அரசியல்

Wednesday, October 14, 2015

மோடி ஆட்சியின் முகத்தில் உமிழ்ந்து, வீசியெறிந்த விருதுகள்!



 பாசிச வேரைப் பறித்தெறியும்!

 அறிவாளர் சீற்றம் ஆட்சியை அகற்றும்!.......................................

 கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் செயல் பா.ஜா.க. ஆட்சியில் பட்டவர்த்தனமாக நடக்கிறது. பெரும்பான்மை கிடைத்துவிட்டதால் மத்திய அரசும், அவர்களின் பரிவாரங்களும் பாசிசப் போக்கைத் தீவிரப்படுத்தியுள்ளன.

 நாட்டுமக்களின் அன்றாட வாழ்க்கைச் செயல்பாட்டில் கூட வலிய மூக்கை நுழைக்கு வக்கிரம் நாள்தோறும் நடக்கிறது.

 • நாங்கள் சொல்லும் கடவுளையே வணங்க வேண்டும்.
• நாங்கள் சொல்லும் மொழியில் தான் படிக்க வேண்டும்.
• நாங்கள் சொல்லும் கலாச்சாரத்தையே ஏற்க வேண்டும்.
• நாங்கள் சொல்லும் ஆடையையே அணிய வேண்டும்.
• நாங்கள் சொல்வதையே சாப்பிட வேண்டும்.
• நாங்கள் சொல்லும் வரலாற்றையே ஏற்க வேண்டும்.
• பகுத்தறிவு பேசினால் படுகொலை செய்வோம். ஆதிக்கத்தை எதிர்த்தால் அடித்துக் கொல்வோம். எதிராக எழுதினால் குதறி ஒழிப்போம்.

 என்று மதவெறி கூட்டம் மார்தட்டி புறப்பட்டுள்ளது.
மோடியின் ஆட்சி வேடிக்கைப்பார்கிறது.

 எழுத்தாளர்கள் எரிமலையாய் எதிர்த்து எழுந்து தங்கள் விருதுகளை வீசியெறிந்துள்ளனர். இது ஆதிக்க ஆட்சியை அகற்றிடும் ஆதிக்கத்தை வேரறுக்கும். விருதை வெறுத்து வீசிய செயல் மோடி அரசின் முகத்தில் உமிழ்ந்த செயல் ஆகும் இதன் பின்னும் திருந்தாமல் போனால் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் அது இந்த ஆட்சியை முடிக்கும்!

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan

No comments:

Post a Comment