அரசியல்

Wednesday, September 20, 2017

கோயபல்ஸ் குருமூர்த்தி நியாயம் பேசுகிறார் கேளுங்கள்!


- மஞ்சை வசந்தன்

ஆரிய பார்ப்பனர்களுக்கு நீதி என்பது அவர்களுக்குச் சாதகமானது; அவர்கள் ஆதிக்கத்திற்கு உதவுவது; அடுத்தவர்களை அடிமைப்படுத்தி இழிவுபடுத்துவது என்பதே!

மனுதர்மம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு:

“மற்றவர்கள் கொலைக்குற்றம் செய்தால் அவர்கள் தலையை வெட்ட வேண்டும். ஆனால்,  பார்ப்பான் கொலை செய்தால் அவன் தலைமுடியை மொட்டையடித்தால் போதும்’’ என்கிறது மனுதர்மம். “பார்ப்பானுக்குப் பணிவிடை செய்யவே மற்ற ஜாதியார் படைக்கப்பட்டிருக்கின்றனர்.’’ இதுவும் மனுதர்மந்தான். இப்போது புரிகிறதா? பார்ப்பான் நீதி எப்படிப்பட்டது என்று.
கோயங்கா கணக்குப் பிள்ளை குருமூர்த்தி, தற்போது ‘துக்ளக்’ இதழின் ஆசிரியர். அதில் எழுதுவதற்கு குத்தகைக்கு அமர்த்தப்பட்ட நான்கைந்து ஆட்கள்.

நியாய உணர்ச்சியே இல்லாத இந்த ஆட்கள் நியாயம் நிறைய பேசுகிறார்கள்! சரி, தப்பு பற்றி கூறுகிறார்கள்! நாட்டு நடப்புகளை விமர்சிக்கிறார்கள்!

வடிவேல் வசனம் போல, “அவனா நீ’?’’ என்று இவர்கள் பெயர்களைக் கேட்ட அளவிலே இவர்கள் நியாயம் எப்படியிருக்கும் என்று எவரும் சொல்லிவிடலாம்.

என்றாலும், ஏமாளித் தமிழர்கள் இன்னும் இவர்கள் கூறுவதை நியாயம் என்ற நம்பிக் கொண்டிருப்பதால், நாம் அவ்வப்போது அந்த மண்டைகளில் ஏறவேண்டும் என்பதற்காகச் சில விளக்கங்களைக் கூறவேண்டியது கட்டாயக் கடமையாகிறது.

மோசடி, அயோக்கியத்தனம், அநியாயம் என்று தெரிந்தே அதை நியாயம் என்று காட்டும் வேலைதான் இவர்கள் சொல்வது! இதற்காகத்தான் இந்தத் ‘துக்ளக்’ இதழ் வந்துகொண்டிருக்கிறது.

ஒவ்வொரு முறையும் நாம் சவுக்கடியல்ல, தார்க்குச்சியாலேகூட குத்தித்தான் பார்க்கிறோம்! அவர்கள் தடித்தத் தோல் அப்படி காய்ப்பேறிப் போய் இருப்பதால், அவர்களுக்கு உறைப்பதே இல்லை! அவர்கள் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டுதான் உள்ளனர். அதனால் நாமும் நம் வேலையை செய்யத்தானே வேண்டும்!

27.09.2017 ‘துக்ளக்’ இதழில், இரஜினிகாந்தும், பா.ஜ.கவும் இணைந்து தேர்தலைச் சந்திக்குமாம். அப்படிச் சந்தித்தால் எல்லா கட்சிகளும் செல்வாக்கு இழந்து பெரிய அரசியல் மாற்றம் தமிழகத்தில் வருமாம்!

குருமூர்த்தியின் குஷியான கற்பனை இது! இரஜினிகாந்தின் “மனசாட்சி’’ தமிழருவி மணியன் பி.ஜே.பி.யுடன் இரஜினி கூட்டணி வைக்கவே மாட்டார்! என்று ஓங்கி அறைந்து சத்தியம் செய்து கூறியபின், இந்தக் குருமூர்த்தி இன்னும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு எலும்பை எதிர்நோக்கும் நாயாய் அலைவது ஏன்?

அது மட்டுமல்ல, இரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால் தமிழகமே அப்படியே அவர் பின்னே போய்விடும் என்பது அடிமுட்டாள்தனமான கற்பனையல்லவா?
ஊருக்கு நாலு பேர் இரஜினி இரசிகர். ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா? என்ற ஆவலில் அலைவதை வைத்து, தமிழகமே, “தலைமையேற்கவா’’ என்று அழைப்பதாய்க் கற்பனை செய்து கொள்வது போன்ற ஓர் அறியாமை வேறு ஏது?

¨    மன்னார்குடி குடும்பம் அ.தி.மு.க.வை தி.மு.க.விடம் தாரைவார்க்கப் போகிறது என்று கவலைப்படுகிறார் குமாஸ்தா குருமூர்த்தி.

அது பரவாயில்லை. இங்கிருந்து போனவர்கள் இணைந்தால் என்ன தப்பு?

ஆனால், அசல் அயோக்கியத்தனமாய் அ.தி.மு.க.வை பா.ஜ.க.வுடன் இணைத்துவிட்ட பன்னீர்செல்வமும், பழனிச்சாமியும் எப்படிப்பட்ட துரோகிகள்? இவர்கள் செய்யும் துரோகம் குருமூர்த்திக்கு ருசிக்கிறதா?
என்ன யோவ்! இதுதான் உங்களவா நியாயமா?

¨    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எல்லோரையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டுமாம்! நீட் தேர்வு இவர்களுக்கு வைத்து வெற்றி பெறுபவர்களை மட்டும் வேலையில் திரும்ப சேர்க்க வேண்டுமாம்!

அட அடிமுட்டாளே! நீட் தேர்வு என்பது இந்தியா முழுமைக்கும் நடத்தப்படுவது. அப்படியென்றால் இந்தியா முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, நீட் தேர்வு வைத்து, தேர்வு செய்யப்பட்டவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்றல்லவா பொருள்!

ஆரிய பார்ப்பனர்கள் தவிர வேறு யாரும் வேலைக்குப் போகக் கூடாது என்ற ஆதிக்க வெறியின் பித்தம் தலைக்கேறி உளரும் உளறல் அல்லவா இது?

அரசுக் கல்லூரியில் படிக்க ஆண்டுக்கு 13 ஆயிரம் ரூபாய் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். தனியார் கல்லூரியில் அரசு கோட்டாவில் ரூ.2 லட்சம் முதல் 4 லட்சம் வரை செலவாகும். மேனேஜ்மென்ட் கோட்டாவில் படிக்க ரூ.12 லட்சம் முதல் 22 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அப்படியென்றால் என்ன பொருள்? அய்ந்து ஆண்டு ஒரு மாணவன் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு 100 லட்சம் ரூபாய் (1 கோடி) கட்டணம் கட்ட வேண்டும். கட்டணக் கொள்ளையை நீட் ஒழித்துவிட்டது என்று இவ்வளவு நாளாய்க் கூறினீர்களே, அது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்? இது அசல் மோசடிப் பிரச்சாரம் அல்லவா?

சரி. எல்லாவற்றிற்கும் நீட் தேர்வு என்கிறாயே!

சங்கராச்சாரி தேர்வு, அர்ச்சகர் தேர்வு இவற்றிற்கு முதலில் நீட் தேர்வு வைக்கத் தயாரா?

சூடு, சொரணை, நீதி, நேர்மை, வெட்கம், மானம் இருந்தால் முதலில் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு துக்ளக் இதழை நடத்து! இல்லையென்றால், இத்தோடு அதை மூடு! செய்வாயா?

No comments:

Post a Comment