அரசியல்

Tuesday, February 2, 2016

ஆதிசங்கரரைக் கொன்றதும் ஆரிய பார்ப்பனர்களே !

அப்பரை, நந்தனாரை வள்ளலாரை, காந்தியாரைக் கொன்றது மட்டுமல்ல ஆதிசங்கர்ரைக் கொன்றதும் ஆரிய பார்ப்பனர்களே!
- பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரை

 ஆதி சங்கராச்சாரி இறுதியாக எழுதியது “மனோசாப்பஞ்சகம்” என்பது. அது அய்ந்து சுலோகங்கள் அடங்கியது.

 அதில் ஒரு சுலோகம் கடவுள் இல்லை என்பது. கடவுளை எதிர்ப்பது.
இரண்டாவது சுலோகம் மதச்சின்னங்கள் அணிவதைத் தவறு என்பது.
மூன்றாவது உருவ வணக்கத்தை தவறு என்பது
நான்காவது சாதிகளை எதிர்ப்பது

 ஆக, பெரியார் கொள்கை, காரல்மார்க்ஸ் கொள்கைகளை ஆதிசங்கரரே சொல்லிவிட்டார். விட்டு வைப்பார்களா ஆரிய பார்ப்பனர்கள்.
ஆதிசங்கராச்சாரியை அவரது 32ஆவது வயதில், உயிரோடு, உட்கார்ந்த நிலையில் புதைத்து சமாதி கட்டினர். அவரது சமாதி காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உள்ளது.

 (சென்னையில் பகுத்தறிவாளர் கழகப்பொதுக்கூட்டத்தில் 05.06.1983 இல் பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார் ஆற்றிய உரையில் இவ்வுண்மையை வெளியிட்டார்).

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment