அரசியல்

Tuesday, June 30, 2015

ஸ்வஸ்திக்



 ஸ்வஸ்திக் என்று இக்காலத்தில் அழைக்கப்படும் இக்குறியீடு தமிழரின் பழைய எழுத்து. இந்துமதவாதிகளும், ஹிட்லரும் இதைப் பின்னாளில் பயன்படுத்தியவர்கள். இதன் உண்மையான உரிமையாளர் தமிழர்கள்.

பண்டைய தமிழ் வரிவடிவில் ஓம் என்று எழுத இக்குறியீட்டைத் தமிழர்கள் பயன்படுத்தினர். ஓமன் என்ற மன்னனைக் குறிக்க இக்குறியோடு அன் விகுதிச் சேர்த்து எழுதினர்.

தமிழில் ஓம் என்றால் காத்தல் என்று பொருள். மக்களைக் காப்பவன் மன்னன் என்பதால் ஓமன் (ஓம்+அன்) என்று அழைக்கப்பட்டான்.

தமிழனுடைய அறிவு, தமிழனின் சொற்கள், தமிழனின் கலை, மருத்துவம், உடற்கலை என்று பலவும் ஆரியர்களால், உலகின் பலதரப்பு மக்களால் தமதாக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள்  ஸ்வஸ்திக்  குறியும் ஒன்று.

- மஞ்சை வசந்தன்.

Saturday, June 27, 2015

எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்! ஆண்டவர்கள் தமிழர்கள்! - 3

தொடர்ச்சி......

எகிப்தில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் காட்டினோம்.

அங்கு ஆண்ட மன்னர்கள், “தொட்டகாமன்” “அகநாடன்: போன்ற பெயருடையவர்கள். இப்பெயர்கள் தூயத் தமிழ்ச்சொற்கல் என்பதன் மூலம் மன்னர்கள் தமிழர்கள் என்பது உறுதியாகிறது.

அதே போல் கிளியோபாட்ரா ஒரு தமிழ்ப்பெண். அவரது கருநிறமே அதற்குச் சான்று. மேலும் அப்பெயர் ஒரு தூயத் தமிப்பெயரின் திரிபு.

கிளியோ பத்தரை என்பதே கிளியோ பாட்ரா என்று மாறியது. கிளிபோன்ற அழகி. பத்தரை மாற்று தங்கம் என்னும் பொருள் உடையது அது.

அதே போல் மெசப்பட்டோமியா பகுதியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். மெசப்பட்டோமியா என்பது, தூயத் தமிழ்ப்பெயரின் திரிபு.

“மிசைப்பட்டணம்” என்பதே அப்படி மாறியது. மிசையென்றால் மேடு. மேட்டில் உள்ள நகரம் என்பது அதன் பொருள். அதுவே மிசப்பட்டிணம் ----->மெசப்பட்டோமியா என்று மாறியது.


இந்தியா, கிழகாசிய நாடுகளில் முழுமையாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதை அடுத்து பார்ப்போம்.

- மஞ்சை வசந்தன்

தொடர்புடையவை :  

Friday, June 26, 2015

எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்! ஆண்டவர்கள் தமிழர்கள்! - 2

தொடர்ச்சி....

Asiatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.

"Heinrich Kari Brugsh" - "History of Egypt" என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.

இதே கருத்தை Bengsch Bey  என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்.

“எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அய்யத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார். Louis Jacolliot (1837 - 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l"Inde)
LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர் “எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர்” என்கிறார்.

தமிழ் மன்னர்கள் பெயர் மற்றும் கிளியோபாட்ரா பற்றி
அடுத்து பார்ப்போம்....

Thursday, June 25, 2015

எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்! ஆண்டவர்கள் தமிழர்கள்! - 1


ஆதாரங்கள் இதோ!

கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அங்கு வாழ்ந்தனர். “Comparison of Badalian and primitive Indian Races" என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்று ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் உறுதி செய்கிறார்.

Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார்.

Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.

மேலும் ஆதாரங்களை நாளை பார்ப்போம்.....

Wednesday, June 24, 2015

”பிரமிடு” என்பது தமிழ்ச் சொல்


இறந்தவர்களை எரிப்பது ஆரியர் வழக்கம். ஆனால், இறந்தவர்களை புதைப்பது தமிழர் (திராவிடர்) மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.

எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர். 

அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = ”பெருமிடு” என்று அழைக்கப்பட்டது. அதுவே ‘பிரமிடு’ என்று ஆனது.

ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும் அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.

எகிப்து தமிழர் மண், அங்கு ஆண்டவர்கள் தமிழர்கள், கிளியோ பாட்ரா தமிழ்ப் பெண் பொன்றவற்றை அடுத்தடுத்து அறிவோம்.

- மஞ்சை வசந்தன்

பிரமிடு தமிழர் கட்டியது!


>>  16 டன் எடையுள்ள துல்லியமாகச் செதுக்கப்பட்ட கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி, 13 ஏக்கரில், மயிரிழைகூட மாறாது நேர்த்தியாக, செப்பமாக பிரமிடு அமைத்தவர்கள் தமிழர்கள்.

350 அடி உயரத்துக்கு 260 கோணத்தில், மேலேறிச் செல்ல அம்புபோல் நீண்ட பாதையைக் குடைந்து உருவாக்கியவர்கள் தமிழர்கள்.

>>>  மற்ற இனமெல்லாம் நாடோடிகளாய் திரிந்த காலத்தில் நாகரிகத்தின் உச்சத்தில், நகர நாகரிகத்துடன், பொறியியல் நுட்பத்துடன், மூடநம்பிக்கைத் துளியும் இன்றி வாழ்ந்த இனம் தமிழினம். ஆனால், ஆரியம் நுழைத்த மூடநம்பிக்கைகளில் மூழ்கி இன்று சூத்திரனாய் அடிமை வாழ்க்கை, அவல வாழ்க்கை வாழ்கிறான்.

பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல்!
எகிப்தை ஆண்டவர்கள் தமிழர்கள்!
இது போன்ற செய்திகளை நாளை முதல் பார்ப்போம்!

- மஞ்சை வசந்தன்

Monday, June 22, 2015

நம்மால் முடியும்!




தகுதியும் திறமையும் தனக்கே உரியது என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஆதிக்கம் செலுத்திய ஆரிய பார்ப்பனர்கள் அதிர்ச்சியடையும் வகையில் பார்ப்பனர் அல்லாதோர் கல்விச் சாதனை நாளுக்கு நாள் உச்சம் பெற்று மெச்சத்தக்கதாய் வளர்ந்து வருகிறது.

எடுத்துக்காட்டாக மருத்துவப் படிப்பில் நமது மாணவர்களின் சாதனையைப் பாருங்கள்.

200/200 எடுத்த 17 மாணவர்களில் 13 மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர் சமுதாய மாணவர்கள்.

ஒருவர் மிகப் பிற்படுத்தப்பட்டோர்; ஒருவர் இஸ்லாமியர். ஒருவர் மட்டுமே உயர் ஜாதியைச் சேர்ந்தவர்.

மதம், ஜாதி மறுத்த கொள்கைக் குடும்பத்து மாணவன் திராவிடன் என்ற கொள்கைத் தங்கம் 17இல் ஒருவர். அவருக்கு நமது தனிப்பட்ட வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

199.75% எடுத்தவர்கள் 37 பேர். இதில் பிற்பட்டோர் 25 பேர், மிகப் பிற்பட்டோர் 7 பேர், இஸ்லாமியர் 1, தாழ்த்தப்பட்டோர் 3, முற்பட்டோர் 1.

ஆக முற்பட்டோரை முந்தி தாழ்த்தப்பட்டோர் வந்துள்ளது சமுதாயப் புரட்சியின் அடையாளம்! பாராட்டி வரவேற்க வேண்டும்.

திராவிடன் செய்துள்ள சாதனை பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி! 

பிற்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் செய்துள்ள சாதனை பெரியார் - அம்பேத்கர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி!

அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் விரும்பிய மாற்றம் வரத் தொடங்கிவிட்டது. விழிப்போடு உழைத்து பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மேலெழ வாழ்த்துக்கள். பிற்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இதை ஓர் உந்து சக்தியாக உள்ளத்தில் கொள்ள வேண்டும்!

- மஞ்சை வசந்தன்

Sunday, June 21, 2015

இணையத்தால் இணைவோம்! ஏற்றத்தாழ்வைக் களைவோம்!

இணையத்தால் இணைவோம்! ஏற்றத்தாழ்வைக் களைவோம்!

இளைஞர்களே எழுங்கள்!

(இனியும் பொறுத்தால் எல்லாம் இழப்போம்)

ஐந்து இலட்சம் மாணவர்கள் படிக்கும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு அரசு ஒதுக்கும் நிதி ஒதுக்கீடு வெறும் ரூ.22 கோடி. ஆனால், சென்னை அய்.அய்.டிக்கு ஆண்டு ஒன்றுக்கு நிதி ஒதுக்கீடு ரூ.268 கோடி.

கொள்ளை :

சென்னை அய்.அய்.டியில் நீச்சல் குளத்தைப் புதுப்பிக்க ரூபாய் 8 கோடி. 
5 இலட்சம் பேருக்கும் கல்வி வழங்க 22 கோடி ரூபாய், நீச்சல் குளத்திற்கு 8 கோடி ரூபாய்! இது மக்களாட்சி நாடா? 

ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களை வஞ்சித்து சிறுபான்மைக் கூட்டம் செலுத்தும் ஆதிக்கத்தை, அநீதியை அழிக்க வேண்டாமா? ஆர்த்தெழ வேண்டாமா? பிறவிப் பேதம் நம்மோடு ஒழிக்கப்பட வேண்டாமா?

தீர்வு :  

இணையத்தில் அழைப்பு விடுத்து ஒன்று கூடுங்கள்! ஆதிக்கம் அழிக்க திட்டமிடுங்கள்! போராடுவோம்! சமூக நீதியை நிலைநாட்டுவோம்! 

எல்லாமும் எல்லார்க்கும்! இதை எடும் வரை போரிடுவோம்! 

சந்திப்போம்! சிந்திப்போம்!

வஞ்சிக்கப்படுவோர் வாய்மூடியிருந்தால், எஞ்சியிருப்பதையும் இழப்போம்!
இளைஞர்களால் இயலாதது இல்லை!

- மஞ்சை வசந்தன்

Saturday, June 20, 2015

பாண்டேவுக்குப் பத்து கேள்விகள்.........


தம்பி ரங்கராஜ் பாண்டே! இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்!

1. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் கேட்டது போல் சங்கராச்சாரியாரிடமும், ஜெயலலிதாவிடமும் உள்புகுந்து எல்லா விவகாரங்கள் பற்றியும் கேள்வி கேட்க உம்மால் முடியுமா?

2. பிரதமர் உட்பட எல்லோரையும் பெயர் சொல்லும் வாய்ப்பை பெருமையாக நினைக்கும் நீ சங்கராச்சாரியையும், ஜெயலலிதாவையும் பெயர் சொல்லி அழைக்க, அவர்கள் பேட்டி ஒத்துக் கொள்ளவில்லையென்றால் அதை விமர்சித்து சொல்லத் தயாரா?

3. உம்முடைய கேள்விகள் சொந்த சரக்கா? உன் பின்னணியிலிருந்து வந்த சரக்கா?
அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் பின்ணணியிலிருந்து வந்த உங்களால் எப்படி நடுநிலையாக விவாதங்களை நடத்த முடியும்? அல்லது அந்த நடுநிலை வேடம் ஏன்?

4. திராவிடர் கழக ட்ரஸ்ட் பற்றி கேள்வி கேட்ட நீ தந்தி நிறுவனம் பற்றி கேள்வி கேட்கத் தயாரா? அங்குள்ள ஊதிய பட்டுவாடா முதல் அலசத் தயாரா?

5. பேட்டி காணும் போதே குறிப்பிடாதவற்றை பேட்டிக்குப் பின் ஒட்டிச் சேர்ப்பது யோக்கியதையான செயலா? பேட்டி காணும் தகுதி உனக்கு இனியுண்டா?

6. பிறரிடம் நியாயம் கேட்கும் நீ உன் செயல்பாடுகளில் (தினமலரில் பணியாற்றியது முதல்) நெறியும், நேர்மையும் ஒளிவு மறைவின்றி செயல்படுகிறாயா? உளச் சான்றுகளின்படி பதில் கூறுவாயா?

7. பாண்டே என்பது மனித பேதம் காட்டுவதாயிற்றே? அதை வைத்துக் கொண்டு நியாயம் பேசலாமா?

 பூணூல் போடுகிறாயா? அது அயோக்கியத் தனத்தின் அடையாளம் என்பதை ஏற்கிறாயா?

8. உண்மையைக் கொண்டு வரவேண்டும்  என்ற முனைப்பில்லாமல், உனது நோக்கதிற்கு ஏற்ப பேட்டியாளரின் பேச்சில் குறுக்கிடுவது, திரித்து பேசுவது செய்கிறீரே அது மோசடியல்லவா?

9.தூக்கு தண்டனைக்கெதிராக உயிர் துறந்த செங்கொடியின் மரணத்தை, காதல் தோல்வியினால் தற்கொலை என்று அநாகரிகமாக தினமலரில் எழுதி கொச்சைப்படுத்திய கொடுஞ்செயலை குறுந்தாடிக்குள் மறைத்துவிட்டு நாகரிகமானவரைப் போல்  தந்தி குழுமத்துக்குள் அடைக்கலமாகிவிட்டால் சரியாகி விடுமா?

10. சங்கரமடமே ஒரு மோசடி மடம் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கையில் அது பற்றி ஒரு விவாதம் நடத்தி மக்களுக்கு உண்மைத் துலங்கச் செய்யலாமே?

சங்கர ராமன் கொலைவழக்கில் உண்மையைக் கூற முன்வந்துள்ள  இரவி சுப்பிரமணியத்துடன் ஒரு பேட்டி நடத்தத் தயாரா?

#குறிப்பு : பெயர் சொல்லியழைப்பது பகுத்தறிவு என்று தெரிந்த அளவிற்கு பண்பாடு என்பது ஒன்று உண்டு என்பது தெரியவில்லையா? தெரிய வேண்டும் என்பதற்காக உன்பாணியில் இக்கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.



Friday, June 19, 2015

கடவுள் மறுப்பாளர்கள் காலணிகளா? சுகிசிவத்தைக் கேட்கிறேன்!...........

கடவுள் மறுப்பாளர்கள் காலணிகளா?
 
 சுகிசிவத்தைக் கேட்கிறேன்!...........

 
 இன்று (19-06-2015) காலை தொலைக்காட்சியை இயக்கியதும் சுகிசிவம் குரல் ஒலித்தது. ஆன்மிகச் சொற்பொழிவாக அவர்பேச்சை நான் விரும்பி கேட்பேன். பக்தர்களை பகுத்தறிந்து பேசக்கூடியவர், தரமாக பேசக் கூடியவர். ஆனால் இன்று தரம் தடம்மாறிச்சென்றதோடு, தாழ்ந்தும் போனது.

 கணவர் கோயிலுக்குப் போகாதவர். மனைவி அவரைக் கோயிலுக்குத் தள்ளிக் கொண்டு வருகிறாள். கோயில் வாசலிலே அவர் நின்று, “ நீ உள்ளே போய் விட்டு வா!” என்கிறார் மனைவியிடம்.”

 மனைவி தன் கால் செருப்பை வாசலில் கழற்றி வைத்து “இதைப் பார்த்துக்கிட்டு இங்கே இருங்க” என்கிறார்.

 இடையில் சுகி சிவம், “உள்ளே வரக்கூடாதது எல்லாம் வெளியில் தான் இருக்கும் “என்று இரட்டைப் பொருளில் கடவுள் மறுப்பாளர்களை திறமையாக தாக்கும் பெருமிதத்தோடு கூறுகிறார். பார்வையாளர்கள் கைத்தட்டுகின்றனர்.

 ஆனால், சுகி சிவத்திற்கு உண்மையும் புரியவில்லை: உயர்வும் புரியவில்லை.
பிறருக்கு உழைத்துத் தேய்பவர்கள் கோயிலுக்கு ஏன் போக வேண்டும். அதுதான் வெளியிலே இருக்கிறார்கள்.

 சுயநலக்காரர்களும் சுரண்டல் பேர் வழிகளும்தான் பேரம்பேச உள்ளே செல்லவேண்டும்.

 ஊருக்கு உழைப்பவரைத் தேடிதான் கடவுள் வரும்: அவர்; அவர் கோயிலைத் தேடிச் செல்லத் தேவையில்லையென்ற கடவுள் சித்தாந்தம் உங்களுடையதுதானே! மறந்து போச்சா?

Friday, June 12, 2015

தாழ்த்தப்பட்டோர் வாக்குகளே பி.ஜே.பி.யின் குறி!


- மஞ்சை வசந்தன்


இந்துத்வா ஆட்கள் திடீரென அம்பேத்கரை தூக்கிப்பிடித்துத் துதிபாடத் தொடங்கியுள்ளனர். அவர் பிறந்த நாளைக் கொண்டாடுவது தொடங்கி அய்.அய்.,டி.க்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டவேண்டும் என்பது வரை அம்பேத்கர் மீது அவர்களுக்கு பற்று, பக்தி நிலைக்குப்போனதுபோல் பேசவும், புகழவும் தொடங்கியுள்ளனர்.

அம்பேத்கர் இவர்களுக்கு நேர் எதிரான கொள்கை உடையவர். இவர்கள் எதைக்காக்க வேண்டும், வளர்க்க வேண்டும், நிலை நிறுத்த வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அதை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்றவர் அம்பேத்கர்.

ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள், இந்து முன்னணி பி.ஜே.பி. என்று இந்துத்வா அமைப்புகளுக்கு இந்து மதத்தை வளர்க்க வேண்டும், திணிக்க வேண் டும், இந்துத்வா ஆட்சியை கொண்டு வர வேண்டும், இந்து ராஷ்ட்டிரத்தை உருவாக்க வேண்டும் என்ற வேகமும் வெறியும் இரத்தத்தில் ஊறிப்போன உணர்வு. அதற்காக கலவரம், பித்த லாட்டம், மோசடி, கீழறுப்பு, கொலை, வன்முறை, திரிபு, வதந்தி, வஞ்சகம், கபடம் என்று எத்தனையுண்டோ அத்தனையும் செய்யக்கூடியவர்கள், செய்து வருபவர்கள்! ஆனால் அம் பேத்கர் இந்துமதத்தை ஒழிக்க வேண் டும், இந்துமத வேத ஸ்மிருதிகளை ஒதுக்க வேண்டும். இந்துமதத்தை விட்டு தாழ்த்தப்பட்டோர் வெளியேற வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறுகிறார்.

இந்துமதத்தின் அடிப்படையே பிரித்து வைப்பது தான். இது சந்தேகத் திற்கு இடமில்லாத உண்மை, பொது வாக் கூறினால், இந்துமதமும் சமூக ஒற்றுமையும் ஒன்றுடன் ஒன்று சேரவே முடியாது. இந்துமதம் பிரிவினையை அதாவது சமூகரீதியான ஒற்றுமையின் மையை நம்புகிறது. இன்னும் சொல்லப் போனால், சமூகப் பிரிவினையை அதுவே உருவாக்குகிறது.

இந்துக்கள் ஒற்றுமையாக வாழ விரும்பினால் அவர்கள் இந்துமதத் தைத் தூக்கியெறிய வேண்டும். இந்துக்களின் ஒற்றுமைக்கு எதிரான தடை இந்து மதந்தான். சமூக ஒற்று மைக்கான உணர்வை இந்துமதம் ஏற்படுத்தவே முடியாது.

(காங்கிரஸூம், காந்தியும் தீண்டத்தகா தாருக்குச் செய்தது என்ன? - பக்கம் 175)
நான் இந்துவாகப் பிறந்ததிருந்தாலும் இந்துவாகச் சாகமாட்டேன் என்று உறுதி யேற்கிறேன். இந்து மதத்தில் இருக்கும் வரை எவரும் முன்னேற முடியாது. ஏற்றத்தாழ்வு என்ற கட்டுமானத்தின் மேல் கட்டப்பட்டது. இந்துமதம் ஆதிக்கச் சாதிகளுக்கு வேண்டுமானால் அது சாதகமாக (வசதியாக) இருக்கலம்.

ஒரு பார்ப்பனக் குழந்தை பிறந்தால் அது எந்த நீதிமன்றத்தின் நீதிபதியாகலாம் என்று குறிவைக்கிறது. ஆனால் ஒரு துப்புரவு பணியாளர் குழந்தை எங்கே துடப்பக்கட்டை கிடைக்கும் என்று ஏங்கு கிறது. இவை இந்துமத சாதியமைப்புகளின் விளைவேயாகும். இப்படிப்பட்ட அமைப்பு முறையில் நாம் எத்தகைய முன்னேற்றத் தைக் காண முடியும்? (15.10.1956 இல் நாகபுரியில் அம்பேத்கர் உரை)

இந்த உரையாற்றிய கூட்டத்தில்தான் 10 லட்சம் மக்களுடன் அம்பேத்கர் புத்த மதத்தில் சேர்ந்தார்.

இப்படிப்பட்ட இந்துமத வெறுப்பாள ரான அம்பேத்கரை இந்துத்வாவாதிகள் தூக்கிப்பிடித்துப் புகழக் காரணம், அவர் மீதுள்ள மதிப்பால், கொள்கைப்பிடிப்பால் அல்ல, அம்பேத்கர் பற்றுக்கொண்ட அவரது இனமக்கள் கோடிக்கணக்கில் இந்தியாவில் உள்ளனர். அவர்களைக் கவர இந்த மோசடி நாடகத்தை அவர்கள் நடத்துகிறார்கள் அவ்வளவே!

தலித்துகள் இந்துக்களா?

இந்துமதத் தத்துவப்படி தலித்துகள் இந்துக்கள் அல்லவே. இந்துமதம் இந்துக் களாக பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்ற நான்குப்பிரிவுகளைத் தானே சொல்கிறது. தலித்துக்கள் இந்து மதப்பிரிவிலே வரவில்லையே! அவர்கள் பஞ்சமர்கள், தீண்டத்தகாதவர்கள், இந்துக் களோடு சேர்ந்து வாழத்தகாதவர்கள், ஊருக்கு வெளியே ஒதுக்குபுறமாக வாழ வேண்டியவர்கள் என்றுதானே இந்துமதம் சொல்கிறது. அப்படியிருக்க தாழ்த்தப் பட்டவர்கள் (தலித்துகள்) எப்படி இந்துக்கள் ஆவர்?

இந்துமதத்தின் அடித்தட்டு மக்கள் சூத்திரர்கள் என்கிறது இந்துமதம். ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் இந்து மதத்தில் யார் என்பதே இல்லை. அவர்கள் கடவுளின் எந்த உறுப்பிலிருந்து பிறந்த வர்கள் என்பதும் சொல்லவில்லை. இந்து மதத்தில் அவர்களுக்குத் தொடர்பிருந் தால் மற்றவர்களுக்குச் சொன்னது போல் இவர்களுக்கும் சொல்ல வேண்டு மல்லவா?

ஆக ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் புறம்பான, ஒதுக்கப்பட்ட மக்களே தாழ்த்தப்பட்டவர்கள். அதுமட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்துகளாலும் தீண்டத் தகாதவர்கள். இந்துக்களுக்கு அடிமை வேலை செய்யும் இழி மக்கள் என்பது தானே இந்து மதத்தின் நிலைப்பாடு. அப்படியிருக்க தாழ்த்தப்பட்டவர்கள் எப்படி இந்துக்கள் ஆவர்?

ஆனால் இந்துத்வா வாதிகள் தாழ்த் தப்பட்டோர் வேறு மதத்திற்குச் சென்று விட்டால் தாங்கள் சிறுபான்மையாகி விடுவோம் என்ற அச்சத்தில் தாழ்த்தப் பட்டவர்களை இழுத்துப்பிடித்து இணைத் துக் கொள்கின்றனர். அவர்களை கறி வேப்பிலையாகக் கையாளுகின்றனர்.

அதே நோக்கத்தில் தான் தற்போது, தாழ்த்தப்பட்டோரைக் கவர அவர்களின் வாக்குகளைப் பெற அம்பேத்காரைத் தூக்கிப் பிடிக்கின்றனர்.

ஆனால் உண்மையில் அம்பேத்கா ரைப் பற்றி சங்கராச்சாரி உள்ளிட்ட இந்துமதத்தவர்கள் எப்படிக் கேவலப்படுத் தினர், இழிவுப்படுத்தினர் தெரியுமா? இதோ ஓர் எடுத்துக்காட்டு.

புதிய இந்துச்சட்டம் என்ற பெயரில் அம்பேத்கர்  ஒரு ஸ்மிருதியை எழுதியி ருக்கிறார். அதைச் செய்யும் உரிமை அம்பேத்கருக்குக் கிடையாது. பால் எவ்வளவு தான் புனிதமானது என்றாலும் சாக்கடை வழியாக வந்தால் அதை யாரும் ஏற்பது இல்லை. தீண்டத்தகாத வராகிய அம்பேத்கர் சாஸ்திரங்களை மேற்கோள் காட்டுவதும் அப்படித்தான்.

(ஆதாரம்: நவ்பாரத் 12.01.1950) ஆக, அம்பேத்கார் தீண்டத்தகாதவர் என்பதால் அவர் சாக்கடைக்குச் சமமான வர் என்றார் சங்கேஸ்வர் பீடத்தின் சங்கராச்சாரி. சாக்கடைக்கு சமமான சங்கராச்சாரி சாஸ்திரங்களை தொட உரிமையில்லை என்கிறார்.

இதுமட்டுமல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் முன்னாள் ஆசிரியரும், வாஜ்பாய் தலைமையில் 1999 -2004ல் தொழில் அமைச்சராய் இருந்தவருமான அருண் ஷோரி, டாக்டர் அம்பேத்கரை இழிவுபடுத்தி(Worshipping Flase Goods) என்ற நூலை எழுதி வெளியிட்டார். இதற்கு தாழ்த்தப் பட்டோர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்துத்வா சக்திகள் எந்த அளவிற்கு அம்பேத்கர் மீது வெறுப்புக் கொண்டிருந்தனர் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

1952இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் பம்பாய் நாடாளு மன்றத் தொகுதியில் (ரிசர்வ்) அம் பேத்கர் போட்டியிட்டார். அப்போது இந்துத்வா அமைப்புகள் அவருக்கு எதிர்ப்பாகக் கடும் பரப்புரையில் ஈடுபட்டு அவரை தோற்கடித்தனர்.

இப்படிப்பட்ட இந்துத்வா பேர் வழிகள் இன்றைக்கு அம்பேத்கரை வானளாவப் புகழ்வதும் அவர் இந்து கலாச்சாரத்தை நேசித்தவர் என்று அயோக்கியத்தனமாய் கருத்துப்பரப்பு வதும் செய்வதோடு அய்.அய்.டி.க்கு அம்பேத்கர் பேர் வைக்க வேண்டும். அம்பேத்கருக்கு விழா கொண்டாட வேண்டும் என்று நாடகமாடுகின்றனர்.


இவையெல்லாம் எதற்கு? இரண்டு காரணங்களுக்காகத்தான்!

1) இந்து மதத்தை விட்டு தாழ்த்தப் பட்டோர் சென்றுவிடக் கூடாது. சென்றால் இதுமதம் காணாமல் போய் விடும். ஆரிய ஆதிக்கம் உதிர்ந்து விடும்.

2) இந்தியா வெங்கும் தாழ்த்தப் பட்டோர் கோடிக்கணக்கில் உள்ளனர். அவர்களின் வாக்குரிமைகளைப் பெற வேண்டும். ஆரியத்தின் வழக்கம் இது தானே. எதிர்ப்பது எதிர்க்க முடிய வில்லையென்றால் அவர்களையும் அய்க்கியப்படுத்தி அழிப்பது. இப்படித் தானே புத்தத்தை அழித்தனர். இப் போது தாழ்த்தப்பட்டோரை அழிக்க, ஒடுக்க, வீழ்த்த அணைத்து அழிக்கும் யுக்தியைக் கையாளுகின்றனர்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத் தோழர் களே! எச்சரிக்கையாய் இருக்க வேண் டிய நேரம் இது. வஞ்சக வலையில் வீழாது விழிப்போடிருந்து அம்பேத்கர், பெரியார் வழியில் நின்று மதவாத சக்திகளை வீழ்த்த வேண்டும். ஆரிய ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும்.

Thursday, June 11, 2015

அம்பேத்கர்-பெரியார் கொள்கை ஒப்பீடு

அம்பேத்கர்-பெரியார் கொள்கை ஒப்பீடு
 

1. ஆங்கிலோ இந்தியர்கள் எப்படியோ அப்படித்தான் இந்த நாட்டுப் பார்ப்பனர்களும். மேல்நாட்டு ஆரியர்களுக்கும் நம் நாட்டவர்க்கும் பிறந்தவர்கள் பார்ப்பனர்கள்.
(குடிஅரசு 28.06.1949)

1. பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்களை நிறுத்தினால் பார்ப்பான் அயல்நாட்டான் என்பது தெரியும். ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படியோ, ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ அப்படி பார்ப்பான் சூத்திரர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு அன்னியன்.
(நூல்: காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதோருக்குச் செய்தது என்ன? பக்கம்: 215)

2. அரசியலமைப்பு என்ற நூலை எழுதிய புரபசர் டிசே என்பவர் புரட்சி மனப்பான்மை உடையவன் போப் ஆக மாட்டான். போப் ஆகும் மனிதன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்று கூறி இருக்கிறார். அதுபோலவே பார்ப்பானாகப் பிறந்தவன் புரட்சிக்காரனாக ஆகவே மாட்டான்.
(விடுதலை 29.8.1961)

2. புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகமாட்டான். போப் ஆகும் மனிதன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான். இந்த அபிப்பிராயம் இந்தியப் பார்ப்பனர்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்றே நம்புகிறேன். போப் ஆகிறவன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்றால் பார்ப்பனராகப் பிறந்தவனும் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்பது நிச்சயம்!
(ஜாதியை ஒழிக்க வழி பக்கம் 83)

3. நீங்கள் (தாழ்த்தப்பட்ட மக்கள்) மனித  சமூகத்தில் கீழானவர்களாய் இழி மக்களாய் கருதப்படுகிறீர்கள். அந்தக் காரணத்தாலேயே உங்கள் சமூகத்துக்கு முதலில் சுயமரியாதையையும் மனிதத் தன்மையையும் ஏற்படுத்த வேண்டுமென்று சொல்லுகிறேன்.
_ (குடிஅரசு 13.10.1935 )

3. உடல் நலம் பற்றிய இலாபங்களைவிட சுயமரியாதையே மிகவும் முக்கியமானது. தாழ்த்தப்பட்டவர்களுடைய போராட்டம் கவுரவத்திற்காக, சுயமரியாதைக்காகத்தான்.
(“Thus spoke Ambedkar” என்ற நூலிலிருந்து.)

4. வாயில்_நாக்கில் குற்றம் இருந்தால் ஒழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது, பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய புலி புல்லைத் தின்னாது. ஆடு மனிதனைத் தின்னாது. அதுபோலவாக்கும் நமது பார்ப்பனர் தன்மை.
(சென்னை உயர் நீதிமன்றில் தந்தை பெரியார் அறிக்கை 23.4.1957)

4. நான் உங்களைக் கேட்கிறேன். எலியும் பூனையும் ஒன்றுசேர்ந்து வாழமுடியுமா? அது ஒன்றையொன்று அழித்துக்கொள்ளும். பாம்பும் கீரியும் ஒன்றாக வாழக் கூடுமா? பார்ப்பனர்கள் _ தீண்டப்படாதாருக்கும் உள்ள நிலைமையும் இதுபோன்றதுதான். ஒரு பார்ப்பனன் ஒரு தீண்டப்படாதவனை முடிந்த வரையிலும், எவ்வளவு கீழான நிலையில் வைத்திருக்க முடியுமோ, அதைச் செய்திட முயற்சிப்பான். தீண்டப்படாதவன் மனித உரிமையைக் கூடப் பெற முடியாதபடி அவன் பார்த்துக் கொள்வான்.
_- அண்ணல் அம்பேத்கர்

5. சுயராஜ்யம் வந்த காலத்திலும் இந்தப் பார்ப்பனர்கள் தாமே இந்த நாட்டு மக்களாக இருக்க முடியும்? இவர்களது பிரதிநிதிகள் தாமே ஜனநாயக ஆட்சி செலுத்துவார்கள்? ஆகவே இந்த நிலையில் என்ன மாறுதலை ஏற்படுத்திவிட முடியும்?
_ (குடிஅரசு 12.7.1931)

5. இந்த நாடு சுதந்திரம் பெறுவதை நாங்கள் எதிர்ப்பவர்களல்ல. ஆனாலும் சுயராஜ்யத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை என்னவாயிருக்கும் என்று காந்தியாரிடமிருந்து நான் தெரிந்துகொள்ள வேண்டும். காந்தியோ மற்றவர்களோ என்னுடைய கேள்விக்குத் தகுதியான பதிலை அளிக்கவில்லை.
_- அண்ணல் அம்பேத்கர்
 

6. இந்தியா ஒரு நாடு ஆனால் தானே இந்தியா முழுமையும் பற்றிப் பேச நமக்கு உரிமையுண்டு. இப்பொழுது இந்தியா ஒரு நாடாக இருக்கிறதா? நீங்கள் யோசித்துப் பாருங்கள். ஜாதிகள் காட்சிச்சாலையாக, மதங்கள் காட்சிச்சாலையாக, சாமிகள் காட்சிச்சாலையாக இருக்கிறதே யொழிய வேறு என்னவாயிருக்கிறது?
_ தந்தை பெரியார், குடிஅரசு 1.6.1930

6. ஆயிரக்கணக்கான ஜாதிகளாய் பிளவுண்டு கிடக்கும் மக்களை நீங்கள் எப்படி ஒரு தேசம் என்று அழைக்க முடியும்? இந்தியா என்ற ஒரு தேசம் இல்லை; இந்து மதம் என்ற ஒரு மதமும் இல்லை என்றார் அம்பேத்கர்.
-_ அண்ணல் அம்பேத்கர்

7. பார்ப்பான் வந்து திருமணம் செய்து வைப்பதுதான் புனிதமானது, பார்ப்பான் மேல் ஜாதி என்று கருதியே நாளாவட்டத்தில் கூப்பிடத் தொடங்கிவிட்டார்கள். இப்படிப் பார்ப்பானைக் கூப்பிடுவதும் நாம் கீழ்ஜாதி அவன் உயர்ந்த ஜாதி என்பதை உறுதிப்படுத்தவே கூப்பிடுகின்றோம். இந்தத் திருமண முறைக்கும் பார்ப்பானுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.
(விடுதலை 3.10.1961)

7. பார்ப்பனப் பூசாரிகளைத் திருமணத்திற்கு அழைக்கக் கூடாது. திருமணத்திற்காக அதிகம் செலவழிக்காதீர்கள். நேரத்தையும் பணத்தையும் சேமியுங்கள்.

_ அண்ணல் அம்பேத்கர்
The Prisons we broke - baby hamble, , தலித் முரசு --_ சனவரி 2009)

8. சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய நற்செயலுக்காக ஒருவன் தன்மானம் பாராது மக்கள் நலனுக்காக செயல் செய்ய வேண்டும். மானம் பார்த்தால் செயல் கெட்டுவிடும். எனவே, பொது நன்மைக்கு மானம், ஈனம் பற்றி பொருட்படுத்தாது பாடுபட முன்வர வேண்டும்.
(இளைஞர்களுக்கு அழைப்பு பக்கம்_30)

8. சிறந்ததோர் இலட்சியங்களை அடைவதற்கு தற்போதைய இன்பங்களை தியாகம் செய்து இடையறாது பாடுபட வேண்டும். குறிக்கோளை அடையும்வரை துன்பங்கள் இழிவுகளை ஏற்க வேண்டும். நாம் பிறந்த மக்களுக்காக தங்கள் நேரத்தை திறமையை எல்லாவற்றையும் அளிக்க வேண்டும்.
(அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, பக்கம்_692)

9. திராவிட நாடு, திராவிட மொழி, திராவிட மக்கள் என்பவற்றை தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ் மக்கள் என்ற கருத்தில்தான் வழங்குகின்றனர். திராவிடர் என்பவர் தமிழரே ஆவர். திராவிட நாடென்பதும், திராவிடர் என்பதும் இந்தியா முழுமையும் கொண்டிருந்தது.
_தமிழ், தமிழ்நாடு, தமிழர் பண்பாடு, பக்கம்_4

9. திராவிடர்கள் (நாகர்கள்) இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள். அவர்கள் பேசிய மொழி தமிழ். திராவிடம் என்பதும் தமிழ்தான். ஆரியர்கள் நுழைவால் வடபுலத்தில் தமிழோடு சமஸ்கிருதம் கலந்தது. தென்னகத்தில் தமிழ் தனித்து நின்றது.
(அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு 7 _ பக்கம் _300)

10. சாதி ஒழிப்புக்காரர்கள் அதன் ஆதாரத்தை ஒழிக்க வேண்டும். மலேரியாவை ஒழிக்க கொசுவை ஒழிப்பதுபோல, மதத்தை ஒழிக்கச் சாதியை ஒழிக்க வேண்டும். சாதிக்கு ஆதாரமான மதம், கடவுள், புராணம் ஒழிக்கப்பட வேண்டும்.

(16.9.1961இல் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவு)

10. இந்து மதமும் ஒற்றுமையும் ஒன்றோடொன்று சேரவே முடியாது. அடிப்படையில் இந்து மதம் பிரிவை (சாதியை) கொள்கையாகக் கொண்டது. இந்துக்கள் ஒற்றுமையாக வாழ விரும்பினால் இந்துமதத்தைத் தூக்கியெறிய வேண்டும்.
(காங்கிரசும் காந்தியும் தீண்டத்தகாதவர்க்கு என்ன செய்தனர்? பக்கம் _175)

11. இந்துமதம் உங்களுக்கு உரியதில்லை. சாதி, தீண்டாமை ஒழி. அதிலிருந்து வெளியேறுங்கள்.

புத்த மார்க்கம் வைதீகத்திற்கு எதிர்ப்பானது. புத்தர் தர்க்கரீதியில் அறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து சொன்னவர். புத்தம் மனிதர்களைப் பற்றிக் கவலைப்படுவது. ஒழுக்கத்தைப் போதித்தவர். அது மனிதர் பின்பற்றிவந்த மார்க்கம். சம அந்தஸ்து கொடுத்து சமமாய் நடத்தும் மார்க்கத்தில் சேருங்கள்.
(15.05.1957இல் புத்தர் விழாவில் ஆற்றிய உரை)

11. தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்கள் என்று இணைக்கப்பட்டாலும் அவர்கள் இந்துக்கள் அல்ல. அவர்கள் இந்து மதத்திலிருந்து வெளியேற வேண்டும்.
இந்துமதத்திலிருக்கும் வரை எவரும் முன்னேற முடியாது. ஏற்றத்தாழ்வின் மீது கட்டப்பட்டது இந்து மதம். நமக்கு உரிய புத்த மார்க்கம்தான் நமக்குரியது. அதில் சேருங்கள்.
(15.10.1956இல் நாகபுரியில் ஆற்றிய உரை)

12. தந்தை பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்ற உரிமைப் போரைத் தொடங்கி, பின்னர் மொழிவாரி மாநிலத்தை பின்னாளில் ஏற்றார். சென்னை இராஜ்யம் என்பதைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றார்.
(11.10.1955 விடுதலை)

12. மொழிக்கு உண்மையான சொந்தக்காரர்களைக் கருத்தில் கொண்டு நாம் புதிய மொழிவாரி மாநிலம் அமைக்க வேண்டும்.
(1953இல் அம்பேத்கரின் நாடாளுமன்ற உரை)

இப்போது சொல்லுங்கள், அம்பேத்கரும் பெரியாரும் ஒரே கொள்கையும் ஒரே நோக்கமும் உடையவர்களா? இல்லையா? ஒரே தீர்வை சொல்லுகிறவர்களா? இல்லையா?

ஆயிரம் நீலகண்டன்கள் வந்தாலும் அய்யாவையும் அம்பேத்கரையும் பிரிக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது!

அய்யா தொண்டர்களும், அம்பேத்கர் தொண்டர்களும் ஓரணியில் நின்று உங்கள் ஆதிக்கத்தை ஒழித்தேத் தீருவர்! இது உறுதி!

 *******

அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள் (அரவிந்தன் நீலகண்டனுக்கு மறுப்பு)

அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்
 
(அரவிந்தன் நீலகண்டனுக்கு மறுப்பு)
அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் (Ambedkar Periyar Study Circle) என்று பெயர் வைப்பது நேரு ஜின்னா வாசகர் வட்டம் என்று பெயர் வைப்பதற்கு ஒப்பானது. காரணம், அம்பேத்கரும், பெரியாரும் ஒருவருக்கொருவர் அவ்வளவு முரண்பட்டவர்கள் என்று அரவிந்தன் நீலகண்டன் என்ற ஓர் ஆர்.எஸ்.எஸின் தீவிர கருத்தாளர் ஓர் அப்பட்டமான பொய்யை, திரிபுவாதத்தை திசைதிருப்பலை உண்மைகளை ஒளித்து மறைத்து, அங்கொன்று இங்கொன்றாய் அரைகுறை கருத்துக்களை மேற்கோள்காட்டி பித்தலாட்டப் பிரச்சாரம் செய்து இளைஞர்களைக் குழப்பமுனைந்துள்ளார். ஒருங்கிணைந்து செயல்படும் பெரியார் அம்பேத்கர் தொண்டர்களிடையே பிளவை உண்டுபண்ண முயற்சிக்கிறார். 

அம்பேத்கார் மனித நேயப்பற்றாளராகவும், பெரியார் சமூக விரோதி போலவும் சித்தரித்துக் காட்ட கத்தரித்த செய்திகளையும், கற்பனைச் செய்திகளையும் காட்டி வாதிடுகிறார்.

எனவே, அவரது ஒப்பீடுகளும், சுட்டிக்காட்டும் கருத்துக்களும் உண்மைக்கு மாறானவை, திரிக்கப்பட்டவை, மறைக்கப்பட்டவை என்பதை ஆணித்தரமான ஆதாரங்களோடு இங்கு விளக்கியுள்ளோம். ஊன்றிப்படியுங்கள், உண்மை உணருங்கள்! உணர்வு கொள்ளுங்கள்!

அரவிந்தன் நீலகண்டன் எடுத்து வைக்கும் வாதங்களின் சாரம் இவைதான்.

1) ஆரிய திராவிட பாகுபாட்டை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பெரியார் அதையே அடிப்படையாகக் கொண்டு இயக்கமும் பிரச்சாரமும் நடத்தினார்.

2) ஒரே கடவுள் கோட்பாட்டை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பெரியார் ஒரு கடவுள் கோட்பாட்டில் நம்பிக்கைக் கொண்டவர்.

3) ஈ.வெ.ரா. ஒரு ஜனநாயகவாதி அல்ல. ஆனால் அம்பேத்கர் ஒரு ஜனநாயகவாதி.

4) ஈ.வெ.ரா. இந்தியர்களுக்கு எதிரானவர் அம்பேத்கர் இந்திய கலாச்சாரத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டவர்.

5) அம்பேத்கர் சமஸ்கிருத ஆதரவாளர் ஆனால் சமஸ்கிருதத்தை எதிர்த்தவர் பெரியார்.

6) ஈ.வெ.ரா.பார்ப்பனர்களுக்கு எதிரான வெறுப்பைப் பரப்பியவர். ஆனால் அம்பேத்கர் எப்போதும் பார்ப்பனர்களுக்கு எதிராய் வெறுப்பைக் காட்டியதில்லை.

7)  இந்திய பாதுகாப்பில் சாதியற்ற சமூக உருவாக்கத்தில் அம்பேத்கர் உறுதியாய் இருந்தவர். ஆனால் பெரியார் இனவெறியை மட்டுமே தூண்டினார்.

8) அம்பேத்கர் சீர்திருத்தக் கருத்துக்களை உபநிஷத்துக்களிலிருந்து பெற்றவர். ஆனால் பெரியாருக்கு இது போன்ற ஆழமான மூலக்கருத்துக்கள் இல்லை.

9) இரட்டைப்பேச்சு அம்பேத்கர் பேசியதில்லை. மனித எதிர் செயல்களைக் கண்டித்தார். ஆனால் பெரியார் கீழ்வெண்மணி கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடவில்லை.

10) தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பெரியார் செயல்பட்டதில்லை. ஆனால் அம்பேத்கர் அவர்களுக்காகவே பாடுபட்டவர்.

இவைதாம் இந்த ஆர்.எஸ்.எஸ். (அ)யோக்கியர் வைக்கும் வாதங்கள்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இவற்றைக் கேள்விப்பட்டால் சராசரி பாமர மனிதன் கூட கேவலமாய் சிரிப்பான்.

1.    ஆரிய திராவிட வேறுபாட்டை அம்பேத்கர் ஏற்கவில்லை. ஆனால் பெரியார் அதையே முதன்மையாக கொண்டார்.

இது இவர் கூறும் முதல் வாதம். இது போன்ற ஒரு மோசடியான பிரச்சாரத்தை உலகத்திலே காணமுடியாது. ஆரியர்கள் பற்றி அம்பேத்கர் ஒரு தெளிவான பார்வையும், அவர்களின் ஆதிக்கக் கொடுமைகள், இழிவுகள், மனித எதிர்செயல்களையெல்லாம் நூற்றுக்கணக்கான பக்கங்களில் அலசி ஆராய்ந்து விளக்கியுள்ளார்.

அப்படிப்பட்ட ஆரியத்தை எதிர்த்த காரணத்தாலேதான் அவர் பௌத்தத்தை ஆதரித்தார், ஏற்றார். மற்றவர்களை ஏற்கும்படிச் செய்தார். பௌத்தம் ஆரியத்திற்கு எதிரான பெரும் புரட்சி என்று கூறுகிறார்.

பௌத்தம் ஒரு புரட்சி. பிரஞ்சுப் புரட்சியைப் போன்றது. அது ஒரு மாபெரும் புரட்சி. இந்தப் புரட்சி எத்தகைய மாற்றத்தை உருவாக்கியது என்பதை அறிய வேண்டுமாயின் இப்புரட்சி வருவதற்கு முன்பிருந்த சமூகநிலையை அறிந்து கொள்ள வேண்டும்.

புத்தரின் போதனைகளால் உண்டான மாபெரும் மாற்றங்களை அறிந்து கொள்ள வேண்டுமானால், புத்தம் தோன்றிய காலத்திலிருந்த ஆரிய நாகரிகத்தின் தரம் குறைந்த நிலைபற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது ஆரிய சமூகத்தின் சமூக, சமய ஆன்மீக நிலை பெரிதும் தரங்கெட்டு தாழ்ந்து கிடந்தது. சூதாடுவதிலும், மது குடிப்பதிலும் ஆரியர்கள் மூழ்கிக்கிடந்தனர். சோமபானம் தயாரிக்கும் முறையைத் தங்களுக்குள் இரகசியமாக வைத்திருந்தனர். ஆரியர்களின் இன்றைய வழித்தோன்றல்கள் அன்றைய ஆரிய சீர்கேட்டை அறிந்தால் அதிர்ச்சியடைவர்.

பெற்ற மகனைப் புணர்வது, சகோதரியைப் புணர்வது, ஒரு பெண் பல ஆணை மணப்பது பாட்டன் பேத்தியை உடலுறவு கொள்வது என்ற கேவலங்கள் அவர்களிடம் காணப்பட்டன.

ஆரியர்கள், பலரும் காணும் வகையில் வெட்ட வெளிகளில் பெண்களோடு புணருவதைப் பற்றிக் கவலைப்படாது பலர் பார்க்கப் புணருவார்கள்.

தன் மனைவியை சிறிது காலம் அயலாருக்கு வாடகைவிடும் வழக்கமும் ஆரியர்களிடம் இருந்தது.

பொலிகாளையைத் தேர்வு செய்து பசுவை சினைப்படுத்துவதுபோல, ஆணைத் தேர்வு செய்து பிள்ளை பெற்றுக்கொள்ளும் வழக்கமும் ஆரியரிடையே இருந்தது.

ஆரியர்கள் விலங்குகளையும் புணரும் பழக்கம் உடையவர்கள். ஆரிய பெண்டிர் குதிரையோடு உடலுறவு கொண்டுள்ளனர்.

விவசாயத்திற்கு அதிகம் பயன்படும் பசுக்களும் காளைகளும்தான் ஆரியர்களால் அதிகம் பலியிடப்பட்டன.

ஆக புத்தர் புரட்சி தொடங்கிய காலத்தில் சமூக, அரசியல், ஆன்மிகத் துறைகளில் வரம்புமீறிய ஒழுக்கக்கேட்டில் ஆரிய இனம் மூழ்கித் திளைத்தது.
இப்படிப்பட்ட ஆரிய ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள புஷ்யமித்ரசுங்கன் காலத்தில் எழுதப்பட்டதே மனுஸ்மிருதி என்கிறார். மனுஸ்மிருதி மூலம் எந்த அளவிற்கு ஆரியர்கள் தங்களுக்கென ஒரு செல்வாக்கை அதிகாரத்தை சட்ட பூர்வமாகச் செய்து கொண்டார்கள் என்பதையும் பல பக்கங்களில் காட்டுகிறார். மனுவின் காலம் கி.மு. 170க்கும் கி.மு.180 இடைப்பட்டது என்கிறார்.

மனு நூல் ஆரிய பார்ப்பனர்களுக்கு (பிராமணர்களுக்கு) கொடுக்கும் தனித்தகுதியை உயர்நிலையை அம்பேத்கர் வரிசைப்படுத்திக் கூறுகிறார்.

மனு ஸ்மிருதியில் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தனி இடம் ஆகும். மனு நூலில் உள்ள பின்வரும் விதிகளைக் கவனிக்கவும்:

1 : 96 படைக்கப்பட்டவற்றுள் உயிர் உள்ளவை சிறந்தவை என்று கூறப்படுகிறது, உயிருள்ளவற்றுள் அறிவுத்திறத்தால் வாழ்பவை சிறந்தவை, அறிவுள்ள உயிர்களுள் மனிதன் சிறந்தவன், மனிதர்களுக்குள் பிராமணர்கள் சிறந்தவர்கள்

1 : 100 உலகில் உள்ள அனைத்துமே பிராமணர்களின் உடமையாகும், பிராமணனது மிக உயர்ந்த பிறப்பின் காரணமாக, உண்மையில் அவனே எல்லாவற்றுக்கும் உரியவனாயிருக்கிறான்.

1 : 101 பிராமணன் தன்னுடைய சொந்த உணவையே உண்கிறான். தனது சொந்த உடையையே அணிகிறான், தனக்குச் சொந்தமானவற்றையே கொடுக்கிறான், மற்ற மனிதர்கள் பிராமணனின் கருணையின் மூலமே உயிர் வாழ்கிறார்கள்.

10.3 பிராமணன் ஒப்புயர்வற்றவனாக இருக்கும் காரணத்தாலும் அவனது உயர்ந்த பிறப்பின் காரணத்தாலும் (குறிப்பிட்ட) வரையறைக்குட்பட்ட விதிகளைப் பின்பற்றும் காரணத்தாலும், அவனது குறிப்பிட்ட புனிதத்தன்மை பெற்றிருக்கும் காரணத்தாலும், (எல்லா) சாதிகளுக்கும் தலைவனாயிருக்கிறான்

11 : 35 பிரமணன் உலகைப் படைத்தவனாகவும், தண்டிப்பவனாகவும், ஆசிரியனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளான். எனவே அவன் படைக்கப்பட்டவை அனைத்துக்கும் புரவலனாக விளங்குகிறான். அவனிடம் எந்த மனிதனும் அமங்கலமான எதையும் சொல்லவோ, கடுமையான சொற்களைப் பயன்படுத்தவோ கூடாது.

பிராமணர்கள் மனம் கோணும் படியான எதையும் மன்னன் செய்யக்கூடாது என்று கூறி மனு பின்வருமாறு எச்சரிக்கிறார்:-

11 : 313 அவன் (மன்னன்) மிகக் கடுமையான துன்பத்துக்கு உள்ளான போதிலும் பிராமணர்களுக்குச் சினம் உண்டாக்கக்கூடாது. ஏனென்றால் அவர்களுக்குச் சினம் ஏற்பட்டால், கணப்போதில் மன்னனையும் அவனுடைய படையையும் வாகனங்களையும் அழித்து விட முடியும்.

11 : 31 சட்டத்தை அறிந்த பிராமணன் எந்தக் (குற்றத்தையும்) மன்னனின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியதில்லை, தனக்குத் தீங்கு செய்வோரைத் தன்னுடைய அதிகாரத்தினாலேயே அவன் தண்டிக்கலாம்.

11 : 32 அவனுடைய சொந்த அதிகாரம் மன்னனின் அதிகாரத்தை விடப் பெரியது, எனவே பிராமணன் தனது எதிரிகளைத் தன்னுடைய சொந்த அதிகாரத்தின் மூலமே தண்டிக்கலாம்.

இப்படி ஆரிய ஆதிக்கத்தைப் பற்றி குறிப்பிடும் அம்பேத்கர், இன ஆய்வுகள் பற்றி விமர்சித்து, எதற்கும் சரியான சான்றுகள் இல்லை என்று கூறி இறுதியில் ஒரு நிலைப்பாட்டை ஏற்கிறார்.

மண்டை ஓட்டு அமைப்புக்குறியீட்டின் அடிப்படையில் இந்திய மக்கள் (1) ஆரியர்கள், 2) திராவிடர்கள், 3) மங்கோலியர்கள், 4) சித்தியர்கள் என்ற நான்காக பிரிக்கலாம் என்ற சர்ஹெர்பர்ட் ரிஸ்லேயால் கருத்தை ஏற்கிறார்.

அடுத்து டாக்டர் குஹியான் கருத்துப்படி இரு இனத்தாரின் உடலமைப்பை ஏற்கிறார். அதாவது 1) நீண்ட தலையை உடையவர்கள் 2) குறுகிய தலையைக் கொண்டவர்கள்.

இதை மேலும் சுருக்கி

1) மத்திய தரைக்கடல் இனத்தவர் (அதாவது நீண்ட தலை கொண்டவர்)

 2) மலைவாழ் இனத்தவர் அல்லது குறுகிய தலையைக் கொண்டவர்கள்.
முதல் இனம்தான் ஆரிய மொழி பேசும் இனம் என்கிறார்.

பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு_7இல் பக்கம் 300இல் திராவிட ஆரிய இனப் பிரிவை ஏற்று மிக விரிவாக எழுதியுள்ளார். அதன் சுருக்கம் இதோ:

"இந்தியாவில் நாகர்கள், ஆரியர்கள் என்ற இரண்டு இனம் இருந்தது. நாகர்கள் என்பது திராவிடர்களே. திராவிடம் என்பது மொழியால் வந்த பெயர். நாகர் என்பது இனப்பெயர்." ஆக, திராவிடர் ஆரியர் என்ற இரண்டு இனங்களை அம்பேத்கர் ஏற்கிறார். 

(ஆதாரம்: பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு_7; பக்கம்_300)

மேலும், தாழ்த்தப்பட்ட மக்களின் (திராவிடர்களின்) பூர்வீக நாடான இங்கு ஆரியர்கள் வாழ்ந்துகொள்ள அனுமதித்தற்கு ஆரியர்கள் திராவிடர்களிடம் நன்றிகாட்ட வேண்டும். மாறாக அவர்களை அடக்கியாள்வதும் இழிவு செய்வதும், வஞ்சிப்பதும், தாக்குவதும் நன்றிகெட்ட செயலாகும் என்கிறார் அம்பேத்கர். இதன் பொருள் என்ன? ஆரியர் - திராவிடர் பாகுபாட்டை ஏற்றதுதானே?

அது மட்டுமல்ல, இதன்மூலம் திராவிடர்கள் இந்த நாட்டிற்கு உரியவர்கள். மண்ணின் மக்கள். ஆனால் ஆரியர்கள் வந்தேறிய அயல்நாட்டார். ஆரியர்கள் இந்தியாவில் வாழ அனுமதியளித்தவர்கள் என்பதையும் உறுதி செய்துள்ளார்.

இந்திய வரலாறு நாகர்கள் (திராவிடர்கள்) எனப்படும் ஆரியர் அல்லாதாரால் தொடங்குகிறது. ஆரியர்கள் இந்த நாட்டுக்குள் (பின்னாளில்) நுழைந்து தங்களுக்கு வாழ்விடம் தேடிக் கொண்டவர்கள் என்கிறார் அம்பேத்கர்.

அம்பேத்கர் இனம் பற்றிய மேல் நாட்டார் ஆய்வை ஏற்கத் தயங்கினார். காரணம்,  இன்றைக்குக் கிடைத்த தொல்லியல் தடயங்கள் அன்றைக்குக் கிடைக்கவில்லை. எனவே, இனம் பற்றிய ஆய்வில் ஆய்வு முடிவில் அவருக்கும் மேலை நாட்டு அறிஞர்களுக்கும் கருத்து முரண்பாடு இருந்ததே ஒழிய, ஆரிய திராவிட இனப் பிரிவை ஏற்றார்.

ஆனால், ஆரிய ஆதிக்கம் பற்றியோ அதை அழிக்கவேண்டும் என்பது பற்றியோ அவருக்குக்கருத்து முரண்பாடு இல்லை.

ஆரிய ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் அடித்தட்டுமக்கள் சம உரிமை பெற வேண்டும் என்பதில் பெரியாரும் அம்பேத்கரும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர்.

அதை அம்பேத்கரே குறிப்பிடுகிறார்.

1924இல் வைக்கத்தில் தோழர் ஈ.வெ.ரா அவர்கள் நடத்திய மனித உரிமைப் போராட்டம் என்னைக் கவர்ந்தது. இந்தியாவிலே நடந்த முதல் மனித உரிமைப் போராட்டம் அதுதான். அந்தப் போராட்டத்தைப்பற்றி நான் பத்திரிகையில் தலையங்கம் எழுதினேன். மிகவும் உருக்கமாக எழுதினேன்.

ஆரிய பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்ட தோழர் ஈ.வெ.ரா முன்னின்று தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் போராடியது என் மனதைத் தொட்டது. நான் பின்னாளில் மாகாத்துப் போராட்டம் நடத்த அதுதான் வழிகாட்டுதலாக இருந்தது என்கிறார் அம்பேத்கர்  (Dr. Ambedkar Life and Mission -Keer)

மேலும், இந்து மதத்தை அடியோடு ஒழித்து, புதிய அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்துதான் எனக்கு உடன்பாடாக இருந்தது. நான்கு வர்ணத்தையும் பஞ்சமர்களையும் ஒழித்து ஒரே மனிதர்களாகச் செய்யாமல் என்ன சீர்திருத்தம் செய்தாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சூத்திரர்களுக்கும் என்ன பயன்?

இதே கருத்தைத்தான் தமிழ்நாட்டில் தோழர் ஈ.வெ.ரா.வும் செய்து கொண்டிருக்கிறார் என்றார் அம்பேத்கர் (அம்பேத்கர் பேசுகிறார் பக்கம் 20)

அடுத்து சென்னை மாகாணத்தில் வகுப்பு வாரி உரிமை உத்தரவை இரத்து செய்தது சென்னை மாகாணத்தில் பெரியார் ஈவெரா தலைமையில் தமிழகமே கொதித்தெழுந்தது. இட ஒதுக்கீடு வேண்டும் என்பதில் நான் உறுதியாய் இருந்தேன் என்கிறார்.

ஆக, சமூக நீதிக்குரிய இடஒதுக்கீடு, இந்துமத ஒழிப்பு, ஆரிய பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு ஆக நான்கிலும் இருவரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தனர் என்பது விளங்குகிறது. அப்படியிருக்க ஆரிய திராவிடப் போராட்டம் அம்பேத்கருக்கு பிடிக்காது என்று பித்தலாட்டம் பேசுவது எப்படிப்பட்ட மோசடிச் செயல்.

ஆரியர்களின் ஆதிக்க சாஸ்திரங்களையெல்லாம் மாற்றி எழுத வேண்டும். அதுவே புரட்சிமதம் என்று அம்பேத்கர் கூறினார் என்றால் அது ஆரிய எதிர்ப்பில்லாமல் வேறு என்ன? இன ஆய்வு பற்றிய சிந்தனையில் அம்பேத்கருக்கு அய்யங்கள் இருந்ததால் ஆரிய இனமே இல்லை. திராவிட இனமே இல்லை என்றா பொருள்? இருவகை மண்டை ஓட்டை கூறுகிறாரே?

மண்டையில் ஏறவில்லையா? நாகர் (திராவிடர்), ஆரியர் என்ற இரு இனங்கள் உண்டு என்று கூறுகிறாரே அதன் பொருள் என்ன?

நாகர்கள் பேசியது தமிழ் என்கிறாரே, அதன் அர்த்தம் என்ன? ஆரியர் வந்தபின் வடக்கில் வாழ்ந்த நாகர்கள் (திராவிடர்) மொழி மாறியது என்கிறார். ஆக, இந்தியா முழுமையும் வாழ்ந்தவர் திராவிடர் என்கிறார். ஆரியர் வந்தேறி என்கிறார். இவையெல்லாம் உம் கண்ணுக்குப் படவில்லையா? ஆரிய திராவிட பிரிவை அவர் ஏற்றதற்கு இவை ஆதாரங்கள் அல்லவா?

2. பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவர். அம்பேத்கர் ஏற்காதவர். இது இவரது இரண்டாவது மோசடிப் பிரச்சாரம்.

பெரியார் என்றாலே கடவுள் இல்லை, கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று அழுத்தம் திருத்தமாய் மூன்று முறை சொல்லி உறுதிப்படக் கூறியவர். பெரியார் என்றாலே கடவுள் மறுப்பாளர் என்பதைச் சின்னக்குழந்தைக் கூட சொல்லும். உண்மை அப்படியிருக்க இந்த அயோக்கிய சிகாமணி எப்பேர்ப்பட்ட அபாண்டப்புளுகை அவிழ்த்துவிட்டுள்ளார் பாருங்கள்.

இதற்கு அவர்காட்டும் ஆதாரமே மோசடியானது என்ன ஆதாரம்?

கடவுளைக் கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை, ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்துவன், முஸ்லீம் மாதிரி கும்பிடு என்றார் என்று பெரியார் கூறியதாக விடுதலையை ஆதாரமாகக்காட்டி கூறுகிறார்.

ஆரிய ஆர்.எஸ்.எஸ். திரிபுவாதிகளின் பித்தலாட்ட மோசடிப்பிரச்சாரத்திற்கு இது ஒரு சரியான சான்று. பெரியார் சிதம்பரம் வட்டம் சேத்தியாதோப்பில் 24.5.1959இல் பேசியபோது குறிப்பிட்டவற்றில் முக்கியமான பகுதியை நீக்கிவிட்டு தனக்குத் தேவையான பகுதியைக் கத்தரித்துக் காட்டி, இம்மோசடிப் பிரச்சாரத்தைச் செய்திருக்கிறார்.

உண்மையில் பெரியார் பேசியது என்ன? இந்து மதத்தில் ஒழுக்கமான கடவுள் ஏதாவது இருக்கிறதா? அன்பான சிவன் என்கிறாய் எது அன்பானது? கையிலே வேலாயுதம், இடுப்பிலே புலித்தோல் கழுத்திலே பாம்பு, மண்டை ஓடு பல பேரைக் கொன்றது எப்படி அன்பான சிவன் ஆக இருக்க முடியும்?

பெண்டாட்டியைக் கூட்டிக்கொடுத்தால் மோட்சம் தரும் கடவுள்! உன் பெண்டாட்டியை வாடகைக்குக் கேட்டால் என்ன செய்வாய்? சம்மதிப்பாயா? உதைக்கமாட்டாயா? அடுத்தவன் மனைவி மேல் ஆசைப்பட்டு உதை வாங்கிய கடவுள்தானே இருக்கிறது? பிள்ளைக்கறி கேட்கிறது சாமி! பெற்ற பிள்ளையை கொல்வது பக்தியா?

அனுசுயா பத்தினியாக இருக்கிறாள். அவளைக் கற்பழிக்க வேண்டும் என்று நாரதர், சிவன், விஷ்ணு, பிரம்மா எல்லோரும் போகிறார்கள். அவள் இவர்களை குழந்தையாக மாற்றி தொட்டிலில் போட்டுவிட்டாள்! அடுத்தவன் மனைவி பத்தினியாய் இருப்பதைக் கெடுக்க கற்பழிக்கப் போனவர்களெல்லாம் கடவுளா?

இப்படிப்பட்ட கடவுளை ஏற்கலாமா? வணங்கலாமா என்று பலவாறு கேட்டுவிட்டு,  பக்தியை விடமுடியவில்லை கடவுளை வணங்கித்தான் தீருவேன் என்று கடவுளை நம்புவதில் பிடிவாதமாய் இருப்பவர்களைப் பார்த்து, கடவுளைக் கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்துவன் மாதிரி, முஸ்லீம் மாதிரி கும்பிடு, தொலையட்டும், பரவாயில்லை. இப்படிக் காட்டுமிராண்டிதனமான கடவுளை வைத்துக்கொண்டு அதற்கு பல சடங்கு பூசைகளை இந்த 1959 ஆம் ஆண்டில் செய்யலாமா? என்று பேசினார்.

இந்தப் பேச்சில் தனக்குத் தேவையானதைக் கத்தரித்து எடுத்துக்காட்டி, பொருத்தமில்லாதவைகளை அங்கொன்றும் இங்கொன்றும் பற்பல வெட்டல் ஒட்டல் வேலைகளைச் செய்து பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக்கொண்டது போலவும், அதுவே அவர் கொள்கைப் போலவும் காட்ட முயலும் இந்த எழுத்தாளர் எப்படிப்பட்டவர் என்பதைச் சிந்தியுங்கள்! எச்சரிக்கையாய் இருங்கள்.

அவர் கடவுளை கும்பிட்டே தீருவேன் என்பவர்களை பார்த்து அப்படி கடவுளை வணங்கித்தான் ஆகவேண்டும் என்றால் அயோக்கிய கடவுளை விட்டுவிட்டு யோக்கியமான ஒரு கடவுளை வணங்கித் தொலை என்று தான் கூறினார். ஒரேயடியாக எல்லா மக்களும் ஒரே நாளில் கடவுளை மறுத்து விட மாட்டார்கள். அப்படியிருக்க,  சீர்க்கேட்டை அகற்றி முட்டாள்தனத்தை முடிந்த மட்டும் குறைக்கும் முயற்சியில் அவர் கூறியதைக் காட்டி அவர் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டார் என்பது திரிபுவாதமல்லவா?

பெரியார் சொன்னதில் தொலையட்டும், பரவாயில்லை என்ற வார்த்தைகளே முதன்மையானவை. ஒரு கடவுளை வணங்கித் தொலை என்றால் ஏற்றுக்கொண்டார் என்று பொருளா? அவர் ஏற்கவில்லை என்றாலும் பிடிவாதமான மக்களுக்கு அவர் சொன்ன அறிவுரை. அவ்வளவே!

கடவுள் கருத்தில் பெரியாருக்குள்ள கருத்துக்களையே அம்பேத்கரும் கொண்டிருந்தால் அதனால் தான் இந்துமதத்தை விட்டு, கடவுளை மறுக்கும் புத்தமதத்தை ஏற்றார். மற்றவர்களையும் ஏற்கும்படி பிரச்சாரம் செய்தார். உண்மை இப்படியாக அம்பேத்கர் பல கடவுளை ஏற்றுக்கொண்டது போல இவர் காட்ட முயல்வது மோசடியானது. (கடவுள் மறுப்பு பற்றி புத்த தம்மம் நூலில் விரிவாகக் காணலாம்.)

3. ஈ.வெ.ரா. ஒரு ஜனநாயகவாதியல்ல. ஆனால், அம்பேத்கர் ஒரு ஜனநாயகவாதி
 
மூன்றாவதாக இப்படியொரு கருத்தைச் சொல்லி இருவரும் முரண்பட்டக் கொள்கையையுடைய வரிகள் என்று காட்ட முயலுகிறார் இவர். இதற்கு தந்தை பெரியார் குடியரசில் எழுதிய கட்டுரையைக் காட்டுகிறார்.

பெரியார் அக்கட்டுரையை எழுதியது ரஷ்யாவின் கம்யுனிச தாக்கத்தால் கவரப்பட்டு, கம்யூனிசக் கொள்கைகளை பரப்ப முயன்ற நேரம். எனவே, இரஷ்யாவில் உள்ளது போன்ற ஆட்சிமுறையை விரும்பி,

லெனின் ஆட்சிதான் மனித தர்மத்திற்கு உகந்த மனித நாயக ஆட்சியாக இருக்க முடியும்தே அல்லாமல் மற்றபடி எந்த சீர்திருத்தம் கொடுத்து எந்த ஜனநாயக ஆட்சி கொடுத்து நடத்தினாலும் அது ஒரு நாளும் மனித தர்ம ஆட்சியாக இருக்க முடியாது என்று கூறுகிறார்.

இரஷ்ய ஆட்சி முறையில் ஏற்பட்ட புரட்சிகர மாறுதலால் கவரப்பட்டே பெரியார் இரஷ்யா சென்றார். இரஷ்யா செல்லும் முன்னமே பெரியாருக்கு கம்யூனிசம் பற்றியும், ரஷ்யா பற்றியும் உயர் எண்ணம் இருந்தது.

அப்படியொரு ஆட்சி வரவேண்டும் என்பதற்காகவே ஜனநாயகம் வேண்டாம் என்றார். சின்னாபின்னமாக்கப்பட்டு, சீரழிந்து கிடக்கும் ஒரு நாடோ, சமூகமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் கண்டிப்பாய் அந்த நாட்டிற்கு ஜனநாயகம் என்பது ஏற்றதல்ல. பல மதமாய், ஜாதியாய், வகுப்பாய்ப் பிரிந்து கிடக்கும் 100க்கு 10 பேருக்குக் கூட கல்வியறிவு இல்லாமலிருக்கும் இந்தியாவிற்கு இன்று ஜனநாயக ஆட்சி என்பது சிறிதும் பயன்படாது என்றார்.


இந்திய நாட்டில் உள்ள மனித சமூகத்தில் சுமார் 6 கோடி மக்கள் தீண்டத்தகாதவர்களாக மனிதர்களால் தொடக்கூடாதவர்களாக அநேக விஷயங்களில் மனித உரிமைகளை அனுபவிக்க கூடாதவர்களாக _ தெருவில் நடக்கவோ, குளத்தில் தண்ணீர் அருந்தவோ பொதுக்கோயில், மடம், சத்திரம், சாவடி என்பவைகளில் பிரவேசிக்கவோ, சில பொதுவிடங்களில் சென்று படிக்கவோ, கூலிவேலை செய்யவோ, உத்தியோகம் பார்க்கவோ தடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, கொடுமை செய்யப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதில் உரிய விடிவை ஜனநாயகம் மனித வர்க்கத்திற்குக் கொடுக்கக் கூடியதா? அல்லது அடிமைத்தனத்தைக் கொடுக்கக் கூடியதா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இன்று நமது மக்களின் ஜனநாயக உணர்ச்சியானது நமது தேசம், நமது மதம், நமது ஜாதி என்ற தத்துவத்தின் மீதும், முதலில் தேசம் என்று பலரும், முதலில் மதம் என்று பலரும், முதலில் ஜாதி என்று அநேகரும் கருதியே ஜனநாயகத் திட்டங்களை வகுக்கின்றனர். முதலில் மனித சமூகம் பிறகுதான் மற்றது என்கின்ற அறிவு இந்நாட்டில் மகாத்மா முதல் மாணவர்கள் வரையில் யாருக்காவது இருக்கிறதா?

ஜனநாயகம் என்பதில் ஜனம் என்றால் மனிதர்கள், நாயகம் என்றால் ஆட்சித்துவம் _ எஜமானத்துவம் என்று பொருளாகும்.

ஆகவே, மனித ஆட்சித்துவம் என்பது மனித தர்மத்துக்கும், மனித தத்துவத்திற்கும் நன்மை பயக்கும்படியாகவும், பாதுகாப்பு அளிக்கும்படியாகவும் இருக்க வேண்டியதா? அல்லது தேசம் காப்பாற்றப்பட்ட பின்தான் மனித நலம்; என் மதம் காப்பாற்றப்பட்ட பின்தான் மனித நலம்; என் ஜாதிக்குப் பின்தான் மனித நலம் என்ற நோக்கம் சரியானதாகுமா? என்று தன் உள்ளக் கிடக்கையை வெளியிடும் பெரியார், இப்போது ஜனநாயக ஆட்சி என்று நாம் சொல்வதெல்லாம் ஒருக்காலும் மனித தர்ம ஆட்சியாக ஆகாது. முதலில் நான் மனிதன். பிறகுதான் இந்தியனோ எவனோஆவேன் என்கிறார்.

ஆக, அப்போதைய சூழலில் ஜனநாயகம் வந்தால் அது ஆதிக்கச் சக்திகளுக்குச் சாதகமாகவே அமையும். எனவே, இந்தியாவிற்குப் பாட்டாளி (ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட) மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும்; அதாவது பாட்டாளி மக்கள் சர்வாதிகாரம் என்ற இரஷ்ய ஆட்சியாக இருக்க வேண்டும் என்கிறார்.

அம்பேத்கரும் இதே கருத்தையே வேறு  கோணத்தில் சொல்கிறாரே ஒழிய இருவருக்கும் முரண்பாடு காண்பது முட்டாள்தனம் மட்டுமல்ல, அயோக்கியத்தனமாகும்.

தந்தை பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஆட்சிக்கு அவர்களின் நலம் பேணும், சம உரிமை பேணும், ஜாதி ஒழிக்கும், பெண்ணடிமை ஒழிக்கும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு அவை தீவிரமாகப் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதைப் போலவே,

அம்பேத்கர் இந்தியாவில் இதுவரை இருந்துவந்த இந்துமத சனாதன சட்டங்கள், மனுதர்ம நீதிகள் முற்றாகக் களையப்பட்டு, அதற்குப் பதில் புத்தமதக் கோட்பாடுகள் சட்டமாக்கப்பட்டு அவை கடுமையாக செயல்படுத்தப் படவேண்டும் என்கிறார். அச்சட்டங்கள் சர்வாதிகாரப் போக்கிலே செயல்படுத்தப் படவேண்டும். அப்போதுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடிவு, உரிமை கிடைக்கும், ஜாதி முற்றாக ஒழியும் என்கிறார்.

இந்துமதம் ஒழிக்கப்பட வேண்டும்
 
இந்து மதத் தத்துவங்கள், விதிகள் ஒழிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக புதிய புரட்சி விதிகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிறார்.

இந்துக்கள் மதம் என்று கூறுவது உண்மையில் சட்டமே; அல்லது அதிகமாகப் போனால் சட்டப்படியாக வகுப்பு ஒழுக்கமுறையே. இப்படி கட்டளைகளின் தொகுப்பாக அமைந்துள்ள ஒன்றை நான் மதம் என்று மதிக்க மாட்டேன். இவ்வாறு மதம் என்று மக்களிடம் தவறாகக் காட்டப்படும் கட்டளைத் தொகுப்புகளின் முதல் தீமை, அறநெறி வாழ்க்கை இயற்கையாக, சுயேச்சை யானதாக இருப்பதற்கு மாறாக, வெளியிலிருந்து சுமத்தப்படும் விதிகளைக் கவலையுடனும் அடிமைத் தனமாகவும் அனுசரித்து நடக்கும் செயலாக மாறி விடுகிறது என்பதாகும்.

லட்சியங்களுக்கு விசுவாசமாக நடப்பதற்குப் பதிலாக, கட்டளைகளுக்கு இயங்க நடப்பதே வாழ்க்கை ஆகி விடுகிறது. எல்லாவற்றிலும் பெரிய தீமை, அந்தச் சட்டங்கள் நேற்றும், இன்றும், இனி எப்போதும் மாறாமல் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதே. இவை ஒரு வகுப்பிற்கு இருப்பதுபோல இன்னொரு வகுப்புக்கு இல்லை என்பது இவற்றில் காணப்படும் அநீதி. எல்லாத் தலைமுறைகளுக்கும் இதே சட்டங்கள்தான் என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதால் இந்த அநீதி நிரந்தரமாகிறது. தீர்க்க தரிசிகள் அல்லது சட்டம் அளிப்போர் என்று கூறப்படும் சில நபர்களால் இந்த விதித் தொகுப்புகள் உருவாக்கப் பட்டன என்பது ஆட்சேபிக்கப்படவில்லை. ஆனால் இவை இறுதியானவை, மாற்றமுடியாதவை என்று கூறப்படுவது ஆட்சேபத்துக்குரியது. இன்பம் என்பது ஒரு மனிதனின் நிலைமைகளுக்குத் தகுந்தபடி மாறக் கூடியது. அது மட்டுமின்றி வெவ்வேறு மக்களின் வெவ்வேறு காலங்களின் நிலைமைக்குத் தகுந்த படியும் அது மாறக்கூடியது. அப்படியானால், என்றென்றைக்கும் மாறாத இந்தச் சட்டங்களைச் சகித்துக்கொள்ளச் செய்வது மக்களை நெருக்கிப் பிடித்துக் கட்டிப் போடுவது போலாகுமல்லவா? எனவே இப்படிப்பட்ட மதத்தை அழிக்க வேண்டும் என்று கூறுவதில் எனக்குத் தயக்கம் இல்லை. இப்படிப்பட்ட மதத்தை அழிக்கப் பாடுபடுவது மதத்துக்கு விரோதமான செயல் அல்ல.


இம்மாதிரி ஒரு சட்டத்தை எடுத்து வைத்து மக்களிடம் அதை மதம் என்று பொய்ப்பெயர் சூட்டியிருக்கும் முக மூடியைக் கிழித்தெறிவது உங்கள் கடமை என்று நான் கருதுகிறேன். இது நீங்கள் அவசியமாகச் செய்ய வேண்டிய காரியம். மக்கள் மனத்தில் உள்ள தவறான எண்ணத்தைப் போக்கி, அவர்கள் மதம் என்று நினைப்பது உண்மையில் சட்டமேயன்றி மதம் அல்ல என்று உணரச் செய்தால், பின்பு அதைத் திருத்த வேண்டும் என்றோ ஒழிக்கவேண்டும் என்றோ அவர்கள் ஏற்கும்படியாகக் கூற முடியும். மக்கள் இதை மதம் என்று நினைக்கும்வரை அதை மாற்ற இணங்க மாட்டார்கள். ஏனென்றால், மதம் என்பது பொதுவாக மாற்றத்துக்கு உரியதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் சட்டம் என்பது மாற்றப்படக்கூடியது. ஆகவே மதம் என்று தாங்கள் நினைப்பது உண்மையில் பழசாகிப் போன சட்டம் தான் என்று மக்கள் தெரிந்து கொண்டால், அதில் மாற்றம் செய்வதற்கு அவர்கள் தயாராயிருப்பார்கள். ஏனென்றால் சட்டத்தை மாற்றலாம் என்பது அவர்கள் அறிந்து, ஒப்புக்கொண்டுள்ள விஷயமே.

இந்து என்று சொல்லப்படும் ஒவ்வொருவரும் புரோகிதராய் வர அனுமதிக்க வேண்டும். (இதைத்தான் தந்தை பெரியார் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றார்.) புரோகிதர் அரசுப் பணியாளராக இருக்க வேண்டும். இதற்கான தகுதியை அரசு (அய்.சி.எஸ். அதிகாரிகளுக்கு செய்வதுபோல) வரையறுக்க வேண்டும். (ஆனால், தற்போது பிறப்பால் ஜாதியடிப்படையில் வரும் புரோகிதன் அறிவற்றவனாக, ஸிஃபிலிஸ், கொனோரியா போன்ற நோயுடையவனாக, ஒழுக்கக் கேடனாக இருக்கிறான்). இதன்மூலம் பிராமணியத்தையும், அதன் வழிவரும் ஜாதியையும் ஒழிக்க முடியும்.

(ஆதாரம்: அம்பேத்கர் பேச்சும் எழுத்தும்)
(தமிழ் பக்கம் 111_114, ஆங்கிலம் பக்கம் 66 மற்றும் 76)

இந்து மதமும் இந்துக்களும் தவறான லட்சியங்களை நாடுவதாலும், தவறான வாழ்வை நடத்துவதாலும் நான் அவர்களை வெறுக்கிறேன். அவர்களின் சமூக நடத்தையிலுள்ள குறைபாடுகள் மீதல்ல என் சண்டை. அதைவிட அடிப்படையானது, அவர்களின் நெறிமுறைகள் பற்றியது.

இந்துத் தலைவர்கள் வெட்கமில்லாமல் நிகழ்காலத்துடன் எவ்விதத் தொடர்பும் அற்றுப் போய்விட்ட கடந்தகால லட்சியங்களை ஆதரித்து நிற்கிறார்கள். தாம் தோன்றிய காலத்தில் பொருத்தமாக இருக்கக் கூடிய இலட்சியங்களை இன்றைக்கு வழிகாட்டுவதற்குப் பதிலாக இப்படிச் செய்கிறார்கள்.

பிராமணர்கள் சாஸ்திர விரோதமாய் எல்லாத் தொழிலும் செய்கிறார்கள். செருப்பு விற்கும் பிராமணர்கள் அதிகமாகி வருகிறார்கள். அதேநேரத்தில் ஜாதியையும், சாஸ்திரத்தையும் தினம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்த இரட்டை வேடம்? என்று சாடுகிறார் அம்பேத்கர்.

(அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் (ஜாதி ஒழிப்பு))

ஆக, அம்பேத்கர் சொல்ல வருவதென்ன? மனித பேதம் நீங்க வேண்டும், இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும், கடவுள் நம்பிக்கை இருக்கும்வரை புரோகிதர் தொழில் எல்லா ஜாதிக்கும் உரிமையாக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் எல்லாவற்றிலும் சம உரிமையும் சம தகுதியும் பெற வேண்டும். அதன் வழி ஜாதி ஒழிய வேண்டும். இதையடைய இந்துமதச் சட்டங்களை ஒழித்து விட்டு, காலத்திற்கேற்ப புரட்சியான சட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்கிறார். இதை ஜனநாயக வழியில் ஓட்டுப்போட்டு செய்ய முடியுமா? சற்றேக்குறைய 70 ஆண்டுகள் ஆகியும் அம்பேத்கர் விரும்பிய மாற்றம் வரவில்லையே, இந்துமதக் கொடுமை, பேதம், இழிவு, தீண்டாமை, ஜாதி நீங்கவில்லையே!

அதற்குத்தான் பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களின் சர்வாதிகாரம் வேண்டும் என்றார். அம்பேத்கருடைய கருத்தும் அதுதான்.

மக்கள் அனைவரின் கருத்தறிந்து இதை ஒழிக்க முடியுமா? ஜாதியை மக்கள் விட்டுக் கொடுப்பார்களா?

குடிப்பவன் சம்மதத்தோடுதான் மதுவிலக்கு செய்ய வேண்டும் என்றால் அது சாத்தியமா? லாட்டரி சீட்டு தடை மக்கள் கருத்தறிந்து செய்யப்பட்டதா? ஆக, ஜனநாயகத்திலேகூட பலவற்றைச் செய்ய சர்வாதிகார நடைமுறைதானே தேவைப்படுகிறது. அதைத்தான் பெரியார் சொன்னார். அதைத்தான் அம்பேத்கர் விரும்பினார். இதில் என்ன முரண்பாடு?

இந்து மதத்தில் சீர்திருத்தம் செய்ய காந்தி உட்பட சனாதனிகள் எண்ணியபோது, இந்து மதத்தை அறவே ஒழித்து புதிய நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று அம்பேத்கர் உறுதியாகக் கூறியதோடு,

இதே கருத்தைத்தான் தமிழ்நாட்டில் தோழர் ஈ.வெ.ரா. செய்து கொண்டிருக்கிறார் என்று அம்பேத்கரே சான்றிதழ் கொடுத்தார்.

அது மட்டுமல்ல ஜாதியை ஒழிக்க என்ன வழி? என்ற என் ஆங்கில உரையை வெளியிட்டு, என்னைத் தமிழகத்தில் பிரபலப்படுத்தியவர் தோழர் ஈ.வெ.ரா. என்றார் அம்பேத்கர்.

இந்தியாவின் முதல் மனித உரிமைப் போரே ஈ.வெ.ரா.வின் வைக்கம் போராட்டம்தான்! தாழ்த்தப்பட்வர்களுக்காகப் போராட என்னை உந்தித் தள்ளியதும் பெரியார்தான் என்று கூறினார் அம்பேத்கர்.

அப்படியிருக்க அவர்கள் இருவருக்குள்ளே வேறுபாட்டை கற்பித்து பிரித்தாளத் துடிக்கும் பித்தலாட்டப் பிரச்சாரம் எங்களிடம் எடுபடாது; எம் மக்களிடமும் எடுபடாது. மாறாக, இன்னும் உறவு பலப்படும்; உணர்வு வலுப்படும்!

4.    ஈ.வெ.ரா. இந்தியர்களுக்கு எதிரானவர், அம்பேத்கர் இந்திய கலாச்சார ஒற்றுமையில் நம்பிக்கையுடையவர்

இது அந்த பித்தலாட்டப் பேர்வழியின் நான்காவது கண்டுபிடிப்பு (சிண்டுமுடிப்பு)

முதலில் இவர் இந்தியக் கலாச்சாரம் என்ன என்பதை விளக்குவாரா?

இதற்கு அவர் சொல்லும் காரணங்கள் இந்தியாவை இனவழியாக, மொழிவழியாகப் பிரிப்பதை ஆதரித்தவர் ஈ.வெ.ரா. ஆனால், இந்தியாவின் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டவர் அம்பேத்கர். ஆன்மீகக் கலாச்சார அடிப்படையில் இந்தியாவை அரசியல்ரீதியாக ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை அம்பேத்கர் உணர்ந்திருந்தார் என்று எந்த ஆதாரமும் அற்ற ஒரு பொய்ச் செய்தியை புரட்டுச் செய்தியை இம்மோசடிப் பேர்வழி கூறியுள்ளார்.

ஆனால் உண்மையில் அம்பேத்கர் கூறியது என்ன?

நாம் ஒரு தேசமாக இருப்பதாக நம்பினால் நாம் பெரிய மாயையில் இருப்பதாகப் பொருள். பல்லாயிரம் ஜாதியினராகப் பிரிந்துபோன மக்கள் எப்படி ஒரு தேசமாக முடியும்? நாம் சமூகரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஒரு தேசமாக இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன. ஜாதிகள் தேசியத்திற்கு எதிரானவை. ஏனெனில், அவை ஜாதிகளுக்கிடையே பொறாமையையும், பகைமையையும் உருவாக்குகின்றன. நாம் உண்மையில் ஒரு தேசியத்தை விரும்பினால் இவை அனைத்தையும் வென்றாக வேண்டும். (டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல், பாகம்_13, பக்கம்_127)

இந்து இராஷ்டிரம் என்று ஒன்று அமைந்தால் அது இந்த நாட்டின் மிகப் பெரிய சோகமாக அமையும் என்கிறார். இந்துமதம் விடுதலை, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றிற்குப் பெரும் இடராகத்தான் இருக்கும்; கேடாகத்தானிருக்கும் என்கிறார் அம்பேத்கர்.

இந்தியாவிற்கென்று ஒரு பொதுவான கலாச்சாரமே இல்லாத நிலையில் இந்து கலாச்சாரத்தை அம்பேத்கர் ஆழமாக நேசித்தார் என்பது அசல் பித்தாலாட்டம் அல்லவா?

இந்தியாவில் தமிழருக்கு ஒரு பண்பாடு, ஆரியருக்கு ஒரு பண்பாடு, சீக்கியருக்கு ஒரு பண்பாடு, மராட்டியருக்கு, குஜராத்தியருக்கு, வங்காளிக்கு இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கலாச்சாரம். இஸ்லாமியருக்கு ஒரு கலாச்சாரம், கிறித்தவர்களுக்கு ஒரு கலாச்சாரம், சமணர்களுக்கு வேறு கலாச்சாரம், பவுத்தர்களுக்கு மாறுபட்ட கலாச்சாரம்.

உண்மை நிலை இப்படியிருக்க இந்திய கலாச்சார ஒற்றுமையில் அம்பேத்கர் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது அயோக்கியத்தனமா, இல்லையா? மேலே சொன்னதுபோல பல கலாச்சாரம் இருக்கையில் இந்து கலாச்சாரம் என்பது எது?

இந்து கலாச்சாரத்தை அவர் ஏற்றுக் கொண்டிருந்தால், ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் மூன்று இலட்சம் ஆண்களையும் பெண்களையும் ஒன்றுகூட்டி புத்த மதத்திற்கு எப்படி மாறியிருப்பார். பொய்ப் பிரச்சாரமே ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் அடிப்படை என்பது இதிலிருந்து விளங்கவில்லையா?

இந்த மதமாற்றத்தில் இணைந்த 3 இலட்சம் பேரும் பணத்துக்கோ, பொருளுக்கோ ஆசைப்பட்டு வந்தவர்கள் அல்ல. இந்துமதக் கேட்டை அறிந்ததால் வந்தவர்கள்.

ஆனால், அன்றைக்கு இந்துத்வாவாதிகளும், காஞ்சி சங்கராச்சாரியும் இந்து மதத்தை அழிக்க அந்நிய நாட்டார் 9கோடி ரூபாய் செலவிட்டதாக வதந்தி பரப்பி அம்பேத்கரைக் கேவலப்படுத்தினர். இதை அண்ணா அவர்கள் 21.10.1956 திராவிட நாடு ஏட்டில் விளக்கியுள்ளார்.

இந்துமதக் கேட்டை சகிக்க முடியாமல் ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை, அநியாயத்தைப் பொறுக்க முடியாமல், இழிவு நீக்கிக் கொள்ள அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து பிரிந்து புத்த மதத்தை ஏற்றார்.

இதே காரணத்திற்காகத்தான் பெரியார் திராவிட நாடு கேட்டார். கடைசியில் தமிழ்நாடு தமிழருக்கு வேண்டும் என்று கேட்டார்.

ஆக, அம்பேத்கர் நோக்கமும், பெரியார் நோக்கமும் ஒன்றுதானே. இதில் என்ன வேறுபாடு?

மதமாற்றத்தைத் தீர்வாக அம்பேத்கர் எண்ணினார்; தனிநாடு தீர்வாக பெரியார் எண்ணினார். ஆனால், இருவரும் வெறுத்தது இந்து மதக் கொடுமையை, இழிவை, ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தைத்தானே! கொள்கையில் ஒன்றாய் இருந்து பாதையில் வேறு. இதில் என்ன முரண்பாடு உள்ளது

எல்லாவற்றையும் விட ஒரு முதன்மையான கருத்தை இங்கு நாம் அறிந்தோம் என்றால், இந்த ஆர்.எஸ்.எஸ். பேர்வழி எப்படிப்பட்ட திரிபு பேர்வழி, திசைதிருப்பும் பேர்வழி, அயோக்கிய சிகாமணி என்பதைத் தெளிவாய் விளங்கிக் கொள்ளலாம்.
அது என்ன முதன்மையான கருத்து?
அம்பேத்கர் இந்திய கலாச்சாரத்தை ஆழமாக நேசித்தார் என்று இந்த ஆர்.எஸ்.எஸ். பேர்வழி கூறுகிறாரே உண்மை என்ன தெரியுமா?
பொதுவான இந்தியப் பண்பாடு என்று ஒன்று ஒருபோதும் இருந்ததில்லை என்பதையும், வரலாற்றுரீதியாக ஆரிய பார்ப்பனிய இந்தியா, பவுத்த இந்தியா, இந்து இந்தியா என்று ஒவ்வொன்றும் தனக்கென தனிப் பண்பாடுகளைக் கொண்டிருந்தன என்கிறார் அம்பேத்கர்.
(அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு_3, பக்கம் 267)
இந்தியப் பண்பாடு என்று ஒன்று ஒருபோதும் இருந்ததில்லை என்று அம்பேத்கரே ஆணித்தரமாக அறிவித்துவிட்ட பின் அவர் இந்திய கலாச்சாரத்தை ஆழமாக நேசித்தார் என்பது அயோக்கியத்தனமா? இல்லையா? சிந்தித்துப் பாருங்கள்!
தந்தை பெரியார் மொழிவாரி மாநிலத்தை ஆதரித்தார். அம்பேத்கர் ஆதரிக்கவில்லை என்று இந்த ஆர்.எஸ்.எஸ். பேர்வழி கூறும் கூற்று மிகவும் தவறானது.
1953ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அம்பேத்கர்,
இந்த மண்ணில் பூர்வீகக் குடிகளின் (மண்ணின் மக்களின்) கருத்துக்களை மதிக்கும் வகையில் மாநில அரசமைப்பு இருக்க வேண்டும். மொழி உணர்வைவிட ஜாதி உணர்வு உயர்ஜாதியினரிடம் அதிகம் இருப்பதால், மொழிக்கு உண்மையான சொந்தக்காரர்களான ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டு மொழிவாரி மாநிலம் அமைக்க வேண்டும். என்று ஆந்திர மாநிலச் சிக்கல் பற்றிப் பேசுகையில் கூறினார்.

ஆக, அம்பேத்கர் இந்திய கலாச்சாரத்தை ஆழமாய் நேசித்தார் என்பதும் பொய்; மொழிவாரி மாநிலத்தை எதிர்த்தார் என்பதும் பொய், இந்த பொய்க் கூற்றின் அடிப்படையில் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் முரண்பாடு இருந்தது என்பதும் மோசடி என்பது தெளிவாய் விளங்கும்!

ஆக, இருவரும் மொழிவாரி மாநிலம் வேண்டும் என்றனர். பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் வைத்தார். பின்னர் அதைக் கைவிட்டு எல்லா மக்களுக்கும் சமவாய்ப்பு, சம உரிமை என்றார். இதில் என்ன தேச விரோதம் உள்ளது? எல்லாம் மக்கள் நலன்தானே!

****

5. அம்பேத்கர் சமஸ்கிருத ஆதரவாளர். ஈ.வெ.ரா. சமஸ்கிருதத்தை வெறுத்தவர்.

இது இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர் கண்டுபிடித்த அய்ந்தாவது முரண்பாடு!

ஆரியர்கள் உலகின் பல பாகங்களில் நாடோடிகளாய்த் திரிந்தவர்கள். அங்கங்கே பேசப்படும் பலப்பல மொழிகளை எடுத்துக் கொண்டவர்கள். இன்று தங்களின் மொழி என்று அவர்கள் கூறிக்கொள்ளும் சமஸ்கிருத மொழி உண்மையில் உலகின் பல பகுதிகளில், பல காலகட்டங்களில் பேசப்பட்ட, மொழிகளின், பேச்சு வழக்குகளின் ஒரு கலவையேயாகும். சமஸ்கிருத மொழியில் எந்தச் சிறப்புமே இல்லை. தங்களை உயர்ந்தவர்கள் என்று காட்டிக்கொள்ளவும், மற்ற மொழிகளை இழிவுபடுத்தவுமே சமஸ்கிருத மொழியைப் பற்றி பார்ப்பனர்கள் உயர்வாகப் பேசுகின்றனர் என்று பெரியாரின் கருத்தை 31.07.2014 விடுதலை நாளேட்டின் ஆதாரத்துடன் எடுத்துக் காட்டுகிறார் இந்த நபர்.

பெரியார் கூறிய அனைத்தும் மொழி அறிஞர்கள் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் உறுதி செய்த உண்மைகள். பெரியார் இது மட்டுமல்ல மேலும் சொல்கிறார் அதே விடுதலையில் வந்துள்ளது.

சமஸ்கிருத மொழி அனாதிகால மொழியென்றும், இம்மொழியிலிருந்துதான் இந்தியாவின் பழங்கால மொழிகள் அனைத்தும் உற்பத்தியாயிற்றெனவும் சொல்வது ஆதாரமற்றது.

ஏனெனில், சமஸ்கிருதம் கி.மு.1,500க்குப் பின் உருவானது என்று தெளிவாகியுள்ளது என்கிறார்.

உலகின் மொழிகள் பலவும் தமிழிலிருந்தே வந்தவை. தமிழே மூலமொழி. மிகப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது சமஸ்கிருதம். அதற்கும் தமிழே மூலம். நீண்ட நெடுங்காலம் பேச்சு வழக்கில்லா மொழி சமஸ்கிரும். அதற்கென எழுத்தில்லை. சமஸ்கிருத எழுத்து வடிவம் மிகப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது என்பது மொழியியல் ஆய்வாளர்கள் உறுதி செய்த உண்மை.

அதன்படி பெரியார் சொல்வது மிகச் சரி. அம்பேத்கரும் பின்னாளில் இக்கருத்தையே ஏற்கிறார்.

இந்தியா முழுமையும் பேசப்பட்ட மொழி தமிழ். அதன்பின் ஆரியர் அயல்நாட்டிலிருந்து வந்து கலக்க அவர்களின் பேச்சு மொழியான சமஸ்கிருதம் வட இந்தியாவில் பரவுகிறது. ஆனால், தென்இந்தியாவில் சமஸ்கிருதம் அதிகம் கலக்கவில்லை என்று அம்பேத்கர் சொல்கிறார்.

_ பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு-_7, பக்கம் - 300இல்,

தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டுமன்று; ஆரியர்கள் வரும் முன் தமிழ்மொழி இந்தியா முழுவதும் பேசப்பட்டது. தமிழ் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரைப் பேசப்பட்ட மொழி.

இது உண்மையில் இந்தியா முழுவதும் நாகர்களால் (திராவிடர்களால்) பேசப்பட்ட மொழியாகும். நாகர்கள் மீது அவர்கள் மொழியின்மீதும் ஆரியர்கள் ஏற்படுத்திய தாக்கம், வட இந்தியாவில் வாழ்ந்த நாகர்கள் தங்கள் தாய்மொழியை விட்டு அதற்குப் பதிலாக சமஸ்கிருதத்தோடு கலக்கக் காரணமாயிற்று.

தென்னிந்தியாவில் இருந்த நாகர்கள் தமிழை தங்களின் தாய்மொழியாக்கிக் கொண்டனர். அவர்கள் ஆரியர்களின் சமஸ்கிருத மொழியை ஏற்கவில்லை. அதனால், தென்னிந்திய மக்களுக்கு மட்டும் திராவிடர் என்ற பெயர் நின்றது.

நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனம் என்பதை மறந்துவிடக் கூடாது. நாகர் என்பது இனம்; திராவிடர் என்பது அவர்களின் மொழியைக் குறிப்பது. இந்தியாவில் உள்ள இனங்கள் இரண்டுதான். ஒன்று ஆரியர்கள், மற்றொன்று நாகர்கள் என்கிறார் அம்பேத்கர்.

அசோகருடைய கல்வெட்டுக்களில் பிராகிருதமும், பிராமி எழுத்துகளுமே காணப்படுகின்றன. அப்போது ஆரிய மொழியான சமஸ்கிருதம் மக்களால் பேசப்படவேயில்லை.

வடமொழிப் பேராசிரியர் டாக்டர் கே.கைலாசநாத குருக்கள் வேதங்கள் சமஸ்கிருத நூல் அல்ல. வேதங்கள் பின்னாளில் பாணினியால் திருத்தம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டவையே சமஸ்கிருத நூல்கள்.

இராமாயணமும் மகாபாரதமும் எழுதப்பட்ட காலத்தில் சமஸ்கிருதமே உருவாகவில்லை என்கிறார்.

கே.சி.கன்னா என்ற வரலாற்றாய்வாளர், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன்றவை கி.பி.நான்கு அல்லது அய்ந்தாம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை என்றார். ஏ.பார்த் என்ற அறிஞரும் இதையே கூறுகிறார்.

கணிட்ராக்டர் என்னும் அறிஞர், சமஸ்கிருதம் அந்தந்தப் பகுதியில் வழங்கிய மொழி எழுத்துக்களாலே எழுதப்பட்டது. திராவிடர் எழுத்துக்களில் மாற்றம் செய்தே சமஸ்கிருத எழுத்தை உருவாக்கினர் என்று பல ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

எச்.ஜி.வெல்ஸ் என்ற அறிஞர், ஆரியர்கள் நாகரிகமடைந்த மக்களுடன் தொடர்புகொள்ளும்வரை அவர்களுக்கென்று எழுத்துமுறை இல்லை என்று கூறுகிறார்.

பல்லவர்களின் கல்வெட்டுகள் பிராகிருதத்திலும் சமஸ்கிருதத்திலும் உள்ளன. அக்கல்வெட்டுகளில் சமஸ்கிருதம் வளர்ச்சி பெறாத மொழியாகவே உள்ளது. பிராகிருதமே சமஸ்கிருதமாக மாறிக்கொண்டிருந்ததை அது உணர்த்துகின்றது.

சமஸ்கிருதம் கி.மு. முதல் நூற்றாண்டு முதல் பிராகிருத மொழியால் எழுதப்பட்டு, கி.பி.350க்குப் பின், பிராகிருத இலக்கியத்தை மொழிப் பெயர்த்து வளர்ந்தது, இந்த மொழிபெயர்ப்பு காலத்தில்தான், இந்திய மரபுப் புராணங்களும், இராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்களும் திருத்திச் சமஸ்கிருதத்தில் வெளியிடப்பட்டன. (ஆதாரம்: இந்திய வரலாற்றுத் தொகுதி 162-3. பாரதீய வித்யாபவன் வெளியீடு- _ ஜார்ஜ் எல். ஹார்ட்டின்- ஆரிய மொழி, திராவிட மொழிகளின் ஒப்பாய்வு நூல்.)

சமஸ்கிருத நூல்கள் பலவும் மொழிபெயர்ப்பு நூல்களே. எனவே, சமஸ்கிருதம் சொந்த இலக்கிய வளம் கொண்டதல்ல.

கி.பி.4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களே பல நூல்களைச் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக கி.பி.4ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில், சிம்மசூரி முனிவரின் உலோக வியாபகம் என்ற பிராகிருத மொழிநூல், கடலூர் திருப்பாதிரிபுலியூர் சர்வந்தி என்பவரால் கதசப்தசாயி என்ற பெயரில் சமஸ்கிருதத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

மேலும் சமஸ்கிருதத்தின் தோற்றம் அமைப்பு பற்றி ஆய்வு செய்த கால்வின் கெபர்ட்(Colvin Kephart) என்பவர், சமஸ்கிருதம் இந்திய மொழி எதற்கும் தாயல்ல, அது பழைய இந்திய மொழிகளின் கலப்பால் பிற்காலத்தில் உருவானது என்கிறார்.

இந்திய மொழிகளைப் பற்றி ஆய்வு செய்த அறிஞர் கிரியர்சன், சமஸ்கிருதம் இந்திய மொழியின் மாறுதலுக்கு உட்பட்ட மொழியே என்றும்; செம்மைப்படுத்தப்பட்டு, இலக்கணம் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டதால் சமஸ்கிருதம் (செம்மைப்படுத்தப்பட்டது) என்று அழைக்கப்பட்டது என்றும் கூறுகிறார்.

டாக்டர் மக்ளீன் என்ற அறிஞர் திராவிட மொழிகள் சமஸ்கிருதத்தைவிட மூத்த மொழிகள் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.

டாக்டர் டைலர், சமஸ்கிருதம் உட்பட இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தும் இலக்கியத் தமிழால் வளர்ந்தவை என்கிறார்.

பஞ்சாப், சிந்துவெளிப் பகுதிகளில் கிடைத்த குறியீடுகளை ஆராய்ந்த பி.டி.சீனிவாச அய்யங்கார் அவையனைத்தும் மூலத் தமிழ் என்கிறார். இந்தோ_-ஆரிய மொழிகள் அனைத்தும் தமிழ் மூலத்திலிருந்து கிளைத்தவையே என்கிறார்.

டி.ஆர்.சேஷ அய்யங்காரும் இதே கருத்தை ஏற்கிறார்.

George Hart ‘Tamil Heroic Poems’   என்ற நூலில் தமிழ் இலக்கியங்கள், பிராகிருத மொழி மூலம் சமஸ்கிருதத்திற்குக் சென்றதை ஆதாரங்களோடு விளக்குகிறார்.

அமெரிக்க தமிழறிஞரான எம்.பி.மெனோ என்பார், சமஸ்கிருத இலக்கிய இலக்கணங்கள் தமிழிலிருந்து கடனாகப் பெறப்பட்டவை என்கிறார்.

ஆக, இப்படிப்பட்ட ஒரு உயர்மொழி, மூலமொழி தமிழை விட்டுவிட்டு சமஸ்கிருதத்தைப் பெருமையாய்ப் பேச அம்பேத்கர் ஒன்றுந் தெரியாதவர் அல்லர்.

இந்த ஆர்.எஸ்.எஸ். பேர்வழி எடுத்துக்காட்டும் தனஞ்செய்கீர் நூலின் வரிகள் அம்பேத்கர் ஆரம்ப நிலையில் சொன்னவை. அவர் சமஸ்கிருதம் படிக்க ஆர்வங் கொண்டு சுயமுயற்சியிலும், பின் பண்டிட் உதவியுடனும் படிக்கிறார். அப்போது சமஸ்கிருதம் பற்றி முழுமையாய் அறியாத நிலையில் சொன்னவை அவை. அதுவும் அவர் கருதியதாகச் சொல்லுகிறார். உறுதியில்லை.

அவரும் அவர் சகோதரரும் பள்ளிப் பருவத்தில் சமஸ்கிருதம் படிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களின் ஆசிரியர்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக Parsian  மொழியைப் படிக்கச் சொல்கிறார்கள்.

“In after years Ambedkar studied Sanskrit partly by himself and sometimes with the help of some pandits and himself became pandit. In his opinion parsian stands no comparison with Sanskrit as the latter, observe he, is the golden treasure of epics, the cradle of Grammar, politics and philosophy and the home of logic, drama and criticism.”


தனஞ்செய்கீர் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளவையில் சில வரிகளை நீக்கியதன் மூலம், அம்பேத்கர் ஏதோ பின்னாளில் முதிர்ச்சி பெற்ற நிலையில் இவற்றைக் கூறியது போன்ற ஒரு பொய்யான கருத்தை உருவாக்க முயற்சி செய்துள்ளார் இந்த ஆர்.எஸ்.எஸ். ஆசாமி.

பாரதிதாசன் தொடக்கத்தில் சுப்ரமணிய துதி பாடினார். அதை வைத்து அவரை முருக பக்தர் என்று சொல்லலாமா? அப்படித்தான் இதுவும்.

அவர் வளர்ந்த, பயின்ற சூழலின் தாக்கத்தால் சமஸ்கிருதத்தைப் பற்றி அவர் மேன்மையாய் நினைத்திருக்கலாம். ஆனால், அவர் ஆய்வுகள் மேற்கொண்ட முதிர்ச்சி நிலையில் இப்படிக் கூறவில்லை. ஆய்வு நிலையில் அவர் தமிழ்தான் எல்லாவற்றிற்கும் மூலம். சமஸ்கிருதம் பின்னாளில் இந்திய மொழிகளின் கலப்பால் உருவானது. அதிலுள்ள இலக்கியங்களும் மொழிபெயர்க்கப்பட்டவை என்பன போன்ற பல ஆய்வு முடிவுகளைச் சொல்கிறார்.

எனவே, சமஸ்கிருதத்தைப் பொருத்த வரை பெரியார் அம்பேத்கர் இருவரும் உயர் மதிப்பு கொள்ளவில்லை. தமிழே அனைத்துக்கும் மூலமொழி என்கின்றனர்.

திருக்குறளை மதிக்கக் கூடியவர்கள்கூட வேறுபட்ட உரை எழுதவில்லையா? இதில் என்ன குற்றம். ஆய்விலே இருவருக்கும் வேறுபாடு வரலாம். ஆனால், நோக்கத்தில் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் எந்த வேறுபாடும் எள்ளளவும் இல்லை!

                                                        **************


6.    ஈ.வெ.ரா. பார்ப்பன வெறுப்பைக் கொண்டிருந்தார். ஆனால், அம்பேத்கர் எப்போதும் பார்ப்பன வெறுப்பைக் கொண்டதில்லை. பார்ப்பனர்களை நேசித்தார்.

இது இந்தப் புரட்டல் பேர்வழி கூறும் அடுத்த வேறுபாடு _ குற்றச்சாட்டு.

பெரியார், அம்பேத்கர் இருவரின் பேச்சு எழுத்து எல்லாமே ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிரானவையே! இதில் பெரியாரை மட்டும் பிரித்துப் பேசுவது அயோக்கியச் செயல்.

இருவருமே ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை, கொடுமையை, ஒடுக்குமுறையை, அவர்கள் கற்பித்த பேதத்தை, ஜாதியத்தை, இழிவை எதிர்த்தவர்களே தவிர, தனிப்பட்ட பார்ப்பன விரோதம், வெறுப்பு கொண்டவர்கள் அல்ல. அம்பேத்கர் பார்ப்பன ஆதரவில் வளர்ந்தவர்; பெரியார் பார்ப்பனரை நண்பராகக் கொண்டவர்.

பார்ப்பானையும் பாம்பையும் கண்டால், பாம்மை விட்டுவிட்ட பார்ப்பானை அடி என்று பெரியார் சொன்னதாகச் சொல்லப்படும் பிரச்சாரம் தவறானது. அதைப் பலமுறைச் சொல்லி விளக்கிவிட்டோம். இது வடநாட்டு பழமொழியே தவிர, பெரியார் சொன்னதல்ல.

ஆரியப் பார்ப்பனர்கள் பற்றி பெரியார் நிலைப்பாடு என்ன என்பதற்கு கீழ்க்கண்ட அவரது பேச்சே நல்ல உதாரணம்.

பார்ப்பனர்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் செயல்திட்டமும் அது வல்ல. திராவிடர் கழகமும் நானும் சொல்வதெல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழவேண்டும் என்பது தான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

தவிரவும் பார்ப்பனர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றுமில்லை. அவர்கள் அனுசரிக்கிற சில பழக்க வழக்கங்களையும், முறைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். இது அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக்கொள்வது பெரிய காரியம் அல்ல.

விஞ்ஞானம் பெருக்கம் அடைந்து விட்டது. இந்நிலையில் நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பானேன்? ஆகவே உள்ள பேதம் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் பாடுபடுகின்றேன். நம்மிடையே பேதவுணர்ச்சி வரக்கூடாது என்பதில் எனக்குக் கவலையுண்டு.

எனவே முயற்சியில் பலாத்காரம் சிறிதும் இருக்கக்கூடாது என்பதிலும் எனக்குக் கவலையுண்டு.

காலம் எப்போதும் ஒன்றுபோல இருக்க முடியாது. நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும் பொறுமை சாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்பிற்கிடமில்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர்கழக பின் சந்ததிகளும், பார்ப்பனர்களின் பின் சந்ததிகளும் இப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூறமுடியாது. ஆகவே, அதிருப்திகளுக்குக் கடின மானவற்றை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம். எனவே கால வளர்ச்சிக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று சென்னை இராயப்பேட்டை, இலட்சுமிபுரத்தில் பார்ப்பனர் சங்கக் கூட்டத்திலே (5.1.1953) பேசியவர் பெரியார் அவர்கள்.
(விடுதலை: 8.1.1953)

அதேபோல் அம்பேத்கரும், அயல் நாட்டிலிருந்து வந்த பார்ப்பனர்கள், இந்த மண்ணின் மக்களான பார்ப்பனர் அல்லாதாரிடம் நன்றியோடு நடக்க வேண்டுமே தவிர அவர்களை அடக்கி ஒடுக்கி, இழிவுபடுத்தி ஆதிக்கம் செலுத்தி, உரிமைகளைப் பறிக்கக் கூடாது என்றுதான் கூறினார். இதை இருவரின் முழுமையான பேச்சுகளையும், எழுத்துக்களையும், போராட்டங்களையும், உரிமை முழக்கங்களையும் அறிந்தால் நன்கு புரிந்து கொள்ளலாம். எனவே, இவரது இந்தக் குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது. பெரியார் மீது இவர்களுக்குள்ள வெறுப்பின் வெளிப்பாடு.

7.    இந்திய மக்களின் பாதுகாப்பில் அம்பேத்கர் சமரசம் செய்து கொள்ளாதவர். இதை ஈ.வெ.ரா.விடம் காணமுடியாது. அவர் இனவெறியாளர்.

இது இந்த ஆர்.எஸ்.எஸ். எத்தரின் ஏழாவது அபாண்டக் குற்றச்சாட்டு.

அம்பேத்கர் பேசியதாக இவர் எடுத்துக்காட்டும் வாசகங்களே நம் விளக்கத்துக்கு சாதகமானவையாகும். அவர் வாதத்திற்கு வலு சேர்ப்பவையல்ல.

அம்பேத்கரின் சொற்களில், சுயராஜ்யத்தைப் பாதுகாப்பது என்பதைவிட மிக முக்கியமான கேள்வி, சுயராஜ்யத்தில் இந்துக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதுதான். இந்து சமூகம் ஜாதிப் பிரிவினை அற்ற ஒரு சமூகமாக மாறும்போது மட்டுமே தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் பலம் பெற்றிருப்பதான நம்பிக்கை அதற்கு ஏற்படும் என்பதே எனது கருத்து. அத்தகைய ஒரு உள்ளுறை ஆற்றல் இல்லாமல் போனால், இந்துக்களுக்கான சுயராஜ்யம் என்பது அடிமைத்தனத்துக்கு அழைத்துச் செல்லும் ஒரு பாதையாகவே இருக்கும் என்பதே இவர் மேற்கோள் காட்டும் அம்பேத்கர் கூற்று.

இதில் என்ன சொல்கிறார்,

இந்திய நாட்டின் சுதந்திரத்தை விட, இந்துக்களில் பெரும்பான்மையாகவுள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை பாதுகாப்பும், சம உரிமையுமே முதன்மையானது என்கிறார். ஜாதியை ஒழிக்காமல் சுதந்திரம் பெறுவது அது பெருவாரியான மக்களை அடிமைப்படுத்தவே பயன்படும் என்கிறார்.

பெரியாரும் இதைத்தான் சொன்னார். இந்த நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து இந்துமத பேதம், இழிவு இவற்றை ஒழித்து ஜாதியை ஒழித்து, சமத்துவ, சம உரிமையை நிலைநாட்டும் வரை இந்த நாட்டுக்கு சுதந்திரம் தேவையில்லை என்றார்.

இதில் அம்பேத்கர் பெரியார் இருவரும் ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளனர். அப்படியிருக்க பெரியாரை மட்டும் தேச விரோதியைப் போல காட்டுவது மோசடியல்லவா?

இந்தக் குற்றச்சாட்டு கூறும் இந்த ஆள் ஒரு பைத்தியக்காரனோ என்ற அய்யத்தையே ஏற்படுத்துகிறது. எனவே, இவர்களிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

8.    அம்பேத்கர் உபநிஷத்துகளிலிருந்து தனது சீர்திருத்தங்களைப் பெற்றார். இந்த ஆழமான பகுத்தாய்வு ஈ.வெ.ரா.வுக்கு இல்லை.

அம்பேத்கர் அவர்கள் இந்து மத சாஸ்திரங்கள் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்து மதத்தையே ஒழிக்க வேண்டும். சாஸ்திரங்களையே அழிக்க வேண்டும். அதற்குப் பதில் புத்தக் கொள்கைகளைக் கொண்ட புதிய விதிகளை உருவாக்க வேண்டும். அது அனைத்து மக்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பை அளிக்கக் கூடியதாக  இருக்க வேண்டும். அவை சட்டங்களாக இருக்க வேண்டும். அவை சட்டங்களாக இருக்க வேண்டுமே தவிர, மதத்தோடு தொடபுப்படுத்தக் கூடாது என்று கூறியே தனது தீர்வை முன்வைக்கிறார்.

அப்படியிருக்க அதற்கு முரணான செய்திகளை இவர் முடிச்சுப் போட்டுக் காட்டுவது உண்மைக்கு மாறானது.

தந்தை பெரியாரும் சரி, அண்ணல் அம்பேத்கரும் சரி, ஏன் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரும் சரி, யார் எதைக் கூறினாலும் அதிலுள்ள உண்மையை அறிந்து சரியானதை ஏற்க வேண்டும், மற்றதைத் தள்ள வேண்டும் என்றே கூறியுள்ளனர். பிறர் கூறும் நல்லவற்றை ஏற்கக் கூடாது என்று பெரியார் என்றைக்கும் சொன்னதில்லை.

பெரியாரும் அம்பேத்கரும் பல்வேறு சூழலில், பல காரணங்களுக்காகக் கூறிய செய்திகளை கத்தரித்துக் காட்டி இந்த ஆள் மக்களைக் குழப்பி ஆதாயம் தேட முயல்வதே இதன்மூலம் வெளிப்படுகிறது. மாறாக, பெரியாரும் அம்பேத்கரும் ஒரே நோக்குடையவர்கள். அவர்களின் அணுகுமுறையில் சில வேறுபாடுகள் இருக்கலாம். இதை ஊதிப் பெரிதாக்கிக் காட்ட முயல்வது ஏமாற்று வேலையாகும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அயல்நாட்டுக் கருத்துக்கள் நமக்குத் தேவையில்லை. புத்தர் கூறியவற்றிலே எல்லாம் இருக்கிறது என்று கூறியவர் அம்பேத்கர். நம் நாட்டு சிந்தனைகளே நமக்குப் போதும். அதிலுள்ள அநீதிகளை ஒழித்தால் போதும் என்பதற்கு அம்பேத்கர் கூறியவற்றை இவர் எடுத்துக்காட்டி, இந்துமத சாஸ்திரங்களை அம்பேத்கர் ஏற்றுக் கொண்டதுபோல் காட்ட முனைவது மோசடியாகும். அவர் இந்து சாஸ்திரங்களை, இந்து மதத்தை ஒழிப்பதில் தீவிரம் காட்டினார். இதை இதற்குமுன் விரிவாகப் பார்த்துள்ளோம். பெரியாரும் அதையே கூறினார். இருவருக்கும் இதில் வேறுபாடு இல்லை.

****

9.    இரட்டைப் பேச்சுகளை அம்பேத்கர் பேசவில்லை. ஆனால், ஈ.வெ.ரா. பேசினார்.

தந்தை பெரியார் பற்றிய உயர் மதிப்பீடுகள் பலவுண்டு. அவற்றுள் ஒன்று அவர் எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். யார் என்ன நினைப்பார்கள், என்ன விமர்சனம் வரும் என்பதற்கு ஏற்ப பேசாதவர். மனதிற்குச் சரியென்று படுவதை ஒளிவுமறைவு இன்றி பேசுவார். போராட்ட முறையில்கூட வெளிப்படையாகவே நடப்பார். இவை அவரது இன எதிரிகளே ஒப்புக்கொண்ட உண்மை. அப்படியிருக்க, அயோக்கியத்தனம் பேசுவதே கொள்கையென செயல்படும் ஆர்.எஸ்.எஸ். வெறியரான இந்த நபர் அபாண்டமான பழியை பெரியார் மீது சொல்லியுள்ளார்.

எதையும் வெளிப்படையாகப் பேசுவது அம்பேத்கருக்கும் இயல்பு. ஆக கொள்கை, எழுத்து, பேச்சு, செயல்பாடு என்று இருவரும் ஒத்த இயல்புள்ளவர்கள். அப்படி இருக்க இருவருக்கும் நேர் எதிரியான இந்த ஆர்.எஸ்.எஸ். மதவாதக் கும்பல், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், அம்பேத்கருக்கும் பெருமை சேர்ப்பதாக காட்டிக்கொண்டு, ஒத்த நோக்குடையவர்களின் தொண்டர்களைப் பிரித்து பலமிழக்கச் செய்ய மேற்கொள்ளும் ஒரு மோசடி முயற்சியே இந்தக் குற்றச்சாட்டுகள்.

பார்ப்பனரல்லாத உயர்ஜாதி திராவிடர்களால் தாழ்த்தப்பட்ட மக்கள் கீழ்வெண்மணியில் கொளுத்திக் கொல்லப்பட்டதை ஈ.வெ.ரா. கண்டிக்கவே இல்லை. கூலி உயர்வு கேட்கும் போராட்டத்தை தாழ்த்தப்பட்டோர் செய்யக் காரணமானவர்களையே கண்டித்தார். இது நியாயத்திற்கு எதிரான அவரது மனநிலையைக் காட்டுகிறது என்று பெரியார் மீது குற்றஞ் சாட்டுகிறார் இந்து ஆள்.

ஆனால், இவர் கூறுவதுபோன்று பெரியார் கூலி உயர்வு கேட்கச் சொன்னவர்களைக் கண்டித்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

28.12.1968 விடுதலையில் அவர் எழுதிய தலையங்கத்தில்,

நேற்று முன்தினம் தற்காப்புக்கு ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்துகொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள், பதுங்கிக்கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி 42 பேரும் கருகிச் சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்டிருக்கிறது.

இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டம் இல்லை. சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படியிருக்க, பழிவாங்கும், ஜாதி உணர்ச்சிகொண்ட சுயநலத்தையே முக்கியமாய்க் கருதும் நீதிபதிகளே 100க்கு 90 பேர் இருக்கிறார்கள் என்று தலையங்கத்தில் கண்டித்துக் கவலைப்படுகிறார்.

விடுதலையிலும் அதுபற்றிய செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் அவர் கூலி உயர்வு கோரிக்கையைக் கண்டித்ததாக இல்லை.

இச்சம்பவத்தையும், அவை அரசாங்கத்தின் கையாலாகாத நிலையாலும், ஆதிக்கவாதிகளாலும் நடைபெறுவதையும் கண்டிக்கிறார். இதில் என்ன இரட்டை நிலை? இதில் என்ன தலித் விரோத நிலையுள்ளது? தாழ்த்தப்பட்டவர்களுக்காக பெரியார் போராடியதை அம்பேத்கர் பாராட்டுகிறார். தலித் மக்களும் பாராட்டுகிறார்கள். தலித் தகவல் ஒருங்கிணைப்பு அமைப்பு, பெரியாரும் அம்பேத்கரும் எந்த அளவிற்கு ஒருங்கிணைந்தவர்கள் என்பதைக் கூறியுள்ளனர். அப்படியிருக்க ஆர்.எஸ்.எஸ்.காரன் எதற்கு இதைப் பேசுகிறான்?

தலித்துகளை பஞ்சமர்களாக்கி, தீண்டத்தகாதவர்களாக்கி, கல்வியைப் பறித்து இன்றளவும் கொடுமைப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுக்கு தலித் நலம் பற்றி பேச என்ன தகுதியிருக்கிறது?

அடுத்த 10ஆவது குற்றச்சாட்டும் தலித் சார்ந்ததாக இருப்பதால் இரண்டுக்கும் சேர்த்து உரிய பதிலைத் தர விரும்புகிறோம்.

10. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஈ.வெ.ரா. இருந்ததில்லை.

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காகப் போராட முன்வந்தபோது தாழ்த்தப்பட்டோரின் நிலை என்ன?

1.    ஆதிராவிடர்கள் பார்ப்பனத் தெருக்கள், முன்னேறியவர்கள் வாழும் தெருக்கள், கோயில்களைச் சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்துகூடச் செல்லமுடியாது.

2.    ஆதிதிராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டி கட்டக்கூடாது.

3.    தங்க நகைகள் அணியக்கூடாது.

4.    மண் குடத்தில்தான் நீர் மொள்ள வேண்டும்.

5.    ஆதிதிராவிடர் வீட்டுக் குழந்தைகள் படிக்கக்கூடாது.

6.    அடிமையாக இருக்க வேண்டும்.

7.    சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.

8.    திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.

9.    பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக்கூடாது.

10.    குதிரைமீது ஊர்வலம் செல்லக்கூடாது.

11.    வண்டி ஏறிச் செல்லக் கூடாது.

12.    பொதுக்கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.

13.    சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையே வேறு.

14.    பறையன் சுடுகாடு என்றே தனி சுடுகாடு.

15.    மேல் அங்கியோ, துண்டு அணிந்துகொண்டோ செல்லக் கூடாது.

16.    பெண்கள் ரவிக்கைகள் அணியக்கூடாது என்பதோடு மேல் ஜாதியினர்
வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணியையும் எடுத்து அக்குலில் வைத்துக்கொள்ள வேண்டும்.

17.    நீதிமன்றங்களில் சாட்சி சொல்ல நேர்ந்தால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும் என்று இருந்தது. இவற்றை மாற்றவே சுயமரியாதை இயக்கம் அதிகம் போராடியது.

    பஞ்சமனும் (தாழ்த்தப்பட்டவர்களும்) நாய்களும், பெருநோயாளிகளும் (தொழுநோயாளிகள்) நுழையக் கூடாது என்று உணவு விடுதிகளிலும் பேருந்துகளிலும் எழுதி வைத்தனர். நாடக சபாவில் பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று வைத்தனர்.

    தாழ்த்தப்பட்டவன் வண்டியிலேறி வீதிக்கு வந்துவிட்டான் என்பதற்காக கட்டிவைத்து அடித்து அபராதம் போட்டனர். அதைப் பெரியார் வன்மையாகக் கண்டித்து, கொடுமை! கொடுமை! என்ற தலைப்பில் 24.11.1929 குடியரசில் எழுதினார்.

    அந்தோணிராஜ் என்ற மாணவன் அக்கிரகார வீதியில் நடந்துவந்தான் என்பதற்காக, அவனை ரங்கசாமி அய்யர் செருப்பாலடித்தார். இதை வன்மையாக எதிர்த்து 24.4.1926 குடியரசில் பெரியார் எழுதினார்.

    ஆதித்திராவிடர், தீயர், தீண்டாமை விலக்கு மாநாடுகளை பெரியார் நடத்தினார்.

    21.07.1929இல் சென்னையிலும், 25.08.1929இல் இராமநாதபுரத்திலும், 10.06.1930இல் திருநெல்வேலியிலும், 16.05.1931இல் சேலத்திலும், 07.06.1931இல் லால்குடியிலும், 05.07.1931இல் கோவையிலும், 04.07.1931இல் தஞ்சையிலும், 07.12.1931இல் கோவையிலும், 07.02.1932இல் லால்குடியிலும், 28.08.1932இல் அருப்புக்கோட்டையிலும், 07.08.1933இல் சென்னையிலும், 1.07.1938இல் சீர்காழியிலும், 07.03.1936இல் திருச்செங்கோட்டிலும், 23.05.1936இல் கொச்சியிலும், 02.09.1936இல் சேலத்திலும், 06.05.1937இல் சிதம்பரத்திலும், 04.07.1937இல ஆம்பூரிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மாநாடுகளை நடத்தி கண்டன தீர்மானங்களையும், உரிமைக்கான தீர்மானங்களையும் பெரியார் நிறைவேற்றினார்.

மனித உரிமை பெற அரசின் தடையை மீறுவோம். தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கி வைப்போரை திராவிடர் இயக்கத்தின் எதிரிகளாய் எண்ணி எதிர்போம் என்று திருமங்கலத்தில் பேசினார்.

ஜாதிகளை ஒழிப்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, திராவிடர் கழகமும் பழங்குடி மக்கள் (தாழ்த்தப்பட்டோர்) நகமும் சதையும்போல என்று திருச்சியில் பேசினார் பெரியார்.

தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு! என்று 09.02.1982இல் விடுதலை தலையங்கம் தீட்டியது. இப்படி ஆயிரக்கணக்கான போராட்டங்களை திராவிடர்

கழகம் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்துள்ளது. இவற்றை மேலும் விரிவாய் அறிய குடியரசு, விடுதலை, உண்மை, தலித்திய ஏடுகள் போன்றவற்றை படியுங்கள்.

பெரியார் பேசுகிறார்: நானோ திராவிடர் இயக்கமோ தாழ்த்தப்பட்டோருக்காக என்று இதுவரை தனியாக ஒதுக்கி வேலை செய்தது கிடையாது. வேண்டுமானால் திராவிடர் இயக்கத் திட்டமானது யார் யார் தாழ்த்தப்பட்டுள்ளார்களோஅவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்கும் முறையில் இருக்கிறது என்று கூறுங்கள். யான் தாழ்த்தப்பட்டோருக்காகத் தனியாக உழைக்கிறேன் என்று உங்களிடையே பொய் கூற முடியாது. அவ்வித எண்ணம் எனக்கில்லை. இருக்கவேண்டிய அவசியமுமில்லை. ஏன் இவ்வாறு கூறுகிறேன்? நீங்கள் வேறுவிதமாக கருதவேண்டாம். ஆதிதிராவிடன் _ திராவிடன் என்ற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது எல்லோரும் திராவிடர்கள் என்பதே எங்களது திட்டமாகும்.

திராவிடர்களில் ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களும் இல்லாமலில்லை. இனி அவர்களை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்பதும் எனக்குத் தெரியும்.

ஆகவே ஒரு இனத்தைச் சார்ந்த நாம் நமக்குள் பிரிவுகளாக சொல்லளவிலும் இருக்கக் கூடாதென்பதே எனது தீவிர எண்ணமாகும்.

இன்னும் விளக்கமாக கூறுகிறேன். திராவிடர் இயக்கத்திற்கு முக்கிய கொள்கை என்னவென்பதை இந்த நாட்டில் பறையன் என்றும், பார்ப்பனர் என்றும், உயர்ந்த ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக்காரன் என்றிருப்பதையும், சூத்திரன், பஞ்சமன் என்று மிருப்பதையும் அறவே ஒழித்து எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஒரே சமுதாய மக்கள், என்னும் கொள்கையை நடைமுறையில் செய்வதேயாகும். எனவே, நானோ, திராவிடர் கழகமோ நமக்குள்ளாக இருந்துவரும் ஜாதிகளுக்காக இதை செய்தோம் என்று வீண் பெருமை பேசிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஆரியரும் அவர்களின் ஸ்தாபனமாகிய காங்கிரசும் அம்மாதிரி வேண்டுமானால் சொல்லி ஏமாற்றிப் பெருமையடையலாம். காரணம் வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் அவர்கள், வேறு நாட்டினர் அவர்கள் நம்மைக் கடவுள் பேரால் அடிமைப்படுத்தி, நம் நாட்டில் நமக்கு வாழ்வில்லாமல் செய்து கறையான் போன்று அவர்கள் இங்கிருப்பதால் ஏதோ தானம் செய்வதுபோன்று அக்கூட்டம் ஆதிதிராவிடர்களுக்கு இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்று கூறி ஆதிக்கத்தின் பித்தலாட்ட சூழ்ச்சியை மறைக்கச் செய்யலாம். நாம் ஏன் நமது திராவிடர் இயக்கம் அவ்வித கீழ்நிலையில் செல்லவேண்டும்?  எனவே, தோழர்களே, இனி நமக்குள் ஆதிதிராவிடர், திராவிடர் என்ற வித்தியாசங்கள் வேண்டாம். பறையன் என்று சொல்லாதே, சூத்திரன் என்று கூறாதே என்று உணர்ச்சியை அடையச் செய்யுங்கள். தவிர தாழ்த்தப்பட்டோர் சங்கத்திற்கு என் அருமை நண்பரும் அறிஞருமான டாக்டர் அம்பேத்கர் தலைவராக இருந்து வருகிறார். தாழ்த்தப்பட்டோர் இந்துக்களல்ல என்ற மிக ஆதாரத்தோடு ஆரியத்தின் முதுகில் தட்டி ஆணவத்தைக் குறைத்தவர்களில் அவரும் ஒரு முக்கியஸ்தர்; பேரறிஞர்.

 நான் மிக எதிர்பார்த்திருந்தேன். அவரின் ஒத்துழைப்பை இவ்வாரியத்தின் கொடுமைகளை ஒழிக்க. ஆனால் எதிர்பாராத விதமாக எந்த ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங்கொடுக்கும்படி செய்தாரோ அதே ஆரியத்தின் ஸ்தாபனமாகிய இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று நம் அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டுவிட்டார். இன்னும் கூறவேண்டுமானால் இந்திய நாடு பிரிக்கப்படக் கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாட்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்று நான் அஞ்சுகிறேன்.

எனினும் அவருக்குள்ள சூழ்நிலையில் வடநாட்டுத் தொடர்பில் அப்படித்தான் இருக்க வேண்டியிருக்கிறது போலும்! நான் அதைப் பற்றித் தப்பாகவோ குறைவாகவோ கூற முன்வரவில்லை. அவர் என்ன? நம் நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களே தாழ்த்தப்பட்டோரின் விடுதலையையே குறிக்கோளாகக் கொண்டுள்ள திராவிடர் இயக்கத்தையும் திட்டத்தையும் என்னைப் பற்றியும் வீணாகப் பழிக்கிறார்கள் என்றால் வடநாட்டுப் படிப்பிலுள்ள டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நாம் குறைகூற முடியுமா?

என்னையோ அல்லது திராவிடர் இயக்கத்தையோ வீணாகக் குறை கூறினாலும் இல்லாவிட்டாலும் ஒன்று கூறிகிறேன். தோழர்களே! திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்நாட்டில் பள்ளன், பறையன் என்று இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியைத் தருகிறேன்.

தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் சேருவதை நான் இன்னும் வேண்டாமென்று கூறவில்லை. அதில் வரும் நன்மைகளையும் நீங்கள் அடையுங்கள்.

திராவிடர் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனைத் தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு அனுபவிக்க உரிமையுண்டு.   - (விடுதலை 8.7.1947)

***********

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அனுப்பி வைத்த ரகசிய சுற்றறிக்கை

(காவியுடை பாசிசம் என்னும் நூலிலிருந்து)

மக்கள் தொகையில் பெரும்பான் மையினராக உள்ள தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட ,-  தலித் பகுஜன் மக்களை ஏமாற்றிப் பயன்படுத்துவது என்பதன் அடிப்படையில் அமைந்த பார்ப்பனீய நடைமுறையைப் பாதுகாப்பதுதான் இந்துத்துவாவின் அடிப்படை நோக்கமாகும் என்பதை, ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளையும், அறிக்கைகளையும்  கூர்ந்து ஆராய்ந்து வந்த எண்ணற்ற கல்வியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்துத்துவத்தைப் பற்றி  அண்மையில் நான் காண நேர்ந்த ஆர்வமளிக்கும்  ஓர் ஆய்வு அது பெற்றிருக்கவேண்டிய கவனத்தைப் பெறாமல் போனது பெரும் இழப்புக் கேடேயாகும்.  சியாம் சந்தின் காவியுடை பாசிசம் என்ற நூல் ஓர் மதிநுட்பம்

நிறைந்த, நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நூலாகும். சியாம் சந்த் அரியானா சட்டமன்ற உறுப்பினராக பல ஆண்டுகள் இருந்து, கலால், வரிவிதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, உணவு, வினியோகம், சமூக நலம் போன்ற பல துறைகளில் அமைச்சராகவும் சேவை செய்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தனது பிரசாரகர்களுக்கு  அனுப்பிய ஒரு ரகசிய சுற்றறிக்கையின் சில பகுதிகள் இந்நூலில் அளிக்கப்பட் டுள்ளது. முஸ்லிம்களையும், கிறித்துவர்களையும் தாக்குவதற்கு தலித் பகுஜன் மக்களைப் பயன்படுத்திக் கொள்ளும் பார்ப்பன உத்தியை அது தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. தலித் பகுஜன் மக்களை  உயர்ஜாதியினரின் நிரந்தர அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கம் கொண்டது இது.

இந்நூலின் 143_1-44ஆம் பக்கங்களில் இருப்பதை அப்படியே இங்கு தருகிறேன்.
ஆர்.எஸ்.எஸ்.சின் ரகசிய சுற்றறிக்கை எண்: 411_லிருந்து...

( . . . ) அம்பேத்கரின் ஆதரவாளர்களையும், முசல்மான்களையும் எதிர்த்து சண்டையிடுவதற்கான தொண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சியில் தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களும், பிற்படுத் தப்பட்ட ஜாதி மக்களும் சேர்க்கப்பட வேண்டும்.

பழிவாங்கும் ஒரு நோக்கம் மற்றும் உணர்வுடன் இந்துத்துவக் கோட்பாடு மருத்துவர்களிடையேயும், மருந்தாளர்களிடையேயும் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். அவர்களது உதவியுடன் காலம் கடந்த மருந்துகளையும், தீவிரமான மருந்துகளையும் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் முசல்மான்களிடையே வினியோகிக்க வேண்டும். சூத்ரர்கள், ஆதி சூத்ரர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள் மற்றும் அது போன்றவர்களின் குடும்பங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, ஊசி மருந்து செலுத்தி அவர்களை முடவர்களாக ஆக்கவேண்டும். ஒரு ரத்ததான முகாம்  நடத்துவது போல காட்டி இதனைச் செய்யப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள் குடும்பப் பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவதைத் தூண்டிவிட்டு, ஊக்கம் அளிக்கவேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள், குறிப்பாக அம்பேத்கர் வழிநடப்பவர்கள்,  உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவை உண்ணச் செய்து அவர்களை முடமாக்கும் திட்டங்கள் தவறின்றி தீட்டி நிறைவேற்றப் படவேண்டும். நமது கட்டளைப்படி எழுதப்பட்ட வரலாற்றை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை படிக்கச் செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கலவரங்களின்போது தாழ்த்தப்பட்ட ஜாதி மற்றும் முசல்மான் பெண்கள் கூட்டங் கூட்டமாகக் கற்பழிக்கப்பட வேண்டும். நண்பர்களையும், தெரிந்தவர்களையும் கூட விட்டு வைக்கக்கூடாது. சூரத்தில் நடைபெற்றது போல இந்தப் பணி நடை பெற வேண்டும்.

முசல்மான்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள், அம்பேத்கர் வழிநடப்பவர்களுக்கு எதிரான பிரசுரங்கள் எழுதி வெளியிடும் பணி தீவிரப்படுத்தப்பட வேண்டும். அசோகர் ஆரியர்களுக்கு எதிரானவர் என்பதை மெய்ப்பிக்கும் வழியில் கட்டுரைகளும், நூல்களும் எழுதி வெளியிடப்பட வேண்டும்.

இந்துக்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் எதிரான அனைத்து இலக்கியங்களும் அழிக்கப்படவேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், முசல்மான்கள், கிறித்துவர்கள், அம்பேத்கர் வழிநடப்பவர்களிடம் இத்தகைய இலக்கியங்கள் உள்ளனவா என்பது சோதனையிடப்பட வேண்டும்.

அத்தகைய இலக்கியங்கள் பொது மக்களைச் சென்றடையாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் அளவில் மிகமிக கவனமாக இருக்கவேண்டும். இந்து இலக்கியம் மட்டுமே பிற்படுத்தப் பட்ட மற்றும் அம்பேத்கர் வழி நடப்பவர்களுக்கானதாக இருக்க வேண்டும்.

தங்களுக்கென ஒதுக்கப்பட்டு நிரப்பப் படாமல்  உள்ள பேக்லாக் பணியிடங்களில்  தாழ்த்தப்பட்டோரும், பழங்குடியினத்தவரும் எக்காரணம் கொண்டும் நியமிக்கப்பட அனுமதிக்கக்கூடாது. அரசுத் துறைகள், அரசு சார்ந்த துறைகள்,  அரசு சாரா துறைகளில் நியமிக்கப்படவும், பதவி உயர்வு அளிக்கப்படவுமான அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படுவதையும், அவர்களைப் பற்றிய ரகசிய அறிக்கைகள் அவர்களது வேலையை பாழக்கும் வண்ணம் மோசமாக எழுதப் படுவதையும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே  நிலவும் போட்டி, பொறாமையை மேலும் மேலும் ஆழப் படுத்தி பலப்படுத்தவேண்டும். இதற்கு துறவிகள் மற்றும் சாமியார்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

சமத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர் வழிநடப்ப வர்கள், இஸ்லாமிய ஆசிரியர்கள், கிறித்து பிரசாரகர்கள், அண்டை அயலில் வாழும் கிறித்துர்கள் மீதான தீவிரத் தாக்குதல்கள் மேற்கொள்ளத் தொடங்கப்பட வேண்டும்.

அம்பேத்கர் சிலைகள் மீது இன்னமும் பெரிய முயற்சியுடன் தாக்குதல்கள் நடத்தப்படவேண்டும். தாழ்த்தப்பட்ட, முஸ்லிம் எழுத்தாளர்கள் நமது கட்சியில் அதிக அளவில் நியமிக்கப்படவேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், அம்பேத்கர் வழிநடப்பவர்களுக்கு எதிரான இலக் கியங்களை அவர்களைக் கொண்டு எழுதச் செய்து பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். இத்தகைய செய்திகள் முறையாகத் தொகுக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்படுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் போலி என்கவுன்டர்கள் மூலம் கொல்லப்பட வேண்டும். இப்பணி காவல்துறை மற்றும் பாராமிலிடரி சக்திகளின் உதவியுடனேயே எப்போதும் கட்டாயமாக மேற்கொள்ளப்படவேண்டும்.

- யோகீந்தர் சிக்கந்த்
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

*****

இப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் நலனில் அக்கறையுள்ளவர்களாய் காட்டுவதும், பெரியாரை எதிரியாய் சித்தரிப்பதும் அயோக்கியத்தனம், மோசடிச் செயல் அல்லவா?

உண்மைக்கு மாறான, திரித்து, புரட்டி, கத்தரித்து மோசடியான பத்து முரண்பாடுகளை ஆர்.எஸ்.எஸ்.காரன் உருவாக்கிக் காட்டியதற்கு உரிய விளக்கம் எங்களால் அளிக்கப்பட்டது.

ஆனால், பெரியாரும் அம்பேத்கரும் எந்த அளவில் ஒரே கொள்கை, ஒரே செயல், ஒரே எண்ணம், ஒரே நோக்குக் கொண்டிருந்தனர் என்பதை விளக்க அடியில் சில ஒப்பீடுகளைத் தந்துள்ளோம். ஊன்றிப் படித்து உண்மை அறியுங்கள். உலகை ஏமாற்றும் மோசடிப் பேர்வழிகளின் முகத்தில் உமிழுங்கள்!