அரசியல்

Thursday, April 19, 2018

மோசடியின் மொத்த வடிவம் எழுத்தாளர் ஜெயமோகன்!

மோசடியின் மொத்த வடிவம் எழுத்தாளர் ஜெயமோகன்!

தமிழர்கள் இவரிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்!

Image may contain: 1 person

பத்துப் பொய்களை எழுதும்போது இடையிடையே ஓரிரண்டு உண்மைகளை லாவகமாகச் செருகிவிடுவார் ஜெயமோகன் என்று யுவகிருஷ்ணா சொல்வது 100க்கு 100 உண்மை!

நல்லவன்போல் நடிப்பான் ஞானத் தங்கமே! என்ற வரிக்கு உரியவர்.

திராவிட ஆரிய எதிர்நிலையை நீர்த்துப்போகச் செய்ய தமிழர் X வடுகர் மோதலை உருவாக்குகிறார்.

சாதி இந்துக்கள் X தலித் மோதலை உருவாக்குகிறார்.

திராவிடம் என்பதை நீக்கிவிட்டால் ஆரியத்தின் எதிர்நிலையை அகற்றி விடலாம் என்று முயல்பவர்.

ஆக, ஆரியர்களுக்கு சேவகம் செய்வதே ஜெயமோகனின், ஜென்ம கர்மம். எனவே, ஜெயமோகன் எழுத்துக்களை எச்சரிக்கையுடன் படிக்க வேண்டும்! அல்லது தவிர்க்க வேண்டும்! 

காரணம், எல்லாமே ஏமாற்று, மோசடி, வஞ்சகம், சூழ்ச்சி, சூது, பித்தலாட்டம்.
ஜெயமோகனுக்கு ஒரு பகிரங்கச் சவால்!

இந்த அக்கப்போரு, அவதூரு ஜெயமோகனை பெரிய எழுத்தாளர் என்று போற்றித் திரியும் அரைவேக்காடுகள், இங்கு உண்டு! அந்த அரை வேக்காடுகளுக்கும், ஜெயமோகனுக்கும் ஒரு பகிரங்க சவால் விடுகிறேன்!

தந்தை பெரியார் வைக்கம் வீரர் அல்ல என்று ஜெயமோகன் ஒரு கட்டுரை எழுதினார்.

அதை மறுத்து, பெரியார்தான் வைக்கம் வீரர் என்று நான் மறுப்பு எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜெயமோகனுக்கும் அனுப்பினேன். இன்றுவரை பதில் இல்லை.
என்னுடைய கட்டுரை இணையத்தில் உள்ளது. ஜெயமோகன் கட்டுரையும் இணையத்தில் உள்ளது.

இந்த ஜெயமோகன் உண்மையில் ஆதாரபூர்வமாய் எழுதுகின்ற ஆளாய் இருந்தால், எனது மறுப்பு கட்டுரைக்கு உடனே பதில் எழுத வேண்டும். இல்லையேல் தான் எழுதியது தப்பு என்று ஒப்ப வேண்டும். இரண்டும் செய்யவில்லையென்றால் ஜெயமோகன் முகமூடி கிழியும், வெளிப்படும்! 

மோசடியின் மொத்த வடிவம் என்பதும் உறுதியாகும்!

இந்த மோசடிப் பேர்வழியின் மோசடி எழுத்துகளை தொடர்ந்து தோலுரிப்போம்! 

உண்மை உருவத்தை உலகுக்குக் காட்டுவோம் வாருங்கள்!


No comments:

Post a Comment