அரசியல்

Thursday, September 24, 2015

குருதிக் கொடையும் உடற்கொடையும் பிழைக்க மட்டுமல்ல பேதம் அகற்றவும்!

குருதிக் கொடையும் உடற்கொடையும்
பிழைக்க மட்டுமல்ல பேதம் அகற்றவும்!
இது தொண்டல்ல புரட்சி!.................


 உலகில் பல தொண்டு அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் குருதிக் கொடை மற்றும் உடற்கொடை செய்வதை ஊக்கப்படுத்தி உதவிவருகின்றன. இது மனிதநேயத்தின் மலர்ச்சியால், உயிர் காக்கும் முயற்சியால் செய்யப்படும் தொண்டாகும்.

 ஆனால், மக்களிடையே சாத்,மத,பேதம் ஒழிக்க எண்ணுகின்றவர்கள், குருதிக் கொடையையும், உடற்கொடையையும் உயிர் பிழைக்கச்செய்யும் உதவியாக மட்டும் எண்ணாமல், இந்த இரண்டையும் ஜாதி, மத பேத ஒழிப்பிற்கான சரியான கருவியாகவும் கையாள வேண்டும்.

 ஆம். ஒரு தாழ்த்தப்பட்டவனின் இரத்தம் பார்ப்பனர் ஒருவருக்கு ஏற்றப்படும் போது, தாழ்த்தப்பட்டவன் இரத்தமும் பார்ப்பனர் இரத்தமும் ஒன்று கலக்கின்றன. ஓர் அருந்ததியர் உடலுறுப்பை ரெட்டியாருக்குப் பொருத்தும் போது அங்கு இரு ஜாதியும் ஒன்று கலந்து இரண்டும் ஒன்றாகிறது.

 ஜாதி மதபேத ஒழிப்பிற்கு இதைவிடச் சரியான வழி வேறொன்று இல்லை என்பதால் இவை எந்த அளவிற்குச் செய்யப்படுகின்றனவோ அந்த அளவிற்கு ஜாதி, மத ஒழிப்பு சாத்தியமாகிறது.

 எனவே, இப்புரட்சியில் அனைவரும் பங்களிக்கும் வகையில் ஒவ்வொருவரும் உடற்கொடையையும் குருதிக் கொடையையும் அளித்து, ஜாதிமத பேதமற்ற சமத்துவ சமுதாயம் அமைக்கத்துணை நிற்க வேண்டுகிறோம்.

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

https://www.facebook.com/manjaivasanthan

படியுங்கள்! அனைவருக்கும் பகிருங்கள்!

No comments:

Post a Comment