அரசியல்

Tuesday, December 29, 2015

எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதற்கு இன்னுமோர் ஆதாரம்!


- மஞ்சை.வசந்தன்
எகிப்து நாட்டின் பிரமிடுகளைக் கட்டியவர்கள் தமிழர்கள்; ஆண்டவர்கள் (மன்னர்கள்) தமிழர்கள், கிளியோபாட்ரா தமிழ்ப் பெண் என்பதற்கான பலச் சான்றுகளைக் காட்டி முன்னர் முகநூலில் எழுதியிருந்தேன்.
அதை இன்னும் உறுதிசெய்யும் ஆதாரம் ஒன்று அண்மையில் தருமபுரி அருகில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான சித்தேரி மலையின் தொடர்ச்சியான போடுமலையில் கிடைத்துள்ளது.
உருளை வடிவ கல்வட்டங்கள் இங்கு கிடைத்துள்ள ஆதாரமாகும்.
இந்த உருளை வடிவக் கல்வட்டம், எகிப்தில் கிடைத்துள்ள உருளை வடிவக்கல் வட்டத்தை ஒத்து உள்ளது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
கல்திட்டை அல்லது கல்லறை அமைக்க இக்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது அரிய வகை தடயமாகும். இதன்மூலம் தமிழர்கள் எகிப்தில் பரவி வாழ்ந்து ஆண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- (ஆதாரம்: ‘தினமணி’ 26-.12.2015, 7ஆம் பக்கம்)

No comments:

Post a Comment