அரசியல்

Saturday, January 23, 2016

திமுகவை அழிக்கத் துடிப்பவர்கள் யார்? திருமாவளவன் போன்றோருக்கு தீர்க்கமான நோக்கு வேண்டும்!



- மஞ்சை வசந்தன்

“திராவிடக் கட்சியில்லா ஆட்சி” என்ற ஒரு கானல் நீர் மயக்கத்தில் களம் இறங்கியுள்ளவர்கள் இருவகை.
 
1) உண்மையிலே திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் குறைகண்டு, வெறுப்புற்று மக்கள் நலன் கருதி மாற்றுத்தேடுகின்றவர்கள்.

2) இவர்களைப் பயன்படுத்தி திராவிட இயக்க ஆட்சியை அகற்றிவிட்டு வலுவான அமைப்பு இல்லா நிலையில் தங்கள் ஆதிக்க அரசியலை எளிதில் கொண்டு வந்துவிடலாம் எனறு ஆவல் கொண்டு அலைகின்ற ஆரிய பார்ப்பனர்கள், அவர்கள் அடிவருடிகள், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. பரிவாரங்கள், மத மயக்கத்தில் வெறிகொண்டு அலைகிறவர்கள்.

திராவிட கட்சிகள் என்று சொல்லும்போதும், எதிர்க்கும்போதும் இவர்கள் குறிப்பாக குறிவைப்பது திமுகவைத் தான். அதிமுகவை ஒப்புக்கு எதிர்ப்பதாய் காட்டுகின்றனர்.

திராவிட இயக்கம் என்பது நூற்றாண்டு உழைப்பின், தியாகத்தின், பிரச்சாரத்தின், திட்டமிடலின், செயலாக்கத்தின் விளைவு. அப்படியொரு கட்டமைப்பை, மக்களோடு கலந்த உணர்வை, பிணைப்பை பின்பற்றலை, பேணுதலை ஒரு சில காரணங்களுக்காக ஒழித்துக்கட்டிவிட்டு வேறொன்றைக் கட்டமைப்பது என்பது கற்பனைச் சித்தாந்தம்.

டில்லியில் வரவில்லையா திடீர்மாற்றம், அஸ்ஸாமில் வரவில்லையா அதிரடிமாற்றம் எனறு வாதிடலாம். டில்லியில் சூழல் வேறு, அஸ்ஸாமில் எழுந்த உணர்ச்சி வேறு. ஆழகமாகச் சிந்தித்து ஆய்வு செய்தால் விளங்கும். அதை எண்ணி இங்கு முயல்வது அரைவேக்காட்டுத்தனம் அடிப்படையை அறியா நிலை.

ஓர் இயக்கம் என்பது தேர்தலுக்காக அமைக்கப்படுவதில்லை, தலைமுறைக்காக அமைக்கப்படுவது. குறைகள் இருந்தால் களையப்பட வேண்டும், குற்றம் புரிந்தோர் நீக்கப்பட வேண்டும்.

மாறாக ஓர் எழுத்தை சேர்த்துக் கொண்டு பிரிந்து செல்வதும், இருந்த இயக்கத்தை அழிக்க நினைப்பதும் தன்முனைப்பு அல்லது அதிகார அரிப்பு என்பதைத் தவிர ஆழமான காரணம் வேறு இருக்க முடியாது.

திமுக வை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்தது வரலாற்றுப் பிழை. திராவிட இயக்கம் நீர்த்துப்போனதற்கு அதுவே முதன்மைக் காரணம்.

கட்சியில் கணக்குக் கேட்டு கட்சியின் கணக்குகளைச் சரி செய்ய வேண்டும் என்பது எம்.ஜி.ஆர். இலக்கு என்றால் என்ன செய்திருக்க வேண்டும்?

தன் கோரிக்கையில் நியாயம் இருந்தால், அதை கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் அதை விளக்கி தன் பக்கம் உறுப்பினர்களை பெருமளவு ஈர்த்து தீர்வுகாண வேண்டும். அதை விட்டுவிட்டு, கட்சியின் செயற்குழுவில் விவாதிக்க வேண்டியவற்றை பொதுமக்கள் மத்தியில், பொதுக்கூட்டத்தில் பேசுவது உள்நோக்கம், சுயநல நோக்கம், தன்முனைப்பு இல்லாமல் வேறு என்ன? எம்.ஜி.ஆரின் கோரிக்கை சரியென்றால் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவைப் பெற்று குற்றவாளியை விலக்கிக் கட்சியைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதுதானே சனநாயகம் அதை விட்டுவிட்டு, வேறு கட்சி தொடங்கும் திட்டத்தை முன் கூட்டியே வகுத்துக் கொண்டு அதற்கேற்ப குற்றம் சுமத்திச் செயல்படுவது சனநாயக முறைப்படி சரியாகுமா?

அடுத்து மதிமுகவை வை.கோ. உருவாக்கியது. வை.கோவின் கோரிக்கை சரியென்றால் அதை செயற்குழு பொதுக்குழுவில் விளக்கி, உறுப்பினர்களின் ஆதரவை பெற்றே குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும், வெளியேற்ற வேண்டும், கட்சியைத் தூய்மைப்படுத்த வேண்டும். பெரும்பான்மையை பெறமுடிய வில்லையென்றால் சனநாயகமுறைப்படி அது அவருக்குத் தோல்விதானே! அதை ஒத்துக்கொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு உழைப்பது தானே சரியான நெறி? பி.ஜே.பி ஒரு மதவாதக் கட்சி என்பது உளச்சான்று உடைய ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆர்.எஸ்.எஸ். அதன் பின்னின்று ஆரிய சனதன ஆதிக்கத்தை நிலை நாட்டத் துடிக்கிறது என்பது எல்லோருக்கும் புரியும். இந்தியச் சூழலுக்கு ஏற்பில்லா பாசிசக் கட்சி பிஜேபி ஆனால் சனநாயக முறைப்படி தேர்தலில் அக்கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துவிட்டது. நமக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அந்த ஆட்சியை நாம் எற்றுத்தானே ஆகவேண்டும்.

அடுத்து மக்களைச் சந்தித்து அவர்கள் ஆதரவோடு ஆதிக்கம் மேலோங்காமல், பாசிசம் பற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்த வாய்பில் மக்கள் ஆதரவோடு நாம் விரும்பும் ஆட்சியை அமைக்க முயல வேண்டும். அதுதானே மக்களாட்சி மாண்பு.

இந்த அணுகுமுறை சனநாயக முறைப்படி இயங்கும் கட்சிகளுக்கும் பொருந்தும் அல்லவா? அப்படியிருக்க தனிக்கட்சி தனிக்கொடி என்பது தன்முனைப்பு, தன்னல வேட்கை, அதிகார ஆவல் அன்றி வேறு நோக்கம் எப்படியிருக்க முடியும்?

தன்னினும் முன்னிலையில் இருந்த நாவலர், பேராசிரியர் ஆகியோரிருக்க எம்.ஜி.ஆரின் உதவியோடு தான் சனநாயக முறைப்படிதான் கலைஞர் தலைமைக்கு வந்தார். அப்படித்தான் எம்.ஜி.ஆர் வந்திருக்க வேண்டும். வை.கோ வந்திருக்க வேண்டும். இப்போது ஸ்டாலினை முந்த நினைப்பவர்களும் அப்படித்தான் சனநாயக முறைப்படி பொதுக்குழு முடிவின்படி முந்த வேண்டும்.

ஆக, திமுக கழகத்தின் தலைவராக கலைஞரை அந்த அமைப்பு ஏற்கிறது. அதனால் அவர் தலைவராக இருக்கிறார். ஸ்டாலினை பொருளாளராக அந்த அமைப்பு ஏற்கிறது அவர் பொருளாளராக இருக்கிறார்.

அடுத்து ஊழல். திமுகவை ஒழித்துக்கட்ட எதிரிகள் ஏந்தும் ஆயுதம் இது. ஊழல் என்பதற்கு என்ன இலக்கணம்? ஊழல் இல்லா அரசியல் இயக்கம் உண்டோ? ஒரு தேர்தலுக்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாயை ஒவ்வொரு கட்சியும் செலவிடுகிறதே அவையெல்லாம் உழைத்து வந்த பணமா? ஒவ்வொரு முதலாளிகளும், கம்பெனிகளும் அளித்த பெருந்தொகை, முறை கேடாக பல வகையில் பெற்றது. இதில் எந்தக் கட்சி விலக்கு?

அரசியலுக்கு இரஜினி வரவேண்டும், விஜய் வரவேண்டும் ஊழல் ஒழியும் என்கின்றன பல ஊடகங்கள்.

இன்றைக்கு வந்த சிவகார்த்திகேயன் 9 கோடி ரூபாய் ஒரு படத்திற்கு வாங்குவதாய் சொல்கிறார்கள். அப்படியென்றால் ரஜினி இதுவரை எவ்வளவு கோடி வாங்கியிருப்பார், விஜய் எவ்வளவு கோடி வாங்கியிருப்பார். அவ்வளவு ரூபாயும் கணக்கில் காட்டப்பட்டு, அவ்வளவு தொகைக்கு வருமான வரி செலுத்துகிறார்களா?

கோடிக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பவர்கள் தானே இவர்கள். இதைவிடவா பெரிய ஊழலை அரசியல்வாதிகள் செய்துவிட்டார்கள்? இவர்களைத் தெய்வமாக அல்லவா இன்றைய ஊடகங்கள் காட்டுகின்றன?

இது என்ன இரட்டை அளவுகோல்? முரசொலிமாறன் குடும்பம் சம்பாதித்து விட்டது. அது கலைஞர் செய்த ஊழல் என்று பெருக்கிக் காட்டப்படுகிறது.

அம்பானியும் அதானியும் சில ஆண்டுகளில் ஆயிரமாயிரம் கோடி சம்பாதித்து பணக்காரர்களாய் ஆகும் போது, முதன் முதலில் தொலைக்காட்சி தொடங்கிய நிறுவனம் சம்பாதிக்காதா? கேசட் கடை வைத்திருந்த ராஜ் டி.வி. நிறுவனம் இன்றைக்கு இத்தனை ஆயிரம் கோடி சம்பாதிக்கவில்லையா?

இவை இந்தியாவில் இருக்கும் பொருளாதாரச் சுரண்டல் சீர் கேட்டின் விளைவுகள். அதைக் கொண்டுபோய் திமுக மீது சுமத்தி திமுகவை அழிக்க நினைப்பது எப்படிச் சரியாகும்?

2ஜி ஊழல்! ஊதிஊதிக் காட்டி மக்கள் மனதில் ஒரு வெறுப்பை விதைத்து விட்டார்கள்.

இராஜீவ்காந்தி கொல்லப்பட்டதற்கு திமுக தான் காரணம் என்று தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்கள் பச்சைப் பொய்யைப் பரப்பி ஒரு தேர்தலில் திமுகவை வீழ்த்தினர்.

இலங்கை விடுதலைப்புலிகளுக்கு கலைஞர் ஆதரவு அளித்தார் என்று சொல்லி இருமுறை திமுக ஆட்சியைக் கலைத்தார்கள்.

உறுதி செய்யப்படாத 2ஜி ஊழலை சொல்லி ஒரு தேர்தலில் தோற்கடித்தார்கள். அதையே அய்ந்தாண்டு கழித்துச் சொல்லி அடுத்தத் தேர்தலில் தோற்கடிக்கப் பார்க்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அவ்வழக்கைக் காத்திருந்து கொண்டு வருகிறார்கள்.

ஜெயலலிதா செய்தால் ஊழல் இல்லை. கலைஞர் செய்தால் ஊழல். இது கம்யூனிஸ்டுகள், தினமணி, தினமலர், தினத்தந்தி, குமுதம் பத்திரிகைகளின் கருத்து. இப்படிப்பட்ட யோக்கியர்கள்தான் இன்று, நீதிநேர்மை, வாய்மை, தூய்மைக்காக முழங்குகிறார்கள். இதைச் சொல்லும் போது கம்யூனிஸ்டுகளுக்கு வலிக்கும். எத்தனை வழக்குகளில் ஊழல் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதாவோடு நீங்கள் கெஞ்சிக் கூத்தாடி கூட்டு சேர்ந்தீர்கள்! அப்போது ஊழல் தெரியவில்லையா? இப்போதுதான் தெரிகிறதா?
இன்றைக்கு நம்முன்னே நிற்பவை இரண்டு. ஒன்று மதவாதம், பாசிசம் ஏந்தி நிற்கும் பி.ஜே.பி.யின் ஆபத்து. இரண்டு எங்கும் பரவி நிற்கும் ஊழல் கேடு.

இதில் எது முதலில் ஒழிக்கப்பட வேண்டும்? மதவாதம் ஆபத்தல்லவா? மதவாதத்தை முதலில் ஒழித்துவிட்டு ஊழல் கேட்டை அடுத்து ஒழிக்க முயல்வதே சரியான அணுகுமுறை.

ஊழல் காரணம் கூறி திமுகவை வீழ்த்திவிட்டால், அதிமுக எளிதில் ஆட்சிக்கு வரும். அதிமுக என்பது பிஜேபியின் வேறுவடிவம். இதை பிஜேபி காரர்களே சொல்கிறார்கள். இது நல்லதா?

திமுக ஒழிக்கப்பட்ட இடத்தில் மதிமுக வரவாய்புண்டா? கம்யூனிஸ்ட் வர வாய்ப்புண்டா? விடுதலைப் சிறுத்தைகள் வரமுடியுமா?

முயன்று பார்க்க இத்தேர்தல் சரியான தருணமல்ல. ஒரு மாபெரும் இயக்கத்திற்கு மாற்று ஏற்பாட்டை ஆறுமாதத்தில் உருவாக்கிட முடியாது.

அதிரடி மாற்றம் தமிழகத்தில் நிகழாது. எழுத்தாளர் ஞானி, கம்யூனிஸ்ட் மகேந்திரன் போன்ற நேர்மையான தூய்மையானவர்களைத் தேர்தலில் மக்கள் ஏற்றார்களா? இல்லையே?

நூற்றுக்கணக்கான வாக்குகள் தானே அவர்களால் வாங்க முடிந்தது. இதுதான் இங்குள்ள அரசியல்.

எனவே, சீமான் ஒருபக்கம், அன்புமணி மறுபக்கம், மக்கள் நலக்கூட்டணி இன்னொருப்பக்கம் என்று வாக்குகளைச் சிதைப்பது, பிரிப்பது பிஜேபின் பிம்பமான அதிமுக ஆட்சி மீண்டும் அமையவே வழிவகுக்கும்.

அதற்கு, திராவிடக் கொள்கைப் பற்றுடைய, மக்கள் நலக்கூட்டணியோடு ஒத்துப் போகும் இலக்குடையதிமுக கழகத்திற்கு இந்த தேர்தலில் ஒருவாய்ப்பளித்து ஆட்சியில் அமரச் செய்வது தமிழகத்திற்கும், மதவாத ஆபத்தை தவிர்ப்பதற்கும் பயன்படும்.

தி.மு.க. சரியான கட்சி என்ற அர்த்தத்தில் இது சொல்லப்படவில்லை. அதன் மீதுள்ள குற்றச்சாட்டுகள் தெரிந்தே சொல்கிறோம். வேறு வழியில்லை. ஒரு பக்கம் சாக்கடை இன்னொரு பக்கம் சேறு. சாக்கடையில்  இறங்குவதைவிட சேற்றில் இறங்குவோம் என்பதே இதன் மூலம் சொல்வது.

இது தற்காலிக தீர்வுதான். அடுத்த 5 ஆண்டுகளில் முறைப்படி மாற்று ஆட்சிக்கு வழி செய்ய வாய்ப்பு உள்ளது.

2021 தேர்தலைச் சந்திக்க புதிய முயற்சிகளை நன்கு திட்டமிட்டு ஒற்றுமையாய இருந்து செயல்படுத்துங்கள். அதுதான் நடைமுறைக்கு உகந்ததாய் இருக்கும். 2015 தேர்தலை சோதனை களமாக புதிய முயற்சிக்கான தடமாக ஆக்காதீர்கள். அது அதிமுக ஆட்சி அமைக்கவே உதவும்.

திமுகவை ஆதரித்து இக்கருத்துக்களை நாங்கள் சொல்லவில்லை. தமிழர்களின் நலன் கருதி தொலைநோக்கோடு இவற்றை கூறுகிறோம். சிந்தியுங்கள்.

Friday, January 22, 2016

எழுச்சி குறைபாடுள்ள இளைஞர்களுக்கு...

எழுச்சி குறைபாடுள்ள இளைஞர்களுக்கு...
(Erectile Dysfunction)

ஏமாற்றம் அடையும் இளம்பெண்கள்! 

விரக்தியில் இல்வாழ்வு!  
மறைக்கப்படும் உண்மைகள்! 

கவலை வேண்டாம்! எளிய தீர்வு இதோ!

- மஞ்சை வசந்தன்

இன்றைய இளைஞர்கள் பரபரப்பு, மன அழுத்தம், மனச்சோர்வு, கண்ட நேரத்தில் கண்ட கண்ட உணவுகள், குடித்தல், புகைப்பிடித்தல் போன்றவற்றை கொண்டிருக்கின்றனர்.

பிராய்லர் கோழி, பாக்கட் உணவுகள், செயற்கை பானங்கள் அதிகம் சாப்பிடுகின்றனர். சரியாக உறங்குவதில்லை. இவைதான் இவர்கள் ஆண்மை இழக்கக் காரணங்கள்.

மாறாக, சுய இன்பத்தில் ஈடுபட்டு விந்து வெளியேற்றுவதால் ஆண்மை இழப்பதாகச் சொல்வது சரியல்ல. அதிகம் விந்து வெளியேற்றப்படுவதால் ஆண்மைக் குறைவு வராது. அப்படி வருவதாக எண்ணும் எண்ணத்தால்தான் அப்பாதிப்பு வருகிறது.

இதற்கு இளைஞர்கள் அஞ்ச வேண்டாம். இப்பாதிப்பிலிருந்து மீண்டு, இல்லற வாழ்வில் நிறைவாக ஈடுபடலாம். அதற்காக விளம்பர வைத்தியர்களிடம் சென்று ஐயாயிரம், பத்ததாயிரம் செலவிடத் தேவையில்லை. கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுங்கள்.

தீர்வு:

குடிப்பழக்கம், புகைப்பழக்கம், பாக்கட் உணவுகள், பிராய்லர் கோழி, செயற்கை பானங்கள் இவற்றை அறவே நீக்குங்கள்.

பாதாம் பருப்பு, கீரை, மீன், பப்பாளி, வெங்காயம், முருங்கைக்காய், முருங்கைக் கீரை இவற்றைத் தவறாது அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு 7 மணி நேரம் உறங்குங்கள். வாழ்க்கையை துணிவுடன், பதட்டம், மனஇறுக்கம், கவலையின்றி எதிர்கொள்ளுங்கள். நண்பர்களுடன் சிரித்து மகிழுங்கள். உடற்பயிற்சி  ½  மணி நேரமாவது செய்யுங்கள். நமக்கு உடலில் எக்குறையும் இல்லை; நாம் ஆண்மையுள்ளவர்,

நம்மால் ஆற்றலோடு உடலுறவு கொள்ள முடியும் என்று முழுமையாய் நம்புங்கள்.

எக்குறையும் இல்லாத பெரும்பாலான ஆண்கள் பயத்தாலும், நம்பிக்கையின்மையாலும், தவறான கருத்துக்களை நம்புவதாலுமே தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். உண்மையில் அவர்கள் ஆண்மை உடையவர்கள்தான். 

ஆயிரத்தில் ஒருவர்தான் இயல்பாய் இக்குறையுடன் இருப்பார். மற்றதெல்லாம் பயத்தால் வருவதுதான். நம்பிக்கையுடனும், மகிழ்வுடனும் செயல்பட்டால் இக்குறை வராது.

இதற்கு பக்கவிளைவு இல்லா ஹோமியோ மருந்துகள் உள்ளன. 

கீழ்க்கண்ட அறிகுறிகளுக்கு ஏற்ப தங்களுக்கு உரிய மருந்தைத் தேர்வு செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இக்குறை அறவே நீங்கும். ஹோமியோ மருந்துகள் மிக மலிவானவை. ஐம்பது ரூபாய் செலவிட்டாலே போதும். இம்மருந்துகள் சிறு சர்க்கரை உருண்டையாய் இருக்கும். கேடு வராது.

1. செலினியம் (Selenium): 

இரவில் அடிக்கடி விந்து வெளிப்படுதல், விரைவில் விந்து வெளிவருதல், விரைப்பு மெதுவாக வருதல், விரைப்பு விரைவில் தளர்தல், விந்து வெளியேறியதும் சோர்ந்து போதல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளவும்.

2. அக்னஸ் காஸ்டஸ் ((Agnus Castus): 

அறவே விறைப்பின்மை இல்லாதவர்கள், மனைவி தீண்டும்போதும் மனைவியை அணைக்கும்போதுகூட விறைப்பு ஏற்படாதவர்கள், ஆண் உறுப்பு குளிர்ந்த நிலையில் உள்ளவர்கள் (அதாவது உடலுறவு வேட்கையின்போது ஆண்குறி சூடேறும். இவர்களுக்கு அப்போதும் ஆண்குறி சூடேறாது குளிர்ந்த நிலையில் இருக்கும்.) இப்படிப்பட்டவர்கள் இம்மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். உடலுறவு ஆசை அறவே இல்லாதவர்கள், உடலுறவு கொள்ள சக்தியற்றவர்களுக்கு இம்மருந்து மிகுந்த பயன்தரும்.

3. கலடியம் ((Caladium): 

புகையிலைக்கு அடிமையானவர்கள், விறைப்பு அறவே இல்லாதவர்கள், மன அழுத்தத்தால் உடலுறவில் ஆர்வம் இல்லாதவர்கள் இம்மருந்தை எடுத்துக் கொள்ளலாம். நல்ல பயன் தரும்.

4. லைக்கோபோடியம் (Lycopodium):

விறைப்பு ஏற்படாத இளைஞர்கள், முதியவர்கள் என்று இரு பிரிவினருக்கும் இது பயன் தரும். சுய இன்பத்தில் அடிக்கடி ஈடுபட்டவர்கள். உடலுறவு நாட்டம் அதிகம் உள்ளவர்கள் இம்மருந்தை எடுத்துக் கொண்டால் குறை அறவே நீங்கும்.

வயதானவர்களுக்கு ஏற்படும் றிக்ஷீஷீstணீtமீ வீக்கத்திற்கும் இது மருந்தாகும்.

5. டிரிபுலஸ் (Tribles): 

சிறுநீர் கழிக்கும்போது வலியோ எரிச்சலோ இருந்து, அத்தோடு விறைப்பின்மையும் இருந்தால் இம்மருந்து பயன் தரும்.

6. நியூபர் லூட்டியம் (Nuphar Luteum): 

மலம் கழிக்கும்போது விந்து ஆண்குறியில் வெளிப்படுதல். அறவே உடலுறவு ஆசையில்லாதிருத்தல். விறைப்பு அறவே இல்லாத நிலை உள்ளவர்களுக்கு இம்மருந்து ஏற்றது.

7. யோகிம்பினம் (Yohimbinum): 

நரம்பு மண்டலம் பலவீனம் அடைந்து, உடலுறவில் நாட்டம் (விருப்பம்) இல்லாது விறைப்புத் தன்மை அறவே இல்லாது, உடல் பலவீனம், கவலை, மன உளைச்சல் உள்ளவர்களுக்கு இது உகந்த மருந்து. இது உடலுறவு ஆசையை உருவாக்கி உறுப்பு விறைப்படைய உதவும்.

8. அவேனா சாட்டிவா (Avena Sativa): 

இது திரவ வடிவிலான மருந்து. இது உடலுக்கு நல்ல ஆற்றலைத் தந்து, உடலுறவு விருப்பத்தை வளர்க்கும். விறைப்பு ஏற்படுத்தும். அதிகம் சுயஇன்பம் கண்டு விந்து வெளியேற்றியவர்களுக்கு இது பயன் அளிக்கும்.

குறிப்பு: விறைப்பின்மை உள்ளவர்கள் உரிய சிகிச்சை செய்து குணம் பெறுங்கள். குறையை நீக்காமல் திருமணம் செய்து ஒரு பெண்ணின் வாழ்வைப் பாழாக்காதீர். வேறு காரணம் சொல்லி திருமணத்தைத் தவிர்த்து விடுங்கள்.

- மஞ்சை வசந்தன்

இந்துத்வாவாதிகளே இதற்கென்ன பதில்?.


¨>> கோயில் சிலையில் கடவுள் இல்லை, அது பேசாது, கேட்காது, சிரிக்காது என்று கோல்வால்கர் கூறிய பின் அவரின் தொ(கு)ண்டர்கள் இராமருக்குக் கோயில் கட்டத் துடிப்பது அவர் கொள்கைக்கு எதிர் அல்லவா?
¨>> அதுவும் பாபர் மசூதியிருந்த இடத்தில் கட்டத் துடிப்பது அடாவடிச் செயல் அல்லவா?
¨¨>> கோயில் சிலையில் கடவுள் இல்லையென்னும்போது, பூசை ஏன்? அபிஷேகம் ஏன்? அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதைத் தடுப்பது ஏன்?
¨¨>> கோயில் சிலையில் கடவுள் இல்லையென்றால், கும்பாபிஷேகம் ஏன்? யாகம் ஏன்?
¨¨>> கோயில் சிலையில் கடவுள் இல்லையென்றால், கற்சிலைக்கு சக்தி கொடுக்க ஆரிய பார்ப்பானர் செய்யும் சடங்கு பித்தலாட்டம் தானே?

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

Tuesday, January 19, 2016

கோயில் சிலைகளில் கடவுள் இல்லை! கோல்வால்கர் கூறுகிறார்!


 
கோயில் சிலைகளில் கடவுள் இல்லை!
கோல்வால்கர் கூறுகிறார்!


 ஆச்சரியமா? ஆனால், உண்மை!

- மஞ்சை.வசந்தன்

 ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களுக்கும், பி.ஜே.பி. கட்சியினருக்கும் மூல குருவாக விளங்குபவர் கோல்வால்கர். அவரது சிந்தனைகள்தான் இவர்களுக்கு வழிகாட்டலும், சட்டமும் ஆகும். அப்படிப்பட்ட கோல்வால்கர்,
“மக்கள் கோயில்களுக்குச் சென்று அங்குள்ள சிலைகளையே எல்லாம் வல்ல கடவுள் என்ற கருதி வணங்குகின்றனர்; வேண்டுதல்கள் வைக்கின்றனர். இவர்கள் சொல்வதை அச்சிலை கேட்காது, பதில் சொல்லாது, சிரிக்காது, அழாது, எப்பதிலும் சொல்லாது.

 எங்களுக்குத் தேவை உயிருள்ள கடவுள்! இதுவே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் குறிக்கோள். அந்த உயிருள்ள கடவுள் “அகண்டபாரதம்!’’
(அகண்ட பாரதம் என்பது சட்டத்தை ஏற்காது; நாடாளுமன்றம், சட்டமன்றத்தை ஏற்காது; நீதித்துறையை ஏற்காது. இந்து தர்மமே அதன் நோக்கு, சட்டம், நீதி எல்லாம்.)

 _ ஆதாரம்: (Quoted by Anderson and Damle ibid. p.16 and “The Integral approach by M.S.Golwalkar and others”)

 ஆக, ஆர்.எஸ்.எஸ். உட்பட சங்பரிவார அமைப்புகள் மற்றும் பி.ஜே.பி.யினருக்கு கடவுள் நோக்கமல்ல. அவர்களுக்கு முக்கியம் இந்த மதத்தின் சனாதன தர்மங்கள்தான்.

 இந்து தர்மம் என்பது ஆரிய பார்ப்பன தர்மம்தான்.

 அதாவது, ஆரிய பார்ப்பனர் மட்டுமே உயர்ந்தவர். அவர்கள் மட்டுமே எல்லா சொத்துக்கும் உரியவர்கள். மற்றவர்கள் அவர்களின் அடிமைகள். பார்ப்பான் கொலை செய்தாலும் அவனைத் தண்டிக்கக் கூடாது. ஆரிய பார்ப்பான் மற்ற ஜாதிக்காரன் மனைவியை விரும்பினால் அதற்கு மற்ற ஜாதியான் பெருமையோடு சம்மதிக்க வேண்டும் என்பன போன்றவைதான் சனாதன தர்மம்.

 இப்படியொரு நிலையை உருவாக்கவே இந்த மதவாத கும்பல் துடியாய் துடிக்கிறது. இது புரியாத நம் இளைஞர்கள் வளர்ச்சியென்ற மோடியின் மோசடியில் மயங்கி, ஆட்சியைக் கொடுத்து அல்லல்படுகிறார்கள். அவர்கள் ஏழைகளுக்கு எதிரா காப்பரேட் கம்பெனிகளுக்கும், ஆரிய பார்ப்பனர்களுக்கும் சார்பான ஆட்சியை நடத்துகிறார்கள். இளைஞர்களே விழியுங்கள்! எழுங்கள்! எச்சரிக்கையாய் இனி செயல்படுங்கள்!

 சமூக நீதி, இடஒதுக்கீடு, ஏழைகள் முன்னேற்றம், விவசாயிகள் முன்னேற்றம், இளைஞர் நலன் போன்றவற்றை நிலைநிறுத்தும் வகையில் இனி ஆட்சியாளர்களை உருவாக்குங்கள். இளைஞர்கள் நினைத்தால் இயலாதது ஒன்றும் இல்லை!

Friday, January 15, 2016

அய்ந்து பேருக்கு மனைவி அழியாத பத்தினி போல் அஞ்சி அஞ்சி கெஞ்சியவர் வீர சாவர்க்கராம்!

ஆரிய அகராதியில் அர்த்தமே வேறுதான்!

அய்ந்து பேருக்கு மனைவி அழியாத பத்தினி போல்

அஞ்சி அஞ்சி கெஞ்சியவர் வீர சாவர்க்கராம்!

- மஞ்சை வசந்தன்

1883 மே மாதம் 28ஆம் நாள் மகாராட்டிராவில் நாசிக் அருகில் உள்ள பாகூர் என்ற கிராமத்தில் சித்பவன் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த வினாயகத் தாமோதர் சாவர்க்கர்தான் இந்துமதவெறி கூட்டத்தினாரால் வீரசாவர்க்கர் என்று அழைக்கப்படுகின்றார்.

ஆனால், இவரைப் போன்ற ஒரு முதல்தரக் கோழையை வரலாற்றில் காணவே முடியாது!
ஆரியர்கள் தந்திரமே அதுதானே!

இல்லாத கடவுள்தான் எல்லாவற்றையும் இயக்குகிறது என்பான்!
அய்ந்துபேரின் மனைவியை அழியாத பத்தினி என்பான்!

அதேபோல், இக்கட்டு வரும்போதெல்லாம் அஞ்சியும் கெஞ்சியும், மன்னிப்புக்கு மேல் மன்னிப்பு கேட்டும் மண்டியிட்ட கோழைச் சாவர்க்கரை வீரசாவர்க்கர் என்றனர்.

அஞ்சலும் கெஞ்சலும்:

இதற்கு பெரிய விவாதமோ, ஆய்வோ தேவையில்லை. அவர் செயல்பாடுகளை வரிசைப்படுத்தினாலே அவர் எப்படிப்பட்ட கோழையென்பது தெளிவாய்த் தெரியும்.

கல்லூரிப் படிப்பை இந்தியாவில் முடித்துவிட்டு, பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக இலண்டன் சென்றார். அங்கு பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் பலருடன் தொடர்புகொண்டார்.

1909ஆம் ஆண்டு, இலண்டனில் சர் கர்சன் வைலி என்ற ஆங்கில அதிகாரியைச் சுட்டுக் கொல்லும்படி மதன்லால் திங்ரா என்பவரைத் தூண்டிவிட்டார்.

அதே ஆண்டு இறுதியில் நாசிக் கலெக்டர் எ.எம்.டி.ஜாக்சன் என்பவரைச் சுட்டுக் கொன்றவனுக்கு துப்பாக்கி வழங்கினார்.

ஜாக்சன் இந்திய மக்களை நேசித்தார்; அறிவியல் மனப்பான்மை உடையவர்.
ஆக, இந்த இரண்டு குற்றச் செயல்களிலும் அடுத்தவரை மாட்டவிட்டு தான் தந்திரமாக தப்பித்துக்கொண்ட கோழை இந்த ஆள்.

இவர்களது குற்றச்செயல்பாடுகளைக் கண்டறிந்த பிரிட்டிஷ் அரசாங்கம், இவரது அண்ணனைக் கைது செய்து அந்தமான் சிறையில் அடைத்துவிட்டு, பாரிசில் இருந்த சாவர்க்கரையும் கைதுசெய்யத் தேடியது. 1910இல் கொலைக்குற்றமும், தேசத் துரோகக் குற்றமும் சாட்டப்பட்டு, இலண்டன் விக்டோரியா இரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

அவரை இந்தியாவிற்கு ஏற்றிவந்த கப்பல் பிரான்ஸ் நாட்டின் மார்ஸெ நகரில் நின்றபோது, கப்பலின் ஜன்னல் வழியாகத் தப்பித்து ஓடினர்.

ஆனால், பிரெஞ்சு நாட்டில் மீண்டும் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டார். இரண்டு குற்றங்களுக்கும் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்தமான் சிறையில் 04.07.1911 அன்று  அடைக்கப்பட்டார்.
ஆனால், இந்த வீரர்(-?) என்ன செய்தார் தெரியுமா? பிரிட்டிஷ் அரசுக்குக் கருணை மனு போட்டார். பிரிட்டிஷ் அரசு கருணை காட்டவில்லை.

24.11.1913இல் அப்போதைய கவர்னர் ஜெனரலின் நிர்வாகத்தில் உள்துறை பொறுப்பிலிருந்து ரெனினால்ட் கிராட்டோக் என்பவருக்கு, இரண்டாவது கருணை மனு போட்டார்.

“1906-_1907இல் நிலவிய கொந்தளிப்பான, நம்பிக்கையற்ற சூழ்நிலைமை எங்களை சமாதானம், முன்னேற்றம் என்ற பாதையில் செல்லமுடியாமல் வஞ்சித்து விட்டது. இந்தியாவிலும் மனித குலத்தினதுரும் நன்மையை மனத்தில் கொண்டுள்ள எந்த மனிதரும் குருட்டுத்தனமாக அந்தப் பாதையில் இனி அடியெடுத்து வைக்கமாட்டார். எனவே, பல்வகையிலும் நல்லெண்ணமும் கருணையும் கொண்ட அரசாங்கம் என்னை விடுதலை செய்யுமானால், அரசியல் சட்டவகையான முன்னேற்றத்திற்கும் ஆங்கிலேய அரசாங்க விசுவாசத்திற்கும் மிக உறுதியான ஆதரவாளனாக மட்டுமே இருப்பேன்.

மேலும், அரசியல் சட்டவகையான மார்க்கத்திற்கு நான் மாறி வந்துள்ளது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒரு காலத்தில் என்னைத் தங்களது வழிகாட்டியாகப் பார்த்துவந்த, வழிதவறிப் போன இளைஞர்களை மீட்டுக் கொண்டுவரும். எந்த வகையில் நான் அரசாங்கத்திற்குப் பணிபுரிய வேண்டும் என்று அது விரும்புகிறதோ அதற்குத் தகுந்தபடி நான் பணிபுரிவேன். ஏனெனில் எனது மனமாற்றம் எப்படி உணர்வுபூர்வமானதாக உள்ளதோ அதே போலவே எனது எதிர்கால நடத்தையும் இருக்கும் என நம்புகிறேன்.

என்னை சிறையில் வைத்திருப்பதன் மூலம் பெறப்படுவது, வெளியில் விடுவதனால் கிடைப்பதை ஒப்பிடுகையில் ஒன்றுமேயில்லை.

வலிமையுடையோரே கருணையுடையவராக இருக்க முடியும். எனவே, பாதை தவறிப் போன மகன் அரசாங்கம் எனும் பெற்றோர்களின் கதவுகளுக்குத் திரும்பிவராமல் வேறு எங்கு செல்வான்? இந்த விசயங்களை மாண்புமிக்க தாங்கள் அன்புடன் கருத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.’’
இப்படி கெஞ்சிக் கூத்தாடிய இவர்தான் வீரராம்!

இது மட்டுமல்ல, அந்தமான் சிறையில் என்ன செய்தார் தெரியுமா?

அந்தமானில் சாவர்க்கரின் சக கைதிகளிலொருவராக இருந்தவர் சக்ரவர்த்தி. சாவர்க்கரும் அவரது சகோதரர் கண்பத்தும் (கணேஷ்) சிறைக் கொடுமைகளைக் கண்டனம் செய்து, சிறையில் வழங்கும் உணவை உட்கொள்ளக் கூடாது, சிறையதிகாரிகள் சொல்லும் வேலைகளைச் செய்யக் கூடாது என்ற கைதிகளைத் தூண்டிவிடுகின்றனர். ஆனால், வேலை நிறுத்தத்தில் சேரவேண்டிய தருணத்தில் சாவர்க்கர் அழத் தொடங்கிவிடுகிறார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் தனிமைச் சிறையில் அடைக்கப்பட வேண்டியிருக்கும், வயதான காலத்தில் தன்னால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாது என்கிறார். ஆனால், அவரைவிட அதிக காலம் சிறையிலிருந்த, அவரைவிட வயதில் மூத்தவர்களாக இருந்த கைதிகள் பலர் மூன்ற வாரங்களுக்கு மேல் உணவு உட்கொள்ளாமல் இருந்தனர். கைதிகளின் போராட்டம் வெற்றியடைந்தது.

1921இல் அந்தமானிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு, முதலில் ரத்தினகிரி சிறையிலும் பின் ஏர்வாடி சிறையிலும் அடைக்கப்பட்டார்.

அப்போது இவர் தன் குடும்பத்தவரை ஒன்றுதிரட்டி தனது விடுதலைக்கு பலவகையில் முயன்றார்.

சிறையிலிருந்து வெளியே வருவதற்காக “அய்ந்தாண்டுக் காலத்திற்கு அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் எவ்வகையான அரசியல் நடவடிக்கைகளிலும் அந்தரங்கமாகவோ அல்லது பகிரங்கமாகவோ ஈடுபடப் போவதில்லை’’ என்றும் “அய்ந்தாண்டுக் காலத்திற்குப் பிறகும் அரசாங்கம் விரும்பினால்இந்தக் கட்டுப்பாட்டைப் புதுப்பித்துக் கொள்ளலாம்’’ என்றம் ஒரு உறுதிமொழி எழுதித் தருகிறார். இந்த உறுதிமொழியைப் பதிவு செய்யும் அரசாங்கத் தீர்மானம் கூறுகிறது:

திரு சாவர்க்கர் இந்த நிபந்தனைகளுக்கான ஒப்புதலை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். இது அவரது விடுதலைக்கான நிபந்தனையாக இருக்காது என்ற அவரிடம் எடுத்துச் சொல்லப்பட்டபோதிலும் அவர் கீழ்க்கண்ட அறிக்கையை சமர்பித்துள்ளார்: “என்மீது நடத்தப்பட்ட விசாரணையும் அளிக்கப்பட்ட தண்டனையும் நீதியானதும் நியாயமானதும் என்பதை இதன் மூலம் ஏற்றுக் கொள்கிறேன். கடந்த காலத்தில் நாடியது போன்ற வன்முறை வழிமுறைகளை மனதார வெறுக்கிறேன். சட்டத்தையும் அரசமைப்பையும் எனது முழுச் சக்திக்கும் ஏற்ற வகையில் உயர்த்திப் பிடிப்பது எனது கடமை என்று உணர்கிறேன். எதிர்காலத்தில் எந்த அளவுக்கு எனக்கு அனுமதி வழங்கப்படுகிறதோ அந்த அளவிற்கு (அரசியல்) சீர்திருத்தத்தை வெற்றிகரமானதாக்க விருப்பம் கொண்டிருக்கிறேன்.’’

1924இல் கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் ஏரவாடா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்: 1. ரத்னகிரி மாவட்டத்தை விட்டு அரசாங்கம் அல்லது மாவட்ட நீதிபதியின் அனுமதியின்றி எங்கும் செல்லக் கூடாது. 2. அய்ந்தாண்டுக் காலத்திற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் எத்தகைய அரசியல் நடவடிக்கைகளிலம் ஈடுபடக் கூடாது. இந்தக் காலக் கெடுவை அரசாங்கம் விரும்பினால் தொடர்ந்து நீட்டிக்கலாம்.

“எத்தகைய அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை’’ என்ற உறுதிமொழியின் பேரில் விடுதலையான சாவர்க்கர் ‘சும்மா’ இருக்கவில்லை. ரத்னகிரியில் அவரைச் சந்தித்து அவரது ஆதரவைப் பெற்ற பிறகே டாக்டர் எச்.பி.ஹெட்கெவர், 1925இல் ஆர்.எஸ்.ஆர். அமைப்பை நிறுவினார். இதே ஆண்டில்தான் சாவர்க்கர் நான்காவது முறையாக பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்திற்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் வடமேற்கு எல்லை மாகாணத்தில் வெடித்த வகுப்புக் கலவரம் தொடர்பாக புனெவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘மராத்தா’ என்ற பத்திரிகையின் மார்ச் 1925 இதழில் முஸ்லிம் விரோத - இந்து வகுப்பு வெறிக் கட்டுரையொன்றை சாவர்க்கர் எழுதியிருந்தார். அதனைக் கண்டித்து அரசாங்கம் அவரது விடுதலையை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்ததுதான் தாமதம், உடனே, 6.4.1925இல் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், ஒரு நீண்ட தன்னிலை விளக்கம் கொடுக்க வாய்ப்புத் தரப்பட்டதற்காக நன்றி செலுத்தும் சாவர்க்கர்’’.

“எனது கட்டுரையில் ‘சுயராஜ்யம்’ என்ற வார்த்தை வருகிற ஒரே இடம், மூன்றாவது பத்தியின் இறுதியில்தான். அந்த வார்த்தை அங்கு குறிப்பிடப்படுவது நானோ அல்லது மற்றவர்களோ ‘சுயராஜ்யம்’ என்பதைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்பதைக் காட்டவோ சுட்டவோ செய்வதில்லை என்பது வெளிப்படை’’ என்று எழுதினார்.

‘சுயராஜ்யம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்ட ‘வீர’ சாவர்க்கர் மீது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் 1937 வரை நீடித்தன. 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி நடந்த முதல் மாகாண சட்டசபைத் தேர்தல்களில் பம்பாய் மாகாணத்திலும்கூட காங்கிரஸ் பெரும் வெற்றி கண்டிருந்தபோதிலும், உடனடியாக அரசாங்கப் பொறுப்பை மேற்கொள்ள முன்வரவில்லை. இந்து மகா சபையின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவை 10.5.1937இல் சாவர்க்கரை விடுதலை செய்தது.

இவர் ஆங்கிலேயரிடம்தான இப்படி மண்டியிட்டுக் கெஞ்சினார் என்றில்லை,

இந்தியா விடுதலை அடைந்தபின் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், 22.2.1948இல் பம்பாய் நகரக் காவல்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதுகிறார்: அதில், “நான் ஒருபோதும் வெறுப்பை ஊக்குவிக்கவோ முகமதியர்களை முகமதியர்கள் என்பதற்காக அவர்களை வெறுக்கும்படியோ அல்லது அவர்கள்மீது வன்முறைச் செயல்களைப் புரியும்படியோ இந்துக்களை ஒருபோதும் தூண்டிவிட்டதில்லை’’ என்று பச்சைப் பொய் கூறினார்.

எனக்கு இப்போது 65 வயதாகிறது. கடந்த மூன்றாண்டகளாக, நெஞ்சுவலி, நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக அடிக்கடி படுத்தப் படுக்கையாக இருக்கிறேன். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நமது புதிய தேசியக் கொடியை ஏற்றுக் கொண்டு அதனை என் வீட்டில் ஏற்றிவைத்தேன். இது எனது ஆதரவாளர்கள் சிலருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது...

எனவே, சந்தேகம் அனைத்தையும் களையும் பொருட்டும் எனது கோரிக்கை மனுவிற்கு வலுச் சேர்க்கும் பொருட்டும் அரசாங்கம் விரும்புகிற எத்தனை காலத்திற்கும் வகுப்பு அல்லது அரசியல் சார்ந்த பொது நடவடிக்கை எதிலும் பங்கேற்க மாட்டேன் என்ற உறுதிமொழியை _ இந்த நிபந்தனையுடன் எனக்க விடுதலை வாங்கப்படுமேயானால் _ தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

இந்தியா _ பாகிஸ்தான் பிரிவினையையொட்டி நடந்த கொடூரமான வகுப்புக் கலவரங்களின் காரணமாக அந்தநத நாடுகளில் உள்ள மதச் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்தியப் பிரதமர் நேருவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானுக்குமிடையே 1950இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை இந்துமகாசபை எதிர்த்ததால், நாட்டில் வகுப்புக் கலவரம் மூளும் அபாயம் இருப்பதாக மத்திய அரசாங்கம் கருதியது. சாவர்க்கரும் வேறு முக்கிய இந்துமகா சபைத் தலைவர்களும் ‘1950ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்’ கீழ் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் வைக்கப்பட்டவுடனேயே வழக்கம்போல சாவர்க்கரின் கோழைத்தனம் தலைதூக்கியது. 21.4.1950 அன்று பம்பாய் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் “அரசாங்கம் நிர்ணயிக்கிற எத்தனை காலத்திற்கும் நடப்பு அரசியலில் எந்தவிதப் பங்கும் மேற்கொள்ளாமல் இருப்பதாக’’ உறுதிமொழி எழுதித் தருவதாகக் கூறினார். மேலும், “அரசியல் களத்திலிருந்து தான் விரைவில் ஒய்வு பெறப் போவது அனைவரும் அறிந்த விசயம்’’ என்றும் கூறினார். நீதிமன்றத்தில் அவர் சார்பில் வழக்கறிஞர் கே.என்.தாரப் என்பார் கொடுத்த உறுதிமொழிகள் பேரில் விடுதலை செய்யப்பட்டார்.

இப்படிப்பட்ட கடைந்தெடுத்தக் கோழையைத்தான் வீர சாவர்க்கர் என்கிறது ஆரியப் பார்ப்பனக் கூட்டம். இவருக்குத்தான் நாடாளுமன்றத்தில் சிலை! இதைவிட வெட்கக்கேடு வேறு உண்டா?


Wednesday, January 13, 2016

துக்ளக்கில் சுதா சேஷய்யன்எழுதியதற்கு மறுப்பு

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

- மஞ்சை வசந்தன்

தமிழரின் பண்பாட்டுச் சிறப்புகளை அழிப்பதிலும் திரிப்பதிலும் ஆரியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதை மாற்றி, சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று திரித்து, சமஸ்கிருத பெயரைத் தமிழ் ஆண்டின் பெயர் என்று திணித்து, தமிழர் பண்பாட்டை அழிக்கின்றனர். 

20.1.2016 ‘துக்ளக்’ இதழில் சுதா சேஷய்யன் என்ற அம்மையார், தன் ஆரிய இனப்பற்றின் உந்துதலால் சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு என்று சாதிக்க முயற்சிக்கிறார். வலுவான சான்று எதையும் காட்டாது வழக்கமாக ஆரியம் செய்யும் மோசடி வேலையையே இவரும் செய்கிறார். எனவே, அதை மறுத்து உண்மையை உணர்த்த கீழ்க்கண்டவற்றை தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

தமிழர்கள் நாள், மாதம் ஆண்டுக் கணக்கீட்டை உலகுக்கு முதன்முதலில் இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டுக் கொடுத்தவர்கள்.

காலையில் சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற ஆகும் காலம் ஒரு நாள்.

மாதம் என்பதற்குத் திங்கள் என்று ஒரு சொல் உண்டு. திங்கள் என்றால் நிலவு. நிலவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் திங்கள் என்ற பெயர் மாதத்திற்கு வந்தது.

முழுநிலவு தோன்றி மீண்டும் முழு நிலவு தோன்ற ஆகும் காலம் ஒரு மாதம்.
அதேபோல் ஆண்டு என்பது சூரியன் இருப்பை வைத்துத் தமிழர்களால் கணக்கிடப்பட்டது. சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடகோடி முனைக்குச் செல்ல ஆறு மாதம். அது மீண்டும் தென்கோடி முனைக்கு வர ஆறுமாதம். ஆக, தென்கோடி முனையில் தோன்றும் சூரியன் மீண்டும் தென்கோடி முனையை அடைய ஆகும் காலம் ஓர் ஆண்டு என்று கணக்கிட்டனர். (சூரியன் நிலையாகவுள்ளது என்பது அறிவியல் உண்மை. ஆனால் பார்வைக்கு அது இடம் மாறுவதாய்த் தோன்றுவதை வைத்துக் கணக்கிட்டனர்.)

உலகில் முதன்முதலில் ஆண்டுக் கணக்கீட்டை சூரியன் இருப்பை வைத்துக் கணக்கிட்டவர்கள் தமிழர்கள். பின் இதனைப் பின்பற்றியே ஆங்கிலேயர்கள் ஆங்கில ஆண்டை அமைத்தனர்.

சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாளே தமிழ் ஆண்டின் பிறப்பு. தமிழரின் புத்தாண்டு அன்றுதான். அந்த நாளே பெரும் பொங்கல் எனப்படும் சூரியத் திருநாள்.

ஆனால், இத்தகு வரலாற்றுச் சிறப்புக்குரிய இத்தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல்நாள் என்று மாற்றி, அதற்கு ஒரு புராணக் கதையை எழுதிச் சேர்த்து, தமிழ்ப் பண்பாட்டை ஒழித்து, ஆரியப் பண்பாட்டை, தமிழ்ப் புத்தாண்டிலும் புகுத்தினர்.

அதாவது, நாரதர் கிருஷ்ணனைப் பார்த்து, “நீர் அறுபதானாயிரம் கோபிகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னியைத் தரக்கூடாதா’’ என்று கேட்டார். அதற்கு கண்ணன், “நான் இல்லாப் பெண்ணை உனக்கு உரியதாக்கிக் கொள்’’ என்று கூற, நாரதர் எல்லா வீடுகளிலும் சென்று பார்த்தபோது, கண்ணன் இல்லாத வீடு கிடைக்காததால், கண்ணன் மீதே காமங்கொண்டு, “நான் பெண்ணாய் மாறி உங்களைப் புணர வேண்டும்’’ என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்த, “யமுனையில் குளித்துவிட்டு வாருங்கள்’’ என்று நாரதரைப் பார்த்து கண்ணன் கூற, யமுனையில் குளித்த நாரதர் அழகிய பெண்ணாக மாறினார். அந்த அழகில் மயங்கிய கண்ணன், பெண்ணாயிருந்த நாரதரை அறுபது ஆண்டுகள் புணர்ந்து, அறுபது பிள்ளைகளைப் பெற்றார். அவர்களே, பிரபவ தொடங்கி அட்சய முடிய அறுபது ஆண்டுகள் என்று ஆபாசமான அறுவறுப்பான ஒரு புராணக்கதையைச் சொல்லி, இவற்றைத் தமிழாண்டுகள் என்றனர். தமிழே இல்லாத இந்த அறுபது ஆண்டுகளைத் தமிழ் ஆண்டு என்று திணித்தனர். 

தமிழாண்டு என்றால் தமிழிலல்லவா ஆண்டுப் பெயர் இருக்கும். சமஸ்கிருதத்தில் உள்ள 60 ஆண்டும் எப்படித் தமிழாண்டாகும். சித்திரை தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது ஆரியர் பண்பாட்டின் திணிப்பு. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதே தமிழரின் மரபு!

அடுத்து, அறிவியல் அடிப்படையில், வேளாண் விளைச்சலுக்கு முதன்மைக் காரணமாய் இருக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பொங்கல் திருநாளை மகரசங்கராந்தி என்று மாற்றினர் ஆரியப் பார்ப்பனர்கள்.

“சூரியன் தனுசு இராசியில் சஞ்சரிக்கும் காலம். இது தேவர்களுக்கு விடியற்காலம். மகா சங்கிரமே சக்தி எனும் சக்தி தட்சிணாயணம் ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்த நிலையில், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத்தால் நீங்கியதனால், தை மாதம் முதல் நாள், அக்காலத்து விளைந்த பொருட்களைக் கொண்டு சூரியனை வழிபட்டனர். இதுவே மகர சங்கராந்தி என்று கூறி, பொங்கல் திருநாளை மகா சங்கராந்தி யென்று மாற்றினர்.

சூரியத் திருநாளை மகர சங்கராந்தி என்று மாற்றியதுபோல, மழைத் திருநாளை போகி என்று மாற்றினர்.

மழைத் திருநாள் போகிப் பண்டிகையாக்கப்பட்டது

தமிழர்களிடம் கடவுள் நம்பிக்கை தொன்மைக் காலத்தில் இல்லை. அவர்கள் தங்களுக்குப் பயன்படுகின்றவற்றை, தங்களுக்கு நன்மையும், பாதுகாப்பும் தருகின்றவற்றை மரியாதையின் பொருட்டும், நன்றி செலுத்தவும் வணங்கினர்.

அதனடிப்படையில் மனிதர்களின் இன்பத்திற்கும், இனப் பெருக்கத்திற்கும் காரணமாய் அமைந்த ஆண் பெண் உறுப்புகளை இணைத்து நன்றியும், மரியாதையும் செலுத்தினர். அதுவே பின்னாளில் ஆரியர்களின் திரிபு வேலையால், புராணம் புனையப்பட்டு, சிவலிங்க வழிபாடாக்கப்பட்டது.

அதேபோல் குலப் பெரியோர், வீரர், பத்தினிப் பெண்டிர், நிலத் தலைவர் வழிபாடெல்லாம் அம்மன், முருகன், மாயோன், வருணன் வழிபாடுகளாக மாற்றப்பட்டன.

இதே அடிப்படையில் வேளாண் விளைவிற்குத் துணைநிற்கும் மழை, சூரியன், மாடு, உழைப்பாளிகளை மதிக்க, நன்றி சொல்ல தமிழர்கள் கொண்டாடிய அறிவிற்குகந்த, பண்பாட்டைப் பறைசாற்றும், நன்றி விழாவான பொங்கல் விழாவிலும் தங்கள் மூடக் கருத்துக்களை, சடங்குகளை, புராணங்களைப் புகுத்தினர்.

பொங்கல் என்பது அறுவடைத் திருவிழா. விளைவித்த விளைபொருள் களம் கண்ட மகிழ்வில், அந்த விளைவிற்குக் காரணமானவற்றை மதிக்கும் முகத்தான், முதலில் மழைக்கு நன்றி கூறினர். அது மழைத்திருநாள் ஆகும்.

மழை அன்றைய தினம் பொழியாது என்பதால், மழையின் அடையாளமாக ஒரு சொம்பில் தண்ணீர் வைத்து அதற்கு மரியாதைச் செலுத்தினர்.

ஆனால், ஆரிய பார்ப்பனர்கள் இந்த அர்த்தமுள்ள விழாவில் தங்கள் பண்பாட்டை நுழைத்தனர். மழைக்கு அதிபதி இந்திரன். இந்திரனுக்கு போகி என்று ஒரு பெயர் உண்டு. எனவே, மழைக்குக் காரணமான இந்திரனைக் குறிக்கும் போகி என்ற பெயரை மழைத் திருநாளுக்கு மாற்றாக நுழைத்து, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.

மழைக்கதிபதியாக இந்திரன் இருக்க, கரிய மாலை (திருமாலை), மழையின் பலன் பெற்றதற்காக வழிபட மக்களுக்குக் கட்டளையிட்டதால், வருணன் கோபம் கொண்டு பெரும் மழையை பெய்யச் செய்ய, இதனால் உயிரினங்கள் மழையால் பாதிக்கப்பட, கிருஷ்ணன் கோவர்த்தன மலையைக் குடையாய் பிடித்துக் காக்க, இந்திரன் தன் தோல்வியை ஒப்பி வெட்கிக் குனிந்து நிற்க, இந்திரனை மன்னித்து அவனுக்கும் சிறப்பு செய்ய, சங்கராந்திக்கு முதல் நாள் இந்திரன் என்ற போகிக்கு போகிப் பண்டிகை கொண்டாட கிருஷ்ணன் கட்டளையிட்டான். இதுவே போகி என்று புராணக் கதையைக் கூறி, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.

போகி என்பதை காலப்போக்கில் போக்குதல் என்று பொருள் கொண்டு, வீட்டிலுள்ள பழைய பொருட்களைக் போக்குதல் என்று முடிவு செய்து, பழைய நூல்கள் உட்பட எல்லாவற்றையும் தெருவிலிட்டு தீ வைத்தனர். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொளுத்தப்படுவதால் காற்று மண்டலமே கரும்புகை மண்டலமாக மாறி, மூச்சுக் கோளாறுகளையும், மற்றக் கேடுகளையும் உருவாக்கி வருகிறது.

ஆக, ஆரிய பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பால், அர்த்தமுள்ள மழைப் பண்டிகை, போகிப் பண்டிகையாக மாற்றப்பட்டு, புகைப் பண்டிகையாகி கேடு பயக்கிறது.

பொங்கல் திருநாள்:

பொங்கல் திருநாள், பெரும் பொங்கல் என்று தமிழர்களால் அழைக்கப்படும். இந்த நாள் தமிழரின் முதன்மையான திருநாளும் ஆகும். காரணம், அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. அன்று பயிர் விளைய அடிப்படைக் காரணியாய் உள்ள சூரியனுக்கு நன்றி செலுத்தினர்.

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்

வேளாண் உற்பத்திக்கு மழை, சூரியன் இவற்றிற்கு அடுத்தது மாடுகள் கட்டாயம்.
காரணம், ஏர் உழப் பயன்படுவதோடு, வேளாண்மைக்குத் தேவையான உரம் கிடைக்கவும் மாட்டுக் கழிவுகள் பயன்படுகிறது என்பதாலும், மாடுகள் உழவனின் தோழன் என்பதாலும், உழவனின் செல்வம் என்கிற சிறப்பாலும் மாடுகளுக்கு ஒரு திருநாள் கொண்டாடினர் தமிழர். இது பண்பாட்டின் அடிப்படையில் நன்றி செலுத்தும் நோக்கில், உதவியாய் அமைந்தவற்றிற்கு உரிய சிறப்பு செய்யும் உணர்வில் உருவாக்கப்பட்டது. மாட்டுப் பொங்கல் தமிழரின் நன்றி கூறும் பண்பாட்டின் அடையாளம்.

ஆனால், இதையும் புராணக் கதையைப் புகுத்தி புரட்டு வேலை செய்து மாற்றினர். இந்திரன் கோபத்தால் கடும் மழை பெய்யச் செய்ததால் மாடுகள் மிகவும் சிரமப்பட்டதாகவும், பின்னர் மனம் மாறி இந்திரன் மழையை நிற்கச் செய்ததால், மறுநாள் மாடுகள் கட்டு அவிழ்த்து விடப்பட மகிழ்ச்சியில் துள்ளிப் பாய்ந்து ஓடினவென்றும், அதுவே மாட்டுப் பொங்கல் ஆனது என்றும் மாட்டுப் பொங்கலின் மாண்பிலும் மடமையைப் புகுத்தினர். தமிழர் பண்பாட்டில் ஆரியப் பண்பாட்டைப் புகுத்தினர்.

காணும் பொங்கல்:

அடுத்த நாள் கொண்டாடப்படும்  காணும் பொங்கல் என்பது வேளாண் உற்பத்திக்காக உழைக்கின்ற உழைப்பாளர்களுக்கு நன்றி சொல்லவும், அவர்களைச் சிறப்பிக்கவும் தமிழர்களால் உருவாக்கப்பட்டு கொண்டாடப்படுவதாகும்.

அன்று உழைப்பாளிகள் நில உரிமையாளர்களைச் சென்று கண்டு, நெல், காய்கறி, துணி போன்றவற்றைப் பெறுவர். நிலத்தின் உரிமையாளர்களும் உழைத்து உற்பத்திப் பெருக்கும் உழைப்பாளிகளை மகிழ்விக்க புத்தாடை, புதுப்பானை, புத்தரிசி, கரும்பு என்று பலதும் வழங்கிச் சிறப்பிப்பர்.

இப்படி உழைப்பாளிகளைச் சிறப்பிக்கத் தமிழர்கள் உருவாக்கிய உழைப்பாளிப் பொங்கல் என்னும் காணும் பொங்கலையும் புராணக் கதைப்புக் கூறி புரட்டினர்; தங்கள் பண்பாட்டைப் புகுத்தினர்.

கோபங் கொண்டு இந்திரன் பொழியச் செய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மழை நின்ற பின் ஒருவரையொருவர் கண்டு பாதிப்பு பற்றி விசாரித்தனர். அதவே காணும் பொங்கல் என்று கதை கட்டி, காரணம் கூறினர். காணும் பொங்கலிலும் ஆரியப் பண்பாட்டை, புராண மடமையைப் புகுத்தினர்.

இந்த உண்மைகளை மறைத்து ஆரிய பார்ப்பனர்கள் தொடர்ந்து சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்கின்றனர். சித்திரையில் சூரியன் தலைக்கு நேர் இருக்கும். ஆண்டு தொடங்கும்போது தலைக்கு நேர் இருந்து தொடங்க மாட்டார்கள். நாள் தொடங்கும்போது காலையில் சூரியன் கிழக்கில் உதிப்பதைத்தான் எடுத்துக் கொண்டனர். மாறாக, மதியம் தலைக்கு நேர் சூரியன் இருப்பதை எடுக்கவில்லை. அதேபோல் சூரியன் தென்கோடியிலிருந்து தை மாதம் முதல் நாள் வடக்குநோக்குவதைத்தான் ஆண்டின் தொடக்க மாகக் கொண்டனரே தவிர, சூரியன் தலைக்கு நேர் இருக்கும் சித்திரையை அல்ல.

தமிழர் பண்பாட்டை மாற்றி, மறைத்து, ஆரியப் பண்பாட்டைப் புகுத்துவதில் ஆரிய பார்ப்பனர்கள் எவ்வளவு முனைப்புடன் செயல்படுகிறார்கள் என்பதற்கு ‘துக்ளக்’ இதழும், சுதா சேஷய்யனும் சான்று. தமிழர்கள் இவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்!



Monday, January 11, 2016

மதவெறி, கொலைவெறி கொண்ட ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு தமிழகத்தில் அனுமதியா!

மதவெறி, கொலைவெறி கொண்ட ஆர்.எஸ்.எஸ். 
அணிவகுப்பிற்கு தமிழகத்தில் அனுமதியா! 

இவர்கள் குண்டர்களா? தொண்டர்களா? 
இதோ அடுக்கடுக்கான ஆதாரங்கள்!

           - மஞ்சை.வசந்தன்



ஆர்.எஸ்.எஸ்.தலைவர்களின் வாக்குமூலங்களைப் பாருங்கள்!

காந்தி கொலையில் பங்கேற்ற கோபால் கோட்சே கூறியது:-

நமது தேசத்திற்குப் பெருங்கேடு விளைவித்த, விளைவித்துக் கொண்டிருக்கிற ஒருவரைத்தான் (காந்தி) ஒழித்தோம். அவர் இந்த தேசத்தை இடைவிடாது இழிவுப்படுத்திக் கொண்டிருந்தார். இந்துக்களில் ஆண் மகன்கள் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் இந்தியர்களுக்கு இதன்மூலம் காட்டியுள்ளோம்’’ என்று காந்தியைக் கொன்றதை ஆண்மையென்று பெருமை கொள்கிறார் கோபால் கோட்சே.

குஜராத்தில், ஆர்.எஸ்.எஸ். கிளையான விஸ்வஹிந்து பரிஷத் அச்சிட்டு வழங்கிய துண்டறிக்கை:

“எரிமலை கனல் கக்கத் தொடங்கிவிட்டது. அது முஸ்லிம் ஆண்களின் புட்டங்களை எரிக்க, அவர்களே அம்மணமாய் ஆடுகின்றனர். ஆண் குறிகளைக் கட்டுக்குள் வைத்திருந்த கட்டுகளை நாங்கள் அகற்றி, முஸ்லிம் பெண்களின் பிறப்புறுப்புகளை விரியச் செய்து விட்டோம்.’’

(ஆதாரம்: Seniotics of Terrorism, Economic and Political weekly, July 13 2002) 

ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள், குஜராத்தில் நிகழ்த்திய கொடுங்கொலைகள்பற்றி மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் அவர்கள் நெஞ்சம் பதைக்கப் பதைக்கக் கூறுவதைப் பாருங்கள்!

“உயிருடன் மனிதர்கள் கொளுத்தப்பட்டனர். நெருப்பில் அவர்கள் வெந்துத் துடிக்கும்போது, மதவெறிக் கூட்டம் சுற்றிநின்று கூத்தாடி கும்மாளமடித்தது. கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலிருந்து சிசு வெளியே எடுக்கப்பட்டு, தூக்கியெறியப்பட்டு, எரிக்கப்பட்டது. உயிருடன் உள்ளவர்களை இப்படிக் கொடுமையாய்க் கொளுத்திக் கொன்றதோடு நிற்காமல், அடக்கம் செய்யப்பட்ட முஸ்லிம் சமாதிகளைத் தோண்டி, உடலை எடுத்து அதன்மீது பெட்ரோல் ஊற்றி எரித்தார்கள். ஆர்.எஸ்எஸ். சங்பரிவாரக் கும்பல் மனித இனத்தில் சேர்க்க முடியாத கொடூரக் கும்பல்’’ என்கிறார்.
(ஆதாரம்: Reflection on Gujarat Pradesh in Hindu.Rashtra, Economic and 
Political weekly, June 2002.) 

ஆர்.எஸ்.எஸ் தலைவர் சாவர்க்கரின் கொலைவெறி கூற்று இதோ:

“பெண்பாலாருக்கு ஊறுவிளைவிக்கக் கூடாது என்ற சான்றோர் மரபு மேலோங்கி நிற்பது தற்கொலைக்குச் சமம். இந்த தர்மத்தைக் கடைபிடித்ததால்தான் சிவாஜியாலோ, சின்னாஜி அப்பாவாலோ முஸ்லிம் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ய முடியவில்லை. எனவே, இந்த தர்மத்தை மீறி இஸ்லாமியப் பெண்களை வன்புணர்ச்சி செய்ய வேண்டும்’’ என்று ஆவேசம் கொள்கிறார் சாவர்க்கர். 

(ஆதாரம்: V.D.Savarkar, Seven Golden Epochs in Indian History) 

தமிழ் மண்ணிலே மதவெறிக் கும்பலின் கூச்சல்:

“பா.ஜ.க.வில் பணியாற்றும் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களிடம் நமது சித்தாந்த அடிப்படையையும், வி.எச்.பி., ஏ.பி.வி.பி., பி.எம்.எஸ்., சேவாபாரதி, கல்யாண் ஆசிரம் போன்ற சகோதர அமைப்புகளுடன் நமக்குள்ள பிணைப்புகளையும், ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள வைக்கும் உணர்வுபூர்வ கடமைகளைச் செய்து வருகிறது. இந்த அமைப்புகளெல்லாம் ஆர்.எஸ்.எஸ். தந்த உந்துதலின் அடிப்படையில் கட்டப்பட்டவை. நமது முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.ன் கண்ணோட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால்தான் அரசியலில் பா.ஜ.க. என்ற கருவியின் மூலமாக ஆர்.எஸ்.எஸ். மேலதிக அங்கீகாரத்தைப் பெறும். ஆர்.எஸ்.எஸ்.ன் அரசியல் கருவிதான் பா.ஜ.க.’’ என்றார் அத்வானி கோயம்புத்தூரில்.

(ஆதாரம்:  Quoted by A.G.Noorani, Ibid) 

இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காத மதவெறிக் கூட்டம்:

“வி.எச்.பி.யின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுதான் பஜ்ரங்தளத்தின் முக்கிய நோக்கம்’’ என்று கூறும் வினய் கட்டியார், இந்திய அரசியலமைப்பையும், சட்டத்தையும் ஏற்க மறுத்தார். “நீதிமன்ற ஆணைகளின்படி இந்த நாடு நடத்தப்படுவதில்லை... ஒன்றை அழித்துத்தான் மன்றொன்று பிறக்கும்’’ என்கிறார். இவர் முரடர்களையும், காலிகளையும், போக்கிரிகளையும் கொண்ட குண்டர்படையான பஜரங்தள்ளின் தலைவர். பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் இவர். 
(ஆதாரம்: Anand Tettumbde, Ambedkar and Muslim (Myths and Facts) page 17) 

இவர் மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ். மேனாள் தலைவர் இராஜேந்திர சிங்,

“அரசியலமைப்புச் சட்டத்தில், ‘இந்தியா என்ற பாரத்’ என்பதற்குப் பதிலாக, “இந்துஸ்தான் என்ற பாரத்’’ என்று இருக்க வேண்டும். நமது பண்பாடு கூட்டுப் பண்பாடாக இருக்கக் கூடாது. எந்தவொரு நாடு உயிர்வாழ வேண்டும் என்றாலும் தனித்தனிப் பாகங்களைக் கொண்டிருக்கக் கூடாது. அரசமைப்புச் சட்டம் மாற்றப்பட வேண்டும். இந்த நாட்டின் பண்புக்கு ஏற்ப அது இருக்க வேண்டும்’’ என்கிறார்.

(ஆதாரம்: Quoted by A.G.Noorani, A Halt Fentury’s Gory Record) 

தொண்டுசெய்த பாதிரியாரையும் அவரது குழந்தைகளையும் உயிருடன் கொளுத்திய கொடூரக் கும்பல்:

ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்து தொண்டாற்றிய கிரகம் ஸ்டெய்ன் மற்றும் அவரது இரு மகன்களையும் எரித்துக் கொன்ற கூட்டம் பஜ்ரங்தள். அவர்களை உயிருடன் கொளுத்திக் கொன்றுவிட்டு “பஜ்ரங்தள் வாழ்க!’’, “தாராசிங் வாழ்க’’ என்று முழக்கமிட்ட கூட்டம்.

இடஒதுக்கீடு, சமூக நீதியின் எதிரிகள்:

அரசின் நிர்வாக எந்திரத்தை உயர் ஜாதியினரான ஆரிய பார்ப்பனர்கள் தங்கள் கையில் வைத்திருந்த நிலையில், அதைத் தகர்த்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களும் நிர்வாகத்தைக் கைப்பற்றியதால், அதற்கு வாய்ப்பளித்த இடஒதுக்கீட்டை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்று பல வகையிலும் முயலும் கூட்டம் இது.

மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்த விடாமல் அவர்கள் செய்த அடாவடிச் செயல்கள் நாடறிந்த ஒன்றல்லவா?

பெரியார், அம்பேத்கரின் சமூகநீதிச் சிந்தனைகள், சோசலிச, கம்யூனிசக் கருத்துகளின் செல்வாக்கு மாணவர்கள் மத்தியில் வராமல் தடுக்க, ஆர்.எஸ்.எஸ்.சால் ஒரு அமைப்பே உருவாக்கப்பட்டது. அதுதான் அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.). மாணவர்கள் தங்களின் நியாயமான, ஜனநாயக, பொருளாதார, உயர்கல்வி உரிமைகளைப் பெற, கிளர்ச்சி, போராட்டம் போன்றவற்றைச் செய்யாது தடுப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய அமைப்பே இது.

ஆர்.எஸ்.எஸ். முதல் அனைத்து பரிவார அமைப்புகளும் ஒன்றே! தப்பித்துக் கொள்வதற்காக அதுவேறு இதுவேறு என்ற தந்திரங்களைச் செய்ய இப்படிப் பிரிந்து நிற்கின்றனர். இவற்றை உருவாக்கியவர்களைப் பார்த்தாலே எல்லாம் ஒன்று என்ற உண்மையை தெரிந்துகொள்ளலாம்.

பஜ்ரங்தளம் விசுவ இந்து பரிஷத்தின் புற இராணுவப் படையாகும். விஸ்வ இந்து பரிஷத் 1964இல் மும்பையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரால் உருவாக்கப்பட்டது. 1984இல், வி.எச்.பி.யின் கிளையாக, வினய் கட்டியர் தலைமையில் உருவாக்கப்பட்டதே (பாபர் மசூதியைக் கைப்பற்ற) பஜ்ரங்தளம். ஆக, எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.ன் கிளைகளே!

எனவே, அனைத்து வன்முறைகளுக்கும், மதமோதல்களுக்கும், கலவரங்களுக்கும், கொலைகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்.

இவர்கள் வளர்ச்சியே வன்முறை என்ற உரம்போட்டுத்தான் நடைபெறுகிறது. தொண்டு அமைப்பு போல கூறிக்கொண்டு, வன்முறை மதவெறி, கொலைவெறி ஊட்டும கொடும்பாதகச் செயல்களைச் செய்யும் இந்த ஆர்.எஸ்.எஸ். கும்பலை தமிழகத்தில் அனுமதிப்பதும், பேரணி, மாநாடு நடத்த உதவிசெய்வதும், தமிழகத்தைக் கலவர பூமியாக்கி, இரத்தக் களறியை, மதமோதலை உருவாக்கும் செயலாகும்.

எனவே, அரசும் மக்களும் விழிப்போடிருந்து இவர்களை அறவே அடக்கி, ஒடுக்கி, அப்புறப்படுத்த வேண்டும்.

பெரியார் வாழ்ந்து, போராடிய மண்ணில், பண்படுத்திய பகுதியில் பெரியார் வழிவந்ததாய்ச் சொல்லும் அரசு இதில் முனைப்புடன் நின்று ஆர்.எஸ்.எஸ். வன்முறைக் கூட்டத்தின் சதிகளை உளவுத்துறை உதவியுடன் முறியடிக்க வேண்டும். நீதிமன்றங்கள் இவர்களின் வரலாற்றை, நோக்கை, போக்கை முழுமையாய் அறிந்து தீர்ப்புகளை வழங்க வேண்டும். இது அரசு மற்றும் நீதித்துறையின் கட்டாயக் கடமையாகும். மக்கள் நலப் பணியாகும்! அரசும், நீதிமன்றமும் ஆர்.எஸ்.எஸ். தொடர்பானவற்றில் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும்.


சைனஸ், தொடர்தும்மல், ஒவ்வாமை அகற்ற எளிய வழிகள்



நமது சுற்றுச் சூழல் மிகவும் மாசுபட்டிருப்பதே இப்பிரச்சனைகளுக்குப் பெரிதும் காரணமாய் அமைகின்றன. எனவே,

1. சுற்றுச்சூழலை தூய்மையாய் தூசு சேராமல் வையுங்கள்.

2. தலையணை உறையை அடிக்கடி தூய்மை செய்யுங்கள்.

3. தூசு உள்ள இடங்களில் முக்கில் துணி கட்டிக் கொள்ளுங்கள்.

4. கை நகங்களை அழுக்கின்றி தூய்மையாய் வைத்திருங்கள்.

5. கொழுப்புப் பொருட்களை குறைவாய்
உண்ணுங்கள்.

6. துளசி இலைகளை தினம் சாப்பிடுங்கள்.

7. தினம் காலையில் 10 மிளகு சாப்பிடுங்கள்.

8. தூதுவளைப் பொடியை தோசையில் சிறிது கலந்து சாப்பிடுங்கள்.

9. மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்

10. பேருந்தைத் தவிர்த்து ரயிலில் பயணம் செய்யுங்கள் சிறுவர்கள் முதல் வயதடைந்தவர்கள் வரை இவற்றைப் பின்பற்றலாம். மிகக் குளிர்ச்சியான சூழலை, பொருட்களைத் தவிர்த்து விடுங்கள்.

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

அரசு மற்றும் கல்வியாளர்கள் கவனத்திற்கு... பெயின்ட் பொருட்கள் பள்ளிக் குழந்தைகள் எச்சரிக்கை!



பள்ளிகளில் “புராஜெக்ட்” என்ற பெயரில் பெயின்டை 3 வயது குழந்தைகள் முதல் பயன்படுத்துவதால், அது குழந்தைகளின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. எனவே, இதைத் தவிர்க்க அரசும், கல்வியாளர்களும் கவனம் செலுத்த வேண்டும். இது குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்தது. எச்சரிக்கை!
பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.

பெயின்ட் பூசப்பட்ட பொருட்கள் குறிப்பாக விளையாட்டுப் பொருட்களை குழந்தைகளிடம் கொடுக்காதீர்கள்!

பெயின்ட் புதிதாக அடிக்கப்பட்ட வீடுகளில் உடனே குழந்தைகளையும் கருவுற்ற பெண்களையும் புழங்க விடாதீர்கள்! சில நாள்கள் கழித்து அந்த நாற்றம் நீங்கியபின் புழங்கவிடுங்கள்.

பெயின்ட்டில் காரீயம் கலக்கப்படுகிறது. அதன் நச்சுத்தன்மை குழந்தைகளை, கருவுற்ற பெண்களைப் பெரிதும் பாதிக்கிறது.

உலகத்தில் ஆண்டுக்கு 43 ஆயிரம் பேர் இதனால் உயிரிழக்கின்றனர். லட்சக்கணக்கில் பாதிக்கப்படுகின்றனர்.

மஞ்சள், சிவப்பு பெயின்டில் காரீயத்தின் அளவு அதிகம். விலை குறைவான, மட்டரக பெயின்ட்டைப் பயன்படுத்தாதீர்கள்

தரமற்ற பென்சில், வாட்டர் கலர், க்ரையான் போன்றவற்றைக் குழந்தைகளிடம் தராதீர்கள்!

பெயின்ட் அடித்த பொம்மைகள், பேட்டரிசெல்கள், கலாய் பூசிய பாத்திரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், சால்ட்ரிங் பொருட்களை குழந்தைகளிடம் கொடுக்காதீர்கள்.

இவற்றை குழந்தைகள் வாயில் வைக்கும் போது அவற்றிலுள்ள காரீயம் இரத்ததில் கலந்து உடல் நலம் கெடுக்கும்; உயிருக்குக் கேடு விளைவிக்கும்!

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

Friday, January 8, 2016

பார்ப்பானைப் பார்த்தாவது பாடம் கற்கவேண்டாமா?

2G வழக்கு தி.மு.க. தேர்தல்வெற்றியைப் பாதிக்கும் என்கிற மாலன் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை மறைக்கிறார்...........

பார்ப்பான் ஓரணியில் ஒரே குரலில் சரியாக இருக்கிறான். தமிழன்தான் தன்முனைப்பில் தான் தோன்றியாய் அழிகிறான்!

பார்ப்பானைப் பார்த்தாவது பாடம் கற்கவேண்டாமா?

”தினமணி” என்றொரு பத்திரிக்கை. அது நடுநிலை நாளேடு என்று சொல்லிக் கொள்ளும்! ஆனால், பச்சை பார்ப்பன ஏடாக அச்சாகி, மத்தியில் பி.ஜே.பி., மாநிலத்தில் ஜெயலலிதா ஆட்சி நிலைக்க என்னென்ன பித்தலாட்டம், தில்லுமுல்லு, தகிடுதத்தம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்யும்!

அதற்காக சூடு, சொரணை மானம், வெட்கம் எதுவும் இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளும். காரணம், அப்படியொரு ஆள் அங்கு ஆசிரியராக வந்துவிட்டதன் விளைவு அது! பெரியார் நினைவு நாள் செய்தி வெளியிட்ட விதமே அதற்குச் சான்று அதுபோல் ஆயிரம் காட்டலாம்.

ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள ஆட்களை தயார்செய்து, கட்டுரைகளை வெளியிடுவது அவர்களின் கொள்கைத்திட்டம்

தில்லுமுல்லு திரிபுவேலை செய்வதில் கைதேர்ந்த, “நல்லவன் போல் நடிப்பான்” என்ற நயவஞ்சகப் பேர்வழிகளை பொறுக்கியெடுத்து பொறுக்கித் தனமான கருத்துகளை, புனிதத்தனமான முலாம் பூசி வெளியிடுவது அவர்களின் யுக்தி.

இன்றைக்கு (08.01.2016) தினமணியில் மாலன் என்ற ஒரு போலிப்புனிதரின் பார்ப்பன பாசம் வழியும் பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் துடிக்கும் கட்டுரை யொன்று, அரசியல் அலசல் என்ற போர்வையில் வந்துள்ளது”

“இணையுமா இலையும் தாமரையும்?” இதுதான் அவர் எழுதியுள்ள கட்டுரையின் தலைப்பு எவ்வளவு ஏக்கம், தவிப்பு, அக்கறை ஆர்வம் பாருங்கள் இந்த மாலனுக்கு!

இலையும் தாமரையும் கூட்டணிக்குத்தான் இணையவில்லையே தவிர, கொள்கையில் இணைந்து தானே இருக்கிறார்கள், மோடிக்கும் ஜெயலலிதாவிற்கும் எதில் வேறுபாடு? அதனால்தானே துக்ளக் சோமுதல் மாலன் வரை அத்தனை அம்பிகளும் மொத்தமாய் அணிவகுத்து அவர்களை ஆதரிக்கிறார்கள்!

அ.தி.மு.கவும், பி.ஜே.பியும் கூட்டு சேர என்னென்ன சாதகங்கள், நன்மைகள் உண்டோ அத்தனையும் சொல்லி ஒட்டவைக்க முயலும் மாலன், தி.மு.க.விற்கும் தே.மு.தி.க.விற்கும் எத்தனைச் சிக்கல்களை உருவாக்கிக் காட்ட முடியுமோ அத்தனையையும் உருவாக்கிக்காட்டி, இருவரும் இணைந்துவிடக்கூடாது என்பதற்கு தவியாய் தவிக்கிறார்.

பி.ஜே.பிக்கு மக்களவையில் பெரும்பான்மை இல்லாததால்தான் இன்னும் இந்தியாவில் பி.ஜே.பி. மற்றும் ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் தங்கள் ஆதிக்கத்தை அரங்கேற்ற முடியாமல் தவிக்கின்றன. அதை எப்படியாவது பெற்றுவிட வேண்டும். என்று துடிக்கின்றன.

அந்தத்துடிப்பு மாலனுக்கு மலையளவு உள்ளது. அதன் வெளிப்பாடுதான் இலையும் தாமரையும் இணையுமா என்ற ஏக்கம்!

அப்படியென்றால், அதைத் தடுக்க வேண்டுமானால் மதவாதத்தை எதிர்க்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டாமா? தி.மு.க.வைப்பற்றிப் பேசும் போது மட்டும் ஊழலை ஊதிஊதி பெரிதாகக் காட்டும் இவர்கள், அ.தி.மு.க ஊழலை, ஜெயலலிதா ஊழலை அப்படியே ஓரங்கட்டி ஒளித்துவிடுகிறார்கள்.

”2ஜி வழக்கில் தேர்தல் நேரத்தில் தீர்ப்பு வந்துவிடலாம்; அது தி.மு.கவிற்குப் பாதகமாக அமைந்தால் அது தேர்தலைப்பாதிக்குமா? இக்கேள்விக்கான விடைதான் தி.மு.க. கூட்டணி உருப்பெறுவதையும், வலுப்பெறுவதையும் இறுதிசெய்யும்” என்று கூறும் மாலன்,

தேர்தலுக்கு முன்பே ஜெயல்லிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் வாய்ப்பு உள்ளது என்பதை கூறவில்லை! ஏன், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கையே மாலன் இக்கட்டுரையில் குறிப்பிடவே இல்லை. அறவே மறைத்துவிட்டார்.

அறிவு நாணயம் இருந்தால், நீதி நேர்மையிருந்தால், நடுநிலையிருந்தால் யோக்கியதையிருந்தால், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தேர்தலுக்குமுன்னமே வரவாய்ப்புள்ளது.

அது ஜெயலலிதாவிற்குப் பாதகமாக அமைந்தால் அது அ.தி.மு.கவின் எதிர்காலத்தையே பாதிக்கும், தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை அ.தி.மு.க எதிர்கொள்ள நேரிடும், இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் பி.ஜே.பி. அ.தி.மு.கவுடன் கூட்டு சேர்வது பற்றி முடிவெடுக்க வெண்டும் என்று எழுதியிருக்க வேண்டுமல்லவா?

அ.தி.மு.க அரசின் மீது தமிழக மக்கள் அளவு கடந்த கோபத்தில் உள்ளனர். அ.தி.மு.கவிற்கு வாக்களிக்க மக்கள் தயாராய் இல்லை என்ற உண்மையை கட்டுரையில் எந்த இடத்திலும் மாலன் குறிப்பிடவில்லை


அ.தி.மு.க. செல்வாக்கு அப்படியே இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்க, அத்தனை பார்ப்பனர்களும் பார்ப்பன ஊடகங்கத்தாரும் தொடர்ந்து முயற்சிக்கின்றனர்.

தமிழகத் தேர்தல் களம் தெளிவாகத்தான் இருக்கிறது. மாலன் போன்ற ஆரியப்பார்ப்பன ஆதிக்க வெறி கொண்ட ஆட்கள் தான் அதை குழப்பிக் குளறுகின்றனர்.


தமிழகத்தின் பெரிய கட்சிகள் தி.மு.க; அ.தி.மு.க. இரண்டுதான். இரண்டின் மீதும் ஊழல் குற்றச் சாட்டு உள்ளது. ஊழலைக் கருத்தில் கொண்டுமட்டும் அணுகினால் இந்த இரு கட்சிகளும் தகுதியிழக்கின்றன. ஆனால், இந்த இரு கட்சிகளின் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இப்போது வந்ததல்ல, 40 ஆண்டுகளுக்கு மேலாகவுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில் மாறிமாறி கூட்டுசேர்ந்த கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகள் இப்போது மட்டும் புனிதம் பேசுவது சரியா? இது சந்தர்ப்பவாதமல்லவா? இது யோக்கியமான செயலா?

மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சியோடு கம்யூனிஸ்ட்டுகள் கூட்டு வைக்க முயற்சிக்கிக்கின்றார்களே, காங்கிரஸ் ஊழல் இல்லாத கட்சியா?

இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸை வெறுக்கும் கட்சிகள் த.மா.க.வோடு கூட்டுச் சேரத் துடிக்கின்றனவே அது சரியா? இலங்கையில் உச்சக்கட்ட போர் அழிவின் போது, மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் காபினட் அமைச்சராய் இருந்தவர் வாசன் அல்லவா? அவரும் இலங்கைத் தமிழர் அழிவிற்குப் பொறுப்பாளிதானே?


எனவே, சந்தர்ப்பவாதத்தை விட்டுவிட்டு. பி.ஜே.பி அல்லாத அதனோடு ஒத்துப் போகும் அதிமுக அல்லாத ஆட்சி அமைவதே சரி என்ற உண்மைகள் பேசப்படாதது ஏன்?

திமுகவை தவிர்த்து அதிமுகவை வீழ்த்தமுடியாது என்ற நிலையில் திமுகவும் கூட்டு சேர்வதில் என்ன தவறு?

முதலில் ஒழிக்கப்பட வேண்டியது திமுகவா? அதிமுகவா? என்றால் அதிமுக தானே?


இந்தமுறை அதிமுகவை அகற்றிவிட்டு, இன்னும் 5 வருடங்களில் மாற்று ஏற்பாடு செய்து, மக்களை மாற்றி, மாற்றம் காண்பதுதானே சரியானதாக இருக்கும் முடியும்?

இதைப் பேசாது. எதையெதையோ பேசுவது பித்தலாட்டப் பேச்சு தானே?

தமிழர்களே எச்சரிக்கை!

ஆளாளுக்கு வாக்குகளைப் பிரித்தால், அது அ.தி.மு.க. அராஜக ஆட்சிக்கே வழிவகுக்கும்

தந்தை பெரியார் சொல்வார், “பார்ப்பான் யாரை ஆதரிக்கிறானோ அவரை தமிழர்கள் எதிர்பதே தமிழர் நலனுக்கு நல்லது!” என்று.

2016 தேர்தலில் பெரியாரின் இந்த அறிவுரையை ஏற்பது ஒன்றே தமிழர்க்கும், தமிழகத்திற்கும் நல்லது தமிழர்களே சிந்திப்பீர்!

Thursday, January 7, 2016

“ஜிம்”முக்கு போகிறவரா நீங்கள்? கட்டாயம் இவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்!.

1. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யாதீர்கள். உங்கள் பயிற்சியின்போது அதிக அளவு கலோரி எரிக்கப்படுவதால், அதை ஈடுசெய்ய உடலில் சக்தி வேண்டும். வெறும் வயிற்றில் பயிற்சி செய்தால், சக்தியின்மையால் தலைச்சுற்றல் வரும்.
எனவே, பயிற்சி தொடங்கும் முன் சிறிதளவு பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு, பழங்கள் அளவோடு சாப்பிட்ட பின் செய்தால், உடல் சோர்வடையாது, உடல் வலுப்பெறும்.
2. தளர்வான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்.
3. பயிற்சியைத் தொடங்கம் முன் உடல் உறுப்புகளை சிறிதுநேரம் அசையுங்கள் (வாம் அப் செய்யுங்கள்)-. இதனால் பயிற்சி எளிதாகும்.
4. உடல் எடையை உடனே குறைக்கக் கூடாது. அதிக எடை உள்ளவர்கள் மாதம் 5 கிலோவுக்குமேல் குறைக்கக் கூடாது. மெல்லமெல்ல குறைப்பதுதான் சிறப்பு.
5. உடற்பயிற்சியை முறைப்படி அறிந்து செய்யுங்கள். உடற்பயிற்சிக்கு உடல் தகுதியாய் உள்ளதா என்று அறிந்து செய்யுங்கள்.
6. பயிற்சியின்போது தண்ணீர் அறவே குடிக்காமல் இருக்கக் கூடாது. நாக்க உலரும்போது ஒரு வாய் தண்ணீர் பருக வேண்டும். பயிற்சி முடிந்து 15 நிமிடம் கழித்து தேவையான அளவு தண்ணீர் குடிக்கலாம்.
முடிந்த அளவு திறந்தவெளியில் காற்றோட்டமாக உடற்பயிற்சி செய்தல் நன்மை தரும். வயல், தோட்டம் இருப்பின் அங்கு உழைப்பது மிகச் சிறந்தது. ஓடுதல், நீந்துதல், நடத்தல் போன்றவை மிகச் சிறந்தவை.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

ஆண்களின் உடலுறவுத் திறன் அதிகரிக்க எளிய வழி!

பத்து சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, சிறிது எண்ணைவிட்டு வதக்கிச் சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும். உடல் பலப்படும், நரம்புகள் வலுப்பெறும், உடற்ச்சூடு தணியும், இதயம் வலுப்பெறும், வயிற்றுப் புண் ஆறும். வாரம் இருமுறை இப்படிச் சாப்பிட்டால் நல்லது. சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் வரும்.
சின்ன வெங்காயத்தை தினம் சாம்பார் அல்லது, சட்னியில் சேர்த்து சாப்பிட்டால் கல்லீரல், இதயம் நலமாய் இருக்கும்.
இரவு மீதமுள்ள சோற்றில் நீர்ஊற்றி அதில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, விடியற்காலை சோறு, தண்ணீர், வெங்காயம் மூன்றையும் அப்படியே சாப்பிட்டால் வயிற்றுப் புண் ஆறும். உடலுறவுத் திறனும் கூடும்.
தினம் பப்பாளி சாப்பிடுவது, முருங்கைக் காய், முருங்கைக் கீரை வாரம் மூன்றமுறை சாப்பிடுவது, அமுக்குரா கிழங்கு பொடியை தேனில் அல்லது பாலில் கலந்து சாப்பிடுவது ஆணுக்குச் சக்தியளிக்கும், மலச்சிக்கல் வராது. கண் நலமாய் இருக்கும்.
பாக்கட் உணவு, துரித உணவு, பிராய்லர் கோழி இவற்றை அறவே தவிர்க்கவும். மீன், ஆட்டுக்கறி அளவோடு சாப்பிடுவது நல்லது.

Monday, January 4, 2016

அரசியல்வாதிகள் படிக்கவேண்டிய அண்ணா பாடம்!


- மஞ்சை.வசந்தன்



அறிஞர் அண்ணா ஏழ்மையில் எளிமையாய்க் கற்று உயர்ந்து தமிழ்நாட்டின் முதல்வர் ஆனவர். இன்றைய அரசியல் வட்டச் செயலர்கூட அல்ல ஓர் ஊரின் கிளைச் செயலர்கூட ஆடம்பரமாய், பந்தா காட்டி, ஆட்கள் புடைசூழ ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; அவரவர் திறமைக்கு ஏற்பச் சுருட்டுகின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டின் முதல்வராய் இருந்த அண்ணா எப்படி நடந்துகொண்டார் என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும் பாடமாகப் படிக்க வேண்டும்.
வேண்டியவருக்கு சலுகை காட்டாத நேர்மை
அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது திரு. சி.வி.இராசகோபால் அவர்கள் தன் மருமகனுக்கு ஏதாவது ஒரு பதவி அளிக்கும்படி அண்ணாவிடம் வேண்டினார்.

அதற்கு அண்ணா, சண்முகத்தை ஓர் ஏலக்காய் மாலையாக நினைக்கிறேன். உங்கள் மருமகனுக்கு பதவி தந்துதான் முன்னேற்ற வேண்டும் என்பதில்லை. பதவி இல்லாமலே வளரும் தகுதி, திறமை அவரிடமிருக்கிறது. அப்படி நான் ஏதாவது பதவி தந்தால் சி.வி.ஆர். மருமகனுக்குக்கூட பதவி வாங்கித் தந்துவிட்டான் என்ற பெயர் உனக்கும், சி.வி.ஆர். மருமகனுக்கு அண்ணா பதவி தந்தார் என்ற கெட்ட பெயர் எனக்கும் ஏற்பட்டுவிடும்? என்றார்.

அண்ணாவின் பதிலைக் கேட்ட சி.வி.ஆர். அவரது நேர்மையைக் கண்டு வியந்து, அண்ணா உங்கள் நிலைப்பாடுதான் சரியென்று சொல்லி விடைபெற்றார்.
ஒருநாள் விருத்தாசலம் கூட்டம் முடித்துவிட்டு அண்ணா சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அண்ணா முதலமைச்சர். அயல் மாநிலங்களுக்கு அரசி கடத்துவதைத் தடுக்க சோதனைச் சாவடி பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது.

அண்ணாவின் கார் என்று தெரியாமல் ஒரு சோதனைச் சாவடியில் ரெவன்யூ இன்ஸ்பெக்டர் காரை நிறுத்தினார். இரவு நேரம் என்பதால் அண்ணாவை அதிகாரி கவனிக்கவில்லை.

டிக்கியை திறந்துவிடு என்று ஓட்டுநரை கடுக்கினார். டிக்கியை திறந்ததும் டிக்கி முழுக்க ரோசா மாலைகள். வாழ்த்து மடல்கள் என நிரம்பியிருந்தது. அப்போதுதான் வந்திருப்பது அண்ணா என்பது ரென்யூ இன்ஸ்பெக்டருக்குத் தெரிந்தது. பயந்துபோன அவர் அய்யா மன்னித்து விடுங்கள் என்று நடுங்கினார்.
அண்ணா தன் உதவியாளரைப் பார்த்து இவர் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள் என்றார். உடனே அதிகாரி விழுந்து வணங்குகிறார்.

அண்ணா அவரைத் தூக்கிநிறுத்தி, உன் பெயரை எதற்கு எழுதச் சொன்னேன் தெரியுமா? கடமையைச் சரியாகச் செய்த உனக்கு தாசில்தார் பதவி உயர்வு அளிக்கத்தான்! என்றார்.

அதிகாரிக்கு இன்ப அதிர்ச்சி. மகிழ்வோடு கண்கலங்கினார்.

தமிழ்நாட்டின் முதல்வர் எந்த ஆடம்பரமும் இல்லாமல், காவல்துறை அணிவகுப்பு, கட்சிக்காரர் அணிவகுப்பு காட்டாமல், ஒரு எளிய மனிதராய் பயணம் செய்த மாண்பு எத்தகையது பாருங்கள்! அது மட்டுமல்ல. முதல்வர் காரை இன்று நிறுத்தியிருந்தால் அந்த அதிகாரி பாடு என்ன ஆகியிருக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் அண்ணாவின் உயர் பண்பு தெரியும்.
மக்களோடு அமர்ந்து திரைப்படம் பார்த்த எளிமை!
இவை மட்டுமல்ல தமிழ்நாட்டின் முதல்வராய் இருந்தபோதே திரையரங்கிற்கு சாதாரண மனிதராய் படம் பார்க்கச் சென்றார்.

மதுரையில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அண்ணா மாலை அன்பில் தருமலிங்கத்திடம் பிளாசா தியேட்டரில் என்ன படம்? டிக்கெட் வாங்கி வா! என்றார். படம் ஆரம்பித்ததும் எந்த பாதுகாப்பும் இன்றி இவரும் தருமலிங்கமும் கவிஞர் கருணாநந்தமும் தியேட்டருக்குள் சென்றனர்.

அண்ணா இருக்கையில் அமர்ந்ததும், இவர்கள் இருவரும் சிரித்தனர். உடனே அண்ணா நீங்க ஏன்யா அப்படி நினைக்கிறீங்க, நான் நிறைய சினிமா பார்ப்பேன். முதலமைச்சரே நம்மோடு உட்கார்ந்து படம பார்க்கிறார் என்று உயர்வாகத்தானே நினைப்பார்கள்! என்றார்.
இதேபோல், காரைக்காலில் கூட்டம் முடித்துவிட்டு முதல்வர் அண்ணா காரில் வந்தபோது, திருநள்ளாறு என்ற இடத்தில் கார் பழுதாகி நின்றுவிட்டது. பிறகு பழுதுபார்த்த பின் கார் புறப்பட்டது.

பேரளம் என்ற இடத்திற்கு கார் வந்ததும் அண்ணா காரை நிறுத்தச் சொன்னார். உடன் வந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

எம்.ஜி.ஆர். நடித்த, அன்பே வா! ஓடுது! பார்த்துவிட்டுப் போகலாம்! என்றார் அண்ணா, விளையாட்டுப் பிள்ளைபோல.

படம் தொடங்கும் நேரத்தில் அண்ணா வாழ்க! முழக்கம் எழுந்தது. அண்ணா வந்தது அறிந்த மக்கள் ஆரவாரம் செய்தனர். பின் அண்ணா படத்தைப் பார்த்தார். படம் முடிய அய்ந்து நிமிடம் இருக்க மக்களுக்குத் தெரியாமல் புறப்பட்டுச் சென்றார்.

நாட்டின் முதலமைச்சரானாலும் தானும் சராசரி மக்களில் ஒருவர் என்ற எண்ணமும், முதலமைச்சர் ஆனாலும் தன் அன்றாட விருப்பங்களை அவர் மக்களோடு மக்களாய் கலந்து பழகியே நிறைவேற்ற விரும்பினார் என்ற உயர் பண்பும் இந்நிகழ்வு மூலம் வெளிப்படுகிறது.

தன் உயிருக்குப் போராடு நிலையில் பிறர் உயிர் காத்த மனிதம்

அண்ணா நோய்வாய்ப்பட்டு மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று டாக்டர்கள் கூறி, அவ்வாறே செய்தும் வந்தார்கள். ஒருநாள், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஒரு பெண் கைக்குழந்தையுடன், ஒரு வக்கீலுடன் வீட்டிற்கு வந்து அண்ணாவைப் பார்க்க வேண்டுமென்று அவரது உதவியாளரிடம் அங்கிருந்தோர் கூறினார்கள். அவர் நிலைமையை விளக்கி, பார்க்க முடியாது என்று கூறிவிட்டார்கள். அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். சிறிது நேரத்திற்குப் பின் திருமதி ராணி அண்ணாதுரை கீழே வந்தபோது அந்தப் பெண் தன் கைக்குழந்தையை திருமதி அண்ணா காலடியில் போட்டுவிட்டு என் கணவரைத் தூக்கிலிட உள்ளார்கள். நீங்கள்தான் காப்பாற்ற வேண்டுமென்று கதறினாள். திருமதி அண்ணா உதவியாளரிடம் இதுகுறித்து கேட்டபோது,

ஏற்கெனவே கேட்டு வைத்திருந்த விவரங்களைக் கூறினார். அந்த அம்மையாரும் மிகவும் இளகிய மனம் உள்ளவர். எனவே மாடிக்குச் சென்று விவரங்களைச் சொல்ல, அண்ணா உதவியாளரைக் கூப்பிட்டு முழு விவரங்களையும் கேட்டார்.

இன்னும் இரண்டு தினங்களில் அவரது கணவரை தூக்கிலிட உள்ளதாகவும், இது சம்பந்தமாகத் தங்களைப் பார்க்க ஒரு பெண் வக்கீலுடன் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். உடனே அவர்களை அழைத்து வரும்படி அண்ணா கூற, அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
அண்ணா தன் நோயையும், வலியையும் மறந்து, முழு விவரங்களையும் கேட்டு அவர்கள் கொடுத்த கருணை மனுவையும் பெற்றுக்கொண்டு, மதுரை சிறையிலிருக்கும் அவரது கணவரைத் தூக்கிலிடுவதை உடனே நிறுத்தி வைக்கம்படி பணித்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய தனது உதவியாளரிடம் கூறினார்.

உடனே அப்போது உள்துறை செயலாளராகப் பணியாற்றிய ஏ.வெங்கடேசன் அய்.ஏ.எஸ். அவர்களுக்கும், மதுரை சிறை கண்காணிப்பாளருக்கும் விவரங்களை தொலைபேசி மூலம் கூற தூக்கிலிடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முதல்வர் என்பதைவிட தான் ஒரு மனிதாபிமானம் உள்ளவராக வாழவேண்டும் என்றே விரும்பினார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

உதவியாளரை மருத்துவமனையில் சேர்த்து காத்துக்கிடந்த மாண்பு
அண்ணா முதல்வராக இருந்தபோது, அவரின் நேர்முக உதவியாளராய் பணியாற்றிய எஸ்.கஜேந்திரன் அவர்களுக்கு மாலை 6 மணியளவில் வாந்தியும், வயிற்றுவலியும் வந்து துடித்தார். அதைப் பார்த்த அண்ணா, அரசு பொதுமருத்துவமனைக்கு தானே அவரை அழைத்துச்சென்று அறுவை சிகிச்சை முடியும்வரை அங்கேயே இருந்து, அவரைப் படுக்கையில் சேர்த்த பின்னரே வீட்டுக்கு வந்தார்.
இப்படி ஒரு உயர் உள்ளம் கொண்டவரை ஆடம்பரமில்லா எளிய மனிதரை உலகத்திலே காட்ட முடியுமா?

அற்பர்கள் ஆடுவார்கள்-_ ஆர்ப்பரிப்பார்கள், உயர்ந்தோர் அடக்கத்தின் அடையாளமாய் இருப்பர் என்பதை அண்ணாவே ஓர் உதாரணம் மூலம் காட்டினார்.
ஒருநாள் சேலத்தில் உள்ள தன் நண்பா வீட்டில் மதிய உணவு உண்ண அமர்ந்ததும், இலையில் அப்பளமும் முட்டையும் வைத்தார்கள். மின்விசிறி சுற்றியதும் அப்பளம் படபடத்தது. முட்டை ஆடாமல் இருந்தது.
அதைப்பார்த்து அண்ணா நாலணா முட்டை அமைதியாய் உள்ளது. காலணா அப்பளம் எப்படி ஆட்டம் போடுகிறது பார் என்றார்.

இன்றைய அரசியல்வாதிகள் அப்பளம் போல ஆடாமல், அண்ணாவிடம் பாடம் கற்றால் அவர்களுக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது! மதிப்பும் உயர்வும் ஆடம்பரத்தில் இல்லை. அடக்கம் எளிமையில்தான் உள்ளது.

பக்கிங்காம் கால்வாய் ஆங்கிலேயர் அமைத்தது!


கடல் கொந்தளித்தால் கட்டுக்குள் இருக்கவும், மழைநீர் வடிகாலாக அமையவும் பக்கிங்காம் கால்வாய் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. ஆந்திராவில் நெல்லூர் தொடங்கி, கடலூர் வரை சென்னைவழியாக இது அமைக்கப்பட்டது. சென்னையில் மட்டும் 48 கி.மீ தூரம் இது செல்கிறது.
சென்னை மழைநீரில் 30 சதவிதம் பக்கிங்காம் கால்வாய் வழியேதான் செல்கிறது.
அடுத்த நாட்டுக்காரன் நமக்காக ஆறு வெட்டினான். நம் நாட்டானோ ஆற்றைத் துர்த்து மூட்டைக்கட்டினான்!

கூவம் என்ற பெயர் எப்படிவந்தது தெரியுமா?


சென்னையிலிருந்து 75 கி.மீட்டர் தொலைவில், திருவள்ளூர் மாவட்டம் கேசாவரம் அணைக்கட்டிலிருந்து கூவம் ஆறு தொடங்குகிறது. 40கி.மீட்டர் கடந்துபின் பருத்திப்பட்டு அணையைக் கடந்து சென்னைக்குள் வருகிறது. சென்னையில் மட்டும் 32 கி.மீ. கடந்து சென்று வங்கக்கடலில் கலக்கிறது.
திருவள்ளுர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள கூவம் குளத்தில் இருந்து உபரியாக வெளியேறும் நீர் இதில் கலப்பதால் இதற்கு கூவம் என்ற பெயர்வந்தது.
1960க்கு முன்பு வரை தூய ஆறாக ஒடிய கூவம் இன்று சாக்கடையாக நாறி நிற்கிறது. அரசியல் சாக்கடையானது அதே காலத்தில்தான் அரசியல் சாக்கடையானதன் விளைவே ஆறும் சாக்கடையானது!

எரிவாயு சிக்கனத்திற்கு எளிய வழி!...........

எரிவாயு அடுப்பை அணைக்கம்போது, முதலில் சிலிண்டரை மூடிவிட்டு, பின் அடுப்பை அணைத்தால் எரிவாயு வீணாவது தடுக்கப்படும். இதன் பயனாய் எரிவாயு ஒரு வாரத்திற்குக் கூடுதலாய் வரும். அதேபோல் எளிதில் சூடேறும் பாத்திரம்; மூடி வேகவைத்தல் போன்ற முறைகளின் மூலமும் எரிவாயு மிச்சமாகும்; விரைவாகவும் சமைத்து முடிக்கலாம்.

உடல் பருமன் குறைக்கும், இதயம் காக்கும் இஞ்சி பூண்டு விழுது எப்படி செய்வது?........

இஞ்சி பூண்டை சேர்த்தரைத்து கூழ்போல் ஆக்குவதே இஞ்சிபூண்டு விழுது ஆகும். இதை தினம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு சேர்த்தால் உடல் பருமன் குறையும்; இதயம் காக்கப்படும்; இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாது. உணவும் சுவையாக இருக்கும்.
எப்படி அரைப்பது?
இஞ்சி பூண்டு சேர்த்து அரைக்கும்போது பூண்டு 60% இஞ்சி 40% என்ற அளவில் இரண்டையும் சேர்த்து அம்மி அல்லது மிக்ஸியில் அரைத்தால் விழுதுபோல் வரும்.
கெடாமல் இருக்க: இந்த இஞ்சி பூண்டு விழுதை அரைத்த பின் சிறிது உப்பும், சிறிது சூடான எண்ணெயும் கலந்து வைத்தால் சில நாள்களுக்கு கெடாமல் இருக்கும்.