அரசியல்

Monday, August 31, 2015

தினமணியின் நடுநிலை இதுதானா?............


தி.மு.க வும் அ.தி.மு.க வும் சம பலத்துடன் உள்ளன என்றே கருத்துக் கணிப்பு காட்டுகிறது!

ஆனால், தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைளும் திரித்துக் கூறுகின்றன. அ.இ.அ.தி.மு.க.வே அடுத்து ஆட்சி அமைக்கும் என்று தினமணி எழுதியது அயோக்கியத்தனதின் உச்சம் அல்லவா?

அ.தி.மு.க – 34.1%
தி.மு.க – 32.5%
வித்தியாசம் 1.6

ஆக இருகட்சியும் சற்றேறக்குறைய சமநிலையில் உள்ளன. இன்னும் தேர்தலுக்கு 10 மாதங்கள் உள்ளன. பொதுவாக ஆளுங்கட்சிக்கு எதிராகவே மக்கள் மாறுவர். மாற்றம் வேண்டும் என்றும் விரும்புவர். அதன் விளைவு தி.மு.க. விற்கே சாதகமாகும்.

அப்படியிருக்க உள்ளத்தைத் தொட்டு உண்மையைச் சொன்னால் தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்றே கூறவேண்டும்.

ஆனால், உண்மைக்கு எதிராய் ஊடகங்கள் செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. நீங்கள் என்தான் பித்தலாட்டம் செய்தாலும் அடுத்து வரப்போவது தி.மு.க. ஆட்சிதான். சூடுபட்ட திமு.க. தப்பு செய்யாது ஆட்சி நடத்தும் என்று நம்பலாம்!

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment