அரசியல்

Friday, June 17, 2016

பிள்ளைகள் கேள்விகளுக்குப் பெரியவர்கள் பதில் சொல்ல மறுக்கக் கூடாது:


பிள்ளைகள் குழந்தை நிலையிலிருந்து மாறி வரும்போது வினா எழுப்பிக் கொண்டிருப்பார்கள். அதனால்தான் அப்பருவம் வினவத் தெரிந்த பருவம் என்று அழைக்கப்படுகிறது.
அப்போது அவர்கள் கேட்கும் கேள்விக்கெல்லாம் பொறுமையாக, சரியாக விளக்கம் அளித்தால் பிள்ளைகள் அறிவோடும், விழிப்போடும், விவரம் தெரிந்தவர்களாகவும் வளர்வர்.
தங்களுக்குத் தெரியவில்லை என்றால் தெரிந்து வந்து சொல்ல வேண்டும். மாறாக, அவர்கள் அடுத்தடுத்து கேள்விக் கேட்கும்போது, கடுப்பாகி, அவர்கள் ஆர்வத்தைத் தடுக்கக் கூடாது.
எந்த அளவிற்குப் பிள்ளைகள் கேள்விகள் எழுப்புகின்றார்களோ, எந்த அளவிற்கு நாம் சரியான பதில் சொல்கிறோமோ அந்த அளவிற்கு அவர்கள் வாழ்வில் உயர்வர், சிறப்பர்.

No comments:

Post a Comment