அரசியல்

Wednesday, December 20, 2017

இராஜா, கனிமொழி விடுதலை அபாண்ட பழிபோட்ட ஆரிய பார்ப்பனர்களே, ஏற்பட்ட இழப்புகளுக்கு என்ன பதில் சொல்வீர்!

2.ஜி. வழக்கில் தீர்ப்பு!
இராஜா, கனிமொழி விடுதலை
அபாண்ட பழிபோட்ட ஆரிய பார்ப்பனர்களே,
ஏற்பட்ட இழப்புகளுக்கு என்ன பதில் சொல்வீர்!

- மஞ்சை வசந்தன்

நாட்டு மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் செல்பேசி இணைப்பு கிடைக்கச் செய்த இராஜாவை, பதவி இழக்கச் செய்து, அவரையும் கனிமொழியையும் சிறையில் அடைத்து உங்கள் வஞ்சக ஆசைகளை தீர்த்துக்கொண்ட ஆரிய பார்ப்பனர்களே, அதைத் தினம் தினம் மென்று தின்று அசைபோட்ட ஆரிய பார்ப்பன ஊடகங்களே! இதுவரை இராஜா, கனிமொழி தி.மு.க. அடைந்த இழப்பு உளச்சல்களுக்கு என்ன பதில் சொல்வீர்?

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் இந்த அபாண்ட பழியைப் பேசி தி.மு.க.வை தோற்கடித்தீர்களே! இப்போது குற்றவாளிகள் அல்ல என்று தீர்ப்பு வந்துவிட்டது! உங்களால்அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு என்ன பதில் சொல்வீர்? சூடு சொரணையிருந்தால் பதில் சொல்லுங்கள்!

ஆரிய நரிகளே, ஆர்.எஸ்.எஸ். ஆரிய பார்ப்பன கூட்டமே இனி உங்களுக்கு அடுத்தடுத்து தோல்விதான். குஜராத்தில் வெற்றி பெற்றதால் குதிக்காதீர். அங்கே நீங்கள் அடைந்திருப்பது படுதோல்வி! ஆரிய ஆதிக்கம் விரைவில் வீழும்!
இராஜா, கனிமொழி இருவரின் நீதிப் போராட்டத்திறகும், உள்ள உறுதிக்கும் நமது பாராட்டுகள்!

இதே உறுதியுடன் பி.ஜேபியை ஆரிய ஆதிக்கத்தை தி.மு.க. வீழ்த்த உறுதிகொள்ள வேண்டும். திமுக.வினர் ஆர்த்து எழவேண்டும்!

#குறிப்பு: இது பற்றிய விரிவான செய்திகள் நாளை எனது முகநூலிலும், பிளாக்ஸ்பாட்டிலும் காணுங்கள்.

No comments:

Post a Comment