அரசியல்

Tuesday, March 27, 2018

கோயங்கா குமாஸ்தா குருமூர்த்தியின் துக்ளக் ஏடு



ஆரிய பார்ப்பன அயோக்கியத்தனத்தின் அசல் வடிவம் (அச்சுவடிவம்) தமிழர்களே எச்சரிக்கை!
(நாகரிகமாகப் பேசுவது, எழுதுவது, கருத்துத் தெரிவிப்பது என்பது என்னைப் போன்றோர் கடைபிடிக்கும் கொள்கையாயினும், சில நேரங்களில் சில கடுஞ்சொற்கள் கட்டாயமாகிவிடுகிறது.
நோயின் கடுமைக்கு ஏற்ப மாத்திரையின் அளவு மாறுவதுபோல, கட்டாயம் ஏற்படும்போது அறுவையும், அதிர்ச்சியும் சிகிச்சையில் கட்டாயமாவது போல சிலருக்கு பதில் சொல்லும்போது கடுஞ்சொற்கள் கட்டாயமே!
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன் என்ற பெரியாரின் கடுஞ்சொல் கூட நாகரிகத்திற்குள் அடங்குவதே)
04.04.2018 துக்ளக் ஏட்டை பார்த்தவுடனே எப்படிப்பட்ட பண்பட்ட உள்ளமும் சீற்றம் கொள்ளும்!
அயோக்கியத்தனத்திற்கும் ஓர் அளவு உண்டு. அதையும் தாண்டிய அயோக்கியத்தனங்களை அச்சேற்றி வருவதே துக்ளக். அதுவும் கோயங்கா குமாஸ்தா எஸ்.குருமூர்த்தி வந்தபின் வரம்பும் இல்லை; வாய்மையும் இல்லை.
எப்படியாவது தாங்கள் நினைப்பதை சாதிக்க வேண்டும்! அதற்கு எந்தப் பித்தலாட்டமும், மோசடியும், மொள்ளமாறி வேலையும் செய்யலாம் என்பதே ஆரிய பார்ப்பனர்களின் பரம்பரை அணுகுமுறை!
தி.மு.க. மண்டல மாநாடு மாபெரும் வெற்றி! மக்களின் ஆதரவு எதிர்பார்த்ததைவிட ஏராளம். இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆரிய பார்ப்பனர்களால்!
அதற்கு துக்ளக் போட்டுள்ள அட்டைப் படம் இது?
தி.மு.க.வில் ஸ்டாலின் தலைமைக்கு வருவது வாரிசு அரசியல் என்று அயோக்கியன்கூட சொல்லமாட்டான். காரணம், அடிமட்டத் தொண்டனாய் தொடங்கி, மிசா கொடுமைகளை எல்லாம் அனுபவித்து, பல்வேற அனுபவங்களைப் பெற்று, குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் 50 ஆண்டுகள் அரசியலில் அல்லும் பகலும் அயராது உழைத்து மேல்நிலைக்க வந்தவர் ஸ்டாலின். அப்படியிருக்க மகன், மருமகன் என்று தொடர்புப்படுத்துவது அசல் அயோக்கியத்தன்ம அல்லவா?

சங்கரமடத்துக்கு ஒரு பார்ப்பான் மட்டுமே தலைமைக்கு வருகிற நிலை. அதை இந்த அயோக்கிய சிகாமணிகள் கேள்வி கேட்டது உண்டா?
துக்ளக்குக்கூட ஒரு பார்ப்பான் போனால் இன்னொரு பார்ப்பான்தானே ஆசிரியராய் வருகிற நிலை!
உண்மை இப்படியிருக்க அவர்களுக்கெல்லாம் பத்திரிகை நடத்த என்ன யோக்கியதை உள்ளது?
வெற்றிடம், வெற்றிடம் என்று இல்லாத ஒன்றை இருப்பதாய்க் கூறுவது அயோக்கியத்தனத்தின் முதல் நிலையாகும்!
சென்ற தேர்தலில் 89 இடங்கள் வெற்றி பெற்று ஜெயலலிதாவுக்கு இணையாக வாக்குகள் வாங்கிக் காட்டிய ஸ்டாலின் திறமையை, தகுதியை மறைத்து வெற்றிடம் என்பது மோசடிப் பிரச்சாரம் அல்லவா?
ஆர்.கே.நகர் தேர்தலை வைத்து தி.மு.க. செல்வாக்கு இழந்ததாய்ச் சொல்வது பித்தலாட்டம் அல்லவா? அங்கு முழுக்க முழுக்க பணம் மட்டுமே வாக்குகளைத் தீர்மானித்தது. தமிழ்நாடு முழுக்க மக்கள் மனநிலை தி.மு.க.விற்கே ஆதரவு என்பது சராசரி அரசியல்வாதிக்கே தெரியும்!
வரலாற்றுச் சிறப்புமிக்க 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே மறைத்துவிட்டு அவதூறு பரப்புவது நாணயமா?
பெண்கள் அர்ச்சகராக வேண்டும் என்ற திருமாவளவ்ன கோரிக்கை பற்றி துக்ளக்கிடம் கேட்ட கேள்விக்கு துக்ளக் பதில் என்ன தெரியுமா?
கடவுளை ஏற்காதவர்களுக்கு யார் அர்ச்சகராக வேண்டும் என்று கூறும் உரிமை இல்லை என்பதே பதில்.
இது அயோக்கியத்தனமான பதிலா இல்லையா? கோரிக்கை வைப்பவர் யார் என்பதா இங்கு முக்கியம்?
பெண் அர்ச்சகராகலாமா? வேண்டாமா? என்பதற்குத்தானே பதில் சொல்ல வேண்டும். அதை அப்படியே மழுப்பிவிட்டு திசை திருப்புவது தில்லுமுல்லு பித்தலாட்டம் அல்லவா?
காவிரி விவகாரம் போல பல விஷயங்கள் குறித்து ரஜினி பதில் கூற மறுக்கிறார். அது சரியா என்ற கேள்விக்க துக்ளக் பதில் என்ன தெரியுமா?
அரசியலுக்க தன்னை தயார் செய்பவர் எல்லாம் தெரியும் என்பதுபோல் பதில் சொல்லக் கூடாதாம்! பதில் சொன்னால் தப்பு என்பதே!
இதற்கெல்லாம் பதில் சொல்லவில்லை என்றால் அரசியலுக்கே தகுதியில்லை என்பதுதானே பொருள். அரசியலுக்கு தயாராகின்றவர் பதில் சொல்லித்தானே பயிற்சியெடுக்க வேண்டும். அரசியலுக்கே தயாராகாதவர் எப்போது தேர்தல் வந்தாலும் தயார் என்றாரே அது எப்படி? எம்.ஜி.ஆர் ஆட்சி தருவேன் என்றது எப்படி?
மத்திய அரசுக்கு எதிராக கருத்துக் கூறாது நழுவும் கபட பேர்வழியின் தமிழர் விரோத துரோகச் செயலுக்கு துக்ளக் சப்பைக்கட்டு கட்டுவது அயோக்கியத்தனமா? இல்லையா?தமிழரின் ஜீவாதாரப் பிரச்சினைக்கு போராட வராத ரஜினிகாந்த் தமிழக அரசியலுக்கே தகுதியில்லாத தமிழர் துரோகி பா.ஜ.க.வின் கையாள் என்பதுதான் உண்மை!
ஆனால், இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து, தி.மு.க.வுக்க செல்வாக்கு இல்லை. இரஜினிகாந்த்துக்குத்தான் செல்வாக்கு என்பது பித்தலாட்டத்தின் உச்சம் அல்லவா?
காவிரி ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் அமைக்காத மத்திய மோடி அரசின் அநியாயத்தை, அயோக்கியத்தனத்தை கண்டிக்காத துக்ளக், குமுதம், தினமலர் பார்ப்பனர்களுக்கு பத்திரிகை நடத்த என்ன தகுதியுள்ளது. நேர்மை, நியாயம் பற்றி பேச என்ன யோக்கியதை உள்ளது?
தமிழர்களே அவர்கள் திருந்த மாட்டார்கள். அது அவர்கள் இ(ஈ)னபுத்தி! நாம்தான் விழிப்போடு இருந்து அவர்களை வீழ்த்த வேண்டும்! எச்சரிக்கையாய் இருங்கள்! அந்த ஏடுகளை வாங்காது தவிருங்கள்!
====

No comments:

Post a Comment