அரசியல்

Wednesday, March 28, 2018

பெரியார் வேடம் போட்டபோதே

ஆன்மீக அரசியல் தோற்றுவிட்டதே!

அப்புறம் ஏது ஆன்மீக அரசியல்?

தாடியும் தடியும் வைத்தால் பெரியாரா?

ஆன்மீகத்தை அறவே வெறுத்தவரை ஆன்மீக அடையாளமாக்குவது அயோக்கியத்தனமல்லவா?

பெரியாரை கேவலப்படுத்தும் இரஜினி இரசிகர் மீது இரஜினிகாந்த் நடவடிக்கை என்ன?

தமிழர்கள் தலையாய உயிர்ப் பிரச்சினை காவிரி நீருக்கும் கருத்துச் சொல்ல மாட்டார்! தமிழகத்தின் எந்த உரிமையை மத்திய அரச பறித்தாலும் வாய்திறக்க மாட்டார்!

ஆனால், தமிழகத்தை தலைகீழாக இவர்தான் புரட்டிப் போடப் போகிறாராம்!

ஆன்மீக அரசியலாம்!

அதற்கு ஆயிரம் விளக்கம்!

உண்மை, நேர்மை, தூய்மை, மக்கள் தொண்டு, ஏழைகளின் ஏற்றம், சமத்துவம், சம உரிமை இதற்குத்தான் ஆன்மீகம் என்று பெயராம்.

இவர் ஒரு தனி அகராதி போடுகிறார். மேற்கண்டவற்றிற்கு ஒரே பெயர் மனிதநேயம் என்பதுதான். அதற்கு என்ன ஆன்மீகச் சாயம்?

மனித நேயத்திற்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமில்லையே!

கோயில் கருவறையிலே கற்பழிக்கிறான் ஆன்மீகவாதி!

குற்றவாளிகள் 99% ஆன்மீகவாதிகள்தான்.

கொடுமைகள் அனைத்தும் நிகழ்த்தப்படுவது ஆன்மீகவாதிகள்தான்.

மனிதநேயத்திற்கு உண்மையிலே சொந்தக்காரர்கள், உரியவர்கள் கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள்.

மனித நேயத்தின் மறுவடிவாய் விளங்கிய கார்ல் மார்க்ஸ், பெரியார், நேரு போன்றவர்கள் கடவுளையோ, ஆன்மீகத்தையோ ஏற்காதவர்கள்!

உண்மைகள் இப்படியிருக்க, மனிதநேயத்திற்கு ஆன்மீக அடையாளம் காட்டுவது அசல் மோசடி அல்லவா?

ஜாதி கூடாது, சமத்துவம் வேண்டும் என்றார் பெரியார்.

ஜாதி வேண்டும், ஜாதி தர்மம் வேண்டும் என்றார் சங்கராச்சாரி.


ஆணைப்போல பெண்ணுக்கும் சம உரிமை உண்டு என்றார் பெரியார். கணவன் இறந்தால் மனைவியை நெருப்பில் தள்ளி எரிக்க வேண்டும். அதுதான் தர்மம் என்றார் சங்கராச்சாரி.

தன் சொத்துக்களை மக்களுக்கே கொடுத்தார் பெரியார். தன் சொத்தை தன் வாரிசுகளுக்கு உயில் எழுதி வைத்தார் இரமணரிஷி.

ஆன்மீகம் மனித நேயத்திற்கு எதிரானது. கடவுள் எல்லாம் பார்த்துக்கொள்வார் என்பது.

கடவுள் எல்லாம் பார்த்துக் கொள்வார் என்றால் நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல், சுரண்டல், மோசடி, ஏமாற்று, அரசியல் பித்தலாட்டம் எல்லாவற்றையும் கடவுள் தடுத்தாரா? தண்டித்தாரா?

கடவுள் எல்லாம் செய்வார் என்றால் சிஸ்டம் சரியில்லாமல் இருப்பதையும் கடவுளே சரி செய்வாரே! அதற்கு ரஜினிகாந்த் எதற்கு?

கடவுள் எல்லாம் செய்வார் என்றால் அவரிடம் பொறுப்பை விட்டுவிட்டு காஷ்மீருக்குப் போக வேண்டியதுதானே!

நான் வந்து சரி செய்வேன் என்பதே நாத்திகம்தானே! கடவுள் பொறுப்பை இவர் எடுத்துக்கொள்வதுதானே!

ஆக, ஆன்மீக அரசியல் என்பது ஒரு அண்டப் புரட்டு! அண்மைக்கால மோசடி!

அப்படிப்பட்ட ஒரு ஆன்மீக அரசியல்வாதிக்கு பெரியார் வேடம் போட்டுக் காட்டுவது பெரிய மோசடியல்லவா?

இதைவிட பெரியாரை கேவலப்படுத்த முடியுமா?

தாடியும், தடியும் வைத்துவிட்டால் அவர் பெரியாரா? அடப் பைத்தியக்காரர்களே!

பெரியார் வேடம் போட்டு அரசியல் நடத்த வந்தபோதே ஆன்மீக அரசியல் தோற்றுவிட்டதே! ஆக, ஒன்று மட்டும் உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் பெரியாரை ஏற்காமல் யாரும் அரசியல் செய்ய முடியாது!

உண்மையிலே இரஜினிகாந்த்திற்கு பெரியார் மீது மரியாதை இருந்தால், இந்த போஸ்டர் போட்டவர்களை உடனே கண்டிக்க வேண்டும். இதுபோன்ற அற்பத்தனமான _ அயோக்கியத்தனமான காரியங்களைச் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இல்லையென்றால் இதுபோன்ற செயல்களுக்கு எதிர்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று எச்சரிக்கிறோம்!

====

Tuesday, March 27, 2018

கோயங்கா குமாஸ்தா குருமூர்த்தியின் துக்ளக் ஏடு



ஆரிய பார்ப்பன அயோக்கியத்தனத்தின் அசல் வடிவம் (அச்சுவடிவம்) தமிழர்களே எச்சரிக்கை!
(நாகரிகமாகப் பேசுவது, எழுதுவது, கருத்துத் தெரிவிப்பது என்பது என்னைப் போன்றோர் கடைபிடிக்கும் கொள்கையாயினும், சில நேரங்களில் சில கடுஞ்சொற்கள் கட்டாயமாகிவிடுகிறது.
நோயின் கடுமைக்கு ஏற்ப மாத்திரையின் அளவு மாறுவதுபோல, கட்டாயம் ஏற்படும்போது அறுவையும், அதிர்ச்சியும் சிகிச்சையில் கட்டாயமாவது போல சிலருக்கு பதில் சொல்லும்போது கடுஞ்சொற்கள் கட்டாயமே!
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன் என்ற பெரியாரின் கடுஞ்சொல் கூட நாகரிகத்திற்குள் அடங்குவதே)
04.04.2018 துக்ளக் ஏட்டை பார்த்தவுடனே எப்படிப்பட்ட பண்பட்ட உள்ளமும் சீற்றம் கொள்ளும்!
அயோக்கியத்தனத்திற்கும் ஓர் அளவு உண்டு. அதையும் தாண்டிய அயோக்கியத்தனங்களை அச்சேற்றி வருவதே துக்ளக். அதுவும் கோயங்கா குமாஸ்தா எஸ்.குருமூர்த்தி வந்தபின் வரம்பும் இல்லை; வாய்மையும் இல்லை.
எப்படியாவது தாங்கள் நினைப்பதை சாதிக்க வேண்டும்! அதற்கு எந்தப் பித்தலாட்டமும், மோசடியும், மொள்ளமாறி வேலையும் செய்யலாம் என்பதே ஆரிய பார்ப்பனர்களின் பரம்பரை அணுகுமுறை!
தி.மு.க. மண்டல மாநாடு மாபெரும் வெற்றி! மக்களின் ஆதரவு எதிர்பார்த்ததைவிட ஏராளம். இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆரிய பார்ப்பனர்களால்!
அதற்கு துக்ளக் போட்டுள்ள அட்டைப் படம் இது?
தி.மு.க.வில் ஸ்டாலின் தலைமைக்கு வருவது வாரிசு அரசியல் என்று அயோக்கியன்கூட சொல்லமாட்டான். காரணம், அடிமட்டத் தொண்டனாய் தொடங்கி, மிசா கொடுமைகளை எல்லாம் அனுபவித்து, பல்வேற அனுபவங்களைப் பெற்று, குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் 50 ஆண்டுகள் அரசியலில் அல்லும் பகலும் அயராது உழைத்து மேல்நிலைக்க வந்தவர் ஸ்டாலின். அப்படியிருக்க மகன், மருமகன் என்று தொடர்புப்படுத்துவது அசல் அயோக்கியத்தன்ம அல்லவா?

சங்கரமடத்துக்கு ஒரு பார்ப்பான் மட்டுமே தலைமைக்கு வருகிற நிலை. அதை இந்த அயோக்கிய சிகாமணிகள் கேள்வி கேட்டது உண்டா?
துக்ளக்குக்கூட ஒரு பார்ப்பான் போனால் இன்னொரு பார்ப்பான்தானே ஆசிரியராய் வருகிற நிலை!
உண்மை இப்படியிருக்க அவர்களுக்கெல்லாம் பத்திரிகை நடத்த என்ன யோக்கியதை உள்ளது?
வெற்றிடம், வெற்றிடம் என்று இல்லாத ஒன்றை இருப்பதாய்க் கூறுவது அயோக்கியத்தனத்தின் முதல் நிலையாகும்!
சென்ற தேர்தலில் 89 இடங்கள் வெற்றி பெற்று ஜெயலலிதாவுக்கு இணையாக வாக்குகள் வாங்கிக் காட்டிய ஸ்டாலின் திறமையை, தகுதியை மறைத்து வெற்றிடம் என்பது மோசடிப் பிரச்சாரம் அல்லவா?
ஆர்.கே.நகர் தேர்தலை வைத்து தி.மு.க. செல்வாக்கு இழந்ததாய்ச் சொல்வது பித்தலாட்டம் அல்லவா? அங்கு முழுக்க முழுக்க பணம் மட்டுமே வாக்குகளைத் தீர்மானித்தது. தமிழ்நாடு முழுக்க மக்கள் மனநிலை தி.மு.க.விற்கே ஆதரவு என்பது சராசரி அரசியல்வாதிக்கே தெரியும்!
வரலாற்றுச் சிறப்புமிக்க 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே மறைத்துவிட்டு அவதூறு பரப்புவது நாணயமா?
பெண்கள் அர்ச்சகராக வேண்டும் என்ற திருமாவளவ்ன கோரிக்கை பற்றி துக்ளக்கிடம் கேட்ட கேள்விக்கு துக்ளக் பதில் என்ன தெரியுமா?
கடவுளை ஏற்காதவர்களுக்கு யார் அர்ச்சகராக வேண்டும் என்று கூறும் உரிமை இல்லை என்பதே பதில்.
இது அயோக்கியத்தனமான பதிலா இல்லையா? கோரிக்கை வைப்பவர் யார் என்பதா இங்கு முக்கியம்?
பெண் அர்ச்சகராகலாமா? வேண்டாமா? என்பதற்குத்தானே பதில் சொல்ல வேண்டும். அதை அப்படியே மழுப்பிவிட்டு திசை திருப்புவது தில்லுமுல்லு பித்தலாட்டம் அல்லவா?
காவிரி விவகாரம் போல பல விஷயங்கள் குறித்து ரஜினி பதில் கூற மறுக்கிறார். அது சரியா என்ற கேள்விக்க துக்ளக் பதில் என்ன தெரியுமா?
அரசியலுக்க தன்னை தயார் செய்பவர் எல்லாம் தெரியும் என்பதுபோல் பதில் சொல்லக் கூடாதாம்! பதில் சொன்னால் தப்பு என்பதே!
இதற்கெல்லாம் பதில் சொல்லவில்லை என்றால் அரசியலுக்கே தகுதியில்லை என்பதுதானே பொருள். அரசியலுக்கு தயாராகின்றவர் பதில் சொல்லித்தானே பயிற்சியெடுக்க வேண்டும். அரசியலுக்கே தயாராகாதவர் எப்போது தேர்தல் வந்தாலும் தயார் என்றாரே அது எப்படி? எம்.ஜி.ஆர் ஆட்சி தருவேன் என்றது எப்படி?
மத்திய அரசுக்கு எதிராக கருத்துக் கூறாது நழுவும் கபட பேர்வழியின் தமிழர் விரோத துரோகச் செயலுக்கு துக்ளக் சப்பைக்கட்டு கட்டுவது அயோக்கியத்தனமா? இல்லையா?தமிழரின் ஜீவாதாரப் பிரச்சினைக்கு போராட வராத ரஜினிகாந்த் தமிழக அரசியலுக்கே தகுதியில்லாத தமிழர் துரோகி பா.ஜ.க.வின் கையாள் என்பதுதான் உண்மை!
ஆனால், இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து, தி.மு.க.வுக்க செல்வாக்கு இல்லை. இரஜினிகாந்த்துக்குத்தான் செல்வாக்கு என்பது பித்தலாட்டத்தின் உச்சம் அல்லவா?
காவிரி ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் அமைக்காத மத்திய மோடி அரசின் அநியாயத்தை, அயோக்கியத்தனத்தை கண்டிக்காத துக்ளக், குமுதம், தினமலர் பார்ப்பனர்களுக்கு பத்திரிகை நடத்த என்ன தகுதியுள்ளது. நேர்மை, நியாயம் பற்றி பேச என்ன யோக்கியதை உள்ளது?
தமிழர்களே அவர்கள் திருந்த மாட்டார்கள். அது அவர்கள் இ(ஈ)னபுத்தி! நாம்தான் விழிப்போடு இருந்து அவர்களை வீழ்த்த வேண்டும்! எச்சரிக்கையாய் இருங்கள்! அந்த ஏடுகளை வாங்காது தவிருங்கள்!
====

Sunday, March 25, 2018

பாட்டாளி மக்கள் கட்சியின் பரிணாம வளர்ச்சி பார்ப்பனியத்தை நோக்கிச் செல்கிறது!




- மஞ்சை. வசந்தன்



திண்டிவனத்தின் மருத்துவத் தொழில் செய்துவந்த டாக்டர் இராமதாஸ் அவர்கள், வன்னிய சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் வன்னியர் சங்கம் அமைத்து அதை பல இடங்களிலும் வளர்த்தார்.

அதன்பின் சமுதாய முன்னேற்ற சங்கம் (SSS) என்று ஒர் அமைப்பைக் கூடுதலாக அமைத்து அதை வார்த்தார்.

பூ.தா.அருள்மொழி, பூ.தாஇளங்கோவன் ஆகிய இருவரும் தளகர்த்தர்களாக இருந்து ஊர்ஊராய் அமைப்புகளைக் கட்டமைத்து வளர்த்தனர்.

எம்.ஜி.ஆர் முதல்வராய் இருந்தபோது, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கேட்டு பலப் போராட்டங்களை நடத்தினார்.

சாலை மறியல் போராட்டந்தான் முதன்மையாக இருந்தது. இதனால் துப்பாக்கிச் சூடு எம்.ஜி.ஆர் அரசால் நடத்தப்பட, சில வன்னியர்கள் உயிர் இழந்தனர். இதனால் வன்னியர் வாழும் பகுதிகளில் வன்னியர் சங்கம் விரைவான வளர்ச்சி பெற்றது.

இடஒதுக்கீடு டாக்டர் இராமதாஸ் அவர்களின் முதன்மை இலக்காக இருந்ததால் பெரியாரின் மீது அளப்பறிய பற்று கொண்டு பெரியார் கொள்கையை பின்பற்றினார். பிரச்சாரம் செய்தார்.

நான் எழுதிய அர்த்தமற்ற இந்து மதம், பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை, தமிழா நீ ஒர் இந்துவா?, பார்ப்பனத் தந்திரங்கள் போன்ற நூல்களை என்னிடமே கேட்டு வாங்கி விரும்பிப் படித்தார்.

அவர் நடத்தும் பயிலரங்குகளில் இந்நூல்களை பயிற்சிக்கு வருவோருக்கு வழங்கினார்கள்.
அரசியல்வாதிகளை வெறுத்து தேர்தலைப் புறக்கணித்து சமுதாய இயக்கமாகவே தன் அமைப்பை வளர்த்தார். ஓட்டுப் பொறுக்கிகளே ஊருக்குள் வராதீர்கள் என்று பதாகைகளை ஒவ்வொர் ஊரிலும் வைத்தார். தேர்தல்களைப் புறக்கணித்தார்.
பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்தார். அவரின் கொள்கை முரண்பாடு அங்குதான் தொடங்கியது.

கலைஞரோடும், திராவிடர் கழகத்தோடும் இணக்கமான போக்கில் இருந்து, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தார். கலைஞரின் முயற்சியால் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்க, கலைஞரிடம் அவரின் நெருக்கம் மேலும் அதிகமானது.

கூட்டணி அமைத்ததன் மூலம் மத்திய அமைச்சரவையில் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பிடித்தது (தலித் எழில்மலை மத்திய அமைச்சராக்கப்பட்டார்.)
மக்கள் தொலைக்காட்சி ஆரம்பித்தார். திராவிடர் கழகக் கொள்கைகளை முழுமையாக அத்தொலைக்காட்சி பரப்பியது. பலரும் பாராட்டினர்.

இச்சூழலில், தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்க வரமாட்டார்கள் என்ற உறுதியை மீறி தனது மகன் டாக்டர் அன்புமணி அவர்களை அரசியலுக்குக் கொண்டுவந்தார்.

முதலில் கூட்டணி, எம்.எல்.ஏ., எம்.பி என்ற அளவில் இருந்த அவரது இலக்கு, ஸ்டாலினுக்கு மாற்றாக அன்புமணியை உருவாக்க வேண்டும் என்ற அளவிற்கு மாறியது. அவரது கொள்கைப் பிடிப்பு, தன்னல மறுப்பு எல்லாம் மெல்ல மெல்ல விடைபெற, அன்புமணி வளர தி.மு.க., அ.தி.மு.க. தடையாக உள்ளது என்று முடிவெடுத்து திராவிடத்திற்கு எதிரான ஒரு பிரச்சாரத் திட்டத்தை வகுத்தார்.

அதற்கு பெங்களூர் குணா என்ற ஆரிய பார்ப்பனக் கைக்கூலியை தன் கைக்கூலியாகப் பயன்படுத்தி, திராவிடத்தால் வீழ்ந்தோம்! என்று ஒரு கட்டுரையை பாட்டாளி மக்கள் கட்சி மாநாட்டில் படிக்க ஏற்பாடு செய்தார். ஆனால், அது நூலாகவே வெளியிடப்பட்டது.
திராவிடத்திற்கு எதிரான, பெரியாருக்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய முதல் விதை அதன்மூலம் ஊன்றப்பட்டது. இந்த நூலை பார்ப்பன ஊடகங்கள் விளம்பரப்படுத்தின. இந்த நூலை மறுத்து ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்! என்று நூலை வெளியிட்டேன். குணவிற்கு சவால் விட்டேன். இதுவரை அந்த குணா ஒரு வரிக்குக் கூட மறுப்பு கூறவில்லை.
மக்கள் தொலைக்காட்சி சௌமியா அன்புமணியின் ஆதிக்கத்திற்குச் செல்ல, அது பகுத்தறிவிற்கும் இனமானத்திற்கும் எதிரான கொள்கைகளை பரப்பத் தொடங்கியது.

மருத்துவர் இராமதாஸ் தொடங்கிய திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற பிரச்சாரத்தை, புதிதாக அரசியலுக்கு வரும் எல்லோரும் இப்போது கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
அதேபோல் மருத்துவர் இராமதாஸைப் பின்பற்றி ஒவ்வொரு சாதியினரும் சாதிக் கட்சியை வளர்க்கத் தொடங்கினர்.

பெரியாரால் நொறுக்கப்பட்டு அழிந்த சாதி உணர்வுகள், மெல்ல மெல்ல துளிர்விடத் தொடங்கின.
பாட்டாளி மக்கள் கட்சி என்பது வன்னியர் கட்சி என்பதை மாற்ற பல ஜாதியினரையும் தன் கட்சியில் சேர்த்தார்.
ஆனால், பாட்டாளி சொந்தங்கள் என்று சொல்லி ஜாதி உணர்வைத் தூண்டியும் வருகின்றனர்.

-குடும்ப அரசியல் கூடாது என்றவர், தன் மகன்தான் முதல் அமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்தார். எப்படியாவது அன்புமணியை முதல்வராக்கிட வேண்டும் என்று பல வியூகங்கள் வகுத்து செயல்படுகின்றனர். அதில் முதல் வியூகம் ஸ்டாலின் எதிர்ப்பு. திராவிட எதிர்ப்பு.

இப்படி சமூக நீதிக்கும், பெண்ணுரிமைக்கும் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, சமூக நீதிக்கு எதிரான, பெண்ணுரிமைக்கு எதிரான ஆரிய பார்ப்பனர்களையே கட்சியின் முக்கியப் பொறுப்பில் அமர்த்தும் நிலைக்குச் சென்றுவிட்டது.

விரைவில் அவர்கள் மதவெறிக் கட்சியான பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கவும் செய்வர். ஆக, வளர்ச்சி, திட்டம், நேர்மை, தூய்மை என்று ஒரு பக்கம் பேசிக்கொண்டே, தமிழ் மண்ணுக்கு எதிரான மதவாத சக்திகளுடன் சமூக நீதிக்கு எதிரான சதிகாரர்களுடன் சேர்ந்து, சாதிய உணர்வை மீண்டும் வளர்க்கும் போக்கு இந்த சமுதாயத்திற்கு செய்யும் மாபெரும் துரோகமாகும் என்பதை அவர் உடனே உணர வேண்டும்.

அண்மையில் காஞ்சிபுரத்தில் நடந்த பா.ம.க. கூட்டத்தின் நோட்டீசில் சாதிப் பெயர்களை அச்சிடும் மிக மோசமான ஒரு நடைமுறையை மீண்டும் துவக்கியுள்ளனர். ஆக, பாட்டாளி மக்கள் கட்சி பார்ப்பன வலையில் சிக்கிவிட்டது! பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர் போடக்கூடாது என்ற தமிழகத்தின் சிறப்பான நிலைக்கு எதிராக பெயருக்குப் பின்னாலும் சாதிப் பெயர் போடப்பட்டுள்ளது. இது மிக மோசமான பின் விளைவை உருவாக்கும்! சாதி உணர்வை வளர்க்கும்!

பாட்டாளி மக்கள் கட்சியின் சுயநலத்திற்காக விதைக்கப்பட்ட திராவிட எதிர்ப்புப் பிரச்சாரம் எப்படிப் பார்ப்பனர்களுக்குப் பயன்படுகிறதோ அதேபோல், சாதிய உணர்வுகளை, சாதி அடையாளங்களை அரங்கேற்றும் நடைமுறையும் பார்ப்பன ஆதிக்கத்திற்கே பயன்படும் என்பதை மருத்துவர் இராமதாஸ் அவர்கள் பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும்.

பா.ஜ.க.வில் இஸ்லாமியர் ஒரு சிலரும், கிறித்தவர் ஒரு சிலரும் இருப்பதால் அது மதச்சார்பற்ற கட்சியாகிவிடுமா? இந்து மதவெறி கட்சி என்பதுதானே உண்மை! அப்படித்தான் பாட்டாளி மக்கள் கட்சியில் பல சாதியினரைச் சேர்த்தாலும் அதன் அடித்தளம் மாறிவிடாது! இப்படி சாதிகளைப் போடுவது சாதியை வளர்க்குமே தவிர, சாதிக் கட்சி என்ற பெயரை மாற்ற உதவாது.

அன்புமணி முதல்வராக வர அவர்கள் முயற்சி செய்வதில் நாம் குறுக்கிடவில்லை. ஆனால், திராவிட கட்டமைப்பைப் பலிகொடுத்து, ஆரிய ஆதிக்க எதிர்ப்பை கைவிட்டு, இன எதிரிகளை சமூகநீதிக்கு எதிரான மதவெறியர்களை சேர்த்துக் கொண்டு செயல்படுவது சரியா? இது சமூகத் துரோகம் அல்லவா? இது சமத்துவ சமுதாய மலர்ச்சிக்கு எதிரான செயல் அல்லவா? என்பதை மருத்துவர் இராமதாஸ் அவர்கள் ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வேண்டும்.

ஆரிய ஆதிக்கத்திற்கு எதிராக, சமூகநீதி, சம உரிமை, மத இணக்கம், சாதி ஒழிப்பு இவற்றை இலக்காகக் கொண்டது திராவிடம்.

திராவிடக் கட்சிகளின் செயல்பாடுகள் சரியில்லை என்றால் அக்குறைகள் களையப்பட வேண்டுமே தவிர திராவிடக் கட்டமைப்பு சிதைக்கப்படக் கூடாது. அது சிதைத்தால் ஆரிய ஆதிக்கம் தலைதூக்கும் என்பது பால பாடமல்லவா? அதை மறக்கலாமா?
வேண்டுமானால், பாட்டாளி மக்கள் கட்சியையே சரியான திராவிடக் கொள்கையுடைய கட்சியாக, ஆரிய ஆதிக்கத்திற்கு எதிரான அரசியல் கட்சியாக கட்டமைத்து வளர்ப்பதுதான் சரியான சமூகநீதிச் செயல்பாடாகும்! அதைவிடுத்து ஆரியத்துடன் கைகோர்ப்பது, தானும் கெட்டு, திராவித்தையும் குலைத்த குற்றமாக முடியும்! தமிழ் சமுதாயத்திற்கு செய்யும் துரோகமாகவும் ஆகும்! மருத்துவர் இராமதாஸ் அவர்கள் ஆழமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும்.

ஆரிய ஆதிக்கத்திற்கு, மதவெறிக்கு, சாதி வெறிக்கு எதிரான கொள்கை மட்டுமே தமிழ் மண்ணில் நிலைக்கு, மாறான அணுகுமுறை எதுவாயினும் அது செல்லாது; வெல்லாது!

ஆரிய ஆதிக்கம் ஒழியவும், இன இழிவு நீங்கவும், சாதி, மதம் மாயவும், சமூகநீதி நிலைக்கவும், தழைக்கவும், தமிழ் வளரவும், தமிழர் மேன்மையுறவும், தமிழர் உரிமைகள் காப்பாற்றப்படவும், பா.ஜ.க. எதிர்நிலையும், பார்ப்பன ஆதிக்க எதிர்நிலையும் கட்டாயம். இதை மருத்துவர் இராமதாஸ் அவர்கள் அடித்தளமாகக் கொண்டு செயல்பட வேண்டும். இல்லையெனில் தமிழகத்தின் ஒரு கணிசமான மக்களை தவறான பாதையில் பலி கொடுத்து, பார்ப்பன ஆதிக்கத்திற்குத் துணை நின்ற குற்றமாக அமையும்! மறுபரிசீலனை பலவற்றிலும் தேவை! ஒரு நல்ல தலைவர் ஆரிய பார்ப்பன சூழ்ச்சிக்கு பயன்படக் கூடாது, பலியாகக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இவற்றைச் சொல்ல வேண்டியது கடமை என்பதால் சொல்கிறோம்.

Image may contain: 2 people, people smiling
=============

கடவுள் இல்லை என்று கீழ்க்கண்டவற்றை படித்தால் நீங்களே சொல்வீர்கள்!


- மஞ்சை. வசந்தன்
-===============================
1. உலகத்தை கடவுள் படைத்திருந்தால் உலகில் ஒரிடத்தில் 20 அடியில் தண்ணீர்; இன்னோர் இடத்தில் 60 அடியில் தண்ணீர்; இன்னோர் இடத்தில் 60 அடியில் தண்ணீர்; இன்னோர் இடத்தில் 100 அடியில் தண்ணீர்; சில இடங்களில் 1000 அடியில் தண்ணீர்; இன்னும் சில இடங்களில் எவ்வளவு ஆழம் தோண்டினாலும் தண்ணீரே இல்லை! இப்படி கடவுள் படைக்குமா?
2. வளைகுடா நாடுகளில் மட்டம் எண்ணெய். மற்ற நாடுகளில் இல்லை. கடவுள் படைத்தால் இப்படிப் படைக்குமா?
3. பகலில் எல்லா நாள்களிலும் சூரியன். ஆனால், இரவில் எல்லா நாள்களிலும் வெளிச்சம் தர நிலவு இல்லை. கடவுள் வெளிச்சத்திற்காக இவற்றைப் படைத்திருந்தால் இப்படிப் படைத்திருக்குமா?
4. ஒரு பிள்ளை அழகாக, இன்னொரு பிள்ளை அழகில்லாமல், ஒரு பிள்ளை நொண்டி, இன்னொரு பிள்ளை குருடு. இப்படி பிறக்கும்போதே வேறுபாடாய் கடவுள் படைக்குமா?
5. போன பிறவியில் செய்த வினை என்பது சமாளிப்பு! அந்த போன பிறவியைப் படைத்ததும் கடவுள்தானே. அதில் அவன் சரியாக வாழும்படி படைக்க வேண்டியதுதானே? அனைத்தும் கடவுள் செயல் என்றால் தப்பு செய்வதும் கடவுள் செயல்தானே!
6. அக்காலத்தில் பல நோய்க்கு மருந்து இல்லை; வாகன வசதி, தொலைத்தொடர்பு வசதி எதுவும் இல்லை; இன்று எல்லாம் உள்ளது. எல்லாம் கடவுள் செயல் என்றால் அக்காலத்திலே ஏன் இவற்றை கடவுள் கொடுக்கவில்லை?
7. நிலத்தில் ஒரு இடம் வளப்பம், இன்னொரு இடம் களர், இன்னொரு இடம் வளப்பம் இன்றி இருக்கிறது. கடவுள் படைப்பாயின் இப்படி இருக்குமா?
8. ஒரே அடியில் மழை பெய்து வெள்ளம் அல்லது ஒரேயடியாய் காய்ந்து வறட்சி! திடீரென புயற்காற்று, பூகம்பம், சுனாமி. பல லட்சம் உயிரும், பொருளும் இழப்பு. எல்லாம் கடவுள் செயல் என்றால் இப்படி நடக்குமா?
9. பசு பால் தருகிறது. கொசு ஏன்? கடவுள் படைப்பாயின் கொசுவைப் படைத்து கொடிய நோய்கள் வரக் கடவுள் வழி செய்யுமா?
10. கொடியவர்கள் நலமாகவும், வளமாகவும் வாழ்கிறார்கள். நல்லவர்கள் நோயாலும், வறுமையாலும் வாடுகிறார்கள். இவ்வுலகை கடவுள் இயக்கினால், கண்காணித்தால், பாவ புண்ணியத்துக்கு பலன் தந்தால் இப்படி நடக்காது. எனவே, கடவுள் இல்லை என்பதுதானே உண்மை!
11. இனப்படுகொலை, மதமோதல், கற்பழிப்பு, கொள்ளை ஏராளமாய் நடக்கிறது. இதற்கு எதிராய் கடவுளின் செயல்பாடு ஏதும் இல்லையே! வலியவர் வாழ்கிறார்கள் என்றால் கடவுள் இல்லை என்றுதானே அர்த்தம்.
மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

Sunday, March 11, 2018

ஆரிய பார்ப்பனர்களின் அசல் கையாள் இரஜினிகாந்த் அப்பட்டமாக வெளிப்படும் உண்மைகள்!


ஆரிய பார்ப்பனர்களின் அசல் கையாள் இரஜினிகாந்த்
அப்பட்டமாக வெளிப்படும் உண்மைகள்!

தந்தை பெரியார் தமிழர்கள் விழிப்போடிருக்க ஒரு சுருக்கமான வழியைச் சொல்லியுள்ளார்.
"ஆரிய பார்ப்பனர்கள் எதை எதிர்க்கிறார்களோ அதை தமிழர்கள் ஆதரிக்க வேண்டும்! எதை ஆதரிக்கிறார்களோ அதை எதிர்க்க வேண்டும். அதுதான் தமிழர்க்கு நல்லது!" என்றார்.
இது எல்லாவற்றிலும் முடிவெடுக்க மிகச் சரியாகப் பயன்படும்.
கமலகாசனும், இரஜினிகாந்தும் ஒரே நேரத்தில்தான் அரசியலுக்கு வந்தார்கள். அவர்கள் இனத்தைச் சேர்ந்த கமலகாசனை கடுமையாக எதிர்க்கும் ஆரிய பார்ப்பனர்கள், ரஜினிகாந்தை தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள்! இதுதான் சூட்சமம்!
"துக்ளக்" குருமூர்த்தியிலிருந்து, பா...விற்காக தொலைக்காட்சிகளில் பேசும் கே.டி.ராகவன் வரை எல்லோரும் இரஜினியை ஆதரித்துப் பேசுகிறார்கள்!
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் கல்கி ஏடு,

"வெற்றிடம்
ரஜினி
வெற்றிக்கு இடம்"
என்ற முகப்புக் கட்டுரையே (கவர் ஸ்டோரி)  எழுதியுள்ளது.
ஆக, ஒட்டுமொத்த ஆரிய பார்ப்பனர்களும், அவர்களின் ஏடுகளும் இரஜினிகாந்தை ஆதரிப்பது ஏன்?
இரஜினிகாந்த் அவர்களின் சரியான கையாள் என்பதே அதற்குக் காரணம்.
இது அப்பட்டமான உண்மை என்பதை இரஜினியே ஒப்புதல் வாக்கு மூலம் அளிப்பதைப் போல் இரஜினியின் அண்மைச் செயல்பாடும் அமைந்துள்ளது.
மோடியை ஆதரிப்பது ஏன்? என்று நூல் எழுதியவரை நேரில் அழைத்து இரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
இது வெளிப்படுத்தும் உண்மை என்ன? அவர் பா...வின் கையாள் என்பதைத்தான்!
பா... தமிழகத்தில் நேரடியாக வரமுடியாது என்பதால், இரஜினியை எம்.ஜி.ஆர் வேஷம் போடவைத்து, எம்.ஜி.ஆர் தொண்டர்களை இழுத்துவிடலாம் என்ற பா...வின் திட்டப்படி பா...வின் கையாளாக அரசியலில் களம் இறக்கப்பட்டவர்தான் இரஜினி.
எனவே, பா...வை எதிர்ப்பதைவிடவும், பார்ப்பனர்களை எதிர்ப்பதைவிடவும் கடுமையாக இரஜினிகாந்தை தமிழக மக்கள் எதிர்க்க வேண்டும்.
எம்.ஜி.ஆர் தொண்டர்கள் விழிப்போடு இருந்து இரஜினியின் நயவஞ்சக நாடகத்தை முறியடித்துக் காட்ட வேண்டும்.
.தி.மு..வின் இரஜினியின் எதிர்ப்பை முதன்மைப்படுத்த வேண்டும்.
இரஜினியின் நயவஞ்சக நாடகத்தை அம்பலப்படுத்தும் ஜூனியர் விகடன் கட்டுரை - அனைவரும் படியுங்கள்! பகிருங்கள்!

=========================

ஒரிஜினல் ரஜினியா... டூப்ளிகேட் எம்.ஜி.ஆரா?

- ப.திருமாவேலன்
ந்திரன் ரஜினி இப்போதுஎம்.ஜி.ஆர்ரஜினியாக மாறிவிட்டார். அவரது எம்.ஜி.ஆர் பக்தியைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. இவ்வளவு எம்.ஜி.ஆர் பக்தியை ஏன் அவர் இவ்வளவு நாளும் வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தார் என்பது புரிய வில்லை. அரசியல் ஆசை அவரை எம்.ஜி.ஆர் தொப்பியை அணியத் தூண்டியிருக்கிறது.

‘‘
அரசியல்ல ஜெயிக்கணும்னா திறமை, புத்திசாலித் தனம், உழைப்பு மட்டும் பத்தாது. சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம்... இந்த மூன்றுக்கும் மிகப் பெரிய இடமுண்டு. அரசியலுக்கு நான் வந்திருக்கணும்னா 1996-லயே வந்திருக்கணும். என்னைக் கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது. கட்டாயப் படுத்திக் கல்யாணம் பண்ணினா வாழ்க்கை நல்லாவா இருக்கும்? வரணும்னு நினைச்சா நாளைக்கே ஏற்பாடு பண்ணிடுவேன். ஆனா, அவன் சொல்லணும்என்று 2008-ல் சொன்னார் ரஜினி. இதோ இப்போதுஅவன்சொல்லி விட்டான் போல!
‘‘எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. சினிமாவிலிருந்து அவரைப் போல யாரும் அரசியலில் ஜொலிக்க முடியாது என்கிறார்கள். சத்தியமாக யாரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. அவர் ஒரு யுக புருஷர். பொன்மனச் செம்மல். மக்கள் திலகம். நூறு அல்ல, ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவரைப் போல யாரும் வரமுடியாது. அவரே மீண்டும் பிறந்து வந்தால்தான் உண்டு. எம்.ஜி.ஆரைப் போல ஒருவர் வருகிறேன் என்று சொன்னால், அவனைவிட பைத்தியக்காரன் யாரும் இருக்க முடியாது. ஆனால், அவர் தந்த நல்லாட்சி, ஏழை மக்களுக்கான ஆட்சி, சாமான்ய மக்களுக்கான ஆட்சி, மத்தியஸ்த குடும்பத்தாருக்கான ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டுஎன்று எம்.ஜி.ஆர் சிலைத் திறப்பு விழாவில் சொன்னதன் மூலமாக...

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லைஎன்று முள்ளும் மலரும் படத்தில் கையை விரித்த ரஜினி - ‘ஒரு கட்சியும் வேண்டாம் கொடியும் வேண்டாம்என்று ராஜாதி ராஜாவில் அலட்சியம் காட்டிய ரஜினி - ‘கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்குஎன்று முத்து படத்தில் லந்து காட்டிய ரஜினி - மொத்தப் பாடல்களையும் பொய்யாக்கிபொன்மனச் செம்மல்ஆக முயல்கிறார்.
எம்.ஜி.ஆர் எனக்குச் செய்த உதவிகள்என்று ரஜினிகாந்த் அந்த விழாவில் வெளியிட்ட நிகழ்வுகள் பலருக்கும் புதியவை. அதே எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் நடந்த சில சம்பவங்களை ரஜினி சொல்லவில்லை. ‘காலம் மறந்திருக்கும், நாமும் மறப்போம்என்று நினைத்திருக்கலாம்.
 இப்போது மாதிரி அல்ல, அப்போது ரஜினி. நிஜத்திலும் பாட்ஷா மாதிரி இருந்த காலம் அது. அவர்மீது சென்னை ராயப்பேட்டை காவல்நிலை யத்தில்மூக்குத்திபத்திரிகை ஆசிரியர் ஜெயமணி ஒரு புகார் கொடுத்தார். ‘என்னை ரஜினி மிரட்டினார்என்பதுதான் புகார். இன்ஸ்பெக்டர் சோமசுந்தரமும், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்டினும் இந்தப் புகாரை விசாரித்தார்கள்.  1979-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி ரஜினிகாந்த் கைது செய்யப்பட்டார். ‘ஜெயமணி என்னைத் தாக்கி எழுதினார். காரில் போய்க்கொண்டு இருந்த நான், ரோட்டில் அவரைப் பார்த்தேன். அதுபற்றிக் கேட்க விரும்பி காரைப் பின்பக்கமாகச் செலுத்தினேன்.அவர் செருப்பைக் கழற்றினார். நான் அவரது சட்டையைப் பிடித்தேன்என்று ரஜினி வாக்குமூலம் கொடுத்ததாக அன்றையமாலை முரசுநாளிதழ் செய்தி வெளியிட்டது. அன்று கைது செய்யப்பட்ட ரஜினி, உடனடியாக ஜாமீன் பெற்றார். இதேபோலத்தான் ஹைதராபாத் விமான நிலையத்திலும் ஒரு நிகழ்வு நடந்தது. அந்த ரஜினி இப்போது எவ்வளவோ மாறிவிட்டார். அவரை மாற்றியது, அவர் இப்போது சொல்லி வரும் ஆன்மிகமாகவும் இருக்கலாம்!
ஆன்மிகமும் அவரிடம் பிற்காலத்தில் சேர்ந்ததுதான். ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் (1981 பிப்ரவரி 26) மிகமிக எளிமையாக நடந்தது. அந்த திருமணத்துக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரைத் தான் ரஜினி அழைத்திருந்தார். திருப்பதி கிளம்பிச் செல்வதற்கு முன்னதாக நிருபர்களைத் தனது வீட்டுக்கு வரவழைத்துப் பேசினார் ரஜினி. ‘நீங்கள் யாரும் வர வேண்டாம்என்று கேட்டுக்கொண்டார். அப்போது, ‘‘சிறு வயது முதல் எனக்குச் சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை. திருமணம் என்றால் பல மணி நேரம் மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை நம்பவில்லை. என்ன செய்தாலும் தாலி கட்டுவது, மாலை மாற்றுவது எல்லாம் இரண்டு நிமிடங்களில் முடிந்துவிடும். திருமணத்தில் முக்கியமான சடங்கே இதுதான். இது என் கல்யாணத்திலும் உண்டு. சிக்கனமாகக் கல்யாணம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் போதும்’’ என்று சொன்னார். சடங்கு, சம்பிரதாயங்களில் பெரிய நம்பிக்கை இல்லாத ரஜினிதான், இன்று ஆன்மிக அரசியலுக்குத் தேர் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
‘‘ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்று என்னிடம் கேட்கிறார்கள். உண்மையான, நேர்மையான, வெளிப்படையான சாதி மதச் சார்பற்ற அறவழியில் நடப்பதுதான் ஆன்மிக அரசியல். தூய்மை தான் ஆன்மிகம். எல்லா ஜீவன்களும் ஒன்றுதான். அனைத்துமே பரமாத்மா. இறைநம்பிக்கை இருப்பதுதான் ஆன்மிக அரசியல்’’ என்று ரஜினி சொல்லியிருப்பது எம்.ஜி.ஆர் சொன்னஅண்ணாயிசத்தைவிட அதிகக் குழப்பத்தை உண்டாக்குகிறது.

ரஜினி சொல்லும் உண்மை, நேர்மை, அறவழி, தூய்மை ஆகியவைதான் அரசியலுக்கே அடிப்படையானவை. இவற்றுக்கும் ஆன்மிகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதில் கூடுதலாக ஒரு வார்த்தையைச் சொல்கிறார் ரஜினி. அதாவது, ‘இறை நம்பிக்கை இருப்பதுதான் ஆன்மிக அரசியல்என்கிறார். தமிழ்நாட்டு முதலமைச்சர் நாற்காலியில் இருந்த ஓமந்தூர் ராமசாமி, ஒரு நாளைக்கு ஆறு தடவை இறைவழிபாடு செய்யக் கூடியவர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் பக்தர்தான் பி.எஸ்.குமாரசாமி ராஜா. இராஜாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பக்தி நாடு அறியும். அண்ணாவும் கருணாநிதியும் மட்டும்தான் நாத்திகர்கள்
இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பழுத்த ஆன்மிக வாதி. இன்னும் கட்டப்படாத கோயில் தவிர அனைத்துக்கும் சென்று வந்தவர் .பன்னீர்செல்வம். இதில் என்ன புதிதாகச் சொல்லவருகிறார் ரஜினி?

அவர் சொல்லாமல் விட்டது, பி.ஜே.பி-யின் முதலமைச்சர் வேட்பாளர் தான்தான் என்பதை. ‘நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்என்றால், யாரோடு சேர்ந்து? பி.ஜே.பி-தான் அவரது வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறது. அந்தப் பாதையை முன்கூட்டியே அறிவிப்பது தனக்கு நல்லதல்ல என்று ரஜினி நினைப்பது மட்டுமல்ல, ‘தனக்கும் நல்லதல்லஎன்று பி.ஜே.பி நினைக்கிறது. க்ளைமாக்ஸ் நேரத்தில் அந்த மர்மம் வெளிப்படும். அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடாது என்பதால், முன் கூட்டியே சொல்லப்படுவது தான்ஆன்மிக அரசியல்என்ற முழக்கம்.

பொதுவாகவே மத்திய அரசோடு நட்பில் இருப்பார் ரஜினி. அது எந்த மத்திய அரசாக இருந்தாலும், பகைத்துக்கொள்ள மாட்டார். 1986-ல், ‘ராஜீவ் காந்தி மிகச் சிறந்த அரசியல்வாதிஎன்று பேட்டி அளித்தவர் அவர். அதன்பிறகு 1990-களில் பிரதமராக இருந்த நரசிம்மராவைச் சென்று சந்தித்தவர். பிரதமர் வாஜ்பாயும், துணைப் பிரதமர் அத்வானியும் அவரை அடிக்கடி சந்தித்துள்ளார்கள். இன்றைய பிரதமர் மோடி, அவரது வீட்டுக்கே வந்துள்ளார். ‘சிஸ்டம் சரியில்லை’, ‘அரசியல் வெற்றிடம்என்றெல்லாம் பேச ஆரம்பித்துள்ள ரஜினி, மத்திய சிஸ்டம் பற்றி வாய் திறப்பது இல்லை. பி.ஜே.பி-க்கு எதிரான எதிர்க்கட்சி அந்தஸ்து வெற்றிடம் பற்றியும் அவர் கவலைப்படுவது இல்லை.

இப்போது தமிழ்நாட்டைக் குறிவைக்கும் காரணத்தை அவரே சொல்லிவிட்டார்... ‘ஜெயலலிதா இறந்துவிட்டார், கருணாநிதி உடல்நலமில்லாமல் இருக்கிறார். அதனால்தான் நான் வருகிறேன்என்று. அதற்காகத்தான் ரஜினி, ரஜினியாக இல்லாமல் பி.ஜே.பி ஆசைப்படி எம்.ஜி.ஆராக வருகிறார். இரட்டை இலையை வைத்திருந்தாலும் எடப்பாடியோ பன்னீரோ எம்.ஜி.ஆரின் வாக்குகளை அள்ள முடியாது என்பதை பி.ஜே.பி தலைமை உணர்ந்துள்ளது. அதனால்தான் எந்த வேஷம் போட்டாலும் பொருந்தக்கூடிய சூப்பர் ஸ்டாரை அழைத்து வருகிறார்கள். சொந்த முகமாக இல்லாமல் இரவல் முகமாக இருப்பதுதான் இடிக்கிறது. ஏனென்றால், பல டூப்ளிகேட் எம்.ஜி.ஆர்களைத் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துச் சலித்து விட்டார்கள்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவதும், அவர்களை அழைத்து வருவதும் தமிழ்நாட்டுக்குப் புதுசு அல்ல. அதில் நின்று நிலைத்தவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு யாருமில்லை. 1984 - 1989 காலகட்டத்தில் என்ன நடந்ததோ, அதுதான் இப்போதும் நடக்கிறது. ‘பாக்யராஜ் என் வாரிசுஎன்று எம்.ஜி.ஆர் அறிவித்ததும், தி.மு.-வில் டி.ராஜேந்தர் சேர்ந்ததும் ஒரே ஆண்டில்தான் நடந்தது. அதே ஆண்டில்தான் தீவிரமாக .தி.மு.-வில் செயல்படத் தொடங்கினார் ஜெயலலிதா. ‘‘எம்.ஜி.ஆருக்கு அடுத்து எனக்குத்தான் அதிக செல்வாக்கு இருக்கிறது என்று ரசிகர்கள் கடிதம் எழுதுகிறார்கள்’’ என வெளிப்படையாகவே சில்க் பேட்டி அளித்தார். ‘காக்கி சட்டைபட வெற்றி விழாவை மதுரையில் நடத்த கமல் வெளியில் கிளம்பினார். காங்கிரஸ் கட்சியிலிருந்து சிவாஜி விலகினார். தமிழக முன்னேற்ற முன்னணி தொடங்கினார். ஜானகியும் அரசியலுக்கு வந்தார். முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதாவைச் சந்தித்து ராமராஜன், .தி.மு.-வில் தன்னை இணைத்துக் கொண்டார். இதுபோலவே இப்போது நடக்கிறது... ரஜினி, கமல் என்று.

ரஜினியைச் சூழ்நிலையும் நெருக்கடியும் சேர்ந்து உள்ளே தள்ளிவிடுகின்றன. நெருக்கடி என்பது ஏற்கெனவே சொன்ன பி.ஜே.பி நெருக்கடிகள். சூழ்நிலை என்பது கமல் உருவாக்கியது. அவர்கள் இருவரும் நண்பர்களாகக்கூட இருக்கலாம். ஆனால், அவர்களைச் சமூகம் நண்பர்களாகப் பார்க்கவில்லை. இருக்க விடுவதும் இல்லை; விடப்போவதும் இல்லை. திரையில் இருந்த போட்டி இதோ அரசியலிலும். ‘ரஜினி வந்துவிடுவார்என்பதே கமலின் அவசரத்துக்கான தூண்டுதல்.கமலே வந்து விட்டாரேஎன்பதுதான் ரஜினியின் வேகத்துக்கான தூண்டுதல். ‘‘இதற்கு மேலும் வராமல் இருந்தால், பயந்து விட்டேன் என்பார்கள்என்று சொல்கிறாராம் ரஜினி. அவரது பயத்தை பி.ஜே.பி பயன்படுத்திக் கொள்ளப் போகிறது.
1986-ம் ஆண்டு ஓர் ஆங்கில இதழுக்கு பேட்டி கொடுத் திருந்தார் ரஜினி. சினிமாவில் நடிப்பதை விட கண்டக்டர் வாழ்க்கைதான் தனக்கு அதிகம் பிடித்தது என்று ரஜினி அப்போது சொன்னார். ‘‘நீங்கள் சினிமா துறையில் நீண்ட நாள் நிலைத்து நிற்க விரும்பவில்லையா?’’ என்று கேட்டபோது, ‘‘நிச்சயமாக ஒரு சினிமாக்காரனாகச் சாவதை நான் விரும்பவில்லை. மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன்’’ என்று சொன்னார். ‘‘அப்படியானால் அரசியலில் இறங்குவீர்களா?’’ என்று கேட்டபோது ரஜினி மறுத்தார்.

‘‘
அரசியலா? அது ஒரு குப்பைமேடு. நெருப்பில் குதிப்பதற்குச் சமமானது. என்னை ஒரு அரசியல்வாதியாக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’’ என்று சொல்லி விட்டு ஓர் அதிர்ச்சி தரும் வாசகத்தைச் சொன்னார் ரஜினி. அதை அவரால் மட்டும்தான் திருப்பிச் சொல்ல முடியும்!
திருமாவேலன் அவர்களுக்கும் ஜூனியர் விகடன் இதழுக்கும் நன்றி!