அரசியல்

Thursday, December 28, 2017

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவை வைத்து தி.மு.க. பலம் சரிவு என்பது அறியாமை அல்லது அயோக்கியத்தனம்!



ஆர்.கே.நகரில் நடந்தவை என்ன என்பது ஊடகங்களுக்கு முழுமையாய்த் தெரியும்; அரசியலில் பங்குகொண்டுள்ள தலைவர்கள், விமர்சகர்களுக்கும் நன்கு தெரியும்.

ஆனால், எல்லாம் தெரிந்திருந்தும் தி.மு.க. தோல்வியை வைத்து, தி.மு.க.வின் பலம் சரிந்துவிட்டதாய்ப் பேசுவதும், எழுதுவதும், கருத்துக் கூறுவதும் ஒன்று அறியாமையாக இருக்க வேண்டும் அல்லது அயோக்கியத்தனமாக இருக்க வேண்டும்.

காரணம், ஆர்.கே.நகரில் முழுக்க முழுக்க பணம் மட்டுமே தேர்தலைத் தீர்மானித்துள்ளது. போட்டிப் போட்டு கொடுத்த தினகரனும், அ.இ.அ.தி.மு.க. மதுசூதனனும் அந்த விகிதத்திற்கு ஏற்ப வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

தி.மு.க. பணம் கொடுக்கவில்லை. ஓட்டும் கிடைக்கவில்லை. “பணம் வந்தால் பத்தும் பறந்துபோகும்’’ என்ற பழமொழி நீண்டகாலமாய் நிலைத்து வெற்றிபெற்ற பழமொழி. அதன்படிதான் ஆர்.கே.நகரில் நடந்துள்ளது.

தி.-மு.க.விற்கு வாக்களிக்க கூடிய பலரும் பணத்திற்காக வாக்களித்துள்ளனர். இந்த ஒரு தொகுதியில் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது; பணம் கிடைக்கிறதே! என்ற மனநிலையே காரணம்!

தி.மு.க. பணம் கொடுக்காமல் இவ்வளவு வாக்குகளைப் பெற்றது. அதன் செல்வாக்கைக் காட்டுகிறதே தவிர சரிவையல்ல.

சற்றேறக்குறைய தினகரன் தரப்பாரும், அ.தி.மு.க. தரப்பாரும் சேர்ந்து ஒரு வாக்குக்கு 20 ஆயிரம் ரூபாய் மொத்தமாகக் கொடுத்த பின்னும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தி.மு.க.விற்கு வாக்களித்திருப்பது என்பது தி.மு.க.வின் செல்வாக்கின் பலமே! இவ்வளவு பணம் ஒரு வாக்குக்கு அளிக்கப்பட்ட நிலையிலும் தி.மு.க. பெற்றுள்ள வாக்குகள் மதிப்பு மிக்கவை.

உண்மை இப்படியிருக்க ஆர்.கே.நகரில் தோற்றதை வைத்து தமிழ்நாடு முழுக்க அதுவே நடக்கும் என்பதும் அக்கருத்தைப் பரப்புவதும் அசல் அயோக்கியத்தனம் ஆகும்!

ஒரு மாதத்திறகு முன் தமிழகம் முழுக்க அறியப்பட்ட கருத்துக் கணிப்பில் 55%க்கும் மேற்பட்ட மக்கள் தி.மு.க.விற்கு வாக்களிப்போம் என்று கூறியிருந்தனர். அதன்பின் 2ஜி வழக்கில் தி.மு.க.வின் களங்கம் நீக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாய் 60% வாக்குகளுக்கு மேல் தி.மு.க.விற்கு அளிக்க மக்கள் தயாராய் இருக்கும் நிலையில், தி.மு.க. செல்வாக்கு சரிந்து விட்டதாய்ச் சொல்வது எந்த அடிப்படையில்? நாணயமாய் ஊடகங்களும், விமர்சகர்களும் பதில் சொல்ல வேண்டும்.

இந்த சந்தடி சாக்கில் மு.க.அழகிரி தி.மு.க. இனி வெற்றி பெறாது என்பது, அவரது ஆறா அரிப்பை தேய்த்துக் கொள்ளும் முயற்சிதான்.

தம்பி மீதுள்ள வெறுப்பை தி.மு.க.வுக்க எதிர்ப்பாய்ப் பயன்படுத்தும் அவரைத் தி.மு.க.வின் நலம் விரும்பியாக எப்படி ஏற்க முடியும்? தனக்குச் செல்வாக்கு இல்லாத தி.மு.க. அழிய வேண்டும் என்று நினைக்கும் சுயநலக்காரர் அவர் என்பதை இதன்மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே, தி.-மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், தொண்டர்களும் சோர்வடையாது பழைய நம்பிக்கையில், உற்சாகத்துடன் செயல்பட வேண்டும்.

தி.மு.கழகத்தில் சுற்றியுள்ள, பற்றியுள்ள சுயநலக்காரர்களை, அரை வேக்காடுகளை அப்புறப்படுத்தி சரியானவர்களின் வழிகாட்டுதலில் செயல்பட வேண்டியது ஸ்டாலின் அவர்களின் தலையாய கடமையாகும்.

இன்றைக்கு மக்கள் விரும்புவது பி.ஜே.பி.யை வன்மையாக எதிர்க்கும் கட்சியைத்தான். தற்போது அத்தகுதி தி.மு.க.விற்கே உள்ளது. அதில் தி.மு.க. உறுதியாக நின்று வெல்ல வேண்டும்! வெல்ல முடியும்!

தமிழக மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். ஊடகங்கள் மக்களைக் குழப்புகிறார்கள். தங்கள் நோக்கத்திற்கு ஏற்ப!

வேண்டுமானால் சரியான கருத்துக் கணிப்பு நடத்திப் பாருங்கள்! உண்மையை உணரலாம்!

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
====

Thursday, December 21, 2017

குஜராத் தேர்தலில் பா.ஜ.க. அரசு செய்த மோசடி பாரீர்!


- மஞ்சை வசந்தன்

16 தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கையைவிட பதிவான வாக்குகள் எண்ணிக்கை அதிகம்.

ஆதாரம் இதோ:

எடுத்துக்காட்டாக பராசா தொகுதியில் வாக்காளர் பட்டியல்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,25,191 பதிவானது 1,37,262 ஆக 12,071 கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன.
 

வழக்கமாக 80% வாக்குகள்தான் பதிவாகும். ஆனால், இங்கு 110% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. எனவே, 30% வாக்குகள் மோசடியானவை போடப்பட்டுள்ளன என்பது வெளிப்படுகிறது.

எனவே, இந்த 16 தொகுதிகளிலும் தேர்தலை உடன் இரத்து செய்து உடன் மறுதேர்தல் நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும். இதற்கு நாடெங்கும் குரல் கொடுக்க வேண்டும்; நீதி கிடைக்கும் வரைப் போராட வேண்டும்.

குஜராத்தில் வெற்றி என்று கொக்கரித்த பி.ஜே.பி. பேர்வழிகள் இந்த மோசடிக்கு முகத்தை எங்கே வைப்பார்கள்! 
 
நாடே காரித் துப்புகிறது!

Wednesday, December 20, 2017

குஜராத் தேர்தலில் உண்மையில் வென்றது காங்கிரஸ்தான்!



ஆட்சி அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்தையும் பயன்படுத்தியே பி.ஜே.பி. ஆட்சியைப் பிடித்துள்ளது.

உண்மை என்ன?

வாக்கு எண்ணிக்கையன்று முற்பகல் நிலவரப்படி காங்கிரஸ் முன்னிலையில் இருக்க, டில்லி போன்ற பகுதிகளில் காங்கிரஸார் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதன்பின் பி-.ஜே.பி முன்னிலை என்று செய்திகள் வந்தன.

வாக்கு எண்ணிக்கைகளைக் கூர்ந்து நோக்கினால் 25 தொகுதிகளில் காங்கிரஸ் 500 முதல் 2000 வாக்குகளில்தான் தோற்றுள்ளது.

#உண்மையான வித்தியாசம் என்ன?

500 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி என்றால் 251 வாக்குகள் இன்னும் கூடுதலாகப் பெற்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பர். அதாவது உண்மையான வித்தியாசம் 251 வாக்குகள்தான். 2000 வாக்குகள் வித்தியாசம் என்றால் காங்கிரஸ் கூடுதலாகப் பெற வேண்டியது 1001 வாக்குகள்தான்.

#சோதிக்க வேண்டும்

வாக்கு எண்ணிக்கையை மீண்டும் சோதிக்க வேண்டும். அந்த 25 தொகுதிகளிலாவது கட்டாயம் வாக்கு எந்திரங்களைச் சோதிக்க வேண்டும்.
ஆக 25 தொகுதிகள் 15 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றாலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும்.

அது மட்டுமல்ல. மத்திய ஆட்சியின் அதிகாரம், பணம் வாரி இறைக்கப்பட்டது, தேர்தல் ஆணையத்தின் ஆதரவு, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை, காங்கிரஸாரை நெருக்கியது, மோடியின் மோசடிப் பேச்சகள், மதவெறித் தூண்டல் என்ற பலவும் சேர்ந்தும் காங்கிரஸ் இந்த அளவிற்கு வாக்குகளைப் பெற்றிருப்பது, பி.ஜே.பி படுதோல்வியையே காட்டுகிறது.

குஜராத்தை முதல்மாதிரி வளர்ச்சி மாநிலமாகக் காட்டிய பி.ஜே.பி.க்கு இது உண்மையிலேயே பெருந்தோல்வி!

எனவே, குஜராத்தில் உண்மையில் வென்றது காங்கிரஸ்தான்.
இனி என்ன செய்ய வேண்டும்?

குஜராத்திலே மக்கள் நிராகரித்துவிட்டதால், எதிர்க்கட்சிகள், குறிப்பாக கம்யூனிஸ்டுகள் காங்கிரசோடு கூட்டணி அமைத்து, 2019 தேர்தலில் பி.ஜே.பியை வீழ்த்த வேண்டும். வீழ்த்த முடியும்!

இராஜா, கனிமொழி விடுதலை அபாண்ட பழிபோட்ட ஆரிய பார்ப்பனர்களே, ஏற்பட்ட இழப்புகளுக்கு என்ன பதில் சொல்வீர்!

2.ஜி. வழக்கில் தீர்ப்பு!
இராஜா, கனிமொழி விடுதலை
அபாண்ட பழிபோட்ட ஆரிய பார்ப்பனர்களே,
ஏற்பட்ட இழப்புகளுக்கு என்ன பதில் சொல்வீர்!

- மஞ்சை வசந்தன்

நாட்டு மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் செல்பேசி இணைப்பு கிடைக்கச் செய்த இராஜாவை, பதவி இழக்கச் செய்து, அவரையும் கனிமொழியையும் சிறையில் அடைத்து உங்கள் வஞ்சக ஆசைகளை தீர்த்துக்கொண்ட ஆரிய பார்ப்பனர்களே, அதைத் தினம் தினம் மென்று தின்று அசைபோட்ட ஆரிய பார்ப்பன ஊடகங்களே! இதுவரை இராஜா, கனிமொழி தி.மு.க. அடைந்த இழப்பு உளச்சல்களுக்கு என்ன பதில் சொல்வீர்?

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் இந்த அபாண்ட பழியைப் பேசி தி.மு.க.வை தோற்கடித்தீர்களே! இப்போது குற்றவாளிகள் அல்ல என்று தீர்ப்பு வந்துவிட்டது! உங்களால்அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு என்ன பதில் சொல்வீர்? சூடு சொரணையிருந்தால் பதில் சொல்லுங்கள்!

ஆரிய நரிகளே, ஆர்.எஸ்.எஸ். ஆரிய பார்ப்பன கூட்டமே இனி உங்களுக்கு அடுத்தடுத்து தோல்விதான். குஜராத்தில் வெற்றி பெற்றதால் குதிக்காதீர். அங்கே நீங்கள் அடைந்திருப்பது படுதோல்வி! ஆரிய ஆதிக்கம் விரைவில் வீழும்!
இராஜா, கனிமொழி இருவரின் நீதிப் போராட்டத்திறகும், உள்ள உறுதிக்கும் நமது பாராட்டுகள்!

இதே உறுதியுடன் பி.ஜேபியை ஆரிய ஆதிக்கத்தை தி.மு.க. வீழ்த்த உறுதிகொள்ள வேண்டும். திமுக.வினர் ஆர்த்து எழவேண்டும்!

#குறிப்பு: இது பற்றிய விரிவான செய்திகள் நாளை எனது முகநூலிலும், பிளாக்ஸ்பாட்டிலும் காணுங்கள்.

Thursday, December 14, 2017

தமிழ்த் தேசியம் பேசி பெரியாரை எதிர்ப்போர் இந்த வரலாற்று உண்மையை அறிக!

தனித்தமிழ்நாடு கேட்டு போராடியவர் பெரியார்!

பெரியார் பின் சென்ற நாம் தமிழர் கட்சி!

இந்திய யூனியன் படம் எரிப்புப் போராட்டம்

தமிழ்த் தேசியம் பேசி பெரியாரை எதிர்ப்போர் இந்த வரலாற்று உண்மையை அறிக!

- மஞ்சை வசந்தன்
==========================
1960 ஜூன் திங்கள் 5ஆம் நாள் மாலை, தமிழ்நாடு நீங்கலாக இந்திய யூனியன் படம் எரிப்புப் போராட்டம் என்று பெரியார் அறிவித்து விட்டார். “நாடெங்கும் தீவத்தி ஊர்வலமும் நடைபெறும். இது அரசியல் போராட்டமல்ல; இனப் போராட்டம்!

போராட்ட வீரர்களை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்த நான் மே 31, ஜூன் 1, 2, 3, 4 தேகிளில் ரயில்மார்க்கமாகப் பயணம் செய்வேன்’’ என்றும் பெரியார் கூறிவிட்டார். 25.5.1960 “கரண்ட்’’ இதழில் பெரியார் படத்தையும் போட்டு, சுதந்திரத் தமிழ்நாடு தனியாகப் பிரிய வேண்டுமென்ற கோரிக்கைக்காகப் பெரியார் போராட்டம்! இது 23 ஆண்டுகாலமாய் இருந்துவரும் கோரிக்கை வெற்றிக்காகப் பெரியாரின் 1960ஆம் ஆண்டு வேலைத்திட்டம்!

இந்திய யூனியன் பட எரிப்பு (தமிழ்நாடு நீங்கலாக) என்ற செய்தி பிரதான இடத்தில் வெளியிடப்பட்டது.
நாம் தமிழர் இயக்கமும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவெடுத்திருந்தது.

ஆயிரம் வீரர்களாவது சிறை செல்வதாக மட்டுமில்லாமல் உயிரையும் பலி கொடுக்கத் தயாரான தன்னல மறுப்பு உணர்வுடன் வந்தால்தான், இந்தியக் கூட்டாட்சி என்னும் பார்ப்பனப் பிரசிடெண்ட், பார்ப்பனப் பிரதமர் எனும் ஏகபோக ஆட்சியிலிருந்து விலகித் தமிழ்நாட்டைத் தனிச் சுதந்திர நாடாக ஆக்கித் தமிழ்நாடும் தமிழனும் தப்பிப் பிழைக்கலாம் என்றார் பெரியார். தமிழ்நாடு என்ற பெயரை இந்த ராஜ்யத்துக்குச் சூட்டுகின்ற அதிகாரம், சக்தி எல்லாம் டெல்லி ஆட்சிக்கே உண்டு. ஆகையால் தமிழ்நாட்டு அரசோடு முட்டிக்கொள்ளாமல் அநீதிகளுக்குக் காரணமான டெல்லி ஆட்சியின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். தாய்த்திரு நாட்டுக்குத் தமிழ்நாடு என்ற பெயர்கூட இல்லையே என்று கொதிக்கும் உள்ளங்கொண்ட இளைஞர்களே, தோழர்களே, புலவர்களே, பெருமக்களே, எழுத்தாளர்களே, பேச்சாளர்களே நாட பிரிவினையைத் தவிர வேறு வழியில்லை.

ஜுன் 5இல் யூனியன் படத்தை ஒரு கையிலும் தீப்பந்தத்தை மறு கையிலும் தூக்கி ஊர்வலம் வந்து டெல்லி ஆதிக்க ஆட்சிக்குத் தீ மூட்டுங்கள்!

ஊர்வலம் வருவதில் யாருக்காவது வெட்கமோ, பயமோ இருக்குமானால் அவரவர் வீட்டு வாசலில் கொளுத்திவிட்டுப் பெயர் கொடுங்கள்’’ என்றார்.
மே மாதம் முழுவதும் பெரியாரின் இந்த வீர முழக்கம் தமிழகம் முழுவதும் எதிரொலித்தது.

சிகரம் வைத்தது போல் 4.6.1960 நாள் சென்னை திருவல்லிக்கேணிக் கடற்கரையில் டி.எம்.சண்முகம் தலைமையில் மிகப் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடந்தது.

பெரியாரும் கி.வீரமணி அவர்களோடு, நாம் தமிழர் இயக்கத்துச் சார்பில் ஆதித்தனார், ஈரோடு சின்னசாமி, வரதராசன், ஜெயச்சந்திரன் ஆகியோரும் பேசினார்கள். 2 லட்சம் படங்கள் கொளுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்தன. இது பட எரிப்பு அல்ல; படையெடுப்பு என 3.6.1960 ‘விடுதலை’ வர்ணித்தது. ஜூன் முதல் நாள் அமைச்சரவை கூடிற்று. சென்னையில் 41ஆவது பிரிவின் கீழ் ஜூன் 4 முதல் 11 வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஜூன் 5 காலை 10.30 மணியளவில் 151ஆவது தடுப்புக்காவல் சட்டத்தின்படிப் பெரியாரும், வீரமணி, குருசாமி, புலவர் கோ.இமயவரம்பன் ஆகியோரும், ஆதித்தனாரும் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுதும் அன்று பல இடங்களில் தேசப்படங்கள் தீக்கிரையாயின. நள்ளிரவு வரையில் போலுசார் வேட்டையாடி 4000 பேரைக் கைது செய்திருந்தனர். சென்னையில் டி.எம்.சண்முகம், லோகநாதன் உள்ளிட்ட 75 பேர் மீது வழக்குப் போட்டு 24.6.1960இல் ஒரு மாத சிறைத்தண்டனை வழங்கினார்கள்.

ஈரோடு திராவிடர் கழகத் தலைவர் அங்கமுத்து மீது 124ஏ, 153 பிரிவுகளில் வழக்குத் தொடுத்து ஒருமாத சிறை அளிக்கப்பட்டது,

7.7.1960 அன்று.

ஆரியப் பார்ப்பனர்களின் அநியாயம் பாரீர்!


ஆரியப் பார்ப்பனர்கள் தங்களுக்கு உரியது என்றால் அதற்காக எதையும் செய்வர் என்பதற்கு இதோ ஓர் ஆதாரம்.

சமஸ்கிருதம் அவர்கள் மொழி. அதை இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர்கூடப் பேசவில்லை. வழக்கொழிந்த செத்த மொழி. ஆனால், அதைத்தான் இந்தியாவிற்கே ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்கின்றனர்.

அதைப் பரப்ப கோடிக்கணக்கில் செலவிடுகின்றனர். ஆனால், படிக்க யாரும் முன்வருவதில்லை. அப்படியிருந்தாலும் அதை விடாப்பிடியாக வீண் செலவு செய்து பரப்பத் துடிக்கின்றனர்.

அநியாயம் பாரீர்!

ஆந்திராவில் விஜயநகரத்தின் மையப் பகுதியில் “மகாராஜா சமஸ்கிருதக் கல்லூரி’’ உள்ளது. இது திருப்பதி தேவஸ்தான வேதிக் பல்கலைக்கழகத்தில் இணைந்தது.

இந்தக் கல்லூரியில் சமஸ்கிருதம் படிக்கும் மாணவர் ஒரே ஒருவர்தான்.
ஒரு மாணவருக்காக ஒரு கல்லூரி, அதற்கு ஒரு முதல்வர் (Principal), ஒரு அலுவலக ஊழியர், ஒரு கடைநிலை ஊழியர்.

ஒரு மாணவன் சமஸ்கிருதம் படிக்க ஒரு கல்லூரி! லட்சக்கணக்கில் செலவு!
ஆனால், கிராமப்புரங்களில் ஏழைப் பிள்ளைகள் நூற்றுக்கணக்கில் படிக்கும் பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை! கட்டடம் இல்லாமல் மரத்தடியில் மண் தரையில் படிக்கிறார்கள்! ஆரியப் பார்ப்பான் ஆதிக்கம் எங்கே என்று கேட்கும்

“அதிமேதாவிகள்’ இதை அறியட்டும்! சூடு சொரணை பெறட்டும்!

படித்துப் பகிருங்கள்!

#ஆதாரம் : THE HINDU
Date ; 13-12-2017

- மஞ்சை வசந்தன்

Monday, December 4, 2017

வைகோவும், கோவை இராமகிருஷ்ணனும் வழிகாட்டுகிறார்கள்! இது காலத்தின் கட்டாயம்!

உண்மையான திராவிட இயக்கங்கள்
ஓரணியில் சேர்ந்து செயல்பட வேண்டும்!

வைகோவும், கோவை இராமகிருஷ்ணனும் வழிகாட்டுகிறார்கள்!
இது காலத்தின் கட்டாயம்!

வரவேற்கிறோம்; பாராட்டுகிறோம்!

- மஞ்சை வசந்தன்

மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசியல்ரீதியாக இதைச் சிந்தாமல் சிதறாமல் சேர்த்துக் கோர்த்து, ஆரிய ஆதிக்கத்தையும் மதவெறி கொடுஞ்செயல்களையும் அடித்து நொறுக்கி, நல்லிணக்கமும், சம உரிமயும் காக்க வேண்டும். நாட்டுக்கு நல்லாட்சி தரவேண்டும். ஊழலற்ற,  தமிழர் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திராவிட இனத்தின் சரியான வழிகாட்டி. அதற்குரிய அறிவு, ஆற்றல், வயது, முதிர்ச்சி, இணக்கம், தன்னல மறுப்பு என்று அனைத்தும் அவரிடம் உள்ளன.

எனவே, மு.க.ஸ்டாலினும், வைகோவும் அவரின் ஆலோசனையை அடிக்கடிப் பெற்று, அரசியல் நகர்வுகளை செய்ய வேண்டியது கட்டாயக் கடமையாகும். பிஜேபியுடன் எக்காலத்திலும் எச்சூழலிலும் உறவு வைக்க மாட்டோம் என்பதை இவர்கள் உறுதிபட அறிவிக்க வேண்டும்! அதில் உறுதியாக நிற்க வேண்டும்.

மதவாதசக்திகளையும் அதற்குத் துணைபோகும் அ.இ.அ.தி.மு.க. என்ற பி.ஜே.பி.யின் பினாமி கட்சியையும் அடியோடு வீழ்த்தி, உண்மையான திராவிட அரசியல் அமைப்புகளான தி.மு.க., ம.தி.மு.க. இரண்டையும் ஆதரித்து வளர்க்க வேண்டியது தமிழர் ஒவ்வொருவரின் கட்டாயக் கடமையாகும். விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்கள் முன்னமே மிகச் சரியான தடத்தில் செல்வது பாராட்டுக்குரியது. பொதுவுடமைக் கட்சிகள்  சரியான நிலைப்பாடு எடுத்தது வரவேற்கத்தக்கது.

ஊழலா? மதவாதமா? என்றால் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது மதவாதந்தான். ஊழலைக் காட்டி மதவாத்தை வளர்த்துவிடும் எந்தவொரு செயலும் அறிவுக்கும், மக்கள் நலத்திற்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் கேடானது.

மத ஆதிக்க ஆட்சியாளர்களை, அவர்களுக்குத் துணை போகிறவர்களை அப்புறப்படுத்திவிட்டு, ஊழலை ஒழிக்க முற்பட வேண்டும்.

இனி, ஊழல் பேர்வழிகள் அரசியலில் நிலைகொள்ள முடியாது என்பது உறுதியான உண்மை! எனவே, இனி எந்த ஆட்சியாளனும் ஊழல், கொள்ளை செய்யாதவாறு அனைத்து அமைப்புகளும் ஒன்று சேர்ந்து தடுத்துவிட முடியும்!

தமிழ், தமிழர் என்று உணர்ச்சிப் பெருக்கில் முழங்கிவிட்டு, ஆரியப் பார்ப்பனர்களை அரவணைத்து அவர்களைத் தமிழர் என்று ஏற்கும் அணுகுமுறையும்; சாதி உணர்வை சக்தியாகக் கொண்டு சாதனைகளை செய்ய முடியும் என்ற செயல்திட்டங்களும், தப்பான, முதிர்ச்சியற்ற முடிவுகள்.

திராவிட இயக்கங்களை ஒழித்துவிட வேண்டும் என்ற இவர்களின் முயற்சி பி.ஜே.பி. வளர்ச்சிக்கே உதவும். திராவிட ஆட்சி சாதனைகளை அறவே மறைத்து ஊழல், கொள்ளைகளை மட்டுமே பெரிதாகப் பேசுவது சுயநல அரசியலே! திராவிட ஆட்சிகளின் தப்புகள் களையப்பட வேண்டியவை. மாறாக திராவிடக் கட்சிகள் ஒழிக்கப்பட வேண்டியவை அல்ல.

இந்த இரு தரப்பாரும் நல்லவர்களாய், வல்லவர்களாய், நேர்மையானவர்களாய், போராளிகளாய் இருந்தாலும், இந்த அடிப்படைத் தவற்றால் வரலாற்றுப் பிழை செய்கின்றவர்களாகவே ஆவர். அவர்கள் இத்தவற்றை உணர்ந்து தங்களைச் சரியான பாதையில் செலுத்தினால், அவர்கள் எதிர்காலத்தில் தமிழர்களின், தமிழர் மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவாக்ள் என்பதோடு, அரசியலில் நல்ல மாற்றாகவும் அவர்கள் அமைய முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இவர்கள் பி.ஜே.பி. எதிர்ப்பில் உறுதியாக இருக்க வேண்டும். அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்!  இது இவர்களின் எதிர்காலத்திற்கும் நல்லது. தமிழர்க்கும் நல்லது.

ஆனால், அ.இ.அ.தி.மு.க.வை ஓ.பி.எஸ்., எடப்பாடி இருவரும் அடகுவைத்து விட்டார்கள். இனி அந்தக் கட்சியில் உள்ள தமிழர் உணர்வுள்ள தொண்டர்கள் அனைவரும் தி.மு.க.விலோ அல்லது ம.தி.மு.க.விலோ இணைந்து விடுவதே அவர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் நன்மை தரும்! மேலே சொன்னவை கசப்பானவையாக இருந்தாலும் அவையே சரியான மருந்து. உணர்ச்சிவசப் படாமல் அறிவு வயப்பட்டு சிந்தித்தால் உண்மை விளங்கும்!

=====