அரசியல்

Monday, January 1, 2018

அபாண்ட பழிபோட்டே தி.மு.க.வை ஆட்சிக்கு வராமல் தடுக்கும் ஆரியப் பார்ப்பனக் கூட்டம்!

அபாண்ட பழிபோட்டே தி.மு.க.வை ஆட்சிக்கு வராமல் தடுக்கும் ஆரியப் பார்ப்பனக் கூட்டம்!
===============
2ஜி வழக்கில் தப்பான தகவல் தந்த தலைமைக் கணக்காளர், ஆராயாமல் வழக்குப் போட்ட சிபிஐ, கயவர்களாய் நடந்து கொண்ட அதிகாரிகள் அனைவரின் அயோக்கியத் தனங்கள், மோசடிகள் அம்பலம்.
தி இந்து தமிழ் நாளேடு தலையங்கத்தில் கண்டனம் தெரிவித்திருப்பதே இதற்குச் சான்று!
"இந்த வழக்குக்கு வெளியே எழும் கேள்விகளில் முக்கியமானது, இப்படியான மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீட்டை எப்படித் தலைமைக் கணக்காயர் தெரிவித்தார்; என்ன விதமான நம்பகத்தன்மையை நம்முடைய தலைமைக் கணக்காயர் அலுவலகம் கொண்டிருக்கிறது? என்பதாகும்.
அடுத்ததாக, விசாரணை அமைப்புகள் என்ன அடிப்படையில் இயங்குகின்றன என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது. ஏனென்றால், பொதுக் கண்ணோட்டமும், கணக்குத் தணிக்கை அறிக்கைகளும் குற்றவியல் விசாரணைகளுக்கு அடிப்படையாக இருக்க முடியாது.
விசாரணை அமைப்புகள் வழக்கு தொடுப்பதற்கு முன்னர், தங்களிடம் இருக்கும் தரவுகளை முழுமையாக அலசி ஆராய வேண்டும் என்பது இந்தத் தீர்ப்பின் வழியே தெள்ளத் தெளிவாக உணர்த்தப்படுகிறது.
மிகையான மதிப்பீடு என்பது ஒருபுறம் இருக்க வழக்கை நடத்துவதில் விசாரணை அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து நீதிபதி தெரிவித்திருக்கும் கருத்துகள் சிபிஐ மீதான பிம்பத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. முறைகேடு நடந்ததா, இல்லையா என்ற கேள்விக்கும் தீர்ப்புக்கும் அப்பாற்பட்டு கணக்காயர் தெரிவித்த மதிப்பீட்டை எவ்விதக் கேள்விக்கும் உள்ளாக்காமல் ஊதிப் பெருக்கி, பெரும் அழுத்தத்தைச் சமூகத்தில் உண்டாக்கிய வகையில், ஊடகங்களும் மக்கள் முன் கை கட்டி நிற்க வேண்டிய சூழலை இந்த வழக்கு உண்டாக்கியிருக்கிறது. மொத்தத்தில் ஒவ்வொரு தரப்பிலிருந்தும் சுயஆய்வு செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தன்னுடைய தீர்ப்பிலிருந்து உருவாக்கியிருக்கிறார் நீதிபதி ஷைனி!" -( ஆதாரம்: "தி இந்து" 29-12-2017)
தமிழர்களே! எச்சரிக்கையாய் விழிப்பாய் இருங்கள்.
தற்போதுள்ள நிலையில் தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே தமிழர்க்குப் பாதுகாப்பு!
ஆரியப் பார்ப்பனச் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், சிந்தித்து செயல்படுங்கள்!
தேர்தல் நெருங்க நெருங்க தி.மு.க.வை வீழ்த்த ஆரியப் பார்ப்பனக் கூட்டம் இன்னும் பல தந்திரங்களைக் கையாளும்.
ஏமாந்து விடாதீர்கள்!
தமிழர்களின் உண்மையான பாதுகாவலன் தி.மு.க. என்று ஆரியர்கள் நினைப்பதால்தான் அதை அழிக்க முயற்சிமேல் முயற்சி எடுக்கிறார்கள்.
எனவே, நாம் தி.மு.கவைக் காப்பாற்ற வேண்டும். ஆட்சியில் அமர்த்த வேண்டும். தி.மு.க. தப்பு செய்யாது நாம் கண்காணிக்க வேண்டும்; தப்பைத் தடுக்க வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறை! அதுவே தமிழர்க்கு நலம் தரும்!
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment