அரசியல்

Friday, June 17, 2016

பிள்ளைகளை விளையாட தடை செய்யக்கூடாது....


பிள்ளைப் பருவம் என்பதே துள்ளித் திரிந்து விளையாடும் பருவம் ஆகும். எனவே, அவர்களை நன்றாக விருப்பப்படி விளையாட அனுமதித்து, படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கச் செய்ய வேண்டும். விளையாடினால் படிப்புக் கெடும் என்று எண்ணி அவர்களை முடக்குவது அவர்களின் உடல்நலத்தை, உள நலத்தைப் பாதிக்கும். விளையாடினால் படிப்பு பாதிக்கும் என்பது அறியாமை.
நன்றாக விளையாடுவதால் படிப்பு எவ்வகையிலும் பாதிக்காது. எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருப்பதும் தவறு. எப்பொழுதும் படித்துக் கொண்டிருப்பதும் தவறு. விளையாடும் நேரத்தில் விளையாட அனுமதிக்க வேண்டும்; படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கச் செய்ய வேண்டும். சிறு பிள்ளைகளாயின் நம் கண்காணிப்பில் விளையாடச் செய்ய வெண்டும்.

No comments:

Post a Comment