அரசியல்

Thursday, July 14, 2016

பிள்ளைகளை அச்சுறுத்தி வளர்க்கக் கூடாது


பிள்ளைகளைக் கண்டிப்புடன் வளர்க்கிறேன் என்று சொல்லி, அச்சுறுத்தி, அடித்து வளர்ப்பது சரியான வளர்ப்பு முறையல்ல. அன்போடும், பாசத்தோடும், அக்கறையோடும், இனிய சொற்களால் எடுத்துக் கூறினால் பிள்ளைகள் பின்பற்றுவர். பிள்ளைகளின் விருப்பத்திற்கு முழுவதும் தடைவிதிக்காது, அவற்றில் சரியானவற்றை நிறைவேற்றி, நம்மீது அவர்கள் அன்புடையவர்களாய், நம்மை விரும்பக் கூடியவர்களாய் நாம் நடந்து கொண்டால், எல்லாப் பிள்ளைகளும் நம் பேச்சைக் கேட்டு நடக்கும். பிள்ளைகள் சொல்வது சரியென்றால் அதையும் பெரியவர்கள் ஏற்று நடக்க வேண்டும். பிள்ளைகளைத் தங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க பெற்றோர் தவறக்கூடாது. வெளியில் பிள்ளைகள் கெட்டுப் போக வாய்ப்பு அதிகம். எனவே, கண்காணித்து ஒழிங்குப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment