அரசியல்

Thursday, July 14, 2016

அம்பேத்கரை விழுங்க முயலும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்!

- மஞ்சை வசந்தன்
ஒரே காலகட்டத்தில் ஒரே இலக்கில் ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தையும், இந்துமத ஆதிக்கத்தையும், ஜாதி வேறுபாடுகளையும், இழிவுகளையும் மிகத் தீவிரமாய் எதிர்த்தவர்கள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும்.
தேவைப்படும்போது இருவரும் சந்தித்தும், கருத்து பரிமாற்றங்கள் செய்து கொண்டு தங்கள் போராட்டங்களை மிகச் சரியாக நிகழ்த்தினர். இந்துமத எதி£ப்பின் உச்சக்கட்டமாக, இந்துமதத்தை விட்டே விலகி புத்த மதத்தில் இலட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன் சேர்ந்தார் அம்பேத்கர்.
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கூட்டத்தின் இந்துத்வா திணிப்பு முயற்சிக்கும், இந்து ராஷ்ட்ரா அமைக்கும் முயற்சிக்கும் பெரும் தடையாக, பெரும் எதிர்ப்பாக இந்தியா முழுக்க இருப்பவை தந்தை பெரியாரின், அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளும், அவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வும், அவர்களின் சிந்தனை களின் தேவையுணர்ந்து இளைஞர்களும், மாணவர்களும் அவற்றை ஏந்தி நிற்பதும்தான்.
எனவே, தங்கள் இலக்கை, திட்டத்தை நிறைவேற்ற இவர்கள் இருவரையும் அவர்கள் பெயரிலான அமைப்புகளையும், கடுமையாக எதிர்த்துப் பார்த்தனர். விளைவு எதிர்ப்பை மேலும் வலுவாக்கி இவர்கள் திட்டத்தை தவிடுபொடியாக்கியது.
உதைக்க உதைக்க எழும் பந்தைப் போல பெரியார், அம்பேத்கர் உணர் வாளர்களின் எதிர்ப்பும், விழிப்பும் அதிகரிக்கவே, அடக்கி ஒடுக்குவதற்கு மாறாய் அணைத்து அழிக்கத் திட்டம் தீட்டி முயற்சியில் இறங்கியுள்ளனர்.
தமிழர் தலைவர் கி-.வீரமணி அவர்கள் கூறியதுபோல, பெரியார் ஓர் எரிமலை என்பதால் அவரை ஆதிக்கச் சக்திகளால் நெருங்க முடியவில்லை. அதனால், பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாய் பொய்கூறி இருவரின் ஆதரவாளர்களைப் பிரிக்க முயன்றனர். அதுவும் எடுபடவில்லை. ஆகையால், இறுதி முயற்சியாய் அம் பேத்கரை அணைத்து, ஆராதித்து அழிக்கத் திட்டம் தீட்டி செயல்படத் தொடங்கியுள்ளனர். அம்பேத்கருடன் தொடர்புடைய இடங்களையெல்லாம் சிறப்புச் செய்து, அதன்வழி அவரது பற்றாளர்களின் ஆதரவைப் பெற்று இறுதியில் அம்பேத்கரை ஓர் இந்துத்வா ஆதரவாளராக அணைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஆதரித்தார்; அவர் இந்து மதத்தைப் பெருமையாகப் பேசினார் என்று உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பி அம்பேத்கரை இந்துத்வா ஆதரவாளராகக் காட்ட தற்போது முயற்சிக்கின்றனர்.
ஆயிரம் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் வந்தாலும் அய்யாவையும் அம் பேத்கரையும் பிரிக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது! அய்யா தொண் டர்களும், அம்பேத்கர் தொண்டர்களும் ஓரணியில் நின்று உங்கள் ஆதிக்கத்தை ஒழித்தேத் தீருவர்! இது உறுதி! ஜாதி ஒழிந்த, சமத்துவ சமூகநீதி நிலவும் சமுதாயத்தை சமைப்போம்! அதற்காகத் தொடர்ந்து உழைப்போம் என்று இன்று உறுதி ஏற்போம்!
---------------------------------
பி.ஜே.பி. அரசின் அணைத்து அழிக்கும் சூழ்ச்சி குறித்து
அம்பேத்கரின் பேரன் கூறியுள்ளதைப் படியுங்கள்!......................

அம்பேத்கரை பி.ஜே.பி. கையில் எடுத்து அரசியல் செய்வது அம்பேத்கரின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது. அம்பேத்கரின் கொள்கைகள், கனவுகள் அவரது எண்ணங்கள் ஒரு திசையில் பயணிக்கின்றன. பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் கொள்கைகள் வேறு திசையில் பயணிக்கின்றன. இரண்டும் ஒரே நேர்கோட்டில் செல்லவில்லை. பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் முற்றிலும் அம்பேத்கருக்கு எதிரானவை. அம்பேத்கரின் கொள்கைகள், தத்துவங்களை பி.ஜே.பி. அரசு கிடப்பில் போட்டுவிட்டது. ஆனால், சாமானியனின் பார்வைக்கு அம்பேத்கரைக் கொண்டாடுவதுபோல ஒரு பிம்பத்தை கட்டமைத்து இருக்கிறார்கள். உண்மையில் அவரின் கொள்கைகள் கொலை செய்யப்படுகின்றன.
“மோடியின் கொள்கை பணக்காரர்களை மேலும் பணக்காரர் ஆக்குவது. ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்குவது. அதேநிலையில் தொடரச் செய்வதுதான். இதற்கு மாற்றாக தலித் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்குத் தனியாக வங்கிகள் நடத்த வேண்டும். அவர்களுக்கு மத்தியில் பொருளாதார மாற்றம் கொண்டுவர இதுதான் சாத்தியம்.”
- பிரகாஷ் யஸ்வந்த்
ஆதாரம்: ஜூனியர் விகடன் (10.04.2016)

No comments:

Post a Comment