அரசியல்

Friday, October 30, 2015

எழுத்தாளர் உணர்வுகளை இழித்துப் பேசும் தினமணி!

எழுத்தாளர் உணர்வுகளை இழித்துப் பேசும் தினமணி!
26.10.2015 தினமணி கட்டுரைக்கு மறுப்பு
- மஞ்சை வசந்தன்
வளர்ச்சி என்ற கவர்ச்சிகாட்டி, மக்களை குறிப்பாக இளைஞர்களை ஏமாற்றி பி.ஜே.பி.ஆட்சிக்கு வந்தது முதல் வன்முறைச் செயல்பாடுகள், பேச்சுகள், கொலைகள், அழிவு வேலைகள் அன்றாடம் நடக்கின்றன. மதவெறிக்கூட்டம் பல அமைப்பு களாகப் பிரிந்து பல செயல்களை, திட் டங்களை, மோசடிகளை, கலவரங் களை, மோதல்களை உருவாக்குவது போலவே, அமைச்சர்கள், எம்.பிக்கள், தலைவர்கள், பரிவாரங்கள் என்று பலரைப் பயன்படுத்தி அவ்வப் பொழுது வெறிப்பேச்சுகளை பேசி சிக்கல்களை உருவாக்குவதோடு மக் களின் உணர்வுகள், எதிர்வினைகள் எப்படியிருக்கின்றன என்றும் சோதித் துப் பார்க்கின்றனர்.
மறுபுறம் தங்கள் திட்டங்களுக்குத் தடையாக, எதிராக இருக்கக்கூடியவர் களை, தங்கள் மோசடிகளை விளக்கிக் காட்டுகின்றவர்களை, அழித்தொழிக் கும் செயலை தங்கள் காலிகளைக் கொண்டு செய்து வருகின்றனர்.
அவ்வகையில் மனிதநேயத்தோடு மக்கள் பணியாற்றி, மக்களுக்கு விழிப் பூட்டி, பகுத்தறிவு பரப்பி, ஆதிக்கத் திற்கு எதிராய் குரல் கொடுத்துவரும் முற்போக்குச் சிந்தனையாளர்களை, எழுத்தாளர்களை தொடர்ச்சியாக கொலை செய்தும் வருகின்றனர்.
கொலை செய்த கையோடு, மற்ற முற்போக்குச் சிந்தனையாளர்களுக் கும் கொலை மிரட்டல் விடுகின்றனர். அதேபோல் மக்களின் தனிப்பட்ட விருப்பங்களிலும், நுகர்வுகளிலும் தலையிட்டுத் தடை விதிக்கின்றனர்.
காதலிக்கக்கூடாது, விரும்பும் ஆடையை அணியக்கூடாது, விரும் பும் உணவை உண்ணக்கூடாது என்று கட்டளையிடுகின்றனர். மீறினால் தாக் குதல் நடத்திக் கொலை செய்கின்றனர்.
இவற்றை அரசும் காவல்துறையும் விரைந்து தடுக்காத நிலையில், தங்கள் கண்டனங்களை எழுத்தாளர்கள் எழுப் பினர். அதற்கும் பயன் இல்லாமல் அடாவடிச் செயல்கள் அன்றாடம் நிகழ்ந்ததால் வெறுப்புற்ற எழுத்தாளர் கள் தங்கள் விருதுகளைத் திருப்பித் தந்து எதிர்ப்பை, கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இது தங்கள் உள்ளக் கொதிப்பை, குமுறலை, உணர்வை, எதிர்ப்பை, கண்டனத்தைத் தெரிவிக்கும் ஒரு பண்பட்ட வழியாக, அதுவும் கடைசி வழியாகக் கையாண்டுள்ளனர்.
ஆனால் இதை, மதவெறிக்கும் பலும், அவற்றை ஆதரிக்கின்ற ஆரி யப் பார்ப்பனர்களும் கொச்சைப் படுத்தி பல்வேறு விமர்சனங்களை வைக்கின்றனர். கொலை செய்யும் கொடியவர்களை கண்டிக்காது, பாதிக்கப்பட்ட வர்களை பரிகாசம் செய்யும் பாசிசப் போக்கை அவர்கள் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் வைத்திய நாதஅய் யரின் சொந்த விருப்பு வெறுப்புகளை யெல்லாம் செய்திகளாக வெளியிட்டு, இது ஒரு ஆரிய பார்ப்பன ஏடு என்று, அன் றாடம் காட்டிவருகின்ற தினமணி அவ்வகையிலே தன் கருத்துக்களை வெளியிட்டு வருகிறது.
எழுத்தாளர் எதிர்ப்பு பற்றி கருத்துச் சுதந்திரமும், நடுநிலையும் என்ற தலைப் பிட்டு நடுப்பக்கம் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது (தினமணி 26.10.2015) சந்திர.பிரவீண்குமார் என்ற ஒருவர் அதை எழுதியுள்ளார்!
அவர் எப்படிப்பட்ட ஆள் என்பதை அவரது எச்சரிக்கையே வெளிப்படுத்து கிறது.
தொடர்ந்து ஒரு தரப்பாகவே நடுநிலை பிறழ்ந்த நிலையில் கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தினால், சாதாரண மக்கள் வன் முறைப் பேச்சுகளை ஆதரிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என்பதே அந்த எச்சரிக்கை!
எழுதுகின்றவர் தான் தரம் தாழ்ந்து தாதா பாணியில் எழுதுகிறார் என்றால், அதையும் ஒரு நாளேடு வெளியிடுகிறது என்றால், அதை விட தரம் கெட்ட நிலை வேறு என்ன இருக்க முடியும்.
எழுத்தாளர்கள் செய்த தவறு என்ன? தங்களையொத்த எழுத்தாளர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். தங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளன. உரிய நடவடிக்கை இல்லை என்பதால் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திருப்பியளித்துத் தங்கள் உணர்வுகளை உள்ளக் கொதிப்பைக் காட்டியுள்ளனர்.
இதற்கும் இந்த நபர் விடும் எச்சரிக்கைக்கும் என்ன தொடர்பு?
மதவெறிக்கும்பலும், ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புகளும், பி.ஜே.பி. தலை வர்களும், அமைச்சர்களும், எம்.பிக் களும் அன்றாடம் வெறிப்பேச்சு பேசி நாட்டில் கலவரத்தைத் தூண்டுகிறார்கள். இதை குடியரசுத் தலைவர் கண்டிக்கின்றார். மோடியும், ராஜ்நாத்சிங்கும் ஏன் அமித் ஷாவும் கூட கண்டித்து (வேறு வழியில் லாமல்) எச்சரிக்கின்றனர். அந்த அள வுக்கு அந்த வெறிப்பேச்சின் கொடுமை, கடுமையுள்ளது. அதை இவர் ஆதரிப் பாராம். பொதுமக்கள் ஆதரிப்பார்களாம். இதை ஒரு பத்திரிகை கட்டுரையாக வெளியிடுகிறது.
பொதுமக்கள் காரித்துப்புகிறார்கள். அதை மறைத்து, ஏதோ இவர்கள் பின்னே பொதுமக்கள் நிற்பதுபோல ஒரு மாயையை உருவாக்கிக் காட்டுவதோடு, எச்சரிக்கிறர்களாம்! என்னே வேடிக்கை?
வெறிப்பேச்சை ஆதரித்துப் பாருங்கள், பொதுமக்கள் என்ன செய்வார்கள் என்று அப்போது தெரிந்து கொள்ளலாம். தெரி யாமல் தேர்ந்தெடுத்துவிட்டோமே என்று மக்கள் கொதித்துப் போய் உள்ளனர் என்பது பிரவீண்குமாருக்கு தெரியாமலி ருக்கலாம். தினமணிக்குக் கூடவா தெரிய வில்லை?
இந்தக்கட்டுரையில் இவர் அப்படி யென்ன நியாயத்தை கூற வருகிறார்? தனது பாசிச தாகத்தை கக்கியுள்ளதைத் தவிர அதில் நியாயமான கருத்து எதுவும் இல்லையே!
இதோ அவர் கூறும் கருத்துக்கள்
1) சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் பிராமணர்களை மட்டுமே திராவிட இயக்கங்கள் குறிவைக்கின்றன.
2) திராவிட இயக்கத்தினர் நவீன எழுத்துக்களை ஏற்க மறுக்கின்றனர்.
3) திராவிட இயக்கத்தை விமர்சித்து எழுத்தாளர்களால் எழுதமுடியவில்லை.
4) கம்யூனிஸ்ட்டுகள் கார்ல்மார்க்ஸை விமர்சிக்க இடங்கொடுப்பதில்லை.
5) மோடியரசின் கடுமையைக் கண்டிக்கலாம், ஆனால் தனிப்பட்ட அவதூறு எப்படிப் பரப்ப முடியும்?
6) எழுத்தாளர்கள் கொலை, தாத்ரி வன்முறையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வற்புறுத்தலாம். மாறாக மோடியரசை எப்படிக் குறை கூறமுடியும்?
7) மதத்தின் பேரால் குண்டு வெடிக் கும்போது அமைதி காத்த எழுத்தாளர்கள் கொலை நிகழ்வில் மட்டும் விசாரிக் காமலே தீர்ப்புக் கூறுவது ஏன்?
இவையே இவர் கட்டுரையில் எழுப்பும் வினா, வேதனை.
இந்த ஏழு செய்திகளையும் முதலில் சொன்ன இவரது எச்சரிக்கையையும் சேர்த்துப் பார்த்தால் இவர் எப்படிப் பட்டவர், எதைச் சார்ந்தவர் என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளலாம். என்றா லும் இந்த பத்திரிகையையும் அப்பாவி மக்கள் படிக்கிறார்களே அவர்களுக்காக சில விளக்கங்களை எழுத வேண்டிய கட்டாயம் எழுகிறது!
எழுத்தாளர் படுகொலையும், அதன் வேதனையும் விளைவும் பற்றி பேச வந்தவர் அதை விட்டுவிட்டு அவருக் குள்ள ஆதிக்க அரிப்பையெல்லாம் தேய்த்துத் தீர்க்கிறார் இக்கட்டுரையில்.
எழுத்தாளர் படுகொலைக்கும் திரா விடக் கட்சிகளுக்கும் என்ன சம்பந்தம்? அக்கட்சிகளின் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புக்கும் என்ன தொடர்பு? எந்தப் புழுக்கத்தை எங்குவந்து காட்டுகிறார் பாருங்கள்!
எந்தத் தனிப்பட்ட பார்ப்பனரையும் திராவிட இயக்கம் எதிர்ப்பதில்லை. பார்ப்பன ஆதிக்கத்தை மோசடியை, சூழ்ச்சியை வஞ்சத்தை, மனிதநேய மற்ற செயல்களை, சதிவேலைகளைத் தான் கண்டிக்கிறார்கள்.
ஞானி, சின்னக்குத்தூசி, கமலகாசன் போன்றவர்களை, பரிதிமாற் கலைஞர் போன்றவர்களை பாராட்டி ஏற்றி போற்றத்தவறவில்லையே! மற்ற வர்களும் மாறினால் பாராட்டுவோமே!
ஜெயலலிதா இடஒதுக்கீட்டுக்கு பங்கம் வராமல் காத்த போது பாராட்டவில்லையா?
நவீன எழுத்துக்களை உருவாக்கிய வர்களே திராவிடர் இயக்கத்தவர். அப்படியிருக்க நவீன எழுத்துக்களை ஏற்கவில்லை என்பது அறியாமையா? அயோக்கியத்தனமா?
திராவிட இயக்கத்தை விமர்சிக்க முடியவில்லையாம்! இதைவிடப் பித்த லாட்டம் வேறு உண்டா? பொழுது போனா பொழுது விடிந்தா உங்க ளுக்கு அதுதானே முழுநேர வேலை! இது மக்களுக்குத் தெரியாதா?
கார்ல் மார்க்ஸை விமர்சிக்க கம்யூ னிஸ்ட்டுகள் இடம் கொடுக்கவில் லையாம்?
எங்கு தடைபோட்டார்கள்? எவர் வாயைப் பொத்தினார்கள்? எதையா வது பினாத்துவதா?
மோடி அரசை விமர்சிக்கலாமாம். ஆனால் தனிப்பட்ட அவதூறு எப் படிப் பரப்பலாம்?
யார் அவதூறு பரப்பியது? வழக்குப் போடு! அவதூறு பேசவே பத்திரிகையும் தொலைக்காட்சியும் நடத்திடும் கூட்டம் மற்றவர்கள் மீது குறை சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை!
எழுத்தாளர் கொலையைக் கண் டிக்கலாமாம். ஆனால் மோடி அரசை கண்டிக்கக் கூடாதாம்!
மூலத்தைத் தாக்காமல் விளைவை பேசுவதை முட்டாள்தான் செய்வான். இவ்விளைவுக்குக் கார ணம் ஆட்சி அதிகாரம்தான் என்பதை அறியாத முட்டாள்கள் அல்ல மக்கள்!
மதத்தின்பேரால் குண்டு வெடிக் கும் போது கண்டிக்காத எழுத்தாளர்கள் கொலையை மட்டும் கண்டிப்பதேன்? இந்த நியாயஸ்தர் கேட்கிறார்!
மதக்கலவரங்களைத் தூண்டி விட்டு கட்சி வளர்ப்பதே காவிக்கும்பல் தானே! குண்டு வீசுவது, வன்முறை செய்வது யாராயினும் அதைக் கண்டிக்க திராவிட இயக்கங்களோ, முற்போக்கு எழுத்தாளர்களோ என்றும் தவறியதில்லை! அப்படியி ருக்க சாத்தான் வேதம் ஓதுவது போல் இந்தக் கட்டுரையாளர் கருத்துகூறுவது, உள்நோக்க உந்துதல் எது என்பது உலகுக்குப் புரியும்!
மக்கள் எல்லோரும் விழிப் போடுதான் இருக்கிறார்கள். அதுவும் வேகத்தோடு இருக்கிறார்கள்! அதிகம் ஆடினால் அதற்கு பதிலடியை கட் டாயம் கொடுப்பார்கள்! எச்சரிக்கை!

இளைஞர்களே எச்சரிக்கை! பிராய்லர் கோழிக்கறி சாப்பிடாதீர்கள்!


வாய் ருசியில் மயங்கி
வாழ்வைத்தொலைக்காதீர்கள்!

----------------------------------------------
பிராய்லர்கோழி பருமனாக வளரவும், எடை அதிகமாகவும் அதற்கு ஹார்மோன் மற்றும் ஊக்கமருந்துகளும், ஆன்ட்டி பயாடிக் மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன.
இந்தக் கோழியின் கறியைத்தான் நாம் சாப்பிடுகிறோம். ருசியாக இருக்கிறது, மென்மையாக இருக்கிறது என்பதால் விரும்பிச் சாப்பிடுகிறோம்.
ஆனால், இக்கோழிக்கறியைச் சாப்பிடுவதால் தான் எட்டுவயதிலே பெண்கள் வயதுக்கு வந்துவிடுகின்ற அவலநிலை வந்துள்ளது.
சினைப்பை நீர்க்கட்டிகள், மார்பகப்புற்றுநோய்கள் வரவும் இதுகாரணமாகிறது. ஆய்வுகள் இதை உறுதி செய்துள்ளன.
ஒருமுறை நாம் சாப்பிடும் கோழிக்கறியில் 6 ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரையிலுள்ள கேடு உள்ளது. ஒரு வருடத்திற்கு 100 முறை சாப்பிட்டால் 600 மாத்திரை சாப்பிட்டகேடு வரும். என்கிறது ஆய்வு.
இதனால், ஆண்களுக்கு மலட்டுத் தன்மை வருகிறது. ஆண், பெண் இருபாலருக்குக்கும் புற்றுநோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வருகிறது.
நாட்டுக்கோழி, மீன் நிறைய சாப்பிடலாம். ஆட்டுக்கறி அளவோடு சாப்பிடலாம்.
உணவு ருசிக்காகமட்டுமல்ல உடல் நலத்துக்காக என்பதை ஆழமாக மனதில் கொள்ள வேண்டும்!
குழந்தைகளுக்கு மீன் கொடுங்கள் கோழி வேண்டாம்.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
படியுங்கள்! மற்றவருக்கும் பகிருங்கள்!

இளைஞர்களே எப்போது நீங்கள் எழப்போகிறீர்கள்! இளைஞர் எழுச்சியே எல்லாவற்றிற்கும் தீர்வு!


100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள்
மதவாத அரசுக்கு எதிராகக் கண்டனம்!
குடியரசுத் தலைவருக்குக் கடிதம்!
மதசார்பின்மை இல்லையேல்
மக்கள் எழுச்சி என்னும் அணுகுண்டு வெடிக்கும்!
எச்சரித்துள்ளனர்.
-------------------------------------------------------------

கருத்துச் சுதந்திரம் இல்லை, முற்போக்கு எழுத்தாளர்கள் கொல்லப்படுகின்றனர். மாட்டுகறியைச் சொல்லி மனிதனைக் கொல்லும் கொடுமை! எங்கே செல்கிறது நாடு! என முதன்மையான விஞ்ஞானிகள் கொதித்தெழுந்து கண்டித்துள்ளனர். குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.
பன்முகத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் இல்லையே பயங்கர விளைவு ஏற்படும் எச்சரித்துள்ளனர்!
எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்களுக்கு அடுத்து விஞ்ஞானிக்கும் வீறுகொண்டு எழுந்துவிட்டனர்.
இளைஞர்களே, மாணவர்களே எப்போது நீங்கள் எழப்போகிறீர்கள்! எதிர்க்கப் போகிறீர்கள்! இதையெல்லாம் சகித்துக் கொண்டு இருப்பது இளைஞர்களுக்கு அழகா!
நாட்டில் நிலவும் கொடுமைகளைத் தட்டிக்கேட்க நீங்களல்லவா முதலில் களம் இறங்க வேண்டும்?
இளைஞர்களே எழுங்கள்! ஒன்றுசேருங்கள்!
மதவெறியை, ஜாதிவெறியை, மாட்டுவெறியை, ஒற்றைக் கலாச்சார வேட்கையை ஒழிக்கும் வரைப் போராடுங்கள்!
இளைஞர் எழுச்சியே எல்லாவற்றிற்கும் தீர்வு!
இல்லையேல் இந்தியாவின் எதிர்காலம் மோதலும், சாதலுமாய் மாறும்! அந்நிலையைத் தவிர்க்க இளைஞர்களால் மட்டுமே முடியும்! புறப்படுங்கள்!
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

நாடு என்ன செய்ததென்று கேட்காதே! நீ நாட்டுக்கு என்ன செய்தாய்? இது கென்னடி சொன்னதில்லை! வேறுயார் சொன்னது?

நாடு என்ன செய்ததென்று கேட்காதே!
நீ நாட்டுக்கு என்ன செய்தாய்?
இது கென்னடி சொன்னதில்லை!
வேறுயார் சொன்னது?
------------------------------------------------------
கென்னடி இவ்வாறு சொல்லவில்லை. கென்னடி சொன்னதாகச் சொல்வது தவறு. இவ்வாறு சொன்னவர் கவிஞர் கலீல் ஜிப்ரான் ஆவார்.
”புரோக்கன் விங்”, “தி பிராபட்” போன்ற புகழ்மிக்க நூல்களை எழுதிய இவரே மேற்கண்டவாறு கூறியவர்.
முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கென்னடி அதை எடுத்தாண்டார். மாறாகக் கென்னடியே கூறினார் என்று சொல்வது சரியல்ல.

”எதையும் தாங்கும் இதயம் வேண்டும்!” அண்ணா சொன்னதில்லை! வேறு யார் சொன்னது?


எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற சொற்றொடர் அண்ணாவால் சொல்லப்பட்டது என்றே பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறே கூறவும் எழுதவுஞ் செய்கின்றனர். ஆனால் அது சரியல்ல.
உண்மையில் இச்சொற்றொடரைக் கூறியவர்,
பகுத்தறிவுச் சிந்தனையாளரான லார்ட் பைரன் என்பவர் ஆவார். இவர் பிரிட்டிஷ் அரசால் இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டார். அவர் இங்கிலாந்திலிருந்து பிரான்ஸிற்கு புறப்படுவதற்கு முன் “டோவர்”
துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகில் புறப்பட்டபோது இக்கருத்தைக் கூறுகிறார்.
”என்னை நேசிப்பார்க்கு ஒரு பெருமூச்சு
என்னை வெறுப்பார்க்கு ஒரு புன்முறுவல்
என்ன வந்தாலும் சரியே
எதையுந் தாங்கும் இதயம் உண்டு”
என்ற கூறிவிட்டு பிரான்ஸிற்கு விடைபெறுகிறார். அப்போது கூறப்பட்டதே “எதையும் தாங்கும் இதயம்” என்ற சொற்றொடர். அண்ணா கூறியதாகச் சொல்வது தவறாகும். அண்ணா இதை எடுத்தாண்டார்.

மாரடைப்பைத் தடுக்கும் மருதம்பட்டைப் பொடி!

மாரடைப்பைத் தடுக்கும் மருதம்பட்டைப் பொடி!
இலட்சக்கணக்கான ரூபாய் செலவில் பைபாஸ் அறுவை சிகிச்சை, ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சையை தவிர்க்க இளமை முதலே இதைச் செய்யுங்கள்!
---------------------------------------------------------------------
மேற்கண்ட சிகிச்சைகளுக்கு இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே காரணம்.
இரத்தக் குழாயில் கொழுப்பு சேராமல், அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் மருதம்பட்டைப் பொடிக்கு உள்ளது. அதேபோல் இதயத்தை வலுவோட வைக்கும் ஆற்றல் வெண்தாமரைப் பூவின் பொடிக்கு உள்ளது.
இதற்கான செலவும் அதிகம் இல்லை. மாதம் ரூபாய் 200 (இருநூறு) செலவிட்டால் போதும்.
சித்தா மருந்து கடைகளில் மருதம் பட்டைச் சூரணம், வெண்தாமரைப் பொடி இரண்டும் கிடைக்கும். டப்பாக்களில் அடைத்து வைத்திருப்பர். ஒரு டப்பா 100 ரூபாய்தான். ஒரு மாதத்திற்கு வரும்.
2 கிராம் அளவிற்கு ஒவ்வொரு பொடியையும் எடுத்து, வெந்நீர் அல்லது பாலில் கலந்து காலை, இரவு உணவுக்குப் பின் பருகினால் இரத்தக் குழாய் அடைப்பு வராது. அடைப்பு இருப்பின் நீங்கும். காலை உணவுக்கு முன் ஒரு துண்டு இஞ்சியும், மதியம் சாப்பாட்டிற்குப் பின் இரண்டு பூண்டு பல்லையும் நீருடன் கலந்து மென்று விழுங்க வேண்டும்.
தினம் இரு வாழைப்பழம் (சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவும்) காலை உணவுக்குப் பின் ஒன்றும், மதிய உணவுக்குப் பின் ஒன்றும் சாப்பிடவும். 20 வயது முதற்கொண்டு இதைச் செய்தால் மேற்கண்ட அறுவை சிகிச்சையைத் தவிர்க்கலாம், மாரடைப்பையும் தடுக்கலாம்.
துரித உணவு, கொழுப்பு உணவு, பாக்கட் உணவுகளைத் தவிர்த்து, காய்கறி, கீரை, பழங்கள், நமது கிராமத்து பலகாரங்களைச் சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படுவதை, திடீர் மரணம் அடைவதைத் தவிர்க்கலாம்.
எல்லோரும் பின்பற்றுங்கள்!
இதய நோயை தடுத்திடுங்கள்!
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
படியுங்கள்! மற்றவருக்கு பகிருங்கள்!

உறவுக்குள் திருமணம் வேண்டாம்! உடல் நலம், உள நலம் கெட்டு குழந்தை பிறக்கும்!

உறவுக்குள் திருமணம் வேண்டாம்!
உடல் நலம், உள நலம் கெட்டு குழந்தை பிறக்கும்!
அத்தை மகளை மணப்பது சித்தப்பா பெண்ணை மணப்பதற்குச் சமமல்லவா?
அக்காள் மகளை மணப்பது அண்ணன் மகளை மணப்பது போலல்லவா?
------------------------------------------------------------
அத்தையின் முதல் மகனும் மாமாவின் முதல் பெண்ணும் திருமணம் செய்துகொண்டால் பிறக்கும் குழந்தை பாதிப்போடு பிறப்பது ஆய்வின் முடிவில் அறியப்பட்டுள்ளது.
அக்கா மகளை திருமணம் செய்துகொள்ளும்போது, அதில் பிறக்கும் குழந்தை மனநலம் கெட்டு, மூளை வளர்ச்சி குறைந்து உடல் வலுவிழந்து பிறக்க வாய்ப்பு அதிகம்.
உறவு அல்லாதவர்கள் மணம் புரியும்போது குழந்தைகள் உடல் நலத்தோடு அறிவாளிகளாகவும் இருப்பது கண்கூடு.
சாதி விட்டு சாதி, இனம் விட்டு இனம் திருமணம் செய்தால் அதில் பிறக்கும் குழந்தை இன்னும் உடல் வளமும், அறிவு வளமும் பெற்று விளங்கும்.
குறுகிய மதில் சுவர்களைத் தகர்த்து, அறிவுக் கண்கொண்டு நோக்கி, வேற்றுமைகளைக் களைந்து, மனிதர்கள் எல்லோரும் சமமானவர்களே; மனிதருள் பிறப்பால் உயர்வு, இழிவு என்பது இல்லை; பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பது அயோக்கியத்தனம் என்று உணர்ந்து மனித நேயத்தோடு வாழ்வதே மனிதர்க்கு அழகு!
தனக்கேற்ற இணை எச்சாதியில் எந்த இனத்தில், எந்த மதத்தில் இருந்தாலும் ஏற்று வாழ்வதே சிறந்த வாழ்வாகும்!
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
படியுங்கள்! மற்றவருக்கு பகிருங்கள்!
-----------------

கீதையும் எனது கேள்வியும்.......(3)


”பெண்கள், வைசியர், சூத்திரர் ஆகியோர் தாழ்ந்த பிறவிகள்”
“பிராமணர்கள், புண்ணிய பிறவிகள்”
- பகவத்கீதை அத்தியாயம்-9, சுலோகம்-32,33

இப்படிச் சொல்லும் கீதை ஒரு புனித நூலா?

 இந்துக்களுக்கு பொதுவான நூலாக இது எப்படி இருக்க முடியும்?
பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக எழுதிக்கொண்டது இது என்பது விளங்கவில்லையா?
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது பிறவியை வைத்தா? நடத்தையை வைத்தா?
சிந்தியுங்கள்!

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

https://www.facebook.com/manjaivasanthan

படியுங்கள்! பரப்புங்கள்!

ஆன்மிகத்தைவிட சிறந்தது நாத்திகம்

ஆன்மிகத்தைவிட சிறந்தது நாத்திகம்

 கொல்லவந்தவனை கொண்டுபோய் பாதுகாப்பாக விடச்சொன்ன பெரியார்!
பட்டுக்கோட்டை அழகிரி சொன்ன நிகழ்வு!
------------------------------------------------------
விருதுநகரில் பொதுக்கூட்டத்தில் பெரியார் ஆரியத்தை எதிர்த்து மிகக் கடுமையாகப் பேசிக் கொண்டிருந்தார்.


 அப்போது அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியும் அருகிலிருந்தார். பெரியாரின் பேச்சால் ஆத்திரமடைந்த ஒருவன், கோபம் கொப்பளிக்க கத்தியுடன் பெரியார் மீது பாய்ந்தான்.

 ஆனால், பெரியார் எந்தப் பரபரப்பும் அடையாமல், கத்தியுடன் பாய்ந்தவன் கையைக் கெட்டியாகப் பிடித்து அப்படியே நாற்காலியில் அமரச் செய்தார். அவனைப் போலீசாரிடம் ஒப்படைக்கவில்லை. அவனைத் தனியே அனுப்பினால் கூட்டம் அவனை அடித்தே கொன்றுவிடும் என்பதால், கழகத் தோழர்களை அனுப்பி, பாதுகாப்பாக விட்டுவரச் செய்தார்.
- (ஆதாரம்: பெரியாரில் பெரியார் நூல்)

 மெய்ப்பொருள் நாயனாரைவிட அய்யா சிறந்தவர்...................

தன்னைக் கொல்ல வந்த முத்தநாதனை மெய்ப்பொருள் நாயனார் மன்னித்து, அவனை பாதுகாப்பாக விடச் செய்தார். காரணம் கொலைகாரன் பக்தி வேடத்தில் வந்ததால்.

 அவர் மன்னித்தது பக்தியால். ஆனால் பெரியார், தன்னைக் கொல்ல வந்தவனை மனிதநேயத்தோடு மன்னித்தார் என்கின்றபோது மெய்ப்பொருள் நாயனாரைவிட பெரியார் உயர்ந்து நிற்கிறார்.

 காரணம் பக்தியால் மன்னிப்பது சுயநலம் மனிதநேயத்தால் மன்னிப்பதே பொதுநலம்!

இரவுநேரப் பணிபுரியும் இளைஞர்களே! இதைக்கட்டாயம் படியுங்கள்!

இரவில் கண்விழித்தால் உடலுக்குக் கட்டாயம் தேவைப்படும் “மெலடோனின்” கிடைக்காது!

 இரவுநேரப் பணிபுரியும் இளைஞர்களே!
இதைக்கட்டாயம் படியுங்கள்!

 மாணவர்கள் காலை 4-மணிக்கு எழுந்துப் படிப்பது தப்பு. இரவு உறக்கம் என்பது எல்லா வயதினருக்கும் கட்டாயம் வேண்டும் இல்லையெனில் உடலில் பலவிதப் பிரச்சினைகள் ஏற்படும்.

 படிக்கும் மாணவர்கள் காலை 4-மணிக்கு எழுந்து படிக்கின்றனர். அது அவர்களின் உடல் நலத்தை வெகுவாகப்பாதிக்கும்.

 நம் மூளையில் உள்ள பினியல் கோளம் சுரக்கும் ”மெலடோனின்” என்னும் சுரப்பு, நம்மை நோயினின்று காக்கக்கூடிய அரிய சுரப்பு. அது பகலில் சுரக்காது. விடியற்காலையில்தான் சுரக்கும்.

 இரவில் பணியாற்றக்கூடியவர்கள் பகலில் தூங்கிவிடுகிறேன் என்பர். பகலில் தூங்கினால் உடல் சோர்வு போகும். ஆனால், உடலுக்கு கட்டாயம் தேவைப்படும் ”மெலடோனின்” கிடைக்காது.

 இந்த மெலடோனிதான் நம் உடலில் சேரும் பல்வேறு கேடுகளை அகற்றி நம்மைக் காக்கிறது.

 இரவுப் பணியாளர் சங்கம், மற்றும் கம்பெனி உரிமையாளர்கள் கலந்து பேசி இரவுப்பணியை ஷிப்ட் முறையிலாவது அமைத்துக் கொள்ள வேண்டும்.

 மெலடோன் கிடைக்க ஒரு நாள் விட்டு ஒருநாளாவது இரவில் உறங்க வேண்டும். இருண்ட காற்றோட்டமான அறையில், ஆறு மணி நேரம் அமைதியான தூக்கத்தில்தான் இது சுரக்கும். எனவே, இரவு 11-மணி முதல் காலை 5-மணி வரை கட்டாயம் உறக்கம் வேண்டும். இரவு 10-மணி முதல் 6-மணி வரை உறங்குவது உடலுக்கும் உள்ளத்துக்கும் மிகவும் நல்லது.

 மாணவர்கள் இரவு 10.30-மணிக்கு மேல் கண்விழிக்கக் கூடாது. காலை 5.30-மணி வரை உறங்க வேண்டும் தேர்வு நேரத்தில் கூட அப்படித்தான் உறங்க வேண்டும் தூக்கத்தைக் கெடுத்து படிப்பது அறியாமை.

 மற்ற நேரங்களில் நேரம் பிரித்து ஒதுக்கிப் படிக்க வேண்டும்.

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

https://www.facebook.com/manjaivasanthan

நாள்தோறும் இப்படிச் சாப்பிட்டால் நலமுடன் வாழலாம்! உங்கள் நலத்திற்கு உத்தரவாதம்

நாள்தோறும் இப்படிச் சாப்பிட்டால் நலமுடன் வாழலாம்! உங்கள் நலத்திற்கு உத்தரவாதம்
 

நோய்வர வாய்ப்பில்லை!...............

 காலை ஒருதேக்கரண்டி அளவு ஊறவைத்த வெந்தயம்.
காலை உணவுக்கு முன் ஒரு சிறு துண்டு தோல் நீக்கிய இஞ்சி தண்ணீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

 காலை உணவுக்குப்பின் ஒரு வாழைப்பழம்.
பகல் 12 மணிக்கு சுக்கு கலந்த பால் ஒரு டம்ளர்.
பகல் உணவுக்குப் பின் ஒரு வாழைப்பழம்.
தினம் துளசி இலை பத்து மென்று சாப்பிடவும். (துளசி வீட்டில் தொட்டிகளில் வளர்க்கலாம்.

 நாள் தோறும் எதாவது ஒரு கீரை.
மாலை கடுக்காய் பொடி பாலுடன் ஒரு டம்ளர்.
இரவு 8மணிக்குள் சிற்றுண்டி
தினம் இரு பூண்டுபல் தண்ணீருடன் கலந்து மென்று சாப்பிடவும்.
இரவு பாலுடன் ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள் கலந்து பருக வேண்டும்.
நற்சீரகத்தை ஒரு நாளைக்கு மூன்று தேக்கரண்டி விரும்பும் போதெல்லாம் சாப்பிடலாம்.

 தினம் ஒரு மாதுளை செலவு அதிகமானால் ½ மாதுளை.
தினம் ஒரு ஆரஞ்சு.
தினம் ஒரு வெள்ளரிப்பிஞ்சு.
தினம் இரவு உணவுக்குப்பின் காபிவட்டா அளவுக்கு பப்பாளி பழத்துண்டுகள்.
வாரம் இருமுறை முடக்கற்றான் கீரை தோசை.
வாரம் இருமுறை வாழைத்தண்டு.
வாரம் இருமுறை வாழைப்பூ பொரியல்.
நிலவேம்பு கஷாயம் வாரம் இருநாள்.
தினம் 10 மிளகு மென்று தண்ணீருடன் விழுங்கவும். சிறுவர்கள் 5 மிளகு.
மீன் உணவு வாரம் இருநாள்.

 ஒரு கையளவு வறுத்த வேர்கடலை வெல்லத்துடன் கலந்து சாப்பிடவும்.
இதை முறையாகச் செய்தால் நோய் வரவாய்ப்பில்லை.
காபி, டீ குடிப்பதற்குப்பதில் – தாமரை பூ பவுடர் (ஒரு டப்பா ரூ.100/-) ஒரு ஸ்பூன் வென்னீரில் கலந்து பணங்கற்கண்டு போட்டு சாப்பிட்டால் இதய நோய் வராது.
 
‪#‎குறிப்பு‬:

இரசாயனம் கலந்த உணவு, பாகெட் உணவு, கொழுப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

 நமது கிராமத்து பலகாரங்களை சாப்பிட வேண்டும். சிறுதானியங்கள் (கம்பு, கேழ்வரகு, தினை) அதிகம் உண்ணவும்.

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan

பெரியாரின் பேச்சை ஏற்று நடந்த பெரியவா (சங்கராச்சாரி)!



காஞ்சிப் பெரியவர் எனப்படும் காலஞ்சென்ற சங்கராச்சாரி எங்கு சென்றாலும் மனிதர்கள் தூக்க, பல்லக்கில் அமர்ந்து செல்வார். அதுபோல் பல்லக்கில் சென்றுகொண்டு இருந்தபோது, வழியில் மேடை போட்டுப் பெரியார் பேசிக்கொண்டு இருக்கிறார்.

 மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும் இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? என்று பெரியார் முழங்கிக்கொண்டு இருப்பது பெரியவரின் காதுகளில் விழுந்தது.

 அவ்வளவுதான் பல்லக்கை அங்கேயே தரையிறக்கச் சொல்லி இறங்கிவிட்டார் சங்கராச்சாரி. பெரியார் ஏதோ சொல்கிறார்; சொல்லிவிட்டுப் போறார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ! உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம்! என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறார்கள்.

 இல்லை; அவர் (பெரியார்) சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்தப் பல்லக்கு வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன் என்று தீர்மானமான முடிவெடுத்துவிட்டார் காஞ்சிப் பெரியவர். கடைசி வரையிலும், அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்தே சென்றார்.

 (ஆதாரம்: சக்தி விகடனின் பொறுப்பாசிரியர் திரு.ரவி பிரகாஷ் எழுதியது.)

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

FOLLOW : https://www.facebook.com/manjaivasanthan

கீதையும் எனது கேள்வியும்....... (2)


 ”எவனொருவன் மிக்க கெட்ட குணங்களை உடையவனாக இருந்தாலும், மற்றதெய்வத்தை விலக்கி என்னை (கிருஷ்ணனை) வழிபடுவானானால் அவனை நல்லவன் என்றே சொல்லவேண்டும்”
(பகவத்கீதை அத்-9 சுலோகம்-30)

 இப்படி போதிப்பவன் கடவுளா? இந்த கீதைதான் புனித நூலா?
சிந்திப்பீர்1

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan

கீதையும் எனது கேள்வியும்....... (1)


நான்கு வேதங்களையும் நானே படைத்தேன்!
- கிருஷ்ணன்

 நான்கு வருணங்களை படைத்தது கடவுள் கிருஷ்ணன் என்றால், அமெரிக்காவில், இரஷ்யாவில் மற்ற நாடுகளில் நான்கு வருணம் ஏன் இல்லை?

 கடவுள் என்றால் உலகம் முழுமைக்குமா? அல்லது இந்தியாவுக்கு மட்டுமா?
இந்தியாவுக்குமட்டுமென்றால், ஒவ்வொருவருக்கும் ஒரு கடவுளா?

 உண்மையென்றால் இப்படி உளறல் வருமா? நான்கு வருணத்தையும் உருவாக்கியவர்கள் ஆரிய பார்ப்பனர்கள் தான் என்பது புரியவில்லையா?

 ##‪#‎கேள்வி‬ தொடரும்..............

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan

அமுக்குப் பேய் தூக்கத்தில் அமுக்கும்? உண்மை என்ன?.................



 நாம் உறங்கும்போது திடீரென நம்மை யாரோ அமுக்கிப் பிடிப்பது போலவும், நம்மால் புரள முடியாமல் பேச முடியாமல் தவிப்பது போலவும் ஒரு நிலை வரும். இது எல்லோருக்கும் எப்போதாவது ஒரு முறை வரும்.

 எனக்கும் இதுபோன்ற அனுபவம் சில முறை வந்ததுண்டு.
 

இவ்வாறு வருவது பேய் அமுக்குவது என்று பலரால் நம்பப்படுகிறது. அமுக்குறா பேய் என்று அதற்குப் பெயர் வைத்துவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு.

 நம் உடலில் சில நேரங்களில் இரத்த ஓட்டம் திடீரென தடைப்படும்போது தற்காலிகமாக அப்படியொரு நிலை ஏற்படும்.

 சற்று நேரத்தில் உடல் பழைய நிலைக்கு வந்துவிடும். இதுதான் உண்மையான காரணம். மற்றபடி அமுக்குப் பேய் என்பதெல்லாம் அசல் மூடநம்பிக்கையாகும்.

நடிகர் சங்க தேர்தலும் பாரதிராஜாவும்.........................



 பாரதிராஜாவின் தமிழர் பற்று உள்நோக்கம் உடையது.

 பாரதிராஜா தமிழ் மீதும் தமிழர் மீதும் பற்றுள்ளவர் . ஆனால் அதற்கான களப்பணி தொடர்ந்து நிகழ்த்தப்படவேண்டும். தூக்கத்தில் எழுந்தவன் பினாத்துவதுபோல பினாத்தினால் அது கேலிக்குரியதாகும்.

 நடிகர் சங்கத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் (ஓரிரு நாள்கள் உள்ள நிலையில்) தமிழர்களுக்கே வாக்குப்போடு என்பது, குறுக்கே புகுந்து குழப்பம் ஏற்படுத்தி தான் விரும்புகின்றவர்களுக்கு சாதகத்தை உருவாக்கும் சூழ்ச்சியாகும்.

 உண்மையிலேயே தமிழர்கள் மட்டுமே பதவிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருக்குமானால், வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டபோதே இரு அணியினரையும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதுதான் உண்மையான தமிழர் பற்றின் அடையாளம்!

 தமிழர்களுக்கே வாக்களிக்கச் சொல்லி 2016 தேர்தலில் பிரச்சாரம் செய்தார் என்றால் அது சரியாக இருக்கும்.

 முதலில் ஆரியபார்ப்பனர்களை இவர் தமிழர் என்று ஏற்கிறாரா அதை உறுதியாக தெரிவித்துவிட்டு தமிழர் பற்றி பேசவேண்டும்?
யார் தமிழர் விளக்க வேண்டும்!

 தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை தமிழ் நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றிவிட்டு, தமிழர்களை மட்டுமே அதில் உறுப்பினர்களாக்கிவிட்டு அதன்பின் தமிழர் பற்றி பேசவேண்டும். உறுப்பினராய் இருப்போர் பதவிக்கு வருவது தவறு என்பது தப்பு.

 இத்தேர்தல் நிர்வாகச் சீர்கேடு குறித்து, முதலில் அது சரி செய்யப்படட்டும். அதன் பின் தமிழர் அமைப்பாக அது மாறட்டும். அதன் பின் தமிழர்கள் மட்டுமே பதவிக்கு வந்து விடுவர். இதுதான் சரியாக இருக்கமுடியும்.

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan

ஆரிய பார்ப்பனர்கள் மோசடி

ஆரிய பார்ப்பனர்கள் நூல்களை இணையத்தில் பதியும் போதும், புதிதாக பதிப்பிக்கும் போதும் தங்களுக்கு பாதகமான பகுதிகளை நீக்குகின்ற மோசடியை செய்து வருகிறார்கள்.

 எனவே இணையத்தில் உள்ளவற்றையும் புதிய பதிப்புகளையும் ஒதுக்கிவிட்டு பழைய மூலங்களை பார்த்தால் எல்லா ஆதாரங்களும் கிடைக்கும்.

 நாங்கள் உண்மையை சொல்லக்கூடியவர்கள் திசை திருப்புகின்ற மோசடி விமர்சகர்களை ஒதுக்கி தள்ளுங்கள்.

 இவற்றை விளக்கி விரிவான கட்டுரை ஒன்றை விரைவில் தர உள்ளேன்.

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

விந்து அதிகம் வெளியேறுவதால் ஆண்மை இழப்பார்களா?

விந்து அதிகம் வெளியேறுவதால் ஆண்மை இழப்பார்களா?

 60 சொட்டு இரத்தம் = 1 சொட்டு விந்து சரியா?
தொலைக்காட்சியில் சில மருத்துவர்கள் அச்சுறுத்துவது சரியா?
இளைஞர்கள் கட்டாயம் அறிய வேண்டியவை!..................................

 இரத்தம் வேறு. விந்து வேறு. விந்து ஒரு சுரப்பு. வாயில் எச்சில் ஊறுவதுபோல் விந்துப் பையில் விந்து சுரக்கும். எனவே, 60 சொட்டு இரத்தம் ஒரு சொட்டு விந்து என்பது தப்பு.

 விந்து அதிகம் வெளியேறுவதால் ஆண்மை இழப்பு ஏற்படும், உறுப்பு சிறுத்து, துவண்டு விடும். உடலுறவு கொள்ள முடியாது என்று சில மருத்துவர்கள் அச்சுறுத்தி இலட்சக்கணக்கான இளைஞர்களை தன்னம்பிக்கை அற்றவர்களாக, மன உளச்சல் உடையவர்களாக, அச்சம் உடையவர்களாக ஆக்கி வைத்துள்ளனர்.

 இளைஞர்களே இது உண்மையல்ல.

 சுய இன்பத்தில் ஈடுபட்டு, கையால் விந்தை வெளியேற்றுவது இளைஞர்களின் இயல்பு. இது நல்லது. தப்பான செயலில் ஈடுபடாமல் காக்கிறது. இதில் கேடு ஏதும் இல்லை.

 இதனால் ஆண்மை இழப்பு ஏற்படாது. உறுப்பு சிறுத்துப் போகாது; துவண்டு போகாது. அப்படி நினைத்து தன்னம்பிக்கை இழப்பதால்தான் இப்பாதிப்புகள் வருவதுபோல் தோன்றும். ஆனால், இது பொய். நமக்கு எந்த பாதிப்பும் வராது என்று தன்னம்பிக்கையோடு இளைஞர்கள் தங்கள் வாழ்வில் ஈடுபட்டால் இதனால் எப்பாதிப்பு இல்லை என்பதை அறியலாம்.

 திருமணமான புதிதில் ஒரு நாளைக்கு நான்கைந்து முறைகூட உடலுறவு கொள்வர். இதனால் ஆண்மையோ, உடல் நலமோ பாதிக்கப்படுவதில்லை.
ஆண்கள் 13 முதல் 14 வயதில் பருவம் அடைவர். அப்போது தனிமையில் கையால் விந்து வெளியேற்றி சுயஇன்பம் அடைவர். இவ்வாறு வெளியேற்றவில்லை யெனில் இரவில் கனவில் தானே வெளியேறும்.
எந்தவொன்றும் அளவு மீறக்கூடாது என்பது இதற்கும் பொருந்தும். 14 வயதில் தினம் வெளியேற்றுவர். பின் வாரம் மூன்று நான்கு நாள்கள். அதன் பின் வாரம் ஒருமுறை என்று குறையும். இதனால் ஆண்மை இழப்போ. உறுப்பு தளர்வோ வரவே வராது.

 அப்படி வரும் என்ற தப்பான எண்ணத்தால்தான் உறுப்பு தளர்வு ஏற்படுகிறது. இந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாலே உறுப்பு எழுச்சி நல்ல முறையில் இருக்கும்.

 பொதுவாக ஆண்கள் 14 வயது முதல் 18 வயதுவரை தினம் விந்தை வெளியேற்றுவதை அல்லது ஒரு நாளைக்கு சிலமுறை வெளியேற்றுவதை தவிர்த்து, எப்போது உணர்வு கட்டுப்படுத்த முடியாத அளவிற்குச் செல்கிறதோ அப்போது தனிமையில் வெளியேற்றுவது சிறந்தது.

 தினம் செய்வதால் உடலின் பொலிவு, செழுமை குறையும். மற்றபடி ஆண்மை குறையாது.

 வாரம் ஒருமுறை இருமுறை சுயஇன்பத்தால் ஈடுபடுவது உடல் நலத்திற்கு நல்லது.

 25 வயது முதல் 35 வயது வரை ஒருநாள் விட்டு ஒருநாள்; 35 வயது முதல் 45 வயது வரை வாரம் ஒருமுறை; 45 வயது முதல் 55 வயது வரை மாதம் இருமுறை.

 55 வயது முதல் 70 வயது வரை மாதம் ஒரு முறை உடலுறவு கொள்வது அல்லது சுயஇன்பம் செய்வது நலம் தரும். கோடைக்காலத்தில் அதிகம் விந்து வெளியேற்றப்படாமல் இருப்பது நல்லது.

 இவற்றைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் அளவு மிஞ்சாது அளவோடு இன்பம் அடைந்து மகிழ்வோடு வாழ வேண்டும். மாறாக, இதைத் தவறாக எண்ணி அஞ்சி, தன்னம்பிக்கை இழந்து தளர்ந்து போகக் கூடாது

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan

 தகவல்களை படியுங்கள் ... நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Wednesday, October 14, 2015

சூடு சொரணையை விடு! சுகவாழ்வை நாடு! என்கிறார் நாஞ்சில் சம்பத்



சொரணை கெட்ட ஆட்களெல்லாம் எப்படி பிழைப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர் இப்படித்தான் பேசுவார்.

ம.தி.மு.க.வில் உள்ளவர்கள் கொள்கைவயப்பட்டு நிற்பவர்கள். அவர்களை அ.தி.மு.க.விற்கு அழைக்கிறார்.

தி.மு.க.விற்குப் போகக்கூடாதாம் அ.தி.மு.க.விற்கு அழைக்கிறார்!

இந்த நபருக்கு இப்படியழைக்க என்ன தகுதியிருக்கிறது.

பிழைக்கப்போன ஆள் பிழைத்து விட்டுப் போகனுமே தவிர, மக்களிடம் பேசவோ, மற்றவர்களிடம் பேசவோ என்ன தகுதியுள்ளது?

வைகோ இனிமேலாவது பழைய பகையை கைவிட்டு, தி.மு.க.வுடன் கைகோர்ப்பதுதான் சிறந்தது.

உங்கள் அருமை பெருமை அறிந்த இடம் அதுமட்டுமே!

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

பார்ப்பனர்கள் பசுமாட்டுக்கறி தின்றதற்கு ஆதாரம் இதோ !



 அரண்மனையில் ஆரிய பார்பனர்களுக்கு விருந்து கொடுப்பதற்காகவே நாளொன்றுக்கு 2000 பசுக்கள் கொல்லப்பட்டன. 2000 சமையல்காரர்கள் சமைத்தனர்.

 பசுமாட்டுக்கறியின் ருசி நன்றாக இருக்க பார்பனர்கள் ஒரு பிடி பிடிக்க, பற்றாக்குறை வந்துவிட்டது. எனவே சமையல்காரர்கள் “சூப்” செய்து கொடுத்து பற்றாக்குறையை சமாளித்தார்கள்.

 ஆதாரம் : {மகாபாரதம் துரோண பர்வம் 67-1}

 ஆதாரங்கள் தொடரும்.....

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan

சுலோக ஆதாரம் :
 

பார்ப்பனர்கள் பசுமாட்டுக்கறி சாப்பிட்டதை பார்ப்பனரே ஆதாரப்பூர்வமாக சொல்கிறார் படியுங்கள் :

 
 

மோடி ஆட்சியின் முகத்தில் உமிழ்ந்து, வீசியெறிந்த விருதுகள்!



 பாசிச வேரைப் பறித்தெறியும்!

 அறிவாளர் சீற்றம் ஆட்சியை அகற்றும்!.......................................

 கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் செயல் பா.ஜா.க. ஆட்சியில் பட்டவர்த்தனமாக நடக்கிறது. பெரும்பான்மை கிடைத்துவிட்டதால் மத்திய அரசும், அவர்களின் பரிவாரங்களும் பாசிசப் போக்கைத் தீவிரப்படுத்தியுள்ளன.

 நாட்டுமக்களின் அன்றாட வாழ்க்கைச் செயல்பாட்டில் கூட வலிய மூக்கை நுழைக்கு வக்கிரம் நாள்தோறும் நடக்கிறது.

 • நாங்கள் சொல்லும் கடவுளையே வணங்க வேண்டும்.
• நாங்கள் சொல்லும் மொழியில் தான் படிக்க வேண்டும்.
• நாங்கள் சொல்லும் கலாச்சாரத்தையே ஏற்க வேண்டும்.
• நாங்கள் சொல்லும் ஆடையையே அணிய வேண்டும்.
• நாங்கள் சொல்வதையே சாப்பிட வேண்டும்.
• நாங்கள் சொல்லும் வரலாற்றையே ஏற்க வேண்டும்.
• பகுத்தறிவு பேசினால் படுகொலை செய்வோம். ஆதிக்கத்தை எதிர்த்தால் அடித்துக் கொல்வோம். எதிராக எழுதினால் குதறி ஒழிப்போம்.

 என்று மதவெறி கூட்டம் மார்தட்டி புறப்பட்டுள்ளது.
மோடியின் ஆட்சி வேடிக்கைப்பார்கிறது.

 எழுத்தாளர்கள் எரிமலையாய் எதிர்த்து எழுந்து தங்கள் விருதுகளை வீசியெறிந்துள்ளனர். இது ஆதிக்க ஆட்சியை அகற்றிடும் ஆதிக்கத்தை வேரறுக்கும். விருதை வெறுத்து வீசிய செயல் மோடி அரசின் முகத்தில் உமிழ்ந்த செயல் ஆகும் இதன் பின்னும் திருந்தாமல் போனால் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் அது இந்த ஆட்சியை முடிக்கும்!

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan

மனோரமாவுக்கு மாற்று இல்லை!



 ”ஈடு செய்ய முடியாத இழப்பு!” ”அவரிடத்தை எவரும் நிரப்ப இயலாது!” என்பவை மனோரமாவைப் பொருத்தவரை 100% சரியானது.
கோபி சாந்தா என்பதே இவரது பெயர். இளமையில் வறுமை என்றாலும் நாடகத்தின் மீது நாட்டம்.

 அக்காலத்தில் வீதிநாடகங்கள் அதிகம். அப்படி காரைக்குடி கடைவீதியில் நடந்த “அந்தமான் கைதி” என்ற நாடகத்தை வேடிக்கைப் பார்க்கச் சென்ற இவருக்கு பாடும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் குரல் வளம் கேட்டவர்கள் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் அளித்தனர். நாடெங்கும் அவர் பேசப்பட்டார். மனோரமா என்று பெயர் மாற்றப்பட்டது.
எஸ்.எஸ். இராசேந்திரனின் நாடகக் குழுவில் சேர்ந்து, கலைஞர் எழுதிய ”மணிமகுடம்” நாடகத்தில் முதன் முதலில் நடித்தார். அதன் பின் நாடகத் துறையில் பெரும் புகழ் பெற்றார்.

முதன் முதலில் சிங்களப் படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானர். தமிழில் முதன் முதலில் ’மாலையிட்ட மங்கை’ திரைப்படத்தில் நடித்தார். ஐம்பது ஆண்டுகள் தொடர்ந்து நடித்து 1500 படங்கள் நடித்து கின்னஸ் சாதனை புரிந்தார். மத்திய அரசின் “பத்மஸ்ரீ”விருது இருவருக்கு அளிக்கப்பட்டது.

 நடிப்பில் ஆண்களில் சிவாஜி எப்படியோ அப்படி பெண்களில் மனோரமா! அவருக்கு இணையாரும் இல்லை. பாத்திரத்திற்கு உயிரூட்டும் திறன் பெற்றவர். பாத்திரமாகவே மாறிவிடக்கூடியவர். இயல்பான நடிகர். மிகை நடிப்பு இவரிடம் இருக்காது.

 எல்லோரிடமும் பாசத்துடன் பழகக் கூடையவர். உலக அளவில் பேசப்படத்தக்க ஒரு தமிழச்சி!

 உழைப்பால் உயர்ந்த தமிழ் ஆச்சி! அவருக்கு மரணம் இல்லை! அவர் என்னென்றும் இவ்வுலகத்தவருடன் வாழ்வார்! அவர் பெருமையை ஒவ்வொரு தலைமுறையும் பேசிக் கொண்டிக்கும். அவரது இறுதி ஊர்வலத்தில் தமிழர்கள் காட்டிய பாசம் அவரின் பெருமைக்கு நற்சான்று.
வாழ்க மனோரமா புகழ்!

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan

ஆதிக்க வேரறுக்கும் ஆவேசம்தான் சேகுவேரா!

ஆதிக்க வேரறுக்கும்
ஆவேசம்தான் சேகுவேரா!

...........பெரியார் = பகத்சிங் = சேகுவேரா.........

 

 
 யார் இந்த சேகுவேரா? பனியனில் அலங்காரமாகப் போட்டுக்கொள்ளும் பல இளைஞர்களுக்கே தெரியாது!
எனவே, இளைஞர்களே அவரைப்பற்றிச் சுருக்கமாக அறியுங்கள்.

சேகுவேரா யார்? அவரே சுருக்கமாகச் சொல்கிறார்.
நான் அர்ஜெண்டினாவில் பிறந்தேன். அது ஒன்றும் ரகசியமல்ல. நான் ஓர் அர்ஜன்டினன். ஒரு கியூபன்.

தேவைப்பட்டால் எந்தவொரு நாட்டின் விடுதலைக்காகவும் நான் உயிரைத் தர சித்தமாகவுள்ளேன்.

உலகில் எங்கு அநீதி நடைபெற்றாலும் அதை நோக்கிப் பயணத்தலே எனது கொள்கை, நோக்கம், வேலை எல்லாம். அதனால் உலகிலுள்ள அனைவருமே எனது தோழர்களே!

ஆம். அர்ஜெண்டினாவில் பிறந்தவர்தான் கியூபாவின் விடுதலைக்குப் போரிட்டு விடுதலை பெற்றார். பெரியார் கன்னடர் என்ற கபோதிகளும், கயவர்களும் இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆதிக்கம் ஒழிக்கும் பணியை முதன்மையாகக் கொண்டவர்களுக்கு எல்லா நாடும் அவர்கள் நாடே! அதைத்தான் பெரியாரும் சொன்னார்; சேகுவேராவும் சொன்னார்.

ஒரு நாட்டின் விடுதலை பெறப்பட்டவுடன் அடுத்த நாட்டின் விடுதலைக்குப் புறப்பட்டவர் சேகுவேரா.

கியூபா விடுதலைப் போராட்டத்தில் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து போராடிய சேகுவேரா, போராடும் நிலையிலேயே இப்படிக் கூறினார்.

கியூபாவிற்கு விடுதலை கிடைக்கும் வரைதான் நான் உங்களுடன் இருப்பேன். அதன் பின் எங்கு என் பணி தேவையோ, எங்கு ஆதிக்கம் ஓங்கி நிற்கிறதோ எங்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, உரிமை பறிக்கப்படுகிறார்களோ அங்குச் சென்று விடுவேன். என்று உறுதியாகக் கூறியவர். கூறியபடியே சென்றவர்.
ஆக, போராடி விடுதலை பெற்றுத் தருவதே என் பணி. மாறாக, அதன்பின் பதவியில் அமர்ந்து அதை அனுபவிப்பதல் என்றார். பெரியாரும் அப்படித்தான் மக்களுக்கு போராடினாரே தவிர, அவரைத் தேடிவந்த தமிழக முதல்வர் பதவியை 3 முறை உதறித் தள்ளினார். ஆங்கில ஆட்சியாளர்கள் வற்புறுத்திய போதும் மறுத்தார்.

உண்மையான மக்கள் தொண்டர்கள் இப்படித்தான் இருப்பார்கள். ஆனால், இன்றைக்கு நான்தான் முதல்மந்திரி என்று சொல்லிக் கொண்டுதான் மக்களுக்கு பணி செய்யவே வருகிறார்கள். இவர்கள் போராளிகள் அல்ல வணிகர்கள்.

கியூபா மக்களுக்குத் தொண்டாற்றி முடித்ததும், காங்கோ, பொலிவியா நாடுகளில் நிலவிய அடக்குமுறைக்கு எதிராக, போராளிகளை உருவாக்க, பயிற்சியளிக்கச் சென்றார்.

காங்கோவில் வெற்றி பெற்றபின், பொலிவியாவிற்குச் சென்று, போராடி தொடக்கத்தில் வெற்றி பெற்றாலும் இறுதியில் ஏகாதிபத்திய கூலிப்படையிடம் சிக்கிக் கொண்டார். குண்டடிப்பட்டு கைது செய்யப்பட்ட அவரைக் கொல்ல அமெரிக்க சி.ஐ.ஏ. முடிவெடுத்து, சுட்டுக்கொல்ல முயன்றபோது, நண்பகல் 1 மணிக்கு கைகள் கட்டப்பட்ட நிலையில் தனியிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின் முட்டி போடச் சொன்னார்கள்.

அதற்கு சேகுவேரா, முட்டிப்போட்டு உயிர்வாழ்வதைவிட நின்றுகொண்டே சாவதே மேல் என்று கர்ஜித்தார். தன்னை நிற்க வைத்தே சுடு என்றார் எதிரியிடம். ஆனால், எதிரிகள் அதை ஏற்காத நிலையில்,

கோழையே சுடு! துணிவாய்ச் சுடு! உன் கைகள் நடுங்காமல் துப்பாக்கியை உயர்த்தி, எனது நெஞ்சைப் பார்த்துச் சுடு! என்று சாகும் நிலையிலும் தன்மான வகுப்பு நடத்திவிட்டு செத்தார் சேகுவேரா!

ஆம். சாகும் நிலையிலும் இறுதிப் பேருரை ஆற்றிவிட்டு மடிந்த தந்தை பெரியார் போலவே தான் அவரும் மாண்டார். பகத்சிங் போலவேதான் மானத்தோடு சாக எண்ணினார்!

இளைஞர்களே! எங்கு ஆதிக்கம் தலை காட்டினாலும், எங்கு மக்கள் ஒடுக்கப்பட்டாலும், உரிமை பறிக்கப்பட்டாலும், அவர்களுக்காய் போராடுங்கள்! வெல்லும்வரை போராடுங்கள்!

அதுவே, சேகுவேரா, பெரியார், பகத்சிங் போன்றோர்களின் விருப்பம்! ஆம். ஆதிக்கம் அழிப்பதே இளைஞர்களுக்கு அழகு! இலக்கணம்!

- மஞ்சை வசந்தன்

https://www.facebook.com/manjaivasanthan

பெண்களே! கருப்பை காப்பது கட்டாயம்!..............


சோற்றுக் கற்றாழையும், வாழைப்பூவும் உங்களுக்கு உதவுகிறது.

 சோற்றுக்கற்றாழை தோல்நீக்கி, அந்த நுங்கு போன்ற பகுதியை ஏழுமுறை நீரில் அலசி, அதனுடன் தேவையான அலவு தேன் கலந்து வாரம் மூன்று நாளாவது சாப்பிடுங்கள். பெண்களுக்கு பெரிதும் உதவுவதால் ”குமரி” எனப்படுகிறது.

 வாழைப்பூவை கூட்டாக செய்து வாரம் மூன்றுமுறை சாப்பிடுங்கள் உங்களுக்குக் கருப்பைத் தொல்லை வராது. வலுப்பெறும். இவை ஆண்களும் சாப்பிட வேண்டிய உன்னதமான உணவுகள். உடல் குளுமை பெறும், வலுப்பெறும். தோல் நோய்கள் வராது. இருந்தால் அகலும்.

 ஆண்-பெண் இருபாலரும் சோற்றுக்கற்றாழை சோற்றை முகத்தில் தடவி ஒருமணி நேரம் கழித்துக் கழுவினால் முகம் ஒளிவீடும்.

 சோற்றுக் கற்றாழையை வீட்டிலே தொட்டிகளில் வளர்த்துப் பயன்படுத்தலாம்.

இளைஞர்களே எச்சரிக்கை!.

இளைஞர்களே எச்சரிக்கை!...............


 இதயம், சிறுநீரகம், ஈரல், கண் என்று எல்லா உறுப்புகளையும் அழிக்கும் சர்க்கரை நோய்!

 மற்ற நோய்கள் உடலில் ஒவ்வொரு உறுப்பைப் பாதிக்கும். ஆனால், சர்க்கரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.

 குறிப்பாக ஆண்மை இழக்கச் செய்யும்.

## வராமல் தடுப்பது எப்படி? ##

 பரம்பரையில் வருவதாயினும், நம் செயல்பாட்டால் வருவதாயினும் சர்க்கரை நோயை கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றினால் வராமல் தடுக்கலாம்.

 1. சீனிக்குப் பதிலாக நாட்டுவெல்லம் அல்லது பனங் கற்கண்டு பயன்படுத்துதல்.
2. சோற்றைக் குறைத்து காய்கறி பழங்களை அதிகம் உண்ணுதல்.
3. இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு தினம் சாப்பிடுதல்.
4. பாகற்காய் வாரம் மூன்று நாள் எடுத்தல்.
5. நாவல்பழம் கிடைக்கும் காலத்தில் தவறாது சாப்பிடுதல். நான்கைந்து விதைகளையும் மென்று சாப்பிடுதல்.
6. முள்ளங்கி தவிர மற்ற கிழங்குகளைத் தவிர்த்தல்.
7. வெள்ளரிப் பிஞ்சு, கோவைக்காய் உணவில் சேர்த்துக் கொள்ளுதல்.
8. நாள்தோறும் வியர்க்கும் அளவிற்கு ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்தல்.
9. கொழுப்பு உணவுகளைத் தவிர்த்தல்.
10. பாக்கட் உணவுகளைத் தவிர்த்தல். சுவைக்காக உண்ணாது நலத்திற்காய் உண்ணுதல்.

 இளமை முதல் இவற்றைப் பின்பற்றினால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் சர்க்கரை சாப்பிடுவதால் வருவதல்ல. கணையம் பாதிக்கப்படுவதால் வருவது.

 சர்க்கரை நோயாளிகள்தான் இனிப்பைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் அளவோடு இனிப்பு உண்ணலாம்.

 ## சர்க்கரை நோய் வந்த பின்:##

மேற்கண்டவற்றைப் பின்பற்றுவதோடு,

 நாவல் விதைப்பொடி, சிறுகுறிஞ்சான் இலைப்பொடி இவற்றை மருத்துவர் கூறும் அளவிற்கு எடுத்துக்கொள்ளுதல்.

 சுறுசுறுப்பான நடைப்பயிற்சி.
மென்மையான செருப்பு அணிதல்.
எல்லா உறுப்புகளையும் சோதித்தல்.

 மருத்துவர் வழங்கும் மருந்துகளைத் தவறாது சாப்பிடுதல்.
மனதை மகிழ்ச்சியாக வைத்திருத்தல்.

 இவற்றைச் செய்தால் சர்க்கரை நோய் பற்றி பயப்பட வேண்டாம்.

அலட்சியப்படுத்தினால்தான் ஆபத்தில் முடியும். முன்னெச்சரிக்கையோடு வாழ்ந்தால் இந்நோயால் பாதிப்பு வரவே வராது.

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

வரலாற்றை திரிக்கும், அழிக்கும் இந்துத்துவா கும்பல்

வரலாற்றை திரிக்கும், அழிக்கும் இந்துத்துவா கும்பல்.......(1)

 நேரு நினைவு நூலகத்தின் தலைவரான மகேஷ் ரங்கராஜன் திறமைவாய்ந்த வரலாற்று ஆய்வாளர், இந்த அரசு கொடுத்த நெருக்கடியால் அவர் பதவிவிலகியுள்ளார்.

 அவர் போன்ற தலைசிறந்த ஆய்வாளர்கள் தங்கள் பதவியைத் துறப்பது இந்தியவரலாற்று ஆய்வுத்துறைக்குப்பெரிய இழப்பாகும், அதே நேரத்தில் மத்தியஅரசு தலைசிறந்த வரலாற்று ஆய்வுகளை புறக்கணித்துவிட்டு, இந்துத்துவக் கொள்கைகளை பரப்பும் ஒரு பிரச்சாரத் தளமாக வரலாற்று அறிஞர்களையும் அவர்களது ஆய்வுகளையும் மாற்றப்பார்க்கிறது, இந்த அரசின் கொள்கையும் அதுதான்.

 கடந்த ஆண்டு இந்திய வலாற்று ஆய்வு மையத்தில் பல நல்ல வராலாற்று அறிஞர்களின் படைப்புகள் திருத்தப்பட்டதோ அப்போதே நேருநினைவு நூலகம் போன்ற தலைசிறந்த வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய தளமும் இந்துத்துவக் கொள்கைகள் திணிக்கப்படும் என்று உறுதியாகிவிட்டது.

Wednesday, October 7, 2015

இடஒதுக்கீட்டு ஆய்வுக்கு இப்போது என்ன கட்டாயம்? தினமணி 26.9.2015 கட்டுரைக்கு மறுப்பு

இடஒதுக்கீட்டு ஆய்வுக்கு இப்போது என்ன கட்டாயம்?

தினமணி 26.9.2015 கட்டுரைக்கு மறுப்பு

- மஞ்சை வசந்தன்

தாலி பற்றி தவறான செய்திகளை ஊகங்களின் அடிப்படையில் உளறிக் கொட்டிய (தினமணியில்) அதே பத்மன் இப்போது இடஒதுக்கீடு பற்றி எழுதியுள்ளார்.

பத்மன் கட்டுரையைப் பதிப்பிக் கும் தினமணி, நான் மறுப்பு எழு தினால் மறைத்துவிடுவது வாடிக்கை. நடுநிலையாளர் போலும், நியாய வான்கள் போலும் பேசுவதாக, எழுதுவதாகக் காட்டிக் கொண்டு, தங்கள் உள்ளத்து வேட்கைகளை எப்படியாவது அடைய வேண்டும் என்ற உள்நோக்க உந்துதலிலேதான் பத்மன்கள் எழுத்துக்களும், திணமணி யின் பதிப்பும் இருக்கும்.

இதையெல்லாம் புரிந்து கொள்ள கூர்ந்து நோக்கலும் பொருள்புலமை யும் வேண்டும். அரைகுறையாக அறிந்து அதிமேதாவிகளாக எழுத முயல்வதும், உள்நோக்கத்தோடு ஒரு சார்பாய் ஒரு பிரச்சினையை அணுகு வதும் ஆதிக்கவாதிகளின் இயல்பு என்பது அப்போது விளங்கும். எனவே பத்மன் ஏதோ பரந்த நோக்கில் உயர்ந்த உள்ளத்தோடு எளிய மக் களின் ஏற்றம் சார்ந்து எழுதிவிட்டார் என்று எண்ணினால் நீங்கள் ஏமாந்து போனீர்கள் என்று பொருள். எனவே, இவரது கருத்துக்கள் சரியா என்பதை இனி ஆய்வோம்!

உயிர் காக்கும் மருந்துகளே மறு ஆய்வுக்குட்படுத்தப்படும்போது இடஒதுக்கீட்டை ஆய்வுக்கு உட்படுத்தக் கூடாதா?

இடஒதுக்கீட்டின் பயன் உரியவர்க் குக் கிடைக்காமல் யார்யாரோ கேட் கும் சூழலில் இதை ஆய்வுக்குட்படுத் துவதானே சரியாகும்.

பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பினரில் பெரும்பா லோர் சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கிறார்கள். அவர் களுக்கு இடஒதுக்கீட்டுச் சலுகை வேண்டும் என்பது நியாயம் தான். அதே நியாயம் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் முதல் தலை முறை பட்டப்படிப்பில் நுழையும் உயர்சாதியினருக்கும் பொருந்தாதா?

தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப் பினருக்கான இடஒதுக்கீட்டுப்பயனை அப்பிரிவுகளில் உள்ள முன்னேறிய வர்களே அனுபவிக்கிறார்கள்!

படேல் போன்ற உயர்நிலை சாதியினரும் இடஒதுக்கீடு கேட்கத் தொடங்கியுள்ளதால் ஆய்வு அவசியம்.
 
மத்திய அரசு மறு ஆய்வு செய் யாமல், இடஒதுக்கீட்டு ஆதரவாளர் களுக்கு அஞ்சி விலகி ஓடுவது வாக்கு நோக்கு உடையதாகும்!

என்பவையே இந்த நியாயவான் எழுப்பும் நியாயக்குரல்! இவை எந்த அளவிற்கு சரி? அல்லது எந்த அளவிற்கு உள்நோக்கம் உடையது? என்பதை இனி பார்ப்போம்.

இடஒதுக்கீடும் சாதியென்னும் நோய் ஒழிப்பு மருந்து என்பதால் மற்ற மருந்து களுக்கான மறு ஆய்வு போல இதற்கும் மறு ஆய்வு வேண்டுவது சரி தானே?

இது பத்மனின் முதல் கேள்வி

மறு ஆய்வு என்பது எதற்கு மேற் கொள்ளப்பட்டாலும் அதன் நோக்கு எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்தே அது தேவையா? சரியா என்பதை முடிவு செய்ய முடியும். ஒரு கம்பெனியின் நிர்வாகத்தை ஆய்வகத்தை ஆய்வு செய்வது அதிலுள்ள குறைகளைக் கண்டறிந்து அகற்றுவதற்கு. ஒரு மருந்தை ஆய்வுக்கு உட்படுத்துவது அதனுடைய பயன் எப்படிப்பட்டது, விளைவு எப்படிப் பட்டது என்பதை அறிந்து அதை அப்படியே தொடரலாமா? அல்லது அதை மாற்றி, மேம்படுத்தி, சரிசெய்து தயாரிக்க வேண்டுமா? என்பதற்குத்தான்.

ஆனால், இடஒதுக்கீட்டை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கின்றவர்களின் கோரிக்கை அதிலுள்ள குறைகளைச் சரி செய்ய அல்ல, அது இன்னும் தேவையா? அதையே ஏன் கைவிடக்கூடாது? என்பதற்கு.
 
இடஒதுக்கீடு தேவை, அது ஒரு மருந்து என்பதை இவர்கள் உண்மையில் ஏற்றுக் கொள்வதாயின் அதைத் தனியார் துறை யிலும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் வைத்துப் போராடி அதை அடைந்தப்பின் அதி லுள்ள குறைகளைக் களைய முற்படு வார்களானால் அவர்களோடு சேர்ந்து கைகொடுக்க நாமும் தயார். ஆனால் அதைப் பற்றி வாய்திறக்காமல், இருக்கின்ற இடஒதுக்கீட்டை எப்படியாவது ஒழித்துக் கட்ட இதன் அடிப்படையைத் தகர்க்க பொருளாதார அளவுகோலைப் புகுத்த இவர்கள் செய்கின்ற சதியின் ஓர் அங்கம் தானே இந்த ஆய்வுக்குட்படுத்து என்ற முழக்கம்! உண்மையிலே இடஒதுக்கீட்டின் நியாயத்தை இவர்கள் உணர்ந்தவர்கள் என்றால் தனியார் துறையில் இடஒதுக் கீட்டை வற்புறுத்தி அடைய போராட வருவார்களா?

உள்ளத்தைத் தொட்டு நேர்மையாய் பதில் சொல்ல வேண்டும். அதைச் சொல்ல மாட்டேன் என்றால் வாயைப் பொத்திக் கொண்டு மூலையில் முடங்க வேண்டும்! நியாயவான்போல் பேசவும் எழுதவும் வருவது மோசடிச் செயலாகும்!

இடஒதுக்கீட்டை யார் யாரோ கேட்கிறார்கள்! தற்போது படேல் என்ற மேல்சாதியினர் கேட்கிறார்கள். எனவே இட ஒதுக்கீட்டை ஆய்வு செய்ய வேண்டும். இது இவரது இரண் டாவது கருத்து. இதில் எங்காவது நியாயமோ, நேர் மையோ தர்க்க அடிப்படையோ இருக் கிறதா? சிந்தித்துப் பாருங்கள்!

தகுதியில்லாதவர்கள், உயர்சாதியினர் கேட்கிறார்கள் என்றால் உங்களுக்கு உரியதல்ல இது. நீங்கள் கேட்பது சமூக நீதிக்கு எதிரானது என்று அவர்களிடம் திட்டவட்டமாய், உறுதியாய்ச் சொல்லி விட வேண்டியது தானே! அதைவிட்டு விட்டு இடஒதுக்கீட்டை ஆய்வுக்குட் படுத்து என்பதன் நோக்கம் என்ன?

படேல் சாதியினர் சொல்வது போல எனக்குக்கொடு, இல்லையேல் இடஒதுக் கீட்டை எடு! என்ற கோரிக்கை போல இடஒதுக்கீட்டையே நீக்க வேண்டும் என்ற முயற்சிக்கு இதைச் சாக்காகப் பயன்படுத்தும் சூழ்ச்சிக்குத் தானே ஆய்வு என்பது. இப்போது ஆய்வுக்கு அவசியம் என்ன வந்தது? படேல் பிரிவினர் கேட்பது சரியல்ல என்று சொல்வதற்கு ஆய்வு எதற்கு? பதில் சொல்லுங்கள்!

சமூக ரீதியில் பின் தங்கியவர் களுக்கு இடஒதுக்கீடு நியாயம் என்றால், பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள உயர் சாதியினருக்கும் ஏன் பொருந்தாது? அவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது  என்பது இவரது மூன்றாவது கருத்து.

இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது பாருங்கள்! இதுதான் இவர்கள் நோக்கம். இதற்குத்தான் இவர்கள் நியாயவான்களாகக் காட்டிக் கொண்டு கருத்துக் கூறுகிறார்கள்.

முதலில் இவர் இடஒதுக்கீடு பொருளா தார ரீதியில் நலிந்தவர்களுக்கு என்று கூறும் கருத்தே தவறானது.

இடஒதுக்கீடு சமூகத்திலும், கல்வி யிலும் பின் தங்கியவர்களுக்கே (Socialy and Educationaly Bacward) உரியது. பொருளாதாரம் என்ற அளவு கோல் அரசியல் சாசனத்தில் இல்லை. இல்லாத ஒன்றை இவர்கள் புகுத்த முனைவது இடஒதுக்கீட்டின்  அடிப்படையையே தகர்ப்பதற்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

பொருளாதாரம் என்பது நிலையானது அல்ல. ஒரு ஆண்டுக்கு முன் பொருளா தாரத்தில் தாழ்ந்து கிடந்தவன் இன்று உயரலாம். நேற்று உயர்ந்து இருந்தவன் இன்று தாழலாம். எனவே பொருளாதாரம் இடஒதுக்கீட்டின் அளவுகோல் ஆகாது. எம்.ஜி.ஆர். இந்தப் பொருளாதார அளவு கோலைப் பயன்படுத்தி படுதோல்வி யடைந்து அதைத் திருப்பப்பெற்றது வரலாறு. தோற்றுப்போன ஒரு அடிப் படையை மீண்டும் புகுத்த முனைவது சூழ்ச்சியும், வஞ்சகமும் அல்லவா?

இவர் இறுதியாக முன்வைக் கும் வாதம், இடஒதுக்கீட்டுச் சாதியினரில் முன்னேறியவர்களே பலன் பெறுகின்றனர். அதிலுள்ள அடித்தட்டு நலிந்த பிரிவினர் பெறவில்லை என்பது முதலில் இக்கோரிக்கையை வைக்க வேண்டியவர்கள் பாதிக்கப் படக் கூடிய அடித்தட்டுப் பிரிவினர். உயர் சாதியினர் இதுபற்றி பேசுவது அவர்கள் மீதான அக்கறையில் அல்ல. அதை வைத்து பொருளா தாரத்தைப் புகுத்துவதற்கே! ஆடு நனைவதற்கு ஓநாய் அழுவதைப் போன்றது தான் இது.

இடஒதுக்கீட்டுச் சாதியினர் ஒரு தலைமுறைதான் முன்னேறியுள்ளனர். அதற்குள் அதில் புகுந்து குழப்பம் ஏற்படுத்துவது சரியாகாது. முதலில்  ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கான நீதி கிடைக்கட்டும். அதன்பின் நலிந்த வர்க்கும் உரியநீதி கிட்டும்.

ஒடுக்கப்பட்ட மக்களிலே உயர்ந்த பிரிவு, கீழ் பிரிவு என்பது கிரிமி லேயர் சிந்தாந்தம். இதற்குத்தான் கிராமப்புற மக்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. அதையும் எதிர்த் தவர்கள் இவர்கள் தானே!

இடஒதுக்கீட்டுப் பிரிவினர் அவர் களுக்குரிய பாதிப்பை அவர்கள் கோரிக்கை வைத்து பெறுவர். உயர் சாதியினர் அவர்களுக்காக வக் காலத்து போடத் தேவையில்லை.

உண்மையைச் சொல்வதாயின். நடைமுறையில் இடஒதுக்கீட்டில் உயர்ந்த குடும்பத்துப் பிள்ளைகளை விட அடிமட்ட பிள்ளைகளே நன்றா கப்படித்து இடஒதுக்கீட்டைப் பெறு கின்றனர். தள்ளுவண்டி வியாபாரி, மலம் எடுக்கும் குடும்பத்துப்பெண், குடிசையில் வாழும் பிள்ளை, படிக்க வசதியற்ற பிள்ளைகள் மருத்துவப் படிப்பிற்கு இடம் பெறுவது இதை உறுதி செய்கிறது.

மத்திய அரசு மறுஆய்வு செய் யாது என்று பின்வாங்குவது வாக்கு களைப் பெறவே என்று ஒரு குற்றச் சாட்டை இவர் வைத்து கட்டுரையை முடிக்கிறார்.
வாக்குரிமை இருப்பதால் தான் இந்த இடஒதுக்கீடு இன்றும் நிலைத் திருக்கிறது. இல்லையென்றால் எப் போதோ அப்புறப்படுத்தியிருப்பீர்களே!

தினமணிக்கும் பத்மனுக்கும் நாங்கள் சொல்லிக்கொள்வது இது தான். முதலில் உங்கள் நடுநிலையை, நியாயத்தன்மையை அனைத்து சாதி யினரும் அர்ச்சகராவதில் காட்டி விட்டு அப்புறம் நியாயம் பேசுங்கள் நாணயமாய் இருக்கும்!

இளைஞர்களே இதயத்தைக் காக்க எளிய வழிகள்!

இளைஞர்களே இதயத்தைக் காக்க எளிய வழிகள்!
 கட்டாயம் பின்பற்றுங்கள்!
 

 (ஆண் பெண் இருவருக்கும்).................



 இது உங்களுக்காக மட்டுமல்ல. உங்களை நம்பியுள்ள உங்கள்
குடும்பத்தாருக்காக, உங்கள் மனைவிக்காக அல்லது கணவனுக்காக; உங்கள் பிள்ளைகளுக்காக.

இக்காலத்தில் 30 வயதிலே மாரடைப்பால் இறப்பது
 

 நிகழும்போது இதில் எச்சரிக்கை கட்டாயம் வேண்டும்.

 காலையில் ஒரு துண்டு இஞ்சி. தோல் நீக்கி, தண்ணீருடன் வாயில் போட்டு மென்று விழுங்குங்கள். இது உங்கள் இடுப்பில் விழும் மடிப்புச் சதையைப் போக்கும். பித்தம், மயக்கம் வராமல் காக்கும். உடலினுள்ள கொலஸ்ட்டரால் அளவைக் கட்டுக்குள் வைக்கும்.

 பிற்பகல் உணவுக்குப்பின் இரண்டு பச்சைப் பூண்டுப் பல்லை தண்ணீருடன் சேர்த்து மென்று விழுங்குங்கள்.

 தாமரைப்பூ (ரூபாய் 5க்குக் கிடைக்கும்) அதன் இதழ்களை அலசி தினம் ஒன்று சாப்பிடுங்கள்.

 தாமரைப்பூ கிடைக்காதவர்கள் செம்பருத்திப் பூவைச் சாப்பிடுங்கள்.
சிறிய வெங்காயத்தை உணவில் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.
கொள்ளு இரசம் வாரம் இருமுறைச் சாப்பிடுங்கள்.
வாழைத் தண்டு பொரியல் வாரம் இருமுறை.

வாழைப்பூவை வாரம் இருமுறைச் சாப்பிடுங்கள்.

 ஏழுமணிநேரம் கட்டாயம் இரவில் உறங்க வேண்டும். காலை 6 மணி வரைத் தூங்க வேண்டும். ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்தல்.

 இரவு நேரத்தில் பணியாற்றுவோர் பகலில் 7 மணி நேரம் உறங்க வேண்டும்.
நல்ல கொழுப்பு தரும் பாதாம், வேர்க்கடலை, முந்திரி பருப்பு சாப்பிடலாம்.
பப்பாளி, மாதுளை, வாழைப்பழம், கீரைகள் நாள்தோறும் உண்ண வேண்டும். திராட்சைப் பழத்தை நன்குக் கழுவிச் சாப்பிடவும்.

 தினம் ஒரு ஸ்பூன் சீரகத்தை மென்று சாப்பிடுங்கள்.

வெந்தயம் (ஊறவைத்து) தினம் ஒரு ஸ்பூன் அளவு மென்று சாப்பிடுங்கள்.
பாகற்காயை வாரம் மூன்றுமுறை சாப்பிடுங்கள்.
 
‪#‎தவிர்க்க‬ வேண்டியவை:

1. பாக்கட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகள், துரித உணவுகள்.
2. குளிர்பானங்கள்.
3. மது, புகைப்பிடித்தல் _ -விளையாட்டாய் கூடத் தொடக்கூடாது.
4. உணர்ச்சிவசப்படுதல், பரப்பரப்பாய் செய்தல், பதட்டப்படுதல், எதுவும் உடனே நடந்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது.
5. நினைத்த நேரம் நினைத்ததைச் சாப்பிடுதல்.
6. தூக்கத்தைத் தொலைத்தல்
7. கொழுப்பு நிறைந்த உணவுகள் (அளவோடு சாப்பிடலாம்).
8. வறுத்த உணவுகள். (சுவைக்காக சிறிது சாப்பிடலாம்.)

 இவற்றைப் பின்பற்றினால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். முதுமையிலும் வலுவோடும் பொலிவோடும் வாழலாம். இதில் சிரமமும் இல்லை; செலவும் அதிகம் இல்லை. நல்ல உணவு, நல்ல பழக்கம் அவ்வளவே!

 குறிப்பு: 

1. இதன்படிச் செய்தால் மருத்துவச் செலவு என்பதே உங்களுக்கு வர வாய்ப்பில்லை. இது பல ஆயிரம் ரூபாய் செலவைத் தவிர்க்கும்!

2. அப்படியெல்லாம் வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம். நல்லா அனுபவிச்சுட்டு சாவோம்! என்கின்றவர்கள், திருமணம் செய்து கொள்ளாதீர்கள்! பெற்றோருக்குச் சுமையாய் இருக்காதீர்கள்!

 ____
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan

வள்ளலார் அடித்துக் கொல்லப்பட்டார்!

வள்ளலார் அடித்துக் கொல்லப்பட்டார்!.........................................

கடலூர் மாவட்ட கெசட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது................



 வள்ளலார் வீட்டிற்குள் சென்று கதவைச் சாத்தினார்.

 பின் திறந்து பார்த்தால் வள்ளலாரைக் காணோம். அவர் பதிவாகிவிட்டார் (மறைந்து விட்டார்) என்று புரளியைக் கிளப்பிவிட்டனர் எதிரிகள்.

 ஆனால், அவர் அடித்துக்கொல்லப்பட்டார் என்பதே உண்மை. வள்ளலார் சாதி கூடாது என்றார், மதம் கூடாது என்றார், சாஸ்திரங்களைக் குப்பை என்றார். மதத்தை பேய் என்றார். சடங்குகள் கூடாது என்றார்.

 சாதி ஒழிந்தால் பார்ப்பனரின் உயர்வு ஒழியும், சடங்கு ஒழிந்தால் பார்ப்பனரின் வருவாய் ஒழியும். தங்களின் உயர்வு,வருவாய் இவற்றைப் பாதிக்கும் படி வள்ளலாரின் பணி இருந்ததால்
ஆத்திரமடைந்த பார்ப்பனர்கள் அவரை ஒழித்துக் கட்டத்திட்டமிட்டு கருங்குழியிலிருந்து மேட்டுக்குப்பத்திற்கு நடந்து சென்றபோது அடித்துக் கொன்று புதைத்துவிட்டு பதிவடைந்து விட்டார் என்றுகூறி மக்களை ஏமாற்றினர்.

 உயிர் நேயம் வளர்த்தார். வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார். பசித்தவயிற்றிற்கு உணவளிக்க சத்திய தருமச்சாலை கண்டார்.

 அவர் ஏற்றிவைத்த அடுப்பு இன்று வரை அணைக்கப்படாமல் எரிந்து கொண்டிருக்கிறது. பசியென்று வருவோருக்கு அங்கு உணவளிக்கப்படுகிறது.
எனது ஊருக்கு அருகில் உள்ள மருதூர் என்ற ஊரில் தான் வள்ளலார் பிறந்தார். அவர் கருங்குழியில் (வடலூருக்கு அருகில்) தங்கியிருந்தார்.
வள்ளலாரைப் பெரியார் மிகவும் விரும்பிப் போற்றினார். அவர் எழுதிய ஆறாம்திருமுறை அறிவுப் பெட்டகம்.

 சமதர்மக் கொள்கையை உலக அளவில் முதலில் முழங்கியவர் வள்ளலார். அதன்பின்தான் கம்யூனிஸ்ட்டுகள் முழங்கினர்.

 தன் கொள்கை பரவ ஒரு இயக்கம், ஒரு சங்கம், ஒரு கொடி என்று அமைப்பு ரீதியாக முதலில் செயல்பட்டவர் வள்ளலார்.

 வள்ளலார் மிகச்சிறந்த சித்த வைத்தியரும் ஆவார். பல மூலிகைகளை அறிமுகப்படுத்தினார்.

 5.10.15 அன்று வள்ளலார் பிறந்த நாள். வாழ்க வள்ளலார் சமத்துவம்!

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

பெரியாரின் பெருந்தொண்டர் காமராசர்


பெரியார் எனக்கு நண்பர் ஆனால் இந்திக்கு அவர் நண்பர் இல்லையே! நேருவிடம் காமராசர் சொன்னது!

 காமராசரை பெரியார் விட்டுக் கொடுக்கமாட்டார்; பெரியாரும் காமராசரை விட்டுக் கொடுக்கமாட்டார்!

 பெரியார் சொல்வதை செய்கின்றவன் நான் என்று பெருமை பொங்கப் பலமுறை கூறியுள்ளார்.

 இந்தித் திணிக்கப்பட்டபோது, தேசிய கொடி எரிப்புப் போராட்டத்தை பெரியார் அறிவித்தார்.

 அப்போது டில்லி சென்றிருந்த காமரசரிடம் “பெரியார் உங்கள் நண்பர். பின் ஏன் உங்கள் ஆட்சியில் போராட்டம் நடத்துகிறார்?” என்று நேரு கேட்டார்.
”பெரியார் என் நண்பர் தான். ஆனால், இந்திக்கு அவர் நண்பர் இல்லையே! இந்தித்திணிக்கப்படுவதால் எதிக்கிறார் கைவிட்டால் அவரும் போராத்தை கைவிடுவார்” என்றார்.

 அதன்பின் நேருவின் உறுதிமொழிப்படி இந்தித் திணிப்பு இல்லையென்று காமராசர் அறிவிக்க, பெரியார் தேசியக் கொடிப்போராட்ட்த்தை ஒத்திவைத்தார்.

காந்திக்கு முன் ”மகாத்மா” என்று போற்றப்பட்டவர் யார் தெரியுமா?



ஜோதிராவ் பூலே!

 இவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். பார்ப்பன ஆதிக்கத்தை அகற்றி, பார்ப்பனரல்லாதார் உயர அல்லும் பகலும் அரும்பாடுபட்டவர்.

 இந்தவகையில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராய் முதல் குரல் கொடுத்தவர்,
பிற்படித்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காய் முதன் முதல் அமைப்புகளைத் தொடங்கியவர்.

 1868 ல் “சத்திய ஜோதக் சமாஜ்” என்ற அமைப்பினை ஏற்படுத்தி பார்ப்பனர் அல்லதாருக்காகப் பாடுபட்டார்.

 இவரது ஈடு இணையற்ற சேவைக்காக, இவர் “மகாத்மா” என்று அழைக்கப்பட்டார்.

 இவர் மறைவிற்குப்பின் மேற்கண்ட அமைப்பை ஷாகுமகராஜ் தொடர்ந்து நடத்தினார்.

 பார்ப்பனர்கள் பொறியாளராய், மருந்துவராய் வரவிரும்புவது சரியல்ல – காந்தியார் சொன்னார்.

 பார்ப்பனர்கள் குலதர்மப்படி வேதம் தானே ஓதவேண்டும்!

அவர்கள் மற்றத் தொழிலுக்கு ஆசைப்படுவது தவறல்லவா?” என்றார்.

 காந்தி! அதுமட்டுமல்ல அரசியலில் மத்ததைக் கலக்கக் கூடாது என்றார்.
இவ்வாறு சொன்ன சில வாரங்களிலே, பார்ப்பனர் கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்!

இட்டலி எப்படிச் சாப்பிட வேண்டும் தெரியுமா?.



நாம் தற்போது வெள்ளையாக பாலீஸ் செய்யப்பட்ட அரிசி, உளுந்து இவற்றைக்கொண்டு இட்லி செய்கிறோம்.

ஆனால், அது சரியல்ல. முழுமையானை இட்லி பயன் கிடைக்க, கைக்குத்தல் அரிசி + கருப்புத்தோலுடன் உள்ள உளுந்து இரண்டையும் உளற வைத்து தோல் நீக்காமல் கரைத்து சாப்பிடும் இட்லிதான் சத்தான இட்லி.

காலை உணவு ஆவியில் வெந்ததாகவும், 65% கார்போஹைட்ரேட், 20% புரோட்டின் உடையதாக இருக்க வேண்டும். அதற்கு மேற்கண்டவாறு செய்த இட்லியே சிறந்தது.

இட்லி தூளுடன் எண்ணை கலந்து சாப்பிடுவது நல்லதல்ல.

8 மாத குழந்தை முதற்கொண்டு 90 வயதைத் தாண்டிய முதியவர்கள் வரை இட்லி உண்ணலாம். அது நலமும், வளமும் தரும்.

காணக்கிடைக்காத மாமனிதர் காமராசர்!

காணக்கிடைக்காத மாமனிதர் காமராசர்!


 

 பெரியார் சொல்கிறார். அதைநான் செய்கிறேன்!
 

பெரியார் இல்லை என்றால் நமக்கெல்லாம் முன்னேற்றம் ஏது? - காமராசர்

தமிழன் வீடு என்றால் பெரியார் படமும், காமராசர் படமும் இருக்க வேண்டும் – நெ.து.சுந்தரவடிவேல் (முன்னாள் துணைவேந்தர் சென்னைப் பல்கலைக் கழகம்)

காமராசர்:

ஏழை கிராம மக்கள் ஏற்றம் பெறவேண்டும்! என்று உழைத்தவர்.

இன்றைக்குத் தமிழகத்திலிருக்கிற அணைக்கட்டுகள், தொழிற்சாலைகள், கல்விக் கூடங்கள் பலவற்றை அமைத்தவர்.

இராஜகோபாலாச்சாரி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தவர்.

மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி ஆகியவற்றிற்கு மாணவர் சேர்க்கப்பட, நேர்முகத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 150 ஆக இருந்ததை இராஜாஜி 50 மதிப்பெண்ணாகக் குறைக்க அதை மீண்டும் 150 ஆக உயர்த்தினார் காமராசர்.

எங்கிருந்தாலும், யாரைச் சந்தித்தாலும் ஏழைகளைப் பற்றியே பேசினார், சிந்தித்தார், செயல்பட்டார்!

எடுத்துக்காட்டாக,

சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராய் இருந்தார் நெ.து. சுந்தரவடிவேலு. பெரியாரிடமும், காமராசரிடமும் பேரன்பும், பெரும் மதிப்பும் கொண்டவர். புதுடில்லி விமான நிலையத்தில் அவர் நின்று கொண்டிருந்தபோது, காமராசரும் அங்குவர, அவருடன் ஏராளமானவர்கள் வந்து காமராசருக்கு மரியாதைத் தந்தனர்.

அந்தக் கூட்டத்திலும் தூரத்தில் நின்ற நெ.து.சுந்தரவடிவேலு அவர்களைப் பார்த்துவிட்டு, அவரை நோக்கி வந்து,

”டில்லிக்கு எப்பவந்தீங்க!” என்று விசாரித்தார் காமராசர்.

நே.து.சு. வணங்கிவிட்டு விவரம் சொன்னார். காமராசர் மீண்டும் கூட்டத்தை நோக்கிச் சென்றுவிட்டார்.
 

 விமானம் புறப்படத்தயாரானது. காமராசர் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார். நெ.து.சு. விமானத்தின் பின் பகுதியில் அமர்ந்திருந்தார். விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில் காமராசர் பின்பகுதியில் கண்ணைச் செலுத்தித்தேடிவிட்டு, இருக்கையிலிருந்து எழுந்து நெ.து.சு. அமந்திருக்கும் இடம் நோக்கிச் சென்றார்.

நெ.து.சு. எழுந்து நிற்க, அவரை அமரச்செய்து, அவர் அருகில் காமராசர் அமர்ந்து கொண்டார்.
தமிழ்நாட்டின் கல்வித் துறைப்பற்றி அவரிடம் காமராசர் பேசத் தொடங்கினார்.

”கிராமமக்களுக்கு மேல்படிப்பு ரொம்ப சுலபமாக கிடைக்கணும். அதுதான் முக்கியம்.

நகரத்திலிருக்கிறவன் எவ்வளவு செலவானாலும் படிச்சிடுவான். கிராமவாசி எங்கே போவான்! சாதாரண பள்ளிப் படிப்புக்கே அவன் ஆடு, மாடு, கோழியெல்லாம் விற்கவேண்டியிருக்கு....! கிராமபுற ஏழைப்புள்ளங்க மேல் படிப்பு படிக்க ஏற்பாடு செய்யணும்...!” என்று பேசினார்.

நெ.து.சு. அவர்கள், “உங்கள் முயற்சியால், இன்றைக்கு கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் 60% மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள்” என்றார்.

அதற்குக் காமராசர், “அதைத் தானே நாம் விரும்பினோம்; அதுக்குத் தானே இவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஒரு தலைமுறை படித்து மேல வந்துட்டா அப்புறம் அந்தத் தலைமுறையே, அந்த கிராமமே மேல வந்துடும்! என்றார்.

”அய்யா பெரியார் கிட்ட இந்தவிவரத்தைச் சொன்னேன். அவருமிகுந்த மகிழ்ச்சியோடு, “இவ்வளவுக்கும் காரணம் காமராசர் அய்யாதான். அவருக்குத்தான் தமிழன் கடன் பட்டிருக்கான். அவர் மட்டும் இல்லான்னா 1952 லேயே நம்ம தலைமுறையையே இராஜகோபாலச்சாரியார் குழித்தோண்டி புதைத்திருப்பார்” என்று பெரியார் சொன்னதைக் கூறினார் நெ.து.சு.

உடனே காமராசர், “அது எப்படின்னேன்? எல்லாம் பெரியார் அய்யாவாலேதான் நடக்குது! அவர் சொல்றார் நாம செய்றோம்...! காரணகர்த்தா அவர்தானே! 1952ல் வந்த பிரச்சினை” அய்யாயிரம் வருஷமா இருக்கிற தாச்சே...! கடவுள் பேராலும், மதத்து பேராலும் நம்ம ஒடுக்கிவைச்சுட்டானே...! இதைப்பத்தியாரு கவலைப்பட்டா...?

பெரியார் ஒருத்தர் தானே தலையில எடுத்துப் போட்டிட்டு பண்ணிட்டிருக்கார். அவர்மட்டுமில்லன்னா நம்ம புள்ளைங்க கதி என்னாயிருக்கும்?

கோவணங்கட்டி ஏர் ஓட்டினவர்கள், கலக்டரா, செக்ரட்டரியா. ஒக்காந்திருக்க யார் காரணம்! பெரியார் தானே...!

நம் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெரியார் சொல்றதை செய்யுறோம்...!

பெரியார் எந்த அதிகாரமும் இல்லாமலே எவ்வளவு பெரியகாரியத்தையெல்லாம் நம்மக்களுக்காச் செய்கிறார்! “என்று உணர்வு பொங்கக் கூறினார் காமராசர். தமிழன் வீடு என்றால் அங்கு பெரியார் படமும் காமராசர் படமும் இருக்க வேண்டும், என்றார் நெ.து.சு!

வாழ்க பெரியார்! வாழ்க காமராசர்!

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

காந்தி சொன்ன நியாயம்............



பார்ப்பனர்கள் பொறியாளராய், மருத்துவராய் வரவிரும்புவது சரியல்ல - காந்தியார் சொன்னார்...

பார்ப்பனர்கள் குலதர்மப்படி வேதம் தானே ஓதவேண்டும்! அவர்கள் மற்றத்தொழிலுக்கு ஆசைப்படுவது தவறல்லவா?” என்றார் காந்தி!

அதுமட்டுமல்ல அரசியலில் மதத்தைக்கலக்ககூடாது என்றார்.

இவ்வாறு சொன்ன சில வாரங்களிலே பார்ப்பனர் கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்!

Thursday, October 1, 2015

குழந்தை பெற உடலுறவு கொள்ள வேண்டிய நாள்கள்


 

 மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 நாள்களில் உடலுறவு கொண்டால் மட்டுமே குழந்தை பிறக்கும். இவையே கருத்தரிப்பிற்கு உரிய நாள்கள்.

 திருமணம் முடிந்து நான்காண்டுகளாவது குழந்தை பெறாது சுமையின்றி மகிழ்வாக வாழ்ந்து பிறகு பெற்றுக் கொள்வது வாழ்வை மகிழ்வாக்குவதற்கான வழி. கணவன் மனைவி இடையே ஈர்ப்பு குறையாமலிருக்க இது உதவும்.

 ஆனால், சில ஆண்கள் தன் ஆண்மையை உலகுக்குக் காட்ட உடனே பெற எண்ணி ஓராண்டிலே குழந்தை பெற்றுக் கொள்வர்.

 சிலருக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறப்பதில்லை.

குழந்தை பிறக்காததற்கு பல காரணங்கள் உண்டு. ஆண்களின் விந்தில், உயிரணு இல்லாமல் இருத்தல் அல்லது உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாய் இருத்தல். பெண்ணின் கருக்குழாயில் அடைப்பு அல்லது கருப்பை பாதிப்பு.

 பொதுவாக, குழந்தை இல்லை யென்றதும் பெண்தான் காரணம் என்று ஆண் மறுமணம் செய்து கொள்கிறான். இது தப்பு மட்டுமல்ல குற்றமும் ஆகும்.

 குழந்தை இன்மைக்கு பெண்ணைக் காட்டிலும் ஆணே பெரும்பாலும் காரணம். எனவே, இருவரும் சோதனை செய்து யாரிடம் குறை என்று கண்டு அதைச் சரி செய்ய வேண்டும். பெரும்பாலும் சரி செய்துவிட முடியும். அந்த அளவிற்கு மருத்துவம் வளர்ந்துள்ளது.

 குழந்தை பெற உரிய நாட்களில் உடலுறவு கொள்ளாமையும் குழந்தையின்மைக்கு ஒரு காரணம். எனவே, அந்த நாள்களை அறிந்து உடலுறவு கொள்ள வேண்டும்.

 மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 ஆகிய மூன்று நாள்கள் உடலுறவு கொண்டால் குழந்தை பிறக்கும். அதிலும் குறிப்பாக 14, 15 ஆகிய இரு நாள்களும் மிகச் சரியான நாள்கள். காரணம் 14, 15ஆம் நாள்களில்தான் பெண்ணின் சினையணு கருவுற தயார்நிலையில் இருக்கும்.

 இந்த நாள்களுக்கு முன்னோ பின்னோ உடலுறவு கொள்வதால் குழந்தை பிறக்காது. இந்த உண்மை தெரியாததால் குழந்தை பிறப்புத் தள்ளிப் போகிறது.
குழந்தை வேண்டாம் என்பவர்கள் மாத விலக்கு வந்தபின் 11, 12, 13, 14, 15 ஆகிய நாள்களில் உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

 14, 15ஆவது நாள்கள்தான் உரிய நாள்கள் என்றாலும், 11, 12, 13 நாள்களில் உடலுறவு கொள்ளும்போது வெளியேறிய விந்து பெண்ணுருப்பில் ஓரிரு நாள்கள் உயிர்வாழும். அதிலுள்ள உயிரணு மூலம் குழந்தை பெற வாய்ப்பு வரும். அதனால், 11, 12, 13 ஆகிய நாள்களும் விலக்கப்பட வேண்டும்.

 பருவமடைந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இதை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

 இந்த விவரம் அறிந்திருந்தால் தேவையில்லாமல் பெண் கருவுறவும், கருக்கலைப்புச் செய்து உடல் பாதிக்கவோ வேண்டிய நிலை வராது!

தினமணி பெற்ற இலஞ்சம் எவ்வளவு?......



 மதிகெட்ட மதியின் கார்ட்டூன்!
தினமணி - 30-09-2015......

 இலஞ்சத்தை ஒழிக்க பிள்ளையாருக்கே 223 தேங்காய் இலஞ்சம் தருவதாய் போடுகிறாயே

 இதுதான் மதிநுட்பமா?

 அதுசரி ப.சிதம்பரம் சார்ந்த ஊழல்பற்றி தினம் கார்ட்டூன் போடுகிறாயே!
ஜெயலலிதா ஊழல் சார்ந்து ஒரு கார்ட்டூனும் போடவில்லையே!
அதற்கு தினமணி பெற்ற இலஞ்சம் எவ்வளவு?

 உமது இலஞ்ச ஒழிப்பு நாடகமும் நடுநிலையும் நன்றாக புரிகிறது.

வாழைப்பழம் காலையில் சாப்பிடுவதே சரி



 மலச்சிக்கல் நீங்க வாழைப்பழம் சாப்பிடுவார்கள். இரவு உணவுக்குப் பின் வாழைப்பழத்தைச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இது அறியாமை. இது சரியல்ல.

 வாழைப்பழம் எளிதில் செரிக்காது. செரிக்க அதிகநேரமாகும். வாழைப்பழம் சாப்பிட்ட 24 மணி நேரத்திற்குப்பிறகே அது மலத்தை விலக்கு வெளித்தள்ளும்.
அப்படியானால் முதல்நாள் காலையிலே வாழைப்பழத்தைச் சாப்பிட வேண்டும். அது மறுநாள் காலை மலத்தை எளிமையாய்த் தள்ளும்.

நம் நாட்டு ஊலிகைகள் நம் உரிமையில் உள்ளனவா?


நம் நாட்டு மூலிகைகளை அயல்நாடுகள் உரிமை கொண்டாடின. ஆனால் நமது அரசு TKDL (Traditional Knowledge Digital Library) என்ற நடவடிக்கை மூலம் நம் உரிமைகளை பதிவு செய்துள்ளோம்.

 மத்திய தொழில் நுட்ப நிறுவனமானது இந்தியாவில் இருக்கக் கூடிய அனைத்து பாரம்பரிய மருத்துவத்தையும் பதிவு செய்துள்ளது.
எனவே, இனி எந்த அயல்நாட்டாரும் நம் மூலிகைகளை “பேட்டர்ன்” செய்ய முடியாது.

 ரூ 6000கோடி செலவிட்டு நம் இந்திய அரசு நம் உரிமையை காத்துள்ளது.
மஞ்சள், பாசுமதி, வேப்பிலை இம்மூன்றையும் நம்மிடமிருந்து பறிக்க அயல்நாட்டார் முயன்றபோது, நம் அரசுமுயன்று வேப்பிலையையும் மஞ்சலையும் மீட்டு நமக்குரியதாக உறுதி செய்தது.

 ஆனால பாசுமதி அரிசியை மட்டும் நம்மால் மீட்கப்பட முடியாமல் போனது.

ஈழ விடுதலையை இறைவன் தருவாரா?.

ஈழ விடுதலையை இறைவன் தருவாரா?......

 விடுதலை போராட்ட வரலாற்றை எழுதுபவர் அதை நீர்த்து போகச் செய்யுமாறு முடிக்கலாமா?

 எழுத்தாளர் கா.அய்யநாதனுக்கு கேள்வி?


 .........ஈழம் அமையும்..........

 இலங்கைத் தமிழர் மண். அங்கு வந்தேறியவர்கள் சிங்களர்கள் என்ற வரலாற்று உண்மையை மாற்றி,

 இலங்கைத் தீவு பவுத்த மதத்தைப் பின்பற்றக்கூடிய, சிங்கள மொழி பேசும் மக்களுக்கு உரியது; இத்தீவில் வாழும் மற்ற இனங்கள் எதுவாயினும் அவர்கள் இம்மண்ணுக்கு வாழ வந்தவர்கள்; அவர்கள் யாரும் இலங்கைத் தீவைச் சொந்தம் கொண்டாட முடியாது என்கின்றனர் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள்.

 இதனால், மண்ணின் உரிமையாளரான தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களானார்கள். அவர்கள் மொழியும் அப்படியே ஆனது.

 இதன் விளைவாய், தனி நாடு அமைந்தால் மட்டுமே தமிழர்கள் மானத்துடனும், உரிமையுடனும் அமைதியாய் வாழ முடியும் என்ற உறுதியான முடிவிற்கு வந்து அதற்காகப் போரிட்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் தலைமையில் அப்போர் நடத்தப்பட்டது.

 தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து 2008இல் உச்சக் கட்டத்திற்குச் சென்று, கிளிநொச்சி இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

 போரினால் பின்னோக்கி இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான தமிழர்கள் முல்லைத்தீவில் குவிந்தனர். பாதுகாப்பு வளையம் என்று தமிழர்களை ஏமாற்றிய சிங்கள அரசு தமிழர்களை ஒரே இடத்திற்குக் கொண்டு வந்தது.
நம்பி வந்து குவிந்த தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக குண்டுகளை வீசிக் கொன்றது. போரை நிறுத்தச் சென்ற இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இராணுவ நடவடிக்கை மூலம் சிக்கல் தீரும் என்று இலங்கை இராணுவத்திற்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டு வந்துவிட்டார். அதன் பின் போர் தீவிரமானது. பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்த மக்களும் கொத்துக் குண்டுகள் வீசிக் கொல்லப்பட்டனர். தமிழினம் அழித்தொழிக்கப்பட்டது.
இப்படிப்பட்ட ஒரு இன அழிப்பு நிகழ்ந்தும் மேற்கத்திய வல்லரசுகள் வாய் திறவாமல், கண்டிக்காமல் இருந்தது ஏன்? இந்தியா இப்போரை ஆதரித்தது ஏன்? அது நியாயமா? இந்த முடிவு எடுக்கப்படுமுன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதா?

 இந்தியா உட்பட எல்லா நாடுகளும் புவி சார் நலன் அயலுறவு சிக்கல் என்ற அடிப்படையிலே இலங்கைப் பிரச்சினையை அணுகி, அதை மேலும் சிக்கலாக்கி, ஒட்டுமொத்தப் பாதிப்பையும் தமிழர் மீதுத் தள்ளி வரும் நிலையில்,

 இலங்கையரசின் குற்ற நடவடிக்கைகளை உலகுக்குக் காட்டி, வாழ்வித்து வாழப் போகின்றனவா? வீழ்வித்து வீழப் போகின்றனவா? உலக நாடுகள்? என்ற கேள்வியை வைக்கும் இந்நூலாசிரியர், இறைவன் தண்டிப்பான் அதன் மூலம் சிங்களர்க்குத் தண்டனை கிடைக்கும் என்று தனது கடவுள் நம்பிக்கையை வலியத் திணித்து, தீர்வை திசைமாற்றி நீர்த்துப் போகச் செய்துவிட்டார்.

 இத்தனை லட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது வராத கடவுள், வந்துதவுவான் என்பது நொந்த உள்ளத்தில் செந்தழல் சொருகுவதாய் உள்ளது.
ஈழம் அமையும் என்ற இந்நூலின் தலைப்பைப் பார்த்து ஆவலுடன் படித்து முடித்தால், ஈழம் மலர்வது இறைவன் கையில் என்று முடித்து நீர்த்துப் போகச் செய்துவிட்டார்.

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan