அரசியல்

Wednesday, January 3, 2018

அயோக்கியத்தனங்களின் அச்சுவடிவம் துக்ளக் வார இதழ்!



- மஞ்சை வசந்தன்




===========================




இது இந்த வார (10.01.2018) துக்ளக் இதழின் அட்டைப் படம்!
Image may contain: 3 people




ஆரிய பார்ப்பனர்கள் எவ்வளவு அயோக்கியர்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.




பித்தலாட்டம், மோசடி, திரித்துப் பேசுதல், மாற்றிப் பேசுதல், இல்லாததை இருப்பதாகப் பேசுதல், தனக்கொரு நீதி, பிறர்க்கொரு நீதி சொல்லுதல் அவர்களின் வழக்கம். அதுவே அவர்களின் வாழ்விற்கு மூலதனம்!




இரஜினி அரசியலுக்கு வருவது பற்றி செய்தியாளர்கள் தி.க. தலைவர் கி.வீரமணி அவர்களைக் கேட்கிறார்கள். அதற்குப் பதில் அளித்த கி.வீரமணி அவர்கள்,




"இது பெரியார் பூமி-பகுத்தறிவு பூமி-திராவிட இயக்க மண் - இந்த மண்ணில் அந்த அடிப்படைக் கொள்கைக்கு விரோதமாக யாராக இருந்தாலும் வேரூன்ற முடியாது" என்றார்.




இந்தப் பதிலை எப்படிப் புரட்டி, திரித்து, பித்தலாட்டமாக எழுதியுள்ளனர் பாருங்கள்!




"ஆன்மிகம், நேர்மை, ஒழுக்கத்துக்கு இங்கே இடமில்லை. இது பெரியார் மண்" என்று எழுதியுள்ளனர்.




நேர்மை, ஒழுக்கம் கூடாது என்று பெரியார் சொல்லியுள்ளாரா? அல்லது ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சொல்லியுள்ளாரா? எந்த அடிப்படையில் இப்படி எழுதினர்? யோக்கியதை இருந்தால் நாணயமாகப் பதில் சொல்ல வேண்டும்!




பெரியார் இயக்கம் என்றாலே நேர்மை, ஒழுக்கம், நாணயம், கட்டுப்பாடு, தொண்டு, தன்னலமறுப்பு, மானவுணர்வு, சம்த்துவம், ஆதிக்க ஒழிப்பு, சாதி ஒழிப்பு போன்றவற்றின் நிலைக்கலன் என்று பெயர். மனித நேயத்தின் மறு பெயர் பெரியாரியம்! 




அப்படியிருக்க,




நேர்மை, ஒழுக்கம் வேண்டாம் என்று ஆசிரியர் கி.வீரமணி சொல்வதாய் எழுதுகிறார் என்றால் இவர்களுக்கு நேர்மை, ஒழுக்கம் பற்றி பேச, எழுத என்ன யோக்கியதை உள்ளது?




அதை அச்சுப் போட்டு வேறு விற்கிறார்கள்! இந்த பிழைப்பு பிழைப்பதற்கு உங்கள் வழக்கமான தொழிலைச் செய்து பிழைக்கலாமே! எத்தனை முறை சவுக்கடி வாங்கினாலும் தார் குத்தினாலும் சொரணை கெட்ட தடித்த தோல்களுக்கு உரியவர்கள் என்பதால், பித்தலாட்டத்தை அவர்கள் கைவிடுவதேயில்லை.




அவர்கள் புத்தி, யுக்தி மாறாது! தமிழர்கள்தான் விழிப்போடிருந்து ஆரிய பார்ப்பன பித்தலாட்டத்தை அடித்து நொறுக்க வேண்டும்!




அவர்கள் அகராதியில் ஒழுக்கம் உண்டா? நேர்மை உண்டா? நாணயம் உண்டா? நியாயம் உண்டா?


அவர்கள் மனுதர்மத்தையும், பகவத் கீதையையும், புராணங்களையும் படித்தாலே அவர்கள் வண்டவாளம் புரியுமே!




காஞ்சிபுரத்து சங்கராச்சாரி மீதான கொலை குற்றவழக்கு தள்ளுபடியானால் கொண்டாடுவார்கள், 2ஜி வழக்கு தள்ளுபடியானால் அப்பீலில் தண்டனை உறுதி என்று அட்டைப் படம் போடுவார்கள்!


என்னடா யோக்கியதை இது? இவர்களெல்லாம் நீதி, நேர்மை பற்றி எழுதுகிறார்கள்?




இரஜினி அரசியலுக்க வருவதால் ஸ்டாலின் அதிர்ந்து போய் நிற்கிறாராம்!

 எப்படிப்பட்ட பித்தலாட்டப் பிரச்சாரம் இது.


இந்த இரஜினியல்ல, உங்கள் மோடியே இந்த தமிழகத்திற்கு வந்தாலும் இங்கு எதுவும் நடக்காது! 




நப்பாசை கொண்டு நாக்கை நீட்ட வேண்டாம்!


====

No comments:

Post a Comment