப்பல்கலைக் கழக மாணவர் தலைவர் கன்னையா குமாரைக் கைது செய்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.அய்.) தேசியச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜாவின் மகள் அபராஜிதா உட்பட 7 பேர் மீது தேசவிரோத வழக்குப் போடப்பட்டு இருக்கிறது.
அரசின் இந்த மோசடிச் செயலைக் கண்டித்து மாணவர்களும் பேராசிரியர்களும் பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-_இ_தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீது இருப்பதாக வெளிப்படையாகக் குற்றச் சாட்டினர்.
இக்குற்றச்சாட்டு முற்றிலும் மோசடியானது. இதற்கு ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் அறிக்கைவிட்டனர்.
“போலி ட்விட்டர் கணக்கு மூலம் எனது பெயரில் பொய்யான கருத்து பகிரப்பட்டிருக்கிறது. எனக்கும் ஜே.என்.யு.வில் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்நிகழ்வில் இந்திய அரசாங்கம் என்னைத் தொடர்புப்-படுத்தியிருப்பது வியப்பளிக்கிறது!’’ என்று தீவிரவாத அமைப்பான ஜெ.யு.டி. (JUD) வெளியிட்டுள்ள வீடியோவில் ஹஃபீஸ் சயீது தெரிவித்திருக்கிறார்.
இப்படியொரு மோசடியான பழியைப் போட்டு மாணவர்களை நெருக்கிக் கசக்கி, அச்சுறுத்தி அடக்க ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கூட்டம் முயலுவதற்கு என்ன காரணம் தெரியுமா?
“நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தத் தேசத்தை மனதார நேசிக்கிறோம். இந்த நாட்டின் எண்பது சதவிகித ஏழைகளுக்காக நாங்கள் போராடுகிறோம். இதுவே எங்களைப் பொறுத்தவரை தேசத்தை வழிபடுவது ஆகும். எங்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் மீது அளவில்லாத நம்பிக்கையுள்ளது. அரசமைப்பை யார் எதிர்த்தாலும், அது சங்பரிவாரங்களாக இருந்தாலும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். எங்களுக்கு இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மட்டுமே நம்பிக்கையுள்ளது. டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான ஜந்தேவாலனிலும், நாக்பூரிலும் சொல்லித் தரப்படும் மனுவின் சட்டத்தின் மீது எங்களுக்குத் துளியும் மதிப்பில்லை. இந்தத் தேசத்தின் சாதியமைப்பின் மீது எங்களுக்கு எந்தப் பற்றுதலுமில்லை.’’ என்று இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஏஅய்எஸ்எப்  கன்னையகுமார் பேசியதுதான் அவர்களை பாடாய்ப் படுத்தியிருக்கிறது.
அவரது பேச்சில் எவராவது குற்றம் சொல்ல முடியுமா? எவ்வளவு தெளிந்த, பொருள் பொதிந்த உரிமை சார்ந்த, ஆதிக்கவாதிகளுக்கு எதிரான கருத்துரை இது!
அரசமைப்பை மதிக்கிறோம், மாறாக ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் ஆதிக்கச் செயல்பாடுகளை எதிர்க்கிறோம் என்பதுதானே அவர் பேச்சின் சாரம்.
உரிமை வேட்கையுள்ள, ஆதிக்கம் அழிக்க நினைக்கும் மனித உரிமைப் போராளி எவரும் பேசக்கூடிய, பேச வேண்டிய பேச்சுதானே இது! இதில் என்ன குறை கண்டார்கள்? குறைதான் காண முடியுமா?
முடியாது. எனவேதான் இந்த மோசடி முறையில் பழிபோட்டு, தேச விரோத வழக்குப் புனைந்து சிறைப்படுத்திய சிறுமை! அயோக்கியத்தனம்.
மோசடி வழக்கைப் புனைந்து கைது செய்ததோடு, 15.02.2016 அன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கன்னையாகுமார் நேர் நிறுத்தப்பட்டபோது, அங்குத் திரண்ட ஆசிரியர்கள் மாணவர்களை 40க்கும் மேற்பட்ட பி.ஜே.பி. வழக்குரைஞர்கள் திடீர் என்று தாக்கினர். இதில் பலர் காயமடைந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் சிறுபான்மையினர் அமைப்பின் உறுப்பினர் அமீக் ஜமேய் என்பவரை, பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஓ.பி.ஷர்மாவும் அவரது ஆதரவாளர்களும் வெறிகொண்டு தாக்கினர்.
2001இல் பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் கிலானி குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்ட பின், 16.02.2016 அன்று தேச விரோத வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடுத்தக்கட்ட விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கன்னையாகுமார், நீதிமன்ற கட்டுக் காவல்களை யெல்லாம் மீறி நீதிமன்றத்திற்கு வெளியே தாக்கப்பட்டள்ளார்.
மனித உரிமைக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு எதிராய் யார் குரல் கொடுத்தாலும், போராடினாலும், அவர்களை அடக்கி, ஒடுக்கி, நசுக்குவது அல்லது அழித்தொழிப்பது. அதற்கு என்னென்ன மோசடி, பித்தலாட்டம் உண்டோ அத்தனையும் செய்வது என்ற ஒற்றைக் கொள்கையுடன் கொலை வெறிகொண்டு ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும், பி.ஜே.பி. கட்சியினரும் வினையாற்றுவதன் வெளிப்பாடுதான் இந்தத் தொடர் நிகழ்வுகள்.
இதுவரை நடந்துள்ள எதிலும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யினர் தரப்பில் எந்த உண்மையும், நேர்மையும் நியாயமும் இல்லை. எல்லாம் மோசடி, புனைவு, ஏமாற்று, பித்தலாட்டம், பொய்தான்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழககத்தில் புனையப்பட்ட தேசவிரோத குற்றச்சாட்டும் அப்பட்டமான மோசடி என்பது அண்மையில் உறுதியாகிவிட்டது.
காணொலியைப் பதிவு செய்த விஷ்வ தீபக்  தனது தலைமை எடிட்டர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அதன் பிறகு அவர் டில்லி பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் மோசடித் திரையைக் கிழித்தார்.
“அதிர்ச்சி! அதிர்ச்சி!! மனசாட்சி என்னை உறுத்தியது. என்னை மாணவர் அமைப்பின் செயலாளர் ஒருவர் தனது நிகழ்ச்சியைப் படம் பிடிக்க அழைத்தார். அவரது அழைப்பின் பேரில் நான் தான் டில்லி பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்கள் கருத்தரங்கத்தைப் பதிவு செய்தேன்.  எனது மொபைல் காமிராவிலும் எனது நன்பர் ஒருவரை படம் பிடிக்கக் கொடுத்து பதிவு செய்தேன்.
அந்த நிகழ்ச்சியை நான் பணிபுரியும் ஜீ செய்தி நிறுவனத்திடம் கொடுத்து அதற்கான செய்தியை எழுதித் தொகுக்க அனுமதி கேட்டிருந்தேன். இந்த நிலையில் 11ஆம் தேதி அன்று மாலை நான் தொகுத்த காணொலி, ஜீ ஆங்கிலம் மற்றும் இந்தி செய்தி தொலைக்காட்சியில் வெளியானது. அதைப் பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியடைந்தேன், அதில் பாகிஸ்தான் ஸிந்தாபாத், பாரத் முர்தாபாத், இந்துஸ்தான் கோ துக்டே கரேங்கே(பாகிஸ்தான் வாழ்க, இந்தியா ஒழிக, இந்தியாவை உடைப்போம்) என்ற வார்த்தைகள் மாணவர்கள் முழங்குவதாக பின்புலத்தில் ஒலித்தன, இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன், இது எங்கு சேர்க்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், எடிட்டோரியலில் விஷமத்தனம் செய்யப்பட்டுள்ளது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
மேலும் அந்த காணொலியின் தலைப்பே பாகிஸ்தான் ஸிந்தாபாத் அட் ஜே என் யு (பாகிஸ்தான் வாழ்க இது ஜே என் யு வின் முழக்கம் என்று கூறினார்) என்று இருந்தது.
ஜே.என்.யு.வில் நான் செய்தி சேகரிக்கும் போது, எனது நிலைய நிருபர் பவன் நெஹராவும் உடனிருந்தார்.அவரிடமும் நான் இந்த நிகழ்ச்சியை விரிவான செய்தியாக எழுதி ஞாயிறு அன்று சிறப்பு நிகழ்ச்சிக்காக கொடுக்க உள்ளேன் என்று கூறியிருந்தேன்.’’
விஷ்வ தீபக் செய்தித் தொடர்புத்துறை கல்வி நிறுவனமான (மிமிவிசி) அய் அய் எம் சி டில்லியில் பட்டம் வாங்கியவர், முதலில் மராட்டி நாளிதழான ஜன்சத்தா மற்றும் இந்தி ஆன்மீக நாளிதழ் சன்ஸ்கார் போன்ற இதழ்களில் பணியாற்றியவர். அதன் பிறகு நியூஸ் 24, ஆஜ் தக், நியூஸ் நேசன் மற்றும் பகுதி நேர செய்தியாளராக பிபிசி, இந்தி தூர்தர்ஷன் செய்தி பிரிவில் பணியாற்றியவர்.
டில்லியில் உள்ள பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு விஷ்வ தீபக் தான் மொபைலில் பதிவு செய்த காணொலியை கொடுத்துள்ளார். அதுதான் சமீபத்தில் வெளியானது. அதில் கன்னையா, பார்ப்பனீயத்தில் இருந்து விடுதலை, மனுதர்ம ஆட்சியில் இருந்து விடுதலை, காவிக் குண்டர்களின் கைக்கூலிகளிடமிருந்து விடுதலை, கார்ப்பரேட்டுக்ளின் அடிமைகளிடமிருந்து விடுதலை போன்ற முழக்கங்களை எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  (இதை விடுதலை ஞாயிறு மலரில் படங்களுடன் வெளியிட்டிருந்தது.)
கோஷங்களின் குரல் யாருடையது?
மிகப் பெரிய தில்லுமுல்லு!
பிப்ரவரி 10 ஆம் தேதி எனக்கு ஓய்வு நாள் ஆகும், ஆகவே அந்த நாளில் வேறு ஒரு தலைமை எடிட்டர் எனது காணொலியைப் பார்த்திருக்கிறார். இந்தக் காணொலியை மூன்று பகுதிகளாகப் பிரித்து தனியாக கோஷங்களை யாரையோ எழுப்பவைத்து உண்மையான காணொலியுடன் இணைத்துள்ளனர். இவ்வளவு முக்கியமான பொறுப்பில் உள்ளவர்கள் யார் இந்த விஷமத்தனத்தைச் செய்தது என்று எனக்குத் தெரியவில்லை. போலியான காணொலியில் இணைக்கப்பட்ட வாசகங்கள் மாணவர்கள் அமைப்பினர் பேசவில்லை. அந்த வாசகங்கள் அனைத்தும் வேறு இடத்தில் மிகச்சிலரைப் பேசவைத்து பதிவு செய்யப்பட்டது, இந்த காணொலியைப் பார்க்கும் வல்லுநர்களுக்கு மிகவும் எளிதாகப் புரியும்; அதே நேரத்தில் இந்தக் காணொலியை மிகக் கவனமாகக் கேட்டால் சின்ன குழந்தைக்குக் கூட போலியாக சேர்க்கப்பட்ட வாசகங்கள் என தெரிந்துவிடும்’’ என்று கூறினார்.
ஆக, ஆர்.எஸ்.எஸ். ஆரிய பார்ப்பனக் கூட்டம், தங்கள் ஆதிக்கத்தைக் கொண்டுவர கொலை, மோசடி, பித்தலாட்டம், அயோக்கியத்தனம், அடாவடித்தனம் என்று எதையும் செய்வார்கள் என்பதை இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. அவர்கள் சரியான இடத்தில்தான் கை வைத்துள்ளனர். மாணவர்கள் உணர்வு திரண்ட எழுச்சி சக்தி. அவர்கள் உண்மை தெரிந்து உணர்வு கொண்டு எழுந்துவிட்டனர். அந்த எழுச்சி ஆரிய ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கத்தை அழித்தே தீரும். அதற்கு மாணவர் தலைவர்கள் ஒன்றுகூடி, செயல்திட்டம் வகுத்து, மனித உரிமைக்கு எதிரான ஆதிக்கச் சக்திகளை அறவே வேர் பறித்து வீழ்த்தவேண்டும். மாணவர் எழுச்சி மகத்தான சக்தி!

மு.க.ஸ்டாலின் வாழ்க!

வாரிசாக வந்ததால் உயர்வு பெற்றவர் அல்ல நீங்கள். உழைத்து உழைத்தே உயர்வை எட்டியுள்ளீர்கள்! கலைஞரின் பிள்ளை என்பது உங்களுக்குச் சிறப்பு. ஆனால், அதனடிப்படையில் உங்கள் உயர்வு அமைந்தது என்று அற்பர்களைத் தவிர எவரும் கூறமாட்டார்கள்.
உங்களுக்குக்கிடைத்துள்ள வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது! கிடைத்ததை மிகச்சரியாக, எச்சரிக்கையாக, விழிப்போடு, கொள்கை நெறியில் பயன்படுத்த வேண்டிய சரியான தருணம் இது.
மக்களுடனான உங்கள் சந்திப்பு சாதனை; இயக்கத்தின் ஆதரவுபெருக பெரிதும் உதவிய சரியான செயல்.
எதிரியை விமர்சிக்க செலவிடுவதைத் தவிர்த்து, கலைஞர் சாதனைகளை இன்றைய இளைஞர்களுக்கு பளிச்சென்று நறுக்காகச் சொல்ல வேண்டியது கட்டாயம். உடனடியாகச் சொல்ல வேண்டும்.
ஈழத்தமிழர்களுக்காக கலைஞர் இழந்த இழப்புகளைச் சுருங்கக் கூற வேண்டும். செய்ய இருக்கும் சாதனைகளைப் பட்டியல் இடவேண்டும். தேர்தல் அறிக்கையில்...
அ.தி.மு.க அரசின் மீதான வெறுப்பை உங்களுக்குச் சாதகமாய் பயன் படுத்துவதில் தான் இத்தேர்தல் வெற்றி உள்ளது. எனவே, மக்கள் வெறுக்கும் படியான எதையும் செய்யக்கூடாது.
தந்தை பெரியார், அண்ணா கொள்கைகளில் உறுதிவேண்டும். எதிரிகள் சூழ்ச்சி எண்ணெய் ஊற்றுவர். வழுக்கிவிடக்கூடாது. திராவிடர் கொள்கைகளை மீண்டும் இளைஞர்களுக்கு பரவலாகக் கொண்டு சேர்க்க வேண்டும் அது தான் உங்களை நிலை நிறுத்தும்.
எதிர் காலத்தில் எந்த குற்றச் சாட்டுக்கும் ஆளாகாது ஊழலற்ற மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சிக்கு வழி வகுக்கும் மதுக்கடைகள் இல்லா செயல்பாட்டில்தான் உங்கள் எதிர்காலம், திமுகாவின் எதிர்காலம் இரண்டுமே உள்ளது. இந்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே இப்போது உங்கள் தலையாய பணியாகும்.
வாழ்வித்து வாழ்க!