அரசியல்

Thursday, December 28, 2017

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவை வைத்து தி.மு.க. பலம் சரிவு என்பது அறியாமை அல்லது அயோக்கியத்தனம்!



ஆர்.கே.நகரில் நடந்தவை என்ன என்பது ஊடகங்களுக்கு முழுமையாய்த் தெரியும்; அரசியலில் பங்குகொண்டுள்ள தலைவர்கள், விமர்சகர்களுக்கும் நன்கு தெரியும்.

ஆனால், எல்லாம் தெரிந்திருந்தும் தி.மு.க. தோல்வியை வைத்து, தி.மு.க.வின் பலம் சரிந்துவிட்டதாய்ப் பேசுவதும், எழுதுவதும், கருத்துக் கூறுவதும் ஒன்று அறியாமையாக இருக்க வேண்டும் அல்லது அயோக்கியத்தனமாக இருக்க வேண்டும்.

காரணம், ஆர்.கே.நகரில் முழுக்க முழுக்க பணம் மட்டுமே தேர்தலைத் தீர்மானித்துள்ளது. போட்டிப் போட்டு கொடுத்த தினகரனும், அ.இ.அ.தி.மு.க. மதுசூதனனும் அந்த விகிதத்திற்கு ஏற்ப வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

தி.மு.க. பணம் கொடுக்கவில்லை. ஓட்டும் கிடைக்கவில்லை. “பணம் வந்தால் பத்தும் பறந்துபோகும்’’ என்ற பழமொழி நீண்டகாலமாய் நிலைத்து வெற்றிபெற்ற பழமொழி. அதன்படிதான் ஆர்.கே.நகரில் நடந்துள்ளது.

தி.-மு.க.விற்கு வாக்களிக்க கூடிய பலரும் பணத்திற்காக வாக்களித்துள்ளனர். இந்த ஒரு தொகுதியில் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது; பணம் கிடைக்கிறதே! என்ற மனநிலையே காரணம்!

தி.மு.க. பணம் கொடுக்காமல் இவ்வளவு வாக்குகளைப் பெற்றது. அதன் செல்வாக்கைக் காட்டுகிறதே தவிர சரிவையல்ல.

சற்றேறக்குறைய தினகரன் தரப்பாரும், அ.தி.மு.க. தரப்பாரும் சேர்ந்து ஒரு வாக்குக்கு 20 ஆயிரம் ரூபாய் மொத்தமாகக் கொடுத்த பின்னும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தி.மு.க.விற்கு வாக்களித்திருப்பது என்பது தி.மு.க.வின் செல்வாக்கின் பலமே! இவ்வளவு பணம் ஒரு வாக்குக்கு அளிக்கப்பட்ட நிலையிலும் தி.மு.க. பெற்றுள்ள வாக்குகள் மதிப்பு மிக்கவை.

உண்மை இப்படியிருக்க ஆர்.கே.நகரில் தோற்றதை வைத்து தமிழ்நாடு முழுக்க அதுவே நடக்கும் என்பதும் அக்கருத்தைப் பரப்புவதும் அசல் அயோக்கியத்தனம் ஆகும்!

ஒரு மாதத்திறகு முன் தமிழகம் முழுக்க அறியப்பட்ட கருத்துக் கணிப்பில் 55%க்கும் மேற்பட்ட மக்கள் தி.மு.க.விற்கு வாக்களிப்போம் என்று கூறியிருந்தனர். அதன்பின் 2ஜி வழக்கில் தி.மு.க.வின் களங்கம் நீக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாய் 60% வாக்குகளுக்கு மேல் தி.மு.க.விற்கு அளிக்க மக்கள் தயாராய் இருக்கும் நிலையில், தி.மு.க. செல்வாக்கு சரிந்து விட்டதாய்ச் சொல்வது எந்த அடிப்படையில்? நாணயமாய் ஊடகங்களும், விமர்சகர்களும் பதில் சொல்ல வேண்டும்.

இந்த சந்தடி சாக்கில் மு.க.அழகிரி தி.மு.க. இனி வெற்றி பெறாது என்பது, அவரது ஆறா அரிப்பை தேய்த்துக் கொள்ளும் முயற்சிதான்.

தம்பி மீதுள்ள வெறுப்பை தி.மு.க.வுக்க எதிர்ப்பாய்ப் பயன்படுத்தும் அவரைத் தி.மு.க.வின் நலம் விரும்பியாக எப்படி ஏற்க முடியும்? தனக்குச் செல்வாக்கு இல்லாத தி.மு.க. அழிய வேண்டும் என்று நினைக்கும் சுயநலக்காரர் அவர் என்பதை இதன்மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே, தி.-மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், தொண்டர்களும் சோர்வடையாது பழைய நம்பிக்கையில், உற்சாகத்துடன் செயல்பட வேண்டும்.

தி.மு.கழகத்தில் சுற்றியுள்ள, பற்றியுள்ள சுயநலக்காரர்களை, அரை வேக்காடுகளை அப்புறப்படுத்தி சரியானவர்களின் வழிகாட்டுதலில் செயல்பட வேண்டியது ஸ்டாலின் அவர்களின் தலையாய கடமையாகும்.

இன்றைக்கு மக்கள் விரும்புவது பி.ஜே.பி.யை வன்மையாக எதிர்க்கும் கட்சியைத்தான். தற்போது அத்தகுதி தி.மு.க.விற்கே உள்ளது. அதில் தி.மு.க. உறுதியாக நின்று வெல்ல வேண்டும்! வெல்ல முடியும்!

தமிழக மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். ஊடகங்கள் மக்களைக் குழப்புகிறார்கள். தங்கள் நோக்கத்திற்கு ஏற்ப!

வேண்டுமானால் சரியான கருத்துக் கணிப்பு நடத்திப் பாருங்கள்! உண்மையை உணரலாம்!

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
====

Thursday, December 21, 2017

குஜராத் தேர்தலில் பா.ஜ.க. அரசு செய்த மோசடி பாரீர்!


- மஞ்சை வசந்தன்

16 தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கையைவிட பதிவான வாக்குகள் எண்ணிக்கை அதிகம்.

ஆதாரம் இதோ:

எடுத்துக்காட்டாக பராசா தொகுதியில் வாக்காளர் பட்டியல்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,25,191 பதிவானது 1,37,262 ஆக 12,071 கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன.
 

வழக்கமாக 80% வாக்குகள்தான் பதிவாகும். ஆனால், இங்கு 110% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. எனவே, 30% வாக்குகள் மோசடியானவை போடப்பட்டுள்ளன என்பது வெளிப்படுகிறது.

எனவே, இந்த 16 தொகுதிகளிலும் தேர்தலை உடன் இரத்து செய்து உடன் மறுதேர்தல் நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும். இதற்கு நாடெங்கும் குரல் கொடுக்க வேண்டும்; நீதி கிடைக்கும் வரைப் போராட வேண்டும்.

குஜராத்தில் வெற்றி என்று கொக்கரித்த பி.ஜே.பி. பேர்வழிகள் இந்த மோசடிக்கு முகத்தை எங்கே வைப்பார்கள்! 
 
நாடே காரித் துப்புகிறது!

Wednesday, December 20, 2017

குஜராத் தேர்தலில் உண்மையில் வென்றது காங்கிரஸ்தான்!



ஆட்சி அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்தையும் பயன்படுத்தியே பி.ஜே.பி. ஆட்சியைப் பிடித்துள்ளது.

உண்மை என்ன?

வாக்கு எண்ணிக்கையன்று முற்பகல் நிலவரப்படி காங்கிரஸ் முன்னிலையில் இருக்க, டில்லி போன்ற பகுதிகளில் காங்கிரஸார் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதன்பின் பி-.ஜே.பி முன்னிலை என்று செய்திகள் வந்தன.

வாக்கு எண்ணிக்கைகளைக் கூர்ந்து நோக்கினால் 25 தொகுதிகளில் காங்கிரஸ் 500 முதல் 2000 வாக்குகளில்தான் தோற்றுள்ளது.

#உண்மையான வித்தியாசம் என்ன?

500 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி என்றால் 251 வாக்குகள் இன்னும் கூடுதலாகப் பெற்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பர். அதாவது உண்மையான வித்தியாசம் 251 வாக்குகள்தான். 2000 வாக்குகள் வித்தியாசம் என்றால் காங்கிரஸ் கூடுதலாகப் பெற வேண்டியது 1001 வாக்குகள்தான்.

#சோதிக்க வேண்டும்

வாக்கு எண்ணிக்கையை மீண்டும் சோதிக்க வேண்டும். அந்த 25 தொகுதிகளிலாவது கட்டாயம் வாக்கு எந்திரங்களைச் சோதிக்க வேண்டும்.
ஆக 25 தொகுதிகள் 15 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றாலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும்.

அது மட்டுமல்ல. மத்திய ஆட்சியின் அதிகாரம், பணம் வாரி இறைக்கப்பட்டது, தேர்தல் ஆணையத்தின் ஆதரவு, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை, காங்கிரஸாரை நெருக்கியது, மோடியின் மோசடிப் பேச்சகள், மதவெறித் தூண்டல் என்ற பலவும் சேர்ந்தும் காங்கிரஸ் இந்த அளவிற்கு வாக்குகளைப் பெற்றிருப்பது, பி.ஜே.பி படுதோல்வியையே காட்டுகிறது.

குஜராத்தை முதல்மாதிரி வளர்ச்சி மாநிலமாகக் காட்டிய பி.ஜே.பி.க்கு இது உண்மையிலேயே பெருந்தோல்வி!

எனவே, குஜராத்தில் உண்மையில் வென்றது காங்கிரஸ்தான்.
இனி என்ன செய்ய வேண்டும்?

குஜராத்திலே மக்கள் நிராகரித்துவிட்டதால், எதிர்க்கட்சிகள், குறிப்பாக கம்யூனிஸ்டுகள் காங்கிரசோடு கூட்டணி அமைத்து, 2019 தேர்தலில் பி.ஜே.பியை வீழ்த்த வேண்டும். வீழ்த்த முடியும்!

இராஜா, கனிமொழி விடுதலை அபாண்ட பழிபோட்ட ஆரிய பார்ப்பனர்களே, ஏற்பட்ட இழப்புகளுக்கு என்ன பதில் சொல்வீர்!

2.ஜி. வழக்கில் தீர்ப்பு!
இராஜா, கனிமொழி விடுதலை
அபாண்ட பழிபோட்ட ஆரிய பார்ப்பனர்களே,
ஏற்பட்ட இழப்புகளுக்கு என்ன பதில் சொல்வீர்!

- மஞ்சை வசந்தன்

நாட்டு மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் செல்பேசி இணைப்பு கிடைக்கச் செய்த இராஜாவை, பதவி இழக்கச் செய்து, அவரையும் கனிமொழியையும் சிறையில் அடைத்து உங்கள் வஞ்சக ஆசைகளை தீர்த்துக்கொண்ட ஆரிய பார்ப்பனர்களே, அதைத் தினம் தினம் மென்று தின்று அசைபோட்ட ஆரிய பார்ப்பன ஊடகங்களே! இதுவரை இராஜா, கனிமொழி தி.மு.க. அடைந்த இழப்பு உளச்சல்களுக்கு என்ன பதில் சொல்வீர்?

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் இந்த அபாண்ட பழியைப் பேசி தி.மு.க.வை தோற்கடித்தீர்களே! இப்போது குற்றவாளிகள் அல்ல என்று தீர்ப்பு வந்துவிட்டது! உங்களால்அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு என்ன பதில் சொல்வீர்? சூடு சொரணையிருந்தால் பதில் சொல்லுங்கள்!

ஆரிய நரிகளே, ஆர்.எஸ்.எஸ். ஆரிய பார்ப்பன கூட்டமே இனி உங்களுக்கு அடுத்தடுத்து தோல்விதான். குஜராத்தில் வெற்றி பெற்றதால் குதிக்காதீர். அங்கே நீங்கள் அடைந்திருப்பது படுதோல்வி! ஆரிய ஆதிக்கம் விரைவில் வீழும்!
இராஜா, கனிமொழி இருவரின் நீதிப் போராட்டத்திறகும், உள்ள உறுதிக்கும் நமது பாராட்டுகள்!

இதே உறுதியுடன் பி.ஜேபியை ஆரிய ஆதிக்கத்தை தி.மு.க. வீழ்த்த உறுதிகொள்ள வேண்டும். திமுக.வினர் ஆர்த்து எழவேண்டும்!

#குறிப்பு: இது பற்றிய விரிவான செய்திகள் நாளை எனது முகநூலிலும், பிளாக்ஸ்பாட்டிலும் காணுங்கள்.

Thursday, December 14, 2017

தமிழ்த் தேசியம் பேசி பெரியாரை எதிர்ப்போர் இந்த வரலாற்று உண்மையை அறிக!

தனித்தமிழ்நாடு கேட்டு போராடியவர் பெரியார்!

பெரியார் பின் சென்ற நாம் தமிழர் கட்சி!

இந்திய யூனியன் படம் எரிப்புப் போராட்டம்

தமிழ்த் தேசியம் பேசி பெரியாரை எதிர்ப்போர் இந்த வரலாற்று உண்மையை அறிக!

- மஞ்சை வசந்தன்
==========================
1960 ஜூன் திங்கள் 5ஆம் நாள் மாலை, தமிழ்நாடு நீங்கலாக இந்திய யூனியன் படம் எரிப்புப் போராட்டம் என்று பெரியார் அறிவித்து விட்டார். “நாடெங்கும் தீவத்தி ஊர்வலமும் நடைபெறும். இது அரசியல் போராட்டமல்ல; இனப் போராட்டம்!

போராட்ட வீரர்களை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்த நான் மே 31, ஜூன் 1, 2, 3, 4 தேகிளில் ரயில்மார்க்கமாகப் பயணம் செய்வேன்’’ என்றும் பெரியார் கூறிவிட்டார். 25.5.1960 “கரண்ட்’’ இதழில் பெரியார் படத்தையும் போட்டு, சுதந்திரத் தமிழ்நாடு தனியாகப் பிரிய வேண்டுமென்ற கோரிக்கைக்காகப் பெரியார் போராட்டம்! இது 23 ஆண்டுகாலமாய் இருந்துவரும் கோரிக்கை வெற்றிக்காகப் பெரியாரின் 1960ஆம் ஆண்டு வேலைத்திட்டம்!

இந்திய யூனியன் பட எரிப்பு (தமிழ்நாடு நீங்கலாக) என்ற செய்தி பிரதான இடத்தில் வெளியிடப்பட்டது.
நாம் தமிழர் இயக்கமும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவெடுத்திருந்தது.

ஆயிரம் வீரர்களாவது சிறை செல்வதாக மட்டுமில்லாமல் உயிரையும் பலி கொடுக்கத் தயாரான தன்னல மறுப்பு உணர்வுடன் வந்தால்தான், இந்தியக் கூட்டாட்சி என்னும் பார்ப்பனப் பிரசிடெண்ட், பார்ப்பனப் பிரதமர் எனும் ஏகபோக ஆட்சியிலிருந்து விலகித் தமிழ்நாட்டைத் தனிச் சுதந்திர நாடாக ஆக்கித் தமிழ்நாடும் தமிழனும் தப்பிப் பிழைக்கலாம் என்றார் பெரியார். தமிழ்நாடு என்ற பெயரை இந்த ராஜ்யத்துக்குச் சூட்டுகின்ற அதிகாரம், சக்தி எல்லாம் டெல்லி ஆட்சிக்கே உண்டு. ஆகையால் தமிழ்நாட்டு அரசோடு முட்டிக்கொள்ளாமல் அநீதிகளுக்குக் காரணமான டெல்லி ஆட்சியின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். தாய்த்திரு நாட்டுக்குத் தமிழ்நாடு என்ற பெயர்கூட இல்லையே என்று கொதிக்கும் உள்ளங்கொண்ட இளைஞர்களே, தோழர்களே, புலவர்களே, பெருமக்களே, எழுத்தாளர்களே, பேச்சாளர்களே நாட பிரிவினையைத் தவிர வேறு வழியில்லை.

ஜுன் 5இல் யூனியன் படத்தை ஒரு கையிலும் தீப்பந்தத்தை மறு கையிலும் தூக்கி ஊர்வலம் வந்து டெல்லி ஆதிக்க ஆட்சிக்குத் தீ மூட்டுங்கள்!

ஊர்வலம் வருவதில் யாருக்காவது வெட்கமோ, பயமோ இருக்குமானால் அவரவர் வீட்டு வாசலில் கொளுத்திவிட்டுப் பெயர் கொடுங்கள்’’ என்றார்.
மே மாதம் முழுவதும் பெரியாரின் இந்த வீர முழக்கம் தமிழகம் முழுவதும் எதிரொலித்தது.

சிகரம் வைத்தது போல் 4.6.1960 நாள் சென்னை திருவல்லிக்கேணிக் கடற்கரையில் டி.எம்.சண்முகம் தலைமையில் மிகப் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடந்தது.

பெரியாரும் கி.வீரமணி அவர்களோடு, நாம் தமிழர் இயக்கத்துச் சார்பில் ஆதித்தனார், ஈரோடு சின்னசாமி, வரதராசன், ஜெயச்சந்திரன் ஆகியோரும் பேசினார்கள். 2 லட்சம் படங்கள் கொளுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்தன. இது பட எரிப்பு அல்ல; படையெடுப்பு என 3.6.1960 ‘விடுதலை’ வர்ணித்தது. ஜூன் முதல் நாள் அமைச்சரவை கூடிற்று. சென்னையில் 41ஆவது பிரிவின் கீழ் ஜூன் 4 முதல் 11 வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஜூன் 5 காலை 10.30 மணியளவில் 151ஆவது தடுப்புக்காவல் சட்டத்தின்படிப் பெரியாரும், வீரமணி, குருசாமி, புலவர் கோ.இமயவரம்பன் ஆகியோரும், ஆதித்தனாரும் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுதும் அன்று பல இடங்களில் தேசப்படங்கள் தீக்கிரையாயின. நள்ளிரவு வரையில் போலுசார் வேட்டையாடி 4000 பேரைக் கைது செய்திருந்தனர். சென்னையில் டி.எம்.சண்முகம், லோகநாதன் உள்ளிட்ட 75 பேர் மீது வழக்குப் போட்டு 24.6.1960இல் ஒரு மாத சிறைத்தண்டனை வழங்கினார்கள்.

ஈரோடு திராவிடர் கழகத் தலைவர் அங்கமுத்து மீது 124ஏ, 153 பிரிவுகளில் வழக்குத் தொடுத்து ஒருமாத சிறை அளிக்கப்பட்டது,

7.7.1960 அன்று.

ஆரியப் பார்ப்பனர்களின் அநியாயம் பாரீர்!


ஆரியப் பார்ப்பனர்கள் தங்களுக்கு உரியது என்றால் அதற்காக எதையும் செய்வர் என்பதற்கு இதோ ஓர் ஆதாரம்.

சமஸ்கிருதம் அவர்கள் மொழி. அதை இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர்கூடப் பேசவில்லை. வழக்கொழிந்த செத்த மொழி. ஆனால், அதைத்தான் இந்தியாவிற்கே ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்கின்றனர்.

அதைப் பரப்ப கோடிக்கணக்கில் செலவிடுகின்றனர். ஆனால், படிக்க யாரும் முன்வருவதில்லை. அப்படியிருந்தாலும் அதை விடாப்பிடியாக வீண் செலவு செய்து பரப்பத் துடிக்கின்றனர்.

அநியாயம் பாரீர்!

ஆந்திராவில் விஜயநகரத்தின் மையப் பகுதியில் “மகாராஜா சமஸ்கிருதக் கல்லூரி’’ உள்ளது. இது திருப்பதி தேவஸ்தான வேதிக் பல்கலைக்கழகத்தில் இணைந்தது.

இந்தக் கல்லூரியில் சமஸ்கிருதம் படிக்கும் மாணவர் ஒரே ஒருவர்தான்.
ஒரு மாணவருக்காக ஒரு கல்லூரி, அதற்கு ஒரு முதல்வர் (Principal), ஒரு அலுவலக ஊழியர், ஒரு கடைநிலை ஊழியர்.

ஒரு மாணவன் சமஸ்கிருதம் படிக்க ஒரு கல்லூரி! லட்சக்கணக்கில் செலவு!
ஆனால், கிராமப்புரங்களில் ஏழைப் பிள்ளைகள் நூற்றுக்கணக்கில் படிக்கும் பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை! கட்டடம் இல்லாமல் மரத்தடியில் மண் தரையில் படிக்கிறார்கள்! ஆரியப் பார்ப்பான் ஆதிக்கம் எங்கே என்று கேட்கும்

“அதிமேதாவிகள்’ இதை அறியட்டும்! சூடு சொரணை பெறட்டும்!

படித்துப் பகிருங்கள்!

#ஆதாரம் : THE HINDU
Date ; 13-12-2017

- மஞ்சை வசந்தன்

Monday, December 4, 2017

வைகோவும், கோவை இராமகிருஷ்ணனும் வழிகாட்டுகிறார்கள்! இது காலத்தின் கட்டாயம்!

உண்மையான திராவிட இயக்கங்கள்
ஓரணியில் சேர்ந்து செயல்பட வேண்டும்!

வைகோவும், கோவை இராமகிருஷ்ணனும் வழிகாட்டுகிறார்கள்!
இது காலத்தின் கட்டாயம்!

வரவேற்கிறோம்; பாராட்டுகிறோம்!

- மஞ்சை வசந்தன்

மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசியல்ரீதியாக இதைச் சிந்தாமல் சிதறாமல் சேர்த்துக் கோர்த்து, ஆரிய ஆதிக்கத்தையும் மதவெறி கொடுஞ்செயல்களையும் அடித்து நொறுக்கி, நல்லிணக்கமும், சம உரிமயும் காக்க வேண்டும். நாட்டுக்கு நல்லாட்சி தரவேண்டும். ஊழலற்ற,  தமிழர் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திராவிட இனத்தின் சரியான வழிகாட்டி. அதற்குரிய அறிவு, ஆற்றல், வயது, முதிர்ச்சி, இணக்கம், தன்னல மறுப்பு என்று அனைத்தும் அவரிடம் உள்ளன.

எனவே, மு.க.ஸ்டாலினும், வைகோவும் அவரின் ஆலோசனையை அடிக்கடிப் பெற்று, அரசியல் நகர்வுகளை செய்ய வேண்டியது கட்டாயக் கடமையாகும். பிஜேபியுடன் எக்காலத்திலும் எச்சூழலிலும் உறவு வைக்க மாட்டோம் என்பதை இவர்கள் உறுதிபட அறிவிக்க வேண்டும்! அதில் உறுதியாக நிற்க வேண்டும்.

மதவாதசக்திகளையும் அதற்குத் துணைபோகும் அ.இ.அ.தி.மு.க. என்ற பி.ஜே.பி.யின் பினாமி கட்சியையும் அடியோடு வீழ்த்தி, உண்மையான திராவிட அரசியல் அமைப்புகளான தி.மு.க., ம.தி.மு.க. இரண்டையும் ஆதரித்து வளர்க்க வேண்டியது தமிழர் ஒவ்வொருவரின் கட்டாயக் கடமையாகும். விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்கள் முன்னமே மிகச் சரியான தடத்தில் செல்வது பாராட்டுக்குரியது. பொதுவுடமைக் கட்சிகள்  சரியான நிலைப்பாடு எடுத்தது வரவேற்கத்தக்கது.

ஊழலா? மதவாதமா? என்றால் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது மதவாதந்தான். ஊழலைக் காட்டி மதவாத்தை வளர்த்துவிடும் எந்தவொரு செயலும் அறிவுக்கும், மக்கள் நலத்திற்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் கேடானது.

மத ஆதிக்க ஆட்சியாளர்களை, அவர்களுக்குத் துணை போகிறவர்களை அப்புறப்படுத்திவிட்டு, ஊழலை ஒழிக்க முற்பட வேண்டும்.

இனி, ஊழல் பேர்வழிகள் அரசியலில் நிலைகொள்ள முடியாது என்பது உறுதியான உண்மை! எனவே, இனி எந்த ஆட்சியாளனும் ஊழல், கொள்ளை செய்யாதவாறு அனைத்து அமைப்புகளும் ஒன்று சேர்ந்து தடுத்துவிட முடியும்!

தமிழ், தமிழர் என்று உணர்ச்சிப் பெருக்கில் முழங்கிவிட்டு, ஆரியப் பார்ப்பனர்களை அரவணைத்து அவர்களைத் தமிழர் என்று ஏற்கும் அணுகுமுறையும்; சாதி உணர்வை சக்தியாகக் கொண்டு சாதனைகளை செய்ய முடியும் என்ற செயல்திட்டங்களும், தப்பான, முதிர்ச்சியற்ற முடிவுகள்.

திராவிட இயக்கங்களை ஒழித்துவிட வேண்டும் என்ற இவர்களின் முயற்சி பி.ஜே.பி. வளர்ச்சிக்கே உதவும். திராவிட ஆட்சி சாதனைகளை அறவே மறைத்து ஊழல், கொள்ளைகளை மட்டுமே பெரிதாகப் பேசுவது சுயநல அரசியலே! திராவிட ஆட்சிகளின் தப்புகள் களையப்பட வேண்டியவை. மாறாக திராவிடக் கட்சிகள் ஒழிக்கப்பட வேண்டியவை அல்ல.

இந்த இரு தரப்பாரும் நல்லவர்களாய், வல்லவர்களாய், நேர்மையானவர்களாய், போராளிகளாய் இருந்தாலும், இந்த அடிப்படைத் தவற்றால் வரலாற்றுப் பிழை செய்கின்றவர்களாகவே ஆவர். அவர்கள் இத்தவற்றை உணர்ந்து தங்களைச் சரியான பாதையில் செலுத்தினால், அவர்கள் எதிர்காலத்தில் தமிழர்களின், தமிழர் மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவாக்ள் என்பதோடு, அரசியலில் நல்ல மாற்றாகவும் அவர்கள் அமைய முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இவர்கள் பி.ஜே.பி. எதிர்ப்பில் உறுதியாக இருக்க வேண்டும். அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்!  இது இவர்களின் எதிர்காலத்திற்கும் நல்லது. தமிழர்க்கும் நல்லது.

ஆனால், அ.இ.அ.தி.மு.க.வை ஓ.பி.எஸ்., எடப்பாடி இருவரும் அடகுவைத்து விட்டார்கள். இனி அந்தக் கட்சியில் உள்ள தமிழர் உணர்வுள்ள தொண்டர்கள் அனைவரும் தி.மு.க.விலோ அல்லது ம.தி.மு.க.விலோ இணைந்து விடுவதே அவர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் நன்மை தரும்! மேலே சொன்னவை கசப்பானவையாக இருந்தாலும் அவையே சரியான மருந்து. உணர்ச்சிவசப் படாமல் அறிவு வயப்பட்டு சிந்தித்தால் உண்மை விளங்கும்!

=====

Saturday, November 18, 2017

இந்தியா இஸ்லாமிய நாடாக ஆகிவிடுமாம்! அச்சமூட்டி ஆதரவு பெறத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.



- மஞ்சை வசந்தன்

என்னுடைய முக நூலை 16.11.2017 அன்று இரவு 9 மணியளவில் பார்த்தேன். என்னுடைய பதிவுகளைப் பார்ப்பதற்கு முன், மற்றவர் பதிவிடுவதை முதலில் படிப்பேன். அந்த வழக்கத்திலே நேற்று பார்த்த போது ஒருவர் (பெயர் சொல்லி அவரை விளம்பரபடுத்த விரும்பவில்லை) செய்திருந்த பதிவைப் படித்தேன். அவர் நிச்சயமாக ஆர்.எஸ்.எஸ். இல் பயிற்சி பெற்றவராகத்தான் இருக்கமுடியும். இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ். தரும் போதையில் மயங்கி பிதற்றுகிறவராக இருக்கமுடியும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

இவருடன் ஒரு பகுத்தறிவாளர் பேசுவதாக ஒரு கற்பனைப் பாத்திரத்தை இவரே உருவாக்கிக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். பலவருடங்களாய் பரப்பி வரும் உண்மைக்கு மாறான, அச்சம் உருவாக்கும் ஒரு நச்சுக் கருத்தை இவர் பரப்பியிருக்கிறார். எனவே இக்கருத்துக்கு பதில் சொன்னால், பலவகையில் அது தெளிவையும் பயனையும் பலருக்கும் தரும் என்பதோடு, ஆர்.எஸ்.எஸ். பித்தலாட்டத்தை நொறுக்கப் பயன்படும் என்பதால் இதை எழுதுகிறேன்.

அந்த நபர் பதிவில் குறிப்பிட்டுள்ளதை முதலில் சொல்லி, பின் எனது மறுப்பை சொல்ல விரும்புகிறேன்.

“இன்று ஒரு பகுத்தறிவாள நண்பர், கும்பகோணம் வந்திருந்தவர் என்னை தொடர்பு கொண்டு சந்திக்க விருப்பம் தெரிவித்தார். மாலை 5 மணிக்கு மேல் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இருந்தேன். எனக்காக காத்துக் கொண்டு இருந்தார். வயதில் பெரியவர். ஐம்பது ப்ளஸ் இருக்கும். இனிமையாக பேசினார்.

அவர் சுருக்கமாக என்னைப் பற்றி கூறிய வார்த்தை ரசிக்கும் படியாக இருந்தது. வழி தவறிப் போன வெள்ளாடு நீங்கள் என்றார். நான் சிரித்துக் கொண்டே செம்மறி ஆடு என்றேன். அதில் பொதிந்து இருந்த பொருளை புரிந்து கொள்ளும் அளவிற்கு ஞானம் இருந்தது. சிரித்து அதை வெளிப்படுத்தினார். “இந்துத்வ ஆதரவு வேண்டாம். அது மக்களுக்கு கேடு விளைவிக்கும். சமதர்ம பாதையை நோக்கி எழுதுங்கள். சமத்துவம் திகழ வேண்டும். அண்ணலையும், தந்தையையும் போற்றுங்கள். சாதி, மதம் ஒழிய வேண்டும்’’ என்று நிறைய பேசினார்.

கிட்டத்தட்ட அவர் முழுக்க பேசி முடித்ததும் 45 நிமிடங்கள் கடந்து விட்டு இருந்தன. நீங்கள் ஏன் எதுவுமே பேச வில்லை? ஏதாவது சொல்லுங்கள் என்றார். எனக்கு நேரம் ஆகி விட்டது. இருந்தாலும் ஒன்றே ஒன்று கேட்கிறேன். யோசித்து விட்டு பிறகு பேசுங்கள், என்றேன். சொல்லுங்கள் என்றார்.

இந்துத்துவம் 2000 வருடமாக சாதியை முன்னிறுத்துகிறது. மக்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்கிறீர்கள். சரி, அது ஒரு புறம் இருக்கட்டும். இஸ்லாமிய அடிப்படை வாதமான வஹாபியஸம் உள்ளிட்டவற்றின் மீது உங்கள் பார்வை என்ன? என்று கேட்டேன். முற்றிலும் எதிர்க்கிறேன். எல்லா மதமும் எதிர்க்க வேண்டியவை. மனிதர்க்கு மதமே தேவையில்லை என்றார்.

யூஷுவலான பதில், எதிர்பார்த்தது தான். ஒரே ஒரு கேள்வி உங்களிடம் கேட்கிறேன். உள்ளத்தை தொட்டு பதில் சொல்லுங்கள் என்றேன்.

2000 வருடமாக ஆதிக்கம் செலுத்திய பின்னரும் இந்துத்வாவை எதிர்த்து உங்களால் இந்த மண்ணில் பேச முடிகிறது. இந்து மத விரோத கருத்துகள் சொல்லி விட்டு இந்துக்களை ஆள முடிகிறது. இதே போல், இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு நாட்டில், ஆட்சியில் இருக்க வேண்டாம். ஒரு சாதாரண குடிமகனாகக் கூட இஸ்லாம் உட்பட எந்த மதமும் வேண்டாம் என்று சொல்ல முடியுமா என்றேன்.

சற்று திகைத்து நின்று உடனே சுதாரித்துக் கொண்டார். நான் எதிர்பார்த்த அதே பதிலை கூறினார். “அவை வேறு நாடுகள். நம் போன்ற நாகரிகம் இல்லா நாடுகள். அவற்றை நம் நாட்டோடு பொருத்திப் பார்க்கக் கூடாது’’ என்ற ரீதியில் பதில் அளித்தார்.

மறுபடியும் ஒரு புன்னகையுடன் சொன்னேன். சுதந்திரத்துக்கு முன் இருந்த மக்கள் தொகையை ஒப்பிடும்போது இப்போது படிப்படியாக இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெரியுமா என்றேன்.

“இதே வேகத்தில் போனால், இன்னும் ஐம்பது வருடங்களில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர் இந்நாட்டில் சரிசமமாக இருப்பார்கள். அடுத்து வரும் சில வருடங்களில் இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாத்திகர், இப்போது உள்ள இதே சுதந்திரத்துடன் பேச முடியுமா? எல்லா மதமும் ஒழிய வேண்டும், அதாவது இஸ்லாம் உட்பட எல்லா மதமும் ஒழிய வேண்டும் என்று சொல்ல முடியுமா? அப்படி சொல்ல முடிகிற ஏதாவது ஒரு நாட்டை உலகில் நீங்கள் காட்ட முடியுமா?”

அவர் வெறித்துப்பார்த்து ஏதோ பேச வந்தார். இடை மறித்தேன்.

“இப்படிப்பட்ட ஒரு நிலை இந்நாட்டிற்கு வரக் கூடாது என்று விரும்புகிறவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் அதற்காக செயல்படுகிறவர்கள் இந்துத்துவ அமைப்பினர் மட்டும்தான். இந்துத்வாவில் உள்ள குறைகளை கூறுங்கள். அது வேறு. ஆனால் அவர்களை பலவீனப்படுத்த முயற்சி செய்யாதீர்கள். பிறகு நாளை உங்களைக் காப்பாற்ற வேறு ஆள் இல்லாமல் போய்விடும். இந்நாட்டு நாத்திகர்களுக்குக் கூட தேவையான ஒன்று இந்துத்வம் அதை ஒழிக்க நினைப்பதும் தற்கொலை செய்து கொள்வதும் ஒன்று. நீங்கள் தற்கொலை செய்து கொள்ள எனக்கு ஆட்சேபனை இல்லை. நான் வாழ நினைக்கிறேன்.” இதுவே அவர் செய்துள்ள பதிவு.

இந்த நபரின் முதன்மை நோக்கம் இஸ்லாமியர்கள் அதிகளவில் பெருகி பெரும்பான்மையினராகி, இந்துக்களை அடக்கி ஆள்வார்கள். இஸ்லாமிய அடக்குமுறை இறுதியில் வந்து இந்துக்களெல்லாம் அடிமைகளாக ஆகி அல்லல்படுவார்கள் என்று இந்துக்களை அச்சமூட்டி இஸ்லாமியர் மீது வெறுப்பும், விரோதமும் கொள்ளச் செய்வதேயாகும்.

இதற்கு இவர் தேர்வு செய்த எதிராளி பகுத்தறிவாளர்.  பகுத்தறிவாளர் என்று அவர் சொல்ல வருவது திராவிடக் கழகத்துக்காரர் என்பதே!

பகுத்தறிவாளராகவோ, திராவிடர் கழகத்தவராகவோ உண்மையில் ஒருவர் இவரைச் சந்தித்திருந்தால் இவரது பேச்சைக் கேட்டு வாயடைத்து போயிருக்க மாட்டார்.

இவரின் பித்தலாட்டத்தை அக்கு அக்காய் அலசி, அவர் முகத்திலேயே காயவிட்டிருப்பார். எனவே, இவர் கருத்தைத் திணிக்க இவர் ஓர் பகுத்தறிவாளரை உருவாக்கிக் கொண்டு அவரை சிந்திக்க வைத்துவிட்டதாகக் காட்டி, இந்துத்துவா பிரச்சாரம் செய்துள்ளார்.

இந்த நபருக்கு மட்டுமல்ல, இப்படிப் பேசித் திரியும் அத்துணை மோசடிப் பேர்வழிகளுக்கும் சில விளக்கங்களை இதன்வழி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இஸ்லாமியர்கள் இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக ஆக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஆங்கிலேயர் இந்தியாவிக்குள் வருவதற்கு முன்பே, அவர்களிடம் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆட்சியிருக்கும்போதே அதைச் செய்திருப்பார்கள். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அக்பர் போன்று இந்து மதத்தை மதித்த இஸ்லாமிய மன்னர்கள் உண்டு. இறுதியில் வந்த திப்புசுல்தான் கூட அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. அந்த திப்புசுல்தானைப் பற்றியே அபாண்ட அவதூறுகளைப் பரப்பி இந்துக்கள் வெறுக்கும்படியாகச் செய்கின்ற மோசடிப் பேர்வழிகள்தான் ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் இந்துத்வா பேர்வழிகளும்.

இஸ்லாமியர்களும் இந்துக்களும் அண்ணன் தம்பி, மாமன் மச்சான் முறையில் தான் இவ்வளவு காலமும் பழகி வருகிறார்கள். இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்ட முடியும். அப்படிப்பட்ட நல்லிணக்கத்தை நொறுக்கி எதிர் எதிராய் மோதவிட்டால், மதவெறி ஏறி இந்துக்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். பின்னால் வந்துவிடுவார்கள் என்பது இந்த இந்துத்வா பேர்வழிகளின் நப்பாசை!

எனவே, இந்த நப்பாசைப் பேர் வழிக்கு பதில் சொல்லுவதன் மூலம், ஏராளமானவர்களுக்கு இதில் ஓர் தெளிவை உண்டாக்க சில உண்மைகளைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கீட்டு ஆவணங்களிலிருந்து முதலில் சில விவரங்களை தந்து விளக்க விரும்புகிறேன்.

1951 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி:

இந்துக்கள் 84.1%
இஸ்லாமியர்கள் 9.8%

1961 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி:
இந்துக்கள் - 83.4%
இஸ்லாமியர் - 10.7%

1971 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி:
இந்துக்கள் - 82.7%
இஸ்லாமியர் - 11.4%
1981 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி:
இந்துக்கள் - 82.6%
இஸ்லாமியர் - 11.4%
1991 கணக்கீட்டின்படி:
இந்துக்கள் - 82.0%
இஸ்லாமியர் - 12.1%

2001 கணக்கீட்டின்படி:
இந்துக்கள் - 80.5%
இஸ்லாமியர் 13.4%
2011 கணக்கீட்டின்படி:
இந்துக்கள் - 79.80%
இஸ்லாமியர் - 14.23%
60 ஆண்டுகளில் இந்துக்கள் இஸ்லாமியர்களின் சதவீதத்தில் பெரிய அளவில் குறைவோ உயர்வோ இல்லை.

1951 இல் 10% ஆக இருந்த இஸ்லாமியர்கள் சதவீதம் 60 ஆண்டுகளில் 4% மட்டுமே உயர்ந்துள்ளது.

1961இல்            இந்துக்கள் தொகை              36,65,26,886
இஸ்லாமியர்கள்   4,69,40,799

2011இல்            இந்துக்கள்    96,62,57,353
இஸ்லாமியர்கள்   17,22,45,158
ஆக 50 ஆண்டுகளில், 36.5 கோடியாக இருந்த இந்துக்கள் 96.5 கோடியாக உயர்ந்துள்ளார்கள்.

4.5 கோடியாக இருந்த இஸ்லாமியர்கள் 17 கோடியாக ஆகியிருக்கிறார்கள்.

உண்மை இப்படியிருக்க இன்னும் 50 ஆண்டுகளில் அப்படியே இஸ்லாமியர் பெருகி இது இஸ்லாம் நாடாக ஆகிவிடும் என்பது அயோக்கியத்தனம் அல்லவா?

வஞ்சகப் பேர் வழிகள் எவ்வளவு வாஞ்சையாக மக்கள் மனதில் நஞ்சை ஏற்றுகிறர்கள் என்று பாருங்கள்.

எனவே, இந்துக்கள் நலம் விரும்பிபோல் நயவஞ்சகமாய் பேசி, இந்துத்வாவை பரப்பி, ஆரிய ஆதிகத்தை சமஸ்கிருதத் திணிப்பைச் செய்ய இவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். அதற்கு இவரைப் போன்றவர்கள் எல்லா, இடங்களிலும் ஊடுறுவியுள்ளனர். எச்சரிக்கையாய் இருந்து மத இணக்கம் காக்க வேண்டியது மக்கள் கடமை, பகுத்தறிவாளர்கள் பணி ஆகும்.

இதில் இன்னொரு முக்கிய கருத்து என்னவென்றால் பகுத்தறிவாளர்!

“சமதர்ம பாதையை நோக்கி எழுதுங்கள். சமத்துவம் நிகழ வேண்டும். அண்ணலையும் (அம்பேத்கர்), தந்தையையும் (பெரியாரையும்) போற்றுங்கள். சாதி, மதம் ஒழிய வேண்டும்” என்று சொன்னதுபற்றி இவர் மூச்சுவிடவே இல்லை!

இந்த நபருக்கு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்ல வேண்டும்.

இந்துமதம் என்பது எது? அதன் நூல் எது? அதன் கடவுள் எது? அதன் கொள்கைகள் எவை? இவரால் கூறமுடியுமா?

இந்துமதம் என்பதே இல்லாத ஒன்றை வைத்து செய்யும் பித்தலாட்டம். எதிர் எதிர் கொள்கை உடையவர்களை வைத்துக் கொண்டு இந்துக்கள் என்று கூட்டு சேர்க்கும் மோசடி வேலை.

இவர்கள் கருத்துப்படி இந்து மதத்தவர்களிலே ஒருவர் உயர்ந்தவர். இன்னொருவர் தீண்டப்படாதார். சமஸ்கிருதம் தேவை பாஷை, தமிழ் நீசபாஷை என்று பேதம் சொல்லப்படும் போது, அதை எப்படி எல்லோரும் ஏற்கமுடியும்?

இந்துமதம் தான் பாதுகாப்பு என்கிறார் இவர். இந்துமதம் தான் அத்தனை அழிவிற்கும் காரணம் என்பதை மறைக்கிறார். நாம் மதமே வேண்டாம் என்கிறோம். ஆசியாவில் ஆட்சியில் மதமே கூடாது என்கிறோம். அதை கேட்டு மக்கள் திரளவேண்டும்!

அதை மறைத்து, வேறுவகையில் திசை திருப்பி தன்கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். இது தான் ஆர்.எஸ்.எஸ். மூளை என்பது. அவர்களிடம் எச்சரிக்கையாய் இருப்பதே நமது பகுத்தறிவுக்கு அழகு.
====

Friday, November 17, 2017

எம்.ஜி.ஆர் மக்கள் தலைவர்! கமலும், இரஜினியும் இரசிகர்களின் தலைவர்கள்!

இந்த வேறுபாடு புரியாததாலேதான் கமலகாசன், இரஜினிகாந்த் போன்ற சினிமா நடிகர்கள் அரசியல் நுழைவு, ‘காற்றுள்ள போதே தூற்ற வேண்டும்’ என்ற முனைப்பேயன்றி வேறில்லை.

எம்ஜிஆர் தி.மு.கழகத்தோடு தன்னைப் பின்னிப் பிணைத்துக் கொண்டு வளர்ந்து, திரையின் வழி, பொதுமக்களின் உள்ளத்தில் இடம் பிடித்தார். அவருடைய கொடையுள்ளமும், ஏழைகளின் மீதான பற்றும் அவரை அந்த இடத்தில் அமர்த்தின.

எம்ஜிஆரின் செல்வாக்கால் வந்த அ.தி.மு.க.வை அப்படியே கைப்பற்றிக் கொண்டதால்தான் ஜெயலலிதாவால் அரசியலில் வெல்ல முடிந்தது.

ஆனால், கமலும், இரஜினியையும் இந்த இரண்டு வகையிலும் வராதவர்கள் இரசிகர்களின ஆதரவை நம்பி அரசியலுக்கு வரத் துடிக்கிறார்கள். கமலின் அண்ணன் சாருகாசன் மிகச் சரியாகச் சொல்கிறார். அதுதான் நடக்கும். பிரகாஷ் இராஜ் எதிலும் சரியாகக் கருத்து கூறுகிறார்.

கமல், இரஜினி என்ற இந்த இரு நடிகர்களுக்கும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், தொண்டு அமைப்புகளை நிறுவி தொண்டு செய்ய வேண்டும்; ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை போராட்டங்கள் மூலம் நீக்க வேண்டும்; ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மக்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். இதைச் செய்யாது அரசியலுக்கு வருவது பதவியாசையேயன்றி வேறில்லை! 

தமிழக மக்கள் இனி மிகவும் விழிப்பாக இருப்பார்கள்!
===

Saturday, November 4, 2017

ஜெயமோகனுக்கு “சவுக்கடி’’ கொடுத்த எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிற்கு நமது பாராட்டுகள்!

ஜெயமோகனுக்கு “சவுக்கடி’’ கொடுத்த 
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிற்கு நமது பாராட்டுகள்!
======================
ஆதவன் தீட்சண்யா, ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்து இடதுசாரி எழுத்தாளராய் அறியப்படுபவர். ஆழமான சிந்தனையாளர். அர்த்தமுள்ள எழுத்தாளர்.
இவரைப்பற்றி எழுத்தாளர் ஜெயமோகனிடம் கேட்டற்கு,
“ஆதவன் தீட்சண்யாவை எழுத்தாளர் என்று பொருட்படுத்த முடியாது’’ என்று பதில் அளித்துள்ளார்.
அதற்கு ஆதவன் தீட்சண்யா,
“என்னையும் அவரைப்போன்ற எழுத்தாளர் என்று சொல்லியிருந்தால் அது எவ்வளவு பெரிய அவமானம் எனக்கு? காலாகாலத்துக்கும் துரத்தும் அந்தத் தீராப்பழி எனக்கு நேராததற்கு மகிழ்ச்சிதான்!’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
ஜெயமோகன் என்ன எழுத்தாளர்களுக்கு மிஷிமி முத்திரை வழங்கும் ஆளா?
ஒரு எழுத்தாளரிடம் மற்றொரு எழுத்தாளரைப் பற்றி கேட்கையில், மரபின் மாண்புகூட சிறிதும் இன்றி, மமதையில், மனதில் உள்ள வெறுப்பைக் கொட்டியுள்ளார் ஜெயமோகன்.
ஆர்.எஸ்.எஸ். மதவாத பாஸிஸ சித்தாந்தங்களை இளைய தலைமுறைக்கு தேன்தடவி தரும் மோசடிப் பேர்வழி ஜெயமோகன். மாற்றுச் சிந்தனையாளர்களை குறிப்பாக திராவிட இயக்க, மார்க்சிய சிந்தனையாளர்களை “ஒன்றுமில்லை’’ என்பதே இவரது பிறவித் தொழில்.
பெரியாரையே வைக்கம் வீரர் இல்லை என்றவர் இந்த ஜெயமோகன். அவருக்குப் பதில் தந்து நான் எழுதியதற்கு இதுவரை பதில் எழுத வக்கற்ற இவர் இன்னொரு எழுத்தாளரை ஒதுக்கித் தள்ளி உதாசீனப்படுத்துவது அற்பத்தனம்! அசல் அற்பத்தனம்!
அவருக்கு ஆதவன் தீட்சண்யா கொடுத்த பதிலே அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், அதுவும் மானமுள்ள எழுத்தாளர், மாண்புள்ள எழுத்தாளர் என்பதற்கு அடையாளம்.
ஆதவன் தீட்சண்யாவிற்கு நமது பாராட்டுகள்!

ஆரிய நரித்தனங்களின் (அயோக்கியத்தனங்களின்) அச்சு வடிவமே “துக்ளக்“!

ஆரிய நரித்தனங்களின்
(அயோக்கியத்தனங்களின்) 
அச்சு வடிவமே “துக்ளக்“!
========================
நடுநிலையில் நடப்பதாய், நியாயங்களைக் கூறுவதாய்ச் சொல்லிக்கொண்டு, பித்தலாட்டப் பிரச்சாரம்தான் துக்ளக்கில் செய்யப்படுகிறது.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் மோடியின் மத்திய ஆட்சியின் பாஸிச நடவடிக்கைகள் அனைத்தையும் மறைத்து திரித்து நல்லனவாகக் காட்டும் மோசடிப் பிரச்சாரங்கள்; மதச் சிறுபான்மையினரை வெறுத்து ஒதுக்கும் சிறுமை; இந்துத்வா வெறியர்கள் செய்யும் அநியாயங்களை மூடிமறைக்கம் முயற்சி, திராவிட இயக்கங்களின் மீது அவதூறுகள், மனிதநேய அமைப்புகளை தேச விரோத அமைப்புகளாய் சித்தரிக்கும் மோசடி.
இப்படிப்பட்ட “துக்ளக்“ இதழின் வாசகர்களாய் ஏமாறும் தமிழர்கள் எச்சரிக்கையாய் அதிலிருந்து விடுபட வேண்டும்! “விஜயபாரதம்“ என்ற ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை இதைவிட மோசடியானது.
எனவே, “துக்ளக்“, “விஜயபாரதம்“ இரண்டையும் தமிழர்கள் வாங்கக் கூடாது, படிக்கக் கூடாது! இதில் உறுதியாய் இருக்க வேண்டும்.
இச்செய்தியை எல்லோருக்கும் பரப்புங்கள். எச்சரிக்கையாய் இருங்கள். தமிழர்களிடம் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், ஆரியர்களிடம் ஏமாறக் கூடாது! எச்சரிக்கை!

Monday, October 16, 2017

பி.ஜே.பி. படுதோல்வி! டெபாசிட் இழப்பு! சரிவு தொடங்கிவிட்டது!


மோசடிப் பிரச்சாரத்தால் வந்த மோடி ஆட்சி மீது மக்கள் கோபம்!

பஞ்சாபில் குதாஸ்பூர் பார்லிமென்ட் தேர்தலில் பி.ஜே.பி. படுதோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

4 முறை வென்ற தொகுதியிலே பி.ஜே.பி. அடைந்துள்ள படுதோல்வி அதன் வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.

அதேபோல் கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பி.ஜே.பி. 4ஆவது இடத்தில் வந்து, டெப்பாசிட்டையும் இழந்துள்ளது. காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது!

மதவாத பாஸிச சக்திகள் விரைவில் வீழும். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாய் இருந்து வீழ்த்திக் காட்ட வேண்டியது கட்டாயக் கடமையாகும்!

Sunday, October 15, 2017

நிலவேம்புக் குடிநீரை 3 மணி நேரத்திற்குள் பருகிவிட வேண்டும்

நிலவேம்புக் குடிநீரை 3 மணி நேரத்திற்குள் பருகிவிட வேண்டும்.
 காலம் தாழ்த்தி பல மணி நேரம் கழித்துப் பயன்படுத்தக் கூடாது!
1. 9710105678
2. 9710205678
என்ற எண்களுக்கு “மிஸ்டு கால்” கொடுத்தால் நம் வீட்டிற்கே நிலவேம்புச் சூரணம் வந்து சேரும். இம்மருந்தை 50% தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது “இம்ப்காப்ஸ்”. 100 கிராம் நிலவேம்புக் குடிநீர் சூரணம் ரூ.213. 50% தள்ளுபடியில் ரூ.106க்குத் தரப்படுகிறது.
நிலவேம்புக் குடிநீர் எப்படி தயாரிப்பது?
இரண்டு ஸ்பூன் நிலவேம்புச் சூரணத்தை இரண்டு டம்ளர் தண்ணீரில் கலக்கி, அடுப்பில் இளஞ்சூட்டில் (சிம்மில் சூடேற்றி) ½ டம்ளராகச் சுண்டிய பின் அதைப் பருக வேண்டும்.
பருக வேண்டிய அளவு
ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கக் கூடாது.
3 முதல் 12 வயது - 15 மில்லி
பெரியவர்கள் - 50 மில்லி
காலை, மாலை இருவேளை 5 நாள்களுக்குக் குடிக்க வேண்டும்.
வயிற்றுப் புண் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி நடக்க வேண்டும்.

தேவாசுரப் போர்கள் தெரிவிக்கும் உண்மைகள்!



- மஞ்சை வசந்தன்

புராணங்கள், இதிகாசங்கள், கற்பனை கதைப்புகளின் களம்தான் என்பது உண்மையானாலும், அந்தக் கற்பனைகளின் அடித்தளம் வரலாற்று நிகழ்வுகள்தான் என்பதை நுணுகிநோக்கின் அறியலாம்.

ஆரியர்கள் அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள். தமிழர்கள் (திராவிடர்கள் இந்த மண்ணின் மக்கள். அயல்நாட்டிலிருந்து வந்தவர் என்பதால் அவர்களுக்கென்று சொந்த நிலம் இல்லை. எனவே, தமிழர்களிடம் நிலத்தைத் கொடையாகப் பெற்றே தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டனர்.

அக்காலத்தில் நிலப்பரப்பு மிகுதி; மக்கள் மிகவும் குறைவு. எனவே, ஆரியர் தமிழர் நிலங்களை மெல்ல மெல்ல கைப்பற்றுவது எளிமையாய் நடந்தது. அவ்வாறு அவர்கள் கைப்பற்றிய இடங்களில் குழுக்களாய் வாழ்ந்தனர்.

ஆரியர் நுழைவு அதிகரிக்க, நில அபகரிப்பும் அதிகரித்தது. ஆரியர்கள் இந்தியாவெங்கும் பரவினர். இதனைத் தமிழர்கள் எதிர்க்க, ஆரிய-திராவிட மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல்தான் தேவாசுரப் போர் என்று புராணங்களில் எழுதப்பட்டன.

ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து பரவிய தொடக்க காலங்களில் பசு மாட்டுக் கறியைத்தான் அதிகம் உண்டனர். சோமபானம், சுரபானம் என்ற இரண்டு போதை பானங்களைக் குடித்தனர். சுரபானம் குடித்தமையால், ஆரிய பார்ப்பனர்கள் “சுரர்கள்” என்று அழைக்கப் பட்டனர். ஆரியர் அல்லாத தமிழர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

சுத்தம் எதிர்ச்சொல் அசுத்தம் என்பதுபோல்

சுரர் என்பதன் எதிர் இனத்தார் அசுரர் எனப்பட்டனர்.

பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்று இன்று நாம் அழைப்பதுபோல், அன்று சுரர், சுரர் அல்லாதவர் (அசுரர்) என்று அழைக்கப்பட்டனர்.

பூதேவர் - பூசுரர்

“விண்ணுலகில் தேவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் மண்ணுலக தேவர்கள்” என்று ஆரியர்கள் தங்களைப் பெருமையாகக் கூறிக்கொண்டனர். மண்ணுலக தேவர்கள் என்பதை பூதேவர் என்றனர். சுரபானத்தை இந்திரன் கூறியதற்கிணங்க ஆரியர்கள் குடித்ததால், பூசுரர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டனர். குடிகாரர்கள் என்ற இழுக்கு வரக்கூடாது என்பதற்காக இந்திரன் கூறித்தான் குடித்தோம் என்று பின்னாளில் கூறிக் கொண்டனர். இதுதான் ஆரியப் பித்தலாட்டம் என்பது.

இந்தச் சொற்களின் பயன்பாட்டிற்கான உட்பொருள் என்னவென்றால், விண்ணில் உள்ள கடவுள்கள் விண்ணுலக தேவர்கள். ஆரியப் பார்ப்பனர்கள் மண்ணுலகில் தேவர்கள் என்பதேயாகும்.

திராவிடர்-ஆரியர் மோதல்:

தமிழரின் இனப் பெயர் திராவிடர் என்பது. தமிழர்களை ஆரியர்களிடமிருந்து பிரித்துக்காட்ட திராவிடர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

திராவிடர்-ஆரியர் போர்கள் இரு முதன்மைக் காரணங்களுக்காக நிகழ்ந்தன.

1. மண்ணுரிமை - பாதுகாப்பு

2. பண்பாட்டுரிமை - பாதுகாப்பு

1. மண்ணுரிமை

தமிழர்கள் (திராவிடர்கள்) முழுக்க முழுக்க இந்த மண்ணின் உரிமையாளர்கள். ஆரியர்கள் அயல்நாட்டார் என்பதால் நிலங்களைத் கொடையாகப் பெற்றே தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டனர்.

காலப்போக்கில் கொடையாகப் பெறுவதற்குப் பதிலாய் கைப்பற்றி உரிமை கொள்ள முற்பட்டனர். அதனைத் தமிழர்கள் எதிர்க்க இரு இனத்திற்கும் இடையே போர் நிகழ்வது தொடர்ந்து நடந்தது.

2. பண்பாட்டுரிமை

தமிழர்கள் சாதியற்ற, மூடநம்பிக்கை யற்ற அறிவுசார் வாழ்க்கைக்கு உரியவர்கள். தமிழர்களுக்கு இயற்கையாய் இனப்பலம், நிலப்பலம், உடற்பலம் இருந்தது. எனவே, தமிழர் வீரத்தில், போர்த்திறத்தில் நம்பிக்கை உடையவர்கள். ஆரியர்களுக்கு இம்மூன்றும் இல்லை. எனவே, அவர்கள் யாகம், பலி, சடங்குகள் என்று மூடச் செயல்களின் மூலம் பலம் பெற முயன்றனர்.

நேருக்கு நேர் உடல் வலிமைகாட்டிப் போராடி, ஆரியர்களால் வெல்ல முடியாது என்பதால், இயற்கை வழிபாடு, யாகம் போன்றவற்றின் வழி வெற்றி பெற முயன்றனர்.

அந்த யாகங்களை தமிழர்கள் அழித் தனர். இராமாயணத்தில்கூட, ஆரியர்கள் தங்கள் யாகத்தை அழிக்கும் தாடகையை அழிக்க வேண்டும் என்று இராமனைத் துணைக்கழைத்ததை அறியலாம்.

தாய்வழிச் சமுதாயம்:

தமிழர்கள் பெண்களை பெரிதும் மதித்தனர். சொத்து, ஆளுகை எல்லாம் பெண்களிடம்தான் இருந்தது. அந்த அடிப்படையில்தான் தமிழ்ப் பெண்ணான தாடகை படைக்குத் தலைமையேற்று ஆரியர் யாகத்தை அழித்தாள்.

தாடகை வதம்:

ஆக, தாடகை வதம் என்பது தமிழ்த் தலைவியை வதைத்தல் என்பதே ஆகும். புராணங்களையும், இதிகாசங்களையும் ஆய்வு செய்தால் நிறைய ‘யாக’ அழிப்புகள் நடந்ததாய் கூறப்பட்டிருக்கும் அதன் உட்பொருள் இதுதான். வீரத்தின் மீது நம்பிக்கை கொண்டது தமிழர் பண்பாடு. மூடச் சடங்குகளின் வழி சக்தி பெறலாம் என்பது ஆரியக் கலாச்சாரம். இந்த இரண்டிற்கும் இடையேயான போர்தான் யாக அழிப்பு, யாக காப்பு முயற்சிகள்.

அசுரர்-தேவர் போர்கள்

மாவலி, நரகாசுரன், சூரபதுமன், இரணியாட்சதன் போன்றவர்கள் அசுரர்களாய் புராணங்களில் சுட்டப்படுவதைக் காணலாம். இவர்களோடு எதிர்த்துப் போரிட்டவர்கள் யார் என்றால், மகாவிஷ்ணு, முருகன், இந்திரன் போன்ற கடவுள்கள். இதன் உட்பொருள் என்ன?

தமிழர்கள் பலசாலிகள், வீரம் நிறைந் தவர்கள், மண்ணின் உரிமையாளர்கள், மக்கள் பலம் உடையவர்கள். எனவே, அவர்களைச் சிறு கூட்டமான ஆரியர்கள் போரிட்டு வென்றதாய்க் கூறமுடியாது என்பதால், ஆரியர்களுக்குத் துணையாய் ஆண்டவர்களே வந்தார்கள் என்று கூறப்பட்டது.

மண்ணுரிமைப் போர்:

வாமன தத்துவம் என்ன?

மாவலி கதையைக் கூர்ந்து ஆய்ந்தால், அது ஒரு மண்ணுரிமைப் போர் என்பது விளங்கும்.

வாமனன் நிலத்தைக் கொடையாகக் கேட்டான் என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன?

ஆரியர்கள் நிலத்தை தமிழர்களிடம் கொடையாகப் பெற்றே பயன்படுத்தினர் என்பதுதான். அந்த அடிப்படையில்தான் ஆரியர்கள் மாவலியிடமும் நிலத்தைக் கொடையாகக் கேட்டனர்.

வாமன அவதாரம் என்பதன் உட்பொருள் என்ன?

“வாமன” என்றால் “சிறு” என்று பொருள். ஆரியர்கள் சிறுபான்மையினர் என்பதன் அடையாளமாகத்தான் வாமன அவதாரம் புனையப்பட்டது. சிறுபான்மையினரான ஆரியர்கள் அயல்நாட்டவர் என்பதால், மண்ணின் சொந்தக்காரர்களான தமிழர்களிடம் நிலத்தைக் கொடையாகக் கேட்டனர் என்பதே அதன் உள்பொருள், உள்ளடக்கம் எனலாம்.

மாவலியின் அமைச்சர், “கொடையாக நிலத்தை ஆரியர்களுக்குக் கொடுக்காதே, கொடுத்தால் உனக்குக் கேடு” என்று எச்சரித்தார். ஆனால் மாவலி, பிச்சை கேட்பவனுக்குக் கொடுக்க வேண்டும் என்ற பேருள்ளத்தில் கொடுத்தான். மெல்ல மெல்ல கேரளாவில் ஆரியர் ஊடுருவி ஆதிக்கம் செலுத்த, தமிழ் இனமும், தமிழ் மொழியும் அழிந்தன என்பதே மாவலி கதை உணர்த்தும் உண்மை வரலாறு.

இரணியாட்சதன் பூமியைப் பாயாய்ச் சுருட்டி கடலுள் பதுக்கினான் என்ற புராணக் கதையின் உட்பொருள், தமிழ் மன்னன் ஆரியர்களிடமிருந்து மண்ணைக் காத்தான் என்பதே!

புராணக் கதையின் உட்பொருளும், தமிழ் மன்னன் ஆரியர்களிடமிருந்து மண்ணைக் காத்தான் என்பதே!

நரகாசுரன் பூமி மைந்தன்:

நரகாசுரன் பூமிக்குப் பிறந்தான் என்று புராணம் கூறுவதன் உட்பொருள். பூமி பிள்ளை பெற்றது என்பதல்ல. ஆரியர்கள் வந்தேறிகள் பூமிக்கு உரியவர்கள் அல்ல, நரகாசுரன் மண்ணின் மைந்தன் என்பதைக் குறிக்கவேயாகும்.

சூரபதுமன் போர்:

சூரபதுமன் கதையின் உட்கரு, சூரபதுமன் தன் ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்தினான். அது ஆரிய நில அபகரிப்புக்கு இடையூறாக இருந்தது. எனவே, சூரபதுமனை எதிரியாய்ச் சித்தரித்து, அவனைக் கடவுள் அழித்ததாய்க் கதை எழுதினர். சிறுபான்மை ஆரியர் போரிட்டு வென்றதாய்க் கூற முடியாது என்பதால், கடவுள் அவர்களுக்கு துணைநின்றதாய் கதை புனைந்தனர்.

இராமாயணம் என்பதும் ஆழமாய் ஆய்வு செய்தால் மண்ணுரிமைப் போரின் கற்பனை விரிவாக்கம் என்பது விளங்கும்.

சீதை இராமன் என்பதெல்லாம் கற்பனைப் பாத்திரங்கள்.

“சீதை” என்றால் “நிலம்” என்று பொருள். இராவணன் சீதையை கொண்டு சென்றான் என்றால், ஆரியர் அபகரித்த நிலத்தை இராவணன் மீட்டான் என்பதேயாகும்.

நிலம் சீதையாகவும், கரியமேகம் (மழை) இராமனாகவும் உருவகம் செய்யப்பட்டன. அதனால்தான் இராமனை நீலமேகவண்ணன் (கரியமால்) என்பர். கரியமேகம் மழையாய் பூமியை அடைவது “அவதாரம்” எனப்பட்டது. அவதாரம் என்பதற்கு மேலிருந்து கீழ் வருதல் என்பதே பொருள். அதுவே இராம அவதாரம் எனப்பட்டது. கரிய மேகம் மழையாய் பூமியில் வந்து சேர்வதை இராமன்-சீதை கல்யாணம் என்று கதைக்கப்பட்டது. காம உணர்வு மன்மதனாய் கதைக்கப்பட்டதுபோல.

இராவணன் இந்த இலங்கையில் வாழவில்லை. அவன் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இலங்கையில் வாழ்ந்தான். இன்னும் அவனுக்கு நினைவுச் சின்னங்கள் உள்ளன. மத்தியப் பிரதேசத்தில் உள்ளதே இலங்கை. தற்போது சிறீலங்கா எனப்படும் இலங்கை தென்னிலங்கை என்று அழைக்கப்படுவதிலிருந்து இவ்வுண்மையை அறியலாம்.

ஆக, இராவணன் மண்ணை மீட்ட மாவீரன் என்பதே உண்மையான நிகழ்வு.

ஆக, புராணங்களில் வரும் அசுரர்களானாலும், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் ஆனாலும் அவையெல்லாம் மண்ணுரிமைப் போர் சார்ந்த நிகழ்வுகளின் கற்பனை விரிவாக்கங்களே!

இராவணன், நரகாசுரன், மாவலி, சூரபதுமன் போன்றவர்கள் தமிழர் தலைவர்கள். தமிழர் மண்ணுரிமை காத்த மாவீரர்கள்.

எனவே, அவர்கள் நம்மால் போற்றப்பட வேண்டியவர்கள். இந்த உண்மை உணராது அவர்களைக் கொடியவர்களாய் ஆரியர் சித்தரித்ததை நம்பி, அவர்கள் அழிவைக் கொண்டாடுவது அறியாமை. எனவே, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேட்டுக்கொண்டதுபோல், அசுரர்களான நாம் போற்றிக் கொண்டாட வேண்டும். அது தமிழரின் கடமை!