அரசியல்

Tuesday, December 29, 2015

துளசியே துணை!........


இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், மூளை போன்ற முதன்மை உறுப்புகளை காக்கவும், அவற்றின் நோயைப் போக்கவும் பெரிதும் உதவுகிறது துளசி. வீட்டில் இரண்டு மூன்று தொட்டிகளில் துளசிச் செடியை வளர்த்தால் தினம் அக்குடும்பத்திலுள்ள அனைவருக்கும் துளசி பலவகையில் பயன்படும்.
நாள்தோறும் 5 முதல் 10 துளசி இலைகளுடன் 2 அல்லது 3 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டு வெதுவெதுப்பான சுடுநீர் குடித்தால், இதயம், நுரையீரல், மூளை, சிறுநீரகம் வலுப்படும். இரத்த அழுத்தம் குறையும், கொலஸ்ட்ரால் கரையும், நுரையீரல் சளி, இருமல் நீங்கும், கல்லீரலைக் காக்கும். மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும்.
துளசி டீ:
துளசி இலைகளைப்பறித்து ஒரு டம்ளர் நீரில் போட்டு, கொதிக்க வைத்து, வடிகட்டி, பால், வெல்லம், ஏலக்காய் தூள், சுக்குத்தூள், சீரகத்தூள் போன்றவற்றைக் கலந்து வாரம் மூன்று நான்கு முறைச் சாப்பிட்டால் நோய் தடுக்கப்படும்; வந்த நோயும் அகலும்.
இது போன்ற எளிய வழிகளில் நோயைத் தவிர்த்து நலமுடன் வாழ்வதே அறிவுடைமைக்கு அழகு. இதில் என்ன சிறமம் சிந்தித்துப்பாருங்கள். துளசியை அன்றாடம் அனைவரும் பயன்படுத்துங்கள்.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment