அரசியல்

Thursday, September 24, 2015

பி.ஜே.பி. ஆட்சிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் எச்சரிக்கை.


 

 இப்படியே இந்த மதவாத பா.ஜ.க. ஆட்சி செயல்பட்டால் வெடித்துச்சிதறும் என்று எச்சரிக்கிறார் பிரகாஷ்ராஜ்.

 மக்கள் விருப்பங்களுக்கு எதிராய் மத்திய அரசு தடைவிதிப்பது மக்களின் உரிமைக்கு எதிரானது!

 பி.ஜே.பி. ஆட்சிபெற்றுள்ள பெருபான்மையும், மோடியின் கவர்ச்சிச் செல்வாக்கும் நீர்க்குமமிழி போன்றது. அது ஓர் சூழலால் ஏற்பட்ட, விளம்பரத்தால் மக்கள் எதிர்பார்ப்பால், மாற்றம் வேண்டும் என்ற வேட்கையால் ஏற்பட்ட பெருக்கம் பெரும்பான்மை.

 தொடர்ந்து மக்கள் உணர்வுகளுக்கு எதிராய் மதவாதத் திணிப்பு மேற்கொண்டால் அது வெடித்துச் சிதறிவிடும் என்று பொங்கியெழுந்துள்ளார்.
ஓட்டுப் போட்ட மக்களுக்கு இதுதான் பரிசா? கோபத்தோடு கேட்கிறார்.
இறைச்சிக்குத்தடை;

 வயது வந்தவர்கள் படங்களுக்குத் தடை,

திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினி நடிக்கத்தடை....

 இப்படியே போனால் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும். ஓட்டுப் போட்டவர்களின் உணர்வு

 மதிக்கப்படவில்லையென்றால் போலியான இச்செல்வாக்கு சிதறிப்போகும்!” என்று பிரகாஷ்ராஜ் எச்சரித்துள்ளார்.

 ஒவ்வொரு நடிகரும் இதைச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு முக்கிய மனிதர்களும் சொல்ல வேண்டும். மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து குரல் கொடுக்கும் பிரகாஷ்ராஜ் அவர்களைப் பாராட்டுகிறோம்!

 மக்கள் உணர்வுகளை மதிக்கும் பிரகாஷ்ராஜ் அவர்களைப் பலரும் பின்பற்றி ஆதரவு தெரிவிக்க வேண்டும், மதவாத அரசை எச்சரிக்க வேண்டும்!

 மக்கள் தங்கள் உணர்வுகளை, எதிர்ப்புகளை வெளிபடுத்தினால் தான் மதவாத அரசும் மதவெறியர்களும் அடங்குவர்!

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment