அரசியல்

Tuesday, December 29, 2015

மழைநீர் தேங்கி தொற்றுநோய் பரவும்! உயிரிழப்பைத் தடுக்க ஓர் அரிய மருந்து

மழைநீர் தேங்கி தொற்றுநோய் பரவும்!
உயிரிழப்பைத் தடுக்க ஓர் அரிய மருந்து ............
நோய் வராமலே தடுக்கும்; வந்தால் விரைவில் குணமாக்கும்!
‪#‎என்ன‬ மருந்து?
இது எளிய மருந்து, வீட்டிலே செய்து குடிக்கலாம். 6 மாத குழந்தை முதல் அனைவரும் பருகலாம்.
‪#‎தேவையான‬ பொருட்கள்:
நிலவேம்பு வேர், வெட்டிவேர், விளாம்பிச்சி வேர், கோரைக்கிழங்கு, மிளகு, சுக்கு. இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். விலையோ மலிவு! பயனோ மிக மிக அதிகம்!
வீட்டிலுள்ளவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இவற்றை சம அளவில் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு, தேவையான அளவு நீர் ஊற்றி, நன்றாகக் கொதித்ததும், ஆறவைத்து பின் வடிகட்டி சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
‪#‎அளவு‬: நோய் வராதவர்கள்:...............
பெரியவர்கள் 30 மில்லி சாறு, குழந்தைகள் 2 முதல் 5 மில்லி சாறு (வயதுக்கு ஏற்ப) பருகவும். 6 முதல் 12 மாத குழந்தைக்கு 10 சொட்டு (தாய்ப்பாலில் கலந்து) தினம் ஒரு ஒருவேளை சாப்பாட்டுக்குப் பின் கொடுக்கவும்.
காய்ச்சல் வந்தவர்கள் (எந்தக் காய்ச்சலானாலும்):
இச்சாற்றை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மேலே சொன்ன அளவுப்படி பருகவும். எல்லாவிதமான காய்ச்சலிலிருந்தும் இது உங்களைக் காக்கும்! உயிரிழப்பைத் தடுக்கும்.
நாட்டுச் சரக்கென்று நக்கலாய் எண்ணாதீர்!
இது உயிர்காக்கும் சரக்கு! நோய் எதிர்ப்பாற்றல் தரும் சரக்கு!
காய்ச்சல் பரவும் நேரம் கட்டாயம் பருகுங்கள்!
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment