அரசியல்

Tuesday, February 2, 2016

உடலுறவு முடிந்ததும் பெண் உட்காரக் கூடாது


 குழந்தை வேண்டும் என்று விரும்பும் பெண்கள் உடலுறவு முடிந்ததும் எழுந்து உட்காரவோ, நடக்கவோ கூடாது. உடலுறவின்போது ஆணின் விந்து பெண்ணுறுப்பில் செலுத்தப்பட்டதும், விந்துவிலுள்ள அணுக்கள் கருப்பையில் உள்ள சினைமுட்டையுடன் சேர போட்டியிட்டு ஓடும். ஓடி ஏதாவது ஒன்று சேர்ந்தால்தான் ஆண்குழந்தை அல்லது பெண்குழந்தை உருவாகும்.
அவை விரைந்து ஓட வேண்டும் என்றால், பெண் உடலுறவு முடிந்த பின் மல்லாந்து படுத்திருக்கும் அதே நிலையில் 20 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும்.

 உடனே எழுந்து உட்கார்ந்தால், விந்தணுவின் விரைவான ஓட்டம் தடைபட்டு, கருத் தரிப்பது நிகழாமல் போகும். இதைப் பெண்கள் கருத்தில் கொண்டு செயல்பட வெண்டும்.

 மாதவிலக்கு வந்த 12-ஆம் நாளிலிருந்து 15 ஆம் நாள் வரை நான்கு நாள்கள் தினம் உடலுறவு கொண்டால் கட்டாயம் கருத்தரிக்கும். இதை அறியாது இந்த நாள்களில் உடலுறவு கொள்ளாது போனால் கரு உருவாகாது. மற்ற நாள்களில் கொள்ளும் உடலுறவு உடல் சுகத்துக்கு மட்டுமே உதவும்.

#‎செய்யக்_கூடாதவை‬ :

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment