அரசியல்

Sunday, October 15, 2017

நிலவேம்புக் குடிநீரை 3 மணி நேரத்திற்குள் பருகிவிட வேண்டும்

நிலவேம்புக் குடிநீரை 3 மணி நேரத்திற்குள் பருகிவிட வேண்டும்.
 காலம் தாழ்த்தி பல மணி நேரம் கழித்துப் பயன்படுத்தக் கூடாது!
1. 9710105678
2. 9710205678
என்ற எண்களுக்கு “மிஸ்டு கால்” கொடுத்தால் நம் வீட்டிற்கே நிலவேம்புச் சூரணம் வந்து சேரும். இம்மருந்தை 50% தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது “இம்ப்காப்ஸ்”. 100 கிராம் நிலவேம்புக் குடிநீர் சூரணம் ரூ.213. 50% தள்ளுபடியில் ரூ.106க்குத் தரப்படுகிறது.
நிலவேம்புக் குடிநீர் எப்படி தயாரிப்பது?
இரண்டு ஸ்பூன் நிலவேம்புச் சூரணத்தை இரண்டு டம்ளர் தண்ணீரில் கலக்கி, அடுப்பில் இளஞ்சூட்டில் (சிம்மில் சூடேற்றி) ½ டம்ளராகச் சுண்டிய பின் அதைப் பருக வேண்டும்.
பருக வேண்டிய அளவு
ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கக் கூடாது.
3 முதல் 12 வயது - 15 மில்லி
பெரியவர்கள் - 50 மில்லி
காலை, மாலை இருவேளை 5 நாள்களுக்குக் குடிக்க வேண்டும்.
வயிற்றுப் புண் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி நடக்க வேண்டும்.

No comments:

Post a Comment