அரசியல்

Wednesday, January 3, 2018

முகநூல் நண்பர்களுக்கு...


இரஜினி அரசியல் வருகை பற்றி நான் முகநூலில் எழுதியதைப் படித்து சிலர் சீமானையும், அன்புமணியையும் மாற்றுத் தலைவர்களாகச் சொல்கிறீர்கள், திருமாவளவனுக்கு அத்தகுதியில்லையா என்று கேட்டுள்ளனர்.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தங்களை முன்னிறுத்தக்கூடிய, கூட்டணி அமைக்காத தலைவராய் இரஜினி வர விரும்புவதால், அதே வகையில் செயல்படக் கூடியவர்களைச் சுட்டிக்காட்டினேன். 

திருமா 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி என்றோ, திராவிடத்திற்கு மாற்று என்றோ சொல்லக்கூடியவர்கள் அல்ல. அவர் யதார்த்தமான, சுயநலமற்ற அரசியல் தலைவர். "தான்தான்" என்று அவர் என்றுமே கூறிக் கொள்ளாதவர்.
மேலும், என்னுடைய பதிவில் நேர்மையான, தூய்மையான, ஆற்றலுள்ள தகுதியான தமிழர் தலைவர்கள் தமிழகத்தில் பலர் உள்ளனர் என்று சொல்லியதை சரியாகப் படித்தால் இந்த விமர்சனம் வராது. அவர்களில் திருமாவளவன், வைகோ போன்றவர்கள் அடக்கம்! என்பதை விமர்சிக்கக் கூடியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

என்னுடைய முகநூல் நட்பு வட்டத்தில் சில அயோக்கியர்கள் நுழைந்து பதிவிடுகின்றனர். 

அவர்கள் நீக்கப்படுவர். நண்பர்கள் அவர்களிடம் விழிப்போடு இருங்கள்!

No comments:

Post a Comment