அரசியல்

Tuesday, February 20, 2018

கமல்ஹாசனும் இரஜினிகாந்தும் மின்னலைக் கண்டு விதை விதைக்கிறார்கள்!

21.02.2018


மின்னலைக் கண்டு விதை விதைக்காதே!" என்று
கிராமத்திலே ஒரு பழமொழி உண்டு.

மின்னல் பலமாக மின்னியதும் மழை வந்துவிட்டதாக எண்ணி விதை விதைப்பது எவ்வளவு பெரிய அறியாமையோ அவ்வளவு பெரிய அறியாமை கமலகாசனும் இரஜினிகாந்தும் சினிமா செல்வாக்கை நம்பி அரசியலுக்கு வருவது, கட்சி ஆரம்பிப்பது!

இவர்களின் ஆர்ப்பாட்டங்கள் அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகளுக்கு தீனி போடலாம்; அவர்களும் தூக்கிப் பிடித்துப் பிழைக்கலாம். ஆனால், தமிழக மக்கள் மிகச் சரியாக முடிவு எடுப்பார்கள்!

இவர்கள் உண்மையில் தமிழர்களுக்கானவர்கள், தமிழர்களின் நலத்துக்கானவர்கள் என்றால், கடந்த 20 ஆண்டுகளாக மக்களுக்காகப் பாடுபட்டிருக்க வேண்டும். ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.

இப்போது சூழலைப் பயன்படுத்தி பதவிக்கு வரத் துடிக்கிறார்கள்!

அப்பாவித் தமிழர்கள் இதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.


===

No comments:

Post a Comment