அரசியல்

Friday, September 29, 2017

பிரண்டை

Image result for பிரண்டை
கொடி இனத்தைச் சேர்ந்ததுபிரண்டை’. தோட்டங்களின் புறத்தில் வேலிகள் மீதும், மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் அருகில் உள்ள மரம், செடி, கொடிகள் மீதும் பரவி வளர்கின்ற தாவரம் இது. காடு, மேடுகளிலும் பிரண்டை நம் கண்ணில் படும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை சென்டி மீட்டர் கனத்துடன், நீளமாக, தனித்தனிக் கிளைகளாகப் படரும் கொடிதான் பிரண்டை. இது நான்கு பட்டைகள் கொண்டுள்ளது. அவற்றில் நடுவில் ஆங்காங்கே கணுக்கள் உண்டாகும். அவற்றில் ஓரிரு இலைகள் காணப்படும். இவ்விலைகள் ஓர் அங்குலம் முதல் ஒன்றரை அங்குல அகலத்தில் வட்ட வடிவுடன் இருக்கும். இலைகளின் காம்பிலிருந்து இன்னொரு காம்பு தோன்றும். அது மலர்ந்து, காய்க்கும். பிரண்டையின் தண்டுகளும் இலைகளும் பச்சை நிறத்தில்தான் இருக்கும்.

பிரண்டை தாவர இயலில் Cissus Quadrangularis என்ற பிரிவைச் சார்ந்த தாவரமாகும். இதில் பல வகைகள் உண்டு. சதுரப் பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, நாப்பிரண்டை, புளிப்பிரண்டை, களிப் பிரண்டை, தீப்பிரண்டை மற்றும் ஓலைப் பிரண்டை என்பன அவ்வகைகளாகும். எல்லாப் பிரண்டைகளும் சமமான அளவில் மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளன.
பிரண்டை நாவில் அல்லது உடலில் பட்டால், பட்ட இடத்தில் அரிப்பு ஏற்படும். இது கரகரப்புக் குணமுடையது. உறுதியானது. உடலுக்கு உறுதி அளிக்க வல்லது. பொதுவாக அப்பளத்திற்குக் அளிக்க பிரண்டை பயன்படுத்தப்படுகிறது.

பிரண்டையில் கால்சியம், கரோட்டின், அமிரோன், அமைரின், சிட்ரோசிராஸ் என்ற மருத்துவ குணமுடைய வேதிப் பொருட்கள் (Chemicals) உள்ளன. மேலும், இதில் வைட்டமின் ‘‘C’’யும் உள்ளது.

பிரண்டையின் இளந் தண்டுகளைப் பருப்பு சேர்த்து கூட்டுச் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் உரம் பெறும்.

பிரண்டையின் பயன்கள்

மருத்துவ குணங்கள் நிறைந்த மகத்துவமுள்ள பிரண்டை மந்தநிலை நீங்கி நன்றாகப் பசியுணர்வைத் தூண்டுகிறது. இரத்த மூலம், உள்மூலம், வெளிமூலம் போன்ற அனைத்து மூலநோயையும் குணப்படுத்துகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்கி இயல்பான வாழ்வு பெற; வயிற்றுப் புண்கள், ஜீரணக் கோளாறுகள், புளிச்ச ஏப்பம் குணமாக; சுளுக்கினால் வீக்கம், வலி ஏற்பட்டால் குணமாக; எலும்பு முறிவு குணமாகி, எலும்புகள் ஒன்று சேர; உடல் வலிமை பெற என அத்தனை நோய்களுக்கும் அறு மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் பெண்களுக்கு மாதவிலக்கு கால வயிற்றுவலி குணமாகவும், முறையில்லா மாதவிலக்கு சீரடைவதற்கும் சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது.

விலையுயர்ந்த ஆங்கில மருத்துவ மருந்துகளைத் தேடி அலைந்து வாங்கிச் சாப்பிட்டும் குணமாகாத நோய்கள், நம் நாட்டு மூலிகை மருந்தான எங்கும் குறைந்த செலவில் கிடைக்கும் பிரண்டையைப் பயன்படுத்துவதால் விரைவாகவும், பக்க விளைவுகள் எதுவும் இல்லாமலும் குணமாகி விடுகின்றன. எனவே, இயற்கையின் அறுங்கொடையான பிரண்டையை பயன்படுத்துவோம்! பிணியின்றி வாழ்வோம்!




No comments:

Post a Comment