அரசியல்

Friday, November 6, 2015

பெண்களே எச்சரிக்கை! எல்லோரும் இதைத் தெரிந்து கொள்வது கட்டாயம்!

இதோ ஓர் எச்சரிக்கைச் செய்தி!
மயக்கிச்சீரழிக்கும் மாத்திரை!
பெண்களே எச்சரிக்கை!

எல்லோரும் இதைத் தெரிந்து கொள்வது கட்டாயம்!
---------------------------------------------
R எழுத்தில் தொடங்கி L எழுத்தில் முடியும் 8 எழுத்துக்களைக் கொண்ட மாத்திரை காமுகர்களின் கை ஆயுதமாய் விற்பனைக்கு வந்துள்ளது.

 இந்த மாத்திரையை, பாலிலோ, பழச்சாற்றிலோ கலந்து கொடுத்துவிட்டால், அதைப் பருகுகின்றவர்களின் மூளை தன் செயல்பாட்டைக் குறைத்துக் கொள்ளும்.பருகியவர்களை எதிர்த்துப் போராட இயலாதவர்களாக்கிவிடும். அந்த நிலையைப் பயன்படுத்தி, ஆண் தன் காமவெறியைத் தினித்துக் கொள்கிறான்.

 இந்த மாத்திரையை உட்கொண்ட பெண் கருவுறமாட்டாள். அவளது ரத்தத்திலும் இந்த மாத்திரையின் தன்மை வெளிப்படாது.
தான் சீரழிக்கப்பட்டதை அவளால் உணர முடிந்தாலும் அதை டி.என்.ஏ. சோதனை மூலம் கண்டறிய இயலாது.

 எனவே, இப்படி ஒரு மாத்திரை இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெண்ணும் அறிந்துவைத்திருக்க வேண்டும். மற்றப் பெண்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.

 ஆண்களோடு பழகும் போது எச்சரிக்கை வேண்டும். விருந்து, கேளிக்கையென்று கலந்து கொள்ளும் போது பானங்கள் பருகுவதைத் தவிர்க்க வேண்டும், சந்தேகம் எழும் சூழலில் கொடுத்தாலும் பருகுவதை பக்குவமாய் தவிர்க்க வேண்டும்.

 இரவு நேரங்களில் தனியே கார், ஆட்டோவில் செல்ல நேர்ந்தால், அதை வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரிவித்துவிட வேண்டும். இது அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். கார், ஆட்டோ ஓட்டுவோர் மோசடியில் ஈடுபட அஞ்சுவர்.

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan
படியுங்கள்! மற்றவருக்கும் பகிருங்கள்!

No comments:

Post a Comment