அரசியல்

Friday, October 30, 2015

மாரடைப்பைத் தடுக்கும் மருதம்பட்டைப் பொடி!

மாரடைப்பைத் தடுக்கும் மருதம்பட்டைப் பொடி!
இலட்சக்கணக்கான ரூபாய் செலவில் பைபாஸ் அறுவை சிகிச்சை, ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சையை தவிர்க்க இளமை முதலே இதைச் செய்யுங்கள்!
---------------------------------------------------------------------
மேற்கண்ட சிகிச்சைகளுக்கு இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே காரணம்.
இரத்தக் குழாயில் கொழுப்பு சேராமல், அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் மருதம்பட்டைப் பொடிக்கு உள்ளது. அதேபோல் இதயத்தை வலுவோட வைக்கும் ஆற்றல் வெண்தாமரைப் பூவின் பொடிக்கு உள்ளது.
இதற்கான செலவும் அதிகம் இல்லை. மாதம் ரூபாய் 200 (இருநூறு) செலவிட்டால் போதும்.
சித்தா மருந்து கடைகளில் மருதம் பட்டைச் சூரணம், வெண்தாமரைப் பொடி இரண்டும் கிடைக்கும். டப்பாக்களில் அடைத்து வைத்திருப்பர். ஒரு டப்பா 100 ரூபாய்தான். ஒரு மாதத்திற்கு வரும்.
2 கிராம் அளவிற்கு ஒவ்வொரு பொடியையும் எடுத்து, வெந்நீர் அல்லது பாலில் கலந்து காலை, இரவு உணவுக்குப் பின் பருகினால் இரத்தக் குழாய் அடைப்பு வராது. அடைப்பு இருப்பின் நீங்கும். காலை உணவுக்கு முன் ஒரு துண்டு இஞ்சியும், மதியம் சாப்பாட்டிற்குப் பின் இரண்டு பூண்டு பல்லையும் நீருடன் கலந்து மென்று விழுங்க வேண்டும்.
தினம் இரு வாழைப்பழம் (சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவும்) காலை உணவுக்குப் பின் ஒன்றும், மதிய உணவுக்குப் பின் ஒன்றும் சாப்பிடவும். 20 வயது முதற்கொண்டு இதைச் செய்தால் மேற்கண்ட அறுவை சிகிச்சையைத் தவிர்க்கலாம், மாரடைப்பையும் தடுக்கலாம்.
துரித உணவு, கொழுப்பு உணவு, பாக்கட் உணவுகளைத் தவிர்த்து, காய்கறி, கீரை, பழங்கள், நமது கிராமத்து பலகாரங்களைச் சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படுவதை, திடீர் மரணம் அடைவதைத் தவிர்க்கலாம்.
எல்லோரும் பின்பற்றுங்கள்!
இதய நோயை தடுத்திடுங்கள்!
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
படியுங்கள்! மற்றவருக்கு பகிருங்கள்!

No comments:

Post a Comment