அரசியல்

Thursday, July 14, 2016

பிள்ளைகள் விரும்பும் எல்லாவற்றையும் வாங்கித் தரக்கூடாது:


பிள்ளைகள் மீதுள்ள பாசத்தில், பற்றில், செல்லமாக வளர்க்க வேண்டும் என்ற விருப்பத்தில், குழந்தைகள் விரும்புவதைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் பிள்ளைகள் கேட்பதையெல்லாம் சில பெற்றோர் வாங்கித் தருவர். இது சரியான செயல் அல்ல. குழந்தைப் பருவம் அறியாப் பருவம். எது நல்லது, எது கெட்டது என்று தெரியாத வயது. கவர்ச்சியை, சுவையை அவர்கள் விரும்புவர், கவர்ச்சியும் சுவையும் உடைய பலதும் கேடு பயப்பனவே.
எனவே, அவர்களுக்குச் சிறுவயதிலே இதைச் சாப்பிட வேண்டும். இதைச் சாப்பிடக் கூடாது. அதற்குரிய காரணம், அதனால் வரும் பாதிப்பு இவற்றை அவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லி ஏற்கச் செய்ய வேண்டும். அடித்து, விரட்டி சொல்வதைத் தவிர்த்து அன்புடன் சொல்ல வேண்டும். பயன்படுத்தும் பொருட்களையும் அவ்வாறே தேர்வு செய்ய வேண்டும். ஒன்றை வேண்டாம் என்று சொல்லும்போது, எது ஏற்றதோ அதை வாங்கித் தர வேண்டும்.

No comments:

Post a Comment