அரசியல்

Tuesday, February 20, 2018

உங்களுக்குத் தெரியுமா? இதோ ஓர் உன்னதத் தமிழர்!


Image may contain: 2 people, people standing, mountain, sky, ocean, beard, outdoor, nature and water
============================
மேட்டூர் அணை கட்ட அரிய பணி செய்த அத்தமிழர் வறுமையில் வாடுகிறார்!
அவருக்குக்கூட உதவாத தமிழக அரசு!
தமிழ்நாட்டின் மிகப் பெரிய அணையாக திகழ்கிறது மேட்டூர். சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த அணையை நம்பித்தான் காவிரி டெல்டா மாவட்ட விவசாயமே உள்ளது.
மேட்டூர் அணை ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கட்டப்பட்டாலும் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் நமது தமிழர்கள்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
மேட்டூர் அணை கட்டி முடிக்கப் பெரும் பங்காற்றியவர்களில் ஒருவர் ஆங்கிலப் பொறியாளர் எல்லீஸ். இவருக்கு மேட்டூர் அணை கட்ட பலர் உதவியாளர்களாக இருந்தாலும் பொறியாளர் எல்லீசுக்கு பெரும் உதவியாளராக விளங்கியவர் பி.ஆர்.கண்ணப்பன். இவர் தற்போது ஈரோடு பெரியார் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.
105 வயதை எட்டியுள்ள அவர் மேட்டூர் அணைக்கான அஸ்திவாரம் அமைக்கும் பணி தொடங்கியதில் இருந்து அணை கட்டி முடிக்கும் வரை தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
அணை கட்டி முடிக்கப்பட்டு 1943 ஆம் ஆண்டு திறப்பு விழாவின் போது சிறப்பாக அணை கட்டப் பணியாற்றிய கண்ணப்பனுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புனல் மின் நிலையத்தில் பணி புரிய பணி நியமன ஆணையையும் பொறியாளர் எல்லீஸ் வழங்கியிருக்கிறார். இந்நிலையில் கடந்த 21.11.2012 ஆம் ஆண்டு கண்ணப்பன் தனது 100 ஆவது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினார். தற்போது வயது 105.
ஆங்கிலேயர் காலத்தில் உதவியாளராகப் பணியில்
சேர்ந்த ஒரே காரணத்திற்காக அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய எந்தப் பணிப் பலன்களும் இதுவரை அவருக்கு வழங்கப்படவில்லை.
பணியில் இருந்த போது 1947 ஆம் ஆண்டு ஈரோடு பெரியார் நகர் பகுதியில் தான் வசிப்பதற்காக வாங்கிய வீட்டை இப்போது விற்று பெரியார் நகரிலேயே வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
கண்ணப்பன் கூறுகையில், “ தற்போது 105 வயதாகும் நான் போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறேன். மேட்டூர் அணை கட்டப் பாடுபட்ட எனக்கு சொந்த வீடு கூட இல்லை. அரசிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு அரசு சார்பில் ஏதாவது உதவி செய்தால் என் கடைசி காலத்தை இப்படியே ஓட்டி விடுவேன்’’ என்றார்.
இப்படிப்பட்ட தமிழர்களை மறந்த இன்றைய தமிழர்கள், நடிகர்களை தலைவனாகக் கொண்டாடுவது அவலம் அவமானம்!
தமிழர்க்கு உழைத்துவரும் தகுதியான தமிழர்களைப் போற்றுங்கள் தலைவராகக் கொள்ளுங்கள். அதுதான் தமிழன் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியைத் தரும்.
தமிழர்கள் குறிப்பாக அயல்நாடுகளில் வேலையில் உள்ள தமிழர்கள் இவருக்கு உதவி அவர் ஏக்கத்தைப் போக்கலாம்.
"பி.ஆர்.கண்ணப்பன், பெரியார் நகர், ஈரோடு"
என்ற முகவரிக்கு காசோலை அனுப்பலாம்!
அவருடைய வங்கி எண் :
P.R.KANNAPPAN.
K. DHANAM
IOB PERIYAR NAGAR
CODE 0834
A/C NO : 083401000021592
IFSC : IOBA0000834

No comments:

Post a Comment