அரசியல்

Tuesday, September 29, 2015

ஆடைச் சுதந்திரம் என்பது என்ன?



எனது முகநூலில் ஆடைச் சுதந்திரம் பற்றிக் கருத்து எழுதியிருந்தேன். பலரும் பாராட்டி வரவேற்ற நிலையில், ஒருசில பெரியார் தொண்டர்களே, பெரியார் தொண்டரான நீங்கள் இப்படிச் சொல்லலாமா? என்று வினா எழுப்பியுள்ளார்கள். எனவே, விரிவான ஒரு விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

முதலில் நான் சொன்ன கட்டுப்பாடும் கண்ணியமும் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும்தான் என்பதை அழுத்தமாகச் சொல்லிக் கொள்கிறேன்.

சென்னையில் தொடர்வண்டியில் நான் பயணம் செய்தபோது, 20 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் நின்றுகொண்டு பயணம் செய்தான். அவன் அணிந்துள்ள பேன்ட்டை தொடைப்பகுதிவரை இறக்கியுள்ளான். அவன் ஜட்டி முழுவதும் வெளியில் தெரிகிறது. அந்த ஜட்டியையும் கீழே இறக்கிவிட்டுள்ளான் பெண்களும் பயணம் செய்யும் நிலையில் இப்படிச் செல்கிறான். இது சரியா? இது அவன் விருப்பம் என்பதால் இப்படி அணிவதுதான் ஆடைச் சுதந்திரமா?

சில பெண்கள் மிக மெல்லிய லெகின்ஸ் இறுக்கமாகப் போட்டு செல்லும்போது அவர்களின் தோலின் நிறம்கூட தெரிகிறது. சற்று தொலைவிலிருந்து பார்த்தால் ஆடையில்லாமல் இருப்பதுபோல் தெரிகிறது. இது ஆடைச் சுதந்திரமா?

ஆடைத் சுதந்திரம் வேறு ஆபாசம் வேறு! ஆடைச் சுதந்திரம் என்ற பெயரில் ஆபாசமாய் உடையணிவது என்பது வரம்பு மீறும் செயல்.

ஆபாசத்திற்கு அளவு என்ன? என்று கேட்பார்கள். பேசும்போது சில சொற்கள் ஆபாசம்,  பேசக்கூடாது என்று ஒதுக்குகிறோம் அல்லவா? அதற்கு என்ன அளவுகோலா? அதே அளவுகோல்தான் இதற்கும்!

சுதந்திரம் என்பது வரம்புமீறிய செயல் அல்ல. வரம்புக்குட்பட்டு நம் விருப்பங்களை தடையின்றி நிறைவேற்றுவது ஆகும். ஆணைப் போலவே பெண்ணும் உடையணிய வேண்டும் என்பதே முற்போக்காளர் விருப்பம். அதை நாம் முழுமையாக ஏற்கிறோம்.

காட்டில், மலையில் மழை பொழிகிறது. அந்நீர் கண்டபடி வழிந்தோடி வருகிறது. அது அப்படியே கண்டபடி ஓடியனால் அதனால் எந்தப் பயனும் ஏற்படாது, பாதிப்புகளே அதிகம் ஏற்படும்.

அதே நீரை கரைகள் அமைத்து கொண்டு சென்றால் வேண்டும் இடத்தில் அது பயன்படும். தேவையற்ற இடத்தில் பாய்ந்து பாழாவது தவிர்க்கப்படும்.

கரைகள் அமைப்பதால் நீரின் சுதந்திரம் பாதிக்கப்படுவதில்லை. கரைக்குள்ளே அது தடையின்றித்தான் ஓடுகிறது. சுதந்திரம் என்பதும் இதுதான்.

சாலையில் வாகனம் ஓட்டுகிறவன் என் வாகனம், என் விருப்பப்படி ஓட்டுவேன் என்று ஓட்டினால் என்னாகும்? பாதிப்பு அவனுக்கு மட்டுமல்ல. எதிரில், அருகில் வருகிறவர்களுக்கும்தான்.

சாலையில் ஏன் இடது பக்கம் செல்ல வேண்டும்? நான் விருப்பப்படிச் செல்வேன் என்றால் அங்கு போக்குவரத்தே முட்டி மோதி நிற்கும்.

வீட்டில் தனியறையில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், மற்றவரோடு சேர்ந்து வாழும்போது சில கட்டுப்பயாடுகள் கட்டாயம்.

குளியறைச் சுதந்திரத்தை பொது இடங்களில் செயல்படுத்த முடியுமா? இடம் அறிதல் வேண்டுமல்லவா?

பெரியார் நிர்வாண சங்கத்தில் நின்றாரே! என்கின்றனர்.

ஆடை என்பது ஒரு மூடத்தனம் என்று எண்ணும் நிலையில் நிர்வாண சங்கம் உருவானது. அதை ஏற்பதுபோல பெரியார் செயல்பட்டார். ஆனால், அதே பெரியார் அந்த இடத்தைவிட்டு அகன்றதும் ஆடை உடுத்திக்கொண்டார். அதன்பின் அவர் அம்மணமாகத் திரியவில்லை.

நிர்வாண சங்கத்தில் அம்மணமாய் நின்றவர் பிற இடங்களில் ஏன் ஆடையுடன் சென்றார்? இதுதான் இடம் அறிதல்.

கூர்மையாக சிந்தித்தால் நாம் உலகில் ஏன் வாழவேண்டும் என்பது கூட அர்த்தமற்றதாகத் தெரியும். அதற்காக வாழமல் இருக்கிறோமா? அது போல் தான் சிலவற்றை உலக இயல்புக்கு ஏற்ப ஏற்று வாழ வேண்டும்.

சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்றது என்ற கற்பனைத் தவறு. கூடுக்கும் கூண்டுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொண்டால் சுதந்திரம் என்பது என்ன? என்பது விளங்கும்.

ஒரு கிளியை சுயநலத்துக்கு அடைத்து வைப்பது கூண்டு. ஆனால், தன் பாதுகாப்பிற்கு பறவை தானே அமைத்துக்கொள்வது கூடு.

பறவை தன் பாதுகாப்பிற்கு கூடு அமைத்துக் கொள்வதுபோல, ஆணும் பெண்ணும் தன் பாதுகாப்பிற்கும், நலத்திற்கும், சமூக பாதுகாப்பிற்கும் நலத்திற்கும், தனக்குத்தானே சில கட்டுப்பாடுகளை வைத்துக்கொள்வது சுதந்திரத்திற்கு எதிரானதல்ல. கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரமே ஆகும்!

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan 

https://www.facebook.com/manjaivasanthan

------

Monday, September 28, 2015

நாற்றம் பிடித்த இந்து மதம்! கண்ணதாசன் சொல்கிறார்...............


பக்தியினால்தான் நாடு முன்னேறும்! என்று அறிவுரை வழங்கியுள்ளார் ஒரு பரமபக்தர். யாரவர் எந்த மடத்து அதிபதி? எந்த கோயில்பூசாரி? என்றெல்லாம் மூளையைக் குழப்ப வேண்டாம், நண்பர்கள். அதிகாரம் கைக்கு வராதா மீண்டும்?  என்று அடிக்கடி பக்தி பண்ணிக்கொண்டிருக்கும் ஆச்சாரியார்-தான் மேற்கண்ட அறிவுரையை அள்ளித் தெளித்திருக்கிறார்.

ஆச்சாரியாருக்கு, திடீர் திடீரென்று இது மாதிரி சித்தப்பிரமை ஏற்படுவது வழக்கம். சமீபகாலத்து அரசியலில் அவருக்கு விழுந்த பலமான அடி, இப்போது அவரை பரம பைத்தியமாக ஆக்கிவைத்துள்ளது. தினசரி அவரது மூளையில் என்னென்ன உதிக்கின்றனவோ, அவற்றாலெல்லாம் நாடு முன்னேறும் என்று உறுதியாக முடிவு-கட்டுகிறார். அவரது கண்களில் திடீரென்று ஒரு பனைமரம் தட்டுப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அன்றையப் பத்திரிகைக்கு, பனைமரத்தால் நாடு முன்னேறும்! என்றொரு அறிக்கை விடுவார். தற்செயலாக ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்; பைத்தியக்கார ஆஸ்பத்திரி ஒன்றே நாட்டை முன்னேற்றும்! என்று ஆணித்தரமாக அறைவார். அவரது அரசியல் வாழ்வில் இதெல்லாம் சாதாரணச் சம்பவங்கள்.

கடவுள் சிலைகளை...

இந்த நாட்டை இவ்வளவு காலமாக பக்தி எவ்வளவு முன்னேற்றி இருக்கிறது என்பது பிஞ்சு மூளைகளுக்குக்கூட நன்றாகத் தெரியும்.

வெளிநாட்டிலிருந்து வருகிற ஒருவனை அழைத்து, பக்கத்தில் உட்காரவைத்து, இந்திய உபகண்டத்தின் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றை விளக்கமாகக் கூறி, இந்த நாட்டைச் சீர்படுத்துவதற்கு ஒரு திட்டம் சொல் என்று கேட்டால், முதல் முதலில் கோயிலில் உள்ள கடவுள் சிலைகளை எல்லாம் உடைத்து கடலில் போடு என்றுதான் கூறுவான்! அவ்வளவு அலங்கோலத்தை இந்த நாட்டில் பக்தி உண்டுபண்ணியிருக்கிறது!

மனிதன் மனதை முழுக்க முடக்கி வைத்து தேரைப்பிள்ளை யாக்கி வைத்திருக்கிறது பக்தி. தன்னம்பிக்கை அணுவளவும் இன்றி, மனிதன் அச்சத்தின் அடிமையாகி, கோழையாய், பேடியாய், ஆமையாய் ஆனதற்கு அறிவற்ற பக்தியே காரணம் என்பதை, குன்றிமணி அளவு மூளையுள்ளவன் கூடக் கண்டுகொள்ள முடியும். தெளிவற்ற மனோபாவம், சீர்குலைந்த வாழ்க்கை நிலை, இவற்றிற்கெல்லாம் மூலகாரணமாய் நிற்பது பக்திதான் என, நாட்டின் நல்வாழ்வில் உண்மையிலேயே அக்கறை கொண்டோர் சுலபமாகக் கூறிவிடுவர்.

கண்ணனிடத்தில் பக்தி கொண்ட மீரா...

கண்ணனிடத்திலே பக்தி கொண்ட மீரா, தன் கணவனின் வாழ்வைப் போர்க்களமாக்கி, அணுஅணுவாய் அவன் வாழ்வைச் சிதைத்த கதையிலிருந்து, சிவநேசன் ஒருவன் பிள்ளைக்கறி சமைத்ததுவரை, பலவிதக் கதைகளும் பக்தியின் இழித் தன்மையைத்தான் பாடுகின்றன.

பக்தியினாலே வாழ்வில் நல்லின்பங் கண்டவன் ஒருவனை இதுவரை எந்த ஏடும் எடுத்தோதவில்லை. ஒவ்வொருவனும் வாழத்தெரியாத வரட்டுத்தனத்தில் பக்தனாக மாறி, நடைப்பிணமாய் வாழ்ந்து
செத்திருக்கின்றான்.

பகுத்தறிவில் வாழ்க்கையை சமைத்துக் கொண்டவன்தான் வாழ்வாங்கு வாழ்ந்து சுகம் பெற்றிருக்கிறான். வீர வரலாற்றிற்கும் புராணத்திற்கும் உள்ள பேதமை, பகுத்தறிவின் உயர்வையும், பக்தியின் கேவலத்தன்மையையும் எடுத்துக்காட்ட நல்ல உதாரணமாகும்.

மூடத்தனம் ஒரே சொத்து!.......

பக்தியைப்பற்றிப் பேசுகிறவன் காண்கிற சுகத்தை, பக்தி செய்பவன் காணுவதே இல்லை. பக்திப்பிரசாரகன், அதைத் தொழிலாகவே நடத்துகிறான். பக்தி செய்யப்போகிறவன் அதற்குப் பலியாகிறான். இன்று பக்திபற்றி பிரசாரம் செய்யும் அரசியல் விதவையாம் ஆச்சாரியாருக்கு உண்மையிலேயே பக்தி கிடையாது. அவரது சீடராம் சுப்பிரமணியத்தின் குடும்பத்தாரோ, மற்றையத் தமிழர்களோ திருப்பதிச்சாமிக்கு மயிர்கொடுப்பதுபோல் ஆச்சாரியார் குடும்பத்தினர் கொடுப்பதில்லை.

தமிழன் மயிரில்தான் கடவுள்களுக்கும் ஏகப்பட்ட பிரியம்! இப்படி மயிர்வாங்கிச் சாமிகளும் தமிழ்நாட்டில் ஏராளம். இளித்த வாயர்களிடம் எதைச் சொன்னாலும் ஏற்பார்கள் என்பது ஆச்சாரியாருக்கு நன்றாய்த் தெரியும். தாடியிலும் மீசையிலும் பக்தி தொங்குவதாகக் கருதுகிற மூடத்தனம் இந்த நாட்டின் ஒரே சொத்து என்பதும் அவருக்குப் புரியும்.
நாற்றம் பிடித்த இந்துமதம் - உற்பத்தியான கிருமிகளே கடவுள்கள்!

எனவே, அறிவுள்ள எவனுமே ஏற்கமுடியாத பக்திப் பிரசாரத்தை அவர் சுலபமாகச் செய்கிறார். பக்கமேளங் கொட்ட, தமிழனாகப் பிறந்து தொலைத்த சில சோற்றுச் சுவர்களும் போகின்றன.

 நாற்றம் பிடித்த இந்துமதமும் அதில் உற்பத்தியான கிருமிகளாம் கடவுள்களும் தனது வர்க்கத்திற்குச் சோறு போடுவது தடைப்பட்டுவிடக் கூடாது என்பது ஆச்சாரியார் வேலை. தாளம்போடப் போகிறவர்களுக்கு கூலிக் கவலை. இதற்கிடையில் இருபதாம் நூற்றாண்டிலும் இவ்வளவு மகத்தான மூடர்கள் இருக்கிறார்களே என்பது நமது கவலை.
அபாரமான நகைச்சுவை!

எண்ணிப் பார்த்தால், ஆச்சாரியார் செய்யும் பக்திப் பிரசாரம், அவருடைய மூளைபற்றிய சந்தேகத்தைக் கிளப்புவது புரியும். பக்தியினால் நாடு முன்னேறும் என்று அவர் புலம்புவது, நினைத்து நினைத்துச் சிரிக்க வேண்டிய அபாரமான நகைச்சுவையாகும்.

(இன்று அர்த்தமுள்ள இந்து மதம் எழுதும் இதே கண்ணதாசன் 1.1.1955 தென்றல் இதழில் எழுதிய கட்டுரைதான் இது! மதவாதிகள் சுயநலவாதிகள் என்பதற்கு கண்ணதாசனின் பிறழ்வே ஆதாரம்.)

Saturday, September 26, 2015

அரைவேக்காடு அர்ஜூன் சம்பத் பிதற்றல்! உண்மை அறியா உளறல்

பெரியார் தபால்தலையை தடைசெய்ய வேண்டும்
அரைவேக்காடு அர்ஜூன் சம்பத் பிதற்றல்! உண்மை அறியா உளறல்

”எந்தவொரு தனிநபருக்கும் ஸ்டாம்ப் கூடாது. குறிப்பாக ஈ.வெ.ரா. வின் ஸ்டாம்ப் இருப்பது நாட்டுக்கே அவமானம்! அதை உடனே தடைசெய்ய வேண்டும் இல்லையேல் நாங்கள் பிரதமருக்கு வலியுறுத்திக் கோரிக்கை வைப்போம்!” என்று கூறும் அர்ஜூன் சம்பத்.

“இவர் பிரிட்டிஷாரின் எடுபிடி இந்தியாவுக்குச் சுதந்திரம் வேண்டாம் என்றவர். அவர் ஒரு தேசத்துரோகி, அவர் தமிழரே கிடையாது அவருக்கு எதற்கு ஸ்டாம்ப் என்று அதற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.

இதுவெல்லாம் அரைவேக்காடுகள் என்று நான் தொடக்கத்திலே சொன்னதற்குக் காரணம் இதுதான். ஆங்கில ஆட்சி உடனே அகலக்கூடாது அகன்றால் அது ஆரிய பார்ப்பன ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும் என்பதால் அவர்கள் ஆட்சி நீகட்டும் என்ற கருத்தை விவேகாநந்தரே கூறியுள்ளார் என்பது இந்த நொய்யரிசிகளுக்குத் தெரியுமா?

இதோ விவேகாநந்தர் கூறியதைப் பாருங்கள்:
    
     ஆரியர்களின் ஆதிக்கக் கொடுமையால் பலநூற்றாண்டுகளாக கல்விமறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஆங்கல ஆட்சியில் தான் கல்வியும் உரிமையும் பெற்றனர். அந்த ஆட்சியிருக்கும் போதே ஆரிய பார்ப்பன ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.

     ”ஆரியர்களே நீங்கள் இறந்தகால பிரதிநிதிகள் நீங்கள்தான் சூனியம், நீங்கள் இன்னும் ஏன் வாழ்கிறிர்கள்? நீங்கள் ஏன் மண்ணில் கரைந்து, காற்றில் கலந்து மறைந்துவிடக்கூடாது.
    
     நீங்கள் இந்த பாரதத்தை நிர்மானிக்கும் உரிமையை உரியவர்களிடம் ஒப்படையுங்கள். அதற்கு இதுதான் சரியானகாலம் பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ், கல்வியும் ஞான ஒளியும் சுதந்திரமாகக் கிடைக்கும் இந்த நேரந்தான் ஒப்படைக்கச் சரியான நேரம் நவபாரதம் ஏழை எளிய மக்களிடமிருந்து உருவாகட்டும் என்றார்.

     ஆக,ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியும், உரிமையும், விழிப்பும், உயர்வும் பெற உரிய காலம் ஆங்கில ஆட்சிகாலமே என்கிறார் விவேகாநந்தர்.

     இதைத் தான் பெரியாரும் சொன்னார் ஆரிய பார்ப்பனர்களால் இந்த நாடு மூடநம்பிக்கையிலும், அரியாமையிலும் அமுக்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு சாதிக்கொடுமை உருவாக்கப்பட்டு இழிமக்களாய் மாற்றப்பட்டனர் இந்நிலை பலநூற்றாண்டுகளாய் நீடித்தது. ஆனால்,தற்போது ஆங்கில ஆட்சியால் சாதிக்கொடுமை விலக்கப்பட்ட எல்லோருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு கிடைக்கிறது. எனவே, பார்ப்பன ஆதிக்கம் அழியும் மட்டும் ஆங்கில ஆட்சியே நீடிக்கட்டும். விடுதலை கிடைத்தால் அது ஆரிய பார்ப்பன ஆதிக்கத்திற்கே பயன்படும் என்றார்.

     மக்கள் நலன்கருதி சொல்லப்பட்ட கருத்தேயன்று பெரியார் சுயநலத்திற்காகச் சொல்லவில்லையே! ஆங்கில கவர்னர் பெரியாரை மாகாண முதல்வராய் பொறுபேற்க அழைத்தப்போது அதை மறுத்த சுயநலமற்ற பொதுநலத்தொண்டரை பொறுக்கிகளெல்லாம் விமர்சிப்பது கேவலத்திலும் கேவலம்.

     நாடு சுதந்திரம் அடைந்தது அதற்குகாந்தி நாடு என்று பெயர் வைக்கச் சொன்னது பெரியார் காந்தி சுடப்பட்டபோது சுட்டவன் இஸ்லாமியர் அல்ல இந்து என்ற உண்மையைக் கூறி நாட்டில் கலவரம் நிகழாமல் தடுத்தவர் பெரியார்.

     இந்த நாட்டின் ஒற்றுமைக்காக பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டவர் பெரியார்.

     சீன போரின் போது நமது உடல், பொருள் உயிர் எல்லாவற்றையும் இந்தநாட்டிற்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டவர் பெரியார்.

     உண்மை இப்படியிருக்க ஒன்றும் அறியா தறுதலைகளெல்லாம் பெரியாரைக் கொச்சைப்படுத்துவது கொடுமையிலும் கொடுமை!

பெரியாருக்குத் தபால் தலை வெளியிட்டது காங்கிரஸ் அரசு அல்ல ஜனதா அரசு! இந்த உண்மைக்கூடத் தெரியாத அரைவேக்காடுகள் எல்லாம் இன்று தலைவர்கள்! எப்படிப்பட்ட கேவலம் பாருங்கள்.
     தந்தைபெரியாரின் நூற்றாண்டை ஒட்டி அன்றைய ஜனதா அரசு பெரியார் தபால்தலை வெளியிட்டது அந்த அரசில் வாஜ்பாயி, அத்வானியெல்லாம் அமைச்சர்கள். அதன் பொருள் என்ன இன்றைய பி.ஜே.பி. ஆட்சி வெளியிட்டது போன்றதுதானே அது!

தபால்தலையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  மாண்பமை எஸ்.மோகன் அவர்கள் தலைமையில், உயர் நீதிமன்ற நீதிபதி மாண்பமை ஏ. வரதராசன் 17.09.1978இல் பெரியார் திடலில் வெளியிட்டார்.

பெரியாரின் 125 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி அப்போது வாஜ்பேயி தலைமையில் அமைந்த மத்திய அரசு தந்தை பெரியார் அவர்களைப் பெருமைப்படுத்த அஞ்சல் சிறப்பு உறையை வெளியிட்டது அதைச் சென்னையில் எஸ். திருநாவுக்கரசர் மத்திய இணையமைச்சர் என்ற முறையில் வெளியிட்டர்

ஆக, பெரியாருக்கு இப்பெருமைகளைச் செய்தது பி.ஜே.பி. அரசு குறிப்பாக வாய்பேயி என்ற நிலையில் காங்கிரஸ் செய்ததாகக் கற்பனைச்செய்து கொண்டு களங்கம் பேசுவதும், தடைசெய்யச் செய்வது கடைந்தெடுத்த கயமைச் செயலாகும்!

தமிழராய் பிறந்த விபீஷணனாய் பிழைப்பு நடத்து இந்தப்பேர்வழிகள், வரலாறு தெரியாமல் தலைவர்களின் பெருமை தெரியாமல் பிதற்றுவதை இனிமேலாவது நிறுத்திக் கொள்ளவேண்டும்! பெரியாரிடம் பிழை செய்தவன் எவனையும் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்! எச்சரிக்கை!

    




Thursday, September 24, 2015

பெண்கள் வேலைக்குச் செல்வதால்தான் வேலையின்மை ஏற்படுகிறதாம்!

பெண்கள் வேலைக்குச் செல்வதால்தான் வேலையின்மை ஏற்படுகிறதாம்!

 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பதிவு!............................


 டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு படிக்காத பாமரமக்கள் பேசுவதையெல்லாம் பாடத்திட்டத்தில் வைக்கிறார்கள் என்றால் இந்த நாட்டில் அரசு எதற்கு? கல்வித் துறை எதற்கு? பாடத் திட்டக்குழு எதற்கு?
இந்தக் கொடுமை எங்கு என்கிறீர்களா?

சத்தீஷ்கரில்தான்!

 சத்தீஷ்கரின் இடைநிலைக் கல்விக் கழகத்தின் (CGBSE) வெளியிடப்பட்டுள்ள ஹிந்தி மொழியில் உள்ள பாடநூலில் இப்படிப்பட்ட ஒரு சட்டவிரோத, சமூக விரோத கருத்து சொல்லப்பட்டுள்ளது!

 ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அடுப்படி வேலைக்கும், பிள்ளை பெற்று வளர்ப்பதற்கும் சம்பளமில்லாத முழு நேர வேலையாட்களாக நடத்தப்பட்ட பெண்கள் இக்காலத்தில்தான் படிக்கும் வாய்ப்பு பெற்று, ஆண்களுக்கு நிகராய்ச் சாதனைப் படைத்து வேலைவாய்ப்புகளையும் பெற்று, தன் காலில் நிற்கும் தகுதியைப் பெற்று வருகின்றனர்.

 இதைப் பொறுக்காத ஆணாதிக்க வெறியர்களும், மதவாத அரசும் மனித நேயத்திற்குப் புறம்பான மடத்தனமான கருத்துகளைக் கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.

 பிஞ்சுகளின் உள்ளத்தில் தவறான கருத்தைப் பதிவு செய்யும் செயல் இது.

வேலைவாய்ப்பு என்பது அரசு ஏற்படுத்தித் தரவேண்டிய கடமையும், பொறுப்பும் ஆகும். அதை மறைத்து, பெண்கள் வேலைக்குப் போவதுதான் வேலையின்மைக்குக் காரணம் என்று பள்ளி மாணவர்கள் உள்ளத்தில் பதியச் செய்வது அயோக்கியத் தனமாகும்!

இதை ஒரு கல்வித் துறையே செய்வது கயமைத்தனமாகும்!

 பெண் என்பவரும் இந்த நாட்டின் குடிமகள். அவள் கற்கவும், வேலைக்குச் செல்லவும் வேண்டும். எவ்வளவு பேர் வேலைக்குத் தகுதி பெற்று இருக்கிறார்களோ அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டியது அரசின் கடமை.

 வேலையின்மை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தொழில் வளர்ச்சியின்மை, போதிய கடன் வசதியின்மை, இருக்கின்ற இயற்கை வளங்களை சரியாக கண்டறியாமை, முழுமையாக, முறையாகப் பயன்படுத்தாமை, முறையாகத் திட்டமிடாமை, சிறுதொழில்கள் வளர்க்கப்படாமை, சேமிப்பு அதிகரிக்காமை, வருவாய் இன்மை; வாங்கும் சக்தி குறைவாய் இருப்பது. உள்நாட்டுப் பொருட்களைப் புறக்கணித்து, அயல்நாட்டுப் பொருட்களை அதிகம் வாங்குவது. அந்நிய முதலீடுகளை சரியாகப் பயன்படுத்தாமை, மக்கள் தொகையை உத்தம மக்கள் தொகை அளவிற்குக் கட்டுப்படுத்தாமை போன்ற காரணிகளே வேலையின்மைக்குக் காரணங்களேயன்றி, பெண்கள் வேலைக்குச் செல்வதால் அல்ல.

 பெண்கள் வேலைக்குப் போகாவிட்டால் வேலையின்மை குறையும் என்று சொல்பவர்கள் அடுத்து, அவனவன் குலத் தொழிலைச் செய்தால் வேலையின்மை குறையும் என்று கூறுவர். கடைசியாக ஆரிய பார்ப்பனர்களாகிய நாங்கள் மட்டும் படிப்போம், வேலைக்குப் போவோம், சூத்திரனெல்லாம் அடிமை வேலை செய்ய வேண்டும் என்பர்.

 ஆக, இவர்கள் சிந்தனை இப்படித்தான் செல்லும். ஒட்டுமொத்த பெண்களும், ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உடனடியாக ஓரணியில் நின்று மதவெறிக் கூட்டத்திற்கு பாடம் புகட்டுவதோடு, நம் உரிமைகளை நாம் காத்துக்கொண்டு, மேலெழ வேண்டும்!

 _____

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

வாழைப்பழம் கனிந்து சாப்பிடுவது நல்லதல்ல..



 வாழைப்பழங்களை குழந்தைகளுக்குத் தரும்போது, அதன் நடுவில் இருக்கும் கறுப்பு விதைகளை நீக்கிவிட்டு கையால் மசித்துக் கொடுக்கலாம்;
வாழைப்பழம் என்றதும் நன்கு கனிந்த தொட்டால் மென்மையாக இருக்கும் பழமே சிறந்தது என எண்ணுகிறோம்.

 ஆனால் தொட்டால் சற்று கெட்டியாகவும்,உரித்தால் தோல் வரக்கூடியதாகவும் கடித்து மென்று சாப்பிடும் அளவுக்கும் இருப்பதே நல்ல வாழைப்பழம்.

 சாப்பிடும் போது இனிப்பும் துவர்ப்புச் சுவையும் தெரிய வேண்டும். இதுதான் வாழைப்பழம் சாப்பிட சரியான பருவம்.

 இந்தப் பருவத்தில் சாப்பிட்டால் தான் பழத்தின் முழுப் பலனையும் பெற முடியும். பழம் கனிந்துவிட்டால், மாவுச்சத்தும் இனிப்பும் அதிகரித்துவிடும்.

இடஒதுக்கீடு பிச்சையா? உரிமையா?


பிச்சையென்று பிரச்சாரம் செய்யும்
அயோக்கியர்களே பதில் சொல்லுங்கள்!

 “நான் ஏழை எனக்குப் பிச்சைப்போடுங்கள். நான் தாழ்த்தப்பட்டவன் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள். இரண்டிற்க்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

 உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள். அதை விட்டுவிட்டு உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். நாம் இதுபோல் சலுகைகள் எதிர்பார்த்தால் தான் தாழ்ந்த ஜாதியென்று நசுக்கப்படுவோம்.”

 என்று ஒரு அரை வேக்காடு அல்லது ஒரு மோசடிப்பேர்வழி கருத்துக் கூறியுள்ளார்.

 எதன் வழிதெரியுமா? Dinamalar Andrrind app வழி!

 எங்கிருந்து தெரியுமா? பெங்களூரிலிருந்து.

இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான, நயவஞ்சகமான, சூழ்ச்சியான பிரச்சாரத்தை ஆரியப்பார்ப்பனர்கள் அல்லது அவர்கள் கைக்கூலிகள் தற்போது நாடெங்கும் செய்து வருகின்றனர்.

 இடஒதுக்கீட்டின் தத்துவமே தெரியாத அரை வேக்காடுகள் அல்லது மோசடிபேர்வழிகள் இடஒதுக்கீட்டைப் பிச்சையென்கின்றனர்.

 அப்படிப்பட்ட அடிமுட்டாள்களுக்கு, அயோக்கியர்களுக்குச் சொல்கிறோம். பரம்பரைச் சொத்தில் பிள்ளை பங்குகேட்பது போன்றது இடஒதுக்கீடு!

 பிள்ளை பங்குகேட்பது பிச்சையா? உரிமையா? சூடு சொரணை, நாணயம் இருந்தால் பதில் சொல்லும்!

இடஒதுக்கீடு ஒழிந்தால் ஜாதி ஒழியுமா? இழிவு நீங்கிவிடுமா?

இடஒதுக்கீடு வருவதற்கு முன் ஜாதி ஒழிந்ததா?

 இடஒதுக்கீடு இல்லாத போதுதானே ஜாதிக் கொடுமைகள் தலைவிரித்தாடின?
இடஒதுக்கீட்டால் கல்வி, வேலைவாய்ப்புப் பெற்று அடித்தட்டு ஜாதியினர் மேலெழுந்ததன் விளைவுதானே கலப்புமணம், ஜாதிஒழிப்பு மெல்லமெல்ல நடைமுறைக்கு வருவதெல்லாம். எந்த ஜாதியால் ஒடுக்கப்பட்டார்களோ அந்தஜாதியின் அடிப்படையில் உரிமை தந்து தானே உயர்த்தமுடியும்?

 படித்த பரம்பரைப் பிள்ளையும், படிக்காத பரம்பரைப் பிள்ளையும் ஒன்றாகப்போட்டியிடுவது சமூக நீதியாகுமா?

 இடஒதுக்கீடு எங்கள் உரிமை! இதில் கைவைக்கவோ, வேண்டாம் என்று சொல்லவோ உங்களுக்கு ஏது உரிமை?

 உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் பங்கைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 கோயிலில் மணியாட்ட மட்டும் ஜாதி வேண்டும். அங்கு பார்ப்பானுக்கே இடஒதுக்கீடு. ஆனால்,

 கல்விவேலைவாய்ப்பில் ஜாதி பார்த்தால் அது கேவலமாம். இது என்னங்கடா உங்க யோக்கியதை? இது பச்சை அயோக்கியத் தனமில்லையா?

 தினமலர் வழியில் கருத்துக் கூறும்போதே தெரிகிறதே பூணூல் புத்தியும் அயோக்கியத்தனமும்.

 பெரியார் ஊட்டிய விழிப்பில், இருக்கிறோம். உங்கள் சூழ்ச்சியெல்லாம் இனிபலிக்காது அம்பிகளே!

 தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடக்கவுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் உணர்வு பெற்று எழும்போது உங்கள் சூழ்ச்சியெல்லாம் ஒடுங்கி ஒழிந்து போகும்!

 இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கான திறவுகோல் அது இழிவும் அல்ல; அது ஜாதி வளர்ப்பதும் அல்ல. அது உரிமை! அதைப் பெறாமல் போனால் தான் இழிவு, கேவலம்.

தன் உரிமையை இழப்பவர் இழிவுக்கு உரியவர் தானே?

 எனவே உரிமைக்கு போராடி, உயர்வதுதான் மானமுள்ள மனிதர்க்கு அழகு. அதைத் தன்மானமுள்ளவர்கள் ஒருங்கிணைந்து செய்து முடிப்பர்!

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

இரத்தநாள அடைப்பு நீக்கும் மருதம்பட்டைப் பொடி!

இரத்தநாள அடைப்பு நீக்கும் மருதம்பட்டைப் பொடி!.....................

 சித்த மருத்துக் கடைகளில் கிடைக்கும் மருதம்பட்டைப் பொடியை, ஒரு டம்ளர் பாலில் இரு கிராம் அளவு கலந்து காலை, இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டால் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும் மாரடைப்பு வராது. இருபது வயதுக்குமேல் கட்டாயம் எல்லோரும் சாப்பிடுவது இக்கால வாழ்விற்கு நலம் பயக்கும்.

 நாள் தோறும் பூண்டு, வெங்காயம், இஞ்சி (காலை) இம்முறையும் தவறாது சாப்பிட்டால் உடலும் இதயமும் நலமாக இருக்கும்.

பி.ஜே.பி. ஆட்சிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் எச்சரிக்கை.


 

 இப்படியே இந்த மதவாத பா.ஜ.க. ஆட்சி செயல்பட்டால் வெடித்துச்சிதறும் என்று எச்சரிக்கிறார் பிரகாஷ்ராஜ்.

 மக்கள் விருப்பங்களுக்கு எதிராய் மத்திய அரசு தடைவிதிப்பது மக்களின் உரிமைக்கு எதிரானது!

 பி.ஜே.பி. ஆட்சிபெற்றுள்ள பெருபான்மையும், மோடியின் கவர்ச்சிச் செல்வாக்கும் நீர்க்குமமிழி போன்றது. அது ஓர் சூழலால் ஏற்பட்ட, விளம்பரத்தால் மக்கள் எதிர்பார்ப்பால், மாற்றம் வேண்டும் என்ற வேட்கையால் ஏற்பட்ட பெருக்கம் பெரும்பான்மை.

 தொடர்ந்து மக்கள் உணர்வுகளுக்கு எதிராய் மதவாதத் திணிப்பு மேற்கொண்டால் அது வெடித்துச் சிதறிவிடும் என்று பொங்கியெழுந்துள்ளார்.
ஓட்டுப் போட்ட மக்களுக்கு இதுதான் பரிசா? கோபத்தோடு கேட்கிறார்.
இறைச்சிக்குத்தடை;

 வயது வந்தவர்கள் படங்களுக்குத் தடை,

திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினி நடிக்கத்தடை....

 இப்படியே போனால் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும். ஓட்டுப் போட்டவர்களின் உணர்வு

 மதிக்கப்படவில்லையென்றால் போலியான இச்செல்வாக்கு சிதறிப்போகும்!” என்று பிரகாஷ்ராஜ் எச்சரித்துள்ளார்.

 ஒவ்வொரு நடிகரும் இதைச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு முக்கிய மனிதர்களும் சொல்ல வேண்டும். மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து குரல் கொடுக்கும் பிரகாஷ்ராஜ் அவர்களைப் பாராட்டுகிறோம்!

 மக்கள் உணர்வுகளை மதிக்கும் பிரகாஷ்ராஜ் அவர்களைப் பலரும் பின்பற்றி ஆதரவு தெரிவிக்க வேண்டும், மதவாத அரசை எச்சரிக்க வேண்டும்!

 மக்கள் தங்கள் உணர்வுகளை, எதிர்ப்புகளை வெளிபடுத்தினால் தான் மதவாத அரசும் மதவெறியர்களும் அடங்குவர்!

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

மாட்டுச் சாணமும் மூத்திரமும் மருத்துவக் குணம் உடையவையா?



 பசுமாட்டின் முத்திரத்தில் (கோமியத்திற்கு) கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதாகக் கூறி தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில், கோமியத்தை தெளித்து பரிசோதிக்க இராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

 இந்தியாவில் நாகரீக வளர்ச்சி இல்லாத காலத்தில் மாட்டின் மூத்திரத்தை தெளிக்கும் வழக்கம் இருந்து வந்தது, 1870 களில் இந்திய கிராமங்களில் குழந்தைகளுக்கு தொடர்ந்து சுவாசம் தொடர்பான கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை வீடுகளில் தெளிக்கப்படும் சாணம் மற்றும் மாட்டு மூத்திரத்தினாலும் ஏற்படுகின்றன, என்ற உண்மை தெரிந்த உடன் பசுமாட்டு மூத்திரத்தை தெளிப்பாதை தவிருக்குமாறு ஆங்கிலேய அரசு விளம்பரங்களின் மூலம் மக்களிடம் கேட்டுக்கொண்டது.

 இந்த ஆண்டு மார்ச் மாதம் மோனக காந்தி இந்தியாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் பசுமாட்டுக் கோமியம் தெளிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு மத்திய அரசு ஊழியர்களின் சம்மேளனம் கடுமையான எதிர்ப்பைத்தெரிவித்திருந்தது. மத்திய அமைச்சர் ஒருவர் இதுபோன்ற பிற்போக்குத் தனமாக கருத்துக்களைத் தெரிவிப்பது நல்லதல்ல என்று கூறியிருந்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் நடைமுறைக்கு கொண்டுவந்துவிட்டது.

 சாணமும் மூத்திரமும்
ஓர் அறிவியல் பார்வை

 பசுமாட்டுச் சாணம் என்பது மாட்டின் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளில் ஒன்றுத்தான், பசுமாடு பெரும்பாலும் புல், தவிடு, குறிப்பிட்ட பசுந்தழைகளை உணவாக உண்கிறது, அவ்வாறு உண்ணும் உணவில் கால்சியம், சோடியம் மக்னீசியம் மற்றும் சிலிகா போன்றவைகளுடன் புரதம், மற்றும் சக்திக்கு தேவையான கார்போஹைடிரேட்டுகள் அதிகம் உள்ளன.

 பசுமாட்டின் சாணத்தில் அதிகபட்சமாக நைட்ரஜன், மீத்தேன், மற்றும் சிலிகா போன்ற வேதிப் பொருட்களுடன் நிணநீர் கழிவு, மற்றும் செரிக்கப்படாத இலை தழைகளின் மிஞ்சியப் பகுதி மற்றும் ஜெல்லிப் புரோட்டின்கள் உள்ளது. இதன் கரைசல் வீட்டு முற்றத்தில் தெளிக்கவும், சிமெண்டு இல்லாத தரைதளத்தில் பூசவும் பயன்படுகிறது.

 இந்தக் கரைசலில் மீத்தேன் வாயூ வெளிப்படுவதால் தோலின் மூலம் சுவாசிக்கும் ஈ, கரப்பான் மற்றும் சில நுன் பூச்சிகள் அந்தப் பகுதிக்கு வருவதில்லை, அதே நேரத்தில் மீத்தேன் தரையில் தவழும் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 மாட்டு மூத்திரம்


 மாட்டு மூத்திரத்தில் .4% கால்சியம், .1% பொட்டாசியம்,.13% பொட்டசியம் குளோரைடு , .3% மக்னீசியம், தாமிர ஆக்ஸ்டைடு 1.28%, அமேனியம் 2.65 %, சல்பர் .8%, சோடியம் போன்றவைகளுடன் அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகள் உள்ளது.

நீர் 95 விழுக்காடு உள்ளது.
 
 இதில் மேலே குறிப்பிட்ட அனைத்து வகை வேதிப்பொருளும் மனித உணவிலிருந்து கிடைக்கும் நலம் பயக்கும் வேதிப்பொருட்கள் அல்ல, நலம்பயக்கும் வேதிப்பொருட்களில் பல்வேறு வேதிவினைக்கு ஆட்பட்டு உருமாற்றப் பட்ட பிறகு பசுமூத்திரமாக வெளியேறும் தேவைப்படாத கழிவு வேதிப்பொருட்களாகும், எடுத்துக்காட்டாக பசுமூத்திரத்தில் உள்ள .13 விழுக்காடு சோடியம் குளோரைடு(உப்பு) எந்த விதத்திலும் மனிதர்களுக்கோ அல்லது பிற உயிரினங்களுக்கோ பயன்படாது. ஆக, இந்த மூத்திரம் பயனற்றது.

 எனவே, மாட்டுச்சாணமும், மூத்திரமும், கழிவுகளேயன்றி மருந்துகள் அல்ல. இவை உரங்களாக மாறினால் பயிர் நன்றாகவிளையும்! இதில் மதத்தைக் கலந்து, தெய்வீகத்தைப் புகுத்தி திரிபுவாதம் செய்வது அறிவுக்கும், மக்கள் நலத்திற்கும் எதிரானது ஆகும்.

உலகச் சாதனையாளர் பெரியார்........................



 மூத்திரச்சட்டியுடன் 13,19,622 கி.மீட்டர் பயணம் செய்து பேசியுள்ளார், அவர் பேசிய மொத்த நேரம் 21,400 மணிகள்.

 பெரியார் பேசிய மொத்த நேரம் 21,400 மணிகள், பொதுக் கூட்டங்கள் மொத்தம் 10,700, சுற்றுப்பயண தொலைவு 8,20,000 மைல்(13,19,622 கி.மீ) உலகில் இந்த சாதனையை மிஞ்சியவர் எவரும் இலர்.

 கம்பியில்லா பேசுங்கருவி ஒவ்வொர் சட்டைப் பையிலும் இருக்கும் என்பதை 100 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார்.

 பெரியார் என்றால் மனிதநேயம் என்று பொருள்.

ஓர் அரசக் குடும்பத்திற்குரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தாலும், எளிமையாய் எல்லா இன்னலும் ஏற்று மக்களுக்காக வாழ்ந்தார்.

 தன்னைப் போல பிறரை நேசிக்கச் சொன்னார். தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் பொதுமக்கள் நலனுக்கே கொடுத்தார்.

 சாதி ஒழிய வேண்டும். எல்லா மனிதரும் சம உரிமை, சமவாய்ப்பு பெற்று வாழ வேண்டும் என்றார்.
பெண்ணுரிமைக்காக அதிகம் உழைத்தவர் பெரியார். பெரியார் என்ற பெயரே பெண்கள் அளித்ததுதான். பெரியார் ஒரு இனத்துக்கோ ஒரு மொழிக்கோ உரியவர் அல்ல. அவர் உலகத் தலைவர்.

 தமிழர் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து சம உரிமையோடு கல்வி வேலைவாய்ப்பில் உரிய பங்கை பெற்று உயர்ந்து நிற்பதற்கு பெரியாரே காரணம்.

 தமிழகம் ஏற்ற பெரியாரை இந்தியா முழுமையும் ஏற்று இன்று உலகில் பல நாடுகளும் ஏற்றூ போற்றுகினறன்.

 அவரது மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்ற பாவேந்தரின் கணிப்பு நம் கண்முன்னே உண்மையானது.
வாழ்க பெரியார்!

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

இராஜாஜி ஒரு கொலைகாரர்! உங்களுக்கு தெரியுமா?




 ஒரு வழக்கு சம்பந்தமாக நாமக்கல் சென்றுவிட்டு நடுஇரவு குதிரை வண்டியில் சேலம் திரும்பினார். இரவில் கொலை கொள்ளை அதிகம் நடக்கும் என்பதால் கைதுப்பாக்கியுடன் சென்றார். வண்டியில் காவற்காரனும் வந்தான்.

 வண்டியில் அமர்ந்திருந்த இராஜாஜி இரவு என்பதால் தூங்கிட்டார். சுங்கச்சாவடியில் வண்டி நின்றது.

 காவற்காரன் சுங்கப்பணம் கட்டிவிட்டு, மீண்டும் வண்டியின் பின்புறம் வந்தான். தீடீர் என்று விழித்த இராஜாஜி யாரோ கொலைகாரர் என்று நினைக்க காவற்காரானை தன்கைத் தூப்பாக்கியால் சுட்டார் அவன் மண்ணில் சாய்ந்தான் கூட்டம் கூடியது. காவற்காரனை சுட்டுவிட்டதால் அதிர்ச்சியடைந்த இராஜாஜி மருத்துவமனைக்கு காவற்காரனைக் கொண்டு சென்றார். ஆனால் அவன் வழியிலே இறந்துவிட்டான்.

 இராஜாஜி மீது கொலைக் குற்றம் சாட்டி வழக்கு நடந்தது. இருட்டில் தற்காப்புக்காகச் சுட்டார் என்று நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார்.

‪#‎ஆதாரம்‬: இராஜாஜி வாழ்க்கை வரலாறு (1949 பக்கம் - 20)

பேராசைக்காரர் பார்ப்பன இராஜாஜி!


இராஜகோபாலாச்சாரியார் இந்தியாவின் கவர்னர்ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றவர்.

 “நான் நீண்டகாலம் வாழ்வேன் என்றும். எனவே, அக்காலம் வரை எனது ஓய்வூதியத்தைக் கணக்கிட்டால் அது கிண்டி ராஜ்பவன் மதிப்பைவிடக் கூடுதலாகும்.

 எனவே, கிண்டி ராஜ்பவன் முழுவதையும் எனக்கு கொடுத்துவிடுங்கள்” எனகேட்டவர் அவர். ஆனால் அவர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.
பார்ப்பான் பேராசைக்காரன் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு

 - ஆதாரம்: குங்குமம் (07.04.2000)

குருதிக் கொடையும் உடற்கொடையும் பிழைக்க மட்டுமல்ல பேதம் அகற்றவும்!

குருதிக் கொடையும் உடற்கொடையும்
பிழைக்க மட்டுமல்ல பேதம் அகற்றவும்!
இது தொண்டல்ல புரட்சி!.................


 உலகில் பல தொண்டு அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் குருதிக் கொடை மற்றும் உடற்கொடை செய்வதை ஊக்கப்படுத்தி உதவிவருகின்றன. இது மனிதநேயத்தின் மலர்ச்சியால், உயிர் காக்கும் முயற்சியால் செய்யப்படும் தொண்டாகும்.

 ஆனால், மக்களிடையே சாத்,மத,பேதம் ஒழிக்க எண்ணுகின்றவர்கள், குருதிக் கொடையையும், உடற்கொடையையும் உயிர் பிழைக்கச்செய்யும் உதவியாக மட்டும் எண்ணாமல், இந்த இரண்டையும் ஜாதி, மத பேத ஒழிப்பிற்கான சரியான கருவியாகவும் கையாள வேண்டும்.

 ஆம். ஒரு தாழ்த்தப்பட்டவனின் இரத்தம் பார்ப்பனர் ஒருவருக்கு ஏற்றப்படும் போது, தாழ்த்தப்பட்டவன் இரத்தமும் பார்ப்பனர் இரத்தமும் ஒன்று கலக்கின்றன. ஓர் அருந்ததியர் உடலுறுப்பை ரெட்டியாருக்குப் பொருத்தும் போது அங்கு இரு ஜாதியும் ஒன்று கலந்து இரண்டும் ஒன்றாகிறது.

 ஜாதி மதபேத ஒழிப்பிற்கு இதைவிடச் சரியான வழி வேறொன்று இல்லை என்பதால் இவை எந்த அளவிற்குச் செய்யப்படுகின்றனவோ அந்த அளவிற்கு ஜாதி, மத ஒழிப்பு சாத்தியமாகிறது.

 எனவே, இப்புரட்சியில் அனைவரும் பங்களிக்கும் வகையில் ஒவ்வொருவரும் உடற்கொடையையும் குருதிக் கொடையையும் அளித்து, ஜாதிமத பேதமற்ற சமத்துவ சமுதாயம் அமைக்கத்துணை நிற்க வேண்டுகிறோம்.

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

https://www.facebook.com/manjaivasanthan

படியுங்கள்! அனைவருக்கும் பகிருங்கள்!

எது இந்தியப்பண்பாடு?



 இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை கூறுவதுதான் இந்தியப் பண்பாடாம்.
இந்தப் பண்பாட்டைப் பரப்ப பள்ளிக் கல்லூரிகளில் பகவத்கீதை, இராமாயணம், மகாபாரத கட்டாயப் பாடமாகும்.

 இவற்றை இஸ்லாமிய, கிருத்துவ மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டுமாம்.

மதவெறிபிடித்த மத்திய அரசு இவ்வாறு கூறுகிறது!

 கணவன் இல்லாது குந்தி பிள்ளைகள் பெற்றாள்! அய்ந்து ஆண்களுக்கு ஒரே மனைவி பாஞ்சாலி! மகாபாரதம் கூறும் இதுதான் இந்தியப்பண்பாடா?
ஜாதித் தொழிலையே செய்யவேண்டும்! கொலை செய்யத் தயங்காதே, கொலை செய்யப்பட்டால் புதுப்பிறவி கிடைக்கும் அதற்காய் மகிழ் என்கிறது பகவத்கீதை இது தான் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நீதியா?
தங்கை சீதையை மணந்தான் இராமன் இதுதான் பண்பாடா?

 தம்பி இலட்சுமணனோடு ஓரினப்புணர்ச்சி செய்தான் இராமன் இதுதான் கலாச்சாரமா?

 இந்தக் கலாச்சாரத்தை பள்ளிக் கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டுமா?

 இஸ்லாமிய மாணவர்களும், கிறித்தவர்களும் இவற்றைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்பது அயோக்கியத்தனம் இல்லையா?

 மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்! அது மதவாத ஆட்சியை முடிக்கும்!
எச்சரிக்கை!

 மாணவர்களுக்கு பண்பாட்டை போதிக்க வேண்டும் என்றால் அதற்கு பாடமாக வைக்க வேண்டிய ஒரே நூல் திருக்குறல் மட்டுமே.
நேர்மையான அரசாக இருந்தால் திருக்குறளை கட்டாய மாக்க வேண்டும் அதை விட்டு இந்த நூல்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பது மதவெறி இல்லாமல் வேறென்ன

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

Tuesday, September 8, 2015

வீரமணிக்குக் கேள்விகளா? விடை இதோ! (பகுதி 2)

தொடர்ச்சி.......


கேள்வி 11: ஒரு பிராமணப் பெண் தலைமை ஏற்று நடத்தும் அ தி மு க கட்சி ஒரு திராவிடக் கட்சியாயிற்றே. இதை எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியம் உங்களிடம் உண்டா?

பதில் 11: பார்ப்பனப் பெண் ஆட்சி என்பதால் அதை என்றைக்குமே நாங்கள் எதிர்த்ததில்லை. தி.மு.க. தவறு செய்தபோது, ஜெயலலிதாவைத்தான் ஆதரித்தோம். இடஒதுக்கீடு உயர வழி செய்தமைக்கு பட்டம் கொடுத்துப் பாராட்டினோம்.

தப்பு செய்தால் யாரையும் எதிர்ப்போம். சமூகநீதி காக்கும் யாரையும் பாராட்டுவோம். எங்கள் தைரியம் அவாளுக்கு நன்றாகவே தெரியும் வோய்!

கேள்வி 12: அந்த ஒரு பிராமணப் பெண்ணின் காலில் விழும் ஒரு மந்திரியையாவது, சட்டசபை உறுப்பினரையாவது, ஒரு கவுன்சிலரையாவது கேலி பேசும் ஆண்மை உங்களிடம் உண்டா?

பதில் 12: யார் காலில் விழுந்தாலும் அதைக் கண்டிப்பதில் முதலாக நிற்பது நாங்கள் என்பதை நாடே நன்கறியும். யாருக்கும் அஞ்சும் இயக்கம் இதுவல்ல.

கேள்வி 13: பிராமணர்களால் உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி.சி.எஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன், வேண்டாம் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா?

பதில் 13: பிச்சையெடுத்துப் பிழைக்க இந்த நாட்டுக்கு வந்து, தமிழன் கட்டிய கோயிலுக்குள் புகுந்து, ஆட்சியில் புகுந்து பிழைப்பு நடத்தும் பார்ப்பனர்கள் பார்ப்பனர் அல்லாத நிறுவனங்களில் வேலையிலிருந்து வெளியேறிவிட்டு, பார்ப்பன நிறுவனங்களில் மற்றவர்களை சேர்ப்பதில்லை என்று முடிவு செய்! அதை விட்டுவிட்டு நீ எங்கள் நிறுவனத்தில் நுழைந்து பிழைப்பாய். எங்கள் நாட்டிலிருந்து கொள்ளையடித்து நீங்கள் உருவாக்கியிருக்கும் நிறுவனத்தில் நாங்கள் வரக்கூடாது என்பது அயோக்கியத்தனம் அல்லவா?

கேள்வி 14: பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விடு, பார்ப்பானைக் கொல் என்ற உங்களால் அந்த பாம்பை உங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர முடியுமா?

பதில் 14: பைத்தியக்காரா! இது என்ன உளறல். இதைச் சொன்னது பெரியார் அல்ல என்ற உண்மை நொய்யரிசிகளான நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

இது ஓர் வடநாட்டுப் பழமொழி என்பதை பீவர்லி நிக்கல்ஸ் என்பவர்  1944ல் எழுதிய  Verdict on India என்ற நூலிலிருந்து எடுத்துக் காட்டி எப்போதோ விளக்கமளித்துவிட்டார் ஆசிரியர் கி.வீரமணி.
நாங்கள் எந்த தனி நபரையும் எதிர்ப்பவர்களும் அல்ல. வன்முறையில் ஈடுபடுகின்றவர்களும் அல்ல. அப்படி இற்ஙகியிருந்தால் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க மாட்டோம்.

கேள்வி 15: குங்குமம் வைத்தவரை நெற்றியில் என்ன காயம் ரத்தம் வந்திருக்கிறதே என்று கேலி பேசியவர் வைணவத்தை பரப்பிய ராமானுஜரைப் பற்றி எழுதுவதை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா?

பதில் 15: அவரே பதில் சொல்லிவிட்டாரே! எதையும் அறியாமல் அரைவேக்காட்டுத்தனமாக நீயெல்லாம் கேள்வி கேட்டு வந்துவிட்டாய்! ஆன்மீகத் தலைவர்கள் சுயமரியாதைக்கும் சமதர்மத்திற்கும் பாடுபட்டிருப்பின் அவர்களை நாங்களே பாராட்டியிருக்கிறோம்.

தொடர் வரும்போது தட்டிக் கேட்க வேண்டிய கட்டாயம்வரின் தட்டிக் கேட்போம். கொள்கையில் சமரசம் என்றைக்கும் எங்களிடமில்லை! தி.மு.க.வோடு நாங்கள் கடுமையாக மோதிக்கொண்டதெல்லாம் வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும். உமக்கெங்கே தெரியப் போகிறது.

கேள்வி 16: ஹிந்துக்கள் தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். ஹிந்துக்கள் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தவர்கள் மோதிரம் அகற்றும் போராட்டம் நடத்தும் ஆண்மை இருக்கிறதா?

பதில் 16: அடிமைச் சின்னம் எது இருந்தாலம், அறிவுக்கு ஒவ்வாதது எதுவாயினும் அதை அகற்றிக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அதைச் செய்ய யார் முன்வந்தாலும் நாங்கள் வாய்ப்பளிப்போம். கிறிஸ்தவர்களின் திருமண மோதிரம் இருபாலருக்குமானது; தாலியைப் போல பெண்கள் கழுத்தில் மட்டும் திணிக்கப்படுவதல்ல.

அதே நேரத்தில் மத அடையாளங்களாக அலைகள் ஓய்வதில்லை படத்தில் பூணூலும் சிலுவையும் அகற்றப்பட்டதை வரவேற்றுப் பாராட்டியவர்கள் நாங்கள்.

கிறித்தவ, இஸ்லாமிய மதங்களை விமர்சித்து நாங்கள் நூல் வெளியிடுவது உம்மைப் போன்ற அரைவேக்காடுகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. இனிமேலாவது படித்துத் தெரிந்து கொள்.

கேள்வி 17: பார்ப்பனன், வைசியன், ஷத்திரியன், சூத்திரன் என்ற பிரிவு அவரவர்களின் பிறப்புத் திறனை கொண்டு நெறியமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் காவல் நிலையங்களில் அல்சேஷன் கூடாது பாமரேனியன் வகை நாய்க்குட்டிகள்தான் காவலுக்கு வளர்க்கவேண்டும் என்று போராட்டம் நடத்தும் துணிவும், அறிவும் உங்களுக்கு உண்டா?

பதில் 17: அதென்ன பிறப்புத் திறன்? அட அடிமுட்டாளே! பிறவியில் திறமை பேசியவனெல்லாம் இன்று வெட்கித் தலைகுனிய, பார்ப்பனரல்லாதார் படிப்பில் சாதிப்பது உமக்குத் தெரியாதா?
சமையலுக்கு மட்டுமே பெண் என்ற நிலையை மாற்றி பெண்கள் சாதிப்பது உமக்குத் தெரியாதா?

தொழில்துறை, கலைத்துறை, அறிவியல்துறை, அரசியல் என்று எல்லாவற்றிலும் பார்ப்பானைவிட தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் சாதிப்பது உமக்கு மறந்து போயிற்றறா?

பார்ப்பான் மற்றவர்களைவிட எதில் புத்திசாலி, திறமைசாலியாய் இன்று சாதிக்கிறான்? காட்ட முடியுமா?

அப்துல்கலாமையும், மயில்சாமி அண்ணாதுறையையும்விட எந்த பார்ப்பான் சாதித்துவிட்டான்.

வழக்கறிஞராகட்டும், நிதியாகட்டும், நிர்வாகமாகட்டும் எதில் மற்றவர்கள் சாதிக்கவில்லை?
உம் கருத்துப்படி இராணுவத்திற்கு ஷத்திரியன் மட்டுந்தானே போகவேண்டும். பார்ப்பான் ஏன் போகிறான்? உம் வாதப்படி அது தப்பாயிற்றே!

ஆட்சிக்கும் ஷத்திரியன்தானே உரியவன். பார்ப்பான் எப்படிச் செல்கிறான். வணிகம் வைசியர்க்கு உரியது என்னும்போது இன்று பார்ப்பான் வருகிறான். தொழிற்சாலைக்கும் பார்ப்பானுக்கும் என்ன சம்பந்தம்? தர்ப்பைப் புல்லை புடுங்கி, பூணூலைத் தடவி வேதம் படித்துக்கொண்டல்லவா இருக்க வேண்டும்.

இதில் நாய் உதாரணம் வேற! ஒரு நாயைப் பார்த்தவுடன் இது இன்ன வகை என்று சொல்ல முடியும். ஆனால் ஒரு மனிதனைப் பார்த்தவுடன் இன்ன ஜாதி என்று சொல்ல முடியுமா? பிறப்பால் திறமை கூறும் நீயெல்லாம் ஒரு சமுதாய துரோகி, சமுதாய நோய் அல்லவா? அப்படியிருக்க, உமக்கெல்லாம் கேள்வி கேட்கும் யோக்கியதை ஏது? மனிதனைப்பற்றி பேசும்போது நாய் உதாரணம் தருகிறாயே!  நீயும் மனிதனும் ஒன்றா?

இன்றைய இடஒதுக்கீடுகூட, ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அமுக்கப்பட்டவர்கள் உடனடியாக உயர் ஜாதியினரோடு போட்டியிட முடியாது என்பதால்தானே ஒழிய, அவர்களுக்குத் திறமை இல்லை என்பதற்காக அல்ல. இடஒதுக்கீடு ஓர் இழப்பீட்டு உரிமை! அவ்வளவே!

உண்மை இப்படி இருக்க பிறப்புத் திறன் என்கிறாயே! உம்மையெல்லாம் மனிதன் என்றே அங்கீகரிக்க முடியாதே!

பிறப்புத் திறன்பற்றி பேசும் உமக்கு ஓர் உண்மையைத் தெரிவித்துக் கொள்கிறேன். பார்ப்பான் திறமையெல்லாம் சூழ்ச்சியும், பித்தலாட்டமும் மட்டுமே! மற்றபடி திறமை, அறிவுக்கூர்மை என்பதெல்லாம் அசல் மோசடி. இன்றைய சாதனைகளை ஆய்வுக்குட்படுத்திப் பார்த்தால் இந்த உண்மையை அறியலாம்.

கேள்வி 18: ஈ. வெ. ரா. கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்ற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்ற பயமா?

பதில் 18: பதிப்புரிமை பற்றிய வழக்கைப் புரிந்துகொள்ளாமல், திரிபுவாதம் பேசுவதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பெரியார் கொள்கையை யார் பரப்ப வேண்டாம் என்றது. அவர் கொள்கை பரப்ப ஒரு நிறுவனம் அவரால் அமைக்கப்பட்டு இருக்கையில் அவர் நூலை வெளியிடும் உரிமை அதற்குத்தானே இருக்க முடியும்? அது வெளியிடும் நூலை ஆயிரக்கணக்கில் யார் வேண்டுமானாலும் வாங்கி பரப்பலாமே. ஆளாளுக்கு அச்சிட்டு விற்கத் தலைப்படும்போது திரிபுகள், வர வாய்ப்புண்டே.

பெரியாரின் தொண்டர் வெளியிட்ட நூலிலே பெரியார் பாஸ்போர்ட் இல்லாமல் அயல்நாடு போனார் என்று தவறான கருத்து வெளிவந்த வரலாறு உமக்குத் தெரியாது. இதுபோன்ற தவறு நிகழக் கூடாது என்பதற்குச் சொல்லப்பட்டதே அது!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் இலாப நோக்கில் நூல் வெளியிடுவதில்லை என்பது உமக்குத் தெரியுமா? தெரிந்தால் சில்லறைத்தனமாக கேட்டிருக்க மாட்டாயே!

கேள்வி 19: பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்பு சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டை பற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?

பதில் 19: அசல் அயோக்கியத்தனமான கேள்வி இது! பூணூலும் கருப்புச் சட்டையும் ஒன்றா? கருப்புச் சட்டை ஒரு இயக்கத்தின் சீருடை. அது இழிவு நீக்கவந்த ஏற்பாடு. அது யாரையும் இழிவு படுத்தாது.

கேள்வி 20: ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதை பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் நம்பி பொழப்பு நடத்துகிறீர்களே உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?

பதில் 20: மக்களை ஏமாற்றியே பிழைப்பு நடத்தும் கூட்டம் இந்தக் கேள்வியைக் கேட்பதுதான் வேடிக்கை! தன் வீட்டுச் சாப்பாடு, தன் பணம், பதவி – பலன் எதிர்பாராத ஆனால், இழிவு, ஏச்சு, பேச்சு எல்லாவற்றையும் ஏற்று இந்த மக்கள் சுயமரியாதையும், சூடு, சொரணையும், விழிப்பும் சமவாய்ப்பும் பெற உழைப்பவர்கள் நாங்கள். இது பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு நன்கு தெரியும். இந்து என்ற போர்வையில் நீங்கள் பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று கனவு காணாதீர்கள்! பார்ப்பனரல்லாதார் விரைவில் விழிப்புடன் வீறு கொண்டு எழத்தான் போகிறார்கள். அப்பொழுது தெரியும் உங்கள் நிலை! எச்சரிக்கை!


- மஞ்சை வசந்தன்  https://www.facebook.com/manjaivasanthan

வீரமணிக்கு 20 கேள்விகள் : வீரமணிக்குக் கேள்விகளா? விடை இதோ! (பகுதி 1)

ஆசிரியர் கி.வீரமணிக்கு 20 கேள்விகள் என்று சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பரப்பப்படும் அவதூறான அரைவேக்காட்டுத்தனமான கேள்விகளுக்கு உரிய பதில்கள் இங்கு தரப்படுகின்றன. பெரியார் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவனும் எவனுமில்லை; பெரியார் இயக்கத்தவரிடம் கேள்வி கேட்டு வென்றவனும் எவனுமில்லை.

கேள்வியெழுப்பும் சிந்தனையை, துணிவை வளர்த்த இயக்கம், மேடையில் கேள்வி கேட்கும் முறையை தமிழகத்தில் உருவாக்கிய இயக்கம் எந்த கேள்விக்கும் சளைத்ததில்லை. திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவருக்கு கேட்கப்பட்டுள்ள இந்தக் கேள்விகள் – எளிய, இளைய திராவிடர் இயக்கத் தோழராலும் கூட விளக்கமளிக்கப்படக் கூடியவையே! அப்படியொரு தோழரின் பதில்கள் கீழே!

கேள்வி 1. ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?

பதில் 1. பார்ப்பான் ஜாதி பேதம் பார்ப்பவன் மட்டுமல்ல; ஜாதி பேதங்களை உருவாக்கி, அதைச் சாஸ்திர ரீதியாக வலுவூட்டி வழக்கில் கொண்டு வந்ததோடு, இன்றளவும் அதைக் காப்பாற்றத் துடிப்பவர்கள்; எதிர்காலத்திலும் நிலைநிறுத்த முயல்பவர்கள். அதனால்தான் அவர்களை முதன்மை இலக்காக்கி கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம்.

மனிதர்களுக்குள் ஜாதிபேதம், மதபேதம், பிறப்பால் பேதம் யார் பார்த்தாலும், அவர்கள் எந்த ஜாதியினராயினும், எம்மதத்தவராயினும் அவர்களை நாங்கள் எதிர்க்கிறோம்; கண்டிக்கிறோம். இதில் எங்களுக்கு யாரும் விதிவிலக்கு அல்ல. நாங்கள் பார்ப்பனர்களை மட்டுமே எதிர்க்கிறோம்; கண்டிக்கிறோம் என்பது உண்மைக்கு மாறான புரட்டு.

கேள்வி 2: கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாக கூறமுடியுமா?

பதில் 2:  கடவுள் இல்லை என்றால் எக்கடவுளும் இல்லையென்பதே பொருள். நாங்கள் இந்துக்கடவுள் இல்லையென்று சொல்லவில்லையே! எனவே, உங்கள் கேள்வி புரட்டு; மோசடி!

கேள்வி 3: தியாகராஜர் ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?

பதில் 3: அடிப்படையில் இவ்வொப்பீடே தவறானது. ஒருவருக்கு விழா எடுப்பதை கூடாது என்பது எங்கள் நோக்கமல்ல. இனிய தமிழிசையை விட்டுவிட்டு தெலுங்குக் கீர்த்தனை, கர்நாடக இசை என்று அலையும் எம் இன மக்களை நாங்கள் விழிப்பூட்டுவதை திசைதிருப்பி, சம்பந்தமில்லாததோடு இணைத்து முடிச்சுப்போடும் உம் நரித்தந்திரம், வித்தைகளெல்லாம் எங்களிடம் பலிக்காது.

தமிழில் பேசு, அந்திய மொழிக்கு அடிமையாகாதே! தமிழ்ப் பெயர் சூட்டு, ஆங்கிலம், சமஸ்கிருதம் கலந்து தமிழைக் கெடுக்காதே என்று சொல்வது எப்படி தமிழர் கடமையோ அப்படித்தான் தமிழிசையைப் பாடு, அதற்கு உயர்வு கொடு என்பதும். இதை முதலில் புரிந்து  கேள்வி கேள்! தவிர, பசும்பொன் முத்துராமலிங்கம் ஜெயந்தி என்ற பெயரிலோ, அல்லது எந்த ஜாதியின் பெயரிலும் நடைபெறும் ஜாதி நடவடிக்கைகளையும், பேரணிகளையும், அதனால் ஏற்படும் ஜாதிக் கலவரங்களையும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவதையும், ஓட்டுக்காக இத்தகைய நிகழ்ச்சிகளில் அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தோர் பங்கேற்பதையும் கண்டித்தே வந்துள்ளோம். இதில் எந்த தயக்கமும் மறைப்பும் இல்லை.

கேள்வி 4: பிராமணன் பூணூலை அறுக்கத் துணிந்த உங்களுக்கு ஒரு கிறிஸ்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலை பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா?

பதில் 4 : முதலில் நாங்கள் பூணூல் அறுக்கவில்லை. எனவே, எங்களிடம் இக்கேள்வியைக் கேட்பதே அயோக்கியத்தனம். எனினும் இக்கேள்விக்கு எம் பதில்.

பூணூலை அறுத்தவர்கள் ஏன் சிலுவையை அறுக்கவில்லை, தொப்பியை, தலைப்பாகையை அகற்றவில்லை என்பது அர்த்தமில்லை, அறியாமையின்பாற்பட்ட கேள்வி.

தொப்பியும், சிலுவையும், தலைப்பாகையும் மற்றவர்களை இழிவுபடுத்தவில்லை. பூணூல் மற்றவர்கள் இழிமக்கள், சூத்திரர்கள் என்று அறிவிக்கும் அடையாளமாகவும், தான் மட்டுமே உயர்பிறப்பாளன் என்று கூறுவதாயும் இருப்பதால் பாதிக்கப்படுவோர், இழிவுபடுத்தப்படுவோரில், உணர்ச்சி வசப்படும் ஒரு சிலரின் எதிர்வினை இது. எதிர்வினை வரக்கூடாது என்றால், மாற்றாரை மட்டப்படுத்தும் இழிவுபடுத்தும் பூணூலை அவர்களே கழற்றி, மனிதர்களைச் சமமாக மதிப்பதே சரியான தீர்வு.

கேள்வி 5: தாலி அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் உண்டா?

பதில் 5: தாலி அகற்றுவது ஒரு நிகழ்வு, அது ஓர் விழிப்பூட்டும் பிரச்சாரம், செயல் விளக்கம். அதைப் போராட்டம் என்பதே முதலில் புரட்டு, தவறு. போர் என்பது ஒருவருக்கு எதிராகச் செய்யப்படுவது. தாலி அகற்றும் நிகழ்வு. யாருக்கும் எதிராகச் செய்யப்படுவதில்லை.

திராவிடர் கழகத் தோழர்கள் தங்கள் மகனுக்கோ, மகளுக்கோ உரிய இணையரை இச்சமுதாயத்திலிருந்துதான் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே, கடவுள் மறுப்பையும், தாலி மறுப்பையும் கட்டாயப்படுத்த இயலாது. முடிந்தமட்டும் முயற்சி செய்து சடங்கு ஒழிப்பு, புரோகித மந்திர ஒழிப்பு செய்கிறோம்.

நாங்கள் எங்கள் குடும்பத்தினராயினும் அவர்களைக் கட்டாயப்படுத்தி எதையும் செய்யச் சொல்வதில்லை. அவர்களாக மனம் மாறி உண்மையை, சரியானதை ஏற்கச் செய்யவே முயற்சிப்போம். அப்படியிருக்க கட்சிக்காரர்களை, நண்பர்களை, உறவினர்களை கட்டாயப்படுத்துவதில்லை.

திராவிடர் கழகத்தவர் கடவுள் மறுப்பிலும், சடங்கு மறுப்பிலும், புரோகித மந்திர எதிர்ப்பிலும், தவிர்ப்பிலும் உறுதியாய் இருப்பர். தாலி கட்டுவதில் கட்டாயப்படுத்த இயலுமா? திருமணம் திராவிடர் கழகக் குடும்பத்துக்குள்ளே செய்ய இயலுமா?

திராவிடர் கழகத்தவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் வீட்டிலும், தாலி அணிய விரும்புகின்றவர் வீட்டிலும் திருமண சம்பந்தம் கொள்ளும் கட்டாயம் வரும்போது சம்பந்திகளை எப்படி கட்டாயப்படுத்த முடியும்? அவர்களுக்கும் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறோம்… திருமணத்திற்கு முன்போ, பின்போ! திருமணத்திற்கு முன்பே ஏற்போரின் திருமணங்கள் தாலியில்லாமல் நடக்கின்றன. திருமணத்திற்குப் பின்பு காலப்போக்கில் மனம் மாறி கழற்றுகின்றவர்களுக்கு நாங்கள் வாய்ப்பளிக்கிறோம், அவர்களைப் பாராட்டிச் சிறப்பிக்கிறோம்.

இப்போது நடந்ததும் அப்படியொரு நிகழ்வே! இது ஒன்றும் புனிதப்படுத்தும் சடங்கு அல்ல; அடிமைத் தளையை அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி! சிந்தனைத் தெளிவு பெற்றவர்கள் அகற்றிக் கொள்கிறார்கள். இதைப் பார்க்கும் பிறர் துணிவு பெறுகிறார்கள்.

திராவிடர் கழகத்திலோ, அல்லது பெரியார் டிரஸ்டிலோ என்று வலியுறுத்தி இந்தக் கேள்வியைக் கேட்கத் தூண்டுவது என்ன காரணம் என்பதையும் நாங்கள் அறிவோம். ‘திராவிடர் கழகத் தலைவரின் மனைவி கழுத்தில் இருக்கும் தாலியை முதலில் கழட்டுங்கள்’ என்று கட்டியிருப்பதைப் பார்த்தவர் போல பேசும் அவசரக் குடுக்கைகளின் கேள்வி தான் வேறு வடிவில் நாசூக்காக கேட்கப்படுகிறது. அந்தக் கவலையே வேண்டாம். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் திருமணம் (இவர்களின் கருத்துப்படி) கொழுத்த ராகு காலத்தில் ஜாதி மறுப்பு, தாலி மறுப்பு, மூடநம்பிக்கை மறுப்பு என முழுமையாக நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் ஆகும். 

கேள்வி 6: எடுத்ததற்கெல்லாம் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த திராவிடக் கட்சிக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்த கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரசாரம் செய்ய தைரியமுண்டா?

பதில் 6:  அறியாமையின் உச்சத்தில் கேட்கப்படும் கேள்வி; அரைவேக்காட்டுத்தனமான கேள்வி இது.

முதலில் நாங்கள் தேர்தலில் அல்ல; எனவே, நாங்கள் எங்களுக்காக வாக்கு கேட்க வேண்டிய கட்டாயம் இல்லை.

ஆனால், அரசியலில் பங்குகொண்டு வாக்கு கேட்கும் எக்கட்சியும் கடவுள் மறுப்பைக் கொள்கையாகக் கொண்ட கட்சியல்ல. அதனால், அதை ஒரு நிபந்தனையாக வைத்து வாக்குக் கேட்டால், எந்தக் கட்சிக்கும் அதிக வாக்கு கிடைக்காது. காரணம் பெரும்பாலான மக்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள்.

தேர்தலும் வாக்கெடுப்பும் மக்களுக்கான அரசை, மக்கள் மேம்பாட்டை, நாட்டின் வளர்ச்சியை உருவாக்குவதற்காகவே. மாறாக, கடவுள் உண்டா இல்லையா என்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை.

கடவுள் இல்லை என்பது அறிவியல் உண்மை. அறிவியல் மனப்பான்மையை, பகுத்தறிவை, அறிவியல் உண்மைகளை மக்களுக்குச் சொல்லி விழிப்பூட்ட வேண்டும் என்பது ஒரு குடிமகனின் கடமை என்கிறது நமது அரசமைப்புச் சட்டம். அதை நாங்கள் பொறுப்போடு செய்கிறோம். இதில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. நம்பிக்கை, விழிப்புணர்வு அவர்களாகத் தெரிந்து விழிப்பு பெற்று வரவேண்டியது. கட்டாயப்படுத்தி உருவாக்குவது அல்ல. இதுவே எங்கள் கொள்கைப் பரப்பும் நெறி!

கேள்வி 7:  கடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ வெ ரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா? அல்லது அண்ணாதுரை, காமராஜர், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர் அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும் உங்களிடம் திராணி இருக்கிறதா?

பதில் 7 :  இது நீண்டகாலமாகக் கேட்கப்படும் கேள்வி. இதற்குப் பலமுறை பதில் கூறியிருக்கிறோம். கடவுள் என்பது இல்லாதவொன்று. கற்சிலைக்குப் பாலும், தேனும் ஏன்? உண்ணும் பொருளை ஏன் பாழாக்க வேண்டும். அதை ஏழைக்குக் கொடுக்கலாமே என்றுதான் கேட்கிறோம்.

பூ என்பது அன்றைக்குப் பூத்து மாலை வாடக்கூடியது. தலைக்கு வைத்தாலும் சிலைக்கு வைத்தாலும் அதுதான் நிகழும்.

பெரியார் சிலைக்கு மாலை போடுவது, சமாதிக்கு மாலை வைப்பது பெரியார் அதை விரும்புகிறார் என்பதற்காக அல்ல. பெரியார் உயிருடன் இருக்கும்போதே மாலையை விரும்பியவர் அல்ல. மாலைக்குப் பதிலாய் பணமாய்க் கொடுங்கள் கட்சி வளர்ச்சிக்கு உதவும் என்று கூறி அதன்படி நடந்த பகுத்தறிவுவாதி.

பெரியார் போன்ற தலைவர்களுக்கு பூமாலை வைப்பது அதை அழுகுபடுத்தவே. பிறந்த நாளில், நினைவு நாளில் அச்சிலை, நினைவிடம் அன்றைய நிகழ்வுக்காக அடையாளப்படுத்தப்படுகிறது; அழகுபடுத்தப்படுகிறது அவ்வளவே.

இந்த பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்வுகள்கூட சடங்கல்ல. அவை பிரச்சார வழிமுறைகள். மக்களுக்கு அவர்களின் கொள்கையை, பணியை அறியச் செய்வதற்கான செயல்திட்டம் இது.
ஆனால், பால், தேன், பருப்பு, பழம், எண்ணெய், ஆடையென்று மக்களுக்குப் பயன்படக் கூடியவை பாழாக்குவதையே நாங்கள் கண்டிக்கிறோம், எதிர்க்கிறோம். அதை அனைவரும் எதிர்க்க வேண்டும்.

கேள்வி 8: பிராமணனை மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் பிராமணனைத் தவிர மற்றவர்கள் முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது கூறுகிறீர்களா?

பதில் 8 : பார்ப்பன (பிராமண)  எதிர்ப்பு என்பது தனிநபர் விரோத எதிர்ப்பல்ல என்பதை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த தனிப்பட்ட பார்ப்பனரும் எங்களுக்கு எதிரிகள் அல்ல. பெரியார் இராஜாஜியோடு நண்பராக இருந்தார். கமலகாசன், ஞாநி போன்றவர்களை நாங்கள் மதிக்கிறோம்; பாராட்டுகிறோம். சோ, சுப்பிரமணியசாமி போன்றவர்களையே நாங்கள் எதிர்க்கிறோம்.

தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பனர் எதிர்ப்பு பற்றி மிகத் தெளிவாக 1953லே கூறியுள்ளார்.

பார்ப்பனர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகமும் நானும் சொல்வது எல்லாம், விரும்புவது எல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான். இந்த நாட்டில் நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான். அவர்கள் அனுசரிக்கிற சில பழக்க வழக்கங்களையும், முறைமைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். இது அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக் கொள்ளலாம். விஞ்ஞானம் பெருக்கம் அடைந்துவிட்டது. நமக்குள் பேதங்கள் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும், சகோதர உரிமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே பாடுபடுகிறேன்.

எனவே, பார்ப்பன எதிர்ப்பு என்பது தனிமனித வெறுப்பின் விளைவல்ல. பார்ப்பனிய (பிராமணிய) செயல்பாடுகள், சாஸ்திரங்கள் பெரும்பாலான மக்களின் இழிவிற்கும், தாழ்விற்கும் காரணமாகி, தமிழ்மொழியின் இழிவிற்கும், இனமான, சுயமரியாதை உணர்வுகளுக்கும் எதிராய் இருப்பதால் அதை எதிர்க்கிறோம்.

மற்றவர்கள் தாங்கள் எப்படி வளர்வது என்பதைப் பற்றி சிந்திக்கிறார்கள். பார்ப்பனர்கள் மற்றவர்கள் வளரக் கூடாது என்றும், தனக்குக் கீழே இருக்க வேண்டும் என்றே முயற்சிக்கிறார்கள். இதுவே வேறுபாடு.

அவர்கள், மற்றவர்களையும் சமமாக ஏற்று, சுயமரியாதைக்கு கேடில்லாமல் செயல்பட்டால் அவர்களை நாங்கள் ஏன் எதிர்க்கப் போகிறோம். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை உலக மக்களை ஒப்பாக எண்ணுகிறோம்; நேசிக்கிறோம் என்பதே உண்மை.

கேள்வி 9: நாட்டில் நடந்துள்ள கொலைகள், கற்பழிப்புகள், திருட்டுகள், ஊழல்கள், கொள்ளைகள் இவற்றில் பிராமணனின் பங்கு எவ்வளவு சதவிகிதம், பிற ஜாதியர்கள், பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா?

பதில் 9 : நாங்கள் என்ன காவல்துறையா நடத்துகிறோம்? இந்தக் கேள்விக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? எதனால் இக்கேள்வி கேட்கப்படுகிறது? அர்த்தமற்ற கேள்வி என்றாலும் பதில் சொல்ல விரும்புகிறோம்.

முதலில் இக்கேள்விகளையெல்லாம் கேட்பதே ஒரு பார்ப்பனர்தான் என்பது எங்களுக்குப் புரியும். பெரியார் தொண்டர்கள் ஆள் அசைவை மட்டுமல்ல, அவர்கள் எழுத்தைக் கொண்டே ஆளைக் கணக்கிடுவோம் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு எல்லாம் ஜாதியோடு தொடர்புடையது அல்ல. தனிநபர் இயல்பை, சூழலை, நடத்தையைப் பொறுத்தது. நல்லவர்கள் எல்லா ஜாதியிலம் உண்டு, எல்லா மதத்திலும் உண்டு. அதேபோல் கெட்டவர்களும் எல்லா ஜாதியிலும், மதத்திலும் உண்டு. இதில் ஜாதிவாரி, மதவாரி கணக்கெடுப்பு தவறு.

நீங்கள் கேட்கும் கேள்வியின் நோக்கம் புரிகிறது. பார்ப்பனர்கள் இவற்றில் அதிகம் ஈடுபடுவதில்லை. அவர்கள் நல்லவர்கள் என்று இதன்மூலம் சொல்ல முயல்வது புரிகிறது.
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியே உண்டு. கோயிலில் பக்தையை கற்பழித்த பார்ப்பனர் உண்டு. கடத்தல், நாட்டைக் காட்டிக் கொடுத்தல் செய்த பார்ப்பனர்கள் உண்டு. காந்தியையே சுட்டவன் ஒரு பார்ப்பான்தானே. இது கிடக்கட்டும்.

ஆயிரமாயிரமாண்டுகளாய் தான் மட்டுமே (தன் ஜாதி மட்டுமே) படிக்க வேண்டும். மற்றவன் படித்தால் அவன் நாக்கை அறுக்க வேண்டும் என்று ஆதிக்கம் புரிந்து சமுதாயத்தில் உயர்நிலையில் தன்னை அரசு ஆதரவோடு வைத்துக்கொண்ட பார்ப்பன இனம் ஒரு பக்கம். கல்வியில்லாது, உடலுழைப்பை நம்பி ஒதுக்கி, ஒடுக்கி, நசுக்கி, அடக்கி வைக்கப்பட்டு, தீண்டக் கூடாது என்று தள்ளிவைக்கப்பட்ட சமுதாயம் மறு பக்கம். இங்கு தவறுகள் எங்கு அதிகம் நடக்கும். அவற்றுக்குக் காரணம் யார்?

வன்னியர், முக்குலத்தோர் உள்ளிட்ட 89 ஜாதியினரை தமிழ்நாட்டில் குற்றப் பரம்பரையாகவே வைத்திருந்தார்கள். வன்னியர்களெல்லாம் குற்றவாளிகளா? அவர்களில் உயர்குணமும், தியாகமும் புரிந்தவர்கள் ஏராளம் இல்லையா?

எல்லோருக்கும் சமவாய்ப்பும், சம உரிமையும் கொடுக்கப்பட்ட பின் அவர்களிடம் இருந்த குற்றங்குறைகளும் இன்றைக்கு மறைந்து வருகின்றன.

சுற்றுச் சூழலும் சமுதாய அமைப்பும் குற்றவாளிகள் உருவாகக் காரணமாகிறது. எனவே, இது ஜாதியைப் பொறுத்ததல்ல. சமுதாயம் ஒட்டுமொத்தமாக முயன்று அரசின் துணையோடுதான் இவற்றைக் களைய வேண்டும்.

கேள்வி 10: கோவிலில் நுழைய அனுமதி மறுப்பு, தெருவில் நடமாடத் தடை, தடுப்பு சுவர் கட்டுதல், இரட்டை டம்ப்ளர் முறை, கவுரவக் கொலைகள் இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்துவது எவ்வளவு சதவிகிதம் பிராமணர்கள், எவ்வளவு சதவிகிதம் பிராமணரல்லாதோர் என்ற விவரம் தங்களிடம் உள்ளதா? இவற்றை எல்லாம் உங்களால் பகிர்ந்து கொள்ள முடியுமா? எதிர்த்து குரல் எழுப்பும் ஆண்மை உண்டா?

பதில் 10 :  கோவில் நுழையத் தடை, தடுப்புச் சுவர், இரட்டை டம்ளர், கவுரவக் கொலையெல்லாம் பார்ப்பனர் உருவாக்கிய ஜாதிக் கொடுமைகளின் விளைவுகள். உண்மையான குற்றவாளி அவர்களே! ஜாதிமுறை எக்காலத்துக்கும் வேண்டும் என்று இன்றளவும் முயற்சி செய்யக்கூடியவர்கள் அவர்கள்.

இவற்றை ஒழிப்பதில் எல்லா ஜாதியைச் சேர்ந்த பெரியவர்களும் முயற்சி செய்திருக்கிறார்கள். காரணம், எல்லா ஜாதியிலும் உயர்ந்தவர்கள், சமதர்மவாதிகள், மனித நேயர்கள் உண்டு. எனவே, இதை வைத்து இதில் எந்த ஜாதிக்கு அதிகப் பங்கு என்றெல்லாம் தராசு பிடிக்க முடியாது.

ஆனால், சில உண்மைகளை எல்லோரும் இங்கு புரிந்துகொள்ள வேண்டும்.

நந்தனை கோவிலுக்குள் நுழையாமல் தடுத்து, அவர் பிடிவாதம் பிடிக்க அவரை நெருப்பில் தள்ளி கொளுத்தியது யார்?

இராமலிங்க வள்ளலார் ஜாதி வேண்டாம் என்றதற்காக அவரை அடித்துக் கொன்றது யார்?

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகத் தடையாய் இருப்பது யார்?

தமிழை பூசை மொழியாக ஆக்கக் கூடாது, அது நீசபாஷை என்றது யார்?

காந்தியாரையே வீட்டிற்குள் அனுமதிக்ககாது தாழ்வாரத்தோடு அனுப்பியது யார்?

பார்ப்பனர் வீட்டில் மலம் எடுக்கக் கூட ஒரு தாழ்த்தப்பட்டவன் வரக்கூடாது. அதைவிட உயர்ஜாதிக்காரன் வந்துதான் பார்ப்பான் கழித்த மலத்தை எடுக்க வேண்டும் என்று கும்பகோணம் மாநகராட்சியில் தீர்மானம் போடச் செய்தது யார்?

இரட்டைக் குவளை எதிர்ப்பு, தடுப்பு சுவர் எதிர்ப்பு, கோயில் நுழைவு, ஜாதியொழிப்பு இவற்றிற்கு திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்கள், செய்த தியாகங்களும் எத்தனை எத்தனை? பார்ப்பன ஊடகங்கள் அதைச் சொல்லாது மறைக்கும். உங்கள் அறியாமைக்கு இதைவிட அடையாளம் வேறு வேண்டாம்.

இதையெல்லாம் மறைத்துவிட்டு இன்றைய இளைஞர்களை ஏமாற்ற முயற்சி செய்கிறீர்! முறியடிப்போம்!

(தொடரும்)  தொடர்ச்சி : http://manjaivasanthan.blogspot.in/2015/09/2.html

- மஞ்சை வசந்தன்  https://www.facebook.com/manjaivasanthan

தொடர்ச்சி : http://manjaivasanthan.blogspot.in/2015/09/2.html