அரசியல்

Wednesday, April 18, 2018

இதற்குப் பிறகுமா கடவுளை நம்புகிறீர்கள்?



ஜனவரி 10ஆம் தேதி மேய்ச்சல் பகுதியில் குதிரையைத் தேடிக்கொண்டிருந்த ஆசிபாவை மரங்களடர்ந்த பகுதிக்கு தூக்கிச்சென்று, கோயிலுக்குள் வைத்து வாயைப் பொத்தி... மாறிமாறி வன்புணர்ச்சி செய்து, கதறக்கதற் சிதைத்து, கொடுமைப்படுத்தியுள்ளனர். கோவிலின் நிர்வாகி ஒருவனும் இதற்கு உடந்தை. கோவிலில் கடவுளின் கண்ணெதிரே அத்தனையும் நடந்திருக்கின்றன.

எட்டு மனித மிருகங்கள் இந்த வன்புண

ர்ச்சியில் பங்கு பெற்றிருக்கின்றன. மன்னு, சான்ஜியின் உறவினன், கோவில் நிர்வாகி, பலாத்காரம் பண்ணவே உ.பி.யிலிருந்து வரவழைக்கப்பட்ட சான்ஜிராம் மகன் விஷால், விசாரணை அதிகாரி தீபக் அத்தனை பேரும் மருந்தின் துணையுடன் மயக்கத்தில் இருந்த ஆசிபாவை திரும்ப திரும்ப சீரழித்திருக்கின்றனர்.

கோயிலிலே ஏழு நாள்கள் அடைத்து வைத்து எட்டு பேர் அச்சிறுமியை சித்திரவதை செய்தபோதும் தடுக்க கடவுள் வந்ததா?

இப்படிப்பட்ட கொடுமை தன் கண்ணெதிரே நடந்தும் கடவுள் தடுக்கவில்லை என்பதிலிருந்தே கடவுள் என்பது இல்லை என்பது தெரியவில்லையா? கடவுளும் கோயிலும் கயவர்களின் பாசறை ஆதிக்கவாதிகளின் ஆயுதம் என்பது புரியவில்லையா?

இதற்குப் பின்னும் கடவுளை நம்புகிறார்கள் என்றால் அவர்களைகூட அடிமுட்டாள் யார் இருக்க முடியும்? சிந்தியுங்கள்!

இந்தக் கடவுளையும், மதத்தையும் காட்டி ஆட்சிக்கு வந்த இத்தனை அநியாயங்களையும், அயோக்கியத்தனங்களையும் செய்யும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஆட்சியை இன்னமும் ஆதரிக்கப் போகிறிர்களா? இவர்களை விரட்டிஅடியுங்கள்! அதுதான் ஒரே தீர்வு!

=====

1 comment: