அரசியல்

Tuesday, March 1, 2016

மு.க.ஸ்டாலின் வாழ்க!

வாரிசாக வந்ததால் உயர்வு பெற்றவர் அல்ல நீங்கள். உழைத்து உழைத்தே உயர்வை எட்டியுள்ளீர்கள்! கலைஞரின் பிள்ளை என்பது உங்களுக்குச் சிறப்பு. ஆனால், அதனடிப்படையில் உங்கள் உயர்வு அமைந்தது என்று அற்பர்களைத் தவிர எவரும் கூறமாட்டார்கள்.
உங்களுக்குக்கிடைத்துள்ள வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது! கிடைத்ததை மிகச்சரியாக, எச்சரிக்கையாக, விழிப்போடு, கொள்கை நெறியில் பயன்படுத்த வேண்டிய சரியான தருணம் இது.
மக்களுடனான உங்கள் சந்திப்பு சாதனை; இயக்கத்தின் ஆதரவுபெருக பெரிதும் உதவிய சரியான செயல்.
எதிரியை விமர்சிக்க செலவிடுவதைத் தவிர்த்து, கலைஞர் சாதனைகளை இன்றைய இளைஞர்களுக்கு பளிச்சென்று நறுக்காகச் சொல்ல வேண்டியது கட்டாயம். உடனடியாகச் சொல்ல வேண்டும்.
ஈழத்தமிழர்களுக்காக கலைஞர் இழந்த இழப்புகளைச் சுருங்கக் கூற வேண்டும். செய்ய இருக்கும் சாதனைகளைப் பட்டியல் இடவேண்டும். தேர்தல் அறிக்கையில்...
அ.தி.மு.க அரசின் மீதான வெறுப்பை உங்களுக்குச் சாதகமாய் பயன் படுத்துவதில் தான் இத்தேர்தல் வெற்றி உள்ளது. எனவே, மக்கள் வெறுக்கும் படியான எதையும் செய்யக்கூடாது.
தந்தை பெரியார், அண்ணா கொள்கைகளில் உறுதிவேண்டும். எதிரிகள் சூழ்ச்சி எண்ணெய் ஊற்றுவர். வழுக்கிவிடக்கூடாது. திராவிடர் கொள்கைகளை மீண்டும் இளைஞர்களுக்கு பரவலாகக் கொண்டு சேர்க்க வேண்டும் அது தான் உங்களை நிலை நிறுத்தும்.
எதிர் காலத்தில் எந்த குற்றச் சாட்டுக்கும் ஆளாகாது ஊழலற்ற மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சிக்கு வழி வகுக்கும் மதுக்கடைகள் இல்லா செயல்பாட்டில்தான் உங்கள் எதிர்காலம், திமுகாவின் எதிர்காலம் இரண்டுமே உள்ளது. இந்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே இப்போது உங்கள் தலையாய பணியாகும்.
வாழ்வித்து வாழ்க!

No comments:

Post a Comment