அரசியல்

Thursday, September 24, 2015

எது இந்தியப்பண்பாடு?



 இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை கூறுவதுதான் இந்தியப் பண்பாடாம்.
இந்தப் பண்பாட்டைப் பரப்ப பள்ளிக் கல்லூரிகளில் பகவத்கீதை, இராமாயணம், மகாபாரத கட்டாயப் பாடமாகும்.

 இவற்றை இஸ்லாமிய, கிருத்துவ மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டுமாம்.

மதவெறிபிடித்த மத்திய அரசு இவ்வாறு கூறுகிறது!

 கணவன் இல்லாது குந்தி பிள்ளைகள் பெற்றாள்! அய்ந்து ஆண்களுக்கு ஒரே மனைவி பாஞ்சாலி! மகாபாரதம் கூறும் இதுதான் இந்தியப்பண்பாடா?
ஜாதித் தொழிலையே செய்யவேண்டும்! கொலை செய்யத் தயங்காதே, கொலை செய்யப்பட்டால் புதுப்பிறவி கிடைக்கும் அதற்காய் மகிழ் என்கிறது பகவத்கீதை இது தான் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நீதியா?
தங்கை சீதையை மணந்தான் இராமன் இதுதான் பண்பாடா?

 தம்பி இலட்சுமணனோடு ஓரினப்புணர்ச்சி செய்தான் இராமன் இதுதான் கலாச்சாரமா?

 இந்தக் கலாச்சாரத்தை பள்ளிக் கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டுமா?

 இஸ்லாமிய மாணவர்களும், கிறித்தவர்களும் இவற்றைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்பது அயோக்கியத்தனம் இல்லையா?

 மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்! அது மதவாத ஆட்சியை முடிக்கும்!
எச்சரிக்கை!

 மாணவர்களுக்கு பண்பாட்டை போதிக்க வேண்டும் என்றால் அதற்கு பாடமாக வைக்க வேண்டிய ஒரே நூல் திருக்குறல் மட்டுமே.
நேர்மையான அரசாக இருந்தால் திருக்குறளை கட்டாய மாக்க வேண்டும் அதை விட்டு இந்த நூல்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பது மதவெறி இல்லாமல் வேறென்ன

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment