அரசியல்

Tuesday, March 22, 2016

மரபணுவை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்


உடல் நலத்துக்கும் இரும்பு சத்து மிக அவசியம்.
உடலில் ஆக்சிஜனை எடுத்துச் செல்வதில் இதன் பங்கு மிகவும் முக்கியமானது. எனவேதான், இரும்பு சத்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் உட்கொள்கின்றனர்.
ஆனால், இவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அண்மையில் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ரத்த சோகை ஏற்பட்டு சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உருவாகிறது.
அனைத்துக்கும் மேலாக மிக முக்கியமான மரபணு (டி.என்.ஏ) மூலக்கூறுகள் பாதிப்படைகிறது. இத்தகவல் இங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, இரும்புச் சத்து மாத்திரைகளை கவனமுடன் சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உண்மையில் எந்த ஒரு சத்துப் பொருளையும் அதன் இயல்பான வடிவத்தில் இயற்கை வழியில் உணவுகள் மூலமாக உட்கொள்வதே நலத்தைத் தரும்.
சத்தான இயற்கை உணவுப் பொருட்களை உட்கொள்வதே போதுமானது. அதைத்தான் உடல் எளிதாக, பக்க விளைவுகள் இன்றி ஏற்றுக்கொள்ளும். உடல் வலிவும் பொலிவும் பெறும்.

No comments:

Post a Comment