அரசியல்

Tuesday, November 15, 2016

முந்திரிக்காட்டில் முகிழ்த்தெழுந்த அய்.ஏ.எஸ். அதிகாரி


 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள முத்தாண்டி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. மூன்றாம் வகுப்பு வரை கிராமத்தில் படித்தவர் 8 கி.மீ தொலைவிலுள்ள நெய்வேலியின் செயிண்ட்பால் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ வரை பயின்றார். கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். விரும்பிப் படித்தார். பெற்றோரின் ஊக்கத்தால் யூ.பி.எஸ்.சி. எழுத முடிவெடுத்தார். விரும்பிய ஐ.ஏ.எஸ். கிடைக்கும்வரை தொடர்ந்து ஐந்து முறை யூ.பி.எஸ்.சி. தேர்வுகளை எதிர்கொண்டார்.

கிராமத்தில் பிறந்து தமிழ்வழி பயின்ற தான் எப்படி மருத்துவராக, அய்.ஏ.எஸ். ஆக உயர்ந்தார் என்பதை அவரே விளக்குகிறார்.
“ஆறாம் வகுப்பு படிக்கும்போது வெ.இறையன்பு எழுதிய நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம் புத்தகத்தைப் படித்ததும் ஐ.ஏ.எஸ். ஆர்வம் துளிர்த்தது. இதனால் எம்.பி.பி.எஸ். முடித்த பின்னர்த் தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டே யூ.பி.எஸ்.சி. எழுத ஆயத்தமானேன்.
பிறகு சென்னை சென்று சங்கர் ஐ.ஏ.எஸ். கோச்சிங் அகாடமியில் பொதுக்கல்வி பாடப்பிரிவுக்காக மட்டும் பயிற்சி பெற்றேன். விருப்பப்பாடங்களான உயிரியல், மருத்துவ அறிவியலை நானே படித்தேன். மருத்துவ அறிவியலில் அதிகமாகப் படிக்க வேண்டி இருந்ததால் இரண்டாவது முயற்சியில் அதற்குப் பதிலாகப் புவியியல் எடுத்தேன். இரண்டாம்-நிலை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் நேர்முகத் தேர்வில் தேறவில்லை.
மூன்றாவது முயற்சியில் ஐ.பி.எஸ். கிடைத்தது. எனது நோக்கம் ஆட்சியர் ஆவது என்பதால் மீண்டும் இருமுறை எடுத்த கடுமையான முயற்சியில் எனது எண்ணம் நிறைவேறியது. அதே நேரத்தில் ஐந்து முயற்சிகளிலும் நான் முதல்நிலை தேர்வில் ஒருமுறை கூடத் தவறவில்லை. இதற்கு எனது பள்ளியில் பாடம் நடத்தப்பட்ட முறை முக்கியக் காரணம்’’ என்றார் ராஜா.
எதிர்காலத்தில் யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுத விரும்பும் பிள்ளை-களுக்குப் பள்ளிப் பருவத்தி-லிருந்தே ஆங்கிலம், தமிழ் நாளிதழ்களை வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என்பது ராஜாவின் யோசனை. இதன் மூலம், புரிந்து படிக்கும் திறனையும் வளர்த்தெடுக்கலாம். இணையதளத்தில் கொட்டிக்-கிடக்கும் தகவல்களையும் புத்தகங்களையும் பயன்படுத்தலாம். அதேபோல ராஜ்யசபா டிவி, லோக்சபா டிவி போன்ற சேனல்களில் வரும் நேர்காணல், விவாதங்களைப் பின்தொடர்வது மிகவும் உதவும் என வழிகாட்டுகிறார் ராஜா.
யூ.பி.எஸ்.சி.க்கான முயற்சிகளுக்கு இடையே ராஜாவுக்கு, 2009இ-ல் கடலூர் மாவட்டம் புலியூரில் தமிழக அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் ஒன்றில் மருத்துவப் பணி கிடைத்தது. இதில் சேர்ந்து யூ.பி.எஸ்.சி.க்கான மூன்றாவது முயற்சியைத் தொடர்ந்தபோது 239ஆ-வது ரேங்கில் 2011ஆ-ம் வருட பேட்ச்சில் கர்நாடகா மாநிலப் பிரிவின் ஐ.பி.எஸ். கிடைத்தது. இதன் பயிற்சியின் போது தாவன்கெரே, மைசூர் மாவட்டத்தின் நஞ்சன்கோடு ஏ.எஸ்.பி.யாகவும், கொப்பல் மாவட்டத்தின் எஸ்.பி.யாகவும் பணியாற்றினார். அப்போது, யூ.பி.எஸ்.சி. தேர்வின் இரு விருப்பப் பாடங்கள் ஒன்றாகக் குறைக்கப்பட்டது. இத்துடன் பொதுக் கல்வியிலும் பாடத் திட்டம் நான்காகக் குறைக்கப்பட்டது. இதனை அடிப்படையாக வைத்துத் தேர்வுக்குத் தயாரானவர் ஐந்தாவது முயற்சியில் ஐ.ஏ.எஸ். பெற்றார்.
“யூ.பி.எஸ்.சி. எழுத விரும்புபவர்கள் அதற்கு முன்பாக அதன் பழைய முதல்நிலை வினாத்தாள்களுக்கான பதிலை எழுதிச் சுயபரிசோதனை செய்வது முக்கியம். இந்தக் கேள்விகளைப் பாடங்களுக்கு ஏற்றபடி தனியாகப் பிரித்து எழுதினால் எதில் பின்தங்கியிருக்கிறோம் என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியும். இதைச் சோதித்துப் பார்க்கப் பயிற்சி நிலையங்கள் அவசியம் இல்லை. இதன் மூலமாக நமக்கு எதில் அதிகப்படியான பயிற்சி தேவை என்பதைக் கண்டுபிடித்து அதன் பிறகு பயிற்சி நிலையங்களை அணுகும்போது பலன் இருக்கும்.
குறிப்பாகக் கணிதம், அறிவியல் பாடங்களைச் சுயமாகப் படிப்பது கடினம். ஆகவே, கலை இலக்கியத் துறைகளில் பட்டம் பெற்றவர்கள் யூ.பி.எஸ்.சி. தேர்வில் கணிதம், அறிவியலை விருப்பப்பாடங்களாக எடுக்காமல் இருப்பது நல்லது. ஆனால், அறிவியலில் பட்டம் பெற்றவர்கள் பொது நிர்வாகம், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களை விருப்பப் பாடங்களாகத் தாராளமாக எடுக்கலாம்.
அடுத்து, ஒரே பாடத்தைத் தொடர்ந்து படிக்கும்போது சலிப்பு உண்டாகும், கவனச் சிதறல் ஏற்படும். இதனாலேயே ஒரு மணி நேரத்துக்கு மேல் அடுத்த பாடத்தை நான் படிக்க ஆரம்பித்துவிடுவேன். இந்த மாதிரிப் புதிய பாடங்களைப் படிக்கும்போது நம்முடைய புரிதல் திறன் புத்துணர்வு பெறும்.’’ என்று மாணவர்களுக்கு வழிகாட்டுவதோடு, தகுதி-திறமை பேசும் ஆதிக்க சக்திகளின் தலையில் ஓங்கிக் குட்டியுள்ளார்! வாய்ப்புக்கிடைத்தால் ஒடுக்கப்பட்டோர் சாதிப்பர் என்பதைச் செயலில் காட்டியுள்ளார். 

மூளையின் கூர்மை, சுறுசுறுப்பு, நினைவாற்றலுக்கு செய்ய வேண்டியவை!

மூளை எல்லோருக்கும் உள்ளது. அதுதான் உடலின் தலைமை நிலையம். மூளையின் கூர்மையும், நலமும், வளமும் அதன் செயல் திறனும் நன்றாக அமைய கீழ்கண்டவற்றை ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டும்.
1.தினமும் ஒருவாழைப்பழம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். காரணம், இதிலுள்ள “ட்ரிப்டோபன்’’, “டைரோசின்’’ என்ற அமினோ அமிலங்கள் மற்றும் “செரோடோனின்’’, “டோபமைன்’’ போன்ற இரசாயன சத்துக்கள்தான்.
கடினமான மூளை உழைப்பில் ஈடுபட்டாலும் சோர்வு ஏற்படாமல் தவிர்க்கவும், தொடர்ந்து சுறுசுறுப்புடன் வேலையில் ஈடுபடவும் இவை உதவுகின்றன.
வாழைப்பழத்தில் நிறைய உள்ள ‘சி’ வைட்டமின் மூளைக்குத் தேவையான ``நார் எபினெரின்’’ உருவாக்க உதவுகிறது. மூளையின் இரத்த நாளங்கள் சேதமடையாமலும் இது காக்கிறது.
2. பப்பாளி:
மூளையின் இரத்த நாளங்கள் சேதமடையாமல் இருக்க இதிலுள்ள ‘சி’ வைட்டமின் உதவுகிறது, மூளைக்குத் தேவையான செரட்டோன் கிடைக்க உதவும் ஃபோலிக் அமிலம் இதில் தேவையான அளவு உள்ளது. பப்பாளி கண் நலத்துக்கும், மலச்சிக்கல் வராமல் இருக்கவும் உதவும்.
3. கருப்பட்டி வெல்லம்:
பனஞ்சாற்றி-லிருந்து காய்ச்சி எடுக்கப்படும் கருப்பட்டி எனப்படும் பனை வெல்லம் மூளைச் சோர்வை நீக்க உதவுகிறது. இதிலுள்ள பி6, பி12 வைட்டமின்கள் அதற்கு உதவுகின்றன. வெதுவெதுப்பான சூட்டிலுள்ள பாலில் கருப்பட்டியைச் சேர்த்துக் குடித்தால் உடன் உற்சாகம் கிடைக்கும்.
4. சிவப்பரிசி:
இதிலுள்ள “வைட்டமின் பி’’ மூளைச் செயல் திறனை அதிகரிக்கிறது. இதில் உள்ள நயசின், தையமின், ஐனோசிடால் போன்ற ‘பி’ வைட்டமின்கள், ட்ரிப்டோபன் என்னும் அமினோ அமிலம், செரட்டோனாக மாற்றப்பட உதவுகின்றன.
இது மன அமைதிக்கும், நினைவாற்றலுக்கும், மன நிறைவிற்கும் உதவுவதோடு, நல்ல உறக்கம் வரவும் உதவுகிறது. மன அழுத்தம் வராமல் தடுக்கவும் இது பயன்படுகிறது.
5. மீன்:
புரதச் சத்து அதிகம் உள்ள மீனில் ‘டைரோசின்’ என்ற அமினோ அமிலம் அதிகம் உள்ளது. இதன் உதவியால் மூளைச் செல்கள் டோபமைன் என்னும், நியூரோடிரான் ஸ்மிட்டரை உருவாக்கு-கின்றன. இது சுறுசுறுப்பு, வேலைத் திறன் ஆகியவற்றை அதிகரிக்கிறது. நரம்பு மண்டலம் சிறப்பாகச் செயல்பட இவை உதவுகின்றன.
6. முட்டை:
மஞ்சள் கருவில் உள்ள கோலின், நியூரோடிரான்ஸ்மிட்டரைத் தயாரிக்க உதவுவதால் நினைவாற்றல் நன்றாக இருக்கும். கவனமாகவும், ஊன்றி உள்வாங்கவும் உதவுவதோடு, கவனச் சிதறலையும் தடுக்கிறது.
மூளை நரம்புச் செல்களைச் சுற்றியுள்ள செல்களுக்குத் தேவையான கொலஸ்ட்ரால் மஞ்சள் கருவில் உள்ளது. முட்டையில் உள்ள  ஞிபிகி என்னும் ‘ஒமேகா- 3’ என்னும் கொழுப்பு அமிலம் நரம்புச் செல்களின் இணைப்பிற்கு உதவுகிறது.
7. கீரைகள்: கீரைகளில் ஞிபிகி அமிலம் உள்ளது. வல்லாரைக்-கீரை நினைவாற்றலை தர அதிலுள்ள `ப்ரம்மிக் அமிலம்’ உதவுகிறது. இது குழந்தைகளின் மூளைக்கு டானிக் போன்றது. கீரைகள் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் நல்லது. பசலைக்கீரை மூளைக்கு பெரிதும் நலம் சேர்க்கும். மலிவானவை என்பதால் கீரைகள் ஏழைகள் கூட அதிகம் உண்ண ஏற்றவை.
8. வேர்க்கடலை:
மூளைக்கு வேர்க்கடலை மிகவும் நல்லது, உகந்தது. பாதாம், வால்நட் போன்ற விலை கூடுதலான பருப்பு-களைவிட இதுதான் சிறந்தது. இதில் வைட்டமின் ‘ஈ’ அதிகம். ஆக்சிஜன் எற்றத்திற்கு இது பெரிதும் பயன்படும். நரம்பு மண்டலத்தைப் பலப்-படுத்தவும். வேர்க்கடலை உதவுகிறது. இதிலுள்ள ‘தைமின்’ என்னும் அமினோ அமிலம் மூளை நரம்பு மண்டலத்திற்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. இதில் புரதம் நிறைய உள்ளது.
9. எள்:
இதிலுள்ள `செலினியம்’ என்னும் தாது உப்பு மூளை நரம்புகளை வலுவடையச் செய்கிறது. எள்ளில் உள்ள `ஜிங்க்’ என்னும் தாதுப்பொருள் நினைவாற்றலை அதிகரிக்கிறது. மூளை நலன் பாதுகாக்கப்படுவதற்கு எள் இன்றியமையாதது.
10. உறக்கம்: ஒரு நாளைக்கு ஏழு மணி நேர உறக்கம் கட்டாயம் தேவையாகும். இது மூளையின் நலத்திற்கும், சுறுசுறுப்பிற்கும் பெரிதும் பயன்படும். ஒரே வேலையைத் தொடர்ந்து செய்யாமல் வேலைகளை மாற்றி மாற்றி செய்தால் மூளை சோர்வடையாமல், சுறுசுறுப்படையும். 

உயிர்ப்பலியும் உடற்கேடும் உருவாக்கும் வெடிப்பொருட்களை உடனே தடை செய்க!

- மஞ்சை வசந்தன்
 “சல்லிக்கட்டு’’ விளையாட்டில் உயிரிழப்பும் விலங்குவதையும் இருக்கிறது என்று உச்சநீதி-மன்றம் வரை விவாதிக்கப்பட்டு தடை விதிக்கப்படுகிறது. ஒருசில மாடுகள் மிரளுவது “வதை’’; ஒருசிலர் இறப்பது உயிர்ப்பலி என்று கவலை கொள்ளப்படுகிறது; கண்டிப்புடன் தடை செய்யப்படுகிறது. சரி.

ஆனால், வெடிப்பொருட்களால் எத்தனை ஆயிரம் உயிர்கள் பலியாகின்றன; இந்தியாவே ஓரிரு வாரம் காற்று மாசால் கதிகலங்கிப் போகிறது. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி நிகழ்ந்தும் அரசும், நீதிமன்றங்களும் கண்டுகொள்ளாததும் கவலைப்படாததும் ஏன்?
வெடிப்பொருட்களால் என்ன பயன்?
பாறைகளைப் பிளப்பதற்குப் பயன்படுவதைத் தவிர மற்றபடி வெடிப் பொருட்களால் பயன் என்ன? விபத்தும் காற்று மாசும் வெடிப்பொருட்களின் இரு பக்கங்கள் என்பது கண்கூடான உண்மை. இதனை அறிய, உறுதி செய்ய பெரும் முயற்சிகள், ஆதாரங்கள் எதுவும் தேவையில்லை. அப்படியிருந்தும் தடை செய்யப்படாதது ஏன்?
பண்பாட்டைவிட மதம் உயர்வா?
சல்லிக்கட்டை நாம் ஆதரிப்பதில்லை. ஆபத்தோடு விளையாடுவதை வீரம் என்று நாம் எப்போதும் ஏற்பதில்லை. ஓடும் வாகனத்தில் ஏறுவதும், இறங்குவதும் எவ்வளவு பெரிய குற்றமோ அப்படித்தான் இதுவும் என்பதில் மாற்றுக் கருத்து நமக்கில்லை. என்றாலும், ஒரு இனத்தின் பண்பாடாக, வீரத்தின் வெளிப்பாடாக பன்னெடுங்காலமாய் நடத்தப்பட்டு வரும் சல்லிக்கட்டு விளை-யாட்டை தடை செய்யும் நீதிமன்றம், வெடிப்-பொருட்கள் உற்பத்தியையும், விற்பனையையும், வெடிப்பதையும் தடை செய்யாதது ஏன்? மதம் சம்பந்தப்பட்ட தீபாவளி விழா என்பதால் நீதிமன்றம் தயங்குகிறது என்பதுதான் உண்மை! அப்படியாயின் பண்பாட்டைவிட மதம் உயர்ந்ததா?
தீபாவளிக்கும் பட்டாசுக்கும் என்ன தொடர்பு?
தீபாவளி என்றால் தீபம் + ஆவளி = தீபாவளி. ஆவளி என்றால் வரிசை. ஆக, தீபாவளி என்றால் தீபவரிசை என்பதே பொருள்.
சமண மதத்தின் 24ஆம் தீர்த்தங்கரர் உபதேசம் செய்து கொண்டிருக்கையில் விடியற்-காலை இறந்துவிட்டார். அதன் நினைவாய் அகல்விளக்கை வரிசையாய் ஏற்றி வழிபட்டனர். அதுவே தீபாவளி.
ஆனால், சமணப் பண்டிகையை இந்துப் பண்டிகை ஆக்க நரகாசுரன் கதை புனைந்தனர். நரகாசுரன் கதைக்கும் தீப வரிசைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? ஆக, எந்த உண்மையும் இல்லாத, பொய்க் கதையைப் பின்புலமாகக் கொண்டு கொண்டாடப்படும் தீபாவளிக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும்? அரசு தவறு செய்தாலும் நீதிமன்றம் செய்யலாமா?
விளக்கு வரிசைப் பண்டிகைக்கு விளக்கு தானே ஏற்ற வேண்டும்? வெடி வெடிப்பது ஏன்? சிந்திக்க வேண்டாமா? இன்னும் சொல்லப் போனால், வெடிதான் தீபாவளியின் அச்சாணி என்று ஆக்கிவிட்டார்களே!.
மூடநம்பிக்கையில், மூடக் கொண்டாட்டத்-தில் இளைய தலைமுறையினரை என்றென்றும் ஈர்த்து வைத்திருப்பதற்கான கவர்ச்சித் திட்டந்தானே இது?
மதவாதிக்கு சுயநலம்; ஆதிக்க முனைப்பு; சுரண்டல் நோக்கு. ஆனால், நீதிமன்றங்கள் வெடிப்பொருட்களை அனுமதிக்கலாமா? மக்கள் உயிருக்கும், உடலுக்கும் பெரும் தீங்காய் அமையும் வெடிப் பொருட்களை தடை செய்ய காலம் தாழ்த்தலாமா?
கட்டுப்பாடுகள் தீர்வல்ல:-
இந்த இடத்தில்தான் விற்க வேண்டும். இந்த இடத்தில்தான் வெடிக்க வேண்டும். இத்தனை மணிவரைதான் விற்கவோ வெடிக்கவோ வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும், நிபந்தனை-களும் தீர்வுகள் ஆகா. அவை பாதிப்புகளை குறைக்க உதவுமேயன்றி, நீக்க உதவா.
நீதிமன்றங்களின் கட்டாயக் கடமை!
கோடிக்கணக்கான குழந்தைகள், நோயாளி-கள் உடலாலும் மனதாலும் பாதிக்கப்படு-கின்றனர். ஒரே நாளில் இந்தியா முழுவதும் வெடிக்கப்படுவதால் காற்று மண்டலமே மாசடைந்து சுவாசிக்கத் தகுதியற்றதாக்கப்-படுகிறது.
வெடிப்பொருட்களால் காற்று மாசு அடைவதோடு, நில மாசு, நீர் மாசும்  ஏற்படுகிறது. தீவிபத்துகள் ஆயிரக்கணக்கில் நிகழ்ந்து உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்படுகிறது.
எனவே, அரசைவிட நீதிமன்றங்கள்தான் பொதுநல நோக்கில் தாங்களே வழக்கைப் பதிவு செய்து, வெடிப்பொருட்களுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்; விபரீதங்களைத் தடுக்க வேண்டும்.
தலைவர்களின் கடமை:
சமூக ஆர்வலர்கள்; ஆசிரியர்கள், ஊடகங்கள், திரைத்துறையினர் வெடிப்-பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும்.
நடிகர் விஷால் வெடி வெடிக்காதீர்கள் என்று துணிவுடன் வேண்டுகோள் விடுத்துள்ளது பாராட்டத்தக்கது. மற்றவர்களும் அதைப் பின்பற்ற வேண்டும்.
பிள்ளைகள் விளைவுகளை அறியாது, ஆர்வத்தில் ஆவல் கொள்வது இயற்கை. அவர்களுக்கு பெரியவர்கள் பெற்றோர்கள்தான் எடுத்துச் சொல்லி, வழிகாட்டி கட்டுப்படுத்த வேண்டும்.
ஒலி அளவு கட்டுப்பாடு பின்பற்றப்படாமை!
இவ்வளவு அளவு ஒலி எழுப்பும் வெடிப் பொருட்கள்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு அறவே கடைபிடிக்கப்-படுவதில்லை.
யார் வெடிப்பது அதிக சத்தம் எழுப்புகிறது என்று போட்டி போட்டுக் கொண்டு அதிக சத்தமுள்ள வெடியை வெடிக்கின்றனர்.
ஆயிரம் வெடி, அய்யாயிரம் வெடி, பத்தாயிரம் வெடி என்று ஒரே நேரத்தில் ஒரேயிடத்தில் தொடர்ந்து வெடிக்கப்படுவதால் உடலும் உள்ளமும், செவியும் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் அளவுக்கு அதிகமான புகையால் மூச்சுத்திணறலும், நுரையீரல் நோய்களும் ஏற்படுகின்றன.
எல்லா நிகழ்வுகளிலும் வெடிப்பொருட்கள்:
தீபாவளிக்கு தொடங்கிய வெடிக் கலாச்சாரம் இன்றைக்கு அரசியல்வரை நீட்சி பெற்றுள்ளது.
கோயில் விழாக்களில் வெடிவெடிப்பது பெரும் பொருட்செலவில் நடத்தப்படுகிறது.
பிறந்த நாள், திருமணம், ஊர்வலம், இறப்பு, இறுதி ஊர்வலம் என்று எதற்கெடுத்தாலும் வெடி வெடிக்கப்படுகிறது. வெற்றியைக் கொண்டாட வெடிதான் முதன்மை இடம் வகிக்கிறது.
தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட வெடி கார்த்திகை தீபத்திலும் வெடிக்கப்படுகிறது. ஆக, வெடிப்பொருள் பயன்பாடு என்பது ஆடம்பரத்தின், ஆரவாரத்தின் அடையாள-மாகி-விட்டது.
சாலைகளில், பொது இடங்களில், கடைவீதிகளில் முன் அறிவிப்பின்றி திடீர் திடீர் என்று வெடிக்கப்படுகிறது. மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடும் அவலம் நடக்கிறது.
தடை செய்யப்பட்ட இரசாயனக் கலப்பு
தடை செய்யப்பட்ட பொட்டாசியம் குளோரைடு, சோடியம் குளோரைடு போன்றவற்றை பயன்படுத்தி வெடிகள் தயாரிப்பதால் கொடிய பாதிப்புகள் விளைகின்றன.
விபத்துகளில் சில:
1. டிசம்பர் 23, 1995 அரியானா மாநிலம், தப்வாலி என்ற ஊரில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 442 பேர் மரணமடைந்தனர். இதில் அதிகம் பள்ளிக் குழந்தைகள் ஆவார்கள்.
2. செப்டம்பர் 15, 2005 பிகாரில் உள்ள சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலை வெடித்து சிதறியதில் 36 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.
3. ஏப்ரல் 16, 1990 பிகார் மாநிலம் பட்னா சென்று கொண்டிருந்த ஓடும் ரெயிலில் பட்டாசு வெடித்து சிதறியதில் 7 பேர் மரணம். 12 பேர் காயம்.
4. ஜூன் 9, 2011 சென்னை பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் செகுசுப் பேருந்தில் பட்டாசு பார்சல்களை கொண்டு சென்றபோது பார்சல்-கள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பிடித்ததால் 31 பேர் மரணமடைந்தனர்.
5. நவம்பர் 20, தலைநகர் டில்லியில் திருமண விழாவில் வெடிக்க வைத்திருந்த பட்டாசுகள் பெட்டிகளில் தீப்பொறி பட்டு பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் மரணமடைந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
6. அண்மையில் சிவகாசி கடைவீதியில் வேனிலிருந்து பட்டாசுகள் இறக்கப்பட்ட போது வெடிகள் வெடித்துச் சிதறி ஸ்கேன் சென்டர் எரிந்து 10 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
அடுத்து கோவை காந்தி பார்க் அ-ய்.ஏ.எஸ். அகாடமியில் வெடிகளால் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயம் அடைந்தனர்.
விழுப்புரம் வானூர் அருகே துருவை கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும்போது வெடித்து விபத்து ஏற்பட்டதில் 5 பேர் இறந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
இப்படி ஒவ்வொரு நாளும் இச்செய்திகள் வந்த வண்ணம் உள்ளதால்அரசும் நீதிமன்றமும் உடன் தலையிட்டு வெடிப் பொருட்கள் தயாரிப்பை கட்டாயம் தடைசெய்ய வேண்டும்.

Thursday, October 20, 2016

அரை வேக்காடு ஆரிய அம்பிக்கு அவசரமோ அவசரம்! - (தினமணி’ கட்டுரைக்கு எதிர்ப்பு)

அரை வேக்காடு ஆரிய அம்பிக்கு
அவசரமோ அவசரம்!
கருத்துக்கேட்டு காலம் தாழ்த்தாது
புதிய கல்விக் கொள்கையை உடனே அமல்படுத்த வேண்டுமாம்!

(‘தினமணி’ கட்டுரைக்கு எதிர்ப்பு)

- மஞ்சை வசந்தன்

சொல்பவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முதன்மையாளர்! பல்கலைக்கழகம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்). அம்பியின் பெயர் எஸ்.வைத்திய சுப்பிரமணியம். ‘தினமணி’ வைத்தியநாத அய்யருக்குப் பொருத்தமானவர்.

பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒருவர் அதற்கேற்ற நிதானத்தோடு, தொலைநோக்கோடு, சமுதாய அக்கறையோடு, மனித நேயத்தோடு, மாணவர் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு, சமூகச் சூழலை, சமூகத்தில் உள்ள பல்வேறு படிநிலைகளை, ஒடுக்கு முறைகளை, உரிமைப் பறிப்புகளை உற்றுநோக்கி கருத்துக் கூறவேண்டும். அதுவும் கல்வியில் கொள்கை வகுக்கும்போது மிகக் கவனத்துடன், ஒரு முறைக்குப் பலமுறை ஆய்வு செய்து, ஒருவருக்கு பலர் விவாதித்து சாதக பாதக விளைவுகளை அறிந்து செய்ய வேண்டும்.

ஆனால், இந்த அரைவேக்காட்டிற்கு அவற்றைப் பற்றியெல்லாம் அக்கறையில்லை. “வெந்தது போதும் முந்தானையில் கொட்டு” என்ற சுயநல முனைப்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவரின் கட்டுரையின் தொடக்கமே அபத்தம். இப்படிப்பட்ட அபத்தக் கட்டுரைகள் வைத்தியநாதர் ஆசிரியராய் வந்தபிறகு ‘தினமணி’யில் அடிக்கடி வெளிவருகின்றன.

“வீட்டிற்கு வந்த விருந்தாளி தாகத்திற்கு ஏதாவது கேட்டால், அவருக்குச் சர்க்கரை இருக்கிறதா? ரத்தக் கொதிப்பு இருக்கிறதா? என்று கேட்டு அதற்கேற்ப பழச்சாற்றையோ, குளிர்பானத்தையோ, மோரையோ, காபி, டீ போன்றவற்றையோ கொடுக்க மாட்டோம். இருப்பதைக் கொடுப்போம். அதேபோல் கல்வித் துறையில் அடிப்படைச் சிக்கலுக்கு உடனடித் தீர்வுகளைக் கொடுக்க வேண்டும். பகுப்பாய்வாளர்களும், படித்தவர்களும் பெரிய பெரிய சிக்கல்களை எல்லாம் பட்டியலிட்டு, மேம்பாட்டிற்கு வேகத் தடையாக இருக்கக் கூடாது”.
இதுவே அவரது கட்டுரையின் தொடக்கம். இதுவே இவர் தரமும், திறனும், சமூகப் பொறுப்பும், நுட்பமும் எப்படிப்பட்டவை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அது மட்டுமல்ல. இப்படிப்பட்டவர்களையெல்லாம்  பணியமர்த்தியுள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் தரமும், தகுதியும், நோக்கும், போக்கும் எப்படிப்பட்டது என்பதையும் காட்டுகிறது.

130 கோடி பேர் கொண்ட ஒரு பரந்துபட்ட  நாட்டின் கல்விக் கொள்கையை வகுக்கும்போது எவ்வளவு பொறுப்போடும், பொறுமையோடும், கவனத்தோடும், நேர்மையோடும் செயல்பட வேண்டும் என்பது ஒரு சாதாரண மனிதனுக்கே புரியும். ஆனால், இந்த சாஸ்த்ரா பல்கலைக்கழக முதன்மையருக்குப் புரியவில்லை!

விருந்தாக வந்தவருக்கு தாகந் தணிக்க பானம் தரும் விஷயமா கல்விக் கொள்கை? மூளைக் கோளாறு உள்ளவர் தவிர வேறு யார் இப்படிக் கூறுவர்?

விருந்தாக வந்தவரின் நலத்தைப் பேண வேண்டியது விருந்து கொடுப்பவரின் தலையாய கடமை. அவருக்கு எது உகந்ததோ அதைக் கொடுத்து உபசரிப்பதுதான் விருந்தோம்பலின் மாண்பு. அவரின் உடல் நிலைக்கு எது தவிர்க்கப்பட வேண்டுமோ அதைத் தவிர்த்து, எது உகந்ததோ அதைத்தான் கொடுக்க வேண்டும்.

ஆனால், இந்த அம்பி அப்படியெல்லாம் கவலைப்பட மாட்டாராம். எது இருக்கோ அதைக் கொடுத்து உனக்கு பாதகமாய் இருந்தாலும் குடி என்பாராம்! எப்படிச் சிரிப்பது? எதனால் சிரிப்பது?

கல்விக் கொள்கையை உடனடியாக நிறைவேற்றிவிட வேண்டுமாம். பகுப்பாய்வாளர்களை, படித்தவர்களையெல்லாம் கேட்டு அதற்கேற்ப செயல்படக் கூடாதாம். அதனால் அரசின் செயல் வேகம் பாதிக்குமாம். படித்தவர்களை, கல்வியாளர்களை, சமுதாயத்தில் அக்கறையுள்ளவர்களை கருத்துக் கேட்பது வேகத் தடையாம்! சுத்த சுயநலக்காரர்கள். அடுத்தவர்களை ஒடுக்கி ஆதிக்கம் செலுத்த விரும்பும் ஆதிக்கக்காரர்களைத் தவிர இக்கருத்தை எவர் கூறுவர்? எவர் வெளியிடுவர்?

கல்விக் கொள்கை இது ஒன்றும் புதிதல்ல. இவரே ஒத்துக் கொள்கிறார். ஒவ்வொரு முறையும் கல்விக் கொள்கை வரும்போது கருத்தறிந்து, பரிசீலனை செய்து விவாதித்துதான் முடிவு செய்யப்படும். அப்படியிருக்க இவருக்கும் ‘தினமணி’ வைத்தியநாத அய்யருக்கும் அப்படியென்ன அவசரம் வந்தது?

கல்வித் துறையின் அடிப்படைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வு காண, கருத்துக் கேட்காமலே, விவாதிக்காமலே, பரிசீலிக்காமலே, சாதக பாதக விளைவுகளை ஆராயாமலே அமல்படுத்தி விடவேண்டுமாம்; காலவிரயம் கூடாதாம். ஆகா, என்னே அவசரம்! என்னே சமுதாய அக்கறை!

மோடியால் கொண்டுவரப்படுவதால், கல்வி காவிமயமாக்கப்படுவதாக ஓலமிடுகிறார்களாம்! கண்டுபிடித்து விட்டார் இந்த அறிவாளி! கொண்டுவருவது மோடியா? கேடியா? என்பதல்ல இங்கு பிரச்சினை. கொண்டுவரப்படுவதில் என்னென்ன உள்ளன? என்ன நோக்கத்தில் கொண்டுவரப்படுகிறது? யாருக்கு இதனால் சாதகம்? யாருக்கு இதனால் பாதகம்? என்பவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் கல்வியாளர்களும், சமுதாய இயக்கங்களும், ஒடுக்கப்பட்டோர் நலனில் அக்கறையுள்ளவர்களும், பண்பாட்டுப் படையெடுப்பு தடுக்கப்பட வேண்டும், மொழி மேலாதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அக்கறையுள்ளவர்களும் எதிர்க்க வேண்டியவற்றை எதிர்க்கிறார்கள்; ஏற்க வேண்டியவற்றை ஏற்கிறார்கள்.

“புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்குக் காரணம், இக்கொள்கை சிறுபான்மையினர் கல்வி நிலைய  கோட்பாடுகளில் குறுக்கிடுகிறதோ என்ற அச்சம்தான்” என்பது  இவரது இன்னொரு கண்டுபிடிப்பு.

கொல்லைப்புற வழியாக குலக்கல்வியைக் கொண்டுவரும் முயற்சி; வழக்கொழிந்த சமஸ்கிருதத்தை எல்லோர் மீதும் திணித்து ஆயிரக்கணக்கானோர் மட்டுமே பேசும் அம்மொழியை ஆட்சி மொழியாக்கும் முயற்சி; முதல் தலைமுறை கல்வி பயிலும் பிள்ளைகளின் கல்வியை இடையிலே முறித்து குலக்கல்விக்கு மடை மாற்றும் மோசடி; கிராமப்புற ஏழைகளுக்கான தாய்மொழி வழிக் கல்வியை ஒழித்துக் கட்டி, மேல்தட்டு மக்களுக்கான சி.பி.எஸ்.சி. கல்வியை ஊக்குவிப்பதன் மூலம், கிராமப்புற அடித்தட்டு மாணவர்கள் அறவே தலையெடுக்காமல், உயர் பதவிகளுக்கு வரவொட்டாமல் தடுக்கும் சூழ்ச்சி போன்ற எத்தனையோ கேடுகளை தன்னகத்தே கொண்டுள்ள இக்கல்வி முறையை, எதையும் பரிசீலிக்காமல் கொண்டுவர வேண்டும் என்று துடிதுடிப்பதன் நோக்கம் என்ன? அவாள் ஆதிக்கத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற ஆவல்தானே? அக்கறைதானே?

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கு விசேஷ உரிமைகளை அரசு வழங்கியது. அது தவறாகப் பயன்படுத்தப்பட்டு கல்வி வணிகத்திற்கு உதவுகிறது என்பதால், புதிய கல்விக் கொள்கை இச்சிறப்புரிமை தேவையற்றது என்கிறது என்கிறார் இந்த அதிமேதாவி.

இதுதான் ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். பரிவார புத்தி என்பது. புதிக கல்விக் கொள்கையின் பாதிப்புகளில் சிறுபான்மையினருக்கான சில சலுகைகள் பாதிப்பு உண்டு. ஆனால், அதற்காக மட்டும் புதிய கல்விக் கொள்கை எதிர்க்கப்படவில்லை. மாறாக, மேலே நாம் கூறிய, தலைமுறை பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் புதியக் கல்விக் கொள்கையில் உள்ளன என்பதால்தான் எதிர்க்கப்படுகிறது. ஆனால், முழுப் பூசணிக்காயைப் பிடி சோற்றில் மறைப்பது போல, எல்லா உண்மையையும் மறைத்துவிட்டு, சிறுபான்மையினர் சலுகையை மட்டும் சுட்டிக்காட்டி, இந்துக்களை உசுப்பி வெறியேற்றவும் பிரச்சினையை திசைதிருப்பவும் இவர் முயல்வதன் தில்லுமுல்லு தெள்ளத் தெளிவாய்த் தெரிகிறது.

கல்யாண வீட்டில் விருந்தில் உப்புக் குறைவாகவுள்ளது என்பதற்காக கல்யாணத்தை நிறுத்தக் கூடாது. அதுபோல குறைகளுக்காக புதியக் கல்விக் கொள்கை தடைப்படுவது தேவையற்றது என்று மீண்டும் சாப்பாட்டு உதாரணம் தருகிறார் இவர்.

நம் பிள்ளைகளின் தலைமுறைப் பாதிப்பு, ஒடுக்கப்பட்டோரை ஒழிக்கும் முயற்சி, சமஸ்கிருதத் திணிப்பு, மாநிலக் கல்வியை உதவாததாக்கி, மத்தியக் கல்வியை தூக்கிப் பிடித்து, ஏழைகளை, தாய்மொழி வழிப் பயில்வோரை வேலைவாய்ப்பிற்குத் தகுதியற்றவராக்கி, இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் சூழ்ச்சிக் கொள்கைகளைக் கொண்டது இப்புதியக் கல்விக் கொள்கை என்ற மிகமிக முதன்மையான காரணங்களை அறவே மறைத்துவிட்டு, சிறுபான்மையினர் சலுகை என்பதைக் காரணமாகக் காட்டி மத மோதலுக்கு, வெறுப்பிற்கு வழிவகுக்கும் வேலையை இவர் செய்திருக்கிறார்.

தலைமுறைத் தலைமுறையாய் படித்து உத்தியோகத்தையும், அதிகாரத்தையும் தன் கையில் வைத்துள்ள ஆதிக்கக் கூட்டத்திற்கு அப்படி என்ன அவசரம் வந்துவிட்டது? பி.ஜே.பி ஆட்சியிலே நினைத்ததைச் சாதித்துத் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஆர்வம் என்பதைத் தவிர இவர் அவசரத்திற்கு வேறு காரணம் இருக்க முடியும்?

மனுதர்ம காலம் மலையேறி விட்டது.  மாணவர் சமுதாயம் இந்தியா முழுவதும் விழிப்பும் எழுச்சியும் பெற்றுவருகிறது. இனி ஏமாற்று வேலைகள் எடுபடாது. பாதிப்புகளை அகற்றிய பின்புதான் புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தப்பட விடுவோம் என்பதை இவர்களுக்குத் திட்டவட்டமாய் தெரிவித்துக் கொள்கிறோம்! தீவிரமாயும் தெரிவித்துக் கொள்கிறோம்!

Friday, October 14, 2016

பித்தலாட்டமே உன் பெயர் பி.ஜே.பி.யா?


- மஞ்சை வசந்தன்

தொலைக்காட்சி விவாதம். பி.ஜே.பி நாராயணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இரவிக்குமார் பங்கேற்று வாதிட்டனர்.

அப்போது சமூகநீதி சார்ந்து பேச்சு வந்தது. சமூகநீதி என்றாலே பெரியாரும், திராவிடர் கழகமுமே முதன்மை என்பது அனைவரும் அறிந்த உண்மை என்றார் இரவிக்குமார்.

அதைப் பொறுக்கமுடியாத நாராயணன், திராவிடர் கழகத்திற்கும், பெரியாருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? “மண்டல் குழு தமிழகம் வந்தபோது சந்திக்காதவர் திராவிடர் கழக வீரமணி’’ என்று பித்தலாட்டமான ஒரு பொய்யைச் சொன்னார்?

பச்சைப் பொய் சொல்லுதல், பித்தலாட்டமாய் பேசுதல், உண்மைகளைத் திரித்தல் என்பது பி.ஜே.பி பரிவாரங்கள் இயல்பு, வாடிக்கை, யுக்தி!

நெறியாளராய் அமர்ந்தவர் அதைப் பற்றி பெரிதாய் அதிர்ச்சியடையவில்லை! அவருக்கோ, நாராயணனுக்கோ உண்மை தெரியவில்லை என்ற கொள்வதா? சொல்வதா? அல்லது தெரிந்தும் பித்தலாட்டமா? என்பதே விவாதத்திற்கு, ஆய்வுக்கு உரியது!

தெரியாததை வலுவாகக் கூறி வாதிடுவது அயோக்கியத்தனமாகுமே!

மண்டல் குழு சாதனைகள் அனைத்தும் திராவிடர் கழகமும் அதன் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களும் சாதித்தவை!

சமூகநீதியின் உற்றுக் கண்ணையே மாற்றி ஏமாற்ற முயல்வது முதல்தர மோசடியல்லவா?

எனவே, பி.ஜே.பி சார்ந்த குழுக்களும், அதன் ஊதுகுழல்போல சுயநலத்திற்காய் ஊடக தர்மத்தைப் புறந்தள்ளி செயற்படும் ஊடகங்களும், உண்மை அறியா மக்களுக்கும் தெளிவாய்த் தெரிய மண்டல் சார்ந்த உண்மைகளை இங்கு சுருக்கமாக இந்த நேரத்தில் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

மண்டல் குழுவின் தமிழக வருகை

பிற்படுத்தப்பட்டோரின் சமூக நிலையினை அறிந்து அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முதலில் அமைக்கப்பட்ட காகா கலேல்கர் குழுவின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்திலேயே கூட வைத்து விவாதிக்கப்படாத நிலையில், இரண்டாவது  பிற்படுத்தப்பட்டோர் குழு ஜனதா அரசால் அமைக்கப்பட்டது. பீகார் மேனாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிந்தோஷ் பிரசாத் மண்டல் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் மகாராஷ்டிர மாநில மேனாள் தலைமை நீதிபதி போலே, ஜனதா கட்சி பொதுச்செயலாளர் சுப்ரமணியம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

30.06.1979 அன்று சென்னை வந்த இக்குழுவினரை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து கழகத்தின் சார்பிலான கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

அன்று மாலை சென்னை பெரியார் திடலில் தென்னக இரயில்வே பிற்படுத்தப்பட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் இக்குழுவிற்கு வரவேற்பு மற்றும் கோரிக்கை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வந்த அக் கமிஷன் உறுப்பினர் சுப்பிரமணியம் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் ரமணிபாய், வலம்புரிஜான் ஆகியோர் உடன் வந்தனர்.

இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தலைவரான பி.பி.மண்டல், அதன் உறுப்பினர்களான ஜஸ்டிஸ் போலே, சுப்ரமணியம், ஜனதா பொதுச் செயலாளர்-களான வலம்புரி ஜான், இரமணிபாய் ஆகியோர் உரையாற்றினர்.
இதில் பேசிய மண்டல் கமிஷன் உறுப்பினர் சுப்ரமணியம் அவர்கள் தமது உரையில், “பிற்படுத்தப்பட்டோரின் தந்தையான பெரியார் நூற்றாண்டு விழாவில் இப்படி ஒரு ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. மனிதனை மனிதனாக வாழவைக்க தனது காலம் முழுவதும் புரட்சி செய்தவர் பெரியார். அந்த காலம் வந்துவிட்டது. கிராமம் கிராமமாக சென்று பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்று சேர்க்க வேண்டும். நண்பர் வீரமணி இதை செய்வார், நாங்கள் என்றென்றும் உங்களுடன் இருப்போம்’’ என்றார்.

பின்னர் பேசிய மண்டல் குழு உறுப்பினரும், மராட்டிய மாநில மேனாள் தலைமை நீதிபதியுமான போலே அவர்கள் தமது உரையில், “வடநாட்டில் பெரியார் தோன்றாத காரணத்தால்தான் அங்கே பிற்படுத்தப்பட்ட மக்கள் மிக மோசமான நிலையில் உள்ளார்கள். இங்கே தந்தை பெரியாரின் உழைப்பால் ஓரளவு வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

பார்ப்பனியம் இன்னும் உயிரோடு உதைத்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் தரப்போகும் அறிக்கையை குழிதோண்டி புதைத்து விடுவார்கள். அதிகார வர்க்கத்தில் இன்னும் அவர்கள் ஆதிக்கம் ஒழியவில்லை. நாம் ஏமாந்தால் பார்ப்பனியம் நம்மை அழித்துடும்’’ என்று கூறினார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும்போது, “பிற்படுத்தப்-பட்டோர் கமிஷன் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதைக் கண்டு பெருமிதப்படுகிறோம். நீங்கள் மூன்று பேரும் மூன்று முத்துக்களாக எங்களுக்கு கிடைத்திருக்கிறீர்கள்.

நீங்கள் தரப்போகும் அறிக்கை -_ குமுறிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பிற்படுத்தப்-பட்ட சமுதாய மக்களின் நல்வாழ்வுக்கு வழி செய்யப் போகிறது என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கு உண்டு. துணிந்து செல்லுங்கள்! உங்களுக்குப் பின்னாலே கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட சமுதாயம் அணிவகுத்து நிற்கிறது _ என்றும் நிற்கும்.

நீங்கள் தரப்போகும் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிக்கையை இந்த முறையும் அரசின் அலமாறியில் தூங்கிக் கொண்டிருக்க நாங்கள் விடமாட்டோம்! விடமாட்டோம்!’’ என்று கூறினார்.

பின்னர் உரையாற்றிய பி.பி.மண்டல் அவர்கள், “நான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் அல்ல, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் உங்களிடம் பேசுகிறேன்.

நாங்கள் தரப்போகும் அறிக்கை நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்களோ அப்படி அமையப் போவது உறுதி. ஆனால், அதிகார வர்க்கமாக இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கூட்டம் எல்லாம் உயர்ஜாதிக்காரர்கள்தான் என்பதை மறந்து விடாதீர்கள்! அந்த அதிகார வர்க்கம் இந்த அறிக்கையை செயல்படுத்த விடாமல்தான் முட்டுக்கட்டை போடும்.

அதை செயல்படுத்த செய்ய வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது.

பெரியார் பிறந்த மண்ணில் தோன்றிய நீங்கள் அந்த எண்ணவோட்டத்தை உருவாக்க வேண்டிய சக்தியை பெற்றிருக்கிறீர்கள்.

இது பெரியாரின் மண் இந்த மண்ணில் நான் ஏராளமாக தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன். வடநாட்டிலே பிற்படுத்தப்பட்டோருக்கு டாக்டர் லோகியா உழைத்தார். பிற்படுத்தப்-பட்டவர்களை, “சூத்திரர்கள்’’ என்றுதான் அவர் அழைப்பார். சூத்திரர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தார். தலைமுறை தலைமுறையாக இந்த சமுதாயம் சுரண்டப்பட்டு, அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பெரியார் உழைத்தார். அண்ணா பாடுபட்டார். ஆனாலும், பிற்படுத்தப்பட்ட சமுதாயம் இன்னும் முன்னேறாமல் இருந்து வருகிறது.

மார்க்சிஸ்ட்டு கட்சிக்காரர்கள் ஆளும் மேற்கு வங்கத்திலும் சரி, இந்திய கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலத்திலும் சரி, இராஜஸ்தான் போன்ற ஜனசங்கத்தினர் ஆளும் மாநிலத்திலும் சரி பிற்படுத்தப்-பட்டோர் பற்றி சிந்திப்பதே இல்லை. அப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே அவர்கள் கருதுவதில்லை.

எங்கள் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த கர்ப்பூரி தாகூர் அவர்கள் 62% பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20% இடஒதுக்கீடு செய்தார். அதைக்கூட உயர்ஜாதிக்காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இந்த நாட்டில் அதிகார வர்க்கம் தான் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. அய்.ஏ.எஸ்.களாகவும் அய்.பி.எஸ்.களாகவும் இருக்கும் உயர்ஜாதி வர்க்கம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த சலுகையும் கிடைத்துவிடாது முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதுகாப்பு இல்லாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் பிற்படுத்தப்பட்ட மக்களாகிய உங்களையெல்லாம் பார்த்துக் கேட்டுக் கொள்வதெல்லாம் உங்களுக்குள்ளே ஜாதி வேற்றுமையில் பிளவுபட்டு நிற்காதீர்கள். 

இமயம் முதல் குமரிவரை எல்லா பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக ஓரணியில் நிற்க வேண்டும்.

காகாகலேல்கர் கமிஷன் அறிக்கையை செயல்படுத்தாமல் கிடப்பிலேயே போட்டு-விட்டார்கள். அதேபோல் நாங்கள் கொடுக்க இருக்கும் அறிக்கையையும் செயல்படுத்துவர் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. உயர்ஜாதி அதிகார வர்க்கம் இதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கும்.

எனவே, இதற்கு ஆதரவாக மக்கள் சக்தியை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த அறிக்கையை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது’’ என்று உரையாற்றினார். 

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சலுகைகள் என்றவுடன் உயர்ஜாதியினர் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்து விடுகின்றனர் என்ற பி.பி.மண்டல் அவர்கள் பேசியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்து ஏடு விஷமத்தனமாக செய்தி வெளியிட்டிருந்தது. அதையும் மறுநாள் விடுதலை ஏடு தலையங்கம் மூலம் கண்டித்தது.

உண்மைகள் இவ்வாறு இருக்க, வெந்ததைத் தின்றுவிட்டு வந்ததை உளறுவதுபோல் உளறுவது கண்டிக்கத்தக்கதாகும். ஊடக நெறியாளர்கள், சமூகநீதி வரலாறுகளை, இயக்க வரலாறுகளை நன்றாக கற்றறிய வேண்டும. பேசப்படும் தலைப்பு சார்ந்தவற்றை நன்கு தெரிந்து, புரிந்து நிகழ்வில் நியாயம் நிலைக்க துணை நிற்க வேண்டும். இல்லையேல், ஊடகங்களின் சொந்த நோக்கத்திற்காக உண்மைகளை மறைத்து திரித்து வெளிப்படுத்துவது, வெளிச்சம் போடுவது குற்றச் செயல்பாடு மட்டுமல்ல, மக்களுக்கு எதிரான செயல்பாடும் ஆகும்!

பெரியார் மண்ணில் திரிபுகளும், தில்லுமுல்லு பிரச்சாரங்களும் எடுபடாது. மோசடிகளை முழுவதுமாய் திராவிடர் கழகம் தகர்க்கும் என்பதை நினைவில் கொண்டு இனஎதிரிகள் பேசவேண்டும்! 

Friday, October 7, 2016

சுப்ரமணியசாமி வடிவில் ஆரிய பார்ப்பன அயோக்கியத்தனம் பாரீர்!

சுப்ரமணியசாமி வடிவில் 
ஆரிய பார்ப்பன அயோக்கியத்தனம் பாரீர்!..................

செல்வி செயலலிதா மருத்துவமனையில் உள்ளார். அரசு நிர்வாகம் நடந்து கொண்டுதானிருக்கிறது! அவரைப் பற்றிய உண்மை நிலையைக் கூறி, அரசு நிர்வாகத்தில் தொய்விருந்தால் அதை சரிய செய்ய வேண்டும். அல்லது புதிய முதல்வரைத் தேர்வு செய்ய கேட்க வேண்டும். இப்படித்தான் நியாயமான மனிதர்கள் கேட்பார்கள்.
ஆனால், ஆரிய பார்ப்பன சுப்பிரமணியசாமிக்கு முதல்வர் உடல்நிலைப் பற்றி கவலையில்லை.
தமிழ்நாட்டு மக்களைப் பற்றிக் கவலையில்லை. ஆரிய பூணூல் ஆதிக்கத்தை எப்படியாவது கொண்டுவந்து அவசரகால நிலையைப்போல ஆட்சி செய்ய வேண்டும் என்று அரிப்பெடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற தலைமைச் செயலரைக் கொண்டு ஆட்சி நடத்த வேண்டுமாம்.
தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ். தீவிரவாத அமைப்பு தென்மாவட்டங்களில் வந்துவிட்டதாம். திராவிடர் கழகம், விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் போன்றவ்ற்றின் கூட்டில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாம்.
எப்படிங்க!
ஐஎஸ்ஐஎஸ். தீவிரவாதம் கேரளாவில் பரவி உள்ளது என்பதுதான் அண்மைச் செய்தி. ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டுமென்றால், கேரளாவில் கொண்டு வர வேண்டும்! ஆனால், அங்கு கொண்டுவரச் சொல்லி இந்த ஆள் கேட்கவில்லை!
மத்திய புலனாய்வுத் துறை தமிழகத்தில் 11 பேரை விசாரணை செய்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 11 பேர் ஐஎஸ் இயக்க செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.
ஐஎஸ் ஆதரவாளர் என்பதால் அவர்களை கைது செய்ய முடியாது என்று கூறியுள்ளது. உண்மை இப்படியிருக்க இல்லாத ஒன்றுக்கு, தொண்டு இயக்கமான திராவிடர் கழகத்தைத் தொடர்புபடுத்தி பழி தீர்க்கத் துடிப்பது பச்சை அயோக்கியத்தனம் அல்லவா?
உச்சநீதி மன்ற உத்தரவை மதிக்காது நடக்கும் கர்நாடக ஆட்சியைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்! என்று இந்த ஆள் கூறவில்லை.
மாறாக, முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என்பதற்கு குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டும் என்பதைவிட கோமாளித்தனம், பைத்தியக்காரத்தனம் வேறு இருக்க முடியுமா? இதைவிட அநியாய கோரிக்கைதான் இருக்க முடியுமா?
திராவிடர் கழகம் என்றைக்கு வன்முறையில் ஈடுபட்டது? ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து, சூத்திர மக்களை சுயமரியாதைக் கொள்ளச் செய்த இயக்கத்தின் மீது எந்த அளவிற்கு இந்தக் கும்பலுக்கு ஆத்திரம், வேகம் இருந்தால் இப்படி வெளிப்பட்டிருக்கும் என்பதை சொரணையுள்ள தமிழர்கள் சிந்திக்க வேண்டும்!
அது மட்டுமல்ல,
Therefore I urge the Union Home Monister Mr. Rajnath Singh to (1) invoke Article 356 of the Constitution and (2) put the Legislative Assembly in suspended animation (3) impose the AFSPA in all southern districts as well as Chennai for a period of six months till Ms Jayalalitha is able to attend office. The Apollo hospital has expressly made clear in the Press Release that she is required to remain in hospital for a futher period. Hence the pre-emptive action by the Union Government is not only constitutional but also urgent.
என்கிறார் சுப்ரமணியசாமி.
இந்த ஆட்களையெல்லாம் உலவவிட்டு வேடிக்கைப் பார்க்கும் மத்திய மோடி அரசுக்கும்,
சுப்பிரமணியசாமிக்கும் தமிழினம் சரியான பாடம் கற்பிக்கும்! கற்பிக்க வேண்டும்!
அ.தி.மு.க. அமைச்சர்களும் தொண்டர்களும் எப்படிப் பதில் தரப் போகிறார்கள் பார்ப்போம்!
- மஞ்சை வசந்தன்

Thursday, September 8, 2016

தலைமடை தாதாக்களாய் தமிழகத்தை வஞ்சிப்பதா? மத்திய அரசே!

தலைமடை தாதாக்களாய்
தமிழகத்தை வஞ்சிப்பதா?
மத்திய அரசே!

மேலாண்மை வாரியம் அமைத்திடுக!
நதிகளை இணைத்திடுக!

- மஞ்சை வசந்தன்

பொதுவாக நதிகளின் பிறப்பிடம் ஒன்றாக இருப்பினும், அது பாய்ந்து செல்லும் வழியெல்லாம் பயன்பெறும் இடங்கள் ஏராளம். பிறப்பிடம் தங்கள் பகுதியென்பதால் அணைகட்டி நீர் முழுவதையும் அப்பகுதிக்கே என்பது அடாவடித்தனத்தின் உச்சம்!

நதியின் பாயும் நீளத்திற்கேற்ப பாசன நீரின் பகிர்மானமும் இருக்க வேண்டும். அதுவே நதிநீர் தர்மமாக இருக்க முடியும். ஆனால், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களின் செயல்பாடுகள், நதிநீர் தர்மமும் இன்றி, மனித நேயமும் குன்றி, சட்டத் தீர்ப்புகளையும் மறுத்து ஆதிக்க, ஆணவ மனப்பான்மையில் நடப்பதாய் உள்ளது.

தமிழகம் கேட்பது பிச்சையல்ல. தங்களுக்குச் சேர வேண்டிய உரிமையுள்ள நீர். ஆனால், கர்நாடகம் நாங்கள் கொடுக்கும்போது கொடுப்பதை மட்டுமே தமிழகம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும்; சில நேரங்களில் ஒருசொட்டு நீரைக் கூடத்தரமுடியாது என்றும் தாதாக்கள் பாணியில் பதில் சொல்வது வாடிக்கையாய் உள்ளது. கர்நாடகத்திடமிருந்து கற்றுக்கொண்டது போல, ஆந்திராவும், கேரளாவும் செயல்படத்தொடங்கியதோடு, நதி நீர் சிக்கலை அரசியலாக்கி ஆதாயம் பெற நினைக்கின்றனர். நதிகள் என்பவை வேளாண்மையின் இரத்த நாளங்கள். இதயத்திலிருந்து இரத்தம் செல்வதால் இதயமே இரத்தம் முழுமைக்கும் சொந்தம் கொண்டாட முடியாது; கூடாது!

நதிகளின் பயன்பாடுகளும் சிக்கல்களும்:


காவிரி: கர்நாடகப்பகுதியில் இதன் தோற்றுவாய் இருப்பினும் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பாய்ந்து சென்று, அம்மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கிறது. 26 இலட்சம்  ஏக்கர் நிலங்கள் ஆற்றின் மூலம் பாசனம் பெறுகின்றன. சென்னை உட்பட 17 மாவட்ட மக்கள் இந்த ஆற்று நீரைக் குடிநீராகப் பயன்படுத்தி உயிர்வாழ்கின்றனர். இந்நிலையில் கர்நாடக அரசு சட்டம், தர்மம், மனித நேயம், மாற்றார் உரிமை என்று எதையும் மதிக்காது புதிதுபுதிதாய் அணைகளைக் கட்டி 50 டி.எம்.சி. தண்ணீரை தங்கள் மாநிலத்திலேயே சேர்த்து வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.

பாலைவனமாகும் பாசன நிலங்கள்: முப்போகம் பயிரிட்டு செழித்த தமிழகப் பகுதிகள் ஒருபோகத்திற்குக் கூட வழியின்றி தவிக்கும் அவலம் தற்போது எழுந்துள்ளது என்றால் அதற்கு தண்ணீர் பற்றாக்குறை மட்டும் காரணமல்ல, சரியான நீர்மேலாண்மை இன்மையும், மத்திய அரசின் துணிவான பகிர்மான திட்டங்கள், செயல்பாடுகள் இன்மையுமே காரணம்.

பாலாறு: கர்நாடகாவில் உற்பத்தியாகும் பாலாறு ஆந்திரா வழியாக 38 கி.மீ. தூரம் கடந்து வந்து தமிழ் நாட்டில் 222கி.மீ தூரம் கடந்து சதுரங்கப்பட்டினத்தில் கடலில் கலக்கிறது. ஆந்திர அரசு, ஒரு கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பனை என்று 20 இடங்களில் தடுப்பணைகளைக் கட்டி தமிழகத்திற்கு வர வேண்டிய பலாற்று நீரைப் பறிக்க முயற்சிக்கிறது. இதனால் பாலாற்றின் மூலம் பாசனமும் குடிநீரும் பெறும் பல மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.

சிறுவாணி ஆறு: உலக அளவில், சுவையான நீருக்குப் புகழ்பெற்ற சிறுவாணி ஆறு தமிழக வனப்பகுதியில் 25 கிலோமீட்டர் சென்று, கேரளாவில் காடப்பட்டி என்ற இடத்தில் பவானி ஆற்றில் கலக்கிறது. சிறுவாணி அணை கேரளப்பகுதியில் இருந்தாலும் அதன் நீரை தமிழகமே பயன்படுத்த முடியும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள முத்திக்குளம், பட்டியாறு போன்ற அணைகளின் நீர் சிறுவாணி அணையில் சேருகின்றன. புல்மேடு பகுதியிலிருந்துவரும் மழை நீரும் அங்கு சேருகிறது.

சிறுவாணி அணைக்கும் அது பவானி ஆற்றில் கலப்பதற்கும் இடையில் உள்ள சித்தூரில் 450 மீட்டர் நீளம் அணைக்கட்டி அந்த நீர் பவானி ஆற்றுக்குக் கிடைக்காமல் தடுக்க முயற்சிக்கிறது. கேரள அரசு. இந்த அணை கட்டப்பட்டால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் பெரிதும் பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்வே கேள்விக் குறியாகும்!

சிறுவாணி ஆறு என்பது சிறுவாணி அணையிலிருந்தே உருவாகி, அகழி கோட்டத்தாரா, சோலையூர் போன்ற பகுதிகள் வழியாக 20 கிலோமீட்டர் கடந்து பவானி ஆற்றில் கலக்கிறது. கேரளத்தில் உற்பத்தியாகும் கொடுங்காரப்பள்ளம் என்ற ஆறும் பவானி ஆற்றில் கலக்கிறது. சிறுவாணி ஆற்றில் ஆண்டுக்கு 7 டி.எம்.சி. தண்ணீர் செல்கிறது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை இங்கு அணைக்கட்ட  அனுமதி அளித்துவிட்டதாகக் கேரள அரசு கூறுகிறது. இந்த அணை கட்டப்பட்டால், பவானி ஆற்றுக்குச் செல்லும் நீர் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுவிடும். இந்த நீரை நம்பியுள்ள பில்லூர் அணைக்கு வரும் நீரும் கேள்விக்குறியாகிவிடும்.

இரு மாநிலங்களுக்கு இடையேயும் ஆற்றின் குறுக்கே அணைக்கட்ட வேண்டுமாயின், கடைமடை மாநிலத்தின் அனுமதி பெறவேண்டும். அதன்படி தமிழகத்தின் அனுமதியில்லாமல் கேரளா அணை கட்டக் கூடாது. ஆனால், இவ்விதியையெல்லாம் கேரளா மதிக்காது தன் திட்டத்தைச் செயல் படுத்த முயற்சிக்கிறது.

சிறுவாணி அணையின் குறுக்கே அணைகட்டிதான் அட்டப்பாடி மக்களுக்கு குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கேரள அரசுக்கு இல்லை. கேரள மண்ணிலே உள்ள இடுக்கி அணையிலிருந்தே குழாய்மூலம் குடிநீர் கொடுக்க முடியும்.

கேரள அரசு பல வகைகளில் முயற்சி மேற்கொள்ளும் நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடிதம் எழுதியதோடு கடமை முடிந்ததாகக் கருதிக் கொண்டிருக்கிறார்.

முல்லைபெரியாறு:


அடாவடிச் செயலுக்கு அசல் உதாரணம் முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில் கேரளா நடந்து கொள்ளும் முறை. மிக மிக வலுவாக உள்ள முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், 5 மாவட்டங்களைச் சேர்ந்து 35 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர் என்று கற்பனை அச்சத்தை உருவாக்கி பிரச்சினையை எழுப்பியது. இந்த அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டவேண்டும் என்று கேரளா பிடிவாதம் பிடிப்பது தமிழக மக்களின் உயிராதாரத்திற்கு ஊறுவிளைவிக்கும் மனித நேயமற்ற செயலாகும்.

முப்புறமும் மூன்று மாநில அரசுகளும் நமது குரல் வளையை நெறிப்பது போல அணைகளைக் கட்டுவதும், நீர் தர மறுப்பதும், தமிழக வேளாண் விளை நிலங்களை பாலை நிலமாக்கும் முயற்சியாகும். இந்தியா வேளாண் நாடு. அப்படியிருக்க 75% மக்கள் வேளாண்மையை நம்பியுள்ளனர். அந்த மக்களின் வாழ்வாதாரமான நிலங்கள், நீரின்றி பாலைவனமானால், அம்மக்கள் வாழ்வதெப்படி? பாதிக்கப்படும் மக்களின் உணர்வுகளோடு மோதுவது என்பது இந்தியாவின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை என்பதை உணரவேண்டிய பொறுப்பிலுள்ளவர்கள்  உணர்ந்து செயல்படவேண்டும்.

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பதில் எந்த அளவிற்கு தீவிரம் காட்டுகிறோமோ அந்த அளவிற்கு நம் மாநில மக்கள் நம்மை விரும்புவார்கள் என்ற மாநில அரசுகளின் வாக்கு நோக்கும் சரியான நடவடிக்கை மேற்கொண்டால் பாதிக்கப்படும் மாநிலமக்கள் நம்மை வெறுப்பார்கள் என்ற மத்திய அரசின் தயக்கமுமே நதி நீர் சீக்கல் தீராமைக்கு காரணங்கள்.

என்னென்ன? தீர்வுகள்


காவிரிச் சிக்கலுக்கான தீர்வு: உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்து, அதன் முடிவுப்படி காவிரி நீரை பகிர்ந்து கொள்ள வேண்டும். மீறும் மாநிலங்களை அரசியல் சாசன 315ஆவது பிரிவின்படி கண்டிக்க வேண்டும். கட்டாயம் நேர்ந்தால் கலைக்கவேண்டும். ஆட்சியே பறிபோகும் என்ற அச்சம் வந்தால்தான் வாக்குநோக்கில் செய்யப்படும் சட்டவிரோதச் செயல்கள் தடுக்கப்படும். பற்றாக்குறை காலங்களில் தங்களுக்கு மிஞ்சினால்தான் தரமுடியும் என்ற பிடிவாதம் முற்றிலும் சட்ட, தர்ம, மனிதநேய விரோதமானது. பற்றாக்குறை காலங்களிலும் உரிய விகிதாச்சாரப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப் படவேண்டும்; நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கர்நாடக அரசு புதிய தடுப்பு அணைகளை தமிழகத்தின் ஒப்புதல் இன்றி கட்டக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

முல்லைப் பெரியாறு: அணையில் துளையிட்டு ஆய்வு செய்து, உச்சநீதிமன்றம் நீர் மட்டத்தை உயர்த்திக்கொள்ள தீர்ப்பு கூறிய பின்பும், அதில் சிக்கலை உருவாக்குவது அடாவடிச் செயல் அன்றி வேறில்லை. அணை குறித்த அச்சம் அப்பட்டமான கற்பனை. எனவே, இதில் மத்திய அரசின் நிலைப்பாடு உறுதியாக இருந்து தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டும்.
சிறுவாணி: நீர்த்தேக்கம் கேரளப் பகுதியில் இருந்தாலும், அணையிலிருந்து வெளியேறும் நிர் தமிழகத்திற்கே உரியது என்ற நிலையில், மூச்சுக்குழலை அடைப்பதுபோல, கேரள அரச புதிய அணையை தேவையின்றி கட்ட முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. கட்டாயம் கட்டுப்படுத்தப்பட வேண்டியது.

பசி ஏப்பக்காரனுக்கும் புளியேப்பக்காரனுக்கும் இடையேயான போட்டிச் சிக்கலைப் போன்றது இது. மேற்கு நோக்கி அரபிக் கடலில் ஏராளமான நீர் வீணாகிக் கொண்டிருக்கும்போது, தேவையின்றி தமிழக மக்களின் உயிர் நாளத்தின் குருதியோட்டமாய் ஓடும் பாசன ஆறுகளில் அணைகளைக் கட்டுவது, விண் வம்புக்கு வரும் விபரீத செயலாகும். எனவே, கேரளா தனது பிடிவாத முடிவுகளை மக்கள் நலன் சார்ந்து கைவிட வேண்டும்.

பவானி ஆற்றிலிருந்து 6 டி.எம்.சி. தண்ணீரை கேரளா எடுத்துக்கொள்ளலாம் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஆனால், கேரள விவசாயிகள் 13 டி.எம்.சி. தண்ணீரைப் பயன்படுத்துவதை தமிழக அரசு சரியான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டுப்படுத்த வேண்டும்.

பாண்டியாறு, பனம்புழா திட்டத்தை நிறைவேற்றினால், 14 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்குக் கிடைக்கும். மத்திய அரசின் நிதியுதவி பெற்று இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

பவானி பாசனப் பகுதிகள் முழுவதையும் சொட்டு நீர்ப் பாசனமாக மாற்றினால் தண்ணீர் சேமிப்பு ஏற்பட்டு, பற்றாககுறை தவிர்க்க உதவும். இதற்கு அரசு, விவசாயிகளுக்கு நிதிவுதவி செய்ய வேண்டும்.

இறுதித் தீர்ப்பின்படி 30 டி.எம்.சி. நீரை கேரளத்துக்கு நாம் வழங்க வேண்டும். காவிரியில் கபினிக்கு மேலாகக் கேரள எல்லையில் 21 டி.எம்.சி.யும், பவானி ஆற்றில் 6 டி.எம்.சியும், பாம்பாற்றில் 3 டி.எம்.சி.யும் தரவேண்டும். இதுகுறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, பவானி, பாம்பாற்றில் தரவேண்டிய 9 டி.எம்.சி. நீரையும் கபினிக்கு மேலே காவிரியிலிருந்தே எடுத்துக்கொள்ள வழி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பவானி ஆறு வரண்டுபோகாமல் காக்கப்படும்.

கர்நாடகம் வழங்கும் இந்த கூடுதலான 9 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்குத் தரவேண்டிய 192 டி.எம்.சி. நீரில் கழித்துக் கொள்ளச் செய்யலாம்.

பவானியாற்றை நம்பியே தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் குடிநீர் தேவையை அமராவதி அணை நிறைவு செய்கிறது. மறுபக்கம் பல்லடம், அவிநாசி, திருப்பூர், ஊத்துக்குளி போன்ற பகுதிகளின் குடிநீர்த் தேவையை பவானி ஆறே நிறைவு செய்கிறது.

பாலாறு: பாலாறு பிரச்சினை தீர ஒரே வழி, ஆந்திர அரசு தனது எல்லையில் ஓடிவரும் பாலாற்றுப் பகுதியில் தடுப்பணைகளைக் கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும். ஒரு சிறு பகுதி தன் மாநில வழியே செல்கிறது என்ற ஒரு காரணத்திறக்காக, அங்கே எல்லா நீரையும் முடக்க முயற்சிப்பது தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைக் கொள்ளையிடும் கொடுஞ்செயலாகும். அவரவர்க்குரிய பங்கு அவரவர்க்கு என்ற ஒற்றை வரி ஒப்பந்தமே அத்தனைச் சிக்கலுக்கும் ஒரே தீர்வு ஆகும்.

மத்திய அரசுக்கு ஓர் எச்சரிக்கை:

நதிநீர் சிக்கலை அந்தந்த மாநில அரசு கையில் எடுப்பதும், தீர்மானிப்பதும் மிகத் தவறான செயல்பாடாகும். நீராதாரங்கள் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உரிமையானது. அவரவர் விகிதாச்சாரப்படி நீர்வளத்தை பங்கிட்டுக் கொள்ள வேண்டும். எனவே, நதிகளை நாட்டுடமை ஆக்க வேண்டும். நதிகளை இணைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும். இது விரயத்தையும், வீண் சிக்கலையும், பாதிப்புகளையும் (வெள்ளம், வறட்சி) தடுக்கும். இதில் மத்திய அரசு மவுனியாக இருந்தால், மாநிலங்களுக்கிடையே மோதல் முற்றி, உச்சநிலையில், பிரிவினை, போராட்டங்கள் தீவிரமடைய நேரும். அது இந்தியாவின் ஒருமைப்பாட்டை உருக்குலையச் செய்யும். இந்நிலையை முற்றாகத் தவிர்க்க நதிநீர்ச் சிக்கலுக்கு நதிநீர் மேலாண்மை வாரியங்களை உடனே அமைத்து, அவற்றின் தீர்ப்புப்படி நீரைப் பங்கிட்டுக் கொள்ளச் செய்ய வேண்டும். தவறினால், ஏற்படும் விளைவுகளுக்கு மத்திய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டிவரும்.


Tuesday, August 2, 2016

இந்துமதத்தில் மனிதநேயமாம்! ஏமாற்றப் பார்க்கும் குருமூர்த்திகள்!

இந்துமதத்தில் மனிதநேயமாம்!
ஏமாற்றப் பார்க்கும் குருமூர்த்திகள்!
எச்சரிக்கை! எச்சரிக்கை!!!
- மஞ்சை வசந்தன்

இல்லாத இந்துமதம்!

அந்தரத்தில் உத்திரம் வைத்து, சட்டங்கள் வைத்து ஆணியடித்து,  ஆகாயக் கோட்டை கட்டியதுபோல், இல்லாத  ஒரு மதமே இந்துமதம் என்று கற்பிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு வருகிறது.

இந்து மதம் என்று ஒரு மதமே இல்லை; இந்து மதத்திற்கென்று ஒரு கடவுளும் இல்லை; இந்து மதத்திற்கென்று ஒரு கொள்கையும் இல்லை; இந்து மதத்திற்கென்று ஒரு நூலும் இல்லை; இந்து மதத்திற்கென்று ஒரு தலைவரும் இல்லை; தோற்றுவிப்பாளரும் இல்லை.

எதுவும் இல்லாமல் எப்படியொரு மதம் உருவாக முடியும்? ஆனால், உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் அது மோசடியாகத்தானே இருக்க முடியும்?

இந்தியப் பகுதியில் பல்வேறு காலக்கட்டங்களில் பல நூறாண்டுகாலமாய் வெவ்வேறு பகுதிகளில், அப்பகுதி மக்களிடம் காணப்பட்ட பல்வேறு முரண்பட்ட நம்பிக்கைகளை, கொள்கைகளை கடவுள்களை எல்லாம் ஒன்றாகக் கட்டி இதுதான் இந்துமதம் என்று சொல்வதைவிட ஓர் உலகமகா மோசடியிருக்க முடியுமா?

இதை காலஞ்சென்ற சங்கராச்சாரியே சொல்கிறார் படியுங்கள்.

“இப்போது ஹிந்து மதம் என்று ஒன்றைச் சொல்கிறோம். இதற்கு உண்மையில் இப்பெயர் கிடையாது. நம்முடைய பழைய சா°திரங்கள் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது. ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான்.
(தெய்வத்தின் குரல் பாகம்-1, பக்கம்-126)

வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ‘ஹிந்து’ என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், அய்யப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்.”
(தெய்வத்தின் குரல் பாகம்-1, பக்கம்-267)

ஆக, இல்லாத மதத்தை இருப்பதாக வளர்க்க முனைவது மோசடிதானே?
முரண்பட்ட நம்பிக்கைகள் ஒரு மதத்தில் இருக்குமா?

ஒரு மதம் என்றால் அதற்கென்று ஒரு கடவுள் கொள்கைகள், நம்பிக்கைகள் இருக்கும். ஆனால், இந்து மதத்தில் உள்ள எல்லாமே ஒன்றுக்கொன்று முரண்பட்டவை, மோதிக்கொண்டவை.

சைவமும் வைணவமும்:

சிவனை வழிபடுகின்றவன் திருமாலை ஏற்க மாட்டான்; திருமாலை வழிபடுபவன் சிவனை ஏற்க மாட்டான்.

சிவ சத்தமே காதில் விழக்கூடாது என்று காதில் மணிக்கட்டிக் கொண்டு திரிந்த வைணவபக்தன் உண்டு.

கோயிலில் இருந்த திருமால் சிலையை சைவர்கள் கடலில் கொண்டுபோய்ப் போட்டார்கள்.

பரஞ்சோதி என்ற பல்லவப் படைத்தலைவன் வாதாபி மீது படையெடுத்து வெற்றி பெற்றபோது அங்கு யானைத்தலை மனித உடலோடு வியப்பான ஓர் உருவத்தைக் கண்டான். அதை அதிசயப் பொருளாய் தமிழகத்திற்குக் கொண்டு வந்தான். அதன் பின்னர்தான் வினாயகர் வழிபாடு தமிழகத்திற்கு வந்தது. அதற்கு  முன் வினாயகர் வழிபாடு தமிழகத்தில் இல்லை. அதன்பின் வினாயகர் முருகனுக்கு அண்ணனாக, பார்வதி பரமசிவன் பிள்ளையாக உறவு கற்பிக்கப்பட்டது. இப்படித்தான் உறவுச் சங்கிலியால் எல்லாவற்றையும் சூழ்ச்சியாகத் தொடர்புபடுத்தினர்.

முரண்பட்டக் கொள்கைகள்

சங்கரர் அத்வைதக் கொள்கை ஜீவாத்மாவும் பரமாத்வாவும் ஒன்று என்கிறது.
இராமானுசரின் விசிஷ்டாத்வைதம் ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்கிறது. மத்துவரின் துவைதக் கொள்கை ஜீவன் எல்லாவற்றிற்கும் முக்தி கிடையாது என்கிறது. மற்ற இரண்டு கொள்கைகளும் ஜீவன்களுக்கு முக்தி உண்டு என்கிறது.

இதில் எது இந்து மதத்தின் கொள்கை. இந்து மதத்தைப் பரப்பத் துடிக்கும் சுயநல ஆரிய பார்ப்பன சூழ்ச்சிக் கூட்டம் இதற்கு அறிவு நாணயத்தோடு பதில் சொல்ல வேண்டும்!

எது கடவுள்? இந்து மதத்திற்கு எது கடவுள்? சிவனா? விஷ்ணுவா? காளியா? மாரியா? முருகனா? வினாயகனா? இராமனா? அல்லது இந்தியா முழுக்க நூற்றுக்கணக்கான கடவுள்கள் உள்ளனவே அவையா? அல்லது மைல் கல்லையும், பர்லாங் கல்லையும் கடவுளாக்கி வைத்திருக்கிறார்களோ அவையா? எது கடவுள்? நேர்மை, நாணயத்தோடு பதில் சொல்ல வேண்டும்?
கடவுளுக்கு உருவம் உண்டா? கடவுள் சக்தி மயமானது. அது அனைத்தையும் கடந்து நின்று இயக்குகிறது என்று கூறிவிட்டு, அதன்பின் கணக்கின்றி கடவுளைக் கற்பிப்பது சரியா? அவற்றிற்கு பெண்டாட்டி பிள்ளை கற்பிப்பது முறையா?

மோசடி மதம்

ஆக, இந்துமதம் என்பது ஒரு மோசடி மதம்! சிலர், பிறர் கருத்துக்களை, சிந்தனைகளைக் களவாடி தொகுத்து தான் ஆராய்ந்ததாகக் கூறுவர். இது ஆராய்வு அல்ல பிராய்வு! அப்படித்தான் இந்து மதம் பலரிடம் பிராயப்பட்ட (களவாடப்பட்ட) ஒரு மோசடி மதம்! என்பதை உளச்சான்றுள்ள, உண்மை பேசும் எவரும் மறுக்க முடியுமா? குருமூர்த்திகள் உள்ளச் சுத்தியிருந்தால் மறுக்கட்டும்!

மனிதநேய மார்க்கமா இந்துமதம்?

இல்லாத மதத்திற்கு மார்க்கம் இருப்பதாகச் சொல்வதே மோசடி! அதுவும் மனிதநேயம் உடைய மதம் (மார்க்கம்) என்பது மகா மகா மோசடி!

மனித நேயம் என்பது தன்னைப் போலவே பிறரையும் நேசித்து, தன்னைப் போலவே பிறரையும் மதித்து, தன்னைப் போலவே பிறரையும் நடத்துவது மனித நேயம். சமத்துவம் அதன் சாரம்!

இந்து மதத்தில் சமத்துவம் உண்டா? சம உரிமை உண்டா? சம நீதி உண்டா? சம மதிப்பு உண்டா? குள்ளநரி குருமூர்த்திகள் கள்ளத்தனமில்லாமல் பதில் கூற வேண்டும்?

நான்கு வருணம்: மனிதனை பிறப்பாலே ஏற்றத்தாழ்வு, இழிவு, புனிதம் உடையவனாய்க் கூறும் மதம் இந்து மதம்.

‘பிரம்மாவின் முகத்தில் பிராமணன் பிறந்தான், தோளில் ஷத்திரியன் பிறந்தான், இடுப்பில் வைசியன் பிறந்தான், காலில் சூத்திரன் பிறந்தான்’ என்பது மனித நேயமா? தாழ்த்தப்பட்டவன் கடவுளின் காலில் கூடப் பிறக்கத் தகுதியற்றவன் என்று அய்ந்தாம் ஜாதியாக ஒதுக்கிவைத்த இந்துமதம் மனிதநேய மதமா?

ஒரு குலத்துக்கு ஒரு நீதி: 

“மௌண்ட்யம் ப்ராணாந்தி கோதண்ட ப்ராஹ்ணானாம் விதீயதே
இதரேஷாம்து வர்ணானமதண்ட; ப்ராணாந்தி; கோபவேத”

மற்றவர்கள் கொலை செய்தால் அவர்களின் தலையை வெட்ட வேண்டும்; ஆரியப் பார்ப்பான் கொலை செய்தால், அவன் தலைமுடியை மட்டும் நீக்கினால் போதும் என்கின்ற மனுசா°திரத்தை உடைய இந்துமதம்தான் மனிநேயத்தைப் போதிக்கிறதா?


“சூதரந்து காரயேத் தா°யம் க்ரீமதக்ரீ தமேவவா; த°யாயைவ
ஹீ°ருஷ்டோ ஸெளப்ராஹ மண°ய °வம்புவா”

அதாவது, கூலி கொடுத்தாகிலும், அல்லது கூலி கொடுக்காமலும், சூத்திரனைப் பிராமணன் வேலை வாங்கலாம். ஏனென்றால், பிராமணனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டே சூத்திரன் பிரம்மாவால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான் என்பதே மனு கூறுவதற்கு அர்த்தம்.

“ஸுர்மித்ரிய ந ஆப ஒஷதய ஸந்து துர்மித்ரியா °த°மை
ஸந்து யோ° மான்த்வேஷ்டியம் சவயம் த்விஷ்ம” (யஜுர் வேதம்)

பார்ப்பனர்கள் நாள்தோறும் பாடுகிற யஜுர் வேதப் பாடல் பகுதியே இது. இதன் பொருள் என்ன தெரியுமா?

தண்ணீர், தானிய வகைகள், பிராணவாயு முதலிய உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருட்கள் யாவும் எங்களுக்கு (பிராமணர்களுக்கு) நன்மை பயப்பனவாகவும் எங்களால் வெறுக்கப்படுகின்ற மனிதர்களுக்குத் தீமையைச் செய்வனவாகவும் ஆகவேண்டும். வேத °மிருதிக்கு இணங்கி நடக்காத பகுத்தறிவுவாதிகளுக்கு இவ்வுலகம் விஷமாகப் போகட்டும் என்பதே!

ஆரியர்களின் நலன் கருதி எழுதப்பட்டவையே வேதங்கள் என்பது இதிலிருந்து புரியவில்லையா? வேதங்கள் மட்டுமல்ல வேதங்களுக்கு விளக்கம் தரவந்த °மிருதிகளின் போதனைகளை ஆராய்ந்தாலும் ஒரே அபத்தம்தான்.

“பிராஹ்மணோ ஜாயமானோ ஹிப்ருதி°யாம் அபியாஜதே
ஈ°வர; ஸர்வ பூதானாம் ப்ரஹ்ம கோச°யகுப்தயே”
“ஸர்வ°வம் ப்ராஹ்மண°யேதம், யத்கிஞ் சீஜ்ஜகதீகதம்
°ரைஷ்டைனா பிஜனெனெதம் ஸர்வம் வைப்பிராஹ் மணோர் ஹதி”
“°வமேவ ப்ராஹ்மணோ புங்க்தே°வம் ததால்ச: ஆன்ருமிம்°யாத்
பிராஹ்மண °யயுஞ்ஸதே ஹிதரே ஜனா”   (மனு °மிருதி)

அதாவது, சகல பிராணிகளுக்கும் தலைவனாயும் வேதமாகிய களஞ்சியத்தின் காவலனாயும், பிராமணன் படைக்கப்பட்டிருப்பதால், இப்பூமியிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் பிராமணன் உரிமையுள்ளவனாவான். பிராமணான் பிச்சையெடுத்து உண்பானாயினும், பிறர் உண்பதும் கொடுப்பதும் அவன் பொருளே ஆகும் என்பதே மனு கூறுவதற்கு அர்த்தம்.

“தாதவ்வம் ப்ரத்யஹம் பாத்ரே நிமித்தேஷுவிசேஷத்
யாசிதேனா பிதாதவ்யம், °ரத்தா பூதத்து சக்தித்”      (யக்ஞ வல்கியர்)

அதாவது, பிராமணனுக்குத் தினமும் நாணயமும் கொடுக்க வேண்டும். கையில் ஒன்றுமில்லாவிடில் பிச்சையேற்றோ வேறு எந்த கையிலோ கொடுத்தே தீரவேண்டும் என்பதே யக்ஞ வல்கியர் கூறுவதற்கு அர்த்தம்.
பெண்களை மதிக்கிறதா இந்து மதம்?

“பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள்”
பெண்கள் தாழ்ந்த பிறவிகள்
பிராமணர்கள் உயர்பிறவி

பகவத் கீதை ஒன்பதாவது அத்தியாயம் சுலோகம் 32, 33இல் கிருஷ்ணன் கூறியவை இவை? பகவத் கீதை இந்து மதத்தின் புனிநூல் என்கிறீர்கள். புனித நூலின் மனிதநேய இலட்சணம், பெண்களை மதிக்கும் லட்சணத்தைப் பாரும்!
“ஏழாவது வயதிலே பெண்களுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும். அந்த வயதில் அவளுக்குக் கணவனாக வருகின்றவனிடம் அவள் தன்னை ஒப்படைத்து விடவேண்டும். அவனையே குருவாகவும், தெய்வமாகவும் ஏற்று அவனுக்குத் தன்னை அர்ப்பணித்துவிட வேண்டும். அவள் கணவன்தான் அவளுக்கு எல்லாம்” என்கிறார் காலஞ்சென்ற சங்கராச்சாரி. 
(தெய்வத்தின் குரல் - பாகம்-2, பக்கம் 870)

“பெண்ணுக்குக் கணவனே தெய்வம். பெண்ணுக்கு என்ற தனி அறிவு இல்லை. கணவன் பெற்ற அறிவையே அவள் பெற்று வாழ வேண்டும்.”
(தெய். குரல் பாகம்-2, பக்கம்-890)

இதுதான் பெண்களை மதிக்கும் யோக்கியதையா?
விலங்குகள் பாதுகாப்பு இந்துமதக் கொள்கையா?

யாகம் என்ற பெயரில் விலங்குகளை நெருப்பில் தள்ளிப் பொசுக்கி அதன் கொழுப்பையும், சதையையும் சுவைத்து சுவைத்துச் சாப்பிடச் செய்த மதம்தானே இந்துமதம். இதுவா விலங்குகளைக் காக்கும் மதம்? விலங்குகள் மீது ஏறி அமர்ந்து, ஹிம்சை செய்யும் கடவுளைக் கொண்ட இந்துமதமா விலங்குகளை நேசிப்பது?

தெய்வமொழியும் தீட்டுமொழியும்

சம°கிருதம் தேவ பாஷை, தமிழ் நீசபாஷை என்பதுதானே இந்து மதக் கோட்பாடு. தமிழ்க் கடவுள் அருகில் செல்லக்கூடாது என்பதுதானே இந்துமதம்? தமிழ் க் கடவுளிடம் ஓதப்பட்டால் கடவுள் தீட்டாகிவிடும் என்பதுதானே இந்துமதம்?

அனைத்து சாதியும் அர்ச்சகராக முடியாதது ஏன்?

மனிதனை சமமாகக் கருதும் மாண்பு இந்து மதத்திற்கு இல்லை என்பதைத் தானே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியாததற்குக் காரணம். கோயில் கலசத்திற்கு தாழ்த்தப்பட்டவர் தண்ணீர் ஊற்ற முடியாதே!

ஆக, மனிதநேயத்திற்கு முரணான, பிறவி ஏற்றத்தாழ்வு கற்பிக்கின்ற, ஆரிய பார்ப்பனர்களுக்கு மட்டுமே உயர்வும் நன்மையும் அளிக்கக்கூடிய, பெண்களை இழிவு செய்து அடிமையாக்குகின்ற, பார்ப்பனர் தவிர மற்றவர்கள் படிக்கக் கூடாது என்கின்ற மதம்தான் ஆன்மீகத்தின் பெருமையை பறைசாற்றுகிறதா?
விவேகாநன்தரை சொல்ல ஆரிய பார்ப்பனர்களுக்க அருகதையில்லை!

“ஆரிய பார்ப்பனர்களே இந்தியாவை விட்டு ஓடிவிடுங்கள், ஒழிந்து போங்கள். இந்த நாட்டின் உண்மையான மண்ணின் மைந்தர்களிடம், ஒடுக்கப்பட்ட மக்களிடம் இந்த நாடு வந்தால்தான் உயர்வுபெறும் ஒளிபெறும்” என்று விவேகாநந்தர் கூறியுள்ளாரே! அதன்படி நடப்பீர்களா? நாட்டை விட்டு ஓடப்போகிறீர்களா? விவேகாநந்தரைச் சொல்ல ஆரிய பார்ப்பனர்களுக்கு அருகதை ஏது?

எச்சரிக்கை! எச்சரிக்கை!

விவேகாநந்தரைக் காட்டி வெகுமக்களை சூழ்ச்சியாகக் கவர மோசடிப் போர்வழிகள் முனைகிறார்கள்! மக்களும், மாணவர்களும் எச்சரிக்கையாக இருங்கள்! ஆரிய பார்ப்பன சூழ்ச்சியை முறியடியுங்கள்!

Tuesday, July 26, 2016

யோகாசனம் - சில முக்கிய குறிப்புகள்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!
யோகாசனம் - சில முக்கிய குறிப்புகள்.............................
1. உணவு அருந்திய மூன்று மணி நேரத்திற்குப் பிறகுதான் ஆசனங்கள் பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், சில பள்ளிகளில் உணவு இடைவேளை முடிந்தவுடன் யோகா வகுப்புகள் நடைபெறுகின்றன. இது தவறு. வணிகநோக்கில் மாணவர்கள் உடல் நலத்தைப் பாழாக்கக்கூடாது.
2. குறிப்பிட்ட சில ஆசங்களைப் பெண்கள் சில நேரங்களில் செய்யக்கூடாது. அதை நன்றாக அறிந்து பின்பற்ற வேண்டும்.
3. ஒரு ஆசனத்திற்குரிய மாற்று ஆசனம் செய்யவேண்டும் இல்லையேல் பாதிப்பு வரும். இதையும் அறிந்து செயல்படவேண்டும்.
4. பயிற்றுநர் 5 ஆண்டாவது அனுபவம் உடையவராகவும் உடற் கூறு பற்றி அறிந்தவராகவும் இருக்க வேண்டும். ஒவ்வொருவர் உடலுக்கு ஏற்ற யோகா செய்யப்பட வேண்டும். ஏசி அறையில் யோகாசெய்வது தவறு.
5. கூட்டமாக யோகா கூடாது
பெரிய அரங்கம் அல்லது பெரிய திடலில் நூற்றுக்கணக்கானவர்களை அமரவைத்து அனைவருக்கும் ஒரே மாதிரியான யோகா பயிற்சி அளிப்பது தவறு. காரணம், ஒவ்வொருவர் உடல் நிலையைக் கேட்டறிந்து, அதற்கேற்ப பயிற்றுநரின் நேரடி கண்கானிப்பில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி பார்த்தால் மோடி நடத்தும் யோகா தவறானது மக்கள் நலத்திற்கு எதிரானது.
- மஞ்சை வசந்தன்

Monday, July 25, 2016

உண்மையான தமிழின இயக்கம் திராவிடர் கழகம்!

தமிழரின் தொன்மை மரபுகளை
மீட்டெடுக்கும் இயக்கமே திராவிடர் கழகம்!
உண்மையான தமிழின இயக்கம் அதுவே!

தமிழரின் தொன்மை மரபுகள் 1. இல்லறத்திற்குப் பின் தொண்டறம், 2. ஜாதியின்மை,  

 3. பெண்ணின் பெருமை, 4. விருப்ப மணம், 5.மூடநம்பிக்கையின்மை, 6. மானம், 7. கல்வி, 8.உலகளாவிய பார்வை இவற்றை மீட்டெடுக்க பாடுபடுவதே திராவிடர் கழகத்தின் நோக்கு. இதை உணராது அரைவேக்காடுகளின் பின்னே அணிவகுக்கும் இளைஞர்கள் இவற்றை ஊன்றிப் படித்து, உண்மையை உணர வேண்டுகிறோம்!

இல்லறத்திற்குப் பின் தொண்டறம்:

இல்லறத்திற்குப் பின் துறவறம் செல்வது தமிழர் மரபன்று. இல்லறத்திற்குப் பின் தொண்டறம் என்பதே தமிழரின் தொன்மரபு. அதை மீண்டும் மீட்டெடுக்க பாடுபட்டவர், பரப்புரை செய்தவரே தந்தை பெரியார். அதைத் தொடர்ந்து செய்து வருவதுதான் திராவிடர் கழகம்.

இல்லறத்திற்குப் பின் தொண்டறம் என்பது தமிழர் மரபா? என்ற வியப்பு, அய்யம் சிலருக்கு எழும். இதோ அதற்கான ஆதாரம்.

“காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களோடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”
(தொல்காப்பியம் - கற்-51)

இல்லற வாழ்வில் ஈடுபட்டு வாழ்பவர்கள், இல்வாழ்வின் துய்ப்பு போதும் என்ற நிலையில், அறிவும், அனுபவமும் பெற்ற பெரியவர்கள், பிள்ளைகளிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, பொதுமக்களுக்குத் தொண்டாற்ற வீட்டைவிட்டு வெளிவந்தனர்.

அப்படி அவர்கள் வெளியேறும்போது, மக்கள் பற்றைத் தவிர, பொருள், சுகப்பற்று ஏதும் இன்றி வெளியேறினர். அவ்வாறு வெளியேறும்பொழுது, வெய்யிலுக்குக் குடை, செருப்பு, நீர்ச்சொம்பு, ஊன்றுகோல், படுத்துறங்க பாய், அறநூல்கள் இவற்றை மட்டுமே உடன் எடுத்துச் சென்றனர்.
இதைத் தொல்காப்பியம், 

“நூலே கரகம் முக்கோல் மனையே
ஆயுங்காலை அந்தணர்க் குரிய”
- (தொல்.மர-70)

இப்படி இல்லறம் விட்டுத் தொண்டறம் செய்ய வெளியில் வந்து தொண்டாற்றியவர்களே அந்தணர் எனப்பட்டனர். அந்தணர் என்பது தொண்டறத் தமிழர்களுக்குரிய சொல். ஆரிய பார்ப்பனர்களைக் குறிப்பதாய்க் கொள்வது தப்பு. 

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்” 

என்பதன் மூலம் இதைத் தெளியலாம். ஆக, அந்தணர் என்போர் மக்கட் தொண்டாற்றிய, அறவோரான தமிழர்கள் என்பதுத் தெளிவு!

இப்படிப்பட்ட தொண்டற வாழ்வை மீட்டு, நடப்புக்குக் கொண்டுவரவே பெரியார் பாடுபட்டார். தானும் அவ்வாறே வாழ்ந்து காட்டினர். தனக்கென எதுவும் எடுத்துக்கொள்ளாது, எல்லா பொருளையும் மக்கள் தொண்டுக்குச் செலவிட்டு ஊர்ஊராய் அலைந்து தொண்டு செய்தார்.

உண்மையான தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியுடையவர்கள், பண்டைய தமிழர் முறையைப் பின்பற்றி, இல்லற வாழ்விற்குப் பின் தொண்டற வாழ்வை மேற்கொள்ள வேண்டும். அதுவே பழந்தமிழரின் பண்பட்ட மனிதநேய வாழ்வை மீட்டெடுக்கும் உரிய வழியாகும்! அதை செய்கின்ற தமிழர் அமைப்பே திராவிடர் கழகம். அதைத்தான் பெரியாரும், அவரது தொண்டர்களும் செய்து வருகின்றனர்.

ஜாதியின்மை:

தொன்மைத் தமிழரிடையே ஜாதியில்லை. அரசர், வணிகர், வேளாளர் என்ற கடமைப் பகுப்புகளே இருந்தன.

அரசர்: தமிழர்களைத் தலைமையேற்று காத்தவர்களே அரசர்கள். அரசர்கள் என்பவர்கள் காவலர்கள். அரசு என்றால் காவல் என்று பொருள். நாட்டை - மக்களைக் காப்பவர் அரசர்.
வணிகர்: விளைபொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டுசென்று விற்பவர்கள்.

வேளாளர்: உழவுத் தொழில் செய்தவர்கள் வேளாளர். இவர்கள் உழுது பயிரிட்டு பொருட்களை விளைவித்தனர்.

இப்பிரிவுகள் ஜாதிப் பிரிவுகளா என்றால், இல்லை. காரணம், இம்மூன்று பிரிவினரும் ஒருவருக்கொருவர் மணஉறவு கொண்டனர். ஜாதிப் பிரிவாக இருந்தால் மணவுறவு இருக்காது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

மன்னன் இருஞ்சேட்சென்னியின் மனைவி அழுந்தூர் வேளின் (வேளாளர்) மகள். அவனுடைய மகன் கரிகாலன் மனைவி நாங்கூர் வேளின் மகள். சேரன் செங்குட்டுவனின் மனைவி கொங்குவேளின் மகள்.

உழவர் மகளை அரசனும், அரசன் மகளை உழவரும், வணிகர் பிள்ளைகளை உழவர் பிள்ளைகளும், அரசு குடும்பத்தவரும் மணந்து வாழ்ந்தமையால் இவை ஜாதிப் பிரிவுகள் அல்ல.

ஆக, தமிழரின் தொன்மை மரபு ஜாதியின்மையே. அதை மீண்டும் கொண்டுவருவதே தமிழரின் பண்பாட்டு மீட்பாகும். அதைத்தான் திராவிடர் கழகம் செய்கிறது. ஜாதி தமிழர் மரபல்ல என்பதால், ஜாதியைப் பிடித்துக் கொண்டுள்ள எவரும் தமிழர் என்று சொல்லும் தகுதியற்றவர் ஆவர்.

பெண்ணின் பெருமை:

தமிழரின் தொன்மை மரபு தாய்வழிச் சமுதாயமும், தாய்த் தலைமையுமே! பெண்கள் நிலையாக வாழ்வர், மணந்துகொள்ளும் ஆணே அங்கு சென்ற வாழ்வார்.

ஆணாதிக்க ஆரிய கலாச்சாரம் பரவிய பின்னர்தான் பெண் அடிமையானாள். பழைய தொன்மை மரபுப்படி பெண்ணுக்கு பெருமையும் உரிமையும், உயர்நிலையும் வேண்டும் என்பதே திராவிடர் கழகத்தின் கொள்கை. அதற்காகவே திராவிடர் கழகம் போராடுகிறது.

ஆக, திராவிடர் கழகத்தின் பெண்ணுரிமைப் போர் என்பது தமிழர் மரபை மீட்டெடுக்கும் முயற்சியே ஆகும். பெண்ணை அடிமயாக்கும் எவரும் தமிழர் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியற்றவர் ஆவர். தமிழரின் அடையாளம் பெண்ணைச் சமமாக மதித்து நடத்துவதேயாகும்.

விருப்ப மணம்:

தமிழர் வாழ்வில் வயது வந்த ஆணும், பெண்ணும் தனிமையில் காதல் வளர்த்து, உளம் ஒத்த நிலையில் இல்வாழ்வில் இணைந்து ஈடுபடுவதே மரபு.

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும்  எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"       -  குறுந்தொகை - 40
என்ற பாடல் இதை நன்க உணர்த்துவதைக் காணலாம். 

பெற்றோர் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்துவைப்பது, பொருத்தமற்றவர்க்கு உறவுக் காரணமாய் மணம் செய்து வைப்பது போன்ற இழிநிலைகள் ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பால் வந்த அவலங்கள் - அழிவுகள். 

எனவே, அதை ஒழித்து மீண்டும் உளம் ஒத்த விருப்ப மணத்தை உருவாக்குதே தமிழர் இயக்கமான திராவிடர் கழகத்தின் இலக்கு, முயற்சி எல்லாம். எனவே, விரும்பி மணப்பதை தடைசெய்யும் எவரும் தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியிழந்தவர்கள் ஆவர். பிள்ளைகளின் விருப்பப்படியான மணவாழ்வே தமிழரின் தொன்மைப் பண்பாடாகும். உளம் ஒத்த இணையரை ஒன்றுசேர்த்து வாழவைப்பதே தமிழர் மரபு, தமிழர்க்கு அழகு! அதை மீண்டும் கொண்டுவர முயல்வதே திராவிடர் கழகம்.

மூடநம்பிக்கையின்மை:

தொன்மைத் தமிழரிடையே கடவுள், மதம், சடங்கு போன்ற எந்த மூடநம்பிக்கையும் இல்லை. எல்லாம் இடையில் வந்தவை. ஆரிய பார்ப்பனர்களால் திட்டமிட்டு தமிழர் மூளையில் ஏற்றப்பட்டவை.

நிலத்தலைவரை மதித்தல், சிறந்த பெண்டிரை மதித்தல், வீரரை மதித்தல், குலப் பெரியோரை மதித்தல், பயனுள்ளவற்றை மதித்தல், நன்றி செலுத்துதல் போன்றவையே தொன்மை தமிழரிடம் இருந்தவை. அம்மன், வீரன், வேலன், பொங்கல் கொண்டாட்டங்கள் அப்படிப்பட்டவையே.

மரியாதையும் நன்றியும் செலுத்தும் இம்முறையை வழிபாடாக மாற்றி, சடங்குகளைப் புகுத்தி, தமிழர்கள் மதித்தவற்றை கடவுளாகக் கற்பித்து, மூடநம்பிக்கைகளை வளர்த்தவர்கள் ஆரிய பார்ப்பனர்கள்.

எனவே, மூடநம்பிக்கையுடையவர் எவரும் தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியற்றவர்கள் என்பதே உண்மை வரலாறு உணர்த்தும் உண்மையாகும்! ஆகவே, மூடநம்பிக்கைகளை அகற்றி, அறிவுள்ள இனமாக தமிழினத்தை மாற்றி, நன்றி பாராட்டும் பண்பை உருவாக்கும் இயக்கமே திராவிடர் கழகம்.

மானம்:

தமிழர் மானத்தை உயிரைவிட மேலாக எண்ணினர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அப்படிப்பட்ட தமிழர்கள்தான், ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாய் மானம் இழந்து, மதியிழந்து அடிமையாய், இழிமக்களாய் ஆகினர். அவர்களை, மீண்டும் மானமும் அறிவும் உள்ளவர்களாக மாற்ற, தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட  தன்மான (சுயமரியாதை) இயக்கமே திராவிடர் கழகம். அதுவே, இவ்வியக்கத்தின் தலையாய இலக்கு. ஆகவேதான் அது சுயமரியாதை இயக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

எனவே, மான உணர்வற்ற எவரும் தமிழர் என்று சொல்லிக்கொள்ள சற்றும் தகுதியுடையவர்கள் அல்ல என்பதை உணர்ந்து தன்மான உணர்வு உடையவர்களாய் கிளர்ந்தெழ வேண்டும். நம் மானத்திற்கு எதிராய் உள்ள ஆதிக்கச் சக்திகளை எதிர்த்து முறியடிக்க வேண்டும்; வெற்றி கொள்ளவேண்டும்.

கல்வி:

கல்வி மனிதனுக்குக் கட்டாயம் என்று வாழ்ந்தவர்கள் தொன்மைத் தமிழர்கள். ஆண்-பெண் என்று இருபாலரும் கல்வியில் சிறந்து விளங்கினர். ஆரியர் கலப்பிற்குப் பின், அவர்கள் ஆதிக்கத்தின் விளைவாய், சாஸ்திர, சட்டங்களின்படி தமிழர் கல்வி கற்கக் கூடாது என்ற கட்டாயம் உருவாக்கப்பட்டது. அதை ஒழித்து, மீண்டும் கல்வி எல்லோர்க்கும் உரியது என்ற தமிழரின் உயர் மரபை உருவாக்கவே திராவிடர் கழகம் உருவாக்கப்பட்டது. அதற்காகவே அது அயராது பாடுபட்டு வருகிறது.
கல்வியும், அறிவும் தமிழரின் அடையாளம். எனவே, கற்று அறிவார்ந்த வாழ்க்கை வாழ்பவரே தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதிக்கு உரியவர்கள்! எனவே, தமிழர் அனைவரும் கட்டாயம் கற்றுத் தெளிய வேண்டும்; உயர வேண்டும்.
உலகளாவிய பார்வை:
தமிழர் குறுகிய வட்டத்திற்குள் என்றுமே தங்களைக் குறுக்கிக் கொள்ளாதவர்கள். உலகை ஒரு ஊராக எண்ணியவர்கள். உலக மக்களை உறவினர்களாக ஏற்றவர்கள்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்!”

என்ற தமிழரின் ஒப்பற்ற சிந்தனையே இதற்கு எடுத்துக்காட்டு!
எனவே, சாதி, மத வட்டத்திற்குள் சுருங்காது, சமத்துவம், கல்வி, மானம், விடுதலை, விருப்பப்படியான உயர்நெறி வாழ்வு, மனிதநேய மலர்ச்சி இவையே தமிழரின் தொன்மை மரபு என்பதால், அவற்றை மீண்டும் மீட்டெடுக்க முயலும், பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகமே தமிழரின் உண்மையான இயக்கம் என்பதை தமிழர்கள் உணர்ந்து, அதை ஏற்று, இணைந்து, அதன்வழி போராடி, தமிழரின் தொன்மை மரபுகளை மீட்டு, மீண்டும் மானமும், அறிவும் கல்வியும் உடைய, சமத்துவ, மனிதநேய, தன்மானச் சமுதாயமாய் தமிழ்ச் சமுதாயம் உருவாக்கப் பாடுபட வேண்டும். அது தமிழர் ஒவ்வொருவரின் தலையாய கடமை!

திராவிடர் கழகத்தில் சேர்வோம்! தமிழர் தொன்மைகளை மீட்போம்! தன்மானத்தோடு தலைநிமிர்ந்து தொண்டறம் செய்து மனிதநேயத்தோடு வாழ்வோம்!