அரசியல்

Thursday, January 18, 2018

உனக்கு மனம் புண்படும் என்பதால் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா?


- மஞ்சை வசந்தன்
ஒருவனோடு இருப்பவளுக்குத்தான் பத்தினி என்று பெயர். ஒருவனுக்கு மேல் உடலுறவு கொள்பவள் பத்தினியல்ல. அப்படியிருக்க அய்ந்து பேரோடு உறவு கொண்ட பாஞ்சாலியை பத்தினி என்று நீ சொன்னால் நாங்கள் ஏற்க முடியுமா?
உனக்கு மனம் புண்படுகிறது என்பதற்காக நாங்கள் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா?
திருப்பதியில் இருப்பது முருகன் சிலை. அதன் முகத்தில் நாமத்தைப் போட்டு வெங்கடாசலபதியாக்கினர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தாதாசாரி அவர்கள்கூட திருப்பதிசாமி மோசடிசாமி என்கிறார்.
உங்கள் மனம் புண்படுகிறது என்பதற்காக உண்மைகளைச் சொல்லாமல் இருக்க முடியுமா?
இந்து மதத்தில் உனக்குள்ள உரிமை எங்களுக்கும் உண்டு! முடிந்தால் ஆதாரத்தோடு மறு! அதை விட்டுவிட்டு அடாவடித்தனம் செய்வது எப்படிச் சரியாகும்?

No comments:

Post a Comment