அரசியல்

Saturday, April 28, 2018

ஆரிய பார்ப்பனர் செய்யும் அயோக்கியத்தனத்திற்கு ஆதாரம் இது!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 75ஆவது பிறந்த நாள் நிகழ்வுக்காக அவரது வாழ்விணையர் மோகனாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட உண்மையான புகைப்படம் இதோ. (1)Image may contain: 2 people, people smiling, people standing, night and text
இந்தப் புகைப்படத்தில் உள்ள மோகனா அம்மையாரின் நெற்றியில் பொட்டு வைத்து, புகைப்படத்தில் மோசடி செய்து, அந்தணர் குரல் என்ற இதழில் (பிப்ரவரி 2018) இப்படியொரு படத்தை வெளியிட்டு பெண்களுக்கு பொட்டு வேண்டாம் எனும் வீரமணி தன் மனைவிக்கு பொட்டு வைத்து அழகு பார்க்கிறார். இதுதான் அவரது பகுத்தறிவு என்று எழுதியுள்ளார்.(2)
Image may contain: 2 people, people smiling, text

அட அயோக்கிய மோசடி ஆரிய பார்ப்பனர்களே, உங்கள் பிழைப்பே பித்தலாட்டம், மோசடியில்தான் என்பதற்கு இது ஓர் சரியான சான்று.
மோகனா அம்மையார் எப்போது பொட்டு வைத்துக்கொண்டதில்லை. ஆசிரியரின் 75ஆவது பிறந்த நாளையொட்டி எடுக்கப்பட்ட படம் என்பதற்காக தோழர்கள் அவருக்கு பூ வைத்து அழகு பார்த்தனர். மற்றபடி அவர் எந்த நாளும் பூ வைத்துக் கொண்டவர் அல்லர். தாலியும் அணியாதவர். தாலியில்லாமல் திருமணம் செய்து கொண்டவர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் குடும்பம் எப்படிப்பட்ட புரட்சிக் குடும்பம் என்பது தெரியுமா? அக்குடும்பத்தில் எல்லோருமே சாதி மறுப்பு, மத மறுப்பு, ஏன் வேற்று மொழிக்காரர்கள்கூட குடும்ப உறவாக உள்ள சீர்திருத்தக் குடும்பம்.
அப்பபடிப்பட்ட ஒரு பகுத்தறிவு வாழ்விற்கு அடையாளமான ஆசிரியரையும் அவரது வாழ்விணையரையும், புகைப்படத்தில் மோசடி செய்து பொய்யான தகவலைப் பரப்பும் உங்களுக்கெல்லாம் சூடு, சொரணை, நேர்மை, மனச்சான்று என்று எதுவுமே கிடையாதா?
அந்தணர் என்று உங்களை அழைத்துக் கொள்கிறீர்களே அதுவே எவ்வளவு பெரிய மோசடி!
ஆரிய பார்ப்பான் அந்தணர் என்று யார் சொன்னது? நீங்களே மோசடியாக அழைத்துக் கொள்கிறீர்கள்.
அந்தணர் என்பது தமிழ்ச் சான்றோர்க்கு உரியது. அறநெறி பிறழா தமிழ்த் தொண்டர்களுக்கு உரியது. தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் ஆதாரம் உண்டு.
அப்படியிருக்க உங்களைப் போய் அந்தணர் என்று அழைத்துக் கொள்வது பித்தலாட்டம் அல்லவா?
ஆக, மோசடி, பித்தலாட்டம், அயோக்கியத்தனம் இதுவே உங்கள் மூலதனம்!
நீங்கள் எங்களிடமே உங்கள் வேலையைக் காட்டுகிறீர்களா?
நாங்கள் எழுத ஆரம்பித்தால், நாறி விடும்! எச்சரிக்கை!

Friday, April 20, 2018

தமிழக மக்கள் காறித் துப்பும் எச்சிலில் மிதக்கும் எச்சில் இராஜா.




ஒரு பச்சிளம் சிறுமி பலாத்காரமாய் வல்லுறவுக் கொண்டு சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் பொய்யான தகவலைக் கூறி ஆய்வு நடத்துகிறான் இந்த அயோக்கியன்.

இந்த ஈனப்பிறவி தமிழக மக்கள் காறித் துப்பும் எச்சிலில் மிதக்கும் எச்சில் இராஜா.

சூடு, சொரணை, நியாயம், நேர்மை, மனிதநேயம், இரக்கம், கருணை என்று எதுவுமே இவனுக்கு இல்லை. அயோக்கியத்தின் அசல் வடிவம் இவன்.

இவனெல்லாம் தினம்தினம் பேட்டிக் கொடுக்கிறான். அவனை இன்னும் வெளியில் உலாவவிட்டு வேடிக்கைப் பார்ப்பது இந்த நாட்டிற்கு அவலம், அசிங்கம்! இவன் வாயைத் திறந்தாலே பொய், பித்தலாட்டம்.

”கதவே இல்லாத கோயிலில் 10 நாள் எப்படி சிறுமியை அடைத்து வைக்கமுடியும்?” என்று ஆராய்ச்சி செய்கிறான் இந்த அயோக்கியன்.

அச்சிறுமியை வன்கொடுமைச் செய்த கொடியக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இவன் இந்தக் கருத்தைப் பதிவிடுகிறான்.

ஆனால், உண்மை என்ன? கோயிலுக்கு கதவு இல்லை என்று இந்த அயோக்கியன் சொல்லுவது தப்பு. அக்கோயிலுக்கு கதவு உண்டு இதோ காவல்துறை தரும் தகவல்:

”விசாரிக்கச் சென்ற போது கோயில் பூட்டப்பட்டிருந்தது. சஞ்சீவ்ராம் ஆசிஃபாவை கோயிலின் உள்ளே ஒரு மேஜைக்கு அடியில் பிளாஸ்ட்டிக் பாய்களைக் கொண்டு மறைத்து வைத்திருந்திருக்கிறார்கள்.

சஞ்சீவ்ராம் மற்றும் 8 பேர்கள் கொண்ட குழு அவளின் கழுத்தைப் பிடித்து தூக்கமாத்திரைகளை உட்கொள்ள வைத்து, சில நாள்கள் அவளை தொடர்ந்து மாறி மாறி கற்பழித்துள்ளனர்.

ஆசிஃபாவின் சிதைக்கப்பட்ட உடல் அந்தக்காட்டு பகுதியில் அதே ஊதா நிற உடையில் ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது.” என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

காவல்துறை கோயில் பூட்டப்பட்டிருந்தது என்கிறது. ஆனால், இந்த அயோக்கியன் கோயிலுக்கு கதவே இல்லை என்கிறான்! இவனைத் தமிழ்நாட்டை விட்டே விரட்டுவதைத் தவிர வேறுவழியில்லை!

தமிழர்கள் முடிவெடுத்தாக வேண்டும். தமிழர்கள் யார் என்பதை அவனுக்கு உணர்த்தியாக வேண்டும்!

Thursday, April 19, 2018

மோசடியின் மொத்த வடிவம் எழுத்தாளர் ஜெயமோகன்!

மோசடியின் மொத்த வடிவம் எழுத்தாளர் ஜெயமோகன்!

தமிழர்கள் இவரிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்!

Image may contain: 1 person

பத்துப் பொய்களை எழுதும்போது இடையிடையே ஓரிரண்டு உண்மைகளை லாவகமாகச் செருகிவிடுவார் ஜெயமோகன் என்று யுவகிருஷ்ணா சொல்வது 100க்கு 100 உண்மை!

நல்லவன்போல் நடிப்பான் ஞானத் தங்கமே! என்ற வரிக்கு உரியவர்.

திராவிட ஆரிய எதிர்நிலையை நீர்த்துப்போகச் செய்ய தமிழர் X வடுகர் மோதலை உருவாக்குகிறார்.

சாதி இந்துக்கள் X தலித் மோதலை உருவாக்குகிறார்.

திராவிடம் என்பதை நீக்கிவிட்டால் ஆரியத்தின் எதிர்நிலையை அகற்றி விடலாம் என்று முயல்பவர்.

ஆக, ஆரியர்களுக்கு சேவகம் செய்வதே ஜெயமோகனின், ஜென்ம கர்மம். எனவே, ஜெயமோகன் எழுத்துக்களை எச்சரிக்கையுடன் படிக்க வேண்டும்! அல்லது தவிர்க்க வேண்டும்! 

காரணம், எல்லாமே ஏமாற்று, மோசடி, வஞ்சகம், சூழ்ச்சி, சூது, பித்தலாட்டம்.
ஜெயமோகனுக்கு ஒரு பகிரங்கச் சவால்!

இந்த அக்கப்போரு, அவதூரு ஜெயமோகனை பெரிய எழுத்தாளர் என்று போற்றித் திரியும் அரைவேக்காடுகள், இங்கு உண்டு! அந்த அரை வேக்காடுகளுக்கும், ஜெயமோகனுக்கும் ஒரு பகிரங்க சவால் விடுகிறேன்!

தந்தை பெரியார் வைக்கம் வீரர் அல்ல என்று ஜெயமோகன் ஒரு கட்டுரை எழுதினார்.

அதை மறுத்து, பெரியார்தான் வைக்கம் வீரர் என்று நான் மறுப்பு எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜெயமோகனுக்கும் அனுப்பினேன். இன்றுவரை பதில் இல்லை.
என்னுடைய கட்டுரை இணையத்தில் உள்ளது. ஜெயமோகன் கட்டுரையும் இணையத்தில் உள்ளது.

இந்த ஜெயமோகன் உண்மையில் ஆதாரபூர்வமாய் எழுதுகின்ற ஆளாய் இருந்தால், எனது மறுப்பு கட்டுரைக்கு உடனே பதில் எழுத வேண்டும். இல்லையேல் தான் எழுதியது தப்பு என்று ஒப்ப வேண்டும். இரண்டும் செய்யவில்லையென்றால் ஜெயமோகன் முகமூடி கிழியும், வெளிப்படும்! 

மோசடியின் மொத்த வடிவம் என்பதும் உறுதியாகும்!

இந்த மோசடிப் பேர்வழியின் மோசடி எழுத்துகளை தொடர்ந்து தோலுரிப்போம்! 

உண்மை உருவத்தை உலகுக்குக் காட்டுவோம் வாருங்கள்!


Wednesday, April 18, 2018

இதற்குப் பிறகுமா கடவுளை நம்புகிறீர்கள்?



ஜனவரி 10ஆம் தேதி மேய்ச்சல் பகுதியில் குதிரையைத் தேடிக்கொண்டிருந்த ஆசிபாவை மரங்களடர்ந்த பகுதிக்கு தூக்கிச்சென்று, கோயிலுக்குள் வைத்து வாயைப் பொத்தி... மாறிமாறி வன்புணர்ச்சி செய்து, கதறக்கதற் சிதைத்து, கொடுமைப்படுத்தியுள்ளனர். கோவிலின் நிர்வாகி ஒருவனும் இதற்கு உடந்தை. கோவிலில் கடவுளின் கண்ணெதிரே அத்தனையும் நடந்திருக்கின்றன.

எட்டு மனித மிருகங்கள் இந்த வன்புண

ர்ச்சியில் பங்கு பெற்றிருக்கின்றன. மன்னு, சான்ஜியின் உறவினன், கோவில் நிர்வாகி, பலாத்காரம் பண்ணவே உ.பி.யிலிருந்து வரவழைக்கப்பட்ட சான்ஜிராம் மகன் விஷால், விசாரணை அதிகாரி தீபக் அத்தனை பேரும் மருந்தின் துணையுடன் மயக்கத்தில் இருந்த ஆசிபாவை திரும்ப திரும்ப சீரழித்திருக்கின்றனர்.

கோயிலிலே ஏழு நாள்கள் அடைத்து வைத்து எட்டு பேர் அச்சிறுமியை சித்திரவதை செய்தபோதும் தடுக்க கடவுள் வந்ததா?

இப்படிப்பட்ட கொடுமை தன் கண்ணெதிரே நடந்தும் கடவுள் தடுக்கவில்லை என்பதிலிருந்தே கடவுள் என்பது இல்லை என்பது தெரியவில்லையா? கடவுளும் கோயிலும் கயவர்களின் பாசறை ஆதிக்கவாதிகளின் ஆயுதம் என்பது புரியவில்லையா?

இதற்குப் பின்னும் கடவுளை நம்புகிறார்கள் என்றால் அவர்களைகூட அடிமுட்டாள் யார் இருக்க முடியும்? சிந்தியுங்கள்!

இந்தக் கடவுளையும், மதத்தையும் காட்டி ஆட்சிக்கு வந்த இத்தனை அநியாயங்களையும், அயோக்கியத்தனங்களையும் செய்யும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஆட்சியை இன்னமும் ஆதரிக்கப் போகிறிர்களா? இவர்களை விரட்டிஅடியுங்கள்! அதுதான் ஒரே தீர்வு!

=====

Monday, April 16, 2018

மருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும்போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை

அனைவரும் அவசியம் படியுங்கள்

அனைவரும் அவசியம் பகிருங்கள்!

மருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும்போது

கட்டாயம் பின்பற்ற வேண்டியவை
No automatic alt text available.

=======================

1. குழந்தைகளுக்குக் காய்ச்சல் வந்தால், பெற்றோர் மருந்து கொடுக்கும்போது, உடனே குணமாகிவிட வேண்டும் என்று அடிக்கடி கொடுப்பர். அது தப்பு. 4 மணி நேரத்திற்கு ஒருமுறைதான், ஒரு நாளைக்க நான்க அல்லது 5 முறைதான் கொடுக்க வேண்டும். அல்லது மருத்தவர் கூறியபடி கொடுக்க வேண்டும்.

2. சாப்பாட்டுக்கு முன் சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டிற்கு முன்னும், பின் சாப்பிட வேண்டியதை பின்புந்தான் சாப்பிட வேண்டும்.

எடுத்துக்காட்டாக ஸ்டீராய்டு, வலி நிவாரண மாத்திரைகள் வெறும் வயிற்றுல் சாப்பிடக் கூடாது. சாப்பிட்ட பின்தான் சாப்பிட வேண்டும்.

வாந்தி, வயிற்று எரிச்சல் போன்றவற்றிற்குச் சாப்பிடும் மருந்துகள் வெறும் வயிற்றில்தான் (சாப்பாட்டிற்கு அரை மணி நேரம் முன்பு) சாப்பிட வேண்டும்.

வீக்கங்கள் வடிய சாப்பிடும் மாத்திரைகளை சாப்பாட்டிற்கு முன்பு சாப்பிட்டால்தான் வேலை செய்யும்.

3. பக்க விளைவு ஏற்படுத்தும் மாத்திரைகளுடன் அதற்கு நிவாரணமாக உரிய துணை மருந்துகளை மருத்துவர் கொடப்பர். அவற்றையும் சேர்த்தே சாப்பிட வேண்டும்.

4. ஆஸ்துமாவிற்கு மருந்து சாப்பிடும்போது, வயிற்றெரிச்சலுக்கான வலிக்கான மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது.

5. பாலூட்டும் தாய்மார்கள் வலி நிவாரண மாத்திரைகள், தூக்க மாத்திரைகள் சாப்பிடக் கூடாது.

6. வலிப்பு நோய் உள்ளவர்கள் ஆன்ட்டி பயாட்டிக் மாத்திரைகள் எடுக்கக் கூடாது. கட்டாயம் ஏற்படின் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர் அறிவுரைப்படி செய்ய வேண்டும்.

7. எதிர் மருந்துகளை ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாத. பல நோய்களுக்கு மருந்து சாப்பிடுவோர் இதில் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவர் எப்படிச் சாப்பிடச் சொல்கிறாரே அப்படிதான் ஒன்றுக்கு மேற்பட்ட மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிடும்போது சாப்பிட வேண்டும்

8. மருந்துகளை காலாவதி காலத்தை கவனமாக பார்த்து சாப்பிட வேண்டும். காலாவதியான மருந்து நஞ்சுக்குச் சமம். அதை சாப்பிடக் கூடாது.

9. ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகள் எத்தனை மாத்திரை (எத்தனை வேளை சாப்பிட வேண்டுமோ அதைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். நோய் குணமாகிவிட்டது என்பதால் மாத்திரையை நிறுத்தக் கூடாது. பாதியில் நிறுத்தினால், அடுத்த முறை அதே ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரை வேலை செய்யாது (பயன் தராது).

10. ஒவ்வாமை மருந்துகளை உடன் மருத்துவரிடம் சொல்லி தீர்வு காணவேண்டும். வேறு சரியான மருந்தைத் தேர்வு செய்து கொள்ளவேண்டும். ஒரு மருத்துவரிடமிருந்து வேறு மருத்துவரிடம் செல்லும்போது பழைய மருந்துச் சீட்டைக் கட்டாயம் காட்ட வேண்டும். ஒரு நோய்க்கு ஒருவர் சாப்பிடும் மருந்து தனக்கும் இன்னொருவரும் சாப்பிடலாம் சாப்பிடக் கூடாது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தையே ஒவ்வொருவரும் சாப்பிட வேண்டும்.

- மஞ்சை வசந்தன்

ஓர் அன்பான வேண்டுகோள்!


Image may contain: bridge, outdoor and water
தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் என்னும் தலைப்பில் நீங்கள் பதிவிட விரும்பும் சாதனைகளை ஒவ்வொருவரும் இங்கு பதிவிட வேண்டுகிறேன்.
இன்று முதல் பதிவாக இப்பதிவைப் பதிவிடுகிறேன்! இப்பதிவை முகநூல், வாட்ஸ்அப், டிவிட்டரில் பகிரவும் வேண்டுகிறேன்!'
திராவிட ஆட்சியில் அணைகளே கட்டப்படவில்லை என்பது உண்மையா?
============================
தமிழ்நாட்டில் பெரிய, சிறிய அணைகள் 85 உள்ளன. இதில் காங்கிரஸ் காலத்தில் கட்டப்பட்ட அணைகள் 10. மற்றவை (சுமார் 75 அணைகள் திராவிட ஆட்சியில் குறிப்பாக தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டவைதான்.)
எடுத்துக்காட்டாக இங்கு 4 அணைகள் கட்டப்பட்டுள்ளன. இப்போது சொல்லுங்கள். தி.மு.க. மீது எதிரிகள் கூறும் குற்றச்சாட்டு எவ்வளவு மோசடிப் பிரச்சாரமா? இல்லையா?
கலைஞரின் கடைசியாக இரண்டு ஐந்தாண்டுகால ஆட்சியில் குறிப்பிடத்தக்கக் குறைகள் இல்லை.
இனி ஸ்டாலின் முதல்வரானால் அறவே குற்றங்களைக் கலைவார்; தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்று உறுதியாக நம்பலாம்.
எனவே, மதவாத பி.ஜே.பி தமிழகத்தில் கால் பதிப்பதைத் தடுக்கவும், அவர்களது பினாமிகள்வலுவடைவதை தகர்க்கவும் உண்மைகளை நாம் ஊடகங்கள் வழி நாள்தோறும் இனி கொண்டு செல்ல வேண்டும்.
தி.மு.க.வினர் இனி இதை அன்றாடக் கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும்! மக்கள் உண்மை அறிய இது கட்டாயம்!
=======
#திமுக_ஆட்சியின்_சாதனைகள்
என்ற ஹேஷ்டேக்கில் தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை தோழர்கள் பட்டியலிடலாம்.

பா.ஜ.க. ஊழலற்ற கட்சியா? பா.ஜ.க. கலாச்சாரம் காக்கும் கட்சியா?

பா.ஜ.க. ஊழலற்ற கட்சியா?
பா.ஜ.க. கலாச்சாரம் காக்கும் கட்சியா?
அவர்களின் அயோக்கியத்தனங்கள் இதோ...
=======================
உ.பி.யில் ஆர்.எஸ்.எஸ். சாமியார் முதல்வரான பின் அங்கு நடக்கும் அநியாயங்களுக்கும் அயோக்கியத்தனங்களுக்கும் அளவே இல்லை!
============================
பா.ஜ.க. எம்.எல்.ஏ., குல்தீப் சிங்கும் அவரது சகோதரரும் 17 வயது இளம்பெண்ணை வல்லுறவு செய்துள்ளனர்.
அப்பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, ஆத்திரமடைந்த அந்த எம்.எல்ஏ. அப்பெண்ணின் தந்தையைத் தாக்கியுள்ளார். தாக்கிய அயோக்கிய எம்.எல்.ஏ.வை விட்டுவிட்டு, பெண்ணின் தந்தையை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சிறையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதைவிட அராஜக ஆட்சி உலகில் இருக்க முடியுமா? இப்படி அயோக்கியத்தனமாயும், அடாவடித் தனமாகவும், அநியாயமாகவும் ஆட்சி நடத்தும் பி.ஜே.பி. கட்சியினர் நேர்மையான ஆட்சி பற்றி பேசுவது அதைவிட அயோக்கியத்தனமல்லவா?
பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்த பல பண முதலாளிகள் தொடர்ந்து ஊழலில் சிக்கி உண்மை வெளிவருவது ஒவ்வொரு நாளும் நடக்கிறதே! இவர்கள்தான் உத்தமர்களா?
பண முதலாளிகளுக்கு வங்கிப் பணத்தையெல்லாம் வாரிக் கொடுத்துவிட்டு ஏழைகளை வஞ்சிக்கும் பி.ஜே.பி ஆட்சிதான் நேர்மையான ஆட்சியா? அப்படியிருக்க இவர்கள் நீதி, நேர்மை பற்றி பேசுவதற்கு என்ன யோக்யதையுள்ளது?
இவர்களுக்கெல்லாம் சூடுசொரணையே இருக்காதா? எந்த முகத்தில் நேர்மைபற்றிப் பேசகிறார்கள்! மோடி 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் பேசியபோது என்ன பேசினார் தெரியுமா?
இந்தியாவில் ஏழ்மையைப் போக்குவதே எனது கடமை. ஏழ்மையின் வலியை உணர்ந்தவன் நான்.
ஏனென்றால், ஏழைத்தாயின் மகன் நான். என்னை எதிர்த்து நிற்வர் இளவரசர். அவர் ஏழைகளைப் பார்ப்பதாக இருந்தால் கேமராவுடன்தான் போவார். ஆனால், நான் ரயிலில் பெட்டி பெட்டியாக ஏறி டீ விற்றவன். ஏழ்மையை அனுபவித்தன்.
எனக்க 300 நாடாளுமன்ற உறுப்பினர்களத் தாருங்கள். இந்தியாவின் ஏழ்மையைப் போக்குகிறேன்.
ஆனால், அவர் ஏழைகளை வஞ்சித்து கார்ப்பரேட்டுகளின் கையாளாய் ஆட்சி நடத்துகிறார்! இவர்களை இனியும் ஆள விடலாமா?

Monday, April 2, 2018

திராவிடர் என்ற சொல்லை பெரியார் நுழைத்தாரா?



தமிழர் என்ற சொல்லை வேண்டுமென்றே விலக்கி, திராவிடர் என்ற சொல்லை பெரியார் நுழைத்தார். காரணம் அவர் கன்னடர் என்று சிலர் பெரியார் மீது பழி கூறுகின்றனர்.

இது உண்மையா? அல்லது மோசடிப் பிரச்சாரமா?
ஆதாரங்களுடன் விளக்க விரும்புகிறோம்.

1892இல் ஜான் ரெத்தினம் அவர்கள் திராவிடர் கழகம் என்றே ஓர் அமைப்பைத் தொடங்கினார். பண்டிதர் அயோத்திதாசர் ஆதி திராவிட மகாசன சபை என்ற அமைப்பைத் தொடங்கினார். திராவிட என்ற சொல்லை திரு.ஜான் ரத்தினம் அவர்களும் பண்டிதர் அயோத்திதாசரும் ஒடுக்கப்பட்ட, இம்மண்ணுக்கு உரிமையான மக்களை விளிப்பதற்காகப் பயன்படுத்தினர். பின்பு 1912இல் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் குறியீடாக டாக்டர் நடேசன் அவர்கள், திராவிடர் சங்கம் தொடங்குகிறார். 1916இல் பிட்டி தியாகராயர் அவர்களாலும் டாக்டர் டி.எம்.நாயர் அவர்களாலும் பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்ற தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது. திராவிடன் என்ற பெயரில் இதழும் தொடங்கப்பட்டது. அப்போது காங்கிரசில் இருந்த தந்தை பெரியார் பின்னாளில்,  திராவிடர் என்ற குறியீட்டைப் பயன்படுத்துகிறார்.

1892இல் ஜான்ரெத்தினம் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு முன், கி.மு. முதல் நூற்றாண்டிலே மனுஸ்மிருதி, பத்தாம் அத்தியாயத்தில், 43, 44ஆவது சுலோகத்தில் திராவிட என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.

ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர்கள்... திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள் என்கிறது மனுஸ்மிருதி.

கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் எழுதிய, கல்லாத பேர்களே நல்லவர்கள் என்னும் பாடலில் திராவிடம் என்ற சொல் மொழியைக் குறிக்க ஆளப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தர் திராவிட சிசு என அழைக்கப்பட்டார். இங்கு திராவிடம் என்பது தமிழைக் குறிக்கப் பயன்பட்டது.

1856இல் வெளியிடப்பட்ட கால்டுவெல் என்பவரின் திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar in Dravidian or South Family of Languags)  என்ற நூலிற்குப்பின் திராவிடம் என்ற சொல் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது.

எனவே, திராவிடம் என்ற சொல்லை நீதிக் கட்சியினரோ, பெரியாரோ, திராவிடர் கழகத்தினரோ, திராவிட முன்னேற்றக் கழகத்தினரோ உருவாக்கவில்லை. குறிப்பாக பெரியார் திணித்தார் என்பது தவறு; மோசடி!
அறிஞர் இராம. சுந்தரம் அவர்கள் இது குறித்து, கால்டு வெல்லுக்கு முன்பே, திராவிட என்ற சொல் தென்னிந்தியர்களை, தென்மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்கிறார்.

குமாரிலபட்டர் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) திராவிட பாஷைகள் பற்றிக் குறிப்பிடுகிறார்  (tadyatha dravidadi bhassyam ever.... so in the Dravida and other languages. (. அகத்தியலிங்கம், திராவிட மொழிகள், 22).

கியர்சன்  (Linguistic Survey of India Vol.I) தனக்குத் தெரிந்தமட்டில் அட்சன் (Dr.Hodgson)   என்பவர்தான் திராவிடன் (Dravidan)  என்ற சொல்லை முதன்முதலாகத் தென்னிந்திய மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார்.

உண்மை வரலாறு இப்படியிருக்க பெரியார்தான் திராவிடர் என்ற சொல்லை வலிய, உள்நோக்கத்தோடு நுழைத்தார் என்பது பித்தலாட்ட பிரச்சாரமாகும்.

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் இதுவரையில் இருந்துவரும் போராட்டமெல்லாம் ஆரியர்-திராவிடர் பேராட்டமே ஒழிய, வடமொழி தென்மொழிப் போராட்டமல்லவே! இதற்கு எவ்வளவோ ஆதாரங்கள் காட்டலாமே!

தமிழ் என்பது மொழிப்பெயர். திராவிடர் என்பது இனப்பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்ற தலைப்பில் கூட முடியும். ஆனால் தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது. இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவனாய் இருந்தாலும் அவன் திராவிடர் என்ற தலைப்பில்தான் சேருவான். ஆகையால், திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன் மொழி காரணமாக மட்டுமே தன்னைத் திராவிடனென்று கூறிக்கொள்ள முடியாது. தமிழர் என்றால் பார்ப்பானும் தன்னை தமிழனென்று கெடுக்கப் பார்ப்பான். திராவிடர் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக்கொண்டு நம்முடன் சேர முற்படமாட்டான்...

... தமிழர் என்று பொதுவாக அழைக்கும்போது, இவ்வளவு நிபந்தனை (தடை) உண்டா? ஆகவேதான் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். மற்றபடி திராவிடர் என்பதில் எங்களுக்கு வேறென்ன உள்ளெண்ணம் இருக்க முடியும்?

தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனை பேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த _ நமக்கு மாறுபட்ட கலாச்சாரமுடைய கூட்டத்தை விலக்கவும் வசதி உண்டா? இழிவுக்கும் தாழ்வுக்கும் கட்டுப்பட்டுள்ள மக்களையும், இதற்கு நேர்மாறக _ இவ்விழிவுக்கே காரணமான உயர்ஜாதி மக்களையும் ஒன்றாக்கிக் கொண்டால், அதில் இவ்விழிவு நீங்க வழி ஏற்படுமா? முதலில் இவ்விழிவு நீங்கட்டும்! பிறகு எல்லோரும் ஒன்றாவோம்!
.... சூத்திரர் என்பவர்களுக்குத் திராவிடர் தவிர்த்து வேறு பொருத்தமான பெயர் யாராவது கூறுவார்களானால் அதை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு, என் அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன்.

நீங்கள் கொடுக்கும் பெயரில் மேலே சொன்ன அத்தனை பேரும் ஒன்று சேர வசதி இருக்க வேண்டும். அதில் சூத்திரனில்லாத ஒரு தூசி கூட புகுந்து கொள்ளாமல் தடுக்க ஏதாவது தடையிருக்க வேண்டாமா? என்றார் பெரியார். (மொழியாராய்ச்சி எனும் நூலில் பெரியார் எழுதியதிலிருந்து.)

ஆரிய ஆதிக்கத்தின் விளைவாய், இந்த மண்ணின் பெரும்பான்மை மக்கள் (97% மக்கள்) தாங்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்படுவதை மறுத்து, திராவிடர்கள் என்ற சொல்லால் தங்களை அழைத்து, ஆரிய பார்ப்பனர்களிலிருந்து மாறுபட்டவர்கள் தாங்கள் என்பதைக் காட்டிக்கொள்ள திராவிடர் என்ற சொல்லாட்சியே பொருத்தமாய்ப் பயன்பட்டது.

தமிழர் என்னும்போது தாங்களும் தமிழர்கள்தான் என்று ஆரிய பார்ப்பனர்கள் உள்ளே நுழைந்து இனப் பகுப்பை சிதைத்துவிடுகின்றனர்.

தமிழினத்தின் பரம்பரைப் பகையினமான ஆரிய பார்ப்பனர்களுள் தமிழர்கள் என்றால், இதைவிட இன மோசடியும், இன கட்டின் தகர்ப்பும் வேறு என்ன இருக்க முடியும்?

.பொ.சி. காலத்திலிருந்து சீமான் காலம் வரை ஆரிய பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று உள்ளடக்கி, ஆரியத்திற்கு துணைநிற்கக் கூடியவர்களே திராவிடத்தை எதிர்க்கின்றனர்.

பெரியார் .வே.ரா முதலில் தமிழரைப் பிளவுபடுத்தும் பிராமணர் _ பிராமணர் அல்லாதார் கூச்சலுக்கு முற்றுப் புள்ளி வைக்கட்டும். அப்பொழுதுதான் தமிழகத்தில் தமிழர் அல்லாதாரின் ஆதிக்கத்தை ஒழித்துத் தமிழினத்துக்கு வாழ்வு தேட முடியும் (தமிழன் குரல் அக்டோபர் 1954 இதழில் .பொ.சி.)

ஆக, மலையாளி, கன்னடர், தெலுங்கர்தான் தமிழர்களுக்கு எதிரியே தவிர, ஆரியப் பார்ப்பனர்கள் அல்ல என்பதே இவர்கள் கொள்கை.

திராவிடர் என்பதை விலக்கி தமிழர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ள விரும்புகின்றவர்கள் ஆரிய பார்ப்பனர்களை அறவே விலக்கித் தமிழர்களை கடமைக்கு அணியாக்கிக் காட்ட வழி சொன்னால் அய்யா பெரியார் சொல்வதுபோல அதை அட்டியின்றி ஏற்க நாம் யாராகவுள்ளோம் என்பதை .பொ.சி.  வாரிசுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, பெரியார், தான் கன்னடர் என்பதால் தமிழர் என்ற சொல்லை நீக்கி, திராவிடர் என்ற சொல்லைப் புகுத்தினார் என்ற குற்றச்சாட்டு அற்பத்தனமானது _ அபத்தமானது ஆகும்.

என்னுடைய தாய்மொழி கன்னடமாக இருந்தபோதிலும், அதனை நான் தினசரி பேச்சு வழக்கத்தில் கொண்டிருக்கவில்லை. எல்லா வற்றிற்கும் தமிழ்மொழியைத்தான் பயன்படுத்தி வருகிறேன். எனக்குக் கன்னடத்தைத் தவிர தெலுங்கிலும் கொஞ்சம் பயிற்சி உண்டு. எப்படி என்றால், வியாபார முறையிலும் நண்பர்களின் பழக்கத்தாலுமேயாகும். (விடுதலை 21.5.1959) என்று தன்னைப் பற்றி வெளிப்படையாகப் பேசிய பெரியார், தமிழின், தமிழரின் மேம்பாட்டிற்கு மட்டுமே பாடுபட்டார். அவர் என்றைக்குமே கன்னடர்களுக்காகப் பாடுபட்டதில்லை.