அரசியல்

Thursday, December 14, 2017

ஆரியப் பார்ப்பனர்களின் அநியாயம் பாரீர்!


ஆரியப் பார்ப்பனர்கள் தங்களுக்கு உரியது என்றால் அதற்காக எதையும் செய்வர் என்பதற்கு இதோ ஓர் ஆதாரம்.

சமஸ்கிருதம் அவர்கள் மொழி. அதை இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர்கூடப் பேசவில்லை. வழக்கொழிந்த செத்த மொழி. ஆனால், அதைத்தான் இந்தியாவிற்கே ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்கின்றனர்.

அதைப் பரப்ப கோடிக்கணக்கில் செலவிடுகின்றனர். ஆனால், படிக்க யாரும் முன்வருவதில்லை. அப்படியிருந்தாலும் அதை விடாப்பிடியாக வீண் செலவு செய்து பரப்பத் துடிக்கின்றனர்.

அநியாயம் பாரீர்!

ஆந்திராவில் விஜயநகரத்தின் மையப் பகுதியில் “மகாராஜா சமஸ்கிருதக் கல்லூரி’’ உள்ளது. இது திருப்பதி தேவஸ்தான வேதிக் பல்கலைக்கழகத்தில் இணைந்தது.

இந்தக் கல்லூரியில் சமஸ்கிருதம் படிக்கும் மாணவர் ஒரே ஒருவர்தான்.
ஒரு மாணவருக்காக ஒரு கல்லூரி, அதற்கு ஒரு முதல்வர் (Principal), ஒரு அலுவலக ஊழியர், ஒரு கடைநிலை ஊழியர்.

ஒரு மாணவன் சமஸ்கிருதம் படிக்க ஒரு கல்லூரி! லட்சக்கணக்கில் செலவு!
ஆனால், கிராமப்புரங்களில் ஏழைப் பிள்ளைகள் நூற்றுக்கணக்கில் படிக்கும் பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை! கட்டடம் இல்லாமல் மரத்தடியில் மண் தரையில் படிக்கிறார்கள்! ஆரியப் பார்ப்பான் ஆதிக்கம் எங்கே என்று கேட்கும்

“அதிமேதாவிகள்’ இதை அறியட்டும்! சூடு சொரணை பெறட்டும்!

படித்துப் பகிருங்கள்!

#ஆதாரம் : THE HINDU
Date ; 13-12-2017

- மஞ்சை வசந்தன்

No comments:

Post a Comment