அரசியல்

Monday, August 31, 2015

தினமணியின் நடுநிலை இதுதானா?............


தி.மு.க வும் அ.தி.மு.க வும் சம பலத்துடன் உள்ளன என்றே கருத்துக் கணிப்பு காட்டுகிறது!

ஆனால், தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைளும் திரித்துக் கூறுகின்றன. அ.இ.அ.தி.மு.க.வே அடுத்து ஆட்சி அமைக்கும் என்று தினமணி எழுதியது அயோக்கியத்தனதின் உச்சம் அல்லவா?

அ.தி.மு.க – 34.1%
தி.மு.க – 32.5%
வித்தியாசம் 1.6

ஆக இருகட்சியும் சற்றேறக்குறைய சமநிலையில் உள்ளன. இன்னும் தேர்தலுக்கு 10 மாதங்கள் உள்ளன. பொதுவாக ஆளுங்கட்சிக்கு எதிராகவே மக்கள் மாறுவர். மாற்றம் வேண்டும் என்றும் விரும்புவர். அதன் விளைவு தி.மு.க. விற்கே சாதகமாகும்.

அப்படியிருக்க உள்ளத்தைத் தொட்டு உண்மையைச் சொன்னால் தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்றே கூறவேண்டும்.

ஆனால், உண்மைக்கு எதிராய் ஊடகங்கள் செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. நீங்கள் என்தான் பித்தலாட்டம் செய்தாலும் அடுத்து வரப்போவது தி.மு.க. ஆட்சிதான். சூடுபட்ட திமு.க. தப்பு செய்யாது ஆட்சி நடத்தும் என்று நம்பலாம்!

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

Saturday, August 29, 2015

தமிழ் வழிக்கல்வி குறைந்தது திராவிட ஆட்சியாலா?


எதற்கெடுத்தாலும் திராவிடக்கட்சி களைக் குறை சொல்லும் போக்கு இன்று அதிகமாகிக் கொண்டே செல்கிறது! திராவிடக்கட்சிகளின் ஆட்சியில் குறைகளோ, மக்கள் எதிர்ச் செயல்களோ, ஊழலோ, மோசடிகளோ, கொலை, கொள்ளைகளோ இல்லை என்று வரிந்துக் கட்டிக்கொண்டு வாதம் செய்ய நாம் வரவில்லை.
காரணம், இவையெல்லாம் யார் ஆட்சிக்கு வந்தாலும் இப்போதுள்ள ஆட்சி அமைப்பில் நடந்தே தீரும். காரணம் ஊழலை மக்களே தொடங்கி வைக் கிறார்கள்.
பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப் பதும், இலவசம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதும் இருக்கும் வரை இவை யெல்லாம் இருக்கும். இவற்றிற்காக ஓர் ஆட்சியை, ஓர் அமைப்பைக் குறை சொல்ல வேண்டும் என்றாலும் எல்லாவற்றையும் சொல்லலாம். இதில் நான் உத்தமன் என்பதெல்லாம். உண்மைக்குப் புறம்பான ஏமாற்று வேலை!
ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பி.ஜே.பி. ஓராண்டு ஆட்சியில் எவ்வளவு ஊழல் நடந்துள்ளது! ஆக, யாரும் விதி விலக்கல்ல இதுவே யதார்த்த நிலை. தேர்தலில் நின்று வென்று ஆட்சிக்குவர செலவே இல்லை என்ற நிலைவந்தால் இவை ஒழியும். இல்லையேல் ஒழிய வாய்ப்பே இல்லை.
எனவே, மக்கள் வாக்களிக்கும்போது பணம் வாங்காமல், நேர்மையானவர் களைத் தேர்ந்தெடுத்தால் இவற்றைக் குறைக்கலாம். வாக்கு விகிதாச்சார அடிப்படையில் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகள் ஒதுக்கப்பட்டால் சீர்கேடுகள் பெரும்பாலும் குறையும்.
உண்மை நிலைகள் இப்படியிருக்க, அவற்றைக் கருதாமல், எதற்கெடுத்தாலும் திராவிடக்கட்சிகளே காரணம் என்பது உள்நோக்கத்துடன் கூடிய குற்றச்சாட்டு என்பதில் எந்த அய்யமும் இல்லை. தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், சுயமரியாதைத் திருமணச்சட்டம், அரசின் செயல்பாடுகள் தமிழில், தமிழ் எழுத்துச்சீர்திருத்தம், ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள், குடிசைமாற்று வாரியம், கல்லூரிவரை இலவசக்கல்வி,
கண்ணொளி, ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, அடித்தட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு, உயர்ஜாதி ஆதிக்க ஒழிப்பு, அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகும் உரிமை, பெண்கள் சொத்துரிமை, செம்மொழி, தமிழ்ப்புத்தாண்டு, தமிழ்ப் பல்கலைக் கழகம், கணினித்துறை வளர்ச்சி,
புதிய தொழில்சாலைகள், மேம்பாலங்கள், வேளாண்மைக்கு இலவச மின்சாரம், பேருந்துகள் நாட்டுடைமை சமத்துவ புரங்கள் என்று எத்தனையோ எழுச்சி, வளர்ச்சி, கிளர்ச்சி இத்தமிழகத்தில் திராவிடக் கட்சிகளால் ஏற்பட்டுள்ளன என்பதை உளச்சான்று உள்ள ஒருவரும் மறுக்க மாட்டார்கள்.
இவையெல்லாம் உண்மையாய் இருக்க, திராவிடக்கட்சி ஆட்சியை முடித்துவிட வேண்டும் என்று மும்முரமாக சில அரசியல் கட்சிகள் களம் இறங்க, தங்களுக்கு கையாள்கள் கிடைத்து விட்ட தெம்பில் பார்ப்பனர் களும் அவர்களின் பத்திரிகைகளும் திராவிட கட்சிகளுக்கு எதிராக அவதூறு பரப்புவதை,
திரிபு செய்வதைத் தொழிலாகக் கொண்டு தினந்தோறும் செயல் படுகின்றனர். பெயருக்குப் பின்னால் ஜாதி பெரியாரால் ஒழிக்கப் பட்டதால் தமிழர்கள் அடையாளம் இழந்து விட்டதாக தமிழ்த் தேசிய வாதிகள் கருதி, ஜாதியை போடுவதை தூண்டுகின்ற முயற்சியில் இறங்கியுள் ளனர்.
கேரளாவில், ஆந்திராவில், கர்நா டகாவில் உள்ளதுபோல் ஆண்களும் பெண்களும் ஜாதிபோட வேண்டும் என்று கூறும் பிற்போக்குச் சிந்தனையும் தலைக்காட்டுகிறது.  தமிழ்த்தேசியம் என்ற பெயரில் அரைவேக்காடுகள் தான் அதிகம் ஆர்ப்பரிக்கின்றன.
காவடி தூக்கலாமா? அலகு குத்தலாமா என்று அலைகிறார்கள்! இதுவெல்லாம் தமிழ் தேசியம் அமைக்குமா? தமிழ்த்தேசியம் அமைப்பதற்குரிய செயல்திட்டங்கள் எவரிடம் உள்ளது? எல்லாம் வெற்று முழக்கங்கள்! இல்லை, தமிழ்த்தேசியம் அமைக்க இயலும்,
அதற்கான செயல் திட்டம் எங்களிடம் உள்ளது என்று கூறுகின்றவர்கள் இருப்பின் அதை அறி வியுங்கள், விவாதிப்போம் சரியென்றால் ஒன்று சேர்ந்து முயல்வோம். அதைவிட்டு விட்டு ஒருவரையொருவர் குறைசொல்லி குத்திப் பேசி அலைவது ஒற்றுமையைச் சிதைக்கும், இன எதிரிக்கு வலுசேர்க்கும்!
முருகன் தமிழ்கடவுள் தமிழர்கள் ஏற்க வேண்டும் என்பது ஒருவாதம் கடவுளில் என்ன தமிழ்க் கடவுள் இங்கிலீஷ் கடவுள்! முருகன், வேலன் என்ப தெல்லாம் நிலத்தலைவர் வழிபாடு. அது எப்படி கடவுளாகும்?  படைவீரர் வழிபாடு - வீரன்வழிபாடு ஆனது போல இதுவும் ஆனது.
அதுசரி, இதை யெல்லாம் மீண்டும் புதுப்பித்தால் தமிழ்த் தேசியம் அமைந்துவிடுமா? செயல் திட்டம் இல்லாமல் உணர்வேற்றி உசுப்பிவிடுதல் மட்டுமே இங்கு செய் யப்படுகிறது. மலிவான விளம்பர வேட்கை, தலைமைத்தினவு  தீர்க்க மட்டுமே இவை பயன்படும்.
தமிழகப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி குறைந்து வருகிறது ஆங்கில வழிக்கல்வி அதிகரிக்கிறது. தமிழ்வழிப் பள்ளிகள் மூடப்படுகின்றன. இது இன்றைய நிலை. இதற்குத் திராவிடக் கட்சிகள் தான் காரணம் என்று குற்றம்சாட்டி குதறியெடுக்கிறார்கள்.
தமிழ்வழிக்கல்வி குறைவதற்கு திராவிடக் கட்சிகள் எப்படிக் காரண மாகும்? இது காலத்தின் மாற்றம். மக்கள் நாட்டம். ஒருவர் பிள்ளை இப்படித் தான் படிக்க வைக்க வேண்டும் என்பதற்குச் சட்டம் இயற்ற முடியுமா? குழந்தைகளுக்கு மூன்று வயது முடிவ தற்குள் ஆங்கில வழியில் சேர்த்து விடவே விளிம்பு நிலை மக்கள் கூட விரும்புகின்றனர். வருவாய் குறைவு என்றாலும் கடன் வாங்கியாவது ஆங்கிலவழியில் சேர்க்கின்றனர்.
சிறுவயது முதலே என்பிள்ளை ஆங்கிலத்தில் படித்தால்தான் எதிர் காலத்தில் சிறப்பாக இருக்கும் என்று பெற்றோர் பிடிவாதம் பிடிக்கின்றனர். இதற்கு என்ன செய்யலாம்? தீர்வு சொல்லுங்கள்! அதைவிட்டு விட்டு கண்ணைமூடிக் கொண்டு காழ்ப்பின் வெளிப்பாட்டால் கருத்துகள் கூறுவது சரியாகுமா?
அய்ந்தாம் வகுப்புவரை தாய் மொழிவழிக்கல்வி கட்டாயம் என்று சட்டம் கொண்டு வரலாம். அதற்குப் பெற்றோர்களின் கடும் எதிர்ப்பைத் தீர்க்க வேண்டும். அதற்குமேல் ஆங்கில வழி தமிழ்வழி என்று பிரிந்து சென்று படிப்பதைத் தடுக்க முடியாது. காரணம், இன்றையச் சூழல் அப்படி. உயர் கல்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில் அதற்குத் தீர்வு காணாமல் தமிழ்வழியில் கடைசிவரைச் செல்வது இயலாது.
தமிழ்நாட்டில் அரசு வேலை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே என்று ஒரு ஆணை போட லாம். அது தமிழ்வழியை ஊக்குவிக்கும். ஆனால், அரசின் வேலை எங்கு உள்ளது? எல்லாம் தனியார் மயம். கார்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம். அங்கு ஆங்கிலம் கோலோச்சுகிறது. ஆங்கிலத்தில் திறமையாக சரளமாகப் பேசத்தெரிய வேண்டும். பெரும்பாலான வேலைவாய்ப்பு இதைச் சார்ந்து இருக்கும்போது தமிழ்வழிப் படிப்பை பெற்றோர் எப்படி ஏற்பர்?
ஆக, இதுபோன்று அறிவு பூர்வமாய் சிந்தித்து முடிவெடுக்க வேண்டியவை பல இருக்கும் போது, குறை சொல்கின்றவர்கள் தீர்வுகளைத் திட்டங்களைத் தரவேண்டும். அதை ஆட்சியாளர் செய்யும்படிச் செய்ய வேண்டும். அதைவிட்டு விட்டு, திராவி டக்கட்சிகள் தான் கெடுத்து விட் டார்கள் நாங்கள் வந்தால் கிழித்து விடுவோம் என்பது பதவி அரிப்பின் பக்க விளைவேயன்றி வேறில்லை.
எனவே, தீர்வுடன் கூடிய செயல் திட்டங்களை வைத்துக் கொண்டு பேசவேண்டும். செயல்படுத்த அழுத்தங் கொடுக்க வேண்டும். அதுவே மக்க ளுக்காகப் போராடுவதற்கான அடை யாளம்! நேர்த்தி என்ற தமிழ்வார்த் தையை ஷிuஜீமீக்ஷீ என்ற ஆங்கில வார்த்தை விழுங்கிவிட்டது. கிராமத்தில் கடைக் கோடிப் பெண் கூட  ஷிuஜீமீக்ஷீ என்கிறார். இப்படி பல சொற்களை தமிழ் நாள்தோறும் இழந்து வருகிறது.
தமிழில் பெயர் வைத்த திராவிடக் கட்சிகளின் செயல்திட்டம் இப்போது, கேலிசெய்யப்படுகிறது. வடமொழிப் பெயர்களே சொல்வதற்கு பெருமையாக இருக்கிறது என்று கனிஷ்கா, நிவேதிதா, ஹர்ஷினி, ரூபினி, மகேஷ், சுரேஷ் என்று பெயர்கள் எல்லா தமிழர் வீட்டிலும் வைக்கப்படுகின்றன. தமிழ்ப்பற்றாளர் பேரக்குழந்தைகளுக்கே தமிழ் பெயர் சூட்ட முடியவில்லை. வற்புறுத்தினா லும் எடுபடவில்லை. மக்கள் விருப்பம், நாட்டம் மாறிச்செல்லும் நிலையில், இதற்கெல்லாம் சட்டம், ஆட்சி என்ன செய்ய முடியும்?
தீர்வு சொல்லுங்கள். சரியென்றால் அதற்காக ஒன்று சேர்ந்து போராடு வோம்! எப்பொழுதும் மக்களுக்குத் தொண்டு செய்யக் கூடியவர்கள் அதைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பர். ஆனால், சுயநலம் விரும்பி, விளம்பரம், பரபரப்பு, தலைமைநாட்டம் கொண்டு செயல்படுகின்றவர்கள் அடுத்தவர்களை குறை கூறிக்கொண்டேயிருப்பர், செயல் செய்யமாட்டார்கள். இதுதான் இன்று தமிழகத்தில் நடக்கிறது.
உலகு ஒரு குடும்பம் என்று சுருங்கி வரும் நிலையில் ஜாதி, மதம், இனம், மொழி இவற்றைக்காப்பது என்பது கடினமான செயல் ஆகும்.
மக்களின் பேச்சுவழக்கு இருக்கும் வரை ஒரு மொழியை அழித்துவிட முடியாது. அழிந்துவிடும் என்பது வீண் அச்சம். ஆனால், இன்றைய இளைஞர் கள் நாளைய மக்கள். இவர்கள் எதை ஏற் கிறார்களோ அதுவே, நிலைக்கும். இளைஞர்கள் இதைத்தான் ஏற்கவேண் டும் என்று கட்டாயப்படுத்த இயலுமா?
தீர்வு என்ன?
மொழியைக் காக்க வேண்டுமானால், அனைத்தும் அரசுடைமையாக இருந் தால் மட்டுமே இயலும். தாய்மொழி யிலே உயர்கல்வி வரை படிக்க நூல்களைத் தயார் செய்து; எல்லோரும் தாய் மொழியில் படிக்க சட்டம் இயற்றி தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் சரளமாய் பேச சிறுவயது முதலே பயிற்சியளித்து கல்வித் திட்டத்தை கொண்டுவந்து, அனைத்து வேலை களும் அரசின் கையில் என்ற நிலை வந்தால் இதைச் சாதிக்க முடியும்.
மாறாக சந்தைப் பொருளாதாரத்தில், கார்ப் பரேட் கம்பெனி முதலாளிகளின் கையில் வேலைவாய்ப்பு இருந்தால், ஆங் கிலமே கோலோச்சும், தமிழ் தன்னிலை இழக்கும். மூலகாரணம் அறிந்து போராட வேண்டும், தீர்வுகாண வேண் டும். அதுவே அறிவுடைமை! மற்றபடி உணர்ச்சிப் பெருக்கில் முழங்குவதால் எந்தப் பயனும் வராது!
முதலில் தமிழன் ஜாதி, மதம் இவற்றால் பிரியாமல் ஒற்றுமையாய் இருந்தாலே பல சிக்கல்களை எளிதில் தீர்க்கலாம். நாம் நினைப்பதை அடைய அதுவே வழி!
மாறாக, தமிழ்த்தேசியம் பேசுகின் றவர்களே பத்துப்பிரிவாக பிரிந்து நின்று மோதினால் சாதிப்பது எப்படி? சிந்திக்க வேண்டுகிறோம்.
- மஞ்சை வசந்தன்

Friday, August 28, 2015

இட ஒதுக்கீடு ஏன்?


இன்றைய இளைஞர்கள் உள்ளத்தில் எழும் கேள்வி.
 இடஒதுக்கீடு தேவையா? என்பதை முடிவுசெய்ய இடஒதுக்கீட்டுக்குமுன் என்ன நிலை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இடஒதுக்கீட்டிற்கு முன் எல்லா பதவிகளும், கல்வி கற்கும் உரிமையும் பார்ப்பனர்களுக்கே ஏகபோகமாக இருந்தது.

மத்திய அரசுத்துறைகள் முழுமையும் பார்ப்பனர் மயமாகவே இருந்தது. அதை மாற்றவே இடஒதுக்கீடு வந்தது. அதன் பிறகுதான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.

எதற்கெல்லாம் இடஒதுக்கீடு?
கல்விபயில, வேலையில் அமர, பதவி உயர்வுபெற.

எதன் அடிப்படையில் இடஒதுக்கீடு?
யாரெல்லாம் சமுதாயத்திலும், கல்வியிலும் பின் தங்கியுள்ளார்களோ அவர்களுக்கு இடஒதுக்கீடு.

பொருளாதார அடிப்படையில் ஏன் கொடுக்கக்கூடாது?
பண உதவி செய்யும் போது தான் பொருளாதாரம் அடிப்படையாக இருக்க வேண்டும். கல்வி, வேலை இவற்றிற்கு பொருளாதாரம் அடிப்படையில்ல. பொருளாதார நிலை மாறக் கூடியது அது அடிப்படையாக வராது.

எவ்வளவு காலத்திற்கு இடஒதுக்கீடு?
ஏற்றத்தாழ்வு எவ்வளவு காலம் நீடிக்கிறதோ அவ்வளவு காலத்திற்கு

இடஒதுக்கீடு சாதியை நிலைநிறுத்தாதா?
இது சாதியை ஒழிப்பதற்குப் பயன் படுமே அன்றி வளர்க்காது. அரசியல்வாதிகள் தான் தவறாக சாதி உணர்வை வளர்க்கப்பயன்படுத்துகின்றனர். இடஒதுக்கீடு மூலம் மேல்நிலைக்கு வருபவர்கள் எளிதில் சாதிமறுப்பு மணம் புரிகின்றனர். அதன்வழி சாதி ஒழிகிறது.

தனியார் துறை இடஒதுக்கீடு வேண்டும் இடஒதுக்கீடு கேட்டுபலரும் போராடுகிறார்கள்!
தகுதியுள்ளவர் போராட்டம் சரியானது. தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டி எல்லோரும் போராடி வெற்றிபெற்றால் நலிந்த பிரிவு மக்கள் விரைவாய் மேல் எழவும், அதன் வழி சாதி ஒழியவும் வாய்ப்புக் கிடைக்கும்

 - @மஞ்சை வசந்தன் https://www.facebook.com/manjaivasanthan

படியுங்கள்! பரப்புங்கள்!......

புற்றுநோய் வராமல் தடுக்க....


தினம் 1/2 டம்ளர் பாலில் 1 ஸ்பூன் மஞ்சள்தூள் கலந்து காலை,மாலை, பருகினால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
சிறு பிள்ளைகள் முதற்கொண்டு முதியவர்கள் வரை எல்லோரும் பருகலாம். சீனிக்குப் பதிலாக பாலில் வெல்லம் சேர்ப்பது நல்லது.
வயிற்றில் குடற்புண் வராமல் இது காக்கும்.
இன்றைய உலகில் இரசாயன கலப்புடைய உணவுகளே அதிகம். இதனால் புற்றுநோய் இளம் வயதிலே வர வாய்ப்புண்டு எனவே இதை எல்லோரும் சாப்பிடுவது நல்லது.
- @மஞ்சை வசந்தன் https://www.facebook.com/manjaivasanthan
ஒவ்வொரு நாளும் சமுதாயச் சிந்தனைகளோடு; உடல் நலம் சார்ந்த ஒரு மருத்துவக் குறிப்பும் வரும்.
படியுங்கள்! பரப்புங்கள்!......

இஸ்லாமியர் எண்ணிக்கை எகிறுகிறது என்பது ஏமாற்று!...........

இந்துத்துவாவாதிகள் இல்லாத பொய்கதைகளையெல்லாம் சொல்லி எப்படியாவது இந்துக்களை வெறியேற்ற முயற்சிக்கின்றனர்.
இந்திய மக்கள் தொகைக்கணக்கெடுப்போரும் இந்த ஏமாற்று வேலையை செய்கின்றனர்.
மக்கள் தொகை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும்போது ஏறவேச் செய்யும். ஆனால், இஸ்லாமியர் எண்ணிக்கை மட்டும் உயர்ந்துள்ளது என்பது உண்மையல்ல.
மாறாக, இஸ்லாமியர் எண்ணிக்கை உயர்வு வீதம் கடந்த 30 ஆண்டுகளில் குறைந்து கொண்டே வந்துள்ளது என்பதே உண்மை.
(முழு விவரத்துக்கு 26-08-2015 The hindu)
- @மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
follow my face book page : https://www.facebook.com/manjaivasanthan

இஞ்சி இடுப்பழகு என்றால் என்ன?

இஞ்சி இடுப்பழகு என்று பலரும் கூறுவர். திரைப்படப் பாடல்கூட பரவலாக அறியப்பட்டது. ஆனால், அதன் பொருள் என்ன?
இஞ்சி போன்று இடுப்பா? இஞ்சி போன்ற அழகா? என்ன காரணத்தால் அப்படிச் சொல்லப்பட்டது? பலருக்கும் தெரியாது. அதன் உண்மைக் காரணத்தை இங்கே விளக்கியுள்ளேன். படியுங்கள்! பலருக்கும் பகிருங்கள்!
இஞ்சி என்பது பித்தம் அகற்றக் கூடியது; கொழுப்பைக் குறைக்கக் கூடியது. அதனால்தான் ஆட்டுக்கறி போன்ற கொழுப்புமிக்க உணவு சாப்பிடும்போது இஞ்சி அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.

இடுப்பு என்பது ஒடுங்கி இருப்பதுதான். அழகு தோள் விரிந்து அகன்று இருக்க வேண்டும். இடுப்பு ஒடுங்கி இருக்க வேண்டுமானால் அடிவயிறு தொப்பையின்றி ஒடுங்கியிருக்க வேண்டும்.
கொழுப்பு கூடக்கூட அடிவயிறு பருத்து மடிப்பு விழும். கொழுப்பு குறையக் குறைய அடிவயிறு ஒடுங்கி இடுப்பு அழகாய் இருக்கும்.
காலையில் தவறாது இஞ்சி சாப்பிடுகின்றவர்களுக்கு வயிறு ஒடுங்கி இடுப்பு அழகாய் இருக்கும். இந்த அழகு இஞ்சியால் வந்தது என்பதால் இஞ்சி இடுப்பழகு என்றனர்.
தினம் தவறாது காலையில் இஞ்சி சாப்பிடுங்கள். இடுப்பு அழகாகும். இதய நோயும் வராது.

- @மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

Tuesday, August 25, 2015

பார்ப்பனர்களே இந்த நாட்டை விட்டே ஓடிவிடுங்கள்!


பார்ப்பனர்களே இந்த நாட்டை விட்டே ஓடிவிடுங்கள்! அல்லது இந்த மண்ணில் கரைந்து, காற்றில் கலந்து மறைந்து விடுங்கள்! அப்போதுதான் இந்தநாடு எழுச்சிபெரும் ஏற்றம்பெரும்! நீங்கள் சூன்யம்! நீங்கள் மாயை! கானல் நீர்! மக்களை நாசமாக்கும் குழப்பல் பேர்வழிகள்!

--விவேகானந்தர்

#ஆதாரம் : எழுமின் விழிமின்!– (ஹிந்து ராஷ்டிரத்துக்கு அறைகூவல் பக்-150-152)

முழு விவரங்களுக்கு கீழே படியுங்கள் :  

ஆரிய வம்சத்திலிருந்து தோன்றியதாகப் பெருமை அடித்துக் கொள்ளும் பார்ப்பனர்களே; நீங்கள் எவ்வளவுதான் பெருமை பேசினாலும், எவ்வளவுதான் புகழ் இசைத்தாலும்; உங்கள் குலப்பெருமை உணர்ச்சியினால் கர்வமடைந்து சொகுசு நடைப்போட்டாலும், உங்களுக்கு உயிர் இருப்பதாக, சிந்தனை இருப்பதாக ஏற்க இயலாது. பதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மம்மி சவம்போல இருக்கிறீர்கள். நீங்கள் யாரை சவம் என்று வெறுத்து ஒதுக்கினீர்களோ அவர்களிடையேதான் (ஒடுக்கப்பட்டோர்) பாரதத்தின் எதிர்கால வீரிய சக்தி எஞ்சி நிற்கிறது!

மாயை நிறைந்த இவ்வுலகில் நீங்கள் தான் உண்மையான மாயை; புரியாத புதிர்; பாலைவனத்தில் காணப்படும் கானல்நீர். பாரதத்தின் உயர் வகுப்பாரே உங்களைத் தான் சொல்கிறேன் நீங்கள் இறந்த காலத்தின் பிரதிநிதி அதில் எல்லா விதமான வடிவங்களும் ஒரே குளறுபடியாகக் கலந்து கிடக்கின்றன.

நீங்கள்தான் சூன்யம். வருங்காலத்தில் உருப்படியில்லாமல் போகப்போகிற திண்மையில்லா வஸ்துக்கள் கனவு உலக வாசிகளே நிங்கள் இன்னும் ஏன் நடமாடுகிறீர்கள்?

கடந்து போன பாரதத்தின் சதையற்ற, இரக்கமற்ற வெற்று எலும்புக் கூடுகளாகிய நீங்கள் ஏன் மண்ணில் கரைந்து, காற்றிலே கலந்து மறைந்து விடக்கூடாது?

இந்த நாட்டின் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள் எல்லாம் உங்கள் கையுள் நாற்ற மடிக்கும் உங்கள் கரங்களிலிருந்து அவற்றை விடுவித்து உரியவர்களிடம் சேர்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கவில்லை. இப்பொழுது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், கல்வியும், ஞான ஒளியும், சுதந்திரமாகக் கிடைக்கும் இந்த நேரத்தில் உரியவர்களிடம் ஒப்படையுங்கள். ஆம் முடிந்த அளவு விரைவாய் அவற்றை ஒப்படையுங்கள் நீங்கள் சூனியத்தில் முழ்கி மறைந்து விடுங்கள் நீங்கள் விலகிய இடத்தில் நவபாரதம் எழட்டும்.

நவ பாரதமானது உழவனின் குடிசையிலிருந்து ஏர் பிடித்து வெளிவரும்; மீனவர், சக்கிலியர், தோட்டி இவர்களின் குடிசைகளிலிருந்து நவ பாரதம் வெளித் தோன்றும். பல சரக்குக் கடைகளிலிருந்து, தோசை விற்கிறவனின் அடுப்படியிலிருந்து நவ பாரதம் தோன்றட்டும். தொழிற்சாலைகளிலிருந்தும், கடையிலிருந்தும், சந்தையிலிருந்தும் நவ பாரதம் காட்சி தரட்டும். தோட்டங்களிலிருந்தும், காடுகளிலிருந்தும், குன்றுகளிலிருந்தும், மலைகளிலிருந்தும், அந்த நவ பாரதம் வெளிவரட்டும்.

இந்தப் பாமர மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கி நசுக்கப்பட்டிருக்கிறார்கள். முணுமுணுக்காமல் கஷ்டங்களைச்  சகித்திருக்கிறார்கள். அதன் விளைவாக ஆச்சரியகரமான பொறுமையும் தைரியமும் பெற்றுள்ளார்கள். முடிவில்லாத துன்பத்தை அவர்கள் அநுபவித்ததன் பயனாக, வளையாத ஆண்மைச் சக்தி அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு கைப்பிடி அளவு தானியத்தை வைத்துக் கொண்டு, உயிர் வாழ்ந்து அவர்கள் இந்த உலகத்தையே உலுக்கி ஆட்டி விடுவார்கள். அவர்களுக்கு அரை வயிற்று உணவு கொடுங்கள். பிறகு தோன்றுகிற அவர்களது சக்தியைப் பாருங்கள்.

இந்த உலகமே கொள்ளாது. ரக்த பீஜனுக்கிருந்த குன்றாத சக்தி இவர்களுக்கும் அருளப்பட்டிருக்கிறது. (ரக்த பீஜன் துர்க்கா சப்த சதியில் வருகிற ஓர் அரக்கன். அவனுடைய ஒவ்வொரு சொட்டு இரத்தமும் கீழே சிந்தினால் அவனைப் போன்றே மற்றொரு ராட்சதன் தோன்றுவான்) அத்துடன் கூடத் தூய்மையும் நல்லொழுக்கமும் வாய்ந்த வாழ்க்கையிலிருந்து தோன்றுகிற அற்புதமான வலிமை அவர்களுக்கு உண்டு. உலகத்தில் இதனை வேறு எங்குமே காண முடியாது. இதுபோன்ற அமைதி, இதுபோன்ற திருப்தி, இத்தகைய அன்பு இதுபோன்ற மெளனமாகவும் இடைவிடாமல் வேலை செய்துசெயல்படுவது, நேரம் வரும்பொழுது இதுபோன்று சிங்கத்தின் பலத்துடன் வேலை செய்வது – இத்தகைய காட்சியை உங்களால் வேறு எங்குதான் காண முடியும்?

நீங்கள் காற்றில் கலந்து மறைந்து போங்கள். இனி ஒருகாலும் கண்ணுக்குத் தெரியாமல் போய் விடுங்கள். உங்கள் காதுகளை மட்டும் திறந்து வைத்தால் போதும். நீங்கள் மறைந்து போகிற அந்தக் கணமே புத்தெழுச்சி பெற்ற பாரதத்தின் முதல் முழக்கத்தைக் கேட்பீர்கள். கோடிக் கணக்கான இடியொலிகள் கலந்தாற் போல உலகெங்கும் எதிரொலி செய்ய “வாஹ் குரு கீ பதேஹ்” ‘குருதேவருக்கு ஜே’ என்ற முழக்கம் வானோங்கி எழும்.

ஆதாரம் : எழுமின் விழிமின்! – (ஹிந்து ராஷ்டிரத்துக்கு அறைகூவல் பக்-150-152)

-  மஞ்சை வசந்தன் Manjai Vasanthan 

படியுங்கள் மற்றவர்களும் படிக்க பரப்புங்கள்.....

Monday, August 24, 2015

பார்ப்பனர் என்ற பெயர் எப்படி வந்தது!

பார்ப்பு என்பதற்கு 
இருபிறப்பு என்ற பொருள் தப்பு

- மஞ்சை வசந்தன்

கோழிக்குஞ்சு - கோழிப்பார்ப்பு என்று தலைப்பிட்டு வய்.மு.கும்பலிங் கன் அவர்கள் எழுதிய செய்திகள் முற்றிலும் தவறானவை. ஆதார மற்றவை. அவரைத் தொலைபேசி வழி தொடர்புகொண்டு, கோழிக் குட்டியும் கிடையாது, கோழிக்குஞ்சும் கிடையாது. அதன்பெயர் கோழிப்பார்ப்பு என்று எழுதியுள்ளீர்களே அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டேன்.

ஆதாரம் இல்லை. அப்படி நினைத்து எழுதினேன் என்றார். ஆயிரக்கணக் கான அறிஞர்கள் படிக்கும் தின மணியில் இப்படியொரு பொறுப்பற்ற பிதற்றல் வருத்தமளிக்கிறது.

முட்டையிட்டு வருவது குஞ்சு. ஈன்று பெறுவது குட்டி. விலங்கின் குட் டிக்கும், பறவையின் குஞ்சுக்கும் பார்ப்பு என்பது வழங்கப்பட்டிருக்கிறது. பார்ப்பு என்பதற்கு இளமை என்பதே பொருள்.
இளம் பிள்ளையை பார்ப்பா என் போம். பார்ப்பா என்பதே பாப்பா என்றா னது. கோர்ப்பு கோப்பு ஆனது போல.

“தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலை”
- (அய்ங்-41)
“பார்ப்புடை மந்திய மலையிறந்தோரே”
- (குறு-278)
பார்ப்பனர் என்ற சொல் ஆரியர் களுக்குத் தமிழகத்தில் மட்டுமே வழங் கப்படுவதாகும். மற்றப் பகுதிகளில் இவ்வழக்கு இல்லை.

தமிழகத்தில் தமிழர்க்குரிய தொழில் பெயரான பார்ப்பனர் என்ற சொல் ஆரியர்களால் பறித்துக் கொள்ளப் பட்டது.

அக்காலத்தில் அரசர் மற்றும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த இளம் வாரிசுகளுக்கு, ஆலோசனை கூற, தோழமை கொள்ள, உதவ, துணை நிற்க இளம் தோழர்கள் (தமிழர்கள்) அமர்த் தப்பட்டனர். அவர்களே பார்ப்பனர் கள். அத்தொழில் பார்ப்புத் தொழில் ஆகும்.

பார்ப்புத் தொழிலுக்குரிய பணிகளை தொல்காப்பியம் தெளிவாகக் குறிக்கிறது.
“காமநிலை யுரைத்தல் தேர்தல்நிலை யுரைத்தலும்
கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும்,
ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்,
செலவுறு கிளவியும், செலவழுங்கு கிளவியும்
அன்னவை பிறவும் பார்ப்புக் குரிய”  - (கற்பு-36)

ஆரியர்கள் தமிழகத்துள் நுழைந்து பரவியதும், அவர்களின் நிறமும், தோற் றமும், அரசு மற்றும் செல்வந்த குடும் பத்து இளைஞர்களைக் கவர, பார்ப்புத் தொழிலுக்கு அவர்களை (ஆரியர்களை) அமர்த்த, அத்தொழில் முழுவதும் ஆரியர் வசமாகி, அதன்பின் அத்தொழி லின் பெயர் அந்த இனத்திற்கே ஆனது.

கூர்க்கர் என்ற இனப்பெயர், வாயில் காப்போரின் தொழிற்பெயராய் ஆனது போல, பார்ப்பு என்ற தொழில் பெயர் ஆரியர் இனத்தின் பெயராய் ஆனது.

உண்மை இப்படியிருக்க பார்ப்பனர் இரு பிறப்பாளர். கோழிக்குஞ்சு இரு பிறப்புடையது. எனவே இரண்டிற்கு பார்ப்பு என்ற பெயர் வந்தது என்பது பிழை. பார்ப்பிற்கு இரு பிறப்பு என்ற பொருள் கிடையாது. பார்ப்பு என்றால் இளமை என்பது மட்டுமே பொருள்.

குறிப்பு: தப்பைச் சுட்டிக் காட்டி ‘தினமணி’க்கு உரிய நேரத்தில் இம் மறுப்பு அனுப்பப்பட்டும்; தினமணியில் இது வெளியிடப்படவில்லை. இதுதான் இ(தி)னமணியின் யோக்கியதை!

Wednesday, August 19, 2015

பூணூல் என்பது கோவணம் கட்டும் இடுப்புக் கயிரே! சொன்னவர் சுவாமி விவேகானந்தர்.............

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan's photo.


சிஷ்யனானவன் குருவினுடைய குடிலுக்கு செல்லும்போது குரு அவனுடைய தகுதியை அறிந்து உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய ”முஞ்சா” என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீட்சை செய்து வேதங்களை போதிபார் இடுப்பில் கட்டிய அந்த முப்புரி கயிற்றில் சிஷ்யன் கோவணம்கட்டிக்கொள்வான் அந்த புல்லிற்கு பதிலாக முப்புரி நூலை அணியும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது.

வேதங்களிலே பூணூலை பற்றிய குறிப்பு ஓரிடத்திலேயும் இல்லை.

கோபிலருடைய கிருஹய சூத்திரங்களிலும் பூணூலுக்கான குறிப்புகள் இல்லை. எனவே இன்றைக்கு பார்ப்பனர்கள் அணியும் பூணூல் கோவணம் கட்டிய நூலின் மாற்றமே!
---சுவாமி விவேகானந்தர்
(ஆதாரம் : சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள்
நூல் பக்கம் : 26-28.)

சாஸ்திர வேத விரோதமாய் தன்னை உயர்ந்த ஜாதியாய் காட்ட பார்ப்பனர்கள் செய்த மோசடியே பூணூல் அணியும் வழக்கம். என்பது இதிலிருந்து புலப்படுகிறது.


 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

follo face book : https://www.facebook.com/manjaivasanthan

Monday, August 17, 2015

திருமணத்தில் பட்டுப்புடவை கட்டுவது அறிவியலா?

திருமணத்தில் பட்டுப்புடவை கட்டுவது அறிவியலா?

அறிவற்ற மூடச் செயல்களுக்கு அறிவியல் விளக்கங்களா?

- மஞ்சை வசந்தன்


பட்டுபுடவை நலம் தருமா?

தமிழர்கள் திருமணத்தில் பட்டுப்புடவை ஏன் கட்டுகிறார்கள் தெரியுமா? என்று கேட்டு, முட்டாள்தனமான, உண்மைக்கு மாறான, பொய்யான தகவல்களை முகநூலில் தந்துள்ளார். இவர்களுக்கெல்லாம் ஒரே நோக்கம், அறிவியல் வளர்ந்து மூடநம்பிக்கைகள், வீண் படாடோபங்கள் அழிந்துவிடக் கூடாது. எப்படியாவது முட்டுக் கொடுத்துத் தாங்க வேண்டும். மக்கள் முட்டாளாய் இருந்தால்தான் ஏய்க்கலாம். எனவே, மூடநம்பிக்கைகளுக்கு பொய்யான அறிவியல் காரணங்களைப் பரப்புவதில் முனைப்பு காட்டுகின்றனர்.

இந்த மேதாவி பட்டுப்புடவையை தமிழர்கள் திருமணத்தில் ஏன் கட்டுகிறார்கள்? என்று ஒரு கேள்வியைக் கேட்டு அதற்குப் பித்தலாட்டமான சில விளக்கங்களைத் தந்துள்ளார்.

முதலில் திருமணத்தின்போது பட்டுப்புடவைக் கட்டுவது தமிழர் மரபல்ல. தமிழர்கள் கூரைச்சேலைதான் கட்டுவார்கள். எவ்வளவு பெரிய செல்வந்தர்களானாலும் திருமணத்தின்போது பருத்தி நூலாலான சிறு கட்டம் போட்ட கூரைச் சேலைதான் அணிவர். பட்டுப் புடவை கட்டுவது, கோட்டு, சூட் போடுவது எல்லாம் கால மாற்றத்திற்கு ஏற்ப பின்னால் வந்தது.

பட்டுப்புடவை ஏன் கட்டப்படுகிறது என்பதற்கு அறிவியல் காரணத்தைத் தேடிக் கண்டுபிடித்தாராம். எங்கு கண்டுபிடித்தார் என்ற ஆதாரத்தை நாணயமாகச் சொல்ல வேண்டுமல்லவா? சொல்லவில்லை. இதுவே இவரது மோசடியை வெளிப்படுத்துகின்றது.

பட்டுப்புடவை கெட்டக் கதிர்களை விலக்கி, நல்ல கதிர்களை தக்கவைத்துக் கொள்ளும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரம் உள்ளது? நேர்மையாய் பதில் சொல்ல வேண்டும்!

பட்டுப்புடவை துவைக்காமலே பலமுறைக் கட்டப்படுவது. அதைச் சூரிய ஒளியிலும் காயவைக்க முடியாது. எனவே, நோய்க் கிருமிகள்தான் சேரும். தோல்நோய்தான் வரும். உண்மை இப்படியிருக்க பொய்யான ஒரு மோசடிப் பிரச்சாரம் செய்கிறார் இந்த ஆள். இவுங்க சங்கராச்சாரியே பட்டுப்புடவை கட்டுவது பாவம் என்கிறார். ஆயிரக்கணக்கான பட்டுப்பூச்சி கொல்லப்படுகிறது என்கிறார்.

அடுத்து, தங்கம் உடலில் பட்டால் இரத்த ஓட்டம் சீர்படுமாம். விரலில் மோதிரம் போட்டுக் கொள்வது விஞ்ஞான காரணமாம். இப்படி இவர் சொல்வதை எந்த அறிவியல் ஆய்வு நிரூபத்துள்ளது. நாணயத்தோடு பதில் சொல்ல வேண்டும்.

காலம்காலமாய் மக்களை மடையராக்கி ஏய்த்துப் பிழைத்தக் கூட்டம்.

எனவே, அருமைத் தமிழர்களே, இந்த மோசடிப் பேர்வழிகளின் வலையில் வீழாது அறிவோடு சிந்தித்து, அறிவுக்கு உகந்ததை ஏற்றுக் கொள்ளுங்கள்.

திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம். அதை எளிமையாய் பதிவு செய்து கொண்டாலே போதும். மாறாக, இலட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி செலவு செய்து கடனாளியாகி வாழ்நாள் முழுக்க அல்லல்படுவது அறிவுக்கழகா?

எனவே, திருமணங்களில் நகையும், பட்டும் கட்டாயம் இல்லை. அன்பும், பாசமுமே அடிப்படை. செல்வக் குடும்பத்தினர் தங்கள் மதிப்பைக் காட்ட செய்கின்ற போலி வேடங்கள் இவை என்பதை அறிய வேண்டும்.

_____

நெற்றிக்குறிகள் இடுவது நல்லதா?


குங்குமம், திருநீறு, நாமம் போன்றவை மூடநம்பிக்கையின் வெளிப்பாடு. ஆனால், தற்போது இவற்றிற்கு அறிவியல் விளக்கம் அளிக்க சில மோசடிப் பேர்வழிகள் புறப்பட்டிருக்கிறார்கள்.

 குங்குமம் என்பது குருதிக்குறியீட்டின் தொடர்ச்சி என்று எனது முகநூலில் விளக்கியுள்ளேன். 

திருநீறு என்பது சாணத்தைச் சாம்பலாக்கிப் பூசிக்கொள்வது.
நாமம். வண்கட்டியை குழைத்து இட்டுக் கொள்வது.

 சைவர்கள் தங்களது அடையாளக் குறியீடாக திருநீறு பூசினர். வைணவர்கள் நாமம் இட்டனர். இன்றைக்கு அரசியல் கட்சிகள் தங்களுக்கு அடையாளம் வைத்துள்வது போலத்தான் இதுவும்.

 திருநீறு செய்ய சாணம் கிடைக்காததால் காகிதக் கூழைக் கொண்டு தற்போது செய்து தோல் நோய் வருவதாய் மருத்துவர்கள் கூறுகின்றனர்..

 புகழ்பெற்ற தோல்நோய் மருத்துவர்கள், குங்குமம், திருநீறு, நாமம், ஸ்டிக்கர் பொட்டு போன்றவற்றை வைக்க வேண்டாம் என்று அடிக்கடி கூறி அவை பலபத்திரிக்கைகளிடம் கட்டுரையாக அடிக்கடி வருகின்றன். அப்படியிருக்க முட்டாள் செயல்களுக்கு அறிவியல் முலாம் பூச முற்படுவது அயோக்கியத் தனமாகும்.

 குங்குமம் கிருமி போக்கும் என்கிறார். போக்காது கிருமிதான் வரும் வேண்டுமானால் மருத்துவரைக் கேளுங்கள்.

 குங்குமம் இல்லாத நெற்றியில் மூதேவி வருவாளாம். குங்குமம் அணிந்தால் மூதேவி ஓடிவிடுவாளாம். குங்குமம் இல்லா நெற்றிகள் உலகத்தில் பல நூறு கோடி. அத்தனை நெற்றியிலும் ஒரு மூதேவி எப்படி செல்வாள். அட முட்டாளே!

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

Saturday, August 15, 2015

குங்குமம் என்றால் என்ன தெரியுமா? தெரிந்தால் யாரும் வைக்கமாட்டார்கள்!



பெண்களும் ஆண்களும் நெற்றியில் சிகப்புத்தூள் (குங்குமம்) வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அதன் பொருள் தெரிந்தால் அது எவ்வளவு பெரிய கேவலம் என்பது புரியும்.

திருமண முறை வராத காலத்தில் வயதுவந்த ஆணுடன் பெண்ணும் தனிமையில் சந்தித்து காதல் வளர்ப்பர். மனம் ஒத்து சேர்ந்து வாழ முடிவு செய்தால் மறைவிடங்களில் உடலுறவு கொள்வர்.

இப்படி ஒரு பெண் ஓர் ஆணுடன் முதன் முதலில் உடலுறவு கொள்ளும் போது, அவளின் கன்னித்திரை கிழிக்கப்பட்டு, குருதி வெளிப்படும்.

இந்த உடலுறவுக்குமுன் கன்னியாக இருந்தவள், இந்த உறவு மூலம் கன்னிக் கழிந்துவிட்டாள் (அதாவது ஓர் ஆணோடு புணர்ந்து விட்டாள்) என்பதை பிறர் அறிய, கன்னித்திரை கிழிந்து வெளிவந்த குருதியை விரலால் தொட்டு அவள் நெற்றியில் உறவுகொண்ட அந்த ஆண் வைப்பான். இதற்குக் குருதிக் குறியிடல் என்று பெயர்.

திருமண முறையில்லாத  அக்காலத்தில் கன்னி கழிதல் என்றுதான் கூறுவர்.

இந்த நிகழ்வே கன்னிகழிதல் ஆகும். பெண்ணியச் சிந்தனையாளர் இராஜம்கிருஷ்ணன், கூரிய கல்லால் நெற்றியில் கீறி இரத்தக்குறியிடுவான்  என்று சற்று மாற்றி கூறியிருக்கிறார். ஆனால் அது உண்மையல்ல, கன்னித்திரை கிழிக்கப்பட்ட இரத்தமே அதன் அடையாளமாக இடப்பட்டது. இடு தான் காலப் போக்கில் குங்குமமாக மாறியது.

குங்குமத்தின் பொருள் இப்படியிருக்க இதை பெண்கள் வைக்கலாமா?  அதைவிடக் கேவலம் ஆண் வைக்கலாமா?  சிந்தியுங்கள்!

- மஞ்சை வசந்தன்

Friday, August 14, 2015

மெக்சிகோ கோசுமெல் தீவில் தமிழர் (மாயன்)நாகரிகம்!


உலகில் பல நாடுகளிலும் தமிழர்கள் பரவி வாழ்ந்து நாகரிகம், கலை, கட்டடம், அறிவியல் போன்றவற்றை வளர்த்தனர் என்பதற்குப் பலச் சான்றுகளைத் தந்தேன்.

மெக்சிகோவில் உள்ள கோசுமெல் தீவில் மயன் நாகரிகம், கட்டடம் போன்றவை உலக மக்களுக்கு வியப்பூட்டி வருகின்றன. இந்த மயன்கள் சுத்தத் தமிழர்கள். அவர்கள் தான் காலக் கணக்கீடு, நாட்காட்டியெல்லாம் தயாரித்தவர்கள்.

கோசுமெல் தீவில் மயன்கள் கால நாகரீகச் சின்னங்கள் காணப்படுகின்றன. இவர்கள் காலத்து நாகரிகக் கட்டடங்கள் பிரமிடுகள் போல இருக்கும். பலபடிகள் ஏறிச் செல்ல வேண்டும். மேலே ஏறிப்பார்த்தால் நாம் வானத்தில் தொங்குவது போல இருக்கும்.

இப்படியொரு தொழில் நுட்பத்துடன் அக்காலத்திலே எப்படிக் கட்டினார்களோ என்று உலக மக்கள் வியக்கின்றனர். மேலே நின்று பார்க்கும் போது தலைச் சுற்றும்.

உலக மெங்கும் அறிவும், கலையும், நாகரிகமும் வளர்த்தத்தமிழன் இன்று சாராயம், புகை, பான்பராக் என்று அடிமையாகி சீரழிகிறான்! எனவே அன்னிய மோகத்திலிருந்தும், ஆரிய மடமைகளிலிருந்தும் தமிழர்கள் விடுபட்டு, பழம்பெருமைகளை நிலை நாட்ட வேண்டும். இது தமிழர்களால் முடியும்!

டாக்டர் ஃபெல் (Dr.Fell) என்ற அமெரிக்க அறிஞர் தமிழர்கள் மெக்சிகோ வில் குடியேறிவாழ்ந்ததை உறுதி செய்கிறார்.

மெக்சிகோ நாட்டு அருங்காட்சியகப் பாதுகாவலர் ராமன் மேனா என்பவர் மாயன் எழுத்துமுறை தமிழ் மூலத்திலிருந்து வந்தது என்கிறார்.

அமெரிக்க மிக்சிகன் மாகாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உய்கோ ஃபோக்ஸ் (Hugo Fox) என்ற பேராசிரியர் சில ஆயிரமாண்டுகளுக்குமுன் தமிழ்மொழி மெக்சிகோவில் பேசப்பட்டது என்கிறார்.

அதே போல் ஆர்சியோ நன்ஸ் என்ற மொழி அறிஞர் தென்னமெரிக்காவில் தமிழ் பேசப்பட்டதை உறுதி செய்கிறார்.

இத்தாலி நாட்டில் தமிழ்

இத்தாலி நாட்டில் உரோமர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கி.மு.3000 ஆண்டளவில் வடக்கு மெசப்பட்டோமியாவின் துருக்கி, ஆர்மேனியன் ஏரிப்பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் சிரியா, பாலஸ்தீனப்பகுதியில் பரவி பின் கி.மு.2000களில் காக்சிகோவின் தெற்குப் பகுதிக்குச் சென்று, பின் கி.மு 900 களில் இத்தாலிக்கு வந்தனர் என்கின்றனர்.

ரஷ்யப்பகுதி

சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன் அய்ரோப்பாவின் தென்பகுதி, ரஷ்யாவின் காக்கேசியப் பகுதி, வட ஆப்பிரிக்காவின் கடலோரப் பகுதிகளில் பேசப்பட்ட மொழி தமிழ் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


Thursday, August 6, 2015

முட்டை முந்தியா கோழி முந்தியா? சந்தேகம் தீர புதிய விளக்கங்கள்....



உலகில் முதன்முதலில் காம உணர்வை அடிப்படையாய் வைத்து 

இச்சிக்கலுக்குத் தீர்வு சொன்னேன். சிலர் அய்யம் எழுப்பினர். 

எனவே மெலும் சில விளக்கங்கள்..........

முட்டையில்லாமல் கோழி எப்படி வந்தது என்ற 

சிந்தனையாலேதான். இதற்குத் தீர்வே இல்லாமல் இருந்தது.
இரண்டில் எது முன்னர் வரமுடியும் என்று சிந்தித்தால் தீர்வு 
உடனே கிடைக்கும்.

முட்டையோ அல்லது விதையோ “கரு” ஆகும்.

கருமுதலில் வருமா? உடல் முதலில் வருமா? இப்படிச் 

சிந்தித்தால் பளிச்சென்று பதில் வரும்.

விதையில்லாத செடியுண்டு. ஆனால் செடியில்லாமல் விதைவருமா?  ஆக கட்டாயமாய் அடிப்படையாய் இருப்பது? உடல்தான்.

மரமோ செடியோ மனிதனோ, கோழியோ அப்படியே உருவாகவில்லை. ஒருசெல் உயிரியிலிருந்து பரிணாமம் பெற்று வந்தவை.

ஒருசெல் உயிரி (அமீபா) அதற்கு ஆண்பெண் வேறுபாடோ, தாவர, விலங்கு வேறுபாடோ கிடையாது. அது தானே பலவாகச் சிதைந்து இனப்பெருக்கம் செய்தது.

இங்கு முதலில் தோன்றியது விதையா, முட்டையா,உயிரின் உடலா? உடல்தானே முதலில், அதன்பின் பலசெல் உயிரியாகி பின் தாவர விலங்கு வேறுபாடுவந்து அதன்பின் இப்போதுள்ள உயிரினங்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்வந்தன.

வெட்டி வைத்தால் பிழைக்கும் மரங்கள் உண்டு. இங்கு விதையே இல்லையே! எனவே மரம்தான் அடிப்படை. 

கரு உருவாக்க முடியாதவர்கள் உண்டு.

எனவே முட்டை முதன்மையல்ல. உடல்தான் முதன்மை!

எனவே முட்டை பிந்தி, விதை பிந்தி உடல்தான்  முந்தி!

- மஞ்சை வசந்தன்

Monday, August 3, 2015

முட்டை முந்தியா? கோழி முந்தியா?




உலகில் ஒருவராலும் சொல்ல முடியாத சிக்கல் என்பர்.

 ஆனால் என்னுடைய 18ஆவது வயதில் இதற்குத் தீர்வு சொன்னேன்.

அதன் சாரம் இதோ.

 முட்டை என்பது கரு. கரு உண்டாக காம உணர்வு வேண்டும்.

காம உணர்வு உடலில் தான் தோன்றமுடியுமே தவிர வெட்டவெளியில் தோன்றாது.

 ஆக, உடலில் தோன்றும் காம உணர்வின் விளைவாய் வரும் முட்டை முதலில் தோன்ற முடியாது. எனவே, கோழி முதலில் தோன்றமுடியாது. எனவே, கோழிதான் முந்தி.

 எனது தர்க்க ரீதியான இம்முடிவு உலக அளவில் பலராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. பரிணாமக் கோட்பாடும் இதையே உறுதி செய்கிறது.

 இன்னும் தெளிவு வேண்டின் முட்டை முந்தியா? கோழி முந்தியா? என்பதை
உடல் முந்தியா? உணர்வு முந்தியா? என்பதின் முடிவே இதற்கு முடிவு.

 உடல் =கோழி
உணர்வு =முட்டை
உடல் தோன்றாமல் உணர்வு தோன்றுமா?

 என்வே கோழி தோன்றி அதன் உடலில் உணர்வு தொன்றி உணர்வின் விளைவே முட்டை. என்வே முட்டை பிந்தி.

 மேலும்....அறிய கிளிக்...

http://manjaivasanthan.blogspot.in/2010/08/blog-post.html