அரசியல்

Friday, September 4, 2015

ஓராண்டிலே ஒழிந்தது மோடியின் மோகம்



 காங்கிரஸ் 10 ஆண்டுகள் கழித்துதான் மக்கள் செல்வாக்கை இழந்தது. ஆனால் மோடி ஓராண்டில் அறவே தன் செல்வாக்கை இழந்தார்.

 “மோடி யென்றால் மோசடி” என்று இளைஞர்கள் வெறுப்பின் விரக்தியின் உச்சத்தில் உரையாடிச் செல்வது காதில் விழுகிறது.

 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குற்றச்சாட்டு, லலித்மோடி பிரச்சினை வியாபம் ஊழல் என்று ஒவ்வொன்றாய் வந்துகொண்டிருக்கிறது. ஊர் அறிந்த ஊழல்களை உச்சநீதிமன்றம் வரைச் சென்று காப்பாற்றுகின்றனர்.

 நீதிமன்ற தலையீடு வெளிப்படையாகவே நடக்கிறது. வியாபம் ஊழல் மட்டும் 2 லட்சம் கோடி ரூபாய். அது இது பா.ஜ.க ஆட்சியின் ஊழல். அது மட்டுமல்ல. 50 உயிர்களையும் இவ்வூழல் காவு கொண்டுள்ளது.

 இப்படி ஊழல்கள் பற்றி ஒரு பட்டியலே உள்ளது. அதை விவரமாக பின்னர் தெரிந்து கொள்ளலாம்.

 10 ஆண்டுகளில் மன்மோகன்சிங் அயல்நாட்டுப் பயணத்திற்கு செலவிட்டது 650 கோடி ரூபாய் ஆனால் ஓராண்டில் மோடி செலவிட்டது 317 கோடி ரூபாய். புரிந்து கொள்ளுங்கள்.

 வளர்ச்சி வரவில்லை. இவர்கள் மதவாதப் போக்கால் கிளர்ச்சிதான் வந்த வண்ணம் உள்ளன!

 - மஞ்சை வசந்தன். https://www.facebook.com/manjaivasanthan

No comments:

Post a Comment