அரசியல்

Tuesday, September 12, 2017

துரோகம் புரியும் கிருஷ்ணசாமிதான் ‘துக்ளக்’கின் பாராட்டுக்குரியவர்!


திருமாவளவன் தாழ்த்தப்பட்டோரின் எதிரியாம், ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காகச் செயல்படுகிறாராம். கம்யூனிஸ்டுகள், மற்ற உரிமை காப்பு, மீட்பு அமைப்புகள் எல்லாம் தேசத் துரோகிகளாம்.

துக்ளக்குருமூர்த்தியின் கூட்டம்தான் தியாகத்தின் திருஉருவங்களாம்!

இந்த நவீன உலகத்தில்கூட எவ்வளவு அப்பட்டமாகப் பிரச்சாரம் செய்கிறார்கள் பாருங்கள்.

அனிதாவின் மரணத்தை வைத்து ஆதாயம் அடையப் பார்க்கிறார்கள் என்கிறது இந்த அய்யர்வாள் கூட்டம்.

பி.ஜே.பியிடம் விலைபோன, தலித் துரோகி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழர் துரோகி இந்த கிருஷ்ணசாமி.

எப்போது ஆரியப் பார்ப்பனக் கூட்டம், இப்படிப்பட்ட கோடாரிக்காம்புகளை உருவாக்கி, தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட கருவியாய்ப் பயன்படுத்தும் காரியத்தை பரம்பரையாய் செய்து வருகின்றன.

இராவணனின் உடன்பிறந்த விபீஷணனையே பதவி ஆசைகாட்டி தங்கள் கையாளாய்ப் பயன்படுத்திய கூட்டம் அல்லவா?

இன்றைய விபீஷணன், எட்டப்பன் டாக்டர் கிருஷ்ணசாமி.

எப்போதுமே எதிரிகளைவிட, அவர்களின் கையாளாய்ப் பயன்படும் கைக்கூலிகள்தான் அதிகம் குதிப்பர். அந்தக் குறிப்பை டாக்டர் கிருஷ்ணசாமியிடம் தற்போது காணலாம்.

அனிதாவின் தற்கொலையை, படுகொலையென்றே மனிதநேயம் உள்ள அனைவரும் கூறுகிறார்கள் என்றால் அதன் பொருள் என்னவென்று மனிதத் தன்மையுள்ள எவரும் சிந்தித்து உணர்வர். அந்தப் பெண் கோழையல்ல, வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள முடியாதவர் அல்ல.

பின் ஏன் அனிதா அந்த முடிவை எடுத்தார்?

வேலுநாச்சியார் படையிலிருந்த குயிலி ஆயுதக் கிடங்கை அழிக்க தன் உடல் முழுக்க நெய்ப்பூசி தனக்குத்தானே தீயிட்டுக் கொண்டு அக்கிடங்கில் குதித்தாளே அது தற்கொலையா?

ஆங்கில ஆதிக்கத்தை அழிப்பதற்காக அவர் கையாண்ட தியாகம் அல்லவா?

இன்று அனிதா செய்துள்ளதும் ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சியை அழிப்பதற்கான தியாகமே!

இதை புரியாத, புரிந்தும் புரியாததுபோல அவர் மரணத்தையும், அவர் மரணத்தால் தமிழகம் கொதித்தெழுந்ததையும் கொச்சைப்படுத்துகிறது ஒரு கூட்டம் என்றால், அவர்களுக்கு அறம் கிடையாது, நீதி கிடையாது, நேர்மை கிடையாது, நலிந்தோரின் வலி தெரியாது, மொத்தமாக மனிதநேயம் என்பதே கிஞ்சிற்றும் கிடையாது.

காரணம் அது பாசிசக் கூட்டம், தன் ஆதிக்கம், தன்னலம், தன் வாழ்வு, தன் உயர்வு இதற்கு எதையும் அழிப்பர்; யாரையும் ஒழிப்பர்.

தொடக்கக் கல்வி பயின்ற காலத்திலிருந்தே மருத்துவர் என்ற கனவை மனதிற் சுமந்து, அல்லும் பகலும் அதற்காகவே உழைத்து, பொதுப் போட்டியிலே மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் தகுதிபெற்ற ஒரு பெண்ணைப் பார்த்து உனக்கு மருத்துவம் பயில தகுதியில்லை என்கிறது ஒரு கூட்டம். அதுதான் சரி என்கிற அடிமை கிருஷ்ணசாமிக்கு சபாஷ் தெரிவிக்கிறார் குருமூர்த்தி அய்யர். கிருஷ்ணசாமிதான் நேர்மையாய்ப் பேசுகிறார் என்கிறார்.

ஒரு ஒடுக்கப்பட்ட 17 வயதுப் பெண்நீட்என்னும் சுருக்குக் கயிற்றால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுபோல் ஆயிரமாயிரம் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் விரக்தியின் உச்சத்தில், வேதனையின் விளிம்பில் முடங்கிக் கிடக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களின் உரிமையை அபகரித்த ஆதிக்க, பாஸிஸ கும்பல், கொஞ்சங்கூட குற்ற உணர்ச்சியின்றி ஊருக்கு நியாயம் சொல்லிக் கொண்டிருப்பதுதான், சகிக்க முடியாத வேதனை!

இப்படிப்பட்ட யோக்கியர்களிடம் நன்சான்றும் சபாஷும் பெறும் கிருஷ்ணசாமிகள் எப்படிப்பட்ட துரோகிகள் என்பதை இவற்றிலிருந்தே  எடைபோட்டுக் கொள்ளலாம்!

இன எதிரிகளிடம் எவன் ஒருவன் பாராட்டுப் பெறுகிறானோ அவன் இனத் துரோகி! இன எதிரிகளால் எவன் வெறுக்கப்படுகிறானோ அவனே இனத்தின் காவலன்’’ என்பதே அடிப்படை நியதி, உலக அனுபவம் உணர்த்தும் உண்மை!
அந்த அடிப்படையில் பார்த்தால் இன எதிரிகளால் பாராட்டப்படும் கிருஷ்ணசாமி இனத் துரோகி என்பதை எவரும் அறியலாமே!

No comments:

Post a Comment