அரசியல்

Sunday, June 21, 2015

இணையத்தால் இணைவோம்! ஏற்றத்தாழ்வைக் களைவோம்!

இணையத்தால் இணைவோம்! ஏற்றத்தாழ்வைக் களைவோம்!

இளைஞர்களே எழுங்கள்!

(இனியும் பொறுத்தால் எல்லாம் இழப்போம்)

ஐந்து இலட்சம் மாணவர்கள் படிக்கும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு அரசு ஒதுக்கும் நிதி ஒதுக்கீடு வெறும் ரூ.22 கோடி. ஆனால், சென்னை அய்.அய்.டிக்கு ஆண்டு ஒன்றுக்கு நிதி ஒதுக்கீடு ரூ.268 கோடி.

கொள்ளை :

சென்னை அய்.அய்.டியில் நீச்சல் குளத்தைப் புதுப்பிக்க ரூபாய் 8 கோடி. 
5 இலட்சம் பேருக்கும் கல்வி வழங்க 22 கோடி ரூபாய், நீச்சல் குளத்திற்கு 8 கோடி ரூபாய்! இது மக்களாட்சி நாடா? 

ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களை வஞ்சித்து சிறுபான்மைக் கூட்டம் செலுத்தும் ஆதிக்கத்தை, அநீதியை அழிக்க வேண்டாமா? ஆர்த்தெழ வேண்டாமா? பிறவிப் பேதம் நம்மோடு ஒழிக்கப்பட வேண்டாமா?

தீர்வு :  

இணையத்தில் அழைப்பு விடுத்து ஒன்று கூடுங்கள்! ஆதிக்கம் அழிக்க திட்டமிடுங்கள்! போராடுவோம்! சமூக நீதியை நிலைநாட்டுவோம்! 

எல்லாமும் எல்லார்க்கும்! இதை எடும் வரை போரிடுவோம்! 

சந்திப்போம்! சிந்திப்போம்!

வஞ்சிக்கப்படுவோர் வாய்மூடியிருந்தால், எஞ்சியிருப்பதையும் இழப்போம்!
இளைஞர்களால் இயலாதது இல்லை!

- மஞ்சை வசந்தன்

No comments:

Post a Comment