அரசியல்

Tuesday, December 29, 2015

அயோக்கியத்தனத்தின் அசல்வடிவம் ரங்கராஜ் பாண்டே!............


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் தீர்ப்புக் குறித்து விவாதம்!
வழக்கறிஞர்கள் அருள்மொழி, பிரசன்னா, ரங்கராஜ் பாண்டேவின் டம்மியாக ஒப்புக்கு ஓர் ஆள். நிகழ்ச்சி முழுவதும் ரங்கராஜ் பாண்டே பேசுவதுதான். 
அருள்மொழி பேசினால் உடனே குறுக்கீடு. பிரசன்னா பேசினால் உடனே குறுக்கீடு. அவர்கள் வாதத்திற்கு பதில் சொல்லாமல், திசை திருப்புதல். பதிவு இருந்தால் போட்டுப் பாருங்கள்! கேளுங்கள்!
பார்ப்பனர்களுக்கு பதிலாளாய் அமர்ந்து ஆக்ரோஷமாகக் கூச்சல், ஆவேசம்! பார்ப்பனர் ஆதிக்கம் பறிபோய் விடுமோ என்ற படபடப்பு கண்களில் தெரிகிறது. நடுநிலையாய் நடப்பதுபோல் பாசாங்கு! அடேயப்பா பாண்டே நடிக்கப் போகலாம்! அதுவும் மோசடிப் பாத்திரம் செமசூட்டாகும்!
நிகழ்ச்சி நடத்துகிறவனே கட்சிக்காரனாக மாறும் அவலம், அசிங்கம்! அத்தமீறல்.
தினத்தந்தி உரிமையாளர் “தமிழர் தந்தை” வாரிசு என்று கூறிக்கொண்டு, தமிழர் எதிர்ச்செயல்களை பார்ப்பன வெறியர்களைக் கொண்டு செய்வது பச்சைத் துரோகம்!
தினத்தந்தியை தமிழர் புறக்கணிக்கப்பதற்கு முன் மாறுங்கள்; மாற்றுங்கள்!
இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த எந்தத் தமிழனுக்கும் தகுதியில்லை என்பது தந்திக் குடும்பத்தின் நினைப்பா? கணிப்பா? ஒரு நேர்காணல் நடத்துங்கள்! ஆயிரம் மடங்கு திறமையுள்ளவர்களை நீங்கள் காணலாம்!
தமிழனைவிட திறமையானவன் இந்த உலகில் எவனும் இல்லை. ஒடுக்கப்பட்டதால், ஓரங்கட்டப்பட்டதால், ஒளி படாததால் வெளித்தெரியாமல் உள்ளான்! அவ்வளவே!
கணினியிலும், அய்.ஏ.எஸ். தேர்விலும் சாதிக்கும் தமிழனுக்கு மற்றதெல்லாம் எம்மாத்திரம்?
«««

No comments:

Post a Comment