அரசியல்

Wednesday, February 24, 2016

பார்ப்பானைப் பார்த்தாவது பாடம் கற்போம் - 3


- மஞ்சை வசந்தன்

தங்கள் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ள ஆரிய பார்ப்பனர்கள் எந்த அயோக்கியச் செயலையும் செய்வர் என்பதற்கு துக்ளக் ‘சோ’வே சான்று.

தி.மு.க. ஆட்சிக்கு வரவேக் கூடாது என்பதற்கும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்கான காரணங்களைப் பட்டியல் இடமுடியுமா? என்று சோவிடம் கேட்ட கேள்விக்கு,

“தி.மு.க. ஆட்சியில் கண்ட அனுபவம் போதும் என்பது மக்களின் நினைப்பு. தி-.மு.க. வரக்கூடாது என்பதற்கு அதுதான் காரணம். அதற்கு அ.தி.மு.க.வே மேல் என்பதற்கும் அதேதான் காரணம்’’ என்று துக்ளக் சோ பதில் அளித்துள்ளார்.

இதைவிட அயோக்கியத்தனம் உண்டா?

மக்கள் என்றால் அக்ராஹரத்து ஆட்கள் என்று பொருளா?

தி.மு.க.வின் ஆட்சியின் கேடுகளை விட அ.தி.மு.க. ஆட்சியில் பலமடங்கு அதிகம் என்பதே மக்களின் கருத்து. ஊழல் புள்ளி விவரங்களும் அதையேச் சொல்கின்றன. அந்த உண்மையை அப்படியே மறைத்து, மாற்றி கொஞ்சங்கூட நியாயம், நேர்மை, நாணயம் இன்றி பதில் அளித்துள்ளார்.

 அதே துக்ளக் இதழில் மற்றொருவர்,

”சதவிகிதப்படி பதில் சொல்லுங்கள். அ.தி.மு.க அரசின் நிறை,குறை எவ்வளவு?” என்று கேள்விக் கேட்டதற்கு,

”கேள்விகளை சதவிகிதப்படி பார்த்தால் உங்கள் கேள்வி மிகவும் பின்னால் வருகிறது. அதனால் சதவிகிதப்படி அதற்குரிய பதிலைத் தர இயலவில்லை. என்று பதிலளித்துள்ளார். இதை விட ஓர் அயோக்கியத்தனமான பதிலை உலகத்திலேயே பார்க்க முடியுமா?

துக்ளக்கில் சோ செய்யும் வேலையை, தினமணியில் அவர் சீடர் வைத்தியநாதன் செய்கிறார்.

ஆரிய பார்ப்பானுக்க உள்ள உணர்வு தமிழனுக்கு வரவேண்டும்!

ஆதாரம் : துக்ளக் 02-03-2016

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment